27 June 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

June 26, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

சங்கமயுகத்தில் நம்பர் ஒன் பூஜைக்குரியவர் ஆவதற்கான அலௌகீக விதி

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று அநாதியான (என்றும் அழிவில்லாத) தந்தை மற்றும் ஆதி (முதன்மையான) தந்தை, அழியாத சாலிகிராம் (ஆத்மா) குழந்தைகளை மேலும் முதன்மையான பிராமண குழந்தைகளை இரட்டை ரூபத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறார். சாலிகிராம் (புள்ளி) ரூபத்திலும் கூட மிகவும் பூஜைக்குரியவர்களாக இருக்கிறீர்கள், மேலும் பிராமண நிலையிலிருந்து தேவதை சொரூபத்தில் கூட பாடப்படுகிறீர்கள், மேலும் பூஜைக்கு தகுதியுடைவர்களாக இருக்கிறீர்கள். இருவருமே – ஆதி (பிரம்மா) மற்றும் அநாதி (சிவ) தந்தை, இரண்டு விதமான ரூபத்தில் பூஜைக்குரிய ஆத்மாக்களை பார்த்து புன்முறுவல் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அநாதியான பாபா ஆதி பிதா உட்பட அதாவது பிரம்மா பாபா மற்றும் பிராமண குழந்தைகள் தன்னை (சிவபாபா) விடவும் அதிகமாக இரட்டை ரூபத்தில் பூஜைக் குரியவர்களாக இருக்கிறீர்கள். அநாதியான தந்தையின் பூஜை ஒரே ஒரு நிராகார ரூபத்தில் மட்டும் நடைபெறுகிறது, ஆனால் பிரம்மா உட்பட பிராமண குழந்தை களின் பூஜை நிராகார் – சாகார் இரண்டு ரூபத்திலும் நடைபெறுகிறது எனவே பாபா குழந்தைகளை தன்னை விடவும் அதிகமாக இரட்டை ரூபத்தில் மகானாக (உயர்ந்தவர்களாக) ஏற்றுக் கொள்கின்றார்.

பாப்தாதா குழந்தைகளாகிய உங்களின் விசேஷத்தன்மைகளை பார்த்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு குழந்தைகளின் விசேஷத்தன்மை தனிப்பட்டது. ஒரு சிலர் பாபாவின் மற்றும் அனைத்து பிராமண ஆத்மாக்களின் விசேஷத் தன்மைகளை தெரிந்துக் கொண்டு தனக்குள் அனைத்து விசேஷத்தன்மைகளையும் தாரணை செய்து சிரேஷ்ட அதாவது விசேஷ ஆத்மாவாகி விடுகிறார்கள், மேலும் ஒரு சிலர் விசேஷத்தன்மைகளை தெரிந்துக்கொண்டும், பார்த்துக் கொண்டும் குஷி அடைகிறார்கள், ஆனால் தனக்குள் அனைத்து விசேஷத் தன்மைகளை தாரணை செய்வதற்கான தைரியம் இல்லை. மேலும் ஒரு சிலர் ஒவ்வொரு ஆத்மாவிடத்திலும், பிராமண குடும்பத்தில் விசேஷத்தன்மைகள் இருந்தாலும் கூட விசேஷத்தன்மையின் முக்கியத்துவத்தோடு பார்க்காமல், ஒருவர் மற்றவரை சாதாரண (தேக) ரூபத்தில் பார்க்கிறார்கள். விசேஷத் தன்மைகளை பார்ப்பதற்கு மற்றும் தெரிந்துக் கொள்வதற்கு பயிற்சி செய்வதில்லை, மற்றும் குணத்தை கிரஹிக்கும் புத்தியை அதாவது குணத்தை தாரணை செய்வதற்கான புத்தி இல்லாத காரணத்தினால் விசேஷத்தன்மை மற்றும் குணத்தை தெரிந்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு பிராமண ஆத்மாக்களிடமும் ஏதாவதொரு விசேஷத்தன்மை அவசியம் நிரம்பியிருக்கிறது. 16 ஆயிரத்தில் கடைசி மணியாக இருந்தாலும் கூட அவர்களிடத்திலும் ஏதாவதொரு விசேஷத் தன்மை இருக்கிறது, ஆகையால் தான் பாபாவின் பார்வை அந்த ஆத்மாவின் மீது விழுந்திருக் கிறது. பகவானின் பார்வை விழுந்திருக்கிறது, அல்லது இறைவனே தன்னுடையவராக மாற்றி யிருக்கிறார் என்றால் அவசியம் விசேஷத்தன்மை நிரம்பியிருக்கிறது. ஆகையால் தான் அந்த ஆத்மா பிராமணர்களின் லிஸ்டில் (பட்டியலில்) வந்துள்ளனர், ஆனால் எப்பொழுதுமே ஒவ்வொரு வரின் விசேஷத்தன்மைகளை பார்ப்பது மற்றும் தெரிந்துக்கொள்வதில் நம்பர்வார் (வரிசைப்படி) ஆகிவிடுகிறார்கள். ஞானத்தின் தாரணை அல்லது சேவையில், நினைவில் பலவீனமாக இருக்கிறார்கள், ஆனால் எப்படி இருந்தாலும், பாபாவை பற்றி தெரிந்திருக்கிறார்கள், பாபா வினுடையவராக விசாலமான புத்தியுடைவராக, பாபாவை பார்ப்பதற்கான தெய்வீக பார்வை என்ற விசேஷத் தன்மை இருக்கிறது என்பதை பாப்தாதா தெரிந்திருக்கிறார். இன்றைய காலத்தில் பிரபலமான அறிஞர்கள் கூட தெரிந்துக் கொள்ள முடியாது, அடையாளம் கண்டுக்கொள்ள முடியாது, ஆனால் அந்த ஆத்மாக்கள் தெரிந்திருக்கிறார்கள் அல்லவா. கோடியில் சிலர், சிலரிலும் கூட வெகுசிலர் தான் – இந்த பட்டியலில் வந்திருக்கிறார்கள் அல்லவா. எனவே கோடி கணக் கானவர்களில் விசேஷ ஆத்மாவாக இருக்கிறார்கள் அல்லவா. என்ன விசேஷத் தன்மை இருக்கிறது? ஏனெனில் உயர்ந்ததிலும் உயர்ந்த பாபாவினுடையவராக ஆகி விட்டார்கள்.

அனைத்து ஆத்மாக்களிலும் பிராமண ஆத்மாக்கள் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். ஒரு சிலர் தான் தனது விசேஷத்தன்மைகளை செயலில் பயன்படுத்துகிறார்கள், ஆகையால் அந்த விசேஷத் தன்மை வளர்ச்சியடைந்துக் கொண்டே இருக்கிறது, மேலும் மற்றவர்களுக்கும் கூட அது தென்படு கிறது. மேலும் சிலரிடத்தில் விசேஷத்தன்மை என்ற விதை இருக்கிறது, ஆனால் செயலில் கொண்டு வரவேண்டும் – இந்த விதையை பூமியில் விதைக்க வேண்டும். எதுவரை விதையை பூமியில் விதைக்கவில்லையோ, அதுவரை மரமும் வளர்வதில்லை, விரிவடை வதுமில்லை. மேலும் சில குழந்தைகள் விசேஷத்தன்மை என்ற விதையை கூட விரிவாகவும் எடுத்து செல்கிறார்கள், அதாவது மரம் என்ற ரூபத்தில் வளர்ச்சி கூட அடைகிறது, பழங்களும் கூட வளர்கிறது, ஆனால் பழம் வளர்கிறது என்றால் பழங்களுக்கு பின்னால் பறவைகளும், குருவிகளும் உண்பதற்கு வருகின்றன. எனவே பலன்களை அடையும், அதே நேரத்தில் நான் விசேஷமானவன், எனக்கு இந்த விசேஷத்தன்மை உள்ளது என்ற ரூபத்தில் மாயாவும் வருகிறது. ஆனால் பாபாவின் மூலம் கிடைத்துள்ள விசேஷத்தன்மை என்பதை புரிந்துக் கொள்வதில்லை. விசேஷத்தன்மை களை நிரப்பக்கூடியவர் பாபாவாக இருக்கிறார். பிராமணன் ஆன பிறகு தான் விசேஷத் தன்மைகளும் வந்தன. பிராமண வாழ்க்கையின் வெகுமதி, பாபாவின் வெகுமதியாகும். ஆகையால் பலனிற்கு பதிலாக அதாவது சேவையில் வெற்றியடைந்த பிறகு அவசியம் இந்த கவனம் வைக்க வேண்டும். இல்லையென்றால், மாயா என்ற பறவைகளும், குருவிகளும் எச்சில் செய்துவிடுகிறது, அல்லது கீழே தள்ளி விடுகிறது. சிதைந்த மூர்த்திகளை பூஜிக்கப் படுவதில்லை. இது ஒரு சிலை என்று ஏற்றுக்கொள்ளபடுகிறது, பூஜை செய்யப்படுவதில்லை. அதுபோல பிராமண ஆத்மாக்கள் சேவையின் பலன் அதாவது சேவையில் வெற்றி அடைந்து விடுகிறார்கள், ஆனால் நான் என்ற குருவி பழத்தை சிதைத்து விடுகிறது, ஆகையால் சேவை மிகவும் நன்றாக செய்கிறார்கள், மகாரதியாகவும் இருக்கிறார்கள், சேவாதாரியாகவும் இருக்கிறார்கள் என்று ஏற்றுக் கொள்ளப் படுகிறது. ஆனால் சங்கமயுகத்திலும் கூட அனைத்து பிராமண குடும்பத்தை சேர்ந்தவர்களின் மனதில் அன்பிற்குரியவராக மற்றும் பூஜைக்குரியவராக இருக்க முடிவதில்லை.

சங்கமயுகத்தில் இதயபூர்வ அன்பு, இதயபூர்வ மரியாதை – இது தான் பூஜ்யகுரியவராக மாற்றுகிறது. அடையும் பலனில் நான் என்ற எண்ணத்தை கொண்டு வரக்கூடியவர்கள் பூஜைக் குரியவர்கள் ஆவதில்லை. முதலாவது – மனதார உயர்ந்தவராக யாரையாவது ஏற்றுக்கொள்வது, எனவே உயர்ந்தவர்களை பூஜைக்குரியவர் என்று சொல்லப்படுகிறது. இன்றைய உலகத்திலும் கூட தந்தை உயர்ந்தவராக இருக்கக் கூடிய காரணத்தினால் குழந்தை வணக்குகிறேன் தந்தையே என்று சொல்லி அழைக்கிறார்கள் மற்றும் எழுதுகிறார்கள். அதுபோல இதய பூர்வமாக உயர்ந்தவர் களாக ஏற்றுக்கொள்வது அதாவது இதயபூர்வமாக மதிப்பளிப்பது. இரண்டாவது – வெளிப்புற மதிப்புக்கு தகுந்தப்படி மரியாதை தரவேண்டியிருக்கிறது. எனவே இதயபூர்வமாக தருவது, மற்றும் தரவேண்டி யிருக்கிறது இதில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. பூஜைக்குரியவர் ஆவது என்றாலே மனதார அனைவரையும் ஏற்றுக்கொள்வது. 5 சதவீகிதம் இருந்துவிடுகிறது என்ற முதலேயே சொல்லப்பட்டியிருக்கிறது, பெரும்பான்மையோர் இருக்க வேண்டும், ஆனால் பெரும்பான்மையோரை மனதார ஏற்றுக்கொள்ளுங்கள் -இது தான் சங்கமயுகத்தில் பூஜ்யகுரியவர் ஆவதாகும். பூஜைக்குரியவர் ஆவதற்கான சம்ஸ்காரத்தையும் கூட இப்பொழுதிலிருந்தே நிரப்பிக் கொள்ள வேண்டும். ஆனால் பக்தி மார்க்கத்தில் பூஜைக்குரியவர் ஆவதிலும் மற்றும் இப்பொழுது (சங்கமயுகத்தில்) பூஜைக்குரியவர் ஆவதிலும் வித்தியாசம் இருக்கிறது. இப்பொழுது உங்களுடைய உடலுக்கு பூஜை செய்ய முடியாது, ஏனெனில் இறுதிகால கட்டத்தில் கிடைத்துள்ள பழைய உடலாக இருக்கிறது. தமோகுணம் நிறைந்த தத்துவங்களால் உருவாக்கப்பட்ட உடலாக இருக் கிறது. இப்பொழுது மலர்களின் மாலை அணிவிக்க முடியாது. பக்தி மார்க்கத்தில் தேவதைகளின் மீது பூ மாலை அணிவிக்கிறார்கள் அல்லவா. பூஜைக்குரியவரின் அடையாளம் – அகர்பத்தி ஏற்றுவது, பூ மாலை அணிவிப்பது, தீப ஆராதனை செய்வது, பஜனை செய்வது, திலகம் ஈடுவதாகும். சங்கமயுகத்தில் இந்த ஸ்தூலமான விதிமுறைகள் கிடையாது. ஆனால் சங்கமயுகத்தில் எப்பொழுதும் இதயபூர்வமாக அந்த பூஜைக்குரிய ஆத்மாக்களுக்காக உண்மையான அன்பினுடைய ஆரத்தி செய்வது. ஆத்மாக்கள் மூலம் சதா ஏதாவதொரு பிராப்தியின் புகழ் பாடிக்கொண்டே யிருப்பது. சதா ஆத்மாக்களுக்காக சுபபாவணை என்ற அகர்பத்தி ஏற்றுவது மற்றும் தீபம் ஏற்றுவது. சதா அப்படிப்பட்ட ஆத்மாக்களை பார்த்து நாமும் கூட அவர்களை போன்று பாபாவின் மீது அர்ப்பணம் ஆகிறோம், அதுபோன்று மற்ற ஆத்மாக்களும் கூட பாபாவின் மீது அர்ப்பணம் ஆக வேண்டும் என்று ஆர்வம் ஏற்படுகிறது. எனவே பாபாவின் மீது அர்ப்பணம் ஆவதற்கான பூ மாலை சதா அப்படிப்பட்ட ஆத்மாக்களுக்கு தானாகவே கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஆத்மாக்கள் சதா நினைவுசொரூபத்தின் திலகதாரி ஆகிறார்கள். இந்த அலௌகீக விதியின் மூலம் இந்த சமயத்தில் பூஜைக்குரிய ஆத்மாக்கள் ஆகிறார்கள்.

பக்தி மார்க்கத்தினுடைய பூஜைக்குரியவர் ஆவதை காட்டிலும் சிரேஷ்ட பூஜை இப்பொழுது நடைபெறுகிறது. எவ்வாறு பக்தி மார்க்கத்தில் பூஜைக்குரிய ஆத்மாக்களுடன் இரண்டு நிமிட தொடர்பின் மூலம் அதாவது தேவதைகளின் சிலைக்கு முன்னால் இரண்டு நிமிடத்திற்கு அமைதி, சக்தி, குஷியின் அனுபவம் ஏற்படுகிறது. அப்படி சங்கமயுகத்தை சேர்ந்த பூஜைக்குரிய ஆத்மாக்கள் மூலம் இப்பொழுதும் கூட இரண்டு நிமிடம், ஒரு நிமிடத்தின் திருஷ்டி கிடைப்பதினாலும் குஷி, அமைதி மற்றும் ஊக்கம் – உற்சாகத்தின் சக்தி அனுபவம் ஆகிறது. அப்படிப்பட்ட பூஜைக்குரிய ஆத்மாக்கள் அதாவது நம்பர்-ஓன் விசேஷ ஆத்மாக்களாக இருக்கிறார்கள். இரண்டாவது நம்பர் மற்றும் மூன்றாவது நம்பரை பற்றி சொல்லப்பட்டு விட்டது. அதைப் பற்றி விவரிப்பது. அனைவருமே விசேஷ ஆத்மாக்களாக இருக்கிறீர்கள், ஆனால் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்று நம்பர்வாராக இருக்கிறீர்கள். அனைவருக்குமே இலட்சியம் நம்பர் ஓன்னில் தான் இருக்கிறது. எனவே அப்படிப்பட்ட பூஜைக்குரியவர் ஆகுங்கள். பிரம்மா பாபாவின் குணங் களை புகழ் பாடுகிறீர்கள் அல்லவா. இந்த அனைத்து விசேஷத்தன்மைகள் பூஜைக்குரியவர் ஆவதின் மற்றும் நம்பர் ஓன் விசேஷ ஆத்மா ஆவதற்கான விஷயங்களை பிரம்மா பாபாவிடத் தில் பார்த்தீர்கள், கேட்டீர்கள் அல்லவா. எனவே எப்படி சாகார பிரம்மாவின் ஆத்மா நம்பர் ஓன் சங்கமயுகத்தின் பூஜைக்குரிய நிலையிலிருந்து எதிர்காலத்தில் நம்பர் ஓன் பூஜைக்குரியவர் ஆகிறார். அதுபோல, நீங்கள் அனைவரும் கூட அவரை (பிரம்மாவை) போன்று ஆக முடியும்.

பாபாவின் கூடவே பிரம்மா பாபாவின் புகழையும் பாடப்படுகிறது. அதுபோல நீங்கள் அனைவரும் அவரை போன்று எப்பொழுதும் எண்ணம், வார்த்தை மற்றும் செயலை செய்யுங்கள், அது எப்பொழுதுமே அதிசயமானதாகும். அதிசயம் ஏற்படும் பொழுது குண்டு வெடிக்காது, அதிசயம் நடைபெறவில்லையென்றால் குண்டு வெடிக்கிறது – எண்ணங்களில் குண்டு வெடிதாலும் சரி, வார்த்தைகளில் குண்டு வெடித்தாலும் சரி. எண்ணங்களினால் கூட வீணான புயல் வருகிறது என்றால் வெடிக்கிறது (அழுத்தம்) இல்லையா. வெடிக்க கூடாது, ஆனால் அதிசயம் செய்ய வேண்டும். ஏனெனில் ஆதி பிதா பிரம்மாவின் பிராமண குழந்தைகள் எப்பொழுதுமே பூஜ்யகுரிய வர்களாக பாடப்படுகிறார்களா? இப்பொழுது இந்த கடைசி ஜென்மத்திலும் கூட பார்த்தீர்கள் என்றால் அனைத்தையும் விட உயர்ந்த வர்ணனை யாரை பாடப்படுகிறது? பிராமணர்களை தான் சொல்கிறார்கள் இல்லையா. உயர்ந்த பெயர் மற்றும் மிக உயர்ந்த காரியங்களுக்காகவும் கூட பிராமணர்களை தான் அழைக்கிறார்கள். எனவே கடைசி பிறவி வரை பிராமண ஆத்மாக்களுக்கு தான் உயர்ந்த பெயர், உயர்ந்த செயல் பிரபலமாகிறது. பரம்பரை பரம்பரையாக வந்துக் கொண்டு வருகிறது. பெயரின் மூலம் மட்டுமே செயல் நடைபெற்று வருகிறது. பெயர் உங்களுடையது, ஆனால் பெயர்களினால் (பிராமணர்களின்) செயல்கள் நடைபெற்று வருகிறது. உண்மையான பிராமண ஆத்மாக்களின் மகிமைகளும் பாராட்டுகள் எவ்வளவு இருக்கிறது, இதன் மூலம் பார்க்கலாம். பிராமணன் – என்ற பெயர் கூட அழிவற்றதாக ஆகிவிட்டது. அழிவற்ற பிராப்திகள் நிறைந்த வாழ்க்கை ஆகிவிட்டது.

பிராமண வாழ்க்கையின் விசேஷத்தன்மை – முயற்சி குறைவு, அதிகப்படியான இலாபம். ஏனெனில் அன்பிற்கு முன்னால் உழைப்பு தேவைப்படாது. இப்பொழுது கடைசி ஜென்மத்தில் கூட பிராமணர்கள் முயற்சி (கடின உழைப்பு) செய்யாமல், மன அமைதியோடு சாப்பிடுகிறார்கள் (வாழ்கிறார்கள்). ஒருவேளை (பிராமண என்ற) பெயரிலேயே செயல் நடைபெறுகிறது என்றால் பசியுடன் இருக்க முடியாது. எனவே இந்த நேரத்தில் பிராமண வாழ்க்கையின் விசேஷத் தன்மைகள் இதுவரை அடையாள சின்னமாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், இந்தளவு உயர்ந்த விசேஷ ஆத்மாக்களாக இருக்கிறீர்கள். புரிந்ததா?

தற்சமயத்தில் பூஜைக்குரியவர்கள் தான் எதிர்கால பூஜைக்குரியவர்களாக ஆகிறார்கள். இவர்களை தான் விசேஷமான ஆத்மாக்கள் நம்பர் ஓன் என்று சொல்லப்படுகிறது. எனவே சோதனை செய்யுங்கள். பிரம்மா பாபா வின் கதைகளை கேட்டீர்கள் அல்லவா. இப்பொழுதும் மேலும் பலரும் (தாதிகள்) உள்ளனர். இந்த பிரம்மா பாபா வின் விசேஷத்தன்மைகளை எப்பொழுதும் முன்னால் வையுங்கள். மற்ற எந்த விஷயங்களிலும் செல்லாதீர்கள். ஆனால் விசேஷத்தன்மைகளை பார்த்து வர்ணனை செய்யுங்கள். ஒவ்வொருவரின் விசேஷத்தன்மைகள் முக்கியத்துவத்தை சொல்லுங்கள் விசேஷமானவர் ஆகுங்கள். ஆவது என்றாலே தன்னிடத்தில் விசேஷங்கள் உடையவர் ஆவது. புரிந்ததா. நல்லது.

நாலாபக்கமுள்ள அனைத்து நம்பர் ஓன் விசேஷ ஆத்மாக்களுக்கு, பிராமண வாழ்க்கை வாழக்கூடிய அனைத்து விசேஷ ஆத்மாக்களுக்கு, சதா பிரம்மா பாபாவை முன்னால் வைத்து சமமானவர் ஆகக்கூடிய குழந்தைகளை அநாதி (சிவ) பாபா, ஆதி (பிரம்மா) பாபாவின் இரட்டை ரூபத்தின் மூலம் அனைத்து சாலிகிராமம் (பரந்தாமவாசி), மற்றும் சாகார பிராமண ஆத்மாக்களுக்கு நேசம் நிறைந்த அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரங்கள்.

பார்ட்டிகளுடன் சந்திப்பு

1. சதா பாபாவின் கை (ஸ்ரீமத்) மற்றும் துணையில் இருக்கும் பாக்கியசாலி எனப் புரிந்திருக்கிறீகளா? பாபாவின் கை மற்றும் துணை இருக்குமிடத்தில், எப்பொழுதுமே மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை வாழ்கிறோம். குழப்பமடைபவர்களாக அல்ல, மகிழ்ச்சியில் இருங்கள். எந்தவொரு பிரச்சனையும் தன்பக்கம் ஈர்க்காது. சதா பாபாவின் பக்கம் ஈர்க்கப்படுவீர்கள். அனை வரையும் விட பெரிய மற்றும் சிறந்த தந்தையாக இருக்கிறார். எனவே பாபாவை தவிர வேறு எந்த பொருளோ அல்லது மனிதர்களோ ஈர்க்க முடியாது. யார் பாபாவின் கை மற்றும் துணையில் வளர்கிறார்களோ, அவர்களின் மனம் வேறு எங்கும் செல்ல முடியாது. எனவே அனைவரும் அதுபோன்று இருக்கிறீர்களா? அல்லது மாயாவின் வளர்ப்பில் சென்றுக் கொண்டிருக்கிறீர்களா? அந்த வழி தடைசெய்யப்பட்டு இருக்கிறது அல்லவா. எனவே சதா பாபாவின் துணையின் மகிழ்ச்சி யில் இருங்கள். பாபா கிடைத்துவிட்டார், அனைத்தும் கிடைத்துவிட்டது. எதுவும் கிடைக்கவில்லை என்பதே இல்லை. எவ்வளவு தான் யாராவது கைகள், துணையை விடுவிக்க முயற்சி செய்யட்டும், ஆனால் விட்டு விடாதீர்கள். மேலும் விட்டு விட்டு எங்கு செல்வீர்கள்? இவரை விட பெரிய பாக்கியம் வேறு எதுவும் இல்லை. குமாரிகள் என்றுமே பாக்கியசாலிகள் தான். இரட்டை பாக்கியசாலிகளாக இருக்கிறார்கள். ஒன்று – குமாரி வாழ்க்கையின் பாக்கியம், இரண்டாவது பாபா வினுடையவர் ஆவதற்கான பாக்கியம். குமாரி வாழ்க்கை வணங்கப்படக் கூடியதாக இருக்கிறது. குமாரி வாழ்க்கை முடிவடைகிறது என்றால் அனைவருக்கும் முன்னால் தலைவணங்க வேண்டியிருக்கிறது. இல்லற வாழ்க்கை என்பதே வெள்ளாடு போன்ற வாழ்க்கையாகும், குமாரி வாழ்க்கை என்றாலே வணங்கப்படக்கூடிய வாழ்க்கையாகும். ஒருவேளை யாராவது ஒருமுறை கீழே விழுந்து விட்டாலும் கூட விழுந்து விடுவதினால் உடைந்து போய்விடுகிறது அல்லவா. பிறகு எவ்வளவு தான் கட்டு (பூசினாலும்) போட்டாலும், சரி செய்தாலும் கூட பலம் இழந்து விடுகிறது. எனவே புரிந்துக் கொள்பவர் ஆகுங்கள். சோதனை செய்து விட்டு பிறகு புத்திசாலி ஆகாதீர்கள். நல்லது.

2. சதா தன்னை கல்ப கல்பத்திற்கும் வெற்றி பெற்ற ஆத்மாவாக அனுபவம் செய்கிறீர்களா? பலமுறை வெற்றி பெற்றதற்கான நடிப்பை நடித்துள்ளீர்கள், மேலும் இப்பொழுதும் கூட நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். வெற்றி பெற்ற ஆத்மாக்கள் எப்பொழுதுமே மற்றவர்களையும் கூட வெற்றியாளர்களாக மாற்றுகிறார்கள். எதை பலமுறை செய்திருக்கிறோமோ, அது சதா எளிதாகவே இருக்கும், கடின உழைப்பு தேவைப்படாது. பலமுறை வெற்றி பெற்ற ஆத்மா என்ற மனநிலையின் மூலம் எப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் கடந்துச் செல்வது விளையாட்டாக இருக்கும். குஷி அனுபவம் ஆகிறதா? வெற்றி பெற்ற ஆத்மாக்களுக்கு வெற்றியின் உரிமை அனுபவம் ஆகிறது. உரிமை என்பது உழைப்பினால் கிடைக்காது, தானாகவே கிடைக்கும். எனவே சதா வெற்றியை குஷியோடு, அதிகாரத்தோடு முன்னேறிக்கொண்டே மற்றவர்களையும் கூட முன்னேற்றிக் கொண்டே செல்வார்கள். லௌகீக குடும்பத்தில் இருந்துக் கொண்டே லௌகீகத்தை அலௌகீ கமாக மாற்றிவிடுங்கள், ஏனெனில் அலௌகீக சம்மந்தம் சுகம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. லௌகீக தொடர்பின் மூலம் அல்பகாலத்தின் சுகம் கிடைக்கிறது, சதா காலத்திற்கு கிடைப் பதில்லை. எனவே சதா சுகம் நிறைந்தவராக ஆகிவிட்டார்கள். துக்கமான உலகத்திலிருந்து சுகமான உலகத்திற்கு வந்து விட்டோம் என்ற அனுபவம் ஆகிறதா? இதற்கு முன் இராவணனின் குழந்தையாக இருந்ததால் துக்கத்தில் இருந்தோம், இப்பொழுது சுகத்தை தரக்கூடிய வள்ளலின் குழந்தை சுக சொரூபமாக ஆகிவிட்டோம். முதல் நம்பரில் இந்த அலௌகீக பிராமண குடும்பமாக இருக்கிறது. தேவதைகள் கூட இரண்டாம் நம்பரில் இருக்கிறார்கள். எனவே இந்த அலௌகீக வாழ்க்கை அன்பானதாக இருக்கிறது அல்லவா.

3. எப்பொழுதும் தன்னை பலமடங்கு பாக்கியசாலி என்ற அனுபவம் செய்கிறீர்களா? முழு கல்பத்திலும் இப்படிப்பட்ட உயர்ந்த பாக்கியத்தை அடைய முடியாது. ஏனெனில் எதிர்கால சொர்க்கத்தில் கூட இந்த சமயத்தின் முயற்சியின் பரிசு என்ற ரூபத்தில் இராஜ்ய பாக்கியம் கிடைக்கிறது. எதிர்காலத்திலும் கூட தற்சமயத்தின் பாக்கியத்தின் கணக்குப்படி தான் கிடைக்கிறது. இந்த சமயத்தின் பாக்கியத்திற்கு தான் முக்கியத்துவம் இருக்கிறது. இந்த சமயத்தில் தான் விதை விதைக்கிறீர்கள், மேலும் பலன் அநேக ஜென்மத்திற்கு கிடைக்கிறது. எனவே முக்கியத்துவம் என்பது விதைக்கு தான் கணக்கிடப்படுகிறது அல்லவா. இந்த சமயத்தில் பாக்கியத்தை உருவாக்குவது மற்றும் பாக்கியத்தை அடைவது – இந்த விதையை விதைக்க வேண்டும். எனவே இந்த கவனத்தோடு சதா முயற்சியில் தீவிரமாக முன்னேறிச் செல்லுங்கள், மேலும் சதா இந்த சமயத்தின் பலமடங்கு பாக்கியத்தின் நினைவை வெளிக் கொண்டு வந்து, காரியங்கள் செய்துக் கொண்டிருந்தாலும் கூட செயலில் தான் தனது உயர்ந்த பாக்கியம் என்பதை மறந்து விட வேண்டாம் இதனை நினைவில் வைக்க வேண்டும். நினைவு சொரூபமாக இருங்கள். இவர் களுக்குத் தான் பலமடங்கு பாக்கியசாலி என்று சொல்லப்படுகிறது. இந்த நினைவின் மூலம் ஆசீர்வாதத்தை எப்பொழுதும் கூடவே வைக்க வேண்டும். அதனால் எளிதாகவே முன்னேறிக் கொண்டேயிருங்கள், கடின உழைப்பிலிருந்து விடுப்பட்டு விடுவீர்கள். நல்லது.

கேள்வி: லௌகீக சம்மந்தத்தில் புத்தி சரியாக நிர்ணயம் செய்வதற்கான விதி என்ன?

பதில்: ஒருபொழுதும் லௌகீக விஷயங்களை நினைத்துக் கொண்டே நிர்ணயம் செய்ய வேண்டாம், அலௌகீக சக்திசாலியான நிலையில் நிலைத்திருந்து நிர்ணயம் செய்யுங்கள். முடிந்து போன எந்தவொரு விஷயங்களையும் நினைவில் வைப்பதினால் புத்தி அந்த பக்கம் சென்று விடுகிறது, பிறகு பழைய சம்ஸ்காரங்களும் வெளிப்படுகிறது, ஆகையால் கடினமாகி விடுகிறது. லௌகீக உணர்வுகளை முற்றிலும் மறந்து ஆத்மா என புரிந்து அதன் பிறகு நிர்ணயம் செய்தீர்கள் என்றால் சரியான நிர்ணயம் செய்ய முடியும். இதைத் தான் விகர்மாஜீத் (விகர்மங்களை வென்ற) சிம்மாசனம் என்று சொல்லப்படுகிறது. அலௌகீக ஆத்மீக நிலையில் தான் விகர்மாஜீத் மனநிலையின் சிம்மாசனமாகும், இந்த சிம்மாசனத்தில் அமர்ந்துக் கொண்டு நிர்ணயம் செய்தால் சரியாக இருக்கும்.

வரதானம்:-

அனைத்து சக்திகளினால் நிறைந்தவராகி அடிமைத் தனத்திலிருந்து விடுபடுவதற்காக இரண்டு வார்த்தைகளை நினைவில் வைக்க வேண்டும் – ஒன்று சாட்சி மற்றொன்று துனை. இதனால் பந்தனத்திலிருந்து விடுபட்ட நிலை விரைவில் ஏற்படும். சர்வசக்திகள் நிறைந்த பாபாவின் துணை இருந்தால் அனைத்து சக்திகளும் தானாகவே அடைந்து விடுவோம், மேலும் சாட்சியாக இருந்து நடந்துக் கொள்வதினால் எந்தவொரு பந்தனத்திலும் சிக்கிக் கொள்ள மாட்டோம். நிமித்தமாக இந்த உடலிலிருந்துக் கொண்டு காரியங்கள் செய்துவிட்டு சாட்சி (விலகி) விடுங்கள் – இந்த விசேஷ மான பயிற்சியை அதிகரியுங்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top