27 August 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

August 26, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! நீங்கள் இந்த எல்லையற்ற நாடக லீலையை அறிவீர்கள், நீங்கள் ஹீரோ நடிகர்களாக இருக்கிறீர்கள், தந்தை வந்து இப்போது உங்களை விழிப்படையச் செய்திருக்கின்றார்.

கேள்வி: -

தந்தையின் கட்டளை என்ன? அதை கடைபிடிப்பதன் மூலம் விகாரங்களின் துன்பத் திலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்?

பதில்:-

தந்தையின் கட்டளை என்னவெனில் முதலில் 7 நாட்கள் பாடமுறையில் (பட்டியில்) அமருங்கள், குழந்தைகளாகிய உங்களிடம் 5 விகாரங்களுக்கு வசப்பட்ட ஆத்மா யாராவது வந்தால் 7 நாட்களுக்கு நேரம் கொடுங்கள். குறைந்தது 7 நாட்கள் கொடுக்கும் போது 5 விகாரங்கள் என்ற வியாதியை எப்படி போக்குவது என்று நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம் என்று அவர்களிடம் கூறுங்கள். அதிகம் கேள்வி கேட்பவர்களிடம் முதலில் 7 நாட்கள் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுங்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

ஓம் நமச் சிவாய ..

ஓம்சாந்தி. குழந்தைகள் தந்தையின் மகிமை கேட்டீர்கள். இது எல்லையற்ற நாடக லீலையாகும், இந்த லீலையின் முதல், இடை, கடையை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஈஸ்வரனின் மாயை அளவற்றது என்று அவர்கள் நினைக்கின்றனர். இப்போது உங்களது புத்தியில் விழிப் புணர்வு வந்திருக்கிறது. மேலும் நீங்கள் முழு எல்லையற்ற லீலையைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள். ஆனால் தந்தை எவ்வாறு யதார்த்த முறையில் புரிய வைக்கிறாரோ அதே போன்று குழந்தைகள் வரிசைக் கிரமமான முயற்சியின்படி தான் புரிய வைக்க முடியும். மனிதர்கள் அந்த நடிகர்களைப் பார்ப்பதற்காக அவர்கள் பின்னால் ஓடுகின்றனர். இது எல்லையற்ற நாடகம் என்பதை நீங்கள் அறிவீர்கள், இதை உலக மனிதர்கள் அறியவில்லை. மனிதர்கள் கும்பகர்ணனின் அசுர தூக்கத்தில் தூங்கிக் கொண்டிருக் கின்றனர் என்று பாடப்படுகிறது. இப்போது வெளிச்சம் கிடைத்திருப்பதால் நீங்கள் விழிப்படைந்து விட்டீர்கள். நாம் அனைவரும் தூக்கத்தில் இருந்தோம் என்றும் கூறுவீர்கள். இப்போது நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். ஈஸ்வரன் சர்வவியாபி என்று அவர்கள் கூறி விடுகின்றனர். அவர்கள் தனக்குள் இப்படிப்பட்ட விசயங்களைப் பேசிக் கொள்ள முடியாது. நீங்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ள வேண்டும். ஆத்மாக்களாகிய நாம் தந்தையை அடைந்திருக்கிறோம், தந்தை எவ்வளவு விழிப்படையச் செய்திருக் கின்றார்! இது எல்லையற்ற லீலை ஆகும். இதில் முக்கிய நடிகர், டைரக்டர், படைப்பவர் யார் என்பதை அறிவீர்கள். அதனால் தான் இந்த நாடகத்தில் முக்கிய நடிகர்கள் யார் என்று நீங்கள் கேட்கிறீர்கள். கௌரவ படையில் முக்கியமானவர்கள் யார் பாண்டவ படையில் முக்கியமானவர்கள் யார் என்று சாஸ்திரங்களில் எழுதி வைத்து விட்டனர். இங்கு எல்லையற்ற விசயமாகும். மூலவதனம், சூட்சுமவதனம், ஸ்தூலவதனத்தின் முதல், இடை, கடையை அறிந்து கொள்ள வேண்டும். பிரம்மா மற்றும் விஷ்ணுவின் நடிப்பின் பாகம் இங்கு நடைபெறுகிறது. விஷ்ணுவின் ரூபம் இலட்சியம் மற்றும் இலக்காக இருக்கிறது. இந்த பதவி அடைய வேண்டும். பிரம்ம தேவதாய நமஹ என்று பாடுகின்றனர். பிறகு சிவ பரமாத்மாய நமஹ என்று கூறுகின்றனர். அவரை நிராகாரமானவர் என்று தான் கூறுகின்றனர். பரம்பிதா பரமாத்மா என்று கூறுகின்றனர் எனில் தந்தையாக ஆகிவிடுகிறார் அல்லவா! பரமாத்மா என்று கூறி தந்தை என்ற வார்த்தை கூறாததால் சர்வவியாபி என்று கூறி விட்டனர். ஆகையால் மனிதர்களுக்கு எதுவும் புரிவது கிடையாது. எவ்வாறு நீங்களும் புரிந்து கொள்ளாமல் இருந்தீர்கள்! தந்தை வந்து தூய்மையற்றவர்களை தூய்மையாக ஆக்குகின்றார் என்பது யாருக்கும் தெரியாது. குழந்தை களாகிய நீங்கள் இப்போது எவ்வளவு புத்திசாலிகளாக ஆகிவிட்டீர்கள்! ஆரம்பம் முதல் கடைசி வரை அனைத்தையும் நீங்கள் அறிந்து கொண்டீர்கள். நாடகம் பார்ப்பதற்கு யார் முதலில் செல்கிறார்களோ அவர்கள் அவசியம் முதல், இடை, கடை அனைத்தையும் பார்ப்பார்கள். மேலும் நான் இதையெல்லாம் பார்த்தேன் என்பது புத்தியில் இருக்கும். இருப்பினும் மீண்டும் பார்க்க விரும்பினால் பார்க்கவும் முடியும். அது எல்லைக்குட்பட்ட நாடகமாகும். நீங்கள் எல்லையற்ற நாடகத்தை அறிந்து கொண்டீர்கள். சத்யுகத்திற்கு சென்று பிராப்தியை அனுபவிப்பீர்கள். பிறகு இந்த நாடகம் மறந்து விடும். பிறகு சரியான நேரத்தில் இந்த ஞானம் கிடைக்கும். ஆக இதுவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். எந்த ஒரு விசயத் திற்கும் கேள்வி-பதிலுக்கான அவசியம் கிடையாது. 7 நாள் பாடமுறை என்று கூறப்படுகிறது. ஆனால் 7 நாட்கள் (பட்டியில்) அமருவதும் கடினமாக இருக்கிறது. கேட்டவுடனேயே பயந்து விடுகின்றனர். இவ்வாறு ஏன் கூறப் படுகிறது? என்பது புரிய வைக்கப்படுகிறது. ஏனெனில் நீங்கள் அரைக் கல்பமாக நோயாளிகளாக ஆகி விட்டீர்கள். 5 விகாரங்கள் என்ற பூதம் பிடித்திருக்கிறது, இதில் நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த துன்பத்திலிருந்து எப்படி விடுபடுவது என்ற யுக்தி உங்களுக்கு கூறுகின்றார். தந்தையை நினைவு செய்ய வேண்டும், இதன் மூலம் உங்களது துன்பங்கள் (வேதனை) சதா காலத்திற்காகவும் அழிந்து விடும். 7 நாள் பாடமுறை பட்டியில் அமர வேண்டும் என்பது தந்தையின் கட்டளையாகும். கீதை, பாகவதம் போன்றவைகள் படிக்கும் போது 7 நாட்கள் அமர வைப்பர். இது பட்டியாகும். அனைவரும் இங்கேயே இருந்து விட முடியாது. சிலர் எங்கோ சிலர் வேறு எங்கோ இருக்கின்றனர். நாட்கள் செல்ல செல்ல அதிக முன்னேற்றம் ஏற்படும். இவை அனைத்தும் ருத்ர ஞான யக்ஞத்தின் கிளைகளாகும். எவ்வாறு தந்தைக்கு பல பெயர்கள் வைத்திருக்கிறார்களோ அதே போன்று இந்த ருத்ர ஞான யக்ஞத்திற்கும் அதிக பெயர்கள் வைத்து விட்டனர். பரம்பிதா பரமாத்மா தான் ருத்ரன் என்று கூறப்படுகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இராஜஸ்வ அசுவமேதம் அதாவது இந்த ரதத்தை யக்ஞத்தில் அர்பணிக்க வேண்டும். மீதம் ஆத்மாக்கள் தான் இருக்கும். அனைவரின் சரீரமும் பலியாகி விடும். ஹோலிகா பண்டிகை கொண்டாடுவர் அல்லவா! விநாச நேரத்தில் அனைவரின் சரீரமும் இந்த யக்ஞத்தில் சுவாஹா ஆகிவிடும். அனைவரின் சரீரமும் அர்ப்பணம் ஆக வேண்டும். ஆனால் நீங்கள் தந்தையிடமிருந்து முதலில் ஆஸ்தி அடைகிறீர்கள். அனைவரும் சென்றே ஆக வேண்டும். இராவணின் குடும்பம் மிகவும் பெரியது. உங்களது தெய்வீக குடும்பம் சிறியது. அசுர குடும்பம் எவ்வளவு பெரியதாக இருக்கிறது! அவர்கள் யாரும் தேவதைகளாக ஆகக் கூடியவர்கள் கிடையாது. யார் வேறு தர்மத்தில் மாற்றலாகி சென்றார்களோ அவர்கள் வெளிப் பட்டு வருவார்கள். பரம்பிதா பரமாத்மா பிரம்மாவின் வாயின் மூலம் வாய்வழி வம்சத்தினர்களை படைக்கின்றார். முதலில் எப்போதும் மனைவியை தான் தத்தெடுப்பர், பிறகு படைப்புகளை படைக்கின்றனர் என்று பாபா புரிய வைக் கின்றார். அது விகார வம்சத்தினர்கள். இந்த முழு படைப்பும் வாய் வழி வம்சத்தினர்கள். நீங்கள் உத்தமமானவர்கள், ஏனெனில் நீங்கள் சிரேஷ்டமானவர்களாக ஆகிறீர்கள். நீங்கள் தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும், ஏனெனில் பிராமணர்கள் தந்தையிடம் தான் செல்ல வேண்டும்.

வீட்டிற்கு திரும்பிச் சென்று பிறகு சத்யுகத்திற்கு சுகத்தின் நடிப்பு நடிக்க வருவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பலர் புரிந்திருக்கின்றனர், இருப்பினும் 7 நாட்கள் (பட்டிக்காக) நேரம் ஒதுக்கி கொடுப்பது கிடையாது. ஆக அவர்கள் நமது பரிவாரத்தில் (குடும்பத்தில் )வரக் கூடிய நல்ல குழந்தைகள் கிடையாது என்று புரிந்து கொள்ளப்படுகிறது. பொருத்தமானவர்களாக இருந்தால் அவர்களுக்கு மிகவும் நன்றாகப் பிடிக்கும். சிலர் 5-8-15 நாட்களும் கூட இருந்து விடுகின்றனர். பிறகு தொடர்பு ஒத்துப் போகாத காரணத்தினால் மறைந்து விடுகின்றனர். விநாசம் நெருக்கத்தில் வரும் போது அனைவரும் இங்கு வந்தே ஆக வேண்டும். இராஜ்யம் ஸ்தாபனை ஆகியே தீர வேண்டும். கல்பத்திற்கு முன் எப்படி முயற்சி செய்தார்களோ வரிசைக்கிரமமாக அதை இப்போதும் செய்வார்கள். முயற்சியின்படி நாம் தந்தையிடமிருந்து ஆஸ்தியடைந்து கொண்டிருக்கிறோம் என்பது உங்களது புத்தியில் இருக்கிறது. எந்த அளவு நினைவு செய்வீர்களோ கர்மாதீத நிலை அடைவீர்களோ அந்த அளவு உயர்ந்த பதவி அடைவீர்கள். முதன் முதலில் உலகம் சதோ பிரதானமாக இருந்தது. இப்போது தமோ பிரதானமாக இருக்கிறது. பாரதம் தான் பழமையானது என்று கூறுகிறோம். நாம் தான் தேவதை களாக இருந்தோம், பிறகு 84 பிறவிகள் எடுத்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது மீண்டும் ஆஸ்தி அடைவதற்காக தந்தையிடம் வந்திருக் கிறோம். தூய்மையாக்குவதற்காக தந்தை வந்திருக்கின்றார். தூய்மையை இழக்கச் செய்வது இராவணன். நாம் எல்லையற்ற முக்கிய ஆல்ரவுண்ட் நடிகர்களாக இருக்கிறோம். சூரியவம்சி, சந்திரவம்சி ……. இப்படி சக்கரத்தில் வந்து இப்போது சூரியவம்சத்திலிருந்து மீண்டும் பிராமண வர்ணத்தில் வந்திருக்கிறோம். அவசியம் பிராமணர்கள் தேவை அல்லவா! பிராமணர்கள் குடுமி போன்று இருக்கின்றனர். பிராமணர்கள் குடுமி வைத்துக் கொள்வர். தேவதா தர்மமும் உயர்ந்தது. இது புத்தியில் இருக்கிறது அல்லவா! எல்லையற்ற நாடகத்தில் நாம் ஆல்ரவுண்ட் நடிப்பு நடிக்கக் கூடியவர்கள். இந்த வர்ணங்கள் பாரதத்திற் காகத் தான் பாடப்பட்டிருக்கிறது. குறிப்பாக விஷ்ணுவைத் தான் காண்பிக்கின்றனர். அதில் சிவபாபா மற்றும் பிராமணர்களின் குடுமியை நீக்கி விட்டனர், காண்பிக்கவில்லை. இப்போது உங்களது புத்தியில் 84 பிறவிகளின் ரகசியம் பதிந்திருக்கிறது. நீங்கள் எத்தனை பிறவிகள் எடுக்கிறீர்கள்? மற்ற தர்மத்தினர்கள் எத்தனை பிறவிகள் எடுக்கின்றனர்? ஒன்று போல பிறவிகள் எடுக்க முடியாது. தாமதமாக வருபவர்களின் பிறவிகள் குறைந்து விடும். முதன் முதலில் வருபவர்களுக்குத் தான் 84 பிறவிகள் என்று கூறலாம். அனைவரும் சூரியவம்சத்திற்கு வந்து விடமாட்டார்கள். இதற்கும் கணக்கு இருக்கிறது, இது தான் விரிவான விளக்கம் என்று கூறப்படுகிறது. பல குழந்தைகள் மறந்து விடுகின்றனர். பள்ளியிலும் முதல் தரம், இரண்டாம் தரம் இருக்கிறது அல்லவா! ஆசிரியரின் பார்வை முதன் முதலில் முதல் தரமுடையவர்களின் பக்கம் செல்லும். ஆக உங்களது புத்தியில் முழு வெளிச்சமும் (விளக்கம்) இருக்கிறது. மற்றபடி ஒவ்வொரு விசயத்தின் விரிவான விளக்கத்தில் செல்ல முடியாது. முக்கிய தர்மங்களை பற்றி புரிய வைக்கப்படுகிறது. முழு நாடகத்தின் லீலை களை புத்தியில் வைத்துக் கொண்டு நாம் இப்போது வீடு திரும்ப வேண்டும் என்று நினைக் கிறீர்கள். எப்போது கர்மாதீத நிலை அடைவோமோ அப்போது தான் தங்கயுகத்திற்கு தகுதியானவர் களாக ஆவோம். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நமது ஆத்மா தூய்மையாக ஆகிவிடும், பிறகு ஆடையும் (சரீரமும்) தூய்மையானதாக கிடைக்கும். தந்தையை நினைவு செய்து செய்து நாம் தங்கயுகத்திற்கு சென்று விடுவோம். தனது தகுதியை பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த அளவு உயர்வாக செல்வீர்களோ அந்த அளவிற்கு குஷியின் அளவு அதிகரிக்கும். கீழே இறங்குவதன் மூலம் குஷியின் அளவும் குறைந்து விடும். சதோ பிரதானத்திலிருந்து கீழே இறங்கி இறங்கி இப்போது முற்றிலுமாக தமோ பிரதானம் ஆகிவிட்டீர்கள். இப்போது தந்தை புரிய வைக்கின்றார். இருப்பினும் மாயை அடிக்கடி மறக்க வைத்து விடுகிறது. இது மாயையோடு நடக்கும் யுத்தமாகும். பலர் மாயைக்கு வசமாகி விடுகின்றனர். சத்தியமான உள்ளத்தைப் பார்த்து தலைவன் மகிழ்ச்சி அடைவார் என்று தந்தை கூறு கின்றார். எத்தனையோ அபலைகள் தந்தையின் நினைவில் சத்தியமான உள்ளத்துடன் இருக்கின்றனர். நான் ஒருபோதும் விகாரத்தில் செல்லமாட்டேன் என்று உறுதிமொழி கொடுத்திருக்கின்றனர். அதிக தடைகள் ஏற்படு கின்றன. கண்காட்சி போன்றவைகளில் எவ்வளவு தடைகள் ஏற்படுத்துகின்றனர்! மிக ஆர்வத்துடன் வருகின்றனர், ஆகையால் அதிக பாதுகாப்பு அளித்து பாலனை தர வேண்டும். மனிதர்களின் மன நிலை மிகவும் கெட்டு போய் இருக்கின்றன. பஞ்சாயத்து இராஜ்யம் அல்லவா! பிறகு சத்யுகத்தில் 100 சதவிகிதம் தர்மம், சட்டம், ஒழுங்கு நிறைந்த, செல்வமிக்க, தெய்வீக இராஜ்யம் இருக்கும். ஆக குழந்தைகள் நீங்கள் அதிக முயற்சி செய்ய வேண்டும். சித்திரங்கள் அதிகம் உருவாகிக் கொண்டே இருக்கிறது. மனிதர்கள் தூரத்தி-ருந்தே படிக்க முடியுமளவிற்கு சித்திரங்கள் பெரியதாக இருக்க வேண்டும். இது மிகவும் புரிந்து கொள்ள வேண்டிய மற்றும் புரிய வைக்க வேண்டிய விசயமாகும். இதன் மூலம் மனிதர்கள் நாம் சொர்க்கவாசிகளாக இருந்தோம், இப்போது நரகவாசிகளாக ஆகி விட்டோம், மீண்டும் தூய்மை ஆக வேண்டும் என்பதை புரிந்து கொள்வர். நாடகத்தின் ரகசியத் தையும் புரிய வைக்க வேண்டும். இந்த சக்கரம் எப்படி சுழல்கிறது? எவ்வளவு காலம் ஏற்படுகிறது? நாம் தான் உலகிற்கு எஜமானர்களாக இருந்தோம், இன்று முற்றிலும் ஏழைகளாக ஆகிவிட்டோம். இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. இதுவும் விகர்மத்தின் பலனாகும், இதை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இப்போது தந்தை கர்மாதீத் நிலை உருவாக்க வந்திருக்கின்றார். பாரதம் எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? இப்போது இந்த யுத்தத்தில் முழு உலகமும் அர்ப்பணமாகி விடும். இதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நன்றாக முயற்சி செய்து மகாராஜா, மகாராணி ஆகி காண்பியுங்கள் என்று தந்தை கூறுகின்றார். சித்திரங்களின் மூலம் மிக நன்றாகப் புரிய வைக்க வேண்டும். நாம் எவ்வளவு உயர்வாக இருந்தோம்! பிறகு எவ்வளவு கீழே விழுந்து விட்டோம்! என்பது மட்டுமே புத்தியில் இருக்க வேண்டும். கீழே விழுந்த பலர் உங்களிடம் வருவார்கள். விபச்சாரிகள், அகிலைகளையும் முன்னேற்ற வேண்டும். அவர்களையும் முன்னேறச் செய்யும் போது தான் உங்களது பெயர் பிரபலமாகும். இது வரை யாருடைய புத்தியிலும் பதிவது கிடையாது. டெல்லியிலிருந்து ஓசை வெளிப்பட வேண்டும். அங்கு உடனேயே பெயர் கிடைத்து விடும். ஆனால் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. அபலைகள், விபச்சாரிகளை தந்தை வந்து எவ்வளவு உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கின்றார். நீங்கள் இப்படிப்பட்டவர்களை முன்னேற்றம் செய்யும் போது பெயர் பிரபலமாகி விடும். இது வரை ஆத்மா ரஜோ நிலை வரை வந்திருக்கிறது, இப்போது சதோ நிலையடைய வேண்டும் என்று பாபா கூறுகின்றார் அல்லவா! ஏதாவது செய்து காண்பியுங்கள் என்று பாபா கூறுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் அதிக சேவை செய்ய வேண்டும். ஆனால் நாளடைவில் ஏதாவது கிரஹச்சாரம் பிடித்து விடுகிறது. வருமானத்தில் கிரஹச்சாரம் ஏற்படும் அல்லவா! மாயை என்ற பூனை மயக்கமடையச் செய்து விடுகிறது. குலேபகாவலியின் கதை இருக்கிறது அல்லவா! பாப்தாதாவின் மனதில் யார் அமர முடியும்? என்பதை குழந்தைகள் சுயம் புரிந்திருக்கிறீர்கள். சந்தேகத்திற்கான விசயம் எதுவும் கிடையாது. இது எப்படி சாத்தியமாகும்? என்று சிலர் கேட்கின்றனர். அரே, நீங்கள் சாட்சியாக இருந்து பாருங்கள். நாடகத்தில் என்ன பாகம் இருக்கிறதோ அது நடைபெறும். நாடகம் என்ற பாதையிலிருந்து விலகி விடுகின்றனர். யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் விலகுவது கிடையாது. நீங்கள் ஏன் விலகுகிறீர்கள்? நாடகத்தில் எது பதிவாகியிருக்கிறதோ அது தான் நடை பெறும் அல்லவா! பாரதத்தில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு சாட்சாத்காரம் ஏற்படுகிறது. இது என்ன? இவ்வளவு ஆத்மாக்கள் வெளிப்பட்டு வருகிறதா என்ன? இவை அனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய நாடகத்தின் விளையாட்டு ஆகும். இதில் சந்தேகத்திற்கான விசயம் இருக்கவே முடியாது. பலர் சந்தேகத்தில் வந்து படிப்பை விட்டு விடுகின்றனர். தனது வருமானத்தை கெடுத்து கொள்கின்றனர். எந்த சூழலிலும் சந்தேகபுத்தியுடையவர்களாக ஆகக் கூடாது. தந்தையை புரிந்து கொண்டீர்கள், பிறகு தந்தையின் மீது சந்தேகம் வருமா என்ன? நாம் பதீத பாவனாகிய தந்தையிடம் தூய்மையாகிச் செல்வோம் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். ஆக தூய்மை யற்றவர்களை தூய்மை ஆக்குவதற்காக பதீத பாவனன் வர வேண்டும் என்று பாடப்பட்டிருக்கிறது. யார் தூய்மை ஆவார்களோ அவர்களே தூய உலகிற்கு செல்வார்கள் மற்றும் அமரர் ஆவார்கள். மற்றபடி யார் தூய்மையாக வில்லையோ அவர்கள் அமரர்களாக ஆகமாட்டார்கள். நீங்கள் அமர உலகிற்கு எஜமானர் களாக ஆகிறீர்கள். தந்தை எவ்வளவு உயர்ந்த ஆஸ்தி கொடுக்கின்றார். 21 பிறவிகளுக்கு தூய்மையாக இருக்குமளவிற்கு தூய்மையானவர்களாக ஆக்குகின்றார். சந்நியாசிகள் விகாரத்தின் மூலம் பிறப்பு எடுக்கின்றனர். அமரபுரிக்கு தகுதியானவர்களாக ஆவது கிடையாது. அமரபுரிக்கு தகுதியானவர்களாக பாபா உருவாக்குகின்றார். இந்த அமரக்கதையை பார்வதிகளுக்கு அமர்நாத் பாபா, சிவன் தான் கூறிக் கொண்டிருக்கின்றார். குழந்தைகள் எல்லையற்ற பாபாவிடம் வந்திருக் கிறீர்கள், ஆஸ்தியடைந்தே ஆக வேண்டும் அல்லவா! இங்கு புத்துணர்வு அடைவதற்காகவே கடலை நாடி வருகிறீர்கள். பிறகு சென்று தனக்குச் சமமாக ஆக்க வேண்டும். ஆக குழந்தைகளின் தொழிலும் இது தான் அல்லவா! நல்லது.

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) எந்த விசயத்திலும் சந்தேகம் வரக் கூடாது. நாடகத்தை சாட்சியாக இருந்து பார்க்க வேண்டும். ஒருபோதும் தனது ரிஜிஸ்டரை (புண்ணிய கணக்கின் பதிவுகளை) கெடுத்து கொள்ளக் கூடாது.

2) கர்மாதீத நிலை அடைவதற்காக நினைவில் இருப்பதற்கான முழு முயற்சி செய்ய வேண்டும். உண்மையான உள்ளத்துடன் தந்தையை நினைவு செய்ய வேண்டும். தனது ஸ்திதியின் டெம்ப்பரேச்சரை தானே பார்த்துக் கொள்ளுங்கள்.

வரதானம்:-

யாரிடம் திருப்தி என்ற பொக்கிஷம் உள்ளதோ, அவர்களிடம் அனைத்தும் உள்ளது, யார் கொஞ்சம் இருந்தாலும் திருப்தியாக இருக்கின்றார்களோ, அவர்களுக்கு அனைத்து பிராப்திகளின் அனுபவம் ஏற்படும். மேலும், யாரிடம் திருப்தி இல்லையோ, அவர்களிடம் அனைத்தும் இருந்தாலும் எதுவும் இருக்காது. ஏனெனில், அதிருப்தியான ஆத்மா சதா ஆசைகளுக்கு வசமாகி இருக்கிறது, அவருடைய ஒரு ஆசை பூர்த்தி அடைந்தால் மேலும் 10 ஆசைகள் உற்பத்தியாகிவிடும். ஆகை யினால், எல்லைக்குட்பட்ட ஆசைகள் என்றாலே என்னவென்று அறியாதவராக ஆகவேண்டும், அப்பொழுதே திருப்திமணி என்று கூற முடியும்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top