27 April 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

April 26, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! ஸ்ரீமத் படி நடந்து தனது செயல்களைத் திருத்திக் கொள்ளுங்கள், விகர்மங்களை சாம்பலாக்குங்கள். மாலையின் மணி ஆக வேண்டும் என்றால் ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் நினைவிற்கு வரக் கூடாது.

கேள்வி: -

எந்த குழந்தைகளை தந்தை தானாகவே காப்பாற்றுகிறார்?

பதில்:-

யார் எவ்வளவு தூய்மையுடன் நடக்கிறார்களோ, தந்தையிடம் எப்பொழுதும் உண்மை யாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு தானாகவே பாதுகாப்பு கிடைத்துக் கொண்டே இருக்கிறது. பொய்யாக நடப்பவர் களுக்கு பாதுகாப்பு ஏற்பட முடியாது. மாயை அவர்களை மிகவுமே தன் வசம் இழுத்துக் கொண்டு இருக்கும். அவர்களுக்கு பிறகு தண்டனை நிச்சயம் ஆகி விடுகிறது.

கேள்வி: -

குழந்தைகள் ஆன்மீக மருத்துவரிடம் (சர்ஜன்) தங்களது வியாதியை ஏன் மறைக் கிறார்கள்?

பதில்:-

ஏனெனில் அவர்களுக்கு தங்களது மதிப்பு பற்றி பயம் இருக்கும். மாயை நம்மை ஏமாற்றி விட்டது. கண்கள் குற்றமுடையதாக ஆகி விட்டுள்ளது என்பதை அறிந்தும் இருக் கிறார்கள். பிறகும் தந்தையிடம் மறைத்து விடுகிறார்கள். நீங்கள் எந்த அளவு மறைப்பீர்களோ, அந்த அளவு கீழே விழுந்து கொண்டே செல்வீர்கள் என்று பாபா கூறுகிறார். மாயை விழுங்கி விடும். பிறகு படிப்பு விடுபட்டு விடும். எனவே மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். மனவழி அல்லது அசுர வழிப் படி நடக்காதீர்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

ஓம் சாந்தி. ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். ஆன்மீகத் தந்தை தான் ஆத்மாக்களுக்கு கற்பிக்கிறார் என்று குழந்தைகள் நிச்சயம் செய்துள்ளார்கள். எனவே ஆத்மா பரமாத்மா பிரிந்திருந்தார்கள்.. என்ற பாடல் உள்ளது. மூலவதனத்தில் அனைத்து ஆத்மாக்களும் ஒன்றாக சேர்ந்து இருப்பார்கள். தனியாக இருப்பதில்லை. பிறகு அங்கிருந்து ஆத்மாக்கள் பிரிகிறார்கள். திரும்பத் திரும்ப வந்து அவரவர் பாகத்தை ஏற்று நடிக்கிறார்கள். சதோபிரதான நிலையிலிருந்து இறங்கி இறங்கி தமோபிரதானமாக ஆகி விடுகிறார்கள். ஹே பதீத பாவனரே, வாருங்கள், வந்து பாவனமாக ஆக்குங்கள் என்று அழைக்கவும் செய்கிறார்கள். நான் ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகும் வருகிறேன் என்று தந்தை குழந்தை களுக்கு புரிய வைக்கிறார். இந்த சிருஷ்டி சக்கரமே 5 ஆயிரம் வருடங்களினுடையது ஆகும். நிராகார சிவபாபா கூட அவசியம் உடல் மூலமாகத் தான் கூறுவார். மேலிருந்து ஏதோ (உந்துதல் (பிரேரணை) தூண்டி விடுவது ஒன்றுமில்லை. எப்படி இந்த உடல் மூலமாக உங்களுடன் உரையாடுகிறேன் என்று தந்தையும் கூறுகிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு டைரக்ஷ்ன் (வழிமுறை) கொடுக்கிறேன். யார் எந்த அளவிற்கு டைரக்ஷன் படி நடக்கிறார்களோ அவர்கள் தனக்குத் தானே நன்மை செய்கிறார்கள். தந்தை புரிய வைக்கிறார். பிறகு ஒருவர் ஸ்ரீமத் படி நடந்தாலும் சரி நடக்காமல் இருந்தாலும் சரி. ஆசிரியர் கூறுவதை கேட்டாலும் சரி, கேட்காமல் இருந்தாலும் சரி, அவர்கள் தங்களுக்கு லாபமோ அல்லது நஷ்டமோ ஏற்படுத்திக் கொள்கிறார்கள். கேட்கவில்லை என்றால் தோல்வி அடைந்து விடுவார்கள். சிவபாபா நல்ல முறையில் புரிய வைக்கிறார். சிவபாபாவிடமிருந்து குழந்தைகளாகிய நீங்கள் கற்றுக் கொண்டு பிறகு கற்பிக்க வேண்டும். மகன் தந்தையை வெளிப்படுத்துவார் (ஸன் ஷோஸ் ஃபாதர்). இதில் சரீர தந்தையின் விஷயம் கிடையாது. இது ஆன்மீகத் தந்தையின் விஷயம் ஆகும். எந்த அளவிற்கு யார் ஸ்ரீமத் படி நடக்கிறார்களோ, அந்த அளவிற்கு ஆஸ்தி பெறுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்துள்ளார்கள். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய பல பிறவிகளின் பாவங்கள் நீங்கிப் போகும் என்று தந்தை கூறுகிறார். ஏனெனில், இராவண இராஜ்யத்தில் பாவ ஆத்மாக்கள் புண்ணிய ஆத்மாக்களுக்கு முன்னால் தலை வணங்கு கிறார்கள். ஆனால் இதே புண்ணிய ஆத்மாக்கள் தான் பிறகு பாவ ஆத்மாக்களாக ஆகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் என்றுமே புண்ணிய ஆத்மாக்கள் ஆவார்கள் என்று நினைக்கிறார்கள். புனர்ஜென்மம் எடுத்து எடுத்து புண்ணிய ஆத்மாவிலிருந்து பாவ ஆத்மா ஆகிறார்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். 84 பிறவிகள் எடுக்கும் பொழுது சதோபிரதான நிலையிலிருந்து தமோ பிரதான நிலைக்கு வருகிறார்கள். பாவ ஆத்மா ஆகிறார்கள். பிறகு தந்தையை நினைவு செய்கிறார்கள். புண்ணிய ஆத்மாவாக இருக்கும் பொழுது தந்தையை நினைவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இப்பொழுது இந்த எல்லா விஷயங்களையும் தந்தை ஒன்றும் வந்து புரிய வைக்க மாட்டார். குழந்தைகள் சேவை செய்கிறார்கள். மனிதர்கள் இச்சமயம் அசுரர்களாக ஆகிக் கொண்டே போகிறார்கள். இந்த காரணத்தால் பரமாத்மா (சர்வ வியாபி) எங்கும் நிறைந்தவர் அல்ல என்பது புத்தியில் பதிவதே இல்லை. எல்லாமே இந்த விஷயத்தைப் பொருத்தது ஆகும். கிருஷ்ணர் தேகதாரி ஆவார். அவருக்கு தேவதை என்று கூறப்படுகிறது. ஆத்மாக்களின் ஃபாதர் நிராகார தந்தை ஆவார். அவரைத் தான் நினைவு செய்ய வேண்டும். பிரஜாபிதா என்றும் கூறுகிறார்கள் தான். ஆனால் அவர் சாகாரமானவர் ஆவார். இந்த எல்லா விஷயங்களும் நல்ல முறையில் புரிய வைக்கப்படுகிறது. ஆனால் நிறைய குழந்தைகள் புரிந்து கொள்ளாமல் தவறான வழியில் சென்று வனத்திற்குப் போய் விடுகிறார் கள். பாபா நகரம் அதாவது சொர்க்கம் செல்வதற்கான வழியைக் கூறுகிறார். ஆனால் புரியாத காரணத்தால் காட்டிற்குள் போய் விடுகிறார்கள். காட்டிற்குள் சென்று விடும் பொழுது முள்ளாக ஆகி விடுகிறார்கள். இங்கு வசிக்கையிலும் கூட வழியை முழுமையாகக் கடைபிடிப்பதில்லை. நடுவில் இருந்து விடுகிறார்கள். பிறகு அங்கு கூட (சத்யுகத்திற்கு) பின்னால் வந்து விடு கிறார்கள். நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்வதற்காக இங்கு வந்துள்ளீர்கள். திரேதாவைக் கூட உண்மையில் சொர்க்கம் என்று கூற மாட்டார்கள். 25 சதவிகிதம் குறைந்து விட்டது அல்லவா? இப்பொழுது நீங்கள் சங்கமத்தில் உள்ளீர்கள். பழைய உலகத்தை தியாகம் செய்து, புது உலகத்தை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். பழைய உலகத்தை மறந்து, திரேதாவை நினைவு செய்யுங்கள் என்று கூற மாட்டார். திரேதாவை புது உலகம் என்று கூறுவார்களா என்ன? வழியை சரியாக பிடித்துக் கொள்ளாத காரணத்தால் மேலும் கீழும் ஆகிக் கொண்டே இருப்பார்கள். நாடகப்படி முந்தைய கல்பத்தில் யார் முழுமையாக தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார்களோ அவர்களே தேர்ச்சி பெறுவார்கள். திரேதாவில் செல்பவர் களுக்கு தேர்ச்சி அடையாதவர்கள் என்றே கூறுவார்கள். யார் சொர்க்கவாசி ஆகிறார்களோ, அவர்கள் முழுமை யாக பாஸ் ஆகிறார்கள். கல்ப கல்பாந்திரமாக, ஜென்ம ஜென்மாந்திரமாக சங்கமத்தில் அவர்களே எப்படி இப்பொழுது செய்து கொண்டிருக்கிறார்களோ, அதே போல தேர்வில் பாஸ் செய்கிறார்கள். யார் மலராக ஆகக் கூடியவராக இல்லையோ, அவரை எவ்வளவு தான் பலமாக இழுத்தாலும் சரி, ஆனால் அவர்கள் ஆக மாட்டார்கள். அரளிப்பூவோ பிறகும் மலர் ஆகும் தானே ! முட்கள் குத்திக் கொண்டே இருக்கும். எல்லாமே படிப்பை பொருத்தது ஆகும். மாயை நல்ல நல்ல குழந்தைகளைக் கூட முள்ளாக ஆக்கி விடுகிறது. துரோகி ஆகி விடுகிறார்கள். யார் தங்களது வீட்டை விட்டு விட்டு மற்றொரு பக்கம் செல்கிறார்களோ, அவர்களுக்கு துரோகி என்று கூறப்படுகிறது. தந்தை மாயையிலிருந்து விடுவிக்க வந்துள்ளார். பாபா மாயை மிகவுமே பலசாலி ஆகும் என்று கூறுகிறார்கள். தன் பக்கம் ஈர்க்கிறது. மாயை ஒன்றும் குறைவான காந்தம் (சக்தியுடைய) இல்லை. இச்சமயம் பாருங்கள் அழகு கூட எவ்வளவு அதிகரித்து விட்டுள்ளது. எவ்வளவு நாகரீகமானவர்களாக ஆகிறார்கள். திரைப்படங்களில் என்னென்ன காண்பிக்கிறார்கள். இதற்கு முன்பு திரைப்படங்கள் இருக்கவில்லை. 100 வருடங்களுக்குள் தான் வெளிப்பட்டுள்ளது. இதில் நாடகத்தின் இரகசியத்தைக் கூட புரிய வைக்க வேண்டும். 100 வருடங்களுக்குள் ஏதோ சொர்க்கம் வந்து விட்டது போல உள்ளது. அங்கு இந்த விஞ்ஞானம் கூட மிகவும் சுகம் அளிக்கக் கூடியதாக இருக்கும். அங்கு விஞ்ஞானத்தின் ஆணவம் இருக்காது. எவ்வளவு சுகம் அளிக்கிறது. ஆனால் அந்த சுகம் நிலையாக ஆகி விட வேண்டும். எனவே பழைய உலகத்தின் விநாசம் ஆகிறது.

தந்தை குழந்தைகளை உயர்த்துவதற்காக பாருங்கள் எவ்வளவு உழைக்கிறார் ! ஆனால் பாபா நமக்கு கற்பிக் கிறார் என்பதை ஒரு சிலர் ஏற்பதே இல்லை. மிக நல்லவர்களும் மாயையின் பிடியில் வந்து விடுகிறார்கள். மாயை முழுமையாகவே வசப்படுத்தி விடுகிறது. ஆனால் பிறகும் ஒரு முறை யார் ஞானம் கேட்டார்களோ, சொர்க்கத்தில் அவசியம் வருவார்கள். ஆனால் உயர்ந்த பதவியை அடைய மாட்டார்கள். நாம் நாராயணர் ஆகிடுவோம் என்று எல்லோரும் தான் கூறுகிறார்கள். எனவே முயற்சியும் அந்த அளவிற்கு செய்ய வேண்டும். ஆனால் எல்லாமே நாடகத்தின் விளையாட்டாக உள்ளது. ஒரு சிலர் ஏறுகிறார்கள். ஒரு சிலர் விழுகிறார்கள். மேலும் கீழும் ஆகிக் கொண்டே இருக்கும். எல்லாமே நினைவு யாத்திரையைப் பொருத்தது ஆகும். தந்தை உங்களுக்கு குறையாத பொக்கிஷங்களைக் கொடுக்கிறார். அங்கு வினைப்பயனுடைய விஷயமே கிடையாது. இச்சமயம் இங்கு யார் சேமிப்பு செய்கிறார்களோ அவர்களே முழுமையான ஆஸ்தியைப் பெறுகிறார்கள். ஏறுகிறோம் என்றால், பின்னால் விழவும் போகிறோம் என்ற சிந்தனை செய்யக் கூடாது. அதிகமாக விழுந்திருக்கிறார்கள் என்றால், இப்பொழுது ஏறவே வேண்டி உள்ளது. நாடகப்படி முயற்சி ஆகிக் கொண்டே இருக்கிறது. இருவருக்கும் பாருங்கள் எவ்வளவு பூஜை ஆகிறது. சிவனுக்கு எல்லோரையும் விட அதிகமாக பூஜை நடக்கிறது. அவரைப் பிறகு கல், மண் இவற்றில் இருப்பதாக கூறி விடுகிறார்கள். எவ்வளவு அறியாமை உள்ளது. நாம் தான் தேவதையாக இருந்தோம், பின் நாம் தான் ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர் கள். சிவனுக்கு பூஜையும் செய்கிறார்கள். பலியும் இடுகிறார்கள். ஆனால் பிறகும் சிவனை யாரும் அறியாமலே இருக்கிறார்கள். அந்த ஞானக் கடலான தந்தை எப்படி வந்து படிப்பிக் கிறார்? இப்பொழுது படித்து முயற்சி செய்து உயர்ந்த பதவியை அடைய வேண்டும். மாயை கூட யாரையும் விடுவதில்லை. ஒரேயடியாக பிடித்து விடுகிறது. குழந்தைகளே ! உண்மை யிலும் உண்மையான சார்ட் எழுதுங்கள் என்று பாபா கூறுகிறார். ஒரு சில குழந்தைகள் உண்மையைக் கூறுவதில்லை. ஆக தண்டனையும் ஆகி விடுகிறது. தண்டனையின் பொழுது, தவறு செய்து விட்டோம் என்கிறார்கள். மன்னித்து விடுங்கள், மீண்டும் அவ்வாறு செய்ய மாட்டோம் என்கிறார்கள். சிறிய குழந்தை ஏதாவது கெட்ட காரியம் செய்தது என்றால், தந்தை அடிக்கிறார். அப்பொழுது இல்லை அப்பா, செய்ய மாட்டேன் என்கிறார்கள். இவர் எல்லை யில்லாத தந்தை ஆவார். இவ்வளவு பெரிய தந்தை எவ்வளவு பணிவுடன் நடக்கிறார். எவ்வளவு மிருதுவாக இருக்கிறார். எப்படி சிறிய குழந்தைகள் மென்மையாக இருப்பார்களோ அதுபோல ஏதாவது விஷயம் ஆகியது என்றால் நல்லது, சரி என்று கூறி விடுவார். ஏனெனில், நாடகத்தின் படி நடக்கிறார். நல்லது. நாடகத்தின் செயல் அவ்வாறு இருந்தது. இனி மேற் கொண்டு அவ்வாறு ஆகாதிருக்கட்டும் என்று பிறகு புரிய வைக்கிறார். ஸ்ரீமத் மற்றும் அசுர வழி. இந்த பிரம்மா கூட அலௌகீக தந்தை ஆவார் அல்லவா? பிறகும் எல்லையில்லாத தந்தை ஆவார். எல்லைக்குட்பட்ட தந்தை கூறுவதை வேண்டுமானால் ஒருவர் ஏற்காமலிருக்கலாம். எல்லையில்லாத தந்தை இவரை (பிரம்மாவை) கருவியாக ஆக்கி உள்ளார். எனவே இவர் கூறுவதை அவசியம் ஏற்க வேண்டும் அல்லவா? எனவே மாயை ஒன்றும் குறைவானது அல்ல. தவறான காரியம் செய்வித்து விடுகிறது என்று இந்த பாபா கூறுகிறார். இது ஈசுவரிய வழி ஆகும் என்று புரிந்திருக்க வேண்டும். இவர் மூலமாக ஒரு வேளை அப்பேர்ப்பட்ட ஏதாவதொரு தவறான வழி கிடைத்து விட்டது என்றால் நான் சரி செய்து விடுவேன் என்று தந்தை கூறுகிறார். பாபா ரதம் கூட அனுபவம் உடையவருடையதை எடுத்துள்ளார். எவ்வளவு திட்டுக்கள் வாங்கி உள்ளார். பாபாவுடன் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். எவ்வளவு யார் தூய்மையுடன் நடப்பாரோ அந்த அளவிற்கு அவருக்கு பாதுகாப்பு ஆகும். பொய்யான நடத்தை உடையவர்களுக்கு பாதுகாப்பு ஆவதில்லை. அவர்களுக்கு தண்டனை நிலையான தாக ஆகி விடுகிறது. மாயை மூக்கை பிடித்து விடுகிறது. மாயை விழுங்கி விட்டது. எனவே நாம் படிப்பை விட்டு விட்டோம் என்பதை குழந்தைகள் அறிந்திருப் பார்கள். என்ன ஆனாலும் சரி, ஆனால் படிப்பை ஒரு பொழுதும் நிறுத்தாதீர்கள் என்று பாபா கூறுகிறார். யார் எப்படி செய்வார்களோ அப்படி அடைவார்கள். எப்பொழுது அடைவார்கள்? வருங்காலத்தில். ஏனெனில் இப்பொழுது உலகம் மாறப்போகிறது. இது உங்களைத் தவிர யாருக்குமே தெரியாது. உங்களிலும் கூட நிறைய குழந்தைகள் மறந்து விடுகிறார்கள். ஒரு வேளை நினைவில் இருந்தார்கள் என்றால் குஷியும் இருக்கும். ஆனால் மாயை ஒரேயடியாக மறக்க வைத்து விடுகிறது. இந்த மாயையுடன் சண்டை கடைசிவரைக்கும் நடந்து கொண்டே இருக்கும். நம் மூலமாக இந்த தவறு ஆகி விட்டது என்று நல்ல நல்ல குழந்தைகளும் அறிந்துள்ளார்கள். பிறகு உண்மையைக் கூறுவதில்லை. மதிப்பு பற்றிய பயம் இருக்கும் மூச்சு திணறிக் கொண்டே இருப்பார்கள். ஆம். யாராவது தம்பதியினர் இருந்தார்கள் என்றால் ஒருவர் கூறி விட்டார். எனவே நாம் கூட அப்படியே கூறி விடு வோம் என்று நினைக்கிறார்கள். அதிர்ஷ்டத்தில் உயர்ந்த பதவி இல்லை என்றால் சர்ஜனிடம் (மருத்துவரிடம்) மறைத்து கொண்டே இருப்பார்கள். எவ்வளவு மறைப்பார்களோ அந்த அளவு கீழே விழுந்து கொண்டே போவார்கள். இந்த கண்கள் எப்பேர்ப்பட்டது என்றால் குற்ற தன்மையை விடுவதில்லை. ஒரு சிலர் மிகவும் நல்ல குழந்தைகளாக இருக்கிறார்கள். அவர்கள் ஒரு பொழுதும் வேறு யாரையும் நினைவு கூட செய்வதில்லை. எப்படி ஒரு பதிவிரதை பெண்ணிற்கு ஒரு பொழுதும் அந்நிய ஆணின் மீது பார்வை போகாது. எனவே மாலையின் மணி ஆக வேண்டும் என்றால் அப்பேர்ப்பட்ட நிலை வேண்டும் என்று தந்தை புரிய வைக்கிறார். உலகிற்கு அதிபதி ஆவது ஏதோ சாதாரண விஷயமா என்ன? எல்லையில்லாத தந்தை படிப்பிக்கிறார் மற்றது என்ன வேண்டும். இன்னின்னாரிடம் இந்த சிறப்பு உள்ளது. இவரிடம் இது உள்ளது என்று பாபா உங்களுக்கு (பிராக்டிகலாக) நடைமுறையில் காண்பிக்கிறார். அதனால் தான் வரிசைக்கிரமமாக அன்பு நினைவு அளிக்கிறார். இங்கு அமர்ந்திருந்தாலும் கூட பாபாவின் புத்தி சேவை செய்யக் கூடிய குழந்தைகள் பக்கம் இருக்கிறது. அஞ்ஞான காலத்தில் கூட கட்டளைப்படி நடக்கும் குழந்தை கள் மீது அன்பு இருக்கிறது. என்னுடைய எந்த குழந்தைகள் நன்றாக சேவை செய்கிறார்கள் என்பதை பாபா அறிந்துள்ளார். நீங்கள் பிரம்மாகுமார் மற்றும் பிரம்மா குமாரிகள், சிவபாபாவின் பேரன் மற்றும் பேத்திகள் ஆவீர்கள். பாட்டனாரிடமிருந்து ஆஸ்தி அவசியம் கிடைக்க வேண்டி உள்ளது. பிரம்மாவிடம் ஆஸ்தி இல்லை. ஆத்மாக்களாகிய உங்களுடைய எல்லையில்லாத தந்தை ஆவேன் என்று சுயம் தந்தை கூறுகிறார். உங்களுக்கு எல்லையில்லாத ஆஸ்தி அளிக்கிறேன். எனவே இப்பொழுது என்னுடைய ஸ்ரீமத் படி நடங்கள். குழந்தைகளாகிய உங்களை தனக்குச் சமானமாக அசரீரியாக ஆக்கி, திரும்ப அழைத்து செல்வதற்காக நான் வந்துள்ளேன். இப்பொழுது உங்களுடைய ஜோதியை ஞானம் மற்றும் யோகத்தினால் ஏற்றிக் கொண்டிருக்கிறேன். ஞானம் மற்றும் யோகத்தில் சரியான முறையில் இல்லை என்றால் தர்மராஜரிடம் அடிகள் வாங்க வேண்டி இருக்கும். எனவே முதன் முதலில் உங்களது விகர்மங் களை எரித்து சாம்பலாக்குங்கள். இச்சமயம் மனிதர்கள் தங்களை சொர்க்கத்தில் இருக்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறார்கள் என்றாலும் கூட இது குறுகிய கால சுகம் ஆகும். அவர்களுக்கு எல்லையில்லாத தந்தை ஆஸ்தி அளிப்பதில்லை. நான் ஏழைப் பங்காளன் ஆவேன் என்று தந்தை கூறுகிறார். யார் முற்றிலுமே ஏழைகளாக பதீதமான (தூய்மையற்ற) அகலிகைகளாக இருக்கிறார்களோ அவர்களை செல்வந்தர்களாக ஆக்கி விடுகிறேன். உங்களிடம் யாராவது பதீதமானவரும் வருவார்கள். ஆனால் குறைந்த பதவி அடைவார்கள். வெற்றி மாலையில் வர முடியாமல் போய் விடுவார்கள். இதுவோ எல்லையில்லாத தந்தை யிடம் வியாபாரம் செய்ய வேண்டி உள்ளது. பாபா இவையோ எல்லாமே மண்ணோடு சேர்ந்து விடப் போகிறது. எனவே நாங்கள் உங்கள் மீது சமர்ப்பணம் ஆகிறோம். இவை அனைத்தை யுமே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். எங்களை சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்கி விடுங்கள். நான் வள்ளல் ஆவேன் என்று தந்தை கூறுகிறார். இந்த இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதில் அல்லது உலகிற்கு அதிபதி ஆவதில் எந்த செலவும் இல்லை. அங்கு (உலகில்) பாருங்கள் சண்டைக்காக எவ்வளவு செலவு ஆகிறது. இங்கு உங்களுக்கு என்ன செலவு உள்ளது? ஏனெனில் எந்த ஒரு ஆயுதம் கருவிகள் கிடையாது. யோக பலத்தினாலே உலகின் அதிபதி ஆகிறீர்கள். அவர்கள் புஜபலத்தினால் அவ்வளவு சண்டையிடு கிறார்கள், பிறகும் அவர்களால் உலகின் அதிபதி ஆக முடியாது. நாடகத்தில் அவர்களுக்கு பாகமே இல்லை. உண்மையிலும் உண்மையான இராஜயோகத்தை எல்லையில்லாத தந்தை தான் கற்பிக்கிறார். இராஜயோகத் தினால் பரமபிதா பரமாத்மா சொர்க்கத்தை ஸ்தாபனை செய்திருந்தார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். மேலும் படிப்பிற்கு ஏற்பவே வரிசைக்கிரமமாக பதவி கிடைக்கும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. தந்தைக்குச் சமானமாக பணிவின் குணத்தை தாரணை செய்ய வேண்டும். யாரையுமே முள் போல குத்தக் கூடாது. மலராக ஆகி நறுமணத்தை அளிக்க வேண்டும்.

2. நேர்மையின் குணத்தை தாரணை செய்து சர்ஜனிடம் (மருத்துவர்) எந்த ஒரு விஷயத்தையும் மறைக்கக் கூடாது. எப்பேர்ப்பட்ட நிலைமையிலும் படிப்பை விடக் கூடாது. கட்டளைப்படி நடப்பவர் ஆக வேண்டும்.

வரதானம்:-

பாப்தாதாவிடமிருந்து என்னென்ன வரதானங்கள் கிடைக்கின்றனவோ, அவற்றை சமயத்தில் காரியத்தில் ஈடுபடுத்துவீர்களானால் வரதானங்கள் நிலையாக இருக்கும். வரதானத்தின் விதையை பலனளிப்பதாக ஆக்குவதற்கு அடிக்கடி ஸ்மிருதி (நினைவு) என்ற நீரை அதற்கு ஊற்றுங்கள். வரதானத்தின் சொரூபத்தில் நிலைத்திருப்பதற்கான வெப்பத்தை அளியுங்கள். அப்போது ஒரு வரதானம் அநேக வரதானங்களை உடன் கொண்டு வரும். மேலும் பலன் சொரூபமாக வரதானி மூர்த்தி ஆகி விடுவீர்கள். எந்த அளவு வரதானங்களை சமயத்தில் காரியத்தில் ஈடுபடுத்துகிறீர்களோ, அந்த அளவு வரதானம் இன்னும் சிரேஷ்ட சொரூபத்தைக் காண்பித்துக் கொண்டே இருக்கும்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top