26 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

26 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

25 November 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! தன்னை இராஜயோகி எனப் புரிந்து விகாரி சம்பந்தங்களிலிருந்து பற்றை நீக்கிவிடுங்கள். நிமித்தமாத்திரமாக மட்டும் சேர்ந்து இருங்கள்.

கேள்வி: -

குழந்தைகளாகிய நீங்கள் தேக உணர்வை மறந்துவிட்டீர்கள் என்பதன் நினைவுச்சின்னம் சாஸ்திரங்களில் எந்த ரூபத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது?

பதில்:-

பாண்டவர்கள் மலைகளில் மறைந்துவிட்டனர் என்று காண்பிக்கின்றனர். ஆனால், மலைகளில் பனியில் சென்று சரீரத்தை விடும் அளவிற்கு அவர்களுக்கு நேர்ந்தது என்ன! இமாலய மலைகளில் யாரும் சரீரம் விடுவதில்லை என்று நியதி கூறுகிறது. மற்றபடி நீங்கள் யோக பலத்தின் மூலம் சரீரத்தை விடுகிறீர்கள். தேக உணர்வை மறந்து அசரீரி ஆவதற்கான பயிற்சி செய்கிறீர்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

ஓம்சாந்தி. ஆன்மிகத் தந்தை ஆன்மிகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். ஒவ்வொரு நாளும் புரிய வைக்கின்றார், ஆனாலும் சில விஷயங்கள் மறந்து விடுகின்றன. இது சங்கமயுகம் என்பதை குழந்தைகள் புத்தியில் வைக்க வேண்டும். நாம் சங்கமயுகத்தில் இருக்கின்றோம். தந்தை வருவது கூட சங்கமயுகத்தில் தான். கலியுக இறுதி மற்றும் சத்யுகத்தின் ஆரம்பத்தினுடைய சங்கமமானது புகழப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் தான் அழைக்கின்றார்கள். கலியுகத்தின் இறுதியையே தூய்மை இல்லாத உலகம் என்று சொல்லப்படுகிறது. ஆகையினால் வேறு எந்த நேரத்திலும் அழைப்பதில்லை. தந்தையும் வரமாட்டார். எப்பொழுது கலியுகத்தின் இறுதி வருகிறதோ அப்பொழுதே பாபா தூய்மை இல்லாத எங்களை தூய்மைப்படுத்த வாருங்கள், கலியுகத்தின் இறுதி மற்றும் சத்யுகத்தின் ஆதியில் வாருங்கள் என்று என்னை அழைக்கின்றார்கள். ஆனால், கல்பத்தின் ஆயுள் எவ்வளவு என்று அவர்களுக்குத் தெரியாது. பக்தி செய்து செய்து, அலைந்து திரிந்து இறுதி யில் கிடைத்துவிடுவார் என்று நினைக்கின்றனர். கல்பத்தின் இறுதி எப்பொழுது வரும் என்பது யாருக்கும் தெரியாது. எப்பொழுது கலியுகத்தின் இறுதி வருகிறதோ அப்பொழுது தான் நினைவு செய்கிறார்கள். சத்யுக திரேதா யுகத்திலோ சுகம் இருக்கிறது. துவாபரயுகத்திலும் கூட அவ்வள வாக துக்கம் கிடையாது. கலியுகத்தில் மனிதர்கள் எப்பொழுது அதிகமாக துக்கம் அடைகின்றனரோ அப்பொழுது தான் தந்தையை அழைக்க ஆரம்பிக்கிறார்கள். தமோபிரதானம் என்றாலே துக்கம் நிறைந்த நிலை ஆகும். அப்பொழுதே அழைப்பார்கள் அல்லவா. ஹே! துக்கத்தை நீக்கி சுகம் கொடுப்பவரே வாருங்கள். துக்கத்தின் பந்தனம் அனேகம் உள்ளன. துக்கமான நேரத்தில் தான் இந்த பந்தனத்தில் இருந்து விடுவியுங்கள் என்று பகவானை அழைக்கின்றனர். எப்பொழுது எந்த வழியும் தெரியவில்லையோ அப்பொழுது மிகுந்த வேகத்தோடு (சப்தமிட்டு) அழைக்கிறார்கள். ஆனால், அப்பொழுதும் (இறைவனை) அடைவதில்லை. எவ்வாறு மறைந்து-கண்டுபிடிக்கும் விளையாட்டு உள்ளதல்லவா! அதுபோல எங்கிருந்து சென்றாலும் வழி தெரியாது. களைப்படைந்த பிறகு கூச்சலிடுவார்கள். இங்கும் மனிதர்கள் எப்பொழுது மிகவும் துக்கம் நிறைந்தவர்கள் ஆகிறார்களோ அப்பொழுது ஹே! துக்கத்தை நீக்கி சுகத்தை அளிப்பவரே, ஹே! கண்ணிழந்தவர்களின் ஊன்று கோல் ஆனவரே என்று கூச்சலிடுகிறார்கள். ஹே! கண்ணிழந்தவர் களின் ஊன்றுகோல் ஆனவரே என்று இந்த சமயத்தில் தான் அழைக்கின்றார்கள்.

இப்பொழுது நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். ஒரு பக்கம் பாண்டவர்கள் மறு பக்கம் கௌரவர்கள் இருக்கிறார்கள். யார் படைப்பாளர் மற்றும் படைப்பினுடைய முதல், இடை, கடையைப் பற்றி அறியவில்லையோ அவர்களை கண் இழந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. யார் தந்தை மூலம் படைப்பாளர் மற்றும் படைப்பை பற்றி அறிந்துவிட்டார்களோ அவர்களை அலங்கரிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகின்றது. எங்களுக்கு இராஜ்ய பாக்கியம் கிடைத் திருக்கிறது. அதனாலேயே சித்திரத்தில் காண்பிக்கிறார்கள் என்று நீங்கள் புரிய வைக்கிறீர்கள். சத்யுகம், சிவபாபாவால் ஸ்தாபனை செய்யப்பட்டது ஆகும். ஆகையினால், அதற்கு சிவாலயம் என்ற பெயர் வந்தது. பிறகு, விகாரி ஆகின்றார்கள். எனவே, வாம மார்க்கம் (இல்லற மார்க்கம்) ஸ்தாபனை ஆகிறது. ஆகையினால், இதை விகாரி உலகம் என்று சொல்லப்படுகிறது. சத்யுகம் சிவாலயம் ஆகும். கலியுகம் விகாரி உலகம் ஆகும். இப்பொழுது நாம் விகாரி உலகத்திலும் இல்லை, மற்றும் சிவாலயத்திலும் இல்லை என்பது சங்கமயுக பிராமணர்களாகிய உங்களுக்குத் தெரியும். நாம் சிவாலயத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம். இப்பொழுது விகாரி உலகம், விகாரி சம்மந்தங்களிலிருந்து நம்முடைய மோகம் நீங்கிவிட்டது. நம்முடைய எதிர்கால சம்மந்தங்கள் மீது இப்பொழுது மோகம் ஏற்பட்டுள்ளது. நாம் இப்பொழுது இராஜயோகிகளாக இருக் கிறோம், அவர்கள் யோகிகள். அவர்களோடு நமக்கு என்ன சம்மந்தம் உள்ளது? ஆனாலும் நிமித்த மாத்திரமாக தன்னுடைய வீட்டில் இருந்து தான் ஆகவேண்டும். ஆனாலும் சங்கமயுக பிராமணர்களுடன் அதிக தொடர்பு உள்ளது. ஏனென்றால், பிராமணர்களைப் போன்று உயர்ந்த சேவை வேறு எவரும் செய்ய இயலாது. ஆன்மிக சேவை செய்வதற்கு தந்தை தான் நிமித்தம் ஆகின்றார். அவர் தந்தையாகவும் இருக்கின்றார், ஆசிரியராகவும் இருக்கின்றார், குருவாகவும் இருக்கின்றார். சத்தியமான பாபா, சத்தியமான டீச்சர், சத்குருவாகவும் இருக்கின்றார். சத்தியத்தை உயர்ந்தது என்று சொல்கின்றார்கள். அவர் மூலம் நமக்கு ஆஸ்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. இது நினைவில் இருந்ததென்றால் ஒவ்வொரு நேரமும் நொடியும் எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! பின்னர் பிறருக்கு புரிய வைப்பதற்காக முயற்சி செய்யப்படுகிறது. முதன்முதலில் அவர் பரலௌகீக தந்தை ஆவார். அவர் சத்தியமான ஆசிரியராகவும் இருக்கிறார், சத்குருவாகவும் இருக்கிறார். சிருஷ்டிச் சக்கரத்தின் முதல், இடை, கடை பற்றிய ஞானம் அளிக்கின்றார். ஆகையால், அவரை ஞானக்கடல் என்று சொல்லப்படுகிறது. முதன்முதலில் அவருடைய மகிமையைப் கூற வேண்டும். அவர் சத்தியமான தந்தை, சத்தியமான ஆசிரியர், சத்தியமான சத்குரு ஆவார். சத்திய தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றார். ஒரு இராஜ்யம் வேண்டும் என்று கேட்கின்றார்கள் அல்லவா! அது சத்யுகத்தில் தான் இருக்கும், இங்கு இருக்க முடியாது. ஒரே உலகம் ஆக வேண்டும். ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று மனிதர்கள் கூறுகிறார்கள். உலகம் ஒன்று தான் உள்ளது. உலகத்தில் ஒரே ஒரு இராஜ்யம் மட்டும் ஏற்பட வேண்டும். இது ஏற்பட முடியும். தேவதைகளின் இராஜ்யம் நடந்தது. அங்கு வேறு எந்த குழப்பத்திற்கான விசயங்கள் கிடையாது. எல்லையற்ற தந்தை தான் வந்து இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றார். இதையும் நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டீர்கள். தந்தை தான் இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். ஸ்ரீகிருஷ்ணர் அல்ல. அவர்கள் கிருஷ்ணர் என்று புரிந்திருக்கிறார்கள். எப்பொழுது இராஜ்யத்தை ஸ்தாபனை செய்ய வேண்டியிருந்ததோ அப்பொழுதுதான் இராஜயோகம் கற்பிக்கப் பட்டது. மற்றபடி சாஸ்திரங்களில் மகிமை தான் உள்ளது. மகிமை செய்வதால் மட்டும் யாராவது இராஜ யோகத்தை கற்பிக்கிறார்களா என்ன? கீதை முதலியவற்றை சொல்பவர்கள் யாராவது இராஜ யோகத்தை கற்பிக்கிறார்களா என்ன? கீதை சொல்கிறார்கள், அதுவும் யார் வாழ்ந்து மறைந்து விட்டார்களோ அவர்களுடைய மகிமையை மட்டும் பாடுகிறார்கள். பகவான் யாருக்கு முன்பு ஞானத்தை கற்பித்தாரோ அவர்களே இராஜ்ய பதவியை அடைந்தார்கள். மற்றபடி, இந்தப் பண்டிகை முதலிய அனைத்தும் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தது ஆகும். முக்கியமானது சங்கம யுகத்தின் விசயம் ஆகும். சிவபாபா வருகின்றார், சிவஜெயந்திக்கு பிறகு கிருஷ்ண ஜெயந்தி வருகின்றது. சிவபாபாவின் வருகைக்குப் பிறகு அவசியம் புதிய உலகம் ஸ்தாபனை ஆகும். கிருஷ்ணர் சத்யுகத்தின் எஜமானராக இருக்கிறார். சிவபாபா வந்து கிருஷ்ணரை அவ்வாறு ஆக்கினார். ஒரு கிருஷ்ணருக்கு மட்டும் ஞானம் அளித்திருக்க மாட்டார். கிருஷ்ணபுரியை ஸ்தாபனை செய்திருப்பார். ஆத்மாவை தமோபிரதானத் திலிருந்து சதோபிரதானம் ஆக்கு வதற்காக யோகம் கற்பிக்கப்படுகிறது. நீங்கள் தான் பிறகு சதோ, ரஜோ, தமோவில் வருகிறீர்கள் அல்லவா! சத்யுகத்திலேயே நீங்கள் இருக்க வேண்டும் என்பது முடியாது. 84 ஜென்மங் களின் கணக்கும் உள்ளது. சத்யுகத்திற்குப் பின் திரேதாயுகம் அவசியம் வந்து தான் ஆகவேண்டும். பகலுக்குப் பின் இரவு வந்து தான் ஆகவேண்டும். யார் சத்யுகத்தை ஸ்தாபனை செய்கிறார்கள், எவ்வாறு செய்கிறார்கள்? ஏனென்றால் சத்யுகம் புது உலகமாகும். நான் பழைய உலகத்தை மாற்றுகின்றேன் என்று தந்தை கூறுகின்றார். இது அதே மிகப்பெரிய ஆயுதங்கள் பயன்படுத்தப் படும் மகாபாரதப் போர் ஆகும். பாண்டவர்களும் இருந்தார்கள் என்று சொல்கிறார்கள். பாண்டவர் களுக்கு வெற்றி கிடைத்தது. அவசியம் சுயராஜ்யம் கிடைத்து இருக்கிறது. எனவே, சுயராஜ்யத்தில் வருவீர்கள் அல்லவா! சரீரத்தை எங்கே விட்டாலும் இராஜ்யத்தில் வந்து தான் ஆக வேண்டும். இமாலய மலைகளில் யாரும் சரீரம் விடுவதில்லை என்று நியதி சொல்கிறது. இங்கு தான் யோகத்தை கற்றுக் கொள்கிறீர்கள். யோக பலத்தின் மூலம் தான் சரீரத்தை விடவேண்டும். அவர்கள் மலைகளின் பனியில் சென்று சரீரத்தை விடுவதற்கான அவசியம் என்ன வந்தது? இதுவும் பொய் ஆகும். எவ்வாறு நாகம் பழைய சட்டையை விடுத்து புதியது எடுத்துக் கொள்கிறது, அவ்வாறு ஆத்மாவும் ஒரு சரீரத்தை விட்டுவிட்டு இன்னொன்றை எடுக்கிறது. சாந்திதாமத்திற்குச் சென்று, பின்னர் சத்யுகத்தில் வருவீர்கள். சத்யுகத்தில் சரீரம் விடும்பொழுது அதாவது எப்பொழுது சரீரம் வயோதிக நிலையை அடைகிறதோ அப்பொழுது தானாகவே சரியான நேரத்தில் ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்றை எடுக்கின்றது என்று பாபா புரிய வைத்திருக்கின்றார். அங்கு சாந்திதாமத்திற்கு யாரும் திரும்பிச் செல்லமாட்டார்கள். சாந்திதாமத்திற்கு இப்பொழுது தான் செல்ல வேண்டும். இப்பொழுது அந்தப் பயிற்சி செய்யப்படுகிறது. உங்களுடைய அந்தப் பயிற்சியானது அழிவற்றதாக ஆகிவிடுகிறது. பழைய உலகத்தையே விட்டு விடவேண்டும் என்பதற்காகவே இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்கே புது உலகமாக இருக்கும். சொர்க்க வாசிகள் சரீரத்தை விட்டால் சொர்க்கத்தில் தான் வருவார்கள். நரகவாசிகள் சரீரத்தை விட்டால் நரகத்தில் தான் வருவார்கள். சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது. எப்பொழுது தந்தை வந்து இராஜயோகத்தை கற்பிப்பாரோ அப்பொழுது தான் சத்யுகத்திற்குச் செல்வீர்கள், தெய்வீக இராஜ்யத்திற்கு அதாவது சத்யுகத்திற்குச் செல்ல முடியும். இராஜா, மஹாராஜா என்ற பதவி இங்கு தான் கிடைக்கிறது. பதவி வேறு கிடைத்தாலும் அதே பெயர் தான் இருந்து வருகிறது, மாற முடியாது. ஒரு சிலர் பணம் கொடுத்து பட்டம் (அந்தஸ்து) பெறுகிறார்கள். முன்னால் ஒன்று இரண்டு இலட்சம் கொடுத்தால் பட்டம் கிடைத்தது. இந்த ஆன்மிக தந்தை ஆன்மிக குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். அவர் ஆன்மிகத் தந்தை, ஆத்மாக்களின் தந்தை என்று அழைக்கப்படுகின்றார். ஹே! பாபா வாருங்கள், வந்து எங்களை தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மை ஆக்குங்கள் என்று அவரை அழைக்கிறார்கள். இங்கு அதிகமான துக்கம் உள்ளது. எங்களை இராம இராஜ்யத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். நாடகத்தின் அனுசாரம் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் இவ்வாறு கூறினீர்கள். பரமபிதா பரமாத்மா வந்து தான் ஆகவேண்டும். இந்த சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. நான் கல்ப கல்பமாக கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகின்றேன்; இந்த வார்த்தைகளை அவசியம் எழுத வேண்டும். நாடகத் திட்டத்தின் அனுசாரம் வருகின்றேன், நாடகம் என்ற வார்த்தையையும் எழுத வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். இது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கான நாடகம் என்று மனிதர்களுக்குத் தெரிய வேண்டும். இப்பொழுது அனைத்து மனிதர்களும் தூய்மை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். ஆகையால், அவர்கள் நாங்கள் பாவிகளாக இருக்கிறோம், கீழானவர்களாக இருக்கிறோம் என்று கூறுகிறார்கள். விகாரி உலகமாகவும் உள்ளது, விஷக்கடலாக உள்ளது அல்லவா! விஷ்ணுபுரி பாற்கடலாக இருந்தது. அங்கு இலட்சுமி நாராயணர் இருவரும் இருந்தார்கள். இது பாற்கடலோடு ஒப்பிட்டுச் சொல்லப் படுகிறது. மற்றபடி பாற்கடல் என்று எதுவும் கிடையாது. கடலானது, சத்யுகத்திலும் கூட இதுவே தான் இருக்கும், கலியுகத்திலும் இருக்கிறது. சத்யுகத்தில் முழு கடலுக்கும் நீங்கள் எஜமானர்களாக இருக்கிறீர்கள். முழு பூமி, ஆகாயத்திற்கும் நீங்கள் எஜமானர்களாக இருக்கிறீர்கள். இப்பொழுது துண்டு துண்டாக ஆகிவிட்டது. இப்பொழுது இது சங்கமயுகம் ஆகும். சங்கமயுகம் எப்பொழுது நினைவிற்கு வருமோ அப்பொழுது சத்யுகத்திற்கு செல்கின்றோம் என்பதை புரிந்து கொள்வீர்கள். சங்கமயுகம் என்றால் பாபாவும் அவசியம் இருப்பார். அவர் இந்த உலகத்தை மாற்றக்கூடியவர். பிரம்மா மூலம் இங்கு ஸ்தாபனை நடக்கிறது. இப்பொழுது நீங்கள் சித்திரத்தை உருவாக்குகிறீர்கள். பாபா ஒளி மற்றும் சக்தி நிறைந்த புள்ளியாக இருக்கின்றார். உங்களுடைய ஆத்மாவும் ஒளியாக உள்ளது. இப்பொழுது உங்களுக்கு எவ்வாறு ஒளி காண்பிப்பது? ஆகவே, உங்களுடைய தலையில் ஒளி காண்பிக்கப்பட்டுள்ளது. ஆத்மாவிற்கு (பின்னால்) எவ்வாறு ஒளியைக் காண்பிப்பது? ஒளியைக் கொடுப்பதன் மூலம் பெரியதாகிவிடும். அவர்கள் பெரிய ஒளியைத் தான் பூஜிக்கிறார்கள். ஆகையால், மனிதர்கள் பரமாத்மாவை ஜோதி சொரூபம் என்று கூறுகிறார்கள். உண்மையில் ஒளி என்பது தூய்மையின் அடையாளமாகும். ஜோதி சொரூபமாக இருக்கின்றார் என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். புள்ளிக்குப் பதிலாக சிறிய ஒளியை (லைட்) வைத்தால் எவ்வாறு பூஜை செய்ய இயலும்? ஆகையால் பெரியதாக ஆக்கி விட்டார்கள். நான் பரம ஆத்மா, சுப்ரீம் சோல் என்னை நீங்கள் பரமாத்மா என அழைக்கிறீர்கள் என்று தந்தை கூறுகின்றார். ஆனால், சிறிய புள்ளிக்கு எவ்வாறு பூஜை செய்வது.. ஒளியை எவ்வாறு காண்பிப்பது? சிலர் லிங்கத்தி னுடைய பூஜை செய்கிறார்கள். செல்வந்தர்களோ வைரங்களால் ஆன ஒரு உருண்டையை உருவாக்கி அதனுடைய பூஜை செய்கிறார்கள். அதற்கு சிவலிங்கம் என்று பெயர் வைத்தார்கள். அவர் நட்சத்திரம் போல் இருக்கிறார். வேறு எந்த பொருளும் அல்ல. இது புரிந்து கொள்வதற்கான ஆழமான விஷயம் ஆகும். ஆத்மா சின்னதாகவோ, பெரியதாகவோ ஆவது இல்லை. இல்லை யெனில், எவ்வாறு பொருத்த முடியும் ஃபிட் ஆகும்? இப்பொழுது நீங்கள் எவ்வாறு தன்னுடைய ஆத்மாவைப் பற்றி அறிந்திருக்கிறீர்களோ, அவ்வாறு தந்தையைப் பற்றியும் அறிந்திருக்கிறீர்கள். ஆத்மா தந்தையை அழைக் கின்றது. நீங்கள் தனது ஆத்மாவைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படியானால் பரமாத்மாவை எவ்வாறு பார்ப்பீர்கள்? ஆம், திவ்ய திருஷ்டி மூலம் பார்க்க முடியும். நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள் என்றால் பின்னர், பார்ப்பதால் இலாபம் தான் என்ன! இந்த ஆன்மீக கல்வி கற்பதற்கானது ஆகும். இதன் மூலம் மனிதர்கள் தேவதை ஆகிறார்கள். இது எதிர்கால புது உலகிற்கான கல்வி ஆகும். இந்த இலட்சுமி நாராயணர் அத்தகைய கர்மத்தை எங்கே கற்றார்கள்? சங்கமயுகத்தில். நான் சங்கமயுகத்தில் வந்து உங்களுக்கு புது உலகத்திற்காக கல்வி கற்பிக் கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். பாபா கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு தந்தி அனுப்புகின்றார், இது சங்கமயுகம் என்று அதிலும் எழுத வேண்டும். நீங்கள் என்னிடமிருந்து எதிர்கால 21 பிறவிகளுக்காக பிறப் புரிமையை பெற முடியும் என்று தந்தை கூறுகின்றார். சங்கமயுகம் என்ற வார்த்தையை அவசியம் எழுத வேண்டும். தந்தி என்ன வருகிறதோ, எந்த மாற்றமுமின்றி அதனுடைய நகல் எடுத்து அங்கு மாட்டவேண்டும். பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும். நாளுக்கு நாள் தெளிவாகிக் கொண்டிருக்கிறது. பாப்தாதா என்று கீழே எழுது கின்றார்கள். ஆத்மாக்களின் தந்தையான சிவபாபா பிரஜாபிதா பிரம்மா மூலம் கற்பிக்கின்றார். எனக்கு சரீரத்தின் ஆதாரம் வேண்டும் அல்லவா என்று தந்தை கூறுகின்றார். சிவன் நிராகாரமானவர். அவருக்கென்று சரீரம் எதுவும் கிடையாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் சூட்சுமமாக ஆகாரியாக இருக்கிறார்கள். மற்ற அனைவருக்கும் சரீரம் உள்ளது. தந்தை கூறுகின்றார், எனக்கு சரீரம் எங்கே? ஆனால் நான் பெயர், ரூபத்திற்கு அப்பாற்பட்டவர் என்பது கிடையாது. மிகவும் தெளிவாக குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். நான் நிராகாரமாக இருக்கின்றேன். ஆனால், எப்பொழுது நான் வருகின்றேனோ அப்பொழுது எனக்கு அவசியம் சரீரம் தேவைப்படுகிறது. நான் கர்ப்பத்தில் வருவதில்லை. நான் இந்த சாதாரண உடலில் வருகின்றேன் என்று நானே சொல்கின்றேன். இவர் முதலில் பூஜைக்குரியவராக இருந்தார், இப்பொழுது பூஜாரி ஆகிவிட்டார். மாலையில் கூட முதலில் சிவபாபா, பிறகு, இரண்டு மணிகள் உள்ளன. இல்லற மார்க்கம் (பிரவிருத்தி மார்க்கம்) அல்லவா! இது இல்லற மார்க்கத்திற்கான மாலை ஆகும் என்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். யார் இல்லற மார்க்கத்தில் தூய்மையின்றி இருந்தார்களோ, இப்பொழுது சிவபாபாவின் வழிப்படி தூய்மையாகி உலகை தூய்மையாக ஆக்கினார்களோ, அவர் களுடைய நினைவுச்சின்னமாக மாலை உருவாகியுள்ளது. ருத்ர மாலை மற்றும் விஷ்ணுவின் வைஜெயந்தி மாலை உள்ளது. பிராமணர்களின் மாலை உருவாகுவதில்லை. உருவாக்குவதற்கு முயற்சி செய்யப்பட்டது, ஆனால் உருவாகவில்லை. ஆகையால், மாலை உருவாக்குவதை, அவ்யக்த பெயர் வைப்பதை விட்டுவிட்டார். இங்கே என்ன பெயர் வைக்கப்பட்டு இருந்ததோ, அந்தப் பெயரை இங்கேயே விட்டுவிட்டு பிறகு, தனது பழைய பெயரோடு ஓடிவிட்டார்கள். அவர்களை அந்தப் புதிய பெயர் கொண்டு யாரும் அழைக்க மாட்டார்கள். நம்முடைய தந்தையானவர் தந்தை, ஆசிரியர், குருவாக இருக்கின்றார். அத்தகைய தந்தையை மிகவும் அன்போடு நினைவு செய்ய வேண்டும். ஆனால், மாயை மறக்க வைத்துவிடுகிறது. ஆகையால், மனோநிலை தடுமாறுகிறது. தளர்ந்து போன உணர்வு ஏற்படுகிறது. சிவபாபாவின் நினைவு மூலம் பிறகு எழுந்துவிடுகிறார்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. விகாரி சம்மந்தங்களில் இருந்து பற்றை நீக்கி விடவேண்டும். வருங்கால புதிய சம்மந்தங்களுடன் புத்தியோகத்தை இணைக்க வேண்டும்.

2. பிறருக்கு புரிய வைப்பதற்காக ஒவ்வொரு நேரமும், நொடியும் குஷியில் இருக்க வேண்டும். சத்திய தந்தை, சத்தியமான ஆசிரியர், சத்குருவின் ஸ்ரீமத்படி நடந்து கண் இழந்தவர்களின் ஊன்றுகோல் ஆகவேண்டும்.

வரதானம்:-

சக்தி சொரூபம் ஆவதற்காக மென்மை குணத்தை அதிசயமானதாக மாற்றுங்கள். தனது சன்ஸ்காரங்களை மாற்றுவதில் மென்மையானவர்களாக ஆகுங்கள், காரியங்கள் செய்வதில் மென்மையானவர்களாக ஆகாதீர்கள். இதில் சக்தி ரூபமாக ஆக வேண்டும். யார் சக்தி ரூபம் என்ற கவசத்தை தாரணை செய்கிறார்களோ, அவர்களுக்கு மாயாவின் எந்த ஒரு அம்பும் பாதிக்க முடியாது. ஆகையால் உங்களது முகம், பார்வையில் மென்மைக்குப் பதிலாக சக்தி ரூபம் தென்பட வேண்டும். அப்போது தான் மாயாஜீத் ஆகி நேர்மையுடன் தேர்ச்சி என்ற சான்றிதழைப் பெற முடியும்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top