26 March 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

March 25, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! இப்பொழுது எல்லையில்லாத இரவு முடிந்து கொண்டிருக்கிறது. பகல் வரப் போகிறது. வீடு திரும்பி செல்ல வேண்டும். எனவே இப்பொழுது இங்கங்கு அலைவதை நிறுத்தி விடுங்கள்.

கேள்வி: -

எந்த ஒரு பயிற்சியின் ஆதாரத்தில் குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் நன்றாக சேவை செய்ய முடியும்?

பதில்:-

குறைந்தது 8 மணி நேரம் வரை நினைவு அமைந்து இருந்தது என்றால், இந்த பழக்கம் ஏற்பட்டு விட்டது என்றால், சேவை மிகவும் நன்றாக செய்ய முடியும். ஏனெனில் நினைவினால் தான் முழு உலகத்தில் தூய்மை மற்றும் அமைதியின் அதிர்வலைகள் பரவுகின்றன, நினை வினால் தான் விகர்மங்கள் கூட விநாசம் ஆகும். மேலும் பதவியும் உயர்ந்ததாக கிடைக்கும். எனவே இந்த ஆன்மீக யாத்திரையில் ஒரு பொழுதும் களைப்படையக் கூடாது. உடல் உணர்வை விடுத்து ஆத்ம உணர்வில் இருப்பதற்கான நிரந்தர அப்பியாசம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

இரவின் பயணிகளே களைப்படையாதே..

ஓம் சாந்தி. குழந்தைகள் எச்சரிக்கையை கேட்டீர்கள். ஹே! இரவின் பயணிகளே.. என்று தந்தை குழந்தைகளுக்கு எச்சரிக்கை கொடுக்கிறார். ஏனெனில் இப்பொழுது உங்களுக்காக பகல் வந்து கொண்டிருக்கிறது. இது எல்லையில்லாத இரவு மற்றும் பகல் ஆகும். எல்லையில்லாத இரவு முடிவடைகிறது மற்றும் எல்லையில்லாத பகல் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் (ஆத்மாக்கள்) தங்களது வீட்டிற்குச் செல்ல வேண்டும். அதற்காக நீங்கள் அரைகல்பம் பக்தி செய்தீர்கள். ஆனால் உங்களால் தந்தையைத் தேட முடிய வில்லை. ஏனெனில், அவருடைய பெயர் ரூபத்தை மாற்றி விட்டுள்ளீர்கள். இப்பொழுது தந்தை பகலுக்கு அதாவது கலியுகத்திலிருந்து சத்யுகத்திற்கு செல்வதற்கான வழியைக் கூறிக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். விகாரத்தினால் பிறப்பவர்களுக்கு ப்ரஷ்ட்டாச்சாரி (இழிந்தவர்கள்) என்று கூறப்படுகிறது என்பதை பாபா புரிய வைத்துள்ளார். பாரதவாசிகள் தந்தையையே மறந்து விட்டார்கள். கீதையின் பகவான் நிராகாரமானவர். அவருக்குப் பதிலாக சாகார கிருஷ்ணரின் பெயரைப் போட்டு விட்டார்கள். இது மிகப் பெரிய தவறு ஆகும். இதன் காரணமாக அரைகல்பம் துக்கம் அனுபவிக்க வேண்டி வந்துள்ளது. துக்கத்தை அனுபவிக்கு மாறு செய்விப்பதற்கு இந்த தவறு கருவியாக ஆகி உள்ளது. இவ்வாறு நாடகத்தில் பாகம் பதிவாகி உள்ளது. பக்தி மார்க்கத்தில் அலைந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு வேளை தந்தையை அறிந்து கொண்டு விட்டார்கள் என்றால், அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இப்போழுது தந்தையை அறிந்துள்ளீர்கள். ஒரு வேளை ஸ்ரீகிருஷ்ணர் இதே ரூபத்தில் வந்தார் என்றால், அவரை அடையாளம் தெரிந்து கொண்டு விடுவார்கள். ஆனால் இவர் எவ்வளவு மறைமுகமாக இருக்கிறார் என்றால் குழந்தைகளாகிய நீங்கள் கூட மறந்து போய் விடுகிறீர்கள். கிருஷ்ணரை யாருமே மறக்க முடியாது. முழு உலகமே ஒரேயடியாக ஒட்டிக் கொண்டு விடுவார்கள். ஸ்ரீகிருஷ்ணர் எங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார் என்று நினைப்பார்கள். ஏனெனில் அவர் சொர்க்கத்தின் அதிபதி ஆவார். அவரை யாரும் விடவே மாட்டார்கள். ஆனால் புரிய வைப்பதற்கான மிகுந்த யுக்தி வேண்டும். புரிய வைப்பதற்கான (யுக்தி) வழிமுறை தெரியவில்லை என்றால், அவ்வப்போது டிஸ்-சர்வீஸ் (சேவைக்கு குந்தகம்) செய்து விடுகிறார்கள். ஏனெனில், சுயம் தாங்களே பிறருக்கு நல்ல முறையில் நிரூபித்து கணக்கு வழக்கை கூறக் கூடிய வகையில், முழுமையாகப் புரிந்து கொண்டவர்களாக அவர்கள் இல்லை. இச்சமயத்தில் எல்லோருமே பதீதமாக (தூய்மையற்று) இருக்கிறார்கள். பதீத பாவன சீதா ராம் என்றும் பாடுகிறார்கள். ஆனால் பாவனமாக ஆக்குபவர் யார் என்பது யாருக்குமே தெரியாது. கீதையின் பகவானை கிருஷ்ணர் என்று நினைத்துக் கொண்டு விட்டுள்ளார்கள். இராமருடையது எந்த சாஸ்திரமும் கிடையாது. அப்படியின்றி இராமாயணம் ஏதோ இராம சந்திரனின் சாஸ்திரம் என்பதல்ல. க்ஷத்திரிய தர்மத்தை இராமர் ஒன்றும் ஸ்தாபனை செய்ய வில்லை. பிராமணர், தேவதை மற்றும் க்ஷத்திரியர் ஆகிய மூன்று தர்மங்களையும் சிவபாபா ஒன்றாகவே ஸ்தாபனை செய்கிறார். உங்களிலும் கூட ஒரு சிலரே இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இராஜா இராணியோ ஒருவர் இருப்பார்கள். மற்றபடி பிரஜைகள் மற்றும் தாசதாசிகள் (வேலைக் காரர்கள்) அநேகர் ஆகிறார்கள். முன்பெல்லாம் இராஜாக்களிடம் ஏராளமான தாச தாசிகள் இருந்தார்கள். ஒரு சிலர் மகிழ்விப்பதற்காக ஒரு சிலர் நடனமாடுவதற்காக. நடனத்தினுடைய ஆர்வம் அங்கு நிறையவே இருக்கும். மற்றபடி இராஜா இராணியோ மிகவும் குறைவானோர் வெளிப்படுகிறார்கள். அவர்கள் நல்ல முறையில் புரிந்து புரிய வைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். யார் யார் நல்ல முறையில் புரிய வைக்க முடியும் என்பது கண்காட்சியின் சேவையில் தெரிய வந்து விடுகிறது. பகவானை அறியாத காரணத்தினால் சர்வவியாபி எங்கும் நிறைந்தவர் என்று கூறி விட்டுள்ளார்கள் என்ற முதல் விஷயத்தை முதலில் புரிய வைக்க வேண்டும். இரண்டாவது கிருஷ்ணரை பகவான் என்று கூறியதால் சொர்க்கத்தை படைப்பவரான சிவபாபாவின் பெயரை இல்லாமல் செய்து விட்டார்கள். நிராகார தந்தை தான் அனைவரின் படைப்புக்கர்த்தா ஆவார். அந்த ஒருவரைத் தான் நினைவு செய்ய வேண்டும். அவர் தான் இராஜயோகம் கற்பிக்கிறார். ஆனால் கீதையில் கிருஷ்ண பகவான் வாக்கியம் என்று எழுதி விட்டுள்ளார்கள். இந்த காரணத்தினால் தான் கையில் கீதையை எடுத்து பொய்யான வாக்குறுதி கொடுக்கிறார்கள். இப்பொழுது கூறுங்கள், ஸ்ரீகிருஷ்ணர் முன்னால் ஆஜராக இருக்கிறாரா? இல்லை நிராகார பரமாத்மா ஆஜராக இருக்கிறாரா? எல்லோருமே குழம்பி இருக்கிறார்கள்.

இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அதிகாலை எழுந்து புரிய வைப்பதற்கான பயிற்சி செய்ய வேண்டும். (இராஜா ஜனகரின் உதாரணம்) அஷ்டாவக்கிரன் ஜனகருக்கு ஞானம் கொடுத்தார் என்று கூறுகிறார்கள். ஆனால் இது ஒன்றும் பிரம்ம ஞானம் அல்ல. இது பிரம்மா ஞானம் ஆகும். பிரம்மா குமாரிகள் இந்த ஞானத்தை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரம்ம குமாரி கள் அல்ல. அந்த ஜனங்கள் பிரம்மத்தை இறைவன் என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி அல்ல! இறைவன் தந்தை ஆவார். தந்தையின் பெயரே சிவன் என்பதாகும். பிரம்மம் தத்துவம் ஆகும். இந்த எல்லா விஷயங்களையும் மந்த புத்தி உடையவர்கள் புரிந்து கொள்ள முடியாது. தாச தாசிகள் கூட வரிசைக்கிரமமாக ஆகிறார்கள். ஒரு வேளை பிறருக்கு நம்மால் நல்ல முறையில் புரிய வைக்க முடியவில்லை என்றால், நமது பார்ட் பின்னால் இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே பிறகு முயற்சி செய்ய வேண்டும். முழு உலகத்தில் என்ன வெல்லாம் கற்பிக்கிறார்களோ அவற்றை தேக அபிமானத்துடன் தான் கற்பிக்கிறார்கள். தேஹீ அபிமானி – ஆத்ம உணர்வுடையவர்கள் பிராமணர்களாகிய உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. உங்களிலும் கூட ஆத்ம அபிமானியாக (ஆத்ம உணர்வுடையவர்கள்) இருப்பவர்கள் வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். நாம் ஆத்மாக்களுக்குக் கூறுகிறோம். ஆத்மா இந்த உறுப்புக்கள் மூலமாகப் பேசுகிறது. என்னால் கேட்க முடியவில்லை. எனது உறுப்புக்கள் கெட்டுப் போய் விட்டுள்ளது என்று ஆத்மா கூறுகிறது. எனவே (தேஹீ அபிமானி) ஆத்ம உணர்வுடையவராக ஆவதில் முயற்சி உள்ளது. சத்யுகத் தில் தேஹீ அபிமானியாக இருப்பார்கள். மற்றபடி பரமாத்மாவின் ஞானம் இருக்காது. அங்கு யாரும் என்னை நினைவு செய்வதில்லை என்று தந்தை கூறுகிறார். அங்கு அவசியமே இல்லை. சிந்தனை அல்லது நினைவு இரண்டும் ஒரே விஷயம் தான். அவர்கள் கையில் மாலையை எடுக்கிறார்கள். வாயால் ராம் ராம் என்கிறார்கள். இங்கு ராம் என்ற வார்த்தை கூறுவது கூட தவறாகி விடுகிறது. சரியான வார்த்தை சிவபாபா என்பதாகும். ஆனால் சிவ சிவ என்று கூட கூற வேண்டியதில்லை. தந்தையை நினைவு செய்வதற்காக பெயர் கூறப்படுகிறதா என்ன? தந்தையை நினைவு செய்வது – இது யாத்திரை ஆகும். ஸ்தூல யாத்திரையில் செல்லும் பொழுது கூட நாம் அமரநாத்திற்குச் செல்கிறோம் என்று நினைவில் வைக்கிறார்கள். அந்த பெயரை எடுக்க வேண்டி உள்ளது அல்லவா? நீங்கள் ஒன்றுமே ஜபிக்க வேண்டியது இல்லை. நாடகம் முடிவடையப் போகிறது என்பதை நீங்கள் அறிந்து விட்டுள்ளீர்கள். நம்முடைய 84 பிறவிகள் முடிவடைந்து விட்டன. இந்த பழைய சட்டையை விட வேண்டி உள்ளது. பாகத்தை ஏற்று நடித்து நடித்து (பதீதமாக) தூய்மையற்றவராக ஆகவே வேண்டி உள்ளது. இந்த மனித சிருஷ்டி என்ற விருட்சத்தின் வேர்ப்பகுதி அழுகி விட்டுள்ளது என்று தந்தை கூறுகிறார். மற்றபடி கிளைகள் கொடிகள் ஆகியவை மீதமுள்ளது. இவை கூட தமோபிரதானமாக ஆகி விட்டுள்ளது. விருட்சத்தின் ஆயுள் இப்பொழுது முடிவடைகிறது. மீண்டும் நாடகம் திரும்ப நடைபெற வேண்டி உள்ளது. ஒவ்வொருவரும் அவரவர் பாகத்தை ஏற்று நடிப்பார்கள். வேறு ஒரு உலகம் ஒன்றும் கிடையாது. ஒரு வேளை இருந்திருந்தால் நாம் ஏன் படிக்கிறோம்? பாபா மீண்டும் வந்து இராஜயோகத்தைக் கற்பியுங்கள் என்று கூறுகிறார்கள். கீதை ஞானத்தைக் கூறுங்கள். பாவனமாக ஆக்குங்கள். ஆனால் பதீதமாக (தூய்மையற்றவராக) எப்படி ஆனோம் என்பது யாருக்கும் தெரியாது. நாம் தான் பாவனமாக இருந்தோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். பிறகு சரித்திரம் மீண்டும் நடைபெறுகிறது.

இப்பொழுது வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று தந்தை கூறுகிறார். வீட்டில் தந்தை தான் இருக்கிறார். பரந்தாமத்தில் இருக்கிறார் என்று கூறுகிறார்கள். பிறகு மறந்து விடுகிறார் கள். ஆத்மாக்கள் கூட பிரம்மாண்டத்தில் இருக்கிறார்கள். இது சிருஷ்டி – படைப்பு ஆகும். இதில் மனிதர்கள் இருக்கிறார்கள். பிரம்மாண்டத் தில் ஆத்மாக்கள் இருக்கிறார்கள். பிறகு இங்கு தம் பாகத்தை ஏற்று நடிக்க வருகிறார்கள். மேலே இருப்பது ஆகாய தத்துவம் ஆகும். அனைவருடைய பாதங்களும் பூமி மீது உள்ளது. மற்றது சரீரம் எங்கே உள்ளது. ஆகவே ஆகாய தத்துவத்தில் தான் உள்ளது. அங்கு ஆத்மாக்களாகிய நட்சத்திரங்கள் இருக்கின்றன. அங்கு நாம் விழுந்து விடுவோம் என்ற வகையில் விழக்கூடிய பொருட்கள் கிடையாது. விஞ்ஞானிகள் சுற்றி வருவதற்காக ராக்கெட்டில் செல்கிறார்கள். பிறகு வெளியிலும் வருகிறார்கள். எழுதவும் செய்கிறார்கள். விழுந்து விடுவோம் என்ற பயம் இல்லை. எவ்வளவு ஈர்ப்பு இருக்கிறது என்றால், மனிதர்கள் ஆகாய தத்துவத்தில் நிலைத்து விடுகிறார்கள். ஆக இவ்வளவு சிறிய ஆத்மா மகதத்துவத்தில் ஏன் நிலைத்திருக்க முடியாது. இருப்பதற்கான இடம் அங்கு தான் உள்ளது. இந்த சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மிகவும் பெரியதாக உள்ளன. இவை எப்படி நிலைத்து இருக்கின்றன. கயிறு ஆகியவை ஒன்றும் இல்லை. இது முழுமை யான நாடகம் அமைக்கப் பட்டுள்ளது. நாம் 84ன் சக்கரத்தில் வருகிறோம். இது விருட்சம் ஆகும். எவ்வளவு பெரிய கிளைகள் கொடிகள் உள்ளன. மற்றபடி சிறு சிறு கிளைகளைப் பார்க்க முடியுமா என்ன? பாபா கூட சுருக்கமாகப் புரிய வைக்கிறார். யார் பின்னால் வருகிறார்களோ அவர்கள் அவசியம் குறைவான பிறவிகள் தான் எடுப்பார்கள். மற்றபடி ஒவ்வொருவருடைய கணக்கை கூறமாட்டார். பிரம்மா மூலமாக பிராமணர், தேவதை, க்ஷத்திரிய தர்மத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். யார் மூலமாக ஸ்தாபனை ஆகியதோ அவர்களே பிறகு பாலனை செய்ய வேண்டி உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சங்கரன் ஆகிய மூன்று தேவதைகளுமே தனித் தனி ஆவார்கள். மற்றபடி பிரம்மாவிற்கு மூன்று முகங்கள் உள்ளன என்பதல்ல. அவ்வாறு இருக்க முடியாது. குழந்தைகளே! நீங்கள் முற்றிலுமே அறிவற்றவர் ஆகி உள்ளீர்கள் என்று தந்தை கூறுகிறார். தந்தை வந்து அறிவாளியாக ஆக்குகிறார். இப்பொழுது சீதைகளாகி, நீங்கள் அனைவரும் இராவணனின் சிறையில் உள்ளீர்கள். நீங்கள் தான் குரங்காக இருந்தீர்கள். உங்களுடைய சேனையை எடுத்தார். உங்களை தான் கோவிலில் வைத்து பூஜிக்கத் தகுந்தவர்களாக ஆக்கினார். இப்பொழுது இராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டி ருக்கிறது. யார் எந்த அளவிற்கு ஸ்ரீமத்படி நடப்பார்களோ அந்த அளவிற்கே உயர்ந்த பதவியை அடைவார்கள். நம்முடைய மம்மா பாபா முதல் நம்பரில் செல்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஸ்தூல வதனத்தில் உங்களுக்கு முன்னால் அமர்ந்துள்ளார்கள். சூட்சுமவதனத்தில் கூட அமர்ந்திருப்பதைப் பார்க்கிறீர்கள். மேலும் பின்னர் வைகுண்டத்தில் கூட பார்க்கிறீர்கள். முதலில் நிறைய பேருக்கு சாட்சாத்காரம் (காட்சிகள் தெரிதல்) செய்விக்கப்பட்டது. பின் எல்லோருமே கிருஷ்ணர் ஆகி விடுவார்களா என்ன? முயற்சி செய்விப்பதற்காக பால லீலை ஆகியவை காண்பிக்கப்படு கின்றன. முயற்சி இன்றி மகாராஜா மகாராணி ஆக மாட்டார்கள். யார் பக்குவமான நிச்சயபுத்தி உடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் ஒரேயடியாக நிலைத்து விடுகிறார்கள். பாபா நாங்கள் உங்களை ஒரு பொழுதும் விட மாட்டோம். அநேகர் இவ்வாறு கூறிய பிறகும் விட்டு விடுகிறார்கள். ஆச்சரியப் படும் வகையில் கேட்டார்கள் பிறருக்கும் கூறினார்கள். பிறகு ஓடி விடுபவர்களாக ஆகி விடுகிறார்கள். இது முதலிலிருந்த பழமொழி ஆகும். இப்பொழுதும் கூட இவை எல்லாமே ஆகிக் கொண்டே இருக்கிறது. முந்தைய கல்பத்திலும் கூட இவ்வாறு ஓடி விடுபவர்களாக ஆகி இருந்தார்கள். யார் மீதும் நம்பிக்கை இல்லை. எப்படி மூச்சின் மீது நம்பிக்கை இல்லை. பாபாவினுடையவராகி பிறகும் இறந்து விடுகிறார்கள். ஈசுவரிய பிறந்த நாள் கொண்டாடிய பிறகும் கூட இறந்து விடுகிறார்கள் அல்லது கை விட்டு விடுகிறார்கள். நாம் இப்பொழுது நமது இனிமையான இல்லத்திற்குச் செல்ல வேண்டும் என்று நீங்கள் உணர்ந்திருங்கள் என்று பாபா அடிக்கடி கூறிக் கொண்டே இருக்கிறார். எனவே தந்தை மற்றும் வீடு நினைவிற்கு வருகிறது. பக்தி மார்க்கத்தில் கூட அரை கல்பம் நினைவு செய்துள்ளீர்கள். ஆனால் யாருமே திரும்பிப் போக முடியாது. தெரியவே தெரியாது. பின் எப்படிப் போக முடியும். அந்த ஆன்மீகப் பயணியாக எப்படி ஆக முடியும்? இப்பொழுது நீங்கள் முழுமையான பிரயாணி ஆகியுள்ளீர்கள். யார் அதிகமாக நினைவு செய்கிறார்களோ அவர்களுடைய பாவங்கள் நீங்கிக் கொண்டே போகின்றன. யாத்திரை மீதும் கவனம் கொள்ள வேண்டும். கடைசியில் 8 மணி நேரம் உங்களுடைய இந்த சேவை இருந்தாலும் கூட மிகவும் நல்லது. இது சாந்தி மற்றும் தூய்மையின் அதிர்வலைகளை பரப்புவது ஆகும். நினைவினால் விகர்மங்களும் விநாசம் ஆகும். மேலும் பதவியும் உயர்ந்ததாக கிடைக்கும். எனவே தான் இரவின் பிரயாணியே களைப்படையாதே! என்று கூறப்படுகிறது. கலியுகத்தின் இரவு என்றால் பிரம்மாவின் இரவு முடிவடைவதாகும். அனைவரும் அவசியம் திரும்பிச் செல்ல வேண்டும். ஆன்மீக இல்லத்தை நினைவு செய்ய வேண்டும். ஆத்மா இப்பொழுது செல்ல வேண்டும். உடல் உணர்வை விட வேண்டும் (தேஹீ அபிமானி) ஆத்ம உணர்வுடையவராக ஆக வேண்டும். இது தான் நினைவு யாத்திரை ஆகும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

ஓம் சாந்தி. ஹம்சோ, சோஹம், சிவோஹம், அஹம் ஆத்மா சோ பரமாத்மா போன்ற வார்த்தைகளை உச்சரிக்கிறார்கள். இப்பொழுது இந்த மகாவாக்கியங்களை யார் உச்சரிக் கிறார்கள். மேலும் இந்த வார்த்தைகளின் சரியான அர்த்தம் என்ன? ஓம் என்ற வார்த்தை கூறுகிறார்கள் என்றால் ஓம் என்பதன் அர்த்தம் நான் ஆத்மா, அமைதி சொரூபமானவன். இந்த நிச்சயம் ஏற்பட்டு விடும் பொழுது பிறகு நான் ஆத்மாவே பரமாத்மா ஆவேன் என்ற இந்த வார்த்தையை கூற முடியாது. பிறகோ நான் ஆத்மா பரமாத்மாவின் குழந்தை ஆவேன் என்றே புரிந்திருப்பார்கள். எனவே இந்த ஓம் என்ற வார்த்தையை கூறுவதற்கு ஆத்மாக்களுக்கு அதிகாரம் இருக்கிறது. பிறகு ஹம்சோ, சோஹம் என்ற வார்த்தைகளை கூறுகிறார்கள் என்றால் அந்த வார்த்தைகளின் அர்த்தமாவது நாமே தான் (ஹம்சோ) பூஜைக்குரியவர்களாக இருந்து இப்பொழுது பூசாரி ஆகி உள்ளோம். நாமே (ஹம்சோ) பூஜைக்குரியவர் என்ற இந்த வார்த்தை கூட இப்பொழுது ஆத்மா தான் கூற முடியும். அஹம் ஆத்மா சோ பரமாத்மா என்று மனிதர்கள் கூறுகிறார்கள். இப்பொழுது இந்த வார்த்தையை பரமாத்மா மட்டுமே கூற முடியும். ஏனெனில் அவரே ஒரு ஆத்மா மட்டுமே பரம ஆத்மா ஆவார். பிறகு இந்த சிவோஹம் என்ற வார்த்தை கூறுகிறார்கள். அது கூட பரமாத்மா தான் கூற முடியும். ஏனெனில் அவர் தான் சிவன் ஆவார். எனவே இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை கூட பரமாத்மா வந்து இந்த நாலேஜ் – ஞானம் கொடுக்கும் பொழுது தான் தெரிந்து கொள்கிறோம். மற்றபடி மற்ற தர்மத்தினருக்கு கிறித்துவர்கள் ஆகியோருக்கு ஹம்சோ போப் – நானே தான் போய் ஆகப் போகிறேன் என்று தெரியாது. அவர்களுக்கு இந்த ஞானமே கிடையாது. இப்பொழுது ஹம்சோ தேவதா – நாமே தான் தேவதை ஆகப் போகிறோம் என்ற ஞானம் நமக்கு கிடைத்துள்ளது. நமக்கு முன்னால் தேவதைகளின் நிளைவார்த்த படங்கள் உள்ளன. மேலும் கூட கூடவே அவர்களுடைய வாழ்க்கை சரித்திரும் (ஹிஸ்ட்ரி) கீதை, பாகவதம் முன்னால் இருக்கிறது. ஏனெனில் நாம் ஆரம்ப முதல் கடைசி வரை முழு கல்பத்தின் சக்கரத்தில் இருக்கிறோம். மேலும் அந்த தர்ம பிதாக்கள் வருகிறார்கள் என்றால் அவர்கள் கல்பத்திற்கு இடையில் வருகிறார்கள். எனவே அவர்கள் ஹம்சோ என்ற வார்த்தையை கூற முடியாது. ஓம் என்ற வார்த்தையை கூறலாம். நல்லது. ஓம் சாந்தி.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. பக்குவமான நிச்சய புத்தியுடையவராக ஆகி, தந்தையின் கையை ஒரு பொழுதும் விட மாட்டோம் என்ற திட சங்கல்பம் செய்ய வேண்டும். தந்தை மற்றும் வீட்டினை அடிக்கடி நினைவு செய்ய வேண்டும்.

2. ஆத்ம உணர்வில் இருப்பதற்கான உழைப்பு செய்ய வேண்டும். 5 விகாரங்கள் என்ற இராவணனின் சிறையிலிருந்துவிடுபடுவதற்காக ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். கோவிலில் வைத்து பூஜிக்கத் தகுதி அடைவதற்கான முயற்சி செய்ய வேண்டும்.

வரதானம்:-

யார் ஞான சொரூப யோகி ஆத்மாக்களோ, அவர்கள் சதா சர்வ சக்திகளின் அனுபவத்தை செய்து கொண்டே வெற்றியாளர் ஆகின்றார்கள். யார் சினேகி அல்லது பாவனை சொரூபமாக இருக்கின்றார்களோ, அவர்களுடைய மனம் மற்றும் வாயில் சதா பாபா, பாபா என்பது இருக்கும், ஆகையினால், நேரத்திற்கு நேரம் சகயோகம் கிடைக்கிறது. ஆனால், சமமாக ஆகுவதில் ஞானி, யோகி சொரூப ஆத்மாக்களே அருகாமையில் இருக்கின்றார்கள், ஆகையினால், எந்தளவு பாவனை உள்ளதோ, அந்தளவு ஞான சொரூபமாகவும் இருக்க வேண்டும். ஞானம் நிறைந்த பாவனை மற்றும் சினேகம் நிறைந்த யோகம் – இந்த இரண்டின் சமநிலை பறக்கும் கலையின் அனுபவத்தை செய்விக்க வைத்து தந்தைக்கு சமமாக ஆக்கிவிடும்.

சுலோகன்:-

மாதேஷ்வரி அவர்களின் விலைமதிப்பிட முடியாது மகா வாக்கியம் – ஓம், சிவோஹம், ஹம்சோ, சோஹம் ஆகிய இந்த வார்த்தைகளின் சரியான அர்த்தம்.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

1 thought on “26 March 2022 TAMIL Murli Today | Brahma Kumaris”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top