26 August 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

August 25, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! நிரந்தரமாக ஒரு தந்தையின் நினைவில் இருப்பதற்கான முயற்சி செய்யுங்கள், இது தான் எல்லையற்ற சதோ பிரதான புருஷார்த்தமாகும்.

கேள்வி: -

குழந்தைகளாகிய நீங்கள் யாருடன் நட்பு கொள்ள வேண்டும், யாருடன் கூடாது?

பதில்:-

யார் ஞான உரையாடல் செய்கிறார்களோ, சேவாதாரிகளாக (சர்வீசபுள்) இருக்கிறார்களோ அவர்களுடன் மட்டுமே நட்பு கொள்ள வேண்டும். மற்றபடி யார் வீண் விசயங்களைப் பேசுகிறார் களோ, தவறான விசயங்களைக் கூறுகிறார்களோ அவர்களிடமிருந்து தூர விலகியிருக்க வேண்டும். தீயவைகளை கேட்காதீர்கள், தீயவைகளை பார்க்காதீர்கள்

கேள்வி: -

கவனக் குறைவாக இருந்தால் என்ன நஷ்டம் ஏற்படும்?

பதில்:-

யார் கவனக்குறைவாக இருக்கிறார்களோ அவர்கள் மூலம் ஒவ்வொரு நேரத்திலும் தவறு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அவர்கள் தந்தையின் பெயரை கெடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவர் மீது அனைவருக்கும் வெறுப்பு ஏற்படும். அவர்கள் தங்கயுகத்திற்கு வர முடியாது. பிறகு அதிக தண்டனை அடைவதற்கு பாத்திரமானவர்களாக ஆகிவிடுவர்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

மாதா ஒ மாதா..

ஓம்சாந்தி. இது தாய்மார்களின் மகிமையாகும். நீங்கள் அனைவரும் தாய்மார்கள். பாரதத்தின் தாய்மார்கள் சக்தியின் அவதாரம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவதாரம் என்று ஒரே ஒருவருக்குத் தான் மகிமை பாடப்பட்டுள்ளது. அவர் உலகை தூய்மை ஆக்குவதற்காக அவதாரம் எடுக்கின்றார். இப்போது பரம்பிதா பரமாத்மா நம்மை தூய்மையற்றவரிலிருந்து தூய்மை ஆக்கு வதற்காக வந்திருக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் இருக்கிறது. பிரம்மாவின் உடலில் வந்திருக்கின்றார். இந்த தில்வாலா கோயில் முழுமையான உங்களது நினைவுச் சின்னமாகும். பக்தி மார்க்கத்தில் என்னவெல்லாம் நினைவுச் சின்னங்கள் உள்ளனவோ அவை சங்கமயுகத்தின் நினைவார்த்தமாகும். சத்யுகம், திரேதாவில் இப்படிப்பட்ட விசயங்கள் இருக்காது. பிறகு இராவண இராஜ்யத்தில் மனிதர்கள் துக்கமடைகின்றனர். இராவணன் தான் ரஜோ, தமோவாக ஆக்குகிறான். இப்போது இந்த நேரத்தில் இந்த உலகம் தமோ பிரதானமாக இருக்கிறது. எப்போது உலகம் சதோ பிரதானமாக இருந்ததோ அப்போது குழந்தைகளாகிய நீங்கள் அங்கு இராஜ்யம் செய்தீர்கள். உங்களது புத்தியில் இந்த சுயதரிசன சக்கரம் இருக்கிறது. பிராமணர் களாகிய நீங்கள் தான் சுயதரிசன சக்கரதாரி களாக ஆகிறீர்கள். ஞானம் கொடுக்கக் கூடியவர் ஒரே ஒரு ஞானக் கடலானவர், அவரது நினைவுச் சின்னமாக இந்த தில்வாலா கோயில் இருக்கிறது, பிறகு அச்சல்கர் மற்றும் குருசிகரும் இருக்கிறது. சிகர் என்றால் மலை உச்சி (சிகரம்) என்பது உங்களுக்கு தெரியும். மலையின் மீது சிவபாபாவின் கோயில் இருக்கிறது. அவருக்குத் தான் ஞானக் கண் மை …… என்று கூறப்படுகிறது. ஆக ஞானக் கடல் ஆகிவிடுகிறார் அல்லவா! இது முற்றிலும் சரியான நினைவுச் சின்னமாகும். நீங்கள் உச்சிக்கு செல்வதற்காகவே இங்கு அமர்ந்திருக்கிறீர்கள். பரம்பிதா பரமாத்மாவின் கழுத்தில் ருத்ர மாலை ஆவதற்காக! உங்களுக்கு இங்கு ஞானம் கிடைக்கிறது. பிறகு எப்போது நீங்கள் உறுதியானவர்களாக, நிலைத்து விடுகிறீர் களோ அப்போது ருத்ர மாலையில் வருகிறீர்கள். நீங்கள் சதோ பிரதானம் ஆகிவிடும் போது தந்தையுடன் நீங்கள் நிவாசம் (வசிக்கிறீர்கள்) செய்கிறீர்கள். இது இரண்டு ரூபத்தில் தாய் வீடாகி விடுகிறது. பிரஜாபிதா பிரம்மா மற்றும் சிவபாபாவும் குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத் தினால் அலங்கரிக்க இங்கு வருகின்றார். இது எல்லையற்ற தாய்வீடு, மாமியார் வீடாகும். அது எல்லைக்குட்பட்டது, கன்யா மாமியார் வீட்டிற்குச் சென்று நகை போன்றவற்றை அணிந்து கொள் கிறாள், இதையே சுகம் என்று நினைக்கிறாள். நாம் இப்போது எல்லையற்ற தந்தையின் வீட்டில் அமர்ந்திருக்கிறோம் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். மாமியார் வீட்டிற்குச் செல்வதற்காக அழிவற்ற ஞான இரத்தினங்களை தாரணை செய்து கொண்டிருக்கிறோம். 21 பிறவிகளுக்கு உங்களது பை (புத்தி) நிறைந்து கொண்டிருக்கிறது. ஆனால் அந்த அளவிற்கு தீவிர வேகம் கிடையாது. சதோ பிரதானமானவர்கள் தான் தீவிர வேகமுடையவர்கள் என்று கூறப்படு கின்றனர். சிலர் சதோ குணத்துடனும், சிலர் இன்று வரை ரஜோ குணத்துடனும் இருக்கின்றனர். 3 வகையான முயற்சியாளர்கள் இருக்கின்றனர். உயர்ந்ததிலும் உயர்ந்த முயற்சியாளர்கள் சதா புத்தியில் ஒரு தந்தையின் நினைவு மட்டுமே வைத்திருப்பர். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் அந்த தந்தை ஆவார். குழந்தைகளாகிய நாம் இப்போது எல்லையற்ற சுகத்திற்கு சென்று கொண்டிருக் கிறோம் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். ஆக அதற்காக எல்லையற்ற முயற்சியும் மிக நன்றாக செய்ய வேண்டும். நான் இரும்பு யுகத்தில் வந்து விட்டேன் என்று ஆத்மா கூறுகிறது. இப்போது பரம்பிதா பரமாத்மா கிடைத்து விட்டார், குழந்தைகளே! நீங்கள் இங்கு முயற்சி செய்து தங்க யுகத்திற்குச் செல்ல வேண்டும் என்று கூறுகின்றார். அப்படிப்பட்ட மனநிலை ஏற்படும் போது தான் தங்கயுகத்திற்கு வருவீர்கள். தமோ பிரதானத்திலிருந்து பிறகு சதோ பிரதானமாக ஆக வேண்டும். சதோ பிரதானமாக அனைவரும் ஆக வேண்டும். உங்களது பாகம் சத்யுகத்தில் இருக்கிறது, ஆகையால் நீங்கள் சதோ பிரதானமாக ஆகிறீர்கள், ஆனால் அனைவருமே செல்ல வேண்டும் அல்லவா! அனைவரும் வரிசைக் கிரமமாக ருத்ர மாலையில் வர வேண்டும். இந்த ருத்ர மாலை எவ்வளவு பெரியதாக இருக்கிறது!பிறகு இருப்பது 8 இரத்தினங்கள் மற்றும் 108 இரத்தினங்களின் வைஜயந்தி மாலையாகும்,விஷ்னுவின் கழுத்தில் காண்பிக்கப்படும்.

உங்களது நினைவுச்சின்னமாக தில்வாலா கோவில் மிகச் சரியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. கீழே தபஸ்யாவில் அமர்ந்திருக்கிறீர்கள், மேலே இராஜ்யம் காண்பிக்கப்பட்டிருக்கிறது. மற்றும் கோயிலில் முக்கியமாக ஜெகதம்பாவின் பெயரும் இடம் பெற்று இருக்கிறது, நடிப்பினுடைய பாகம் தாய்மார்களாகிய உங்களுக்கு இருக்கிறது அல்லவா! தந்தை வந்து குரு என்ற பதவியை தாய்மார் களாகிய உங்களுக்குத் தான் கொடுக்கின்றார். இங்கும் கூட அதிகபட்சம் தாய்மார்கள் தான் இருக் கின்றனர், அதனால் தான் பாரத மாதா சக்தியின் அவதாரம் என்று பாடப்பட்டிருக்கிறது. சேனை என்றும் கூறப்படுகிறது, ஏனென்றால் தங்களுக்குள் பலர் இருக்கிறீர்கள் அல்லவா! அதிக எண்ணிக்கை அடைந்து கொண்டே இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். தூய்மையாவதற்காக சந்நியாசி கள் வீட்டை விடுகின்றனர், இராவண இராஜ்யம் ஆரம்பமாகின்ற பொழுது தூய்மை அவசிய மானதாக ஆகிவிடுகிறது. அந்த நேரத்தில் ஐயோ ஐயோ என்ற கூக்குரல் ஏற்பட்டு விடுகிறது. பூகம்பம் போன்றவைகள் ஏற்பட்டிருக்கக் கூடும். இவ்வளவு மாளிகைகள் அனைத்தும் எங்கு சென்றது! அனைத்தும் விநாசம் ஆகிவிடும் அல்லது கடலுக்குள் சென்று விடுகிறது. இந்த சிருஷ்டிச் சக்கரம் எப்படி சுழல்கிறது? இது புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். இரும்பு யுகத் திலிருந்து பிறகு தங்கயுகத்திற்கு செல்ல வேண்டும். சொர்க்கம் என்பது உங்களது எல்லையற்ற மாமியார் வீடாகும், அதற்காக நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். முழு ஞானம் இருக்க வேண்டும், முழு முயற்சி செய்ய வேண்டும், அப்போது தான் குஷியின் அளவு அதிகரிக்கும். கடைசியில் தான் அதீந்திரிய சுகம் என்று பாடப்பட்டிருக்கிறது. யார், யார் எந்த அளவிற்கு முயற்சி செய்திருக் கிறார்கள்? என்ன பதவி அடைவார்கள்? என்பது கடைசியில் உங்களுக்கு தெரிந்து விடும். கடைசியில் புரிந்து கொள்வீர்கள், அதற்குள் முயற்சி செய்து தங்கயுகம் வரை சென்று விடுவீர்கள். யார் சென்றடைய வில்லையோ அவர்கள் தண்டனை அடைவார்கள். இப்போது கடைசி நேரமாகும். அனைவரும் கணக்கு வழக்கு முடித்து விட்டு செல்ல வேண்டும். நீங்கள் ஞானம் மற்றும் யோக பலத்தின் மூலம் முடித்துக் கொண்டிருக்கிறீர்கள். முன்னேறினால் ஒரேயடியாக வைகுண்டம் வரை …… விழுந்தாலோ அதோ கதி என்று பாடப்பட்டிருக்கிறது. ஏனெனில் விகாரத்தில் கீழே விழுந்து விடுகின்றனர். தேக அபிமானம் வந்த பிறகு தான் விகாரத்தில் விழு கின்றனர், பிறகு முன்னேற முடியாது. முன்னேறுகின்றனர், பிறகு கீழே விழுந்து விடுகின்றனர் எனில் பிறகு கால தாமதம் ஏற்படும் அல்லவா! எப்போதும் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள் என்று கூற முடியாது. மனநிலை சிறிது நன்றாக இருக்கிறது பிறகு உடனே தேக அபிமானம் வந்து விடுகிறது. ஏதோ கிரஹச்சாரம் இருக்கிறது என்பதை உணர முடிகிறது. மனதில் அதிக புயல்கள் வருகின்றன. முன்னேறுவதற்கு அதிக காலம் தேவைப்படுகிறது. குழந்தை களே! படிப்பு தினமும் படியுங்கள் என்று பாபா ஒவ்வொரு நாளும் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். நாளுக்கு நாள் கருத்துகள் அதிகம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். இந்த நாடகம் முடிவடைகிறது. நாம் மீண்டும் ஆஸ்தி அடைய வேண்டும். சத்யுகத்தில் ராஜா, ராணி, பிரஜைகள் அனைவரும் இருப்பர். எப்படிப் பட்ட காரியங்கள் செய்கிறார் களோ அல்லது என்ன முயற்சி செய்வார்களோ அதற்கான பலன் கிடைக்கும். லட்சுமி நாராயணனிடமிருந்து தான் இராஜ்யம் ஆரம்பமாகும். அது விகர்மாஜீத் சகாப்தம் (ஆண்டு), விகர்மங்களின் மீது வெற்றி அடைந்து நீங்கள் தனது இராஜ்ய பாக்கியத்தை அடைகிறீர்கள். வரிசைக்கிரமமாக முயற்சியின் படி பதவி அடைவீர்கள். ஒவ்வொருவரும் தங்களது முயற்சியின் ரிசல்ட்டை பார்த்துக் கொண்டே செல்லுங்கள். நான் எவ்வளவு முயற்சி செய்கிறேன்? தமோ பிரதானத் திலிருந்து சதோ பிரதானத்திற்கு செல்ல வேண்டும். நான் முயற்சி செய்து சூரியவம்ச இராஜ்யத்தை அடைய வேண்டும் என்று ஆத்மா கூறுகிறது. நான் முழுமையாக படித்து தந்தையை முழுமையாக நினைவு செய்வேன். உங்களுக்கு இப்போது ழுமு ஞானத்தின் வெளிச்சம் கிடைக்கிறது. எதிர்காலத்தில் நீங்கள் என்ன ஆவீர்கள்? பல குழந்தைகள் அலட்சியத்தின் காரணத் தினால் மறந்து விடுகின்றனர். அவ மரியாதையும் செய்து கொண்டிருக்கின்றனர். எல்லையற்ற தந்தையை நிந்திப்பதற்கு நிமித்தமாக ஆகிவிடுகின்றனர். கோபத்தின் காரணத்தினாலும் எவ்வளவு நஷ்டம் ஏற்படுத்தி விடுகின்றனர்! இவரிடம் கோபம் என்ற பூதம் இருக்கிறது என்று புரிந்து கொள்கின்றனர். ஆகையால் காமம் மற்றும் கோபப்படுபவர்களிடமிருந்து வெகு தொலையில் இருக்க வேண்டும். அவர்களது சகவாசத்தில் வரக் கூடாது. யார் ஞான கலந்துரையாடல் செய்வார்களோ அவர்களுடன் பழக வேண்டும். யார் வீண் விசயங்கள் பேசுவார்களோ, நிந்தனை செய்வார்களோ அவர்களுடன் தொடர்பு வைக்கக் கூடாது.. ஞானம் தவிர வேறு எந்த விசயத்தையும் கேட்கக் கூடாது. இந்த விசயமும் பிரபலமாக இருக்கிறது அதாவது (மந்திரை) வஞ்சத்தின் காரணத்தினால் தான் இராமர், சீதை வனவாசம் போக வேண்டியதாயிற்று. கபடத் தன்மை (சூது போடுவது நஷ்டம் ஏற்படுத்தி விடும். தீயவைகளை கேட்காதீர்கள்…… தவறான, தலைகீழான விசயங்களை பேசுபவர்களிடம் ஒருபோதும் மாட்டிக் கொள்ளாதீர்கள். அதிக நஷ்டம் ஏற்படுத்தி விடுவர். எல்லையற்ற தந்தையிடமிருந்து புத்தி தொடர்பை துண்டிக்கச் செய்து விடுவர். முழு யோகா இல்லையெனில் தோல்வியடைந்து சந்திரவம்சத்திற்கு சென்று விடுவர். மற்றபடி இராம இராஜ்யத்தில் எந்த இராவணனும் சீதையை அபகரித்து செல்ல வில்லை. இவை அனைத்தும் கீழான நிலை அடைவதற்கான விசயங்களாகும். துவாபரத்திலிருந்து தந்தையை அழைத்து வந்தோம், ஏனெனில் வீழ்கின்றோம், அதனால் தான் பகவான் வர வேண்டி யிருக்கிறது. ஒருவேளை சத்கதி கிடைக்கிறது எனில் பகவான் வரவேண்டிய அவசியமில்லை. சத்யுகம், திரேதாவில் சத்கதியில் இருப்பதால் யாரும் பகவானை நினைவு செய்வதில்லை, யாரும் அழைப்பதே கிடையாது. நாடகத்தின் இரகசியத்தை, முன்னேறும் கலை, கீழிறங்கும் கலையை யாரும் அறியவே யில்லை. தந்தை எதிரில் அமர்ந்து புரிய வைக்கின்றார். முழு உலகமும் (ஞான கல்வியை) படிக்க மாட்டார்கள். யார் கல்பத்திற்கு முன்பு படித்திருந்தார்களோ அவர்களே படிப்பார்கள். தந்தை எச்சரிக்கை செய்து கொண்டேயிருக்கின்றார். இந்த படிப்பின் மூலம் நான் எவ்வளவு உயர்வாக இருந்தேன் என்பது உங்களது ஆத்மா தெரிந்துக் கொண்டது. இப்போது கீழே இறங்கி விட்டோம். தூய்மை இழந்து விட்டீர்கள் தூய்மையாகி பிறகு தங்கயுகத்திற்கு செல்ல வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். நினைவு பலத்தின் மூலம் சதா ஆரோக்கியமானவர்களாக, ஞான பலத்தின் மூலம் சதா செல்வந்தர்களாக ஆக வேண்டும். தூய்மைக்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தூய்மை ஆவதன் மூலம் தான் நீங்கள் அமரபதவி அடைவீர்கள். உங்களுடையது விநாசம் ஆகாது. மற்ற அனைத்தும் விநாசம் ஆகிவிடும். கணக்கு வழக்கு முடித்து கொண்டு செல்வார்கள்.

தூய்மையாக ஆவீர்கள் எனில் தூய உலகிற்கு எஜமானர்களாக ஆவீர்கள் என்று சிவபாபா கூறுகின்றார். இல்லையெனில் தண்டனை அடைந்து செல்வீர்கள் எவ்வளவு உயர்ந்த கட்டளை ஆகும்! விநாசம் எதிரில் இருக்கிறது, ஆகையால் நாம் உறுதியானவர்களாக ஆகி செல்ல வேண்டும் என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். பல வழிகளில் (வித விதமாக) கருத்துகளை பாபா புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார், கேட்க வேண்டும். ஒரு வேளை கேட்கவில்லையெனில் மாலையில் வர முடியாது. மாலையில் வரிசைக்கிரமமாக வருவீர்கள். தந்தையிட மிருந்து முழு ஆஸ்தியடைய வேண்டும். நல்ல மாணவர் படிப்பில் நல்ல முறையில் ஈடுபடுவர். பாபா சென்டரிலுள்ள ரிஜிஸ்டரையும் கேட்டு வாங்குகின்றார். பாபா அனைவருக்கும் எச்சரிக்கையும் செய்கின்றார். அவசியம் படிக்க வேண்டும். இதற்கு எந்த காரணமும் கூறவே முடியாது. குழந்தைகளிடம் நேரம் அதிகமாக இருக்கிறது. 8 மணி நேரம் அரசாங்க வேலை செய்யுங்கள், மற்ற நேரங்களில் முயற்சி செய்யுங்கள். முழு நாளும் நான் பாபாவின் சேவை எவ்வளவு நேரம் செய்தேன்? பாபாவின் நினைவில் எவ்வளவு நேரம் இருந்தேன்? என்று சிந்தனை செய்யுங்கள். சில குழந்தைகளின் சார்ட் வருகிறது, ஆனால் அந்த சார்ட் சதா காலத்திற்கு இருக்க வேண்டும். பாபா ஒவ்வொருவருடையதையும் பார்ப்பார் என்று கிடையாது. இது சென்டர்களில் உள்ள பிராமணிகளின் வேலையாகும். பிராமணிகளிலும் வரிசைக் கிரமம் இருக்கிறது. தங்கயுகத்திற்கு (இதுவரை) யாரும் சென்றடையவில்லை. அதற்கு நேரம் இருக்கிறது. சிலர் ஸ்ரீமத் படி நடக்காத காரணத்தினால் தவறி விழுந்து விடுகின்றனர். பிறகு அவர்களுக்கு யாரும் மரியாதை கொடுப்பதே கிடையாது. யாருமே அவர்களை விரும்புவதும் கிடையாது.

குழந்தைகளாகிய நீங்கள் உலகாய விசயங்கள் பேசவே கூடாது. யாராவது வீண் விசயங்களை பேசுகிறார்கள் எனில் இவர்கள் நமது எதிரிகள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இவர்கள் நம்மை கீழே தள்ளக் கூடியவர்கள். வீணான விசயங்கள் பேசக் கூடாது. எதுவரை சென்றடைந்திருக் கிறேன்? என்று தன்னைத் தான் பார்க்க வேண்டும். சத்குரு ஒரே ஒரு தந்தை ஆவார், அவரிடத்தில் இந்த ஞானம் நிறைந்திருக்கிறது. நீங்கள் மேலே குருசிக்கர் (பரந்தாமம்) செல்ல வேண்டும். இவை அனைத்தும் ஞான விசயங்களாகும். மலை என்பது போன்ற வேறு எந்த விசயமும் கிடையாது. அனைத்தையும் கடந்து சென்று விட வேண்டும். இந்த விசயங்களை யாரும் அறியவில்லை. நீங்கள் முதலில் தமோ பிரதானமாக இருந்தீர்கள், இப்போது நீங்கள் சதோ பிரதானமாக ஆக வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். பலருக்கு இந்த விசயத்தில் நம்பிக்கையும் கிடையாது, முழு யோகாவும் கிடையாது. மற்றவர்களுக்குப் புரிய வைக்கின்றனர், அவர்களுக்கு நன்மை ஏற்பட்டு விடுகிறது. அதற்காக அவர்கள் நன்மை செய்கின்றனர் என்பது கிடையாது.இல்லை அவர்கள் தனது பாக்கியத்தின் படி இரகசியத்தை புரிந்துக் கொண்டனர். பிராமணிகளை விட தீவிர வேகத்தில் செல்லக் கூடியவர் களும் பலர் இருக்கின்றனர். நிறைய குழந்தைகளிடத்தில் இன்று வரை தேக அபிமானம் அதிகம் இருக்கிறது. கடைசியில் தேகம் கூட நினைவு வரக் கூடாது. சந்நியாசிகளிலும் மிகச் சிலரே அவ்வாறு இருக்கின்றனர், அமர்ந்த படியே சரீரத்தை விட்டு விடுகின்றனர், மேலும் சமாதி ஆகி விடுகின்றனர். மீண்டும் இல்லறவாசிகளிடத்தில் சென்று பிறப்பு எடுப்பர். பிறகு சிரேஷ்ட மானவர்களாக ஆவதற் காக காட்டிற்கு சென்று விடுகின்றனர். மாயையின் இராஜ்யம் அல்லவா! இந்த சக்கரம் எப்படி சுழல்கிறது? என்பதை அவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும். நிறைய குழந்தைகள் பாபாவை ஒருபோதும் பார்த்ததேயில்லை இருந்தாலும் நினைவு செய்து கொண்டே யிருக்கின்றனர்.அதனால் கண்டிப்பாக உயர்ந்த பதவி அடைவர்.அனைத்தும் புருஷார்த்தத்தின் விளையாட்டு அல்லவா! சிலர் இரவு பகல் அதிக முயற்சி செய்கின்றனர். இந்த அசுத்தமான உலகில் இந்த சரீரத்தில் இருந்து கொண்டு தான் நீங்கள் சதோ பிரதானமாக ஆக வேண்டும் என்பதை அறிவீர்கள். தூய்மை ஆவதற்கு சில காலம் தேவைப் படுகிறது. எதுவரை இந்த உலகம் இருக்கிறதோ, இந்த படிப்பு இருக்கிறதோ அதுவரை படிக்க வேண்டும். எதுவரை வாழ்வீர்களோ அதுவரை (ஞான அமிர்தம்) பருக வேண்டும். அப்போது தான் கர்மாதீத நிலை அடைவீர்கள். இந்த தேகத்திலிருந்து, உலகத்திலிருந்து முற்றிலும் பற்றுதல் நீங்கி விட வேண்டும். இராஜா ராணி ஆவதில் முயற்சி இருக்கிறது. யார் படிப்பார்களோ அவர்கள் இதய சிம்மாசனத்தில் அமர்வார்கள். எந்த அளவிற்கு உதவியாளர் களாக இருக்கிறோம்? என்பதை உள்ளுக்குள் புரிந்திருப்பீர்கள். எல்லையற்ற தந்தை மனநிலையைப் பார்த்து அன்பு செலுத்துவார் அல்லவா! தனக்கு நன்மை செய்ய விரும்புகிறீர்கள் எனில் ஸ்ரீமத்படி நடங்கள் என்று தந்தை கூறுகின்றார். மற்றவர்களுக்கு கோபம் ஏற்படும் அளவிற்கு எந்த காரியமும் செய்யக் கூடாது. குத்துச் சண்டை அல்லவா! உங்களுக்கு இந்த யுத்தத்தில் எவ்வளவு காலம் தேவைப்படுகிறது! நல்லது.

இனிமையிலும் இனிமையான, ஞான ரோஜாக்களுக்கு, ஞான, யோக புருஷார்த்த குழந்தை களுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) தன் புத்தி என்ற பையை அழிவற்ற ஞான இரத்தினங்களினால் நிறைத்து அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அதீந்திரிய சுகத்திற்காக புத்தியை ஞானத்தினால் நிறைத்துக் கொள்ள வேண்டும்.

2) வீண் பேச்சு வார்த்தை அதிக நஷ்டம் ஏற்படுத்தும். ஆகையால் ஞானத்தைத் தவிர எந்த விசயமும் பேசவோ, கூறவோ கூடாது. தவறான விசயங்கள் கூறுபவர்களின் சகவாசத் திலிருந்து மிகவும் தூர இருக்க வேண்டும்.

வரதானம்:-

பிராமண வாழ்க்கையில் ஆரம்பத்திலிருந்து இன்று வரை என்னவெல்லாம் பிராப்தியாக கிடைத் திருக்கிறதோ அதன் பட்டியலை நினைவில் கொண்டு வந்தால் சாரமாக இதையே கூறுவீர்கள் – பிராமண வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை. மேலும் இவை அனைத்தும் அழிவற்ற பிராப்திகளாகும். இந்த பிராப்திகளின் நினைவு இருந்தால் அதாவது நினைவு சொரூபமாக ஆகின்ற பொழுது குஷியில் பறந்து கொண்டே இலட்சியத்தை எளிதாகவே அடைந்து விடுவீர்கள். பிராப்தியின் குஷியானது ஒருபொழுதும் குழப்பத்தில் கீழே கொண்டு வராது. ஏனெனில் நிறைந்த நிலை (சம்பன்னம்) உறுதியானவர்களாக ஆக்குகிறது.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Keep the company of those who talk about knowledge and are serviceable. Stay away from the company of those who gossip and talk about useless matters. Hear no evil, see no evil!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top