25 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

November 24, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! தனது அதிர்ஷ்டத்தை உயர்வாக்கி கொள்ள வேண்டுமெனில் ஆன்மீக சேவை செய்வதில் ஆர்வம் செலுத்துங்கள். அனைவருக்கும் ஞான செல்வத்தை தானம் செய்து கொண்டே இருங்கள்.

கேள்வி: -

இன்று வரை எந்த மனிதனும் கொடுக்காத எந்த ஒரு ஸ்ரீமத்தை ஆன்மீகத் தந்தை கொடுக்கின்றார்?

பதில்:-

ஹே ஆன்மீகக் குழந்தைகளே! நீங்கள் ஆன்மீக சேவையில் ததீட்சி ரிஷியைப் போன்று எலும்புகளை கொடுங்கள். (தீவிர சேவை) தந்தையிடமிருந்து கிடைக்கின்ற அழிவற்ற ஞான ரத்தினத்தை தானம் செய்யுங்கள். இது தான் உண்மையான சேவையாகும். இவ்வாறு சேவை செய்வதற்கான ஆலோசனையை எந்த மனிதனும் கொடுக்க முடியாது. ஆன்மீக சேவை செய்பவர் கள் குஷியில் ஆடிக் கொண்டே இருப்பார்கள். அதிர்ஷ்டம் உயர்ந்ததாகிக் கொண்டே செல்லும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

உலகமே மாறினாலும் ….

ஓம்சாந்தி. குழந்தைகள் பாட்டின் இரண்டு வரிகள் கேட்டீர்கள். அவர்கள் பாட்டை உருவாக்கி விட்டனர். எவ்வாறு யாருக்காவது நிச்சயதார்த்தம் ஆகிவிடுகிறது எனில் கணவன்லிமனைவி இருவரும் ஒருபோதும் ஒருவரையொருவர் விட்டு விடமாட்டார்கள் என்பது உறுதியாகி விடுகிறது. மிகச் சிலர் மட்டுமே தங்களுக்குள் ஒத்து வரைவில்லையெனில் விட்டு விடுகின்றனர். இங்கு குழந்தைகளாகிய நீங்கள் யாரிடத்தில் உறுதிமொழி கொடுக்கிறீர்கள்? ஈஸ்வரனிடம். அவரிடம் தான் குழந்தைகளாகிய உங்களுக்கு அல்லது நாயகிகளாகிய உங்களுக்கு நிச்சய தார்த்தம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வாறு உலகிற்கு எஜமானர்களாக ஆக்கக் கூடியவரையம் விட்டு விடுகின்றனர். இங்கு நீங்கள் குழந்தைகள் அமர்ந்திருக்கிறீர்கள். இப்போது எல்லையற்ற தந்தை வந்து விட்டார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கு இருக்கும் போது இருக்கக் கூடிய மன நிலையானது வெளியில் சென்டர்களில் இருக்க முடியாது. பாப்தாதா வந்திருக்கின்றார் என்பதை நீங்கள் இங்கு புரிந்திருக்கிறீர்கள். வெளியில் சென்டர்களில் பாபா கூறிய முரளி வந்திருக்கிறது என்பதாக நினைக்கிறீர்கள். இங்கிருப்பதற்கும், அங்கு இருப்பதற்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. ஏனெனில் இங்கு நீங்கள் எல்லையற்ற பாப்தாதாவின் எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள். அங்கு நீங்கள் எதிரில் கிடையாது. நேராக முரளியை அவசியம் கேட்க வேண்டும் என்று விரும்பு கிறீர்கள். இங்கு பாபா வந்திருக்கிறார் என்பது குழந்தைகளின் புத்தியில் வருகிறது. மற்ற சத்சங்கத்தில் இருப்பது போன்று இந்த சுவாமி ஜீ வந்திருப்பதாக அங்கு நினைப்பர். ஆனால் இந்த எண்ணமும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது. சிலருக்கு சம்மந்திகளின் நினைவு வரும். புத்தியானது ஒரே ஒரு குருவிடம் நிலைத்திருப்பது கிடையாது. மிகச் சிலர் மட்டுமே சரீரமுடைய சுவாமியின் நினைவில் அமர்ந்திருப்பர். இங்கும் அதே மாதிரி தான் இருக்கிறது. அனைவரும் சிவபாபாவின் நினைவில் அமர்ந்திருக் கின்றனர் என்பது கிடையாது. புத்தி ஓடிக் கொண்டே இருக்கிறது. உற்றார், உறவினர்களின் நினைவு வரும். முழு நேரமும் ஒரே ஒரு சிவபாபாவின் எதிரில் இருப்பதும் ஆஹா சௌபாக்கியம்! நிலையான நினைவில் மிகச் சிலர் மட்டுமே இருக்கின்றனர். இங்கு சிவபாபாவின் எதிரில் இருக்கும் போது மிகுந்த குஷியுடன் இருக்க வேண்டும். அதீந்திரிய சுகம் பற்றி கோபி வல்லபரின் கோப கோபியர்களிடம் கேளுங்கள். அது இங்கிருப்பவர் களுக்காக பாடப்பட்டிருக்கிறது. இங்கு நீங்கள் பாபாவின் நினைவில் அமர்ந்திருக் கிறீர்கள். இப்போது நாம் ஈஸ்வரனுடையவர்களாக ஆகியிருக்கிறோம், பிறகு தெய்வீக மடிக்கு சென்று விடுவோம் என்பதை அறிவீர்கள். சிலரது புத்தியில் சேவைக்கான சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கலாம். இந்த சித்திரத்தில் இவ்வாறு திருத்தலாம், இது எழுதலாம் என்பது போன்று. ஆனால் நல்ல குழந்தைகளாக இருப்பவர்கள் இப்போது தந்தை கூறுவதை மட்டுமே கேட்க வேண்டும் என்று நினைப்பர், மற்ற எந்த சங்கல்பங்களையும் வர விடமாட்டார்கள். தந்தை ஞான ரத்தினங்களினால் பையை நிரப்ப வந்திருக்கின்றார். ஆக தந்தையிடம் மட்டுமே புத்தியோகத்தை ஈடுபடுத்த வேண்டும். வரிசைக் கிரமமாக தாரணை செய்பவர்கள் இருக்கவே செய்கின்றனர். சிலர் நல்ல முறையில் தாரணை செய்கின்றனர், சிலர் குறைவாக தாரணை செய்கின்றனர். புத்தியானது வேறு பக்கம் ஒடிக் கொண்டிருக்கும் போது தாரணை ஏற்படாது. பக்குமற்றவர்களாக ஆகிவிடுவர். ஒருமுறை, இரு முறை முரளி கேட்டு தாரணை ஏற்படவில்லையெனில் அதுவே பழக்கமாக உறுதியானதாக ஆகிவிடும். பிறகு எவ்வளவு தான் கேட்டுக் கொண்டிருந்தாலும் தாரணை ஏற்படாது. யாருக்கும் கூற முடியாது. யாருக்கு தாரணை ஏற்படுகிறதோ அவர்களுக்கு சேவையில் ஆர்வம் இருக்கும், உற்சாகத்துடன் இருப்பர். சென்று செல்வத்தை தானம் செய்வேன், ஏனெனில் இந்த செல்வம் ஒரு தந்தையிடம் தவிர வேறு யாரிடத்திலும் கிடையாது. அனைவராலும் தாரணை செய்ய முடியாது என்பதையும் தந்தை அறிவார். அனைவரும் ஒரே மாதிரியான பதவி அடைய முடியாது. அதனால் தான் புத்தி வேறு பக்கம் அலைந்து கொண்டிருக்கிறது. எதிர்கால அதிர்ஷ்டம் அந்த அளவிற்கு உயர்வானதாக ஆகாது. பிறகு சிலர் ஸ்தூல சேவையில் தனது உடல் உழைப்பைக் கொடுக்கின்றனர், அனைவரையும் மகிழ்விக்கின்றனர். உணவு சமைக்கின்றனர், பரிமாறுகின்றனர் எனில் இதுவும் பாடத்தில் ஒரு அங்கம் அல்லவா! சேவையில் யாருக்கு ஆர்வம் இருக்கிறதோ அவர்கள் வாயினால் ஞானத்தை கூறாமல் இருக்க முடியாது. பிறகு எங்காவது தேக அபிமானம் இல்லை தானே என்று பாபா பார்க்கின்றார். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கின்றனரா? இல்லையா? பெரிய மகாரதிகளுக்கு மரியாதை செலுத்த வேண்டும். ஆம், சிறியவர்கள் சிலர் புத்திசாலிகளாகவும் ஆகிவிடுகின்றனர் எனில் பெரியவர்களும் அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டியிருக்கும். ஏனெனில் அவர்களது புத்தி முன்னேற்றத்தில் இருக்கிறது. சேவையில் ஆர்வத்தைப் பார்த்து தந்தை குஷியடைவார் அல்லவா! இவர் நன்றாக சேவை செய்வார் என்பதனால் முழு நாளும் கண் காட்சிகளில் புரிய வைப்பதற்கும் பயிற்சி செய்ய வேண்டும. பிரஜைகளும் அதிகம் உருவாக வேண்டும் அல்லவா! இலட்சக் கணக்கில் பிரஜைகள் தேவை. வேறு எந்த உபாயமும் கிடையாது. சூரியவம்சி, சந்திரவம்சி ராஜா ராணி மற்றும் பிரஜைகள் அனைவரும் இங்கு உருவாக வேண்டும். எவ்வளவு சேவை செய்ய வேண்டும்! இப்போது நாம் பிராமணர்களாக ஆகியிருக்கிறோம் என்பது குழந்தைகளின் புத்தியில் இருக்கிறது. இல்லறத்தில் இருக்கும் போது ஒவ்வொருவரின் மனநிலையும் தனித்தனியாக இருக்கிறது. வீடு வாசலை விட்டு விடக் கூடாது. வீட்டில் இருக்கலாம் என்று பாபா கூறுகின்றார். ஆனால் இந்த பழைய உலகம் அழிந்தே விட்டது என்ற நிச்சயம் புத்தியில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது நமது வேலை தந்தையிடத்தில் இருக்கிறது. கல்பத்திற்கு முன்பு யார் இந்த ஞானம் அடைந்திருந்தார்களோ, அவர்களே அடைவார்கள் என்பதையும் அறிவீர்கள். விநாடிக்கு விநாடி அதே போன்று திரும்பவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆத்மாவில் ஞானம் இருக்கிறது அல்லவா! தந்தையிடத்திலும் ஞானம் இருக்கிறது. குழந்தைகளாகிய நீங்களும் தந்தையைப் போன்று ஆக வேண்டும், கருத்துகளை தாரணை செய்ய வேண்டும். அனைத்து கருத்துகளையும் ஒரே நேரத்தில் புரிய வைப்பது கிடையாது. இலட்சியத்தை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும். விநாசமும் எதிரில் இருக்கிறது. இது முன்பு போலவே அதே விநாசமாகும். சத்யுகம், திரேதாவில் எந்த சண்டை சச்சரவும் இருக்காது. எப்போது அதிக தர்மம் உருவாகிறதோ, படைகள் பெரிதாகி விடுகிறதோ அப்போது யுத்தம் ஆரம்பமாகும். முதன் முதலில் ஆத்மாக்கள் சதோபிரதானமாக கீழே இறங்குகிறது, பிறகு சதோ, ரஜோ, தமோவில் வருகிறது. இவை அனைத்தையும் புத்தியில் வைத்துக் கொள்ள வேண்டும். இராஜ்யம் எப்படி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது! இங்கு அமர்ந்திருந்தாலும் புத்தியில் இதை வைத்துக் கொள்ள வேண்டும். சிவபாபா வந்து நமக்கு பொக்கிஷங்களைக் கொடுக்கின்றார், அதை புத்தியில் தாரணை செய்ய வேண்டும். நல்ல நல்ல குழந்தைகள் கருத்துகளை குறிப்பெடுக்கின்றனர், குறிப்பெடுப்பது நல்லதாகும். அப்போது தான் புத்தியில் தலைப்புகள் (டாப்பிக்ஸ்) வரும். இன்று இந்த தலைப்பில் புரிய வைப்பேன். நான் உங்களுக்கு எவ்வளவு பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தேன் என்று தந்தை கூறுகின்றார். சத்யுகம், திரேதாவில் உங்களிடம் அளவற்ற செல்வங்கள் இருந்தன, பிறகு விகார மார்க்கத்தில் செல்லும் போது குறைந்து கொண்டே சென்றன. குஷியும் குறைந்து கொண்டே சென்றது. ஏதாவது விகர்மங்கள் ஏற்பட ஆரம்பித்தன. இறங்கி இறங்கி கலைகள் குறைந்து கொண்டே வந்தன. சதோ பிரதானம், சதோ, ரஜோ, தமோ நிலைகள் இருக்கிறது அல்லவா! சதோவிலிருந்து ரஜோ நிலைக்கு வருகிறீர்கள் எனில் உடனடியாக வந்து விடுவீர்கள் என்பது கிடையாது. தமோ பிரதானத்திலும் சிறிது சிறிதாக இறங்குகிறீர்கள். அதிலும் சதோ, ரஜோ, தமோ நிலை இருக்கிறது. உடனடியாக தமோ பிரதானமாக ஆகமாட்டீர்கள். சிறிது சிறிதாக ஏணியில் இறங்குவீர்கள். கலைகள் குறைகிறது. இப்போது உயர குதிக்க (ஜம்ப்) வேண்டும். தமோபிரதானத்திலிருந்து சதோபிரதான மாக ஆக வேண்டும். இதற்கு நேரம் குறைவாக இருக்கிறது. முன்னேறினால் வைகுண்டம் என்றும் பாடப்பட்டிருக்கிறது. காமத்தின் அடி விழும் போது முற்றிலுமாக அழிந்து விடுகின்றனர். எலும்பு சுக்கு நுôறாக உடைந்து விடுகிறது, ஒரு மனிதன் தற்கொலை செய்து கொள்வது போன்று! ஆத்ம கொலை கிடையாது, தற்கொலை என்று கூறப்படுகிறது. அதே போன்று இதுவும் ஆத்மாவை கொலை செய்வது போன்று ஆகிவிடுகிறது. செய்த வருமானம் அனைத்தும் அழிந்து விடுகிறது. இங்கு தந்தையிடம் ஆஸ்தியடைய வேண்டும். தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஏனெனில் தந்தையிட மிருந்து இராஜ்யம் கிடைக்கிறது. நான் தந்தையை நினைவு செய்து எதிர்காலத்திற்காக எவ்வளவு வருமானம் செய்திருக்கிறேன்? கண்ணில்லாத எத்தனை பேருக்கு ஊன்றுகோல் ஆனேன்? என்று தனக்குள் கேளுங்கள். இந்த பழைய உலகம் மாறிக் கொண்டிருக்கிறது, தந்தை புது உலகிற்காக இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக் கின்றார் என்ற செய்தி வீடு வீடாக கொடுக்க வேண்டும். ஏணியில் காண்பிக்கப்பட்டிருக்கிறது, இதை உருவாக்குவதற்கு உழைப்பு ஏற்படுகிறது. அனைவரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிதாக எப்படி ஆக்குவது என்ற சிந்தனை முழு நாளும் ஓடிக் கொண்டே இருக்கிறது. முழு உலகத்தினரும் வரமாட்டார்கள். தேவி தேவதா தர்மத்தினர் மட்டுமே வருவார்கள். உங்களது சேவை அதிகம் நடைபெறும். நமது வகுப்பு எவ்வளவு காலம் நடைபெறும் என்பதை நீங்கள் அறிவீர்கள். கல்பத்தின் ஆயுளை அவர்கள் லட்சம் ஆண்டுகள் என்று நினைக்கின்றனர். அதனால் சாஸ்திரம் போன்றவைகளை கூறிக் கொண்டே இருக்கின்றனர். கடைசி நேரம் ஏற்படும் போது சத்கதி கொடுக்கும் வள்ளல் வருவார் என்று நினைக்கின்றனர். பிறகு நமது சீடர்களாக இருப்பவர்களுக்கு கதி ஏற்படும். பிறகு நாமும் சென்று ஜோதியுடன் கலந்து விடுவோம் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அவ்வாறு கிடையாது. நாம் அமரர் தந்தையின் மூலம் உண்மையிலும் உண்மையான அமரக்கதை கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆக அமரர் பாபா என்ன கூறினாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் தூய்மையாக ஆகுங்கள் என்ற மட்டுமே கூறுகின்றார். இல்லையெனில் அதிக தண்டனை அடைய வேண்டியிருக்கும், பதவியும் குறைந்ததாக கிடைக்கும். சேவையில் முயற்சி செய்ய வேண்டும். ததீட்சி ரிஷியின் உதாரணம் இருக்கிறது, சேவைக்காக எலும்புகளை கொடுத்தார். தனது சரீரத்தைப் பற்றியும் சிந்திக்காமல் சேவை செய்ய வேண்டும், இது தான் சேவையில் எலும்பு (உடல் உழைப்பு) கொடுப்பது என்று கூறப்படுகிறது, மற்றொன்று ஆன்மீக சேவைக்கு எலும்பு கொடுப்பது. ஆன்மீக சேவை செய்பவர்கள் ஆன்மீக ஞானத்தை மட்டுமே கூறிக் கொண்டே இருப்பார்கள். ஞான செல்வத்தை தானம் செய்து குஷியில் ஆடிக் கொண்டே இருப்பார்கள். உலகில் மனிதர்கள் செய்யும் சேவைகள் உலகாய சேவைகளாகும். அமர்ந்து சாஸ்திரங்கள் கூறுவது என்பது ஆன்மீக சேவை கிடையாது. ஆன்மீக சேவையை தந்தை மட்டுமே கற்றுக் கொடுக்கின்றார். ஆன்மீகத் தந்தை தான் வந்து ஆன்மீக குழந்தைகளுக்கு (ஆத்மாக் களுக்கு) கற்பிக்கின்றார். சத்யுக, புது உலகம் செல்வதற்காக நீங்கள் இப்போது தயாராகிக் கொண்டிருக் கிறீர்கள். அங்கு உங்கள் மூலம் எந்த விகர்மமும் ஏற்படாது. அதுவோ இராம இராஜ்யமாகும். அங்கு மிகச் சிலரே இருப்பர். அந்த சில மனிதர்களே வந்து படிப்பர். இப்போது இராவண இராஜ்யத்தில் அனைவரும் துக்கமானவர் களாக இருக்கின்றனர் அல்லவா! இந்த முழு ஞானமும் உங்களது புத்தியில் வரிசைக்கிரமமான முயற்சியின்படி இருக்கிறது. இந்த ஏணிப்படி சித்திரத்திலேயே முழு ஞானமும் வந்து விடுகிறது. இந்த சித்திரம் உருவாக்குவதற்கு இயந்திரம் (மிஷின்) தேவை. அந்த அரசாங்கத்தில் தினசரி பத்திரிக்கை எவ்வளவு அச்சடிக்கின்றனர்! எவ்வளவு காரியங்கள் நடைபெறுகிறது! இங்கு அனைத்தையும் கைகளினால் உருவாக்க வேண்டியிருக்கிறது.

இந்த கடைசிப் பிறவியில் தூய்மையாக ஆனீர்கள் எனில் தூய உலகிற்கு எஜமானர்களாக ஆவீர்கள் என்று தந்தை கூறுகின்றார். இந்த ஞானம் யாரிடத்திலும் கிடையாது. இந்த ஏணியில் மற்ற தர்மத்தினர்களின் செய்தி எங்கு இருக்கிறது? என்று கேட்பர். அதுவும் இந்த சக்கரத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் புது உலகிற்கு வரவேமாட்டார்கள். அவர்களுக்கு அமைதி கிடைக்கிறது. பாரதவாசிகள் தான் சொர்க்கத்தில் இருந்தார்கள் அல்லவா! பாரதத்தில் தான் தந்தை இராஜயோகம் கற்பிக்க வருகின்றார், அதனால் தான் பாரதத்தின் பழமையான இராஜயோகத்தை அனைவரும் விரும்புகின்றனர். இந்த சித்திரத்தின் மூலம் அவர்களே சுயம் புரிந்து கொள்வர், புது உலகில் பாரதம் மட்டுமே இருந்தது. தனது தர்மத்தைப் பற்றியும் புரிந்து கொள்வர். கிறிஸ்து தர்ம ஸ்தாபனைக்காக வந்தார். இந்த நேரத்தில் அவரும் யாசிக்கும் ரூபத்தில் இருக்கிறார். அனைவரும் தமோ பிரதானமாக இருக்கின்றனர். படைப்பவர் மற்றும் படைப்பின் இந்த ஞானம் எவ்வளவு உயர்ந்த ஞானமாக இருக்கிறது! நமக்கு யாருடைய பைசாவும் தேவையில்லை என்று நீங்கள் கூற முடியும். பைசா வைத்து நாம் என்ன செய்வோம்? நீங்கள் இதை கேளுங்கள் மற்றும் மற்றவர் களுக்கு கூறுவதற்காக இந்த சித்திரங்களை அச்சடியுங்கள். இந்த சித்திரங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஹால் உருவாக்குங்கள், அங்கு இந்த ஞானத்தை கூறுங்கள். மற்றபடி பைசா வாங்கி நாம் என்ன செய்யப் போகிறோம்! உங்களது வீட்டிற்குத் தான் நன்மை ஏற்பட வேண்டும். நீங்கள் ஏற்பாடு மட்டும் செய்யுங்கள், பலர் வந்து கேட்பார்கள். படைப்பவர் மற்றும் படைப்பின் ஞானம் மிகவும் எளிதாகும். இதை மனிதர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். அயல்நாட்டினர் இந்த ஞானம் கேட்டு மிகவும் விரும்புவர். மிகவும் மகிழ்ச்சி அடைவர். நாமும் தந்தையிடம் நினைவின் தொடர்பு வைத்தால் விகர்மம் விநாசம் ஆகும் என்று நினைப்பர். அனைவருக்கும் தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். இந்த ஞானம் இறை தந்தையைத் தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது என்பதை புரிந்து கொள்வர். இறைவன் (குதா) பூந்தோட்டத்தை உருவாக்கினார் என்று கூறுகின்றனர். ஆனால் அவர் எப்படி வருகிறார்? என்பது யாருக்கும் தெரியாது. உங்களது விசயங்களை கேட்டு மிகவும் குஷி அடைவர். பிறகு முயற்சி செய்து யோகா கற்றுக் கொள்வார்கள். தமோ பிரதானத்திலிருந்து சதோ பிரதானம் ஆவதற்காகவும் முயற்சி செய்வார்கள். சேவைக் காகவும் அதிக சிந்தனைகள் செய்ய வேண்டும். பாரதத்தில் கலையை காண்பிக்கும் போது தான் வெளியில் அனுப்புவார். இதை மனிதர்கள் அறிவார்கள், புது உலகம் உருவாக்குவதற்கு எந்த தாமதமும் ஏற்படாது. எங்காவது பூகம்பம் ஏற்பட்டு விட்டால் 2லி3 ஆண்டுகளுக்குள் முற்றிலும் புது கட்டடங்கள் உருவாக்கப்பட்டு விடுகின்றன. எந்த அளவிற்கு அதிக கொத்தனார்கள் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு கட்டடம் வேகமாக உருவாகும். ஒரு மாதத்திற்குள்ளேயே கட்டடத்தை உருவாக்கிட முடியும், மினிட் மேட்டர். ஆக சொர்க்கத்தில் எவ்வளவு விரைவாக கட்டிவிடுவர்! தங்கம், வெள்ளி போன்றவைகள் உங்களுக்கு கிடைத்து விடும். பொக்கிஷங்களிலிருந்து தங்கம், வெள்ளி, வைரம் போன்றவைகளை எடுத்து வருவர். கலைகள் அனைத்தைவும் கற்றுக் கொண்டிருக்கின்றனர். விஞ்ஞானம் எவ்வளவு பெருமிதத்துடன் இருக்கிறது! இதே விஞ்ஞானம் பிறகு அங்கும் காரியத்திற்குப் பயன்படும். இங்கு கற்றுக் கொண்டவர்கள், அங்கு அடுத்த பிறவி எடுத்து காரியத்தில் ஈடுபடுவர். அந்த நேரத்தில் அனைத்தும் புது உலகமாக ஆகிவிடும், இராவண இராஜ்யமே அழிந்து விடும். 5 தத்துவங்களும் நியமப்படி சேவையில் இருக்கும். சொர்க்கமாக ஆகிவிடும். அங்கு எந்த உபத்திரவங்களும் இருக்காது. இராவண இராஜ்யமே இருக்காது, அனைவரும் சதோபிரதானமாக இருப்பர். அனைத்தையும் விட மிக நல்ல விசயம் தந்தையிடம் மிகுந்த அன்பு இருக்க வேண்டும். தந்தை என்ன கட்டளையிடு கிறாரோ அதை தாரணை செய்யுங்கள், மேலும் மற்றவர்களுக்கு தானம் செய்யுங்கள். எந்த அளவிற்கு தானம் செய்வீர்களோ அந்த அளவிற்கு சேமிப்பாகும். சேவையே செய்யவில்லை யெனில் தாரணை எப்படி ஏற்படும்? சேவையில் புத்தி வேலை செய்ய வேண்டும். அதிக சேவை செய்ய முடியும். ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைய வேண்டும். சுய முன்னேற்றமும் செய்து கொள்ள வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) தங்களுக்குள் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்க வேண்டும். சேவையில் மிகுந்த ஆர்வம் இருக்க வேண்டும். ஞான ரத்தினங்களினால் தனது பையை நிறைத்துக் கொண்டு பிறகு அதை தானம் செய்ய வேண்டும்.

2) ஒரு தந்தை கூறுவதை மட்டுமே கேட்க வேண்டும் என்ற சங்கல்பம் செய்ய வேண்டும்.

மற்ற எண்ணங்களில் புத்தியை அலைய விடக் கூடாது.

வரதானம்:-

ஸ்தூலமான கை கால்களை மிகவும் எளிதான முறையில் எங்கு வேண்டுமோ அங்கு செயல் படுத்துகிறீர்கள் மேலும் காரியத்தில் ஈடுபடுத்துகிறீர்கள். அது போல எண்ணம் மற்றும் புத்தியை எங்கு வேண்டுமோ அங்கு ஈடுபடுத்த முடிய வேண்டும். லி இதைத் தான் ஈஸ்வரிய உரிமை என்று சொல்லப்படுகிறது. சப்தத்தில் வருவது எளிதாக இருப்பதை போன்று சப்தத்திலிருந்து விடுபட்டு போவதும் எளிதாக இருக்க வேண்டும். இந்த பயிற்சியினால் சாட்சாத்கார (காட்சியளிக்கும்) மூர்த்தி ஆகுங்கள். எனவே இப்பொழுது இந்த பயிற்சியை எளிதாகவும் நிரந்தரமாகவும் ஆக்குங்கள் அப்போதுதான் மாஸ்டர் சர்வசக்திவான் என்று கூறுவார்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top