25 July 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

July 24, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

உடல் மற்றும் மனதின் களைப்பை நீக்குவதற்கான சாதனம் - சக்திசாலியான நினைவு

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று அயல் (தூர) தேசத்தை சேர்ந்தவர் தனது அநாதி (பரந்தாமத்தை) சேர்ந்தவர்கள் மற்றும் ஆதி தேசம் (சத்யுகத்தை) சேர்ந்தவர்களின் சேவைக்காக அதாவது அனைத்து அயல் நாட்டை (பூலோகத்தை) சேர்ந்தவர்களை, அப்படிப்பட்ட குழந்தைகளை சந்திப்பதற்காக வந்திருக்கிறார். இவர் கள் தான் என்னுடைய செல்லமான குழந்தைகள் என்பதை தெரிந்திருக்கிறார். அநாதி தேசமான பரந்தாமத்தில் வசித்திருந்தீர்கள், மேலும் அதன் தொடர்ச்சி யாக உலகத்தில் இந்த பாரத பூமியில் ஆரம்பத்தில் சத்யுகம் என்ற சொந்தமான உலகமாக இருந்தது, நம்முடைய இராஜ்யம் இருந்தது, அனைவரும் இதை பாரதம் என்று சொன்னார்கள், எனவே ஆரம்பத்தில் இந்த பாரத தேசத்தை சேர்ந்தவர்களாக இருந்தீர்கள். இந்த பாரத பூமியில் பிரம்மா பாபாவோடு இராஜ்யம் செய்தீர்கள். பல பிறவிகள் தன்னுடைய இராஜ்யத்தில் சுகம்-சாந்தி நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து (கடந்து) வந்தீர்கள். ஆகையால் ஆரம்பகாலத்தில் வாழ்ந்தவர்கள் என்ற காரணத்தினால் பாரத பூமியோடு இதய பூர்வமான அன்பு இருக்கிறது. இறுதி நிலையில் இந்த பாரதம் எவ்வளவு தான் ஏழ்மையாக இருந்தாலும், தூசி படிந்தாக இருந்தாலும் கூட நம்முடைய தேசம் நம்முடையது தான். எனவே ஆத்மா வாகிய உங்கள் அனைவரின் சொந்தமான தேசம் மற்றும் தேவதை சரீரம் அணிந்த வாழ்க்கை வாழ்ந்த தேசம் எந்த தேசமாக இருந்தது? பாரதம் தான் இருந்தது அல்லவா. எத்தனை பிறவிகள் பாரத தேசத்தில் வாழ்ந்துள்ளீர்கள், அவை நினைவில் இருக்கிறதா? அனைவரும் 21 பிறவி களின் ஆஸ்தியை பாபாவிடமிருந்து அடைந்துவிட்டீர்கள், ஆகையால் 21 பிறவிகளுக்கு உத்திரவாதம் (பாரதத்தில் பிறப்பதற்கு) கிடைத்துவிட்டது. பிறகும் கூட ஒவ்வொரு ஆத்மாவும் பல பிறவிகள் பாரத பூமியில் தான் பிறவி எடுக்கிறார்கள், ஏனெனில் யார் பிரம்மா பாபாவிற்கு அருகாமையில் இருக்கும் ஆத்மாக்களாக இருக்கிறார்களோ, சமமாக இருக்கும் ஆத்மாக்களாக இருக்கிறார்களோ, அவர்கள் பிரம்மா பாபாவோடு சேர்ந்து – நாமே பூஜைக்குரியவர்களாகவும், நாமே பூஜாரிகளாக இருக்கும் நடிப்பையும் இணைந்தே நடிக்கிறோம். துவாபர் யுகத்தின் ஆரம்பத்தில் முதலில் பிராமண ஆத்மாக் களாகிய நாம் தான் பக்தர்களாக இருக்கின்றோம். ஆதியில் (சத்யுக) சொர்க்கத்தில் இந்த (பாரத) தேசத்தை சேர்ந்தவர்களாக தான் இருந்தோம். மேலும் பல முறை பாரத பூமியை சேர்ந்தவர்களாக தான் இருந்தோம். ஆகையால் பிராமணர் களின் அலௌகீக உலகம் மதுபனின் மீதும் அதிக அன்பு இருக்கிறது. இந்த மதுபன் பிராமணர்களின் சின்னஞ்சிறிய உலகமாக இருக்கிறது. எனவே இந்த உலகம் மிகவும் நன்றாக இருக்கிறதல்லவா. இங்கிருந்து செல்வதற்கான மனம் விரும்பதில்லை. ஒருவேளை இப்பொழுதே மதுபன் வாசி ஆகிவிடுக்கள் என்று கட்டளை இட்டால், குஷி ஏற்படுமா அல்லது சேவை யார் செய்வார்கள் என்ற எண்ணம் வருமா? சேவைக்காக செல்ல வேண்டு மல்லவா? அமருங்கள் என்று பாப்தாதா சொன்னாலும் கூட சேவை நினைவுக்கு வருகிறதா? சேவை செய்ய வைப்பது யார்? பாபாவின் டைரக்ஷன் என்னவாக இருக்கிறதோ, ஸ்ரீமத் என்னவாக இருக்கிறதோ, அதை அப்படியே கடைப்பிடிப்பது – இதற்கு தான் உண்மையான கட்டளைக்கு கீழ்படிந்த குழந்தை என்று சொல்லப்படுகிறது. மதுபனில் இருக்க வைக்க வேண்டுமா அல்லது சேவைக்கு அனுப்புவதா என்பது பாப்தாதா தெரிந்திருக்கிறார். பிராமண குழந்தைகளுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் எவரெடியாக (எதற்கும் தயாராக இருக்கும் நிலை) இருக்க வேண்டும். அவ்வப்பொழுது என்ன கட்டளை கிடைக்கிறதோ, அதில் எவரெடியாக இருக்க வேண்டும். எண்ணத்திலும் கூட மனதின் வழியை சேர்க்க (கலப்படம்) செய்யக் கூடாது. இதற்கு தான் ஸ்ரீமத் படி நடக்கக்கூடிய சிரேஷ்ட ஆத்மா என்று சொல்லப்படுகிறது.

சேவையின் பொறுப்பாளர் பாபா தான் என்பதை தெரிந்திருக்கிறீர்களா? அல்லது நீங்களா? இந்த பொறுப்பினால் கொஞ்சம் கொஞ்சம் சுமையை அனுபவம் செய்கிறீர்களா? பொறுப்பினால் நீங்கள் இலேசாக இருக்கிறீர்கள் அல்லவா! இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும் – இதை சுமையாக புரிந்துக் கொள்ள வில்லை தானே? செய்பவர் செய்வித்துக் கொண்டிருக்கிறார். செய்ய வைப்பவர் ஒரே ஒரு பாபா தான், எவருடையதாவது புத்தியை டச் செய்து உலக சேவைக்கான காரியத்தை செய்ய வைக்கிறார். மேலும் செய்ய வைத்துக் கொண்டே யிருப்பார். யார் செய்கிறார்களோ, அவர்கள் அடைவார்கள், ஆகையால் நிமித்தமாக குழந்தைகளை இதற்காக மட்டும் தான் உருவாக்குகிறார். (பாக்கியத்தை) அடைய கூடியவர்கள் குழந்தைகள் தான், பாபா அடைவதில்லை. பாக்கியத்தை அடைய வேண்டுமா அல்லது சேவையின் பலனை அனுபவம் செய்ய வேண்டுமா – இது ஆத்மாக்களின் (குழந்தைகளின்) வேலையாகும். ஆகையால் குழந்தைகளை நிமித்த மாக (கருவியாக) உருவாக்கு கிறார். சாகார ரூபத்திலும் கூட சேவை செய்ய வைப்பதற்கான காரியத்தை பார்த்தீர்கள், மேலும் இப்பொழுதும் கூட அவ்யக்த ரூபத்திலும் கூட செய்ய வைக்கக் கூடியவர் பாபா, அவ்யக்த பிரம்மாவின் மூலம் கூட எப்படியெல்லாம் சேவை செய்துக் கொண்டிருக் கிறார் என்பதை கூட பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அவ்யக்த ரூபத்தின் சேவையின் வேகம் மேலும் அதிக தீவிரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. செய்ய வைக்கக் கூடியவர் செய்துக் கொண்டிருக்கிறார், மேலும் நீங்களும் கூட கைப்பாவை (பொம்மை) போன்று நடனமாடிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த சேவையும் கூட ஒரு விளையாட்டாக இருக்கிறது. செய்ய வைக்கக்கூடியவர் செய்துக் கொண்டிருக் கிறார், மேலும் நீங்களும் கூட நிமித்தமானவர் ஆகி ஒவ்வொரு அடியிலும் பலமடங்கு பாக்கியத்தை உருவாக்குகிறீர்கள். எனவே சுமை யார் மீது இருக்கிறது? பாபா தெரிந்திருக்கிறார் – இதுவும் சுமை அல்ல. நீங்கள் சுமை என்று சொல்வீர்கள் என்றால், பிரம்மா பாபாவும் கூட சுமை என்ற வார்த்தையை சொல்கிறார். பிரம்மா பாபாவிற்கு அனைத்தும் நடந்திருக்கிறது. கோடு மட்டும் போடுகிறீர்கள், கோடு போடுவது என்ன பெரிய விஷயமாக இருக்கிறதா என்ன? எனவே பாப்தாதா அப்படியே சேவை செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார். கோடு போடுவது போல சேவை கூட அந்தளவு எளிதாக இருக்கிறது, மீண்டும் செய்து கொண்டிருக்கிறீர்கள், நிமித்தமாக விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்.

மாயாவின் தடை எப்படி விளையாட்டாக இருக்கிறதோ, சேவையிலும் கூட உழைப்பு இல்லை, ஆனால் விளையாட்டாக புரிந்துக் கொள்வதினால் சேவையில் எப்பொழுதுமே புத்துணர்ச்சி அனுபவமாகும். நீங்கள் எதற்காக விளையாடுகிறீர்கள்? களைப்படைவதற்காகவா விளையாடு கிறீர்கள், புத்துணர்ச்சி அடைவதற்காக விளையாடுகிறீர்கள். எவ்வளவு பெரிய காரியமாக இருந்தாலும், விளையாடினால் எப்படி புத்துணர்ச்சி கிடைக்கிறதோ, அதுபோன்று அனுபவமாகும். எவ்வளவு தான் களைப்பை ஏற்படுத்தும் விளையாட்டாக இருந்தாலும் கூட, விளையாட்டு என்று புரிந்துக் கொள்வதினால் களைப்பு ஏற்படுவதில்லை, ஏனெனில் முழு மனதோடு விருப்பத்தோடு விளையாடுகிறீர்கள். எவ்வளவு தான் விளையாட்டில் கடின உழைப்பு செய்ய வேண்டியிருந்தாலும் அது கூட மனதிற்கு இதமாக இருக்கிறது. ஏனெனில் இதய பூர்வமாக செய்கிறோம். மேலும் யாருக்காவது லௌகீக காரியம் சுமை போன்று இருக்கிறது, வாழ்வாதற்காக செய்ய வேண்டி யிருக்கிறது. கடமை என்று புரிந்துக் கொள்கிறோம், ஆகையால் உழைப்பு தேவைப்படுகிறது. சரீரத்தின் உழைப்பாக இருந்தாலும், புத்தியின் உழைப்பாக இருந்தாலும், டியூட்டி என்று புரிந்துக் கொள்வதினால் களைப்பின் அனுபவம் ஏற்படுகிறது, ஏனெனில் மனதில் குஷியோடு செய்வதில்லை. யாருக்கு தனது மனதில் ஊக்கத்தோடு, குஷியோடு காரியத்தை அனுபவம் செய்கிறார்களோ, அதில் களைப்பு ஏற்படுவ தில்லை, சுமை அனுபவம் ஆகாது. ஒரு சில குழந்தைகளின் மீது சேவையின் கணக்கை விட அதிக மான காரியங்கள் வந்துவிடுகிறது. ஆகையால் அவ்வப்பொழுது களைப்பின் அனுபவம் ஏற்படுகிறது. பல குழந்தைகள் களைப்பற்றவர் ஆகி சேவையை ஊக்க உற்சாகத் தோடு செய்துக் கொண்டிருப்பதை பாப்தாதா பார்த்துக் கொண்டிருக் கிறார். ஆனாலும் கூட தைரியம் வைத்து முன்னேறிக் கொண்டேயிருக்கிறீர்கள் – இதைப் பார்த்து பாப்தாதா புன்முறுவல் செய்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் எப்பொழுதும் புத்தியை அவசியம் இலேசாக வையுங்கள்.

பாப்தாதா குழந்தைகளின் அனைத்து திட்டங்கள், நிகழ்ச்சி ஏற்பாடுகளை வதனத்தில் அமர்ந்தவாறே பார்த்துக் கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு குழந்தைகளின் நினைவு மற்றும் சேவையின் பதிவு பாப்தாதாவிடம் ஒவ்வொரு நேரத்திற்கானது இருக்கிறது. உங்களுடைய உலகத்தில் ரிக்கார்ட் (பதிவு) வைப்பதற்கான பலவித சாதனங்கள் இருக்கிறது. அதுபோல பாபாவிடம் அறிவியல் சாதனங்களையும் மிஞ்சிய தெள்ளத்தெளிவான சாதனம் இருக்கிறது, அது தானாகவே காரியம் செய்துவிடுகிறது. அறிவியல் சாதனங்கள் அனைத்தும், ஒளியின் (லைட்) ஆதாரத்தில் செயல்படுகிறது. சூட்சுமவதனம் என்றாலே ஒளி (லைட்) உலகம் தான். சாகார உலகத்தின் ஒளியின் சாதனங்கள் அனைத்துமே இயற்கையின் (5 தத்துவங்களால் ஆன) சாதனங்கள் ஆகும். ஆனால் அவ்யக்த வதனத்தின் சாதனங்கள் 5 தத்துவங்களால் ஆனதல்ல. மேலும் இயற்கை மாறிக் கொண்டே யிருக்கும். சதோ, இரஜோ, தமோவாக (உயர்ந்த, இடைப்பட்ட, கீழான) என்று மாறிக்கொண்டே யிருக்கும். இந்த சமயத்தில் தமோ நிலையில் இயற்கை இருக்கிறது. ஆகையால் இந்த சாதனங்கள் இன்று வேலை செய்யும், நாளை வேலை செய்யாது. ஆனால் அவ்யக்த வதனத்தின் சாதனங்கள் இயற்கைக்கு அப்பாற் பட்டது. எனவே இதில் மாற்றம் ஏற்படாது. எப்பொழுது வேண்டுமோ, எப்படி வேண்டுமோ சூட்சம வதனத்தின் சாதனங்கள் எப்பொழுதும் தனது காரியத்தை செய்துக் கொண்டே யிருக்கிறது, ஆகையால் அனைத்து குழந்தைகளின் பதிவேட்டை பார்ப்பது பாப்தாதாவிற்கு மிகப்பெரிய விஷயமில்லை. உங்களுக்கு சாதனங்களை பராமரிப்பதே மிகவும் கடினமாக இருக்கிறது அல்லவா. ஆனால் பாப்தாதா நினைவு மற்றும் சேவையின் பதிவேட்டை பார்க்கிறார், ஏனெனில் இரண்டின் சமநிலையில் அதிகப்படியான ஆசீர்வாதம் கொடுக்கிறார்.

எப்படி சேவைக்காக நேரத்தை ஒதுக்குகிறீர்கள், ஆனால் அதில் சில நேரங்களில் குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமாக நேரம் தரவேண்டியிருக்கிறது. சேவையில் நேரம் கொடுப்பது மிக நல்ல விஷயமாகும், மேலும் சேவையின் பலனும் கூட கிடைக்கிறது, சேவையில் பிஷியாக (ஈடுபாட்டுடன்) இருக்கும் காரணத்தினால் சின்ன சின்ன தேவையற்ற விஷயங்களிலிருந்து தப்பித்து விடலாம். பாப்தாதா குழந்தைகளின் சேவையில் மிகவும் குஷியடைகிறார், தைரியத்தின் மீது பலியாகிறார். ஆனால் எந்தவொரு சேவை – நினைவில், முன்னேற்றத்தில் சின்னஞ்சிறு தடை ஏற்படுத்துவதற்கு நிமித்தமாக இருக்கிறது என்றால் அப்படிப்பட்ட சேவையின் நேரத்தை குறைத்து விட வேண்டும். இரவு கண்விழிக் கிறீர்கள், 12 மணி அல்லது 1 மணி ஆகிவிடுகிறது என்றால் அமிர்தவேளை புத்துணர்ச்சியுடன் இருக்க முடியாது. நியமத்திற்காக (அமிர்தவேளை) எழுந்திருக்கிறோம், மற்றும் அமிர்தவேளை சக்திசாலி யாக இல்லையென்றால் முழு நாளிலும் நினைவு மற்றும் சேவையில் வேறுபாடு ஏற்படுகிறது. சேவையில் திட்டம் போடுவதில் மற்றும் சேவையை நடைமுறை கொண்டு வருவதில் நேரம் தேவைப்படுகிறது, ஆனால் இரவு நேரத்தை தவிர்த்து 12 மணிக்கு பதிலாக 11 மணிக்கு தூங்க சென்றுவிடவேண்டும். அந்த ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக சென்றதால் சரீரத்திற்கு ஒய்வு கொடுக்கப்பட்டதால் அமிர்தவேளை நன்றாக இருக்கும், புத்திக் கூட புத்துணர்வுடன் இருக்கும். இல்லை யென்றால் சேவை செய்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் நினைவினுடைய சார்ட் எந்தளவு இருக்க வேண்டுமோ, அந்தளவு இருப்பதில்லை, அதனால் மனம் அரித்துக் (பாதித்து) கொண்டே இருக்கிறது. இது இப்படி இருக்க வேண்டும், ஆனால் அப்படி நடைப் பெறவில்லை என்ற எண்ணம் அடிக்கடி உள்ளத்தில், மனதில் வந்துக் கொண்டேயிருக்கிறது. எனவே அந்த எண்ணங்களால் புத்திக் கூட புத்துணர்வுடன் இருப்பதில்லை. ஒருவேளை புத்தி புத்துணர்வுடன் இருந்தால், புதுப்பிக்கப்பட்ட புத்தியினால் 2-3 மணி நேரத்தின் வேலையை 1 மணி நேரத்தில் முடித்து விட முடியும். களைப்படைந்த புத்தியினால் நேரம் அதிகம் தேவைப்படுகிறது, இந்த அனுபவம் இருக்கிறதல்லவா. எந்தளவு புத்தியும் புத்துணர்வுடன், உடலும் புத்துணர்வுடன் ஆத்மீக முன்னேற்றத்தின் ரூபத்திலும் புத்துணர்வு – இரட்டிப்பு புத்துணர்வுடன் இருந்தால் ஒரு மணி நேரத்தின் வேலையை அரை மணி நேரத்தில் செய்து விடலாம். ஆகையால் எப்பொழுதும் தனது தினசரி நடவடிக்கையில் புத்தியை புத்துணர்வுடன் வைப்பதில் கவனம் வையுங்கள். அதிகமாக உறங்குவதற்கான பழக்கம் கூட வேண்டாம், ஆனால் உடலுக்கு தகுந்தவாறு அவசியம் ஒய்வு எடுப்பதற்கான கவனம் வையுங்கள். அவ்வப்பொழுது ஏதாவது சேவையின் வாய்ப்பு ஒர் இரு மாதங்களில் இரண்டு – நான்கு முறை தாமதமாகலாம், அது வேறு விஷயமாகும், ஆனால் ஒருவேளை உடல் களைப்படைந்து விடுகிறது என்றால் நினைவில் வித்தியாசம் ஏற்படும். எப்படி சேவை யின் திட்டங்களை உருவாக்குகிறீர்களோ, 4 மணி நேரம் தேவைப் படுகிறது என்றால் ஒதுக்கி விடுகிறீர்கள். அதுபோல நினைவு செய்வதற்கு கூட அவசியம் நேரத்தை ஒதுக்க வேண்டும். இதையும் அவசியம் புரிந்துக் கொண்டு இந்த விதியின் மூலம் தனது நிகழ்ச்சியை உருவாக்குங் கள். சோம்பல் இல்லையென்றாலும் கூட உடலுக்கு ஒய்வு வேண்டும். இந்த விதிப்படி செல்லுங்கள். ஏனெனில் ஒவ்வொரு நாளும் சேவை மென்மேலும் அதிகரித்துக் கொண்டே போவதற்கான நேரம் வந்து கொண்டே இருக்கும். நீங்கள் புரிந்துக் கொள்கிறீர் கள் – நல்லது, இந்த ஒரு வருடம் சேவையின் காரியம் முடிந்துவிடும், பிறகு ஒய்வு எடுத்துக் கொள்ளலாம், சரி செய்து விடலாம், நினைவை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம். ஆனால் சேவையின் காரியம் ஒவ்வொரு நாளும் புதியதிலும் புதியதாக மற்றும் பெரியதிலும் பெரியதாக ஆகிக் கொண்டேயிருக்கும். ஆகையால் எப்பொழுதும் சமநிலையில் வையுங்கள். அமிர்த வேளையில் புத்துணர்வுடன் இருந்த பிறகும் முழு நாளில் நேரத்திற்கு தகுந்தவாறு செய்தீர்கள் என்றால் பாபாவின் ஆசீர்வாதமும் அதிகமாக கிடைக்கும், மேலும் புத்தியும் புத்துணர்வுடன் இருக்கும் காரணத்தினால் மிக வேகமாகவும் வெற்றிகரமாகவும் காரியத்தை செயல் படுத்த முடியும். புரிந்ததா?

பாப்தாதா பார்த்துக் கொண்டிருக்கிறார் – குழந்தைகளிடத்தில் மகிழ்ச்சி அதிகமாக இருக்கிறது, எனவே சரீரத்தை பற்றி கூட யோசிப்பதில்லை. ஊக்கம் – உற்சாகத்தின் மூலம் முன்னேறிக் கொண்டேயிருக் கிறார்கள். முன்னேறுவது பாப்தாதாவிற்கு பிடித்திருக்கிறது, ஆனாலும் சமநிலை அவசியம் வேண்டும். செய்துக் கொண்டே யிருக்கிறார்கள், போய் கொண்டேயிருக்கிறார்கள், ஆனால் அவ்வப் பொழுது நிறைய வேலை இருக்கிறது, எனவே அதிகப்படியான வேலைபழுவால் ஒன்று – புத்தி களைப்படைந்து விடும் காரணத்தினால் எந்தளவு விரும்புகிறோமோ, அந்தளவு செய்ய முடிவ தில்லை, இரண்டாவது – அதிகப்படியான வேலையின் காரணத்தினால் பிறரால் ஏற்படும் சிறிய விஷயத்திற்குக் கூட எரிச்சல் வருகிறது, அதனுடைய களைப்பின் காரணத்தினால் சிடுசிடுப்புத் தன்மை ஏற்படுகிறது. அதனால் குஷி குறைந்து விடும், உள்ளுக்குள் சரியாக இருக்கிறீர்கள், சேவையின் பலனும் கிடைக்கிறது, குஷியும் கிடைக்கிறது, ஆனாலும் கூட உடலும் பழையதாக இருக்கிறதல்லவா. ஆகையால் அதிகப்படியான செயல்களில் செல்லாதீர்கள். சமநிலை வையுங்கள். நினைவினுடைய சார்ட் வைப்பதில் களைப்பு என்ற தாக்கம் ஏற்படக் கூடாது. எந்தளவு சேவையில் பிசியாக இருக்கிறீர்களோ, எவ்வளவு தான் பிசியாக இருந்தாலும் சோர்வை நீக்குவதற்கான விசேஷ சாதனம் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு வினாடியில் கூட சக்திசாலியான நினைவு செய்ய அவசியம் நேரம் ஒதுக்குங்கள். எப்படி யாருக்காவது உடலில் பலவீனம் ஏற்படுகிறது என்றால் உடலுக்கு ஊட்டசத்து அளிப்பதற்காக மருத்துவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சக்தி அளிக்கக் கூடிய மருந்தை பருகுவதற்காக கொடுக்கிறார்கள். நேரம் ஒதுக்கி மருந்து அருந்த வேண்டியிருக்கிறதல்லவா. எனவே இடை-இடையில் ஒரு நிமிடமாவது ஒருவேளை சக்திசாலியான நினைவிற்காக நேரம் ஒதுக்கினால் அதில் (ஆஇஈ) எ.பி.சி என்ற அனைத்து வைட்டமின்கள் வந்து விடும்.

சக்திசாலியான நினைவு சதா ஏன் இருப்பதில்லை என்பதை கேட்டீர்கள் இல்லையா. பாபாவிற்காகவே இருக்கிறோம் மற்றும் பாபா உங்களுடையவர், அனைத்து சம்மந்தங்களில் இருக்கிறார், இதயபூர்வமான அன்பு இருக்கிறது. ஞானம் நிறைந்தவராக இருக்கிறீர்கள், பிராப்திகளின் அனுபவ சாலிகளாக இருக்கிறீர்கள், ஆனாலும் கூட சக்திசாலியான நினைவு சதா ஏன் இருப்பதில்லை. அதற்கான காரணம் என்ன? தனது நினைவின் தொடர்பை வைப்பதில்லை. தொடர்பு துண்டிக்கப் படுகிறது, எனவே மீண்டும் இணைப்பதில் நேரமும் ஆகிறது. முயற்சியும் தேவைப்படுகிறது, அதனால் சக்திசாலி ஆவதற்கு பதிலாக பலவீனம் ஆகிவிடுகிறது. மறதி ஏற்படாது, நினைவு இருக்கும். ஆனால் சதா சக்திசாலியான நினைவு தானாகவே இருக்க வேண்டும். அதற்காக இந்த தொடர்பில் துண்டிப்பு ஏற்படக் கூடாது. ஒவ்வொரு நேரமும் புத்தியில் நினைவின் தொடர்பு இணைந்து இருப்பதற்கான விதி இது தான். இதைக் கூட அவசியம் புரிந்துக் கொள்ளுங்கள். அந்த காரியங்கள் அவசியமாக இருக்கிறது, இந்த திட்டதை முடித்துவிட்டு தான் எழுந்திருக்க வேண்டும் என்று புரிந்திருக்கிறீர்கள், அதனால் நேரமும் கொடுக்கிறீர்கள், எனர்ஜியையும் கொடுக்கிறீர்கள். அதுபோல இது கூட (நினைவு) அவசிய மாகும், இந்த வேலையை முடித்தப் பிறகு நினைவு செய்யலாம் என்று தள்ளி போடாதீர்கள். இதற்கான நேரத்தை தனது நிகழ்ச்சி நிரலில் முதலில் சேர்க்க வேண்டும். சேவைக்கான திட்டத்தை இரண்டு மணிநேரம் ஒதுக்கி ஏற்பாடு செய்கிறீர்கள், எனவே இரண்டு மணி நேரத்தின் கூடவே இதைக் கூட இடை-இடையில் செய்து தான் ஆக வேண்டும் – இதையும் சேருங்கள். அதனால் ஒரு மணி நேரம் அமர்ந்து திட்டத்தை உருவாக்குவீர்கள், அது அரை மணி நேரத்தில் செய்து விடலாம். செய்து பாருங்கள். தானாகவே புத்துணர்வுடன் இரண்டு மணிக்கு கண்கள் திறக்கும், அது வேறு விஷயம். ஆனால் வேலைக்காக கண் விழிக்க வேண்டியிருந்தால் அதனுடைய தாக்கம் உடலில் ஏற்படும். ஆகையால் சமநிலை வைத்து எப்பொழுதுமே கவனம் வையுங்கள்.

பாப்தாதா குழந்தைகளின் இந்தளவு பிசியை பார்க்கும் பொழுது – இவர்களுக்கு நெற்றியில் மஜாஜ் செய்து விட வேண்டும் என்று தான் யோசிக்கிறார். ஆனால் நேரத்தை ஒதுக்கினீர்கள் என்றால் வதனத்தில் பாப்தாதா மஜாஜ் கூட செய்து விடுவார். அது கூட அலௌகீகமாக இருக்கும், லௌகீக மஜாஜ் போன்று இருக்குமா என்ன? முழுமையாக புத்துணர்வு பெற்று விடுவோம். ஒரு நிமிடத்தின் சக்திசாலியான நினைவு உடல் மற்றும் மனம் – இரண்டுமே புத்துணர்வு பெற்றுவிடும். பாபாவின் வதனத்தில் வந்து விடுங்கள், எந்த எண்ணத்தை நினைக்கிறோமோ, அது நிறைவேறிவிடும். சரீரத்தின் சோர்வாக இருந்தாலும், புத்தியின் சோர்வாக இருந்தாலும், மனநிலையின் களைப்பாக இருந்தாலும் – பாபா வந்திருப்பதே களைப்பை நீக்குவதற்காக தான்.

இன்று இரட்டை அயல்நாட்டவருடன் தனிப்பட்ட ஆன்மீக உரையாடல் செய்துக் கொண்டிருக்கிறார். மிக நன்றாக சேவை செய்கிறீர்கள் மேலும் செய்துக் கொண்டு தான் இருக்க வேண்டும். சேவையை அதிகரிப்பது -இதுக் கூட நாடகத் திட்டப்படி உருவாகி யிருக்கிறது. எவ்வளவு தான் நீங்கள் யோசித்தாலும் – இப்பொழுது அனைத்தும் முடிவடைந்து விட்டது. ஆனால் நாடகம் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் சேவையில் சமநிலை வைக்க வேண்டும், மேலும் நீங்களும் அனைவருக்கும் நிமித்தமானவராகி (கருவி) சேவை செய்ய வேண்டும். இந்த திட்டத்தை யாராலும் மாற்ற முடியாது. பாபா ஒரு வருடம் சேவையிலிருந்து ஒய்வு கொடுத்தாலும் கூட, மாறி விட முடியாது. சேவையிலிருந்து விடுபட்டு அமர்ந்து விட முடியுமா? நினைவு பிராமண வாழ்க்கையின் ஊட்டசத்தாக இருப்பது போன்று சேவையும் கூட வாழ்க்கையின் ஊட்டசத்தாகும். ஊட்டசத்து அருந்தாமல் ஒருபொழுதும் யாராலும் இருந்து விட முடியுமா என்ன? ஆனால் அவசியம் சமநிலை வேண்டும். புத்தியில் சுமை ஏற்படும் அளவிற்கு அதிகமாகவும் செய்ய வேண்டாம், அதுபோன்று சோம்பல் வரும் அளவிற்கும் இருக்க வேண்டாம். சுமையும் வேண்டாம், சோம்பேறியாகவும் இருக்க வேண்டாம், இதற்கு தான் சமநிலை என்று சொல்கிறார்கள்.

சதா நினைவு மற்றும் சேவையின் சமநிலை மூலம் பாபாவின் ஆசீர்வாதங்களுக்கு அதிகாரி யான, சதா பாபாவிற்கு சமமாக டபுள் லைட்டாக இருக்கக் கூடிய, சதா நிரந்தர சக்திசாலியான நினைவின் தொடர்பை இணைக்கக் கூடிய, சதா உடல் மற்றும் ஆத்மாவை புத்துணர்வுடன் வைக்கக் கூடிய, ஒவ்வொரு காரியத்தையும் விதிப்படி செய்யக் கூடிய, சதா சிரேஷ்ட வெற்றியை அடையக் கூடிய – அப்படிப்பட்ட உயர்ந்த, அருகாமையிலுள்ள குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

வரதானம்:-

யார் தனது உயர்ந்த அதிர்ஷ்டத்தை சதா நினைவில் வைக்கிறார்களோ, அவர்கள் சக்திசாலியான சொரூபத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு சதா தனது அநாதியான உண்மை யான சொரூபம் நினைவில் இருக்கிறது. ஒருபொழுதும் தனது பொய்யான முகத்தை தாரணை செய்வதில்லை. பலமுறை மாயா பொய்யான குணம் மற்றும் செயலை சொரூபமாக மாற்றிவிடுகிறது. சிலரை கோபக்காரர்களாக, சிலரை பேராசைக்காரர்களாக, சிலரை துக்கமானவர்களாக, சிலரை அமைதி யற்றவர்களாக ஆக்கி விடுகிறது – ஆனால் உண்மையான சொரூபத்தில் இவை அனைத்திலிருந்தும் விடுபட்டு விடலாம். எந்த குழந்தை தனது உண்மையான சொரூபத்தில் நிலைத்திருக்கிறார்களோ, அவர்கள் சூரிய வம்சத்தின் பதவிக்கு உரிமையாளர் ஆகிவிடுகிறார்கள்

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top