25 August 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

25 August 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

24 August 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! சங்கமயுக பிராமணர்களாகிய உங்களுடைய தர்மம் (தாரணை) மற்றும் கர்மமே ஞான அமிர்தத்தைப் பருகுவது மற்றும் பருகச் செய்வது ஆகும். நீங்கள் நரகவாசிகளை சொர்க்கவாசி ஆக்கக்கூடிய சேவை செய்கிறீர்கள்.

கேள்வி: -

பிராமணர்களாகிய உங்களுக்கு கர்மங்களின் ஆழ்ந்த விளைவுகளைப் பற்றி என்ன ஞானம் கிடைத்திருக்கிறது?

பதில்:-

ஒருவேளை தந்தையினுடையவர் ஆன பின்னர் எப்பொழுதாவது தன்னுடைய கர்மேந்திரி யங்கள் மூலம் ஏதாவது பாவச் செயல் செய்தால் ஒரு பாவத்திற்கு நூறு மடங்கு தண்டனை கிடைக்கும். இந்த ஞானம் பிராமணர்களாகிய உங்களுக்கு உள்ளது. ஆகவே, நீங்கள் எந்தவொரு பாவச் செயலும் செய்ய முடியாது. சர்வகுண சம்பன்னம் ஆகுவதே இப்பொழுது பிராமணர்களாகிய உங்களுடைய இலட்சியம் ஆகும். ஆகவே, நீங்கள் தன்னுடைய அவகுணங்களை நீக்குவதற்கான முயற்சி செய்யுங்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

கள்ளம்கபடமற்றவர் மேலும் தனிப்பட்டவர்

ஓம்சாந்தி. எல்லையற்ற தந்தையின் பெயர் போலாநாத் (கள்ளம்கபடமற்றவர்) ஆகும். கண்டிப்பாக மனிதனி லிருந்து தேவதை ஆக்கக்கூடியவரும் அவரே ஆவார். மனிதர்கள் அனைவரும் அசுர சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் மனிதரை தேவதை ஆக்க முடியாது. மனிதரிலிருந்து தேவதை ஆக்கினார் என்று அவருக்கே மகிமை பாடப்பட்டிருக்கிறது. தேவதை கள் அமரலோகத்தில் இருக்கின்றனர். இது மரணலோகம் ஆகும். அவசியம் தந்தை மரணலோகத் தில் வந்து, அமரர் ஆக்குவதற்காக அமரகதை கூறுவார். ஒரு சில்லரை பைசாக் கூட செலவு இல்லாமல் இப்பொழுது மனிதரிலிருந்து தேவதை ஆக்கினார் இது யாருக்காக சொல்லப்பட்டு இருக்கிறது? அவசியம் சூத்திரர்களை மட்டும் தத்தெடுத்திருந்திருப்பார் அல்லவா ! எனவே, சூத்திர குலத்தைச் சேர்ந்த மனிதர்களை பிராமண குலத்தில் அழைத்து வருகின்றார் என்று கூறப்படுகிறது. நாங்கள் பிரம்மா குமாரர்கள், குமாரிகள் ஆவோம், பிரம்மாவின் குழந்தைகள் ஆவோம் என்று இத்தனை அனைத்துக் குழந்தை களும் கூறுகின்றனர். பிரஜாபிதாவாக இருக்கின்றார் என்றால் அவருக்கு அவசியம் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் இருப்பார்கள். வாய்வழி வம்சத்தினராக இருந்தாலும் கூட அவசியம் தாய், தந்தை இருக்க வேண்டும் அல்லவா. மம்மாவின் வாய்வழி வம்சத்தினர் என்றும் கூறலாம். பாபாவின் வாய்வழி வம்சத்தினர் என்றால் தாத்தாவின் வாய்வழி வம்சத்தினராகவும் ஆகிவிட்டனர். விகாரத்தினால் உருவான வம்சத்தினரின் பெயரே இங்கு கிடையாது. அந்த கலியுக பிராமணர்கள் விகாரத்தின் மூலம் உருவான வம்சத்தினர் ஆவார்கள் மற்றும் பிராமணர்களாகிய நீங்கள் வாய்வழி வம்சத்தினர் ஆவீர்கள். அந்த பிராமணர்களோ விஷத்தைப் பருகச் செய்வதற்காக ஒருவருக்கு ஒருவர் கங்கணம் கட்டிவிடுகிறார்கள். மேலும், பிராமணர்களாகிய நீங்கள் அமிர்தத்தைப் பருகச் செய்வதற்காக பரமாத்மாவுடன் கங்கணம் கட்டி விடுகிறீர்கள். எவ்வளவு வித்தியாசம் உள்ளது? அவர்கள் நரகவாசி ஆக்கக் கூடியவர்கள் மற்றும் இவர் சொர்க்கவாசி ஆக்கக் கூடியவர். ஞான அமிர்தத்தின் மூலம் மனிதரிலிருந்து தேவதை ஆகின்றீர்கள். நாம் ஈஸ்வரனுடைய குழந்தைகள் ஆகின்றோம். பிறகு, உதவியும் கிடைக்கின்றது. சொந்த குழந்தைகள் மற்றும் மாற்றாந்தாய் குழந்தை களும் உள்ளனர் அல்லவா. எந்தளவு சொந்த குழந்தைகளுக்கு உதவி கிடைக்கிறதோ, அந்தளவு மாற்றாந்தாய் குழந்தைகளுக்குக் கிடைக்காது. தந்தையின் அன்பு கூட சொந்த குழந்தைகள் மீது தான் உள்ளது. தனக்கென்று குழந்தை இல்லை என்றால் பிறகு, சகோதர னுடைய குழந்தைகள் மீது அன்பு செலுத்த வேண்டியதிருக்கும் அல்லது குழந்தையை தத்தெடுக்க வேண்டிய திருக்கும். இப்பொழுது நீங்கள் குலங்களைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள். விராட சொரூபத்தை உருவாக்குகிறீர்கள், ஆனால், இதனால் என்ன ஏற்படு கிறது என்பதைப் பற்றிய சரித்திரம், பூகோளத்தை எவரும் கூற முடியாது. இந்தச் சக்கரம் சுழல் கிறது, இத்தனை பிறவிகள் தேவதை தர்மத்தில் எடுக்கிறார்கள், இத்தனை பிறவிகள் சத்திரிய குலத்தில் எடுக்கிறார்கள் என்பதை இப்பொழுது தந்தை புரியவைக்கின்றார். இங்கே எந்த பொய்யான விசயமும் கிடையாது. 84 பிறவிகளை நிரூபித்துக் கூறுகின்றார். சதோபிரதானம், பிறகு, சதோ, ரஜோ, தமோ நிலை அவசியம் அனைவருக்கும் ஏற்பட வேண்டும். தேவதைகள், யார் சதோபிரதானமாக இருந்தார்களோ, அவர்களே பிறகு தமோபிரதானம் ஆகிவிட்டனர். இப்பொழுது இந்த மனித சிருஷ்டி மரமானது இற்றுப்போய் விட்டது அதாவது சுடுகாடு ஆகிவிட்டது. இது அழிவிற்கான சமயம் ஆகும். அனைவருடைய பழைய கணக்கு வழக்கு முடிவடைய வேண்டும் மற்றும் புதிய பிறவி எடுக்க வேண்டும். பணத்திற்கான கணக்கு வைக்கப் படுகிறது. இங்கேயோ கர்மங்களின் கணக்கைப் பற்றியது ஆகும். அரைக்கல்பத்தின் கணக்கு ஆகும். மனிதர்கள் என்ன பாவ கர்மம் செய்கிறார்களோ, அந்தக் கணக்கு தொடர்ந்து வருகிறது. ஒருமுறை தண்டனையை அனுபவித்தவுடன் கணக்கு முடிந்துவிடுகிறது என்பது கிடையாது. பாவ ஆத்மாவாக எவ்வாறு ஆனீர்கள்? ஒவ்வொரு நாளும் கர்மங்களின் சுமை ஏறி ஏறி முற்றிலுமாக தமோபிரதானம் ஆகிவிடுகின்றார்கள். சந்நியாசிகள் சந்நியாசம் செய்த பிறகு அவர்கள் ஏன் தமோபிரதானம் ஆக இருக்க வேண்டும் என்று சிலர் கேட்கின்றனர். ஆனால், அவர்களுடையது ரஜோபிரதான சந்நியாசம் என்று தந்தை கூறுகின்றார். இப்பொழுது உங்களுக்கு ஸ்ரீமத் கிடைக்கிறது. அது மனிதர் களின் வழி ஆகும். நாங்கள் மோட்சத்தை அடைகின்றோம் என்று மக்கள் கூறுகின்றார் கள். ஆனால் எவ்வாறு? அனைத்து நடிகர்களும் இங்கே அவசியம் ஆஜர் ஆகியிருக்க வேண்டும். திரும்பிச் செல்ல முடியாது. கீதையில் கூட அத்தகைய விசயங்களை அதிகமாக எழுதிவிட்டனர். முதல் விசயம் சர்வவியாபி என்பதாகும். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுடைய உள்ளத்தில் தந்தையின் நினைவு உள்ளது. படைப்பாளர் தந்தை மற்றும் கூடவே தந்தையின் படைப்பு. தந்தையை மட்டும் அல்லாது, அவரது படைப்பையும் கூட நினைவு செய்ய வேண்டும். தன்னுடைய தொழிலையும் செய்கிறீர்கள், கூடவே, மூலவதனம், சூட்சுமவதனம், சிவபாபாவின் வரலாறு, பிரம்மா, விஷ்ணு, சங்கரரைப் பற்றியும் அறிந்திருக்கிறீர்கள். பிறகு, சங்கமயுகத்தின் ஜெகதம்பா, ஜெகத் பிதாவையும் அறிந்து கொண்டீர்கள். ஜெகதம்பா சரஸ்வதி மகிமை செய்யப் படுகின்றார். அவருடைய சித்திரங்கள் அனேகம் உள்ளன. உண்மையில் முக்கியமான ஒரு சித்திரம் ஜெகதம்பா சரஸ்வதினுடையது ஆகும். இந்த பிரம்மா வியக்தத்தில் இருப்பவரே அவ்யக்தம் ஆகின்றார். அவ்யக்த நிலைக்குப் பிறகு அந்த பிரம்மா சாகாரத்தில் மகாராஜா ஸ்ரீ நாராயணர் ஆகின்றார், பிறகு, 84 பிறவிகள் துவங்கு கின்றன. இப்பொழுது நீங்கள் தொழில் செய்து கொண்டு இருக்கிறீர்கள். என்றாலும், விகர்மம் ஆகிவிடும் படியாக கர்மேந்திரியங்களால் எந்த பாவச் செயலும் செய்யக்கூடாது. இல்லையெனில், சர்வகுண சம்பன்னம் ஆக இயலாது. குணங்க ளற்ற எங்களுக்குள் குணங்களை நிரப்புங்கள் என்று பாடுகின்றனர் அல்லவா ! இந்த சமயத்தில் இருப்பதே பொய்யான கண்டம் ஆகும். சத்திய கண்டத்தை ஸ்தாபனை செய்யக்கூடியவர் ஒரு தந்தை ஆவார். இந்த சமயத்தில் அனைத்து மனிதர்களும் அனாதைகளாக ஆகிவிட்டனர்.

இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குள் எந்தவொரு அவகுணமும் இருக்கக் கூடாது. அனைத்தையும் விட முதல் அவகுணம் தேக அபிமானம் ஆகும். ஆத்ம அபிமானி ஆகுவதற்கு அதிக உழைப்பு தேவை. தேக அபிமானத்தின் காரணத்தினால் தான் மற்ற அனைத்து விகாரங்களும் வருகின்றன. அகங்காரம் முதல் நம்பர் எதிரி ஆகும். தந்தை நேரடியாகக் கூறு கின்றார் – செல்லமான குழந்தைகளே! தேகத்தின் அகங்காரத்தை விடுங்கள். எனக்கோ தேகமே கிடையாது. நான் வந்து இந்த அங்கங்கள் மூலம் கூறுகின்றேன். நீங்கள் இந்த அங்கங்கள் (உறுப்புகள்) மூலம் கேட்கிறீர்கள் மற்றும் புரிந்து கொள்கிறீர்கள். இப்பொழுது எல்லையற்ற தந்தை அறிவுரை வழங்குகின்றார் – என்னை நினைவு செய்யுங்கள், அப்போது உங்களுடைய விகர்மங்கள் வினாசம் ஆகிவிடும். பெயர் கெட்டு விடும்படியான, பதவி குறைந்துவிடும்படியான எந்தவொரு பாவச் செயலும் செய்யாதீர் கள். குழந்தைகளே! உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, சொர்க்கத்தின் எஜமானராக எவராலும் ஆக்க இயலாது. இப்பொழுது தந்தை உங்களுக்கு சத்தியத்தைப் புரியவைக்கின்றார். சத்திய ஞானத்தைக் கேட்பதற்காக மற்றும் சத்திய கண்டத்தின் எஜமானர் ஆகுவதற்காக நீங்கள் சத்தியமானவருடன் கூட அமர்ந்திருக்கிறீர்கள். அவருடைய பெயரே சத்தியம் என்பதாகும். உண்மையான ஞானக் கடல் ஆவார். தந்தை கூறுகின்றார் – நான் ஞானக் கடல் ஆவேன். ஞானக் கடலிலிருந்து ஞான நதிகளாகிய நீங்கள் வெளிப்படுகிறீர்கள். அந்த நதிகளோ தண்ணீர் கடலிலிருந்து உருவாகின்றன. அவற்றை பதீத பாவனி (தூய்மை யற்றவர்களை தூய்மை யாக்குவது) என்று எவ்வாறு அழைக்க முடியும்? பதீத பாவனர் பரமாத்மா ஆவார் அல்லவா ! அவரே ஞானக் கடல் ஆவார். அந்த கங்கை நதி முழு உலகத்திலும் ஓடாது. இது எல்லையற்ற தந்தையின் வேலையே ஆகும். நீங்கள் சூத்திரனிலிருந்து பிராமணர் ஆகிறீர்கள். பிராமணர்கள் உச்சிக் குடுமி ஆவார்கள். ஆனால், இப்பொழுது சதோபிரதானமானவர்கள் என்று கூறமுடியாது. ஏனெனில், இப்பொழுது அனைவரும் முயற்சி யாளர்களே. சேவை செய்துகொண்டு இருக்கிறீர்கள். ஈஸ்வரிய குழந்தைகள் ஆவீர்கள். ஆகையால், பிராமணர்களுக்கு அதிகப் புகழ் உள்ளது. ஏனெனில், பாரதத்தை சொர்க்கமாகக் நீங்களே ஆக்கு கிறீர்கள். இலட்சுமி, நாராயணர் பாரதத்தை சொர்க்கம் ஆக்குகின்றார்கள் என்பது கிடையாது. தந்தை பிராமணர்கள் மூலம் ஆக்குகின்றார். தேவதைகள் மூலமாக அல்ல. தந்தை பழைய உலகத்தில் வந்து புதிய உலகத்தைப் படைக்க வேண்டியதாக உள்ளது. எல்லையற்ற தந்தை புதிய வீடான சொர்க்கத்தை உருவாக் கினார். புதிய பொருள் பழையது ஆகத்தான் வேண்டும். லௌகீக தந்தை கூட புதிய வீடு கட்டு கின்றார் என்றால் அதுவும் நிச்சயம் பழையது ஆகும். தந்தை பழையதாக்கினார் என்பது கிடையாது. ஒவ்வொரு பொருளும் சதோபிரதான நிலையிலிருந்து தமோபிரதான நிலைக்கு அவசியம் வரும். அவ்வாறே முழு சிருஷ்டியும் புதியதிலிருந்து அவசியம் பழையதாக ஆகும். இப்பொழுது தேகத்தின் அனைத்து தர்மங்கள் முதலானவற்றை விட்டுவிட்டு, தன்னை ஆத்மா எனப் புரிந்து கொள்ளுங்கள். இப்பொழுது விளையாட்டு முடிவடைகிறது என்று தந்தை அனைத்து குழந்தை களுக்காகவும் கூறுகின்றார். இப்பொழுது வீட்டிற்குச் செல்ல வேண்டும் மறந்துவிடவில்லை தானே? நான் உங்களுக்கு எளிய இராஜயோகத்தைக் கற்பிப்பதற்காக வந்திருக் கின்றேன். நீங்களும் நானும் 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் சந்திந்திருந்தோம். நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தேன். நினைவு இருக்கிறது அல்லவா ! மறந்து விட வில்லை அல்லவா? நான் கல்ப கல்பமாக வந்து உங்களுக்கு இராஜ்யத்தைக் கொடுக்கின்றேன். உங்களை சோழியிலிருந்து வைரம் போல் ஆக்குகின்றேன். இந்த சக்கரத்திலிருந்து விடுபட முடியாதா? என்று குழந்தைகள் கேட்கின்றனர். முடியாது என்று தந்தை கூறுகின்றார். இந்த சிருஷ்டிச் சக்கரம் அனாதியானது. ஒருவேளை சக்கரத் திலிருந்து விடுபட்டுவிட்டால் பிறகு உலகமே முடிந்துவிடும். இந்தச் சக்கரமோ அவசியம் சுழலவேண்டும். நான் மீண்டும் வந்திருக்கின்றேன். கல்ப, கல்பமாக கல்பத்தின் சங்கமயுகத்தில் வந்து கொண்டே இருக்கின்றேன். அவர்கள் யுக யுகத்தில் வருவதாக எழுதிவிட்டனர். பதீத பாவனரே வாருங்கள் ! பாவனம் ஆக்குங்கள், சுகதாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறவும் செய்கின்றனர். பதீத உலகத்தில் துக்கமே துக்கமாக உள்ளது. நல்லது, என்னிடம் இரண்டு தாமங்கள் (இருப்பிடங்கள்) உள்ளன. எங்கே செல்வீர்கள்? தந்தை கூறுகின்றார் – சுகதாமத்தில் அதிகமான சுகம் உள்ளது. மற்றும் முக்திதாமம் சென்றாலும் கூட பாகம் ஏற்று நடிப்பதற்காக அவசியம் வர வேண்டும். ஆனால், எப்பொழுது சொர்க்கம் முடிவடையுமோ, அப்பொழுது கீழிறங்குவீர்கள். சொர்க்கத்திற்கு வரமாட்டீர்களா? உங்களுக்கு சொர்க்கம் செல்லும் ஆசை இல்லையா என்ன? நீங்கள் நரகத்தில் மாயையின் இராஜ்யத்தில் தான் வருவதற்கு விரும்புகிறீர்களா? அந்த சமயத்திலும் கூட முதலில் சதோ நிலை இருக்கும், பிறகு, ரஜோ, தமோ நிலை ஏற்படும். தூய்மையான ஆத்மா வந்தவுடன் முதலில் துக்கத்தை அடைய முடியாது. வந்த உடனேயே பாவம் செய்யவார்களா என்ன! ஆனால், ஆத்மா சதோ, ரஜோ, தமோ நிலையை கடந்துபோக வேண்டும். இந்தச் சக்கரத்தை யும் கூட புரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது நீங்கள் கடைசி நிலைக்குச் செல்ல இயலாது. பள்ளியில் கூட 12 மாதங்களுக்குப் பிறகு இறுதித் தேர்வு வைக்கப்படுகிறது அல்லவா! இறுதியில் உங்களுடைய நிலை பரிபக்குவம் ஆகிவிடும். மிகுந்த வளர்ச்சி ஏற்படும். எத்தனை கிளைகள் திறக்கப்பட்டு இருக்கின்றன! கிளை நிலையங்களைத் திறப்பதற்காக அதிகமானோர் வேண்டுகின்றனர். ஆனால், ஆசிரியைகள் அவ்வளவு பேர் தயார் ஆகவில்லை. முதல்தரமான ஷிஃப்ட் அமிர்தவேளை நேரம் ஆகும். ஒருவர் காலையில் வர இயலவில்லை என்றால் வேறுவழி இல்லாத நிலையில் மாலை யில் வரலாம். பள்ளியில் கூட இப்பொழுது இரண்டு முறை ஷிஃப்ட் உள்ளன. நல்லது. குழந்தைகள் புரிந்து கொண்டீர்கள்.

தந்தை அனைத்து கிளை நிலையங்களின் குழந்தைகளுக்கும் புரிய வைத்துக் கொண்டு இருக்கின்றார். குழந்தைகளே! இரவில் தனது தினசரி கணக்கு வழக்கைப் பாருங்கள். இன்று எனது பதிவேடு கெட்டுப் போகவில்லையே? எந்தத் தவறும் செய்யவில்லையே? பிறகு, தந்தையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சிவபாபா என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் எவ்வளவு இனியவர்! நான் உங்களை சொர்க்கத்தின் மாஸ்டர் பகவான், பகவதி ஆக்குகின்றேன், எனில் என்னுடைய கட்டளைகளைக் கேளுங்களேன் என்று பகவான் கூறுகின்றார். முதல் எண் கட்டளை ஆத்ம அபிமானி ஆகுங்கள் என்பதாகும். விகாரத்தில் செல்லக் கூடாது. இது மகா எதிரி ஆகும். இதன் மீது வெற்றி அடையவில்லை என்றால் பதவி குறைந்துவிடும், குலத்திற்கு களங்கம் ஏற்படுத்தி யவர்கள் ஆகிவிடுவார்கள். மாயை மிகவும் பலம் வாய்ந்தது. இது தீபம் மற்றும் புயலின் யுத்தம் ஆகும். இதில் துணிச்சலை வெளிப்படுத்த வேண்டும். நாம் தந்தையினுடையவர் ஆகியிருக் கிறோம். பிறகு, இந்த மாயை எவ்வாறு தடை ஏற்படுத்த முடியும்? ஆம், புயலைக் கொண்டு வரும், ஆனால், கர்மேந் திரியங்களால் ஒருபொழுதும் எந்த விகர்மமும் செய்யக் கூடாது. மிக உயர்ந்த பதவி கிடைக்கிறது அல்லவா ! கொஞ்சம் சிந்தனையும் செய்யுங்கள். நாங்கள் நரனிலிருந்து நாராயணர் ஆவதற்காகப் படிக்கிறோம் என்று நீங்கள் யாரிடமாவது கூறினீர்கள் என்றால் அனைவரும் சிரிப்பார்கள். இங்கே தாரணை இருக்க வேண்டும். இங்கே நான் ஆத்மா, ஆத்மா என்பதை நீங்கள் உறுதி ஆக்கவேண்டும். அப்பொழுதே சதோபிரதானம் ஆகி தந்தையிடம் செல்வீர்கள், பிறகு, தந்தை சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு வரிசைக்கிரமமான முயற்சியின் அனுசாரமாக பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. தன்னுடைய பதிவேடு கெட்டுவிடக் கூடாது என்பதில் கவனம் வைக்க வேண்டும். தந்தையின் கட்டளையை ஏற்று ஆத்ம அபிமானி ஆகவேண்டும். கர்மேந்திரியங்களால் எந்தவொரு தவறும் செய்யக் கூடாது.

2. சர்வகுண சம்பன்னம் ஆகுவதற்காக கர்மேந்திரியங்களால் விகர்மம் உருவாகிவிடும் படியான எந்த பாவச் செயலும் செய்யக் கூடாது. பழைய கணக்கு வழக்கை முடிக்க வேண்டும்.

வரதானம்:-

அமிர்தவேளையிலிருந்து இரவு வரை பிராமண குழந்தைகளாகிய உங்களுக்கு என்னவெல்லாம் சிரேஷ்ட பாக்கியம் கிடைத்திருக்கிறதோ, அந்த பாக்கியத்தின் பட்டியலை சதா முன்னால் வையுங்கள், மேலும் இதன் பாடலை பாடிக்கொண்டேயிருங்கள் – ஆஹா எனது சிரேஷ்ட பாக்கியம், பாக்கியத்தை தரக்கூடிய வள்ளலே என்னுடையவர் ஆகிவிட்டார். இந்த போதையில் எப்பொழுதும் குஷியில் நடனமாடுங்கள். என்ன நடந்தாலும் சரி, இறக்கும் நிலையே வந்தாலும் சரி குஷி மறையக் கூடாது. உடல் போனால் போகட்டும், ஆனால் குஷி போகக் கூடாது.

சுலோகன்:-

தாதி பிரகாஷ்மணி அவர்களின் 15-ம் ஆண்டு நினைவு நாளன்று அவர்களுடைய விலைமதிப்பிட முடியாத மகாவாக்கியங்கள் சம்பன்னத்தா (முழுமைத்தன்மை) மற்றும் சம்பூரணத்தன்மையின் (நிரம்பிய நிலை) அருகாமையின் அடையாளங்கள்

1. ஆத்மா எந்தளவு முழுமை அடைந்துக் கொண்டே செல்கிறதோ, அந்தளவு மனம்-சொல்- செயலில் எந்தவிதமான சூட்சமமான விகாரங்களும் இருக்காது. அவர்களுக்கு சம்பூரணத் தன்மை யின் இலக்கு நெருக்கத்தில் தென்படும்.

2. மனம்-சொல்-செயலினால் சதா அஹிம்சைவாதியாக இருப்பார்கள். ஒருபொழுதும் யாருக்கும் துக்கத்தை தரவும் மாட்டார்கள், துக்கத்தை எடுக்கவும் மாட்டார்கள். எப்போது துக்கத்தை கொடுப்பது, துக்கத்தை எடுப்பது முடிவடைகிறதோ, அப்பொழுது சம்பூரணத்தன்மை நெருக்கத்தில் வந்து விடுகிறது.

3. யார் சம்பூரணத்தன்மையின் அருகாமையில் இருக்கிறார்களோ, அவர்கள் எல்லைக்கு அப்பாற் பட்ட வைராக்கியாக இருப்பார்கள். அவர்களுக்கு எதன் மீதும் ஈடுபாடு இருக்காது, அனைவரிடத்திலிருந்தும் பற்றுதல் அழிந்து விடும். அவர்கள் அனைவருக்கு மத்தியில் இருந்தாலும் விடுபட்டவராகவும், அன்பானவராகவும் இருப்பார்கள்.

4. அவர்களை எந்தவிதமான பழைய பொருள், தத்துவங்கள் உட்பட அனைத்தும் தன் பக்கம் கவர்ந்திழுக்காது. அவர்கள் சதா ஒரு பாபாவின் ஈர்ப்பில் தான் இருப்பார்கள். புத்தியில் ஒரு பாபாவின் நினைவு அதாவது ஒருமுகப்படுத்தப்பட்ட மனநிலை (உள்ளுணர்வு) இருக்கும்.

5. அவர்கள் தன்னிடமும் திருப்தியாக இருப்பார்கள், மற்றவர்களையும் திருப்திப்படுத்துவார்கள். அவர்கள் படிப்பின் நான்கு பாடங்களிலும் முழுமையான கவனம் இருக்கும்.

6. அவர்கள் சாட்சி நிலை என்ற மனநிலையில் இருப்பார்கள். சதா துணைவனின் துணையை அனுபவம் செய்வார்கள். தேக அபிமானத்தின் புத்தியினால் அதாவது பழைய பழக்க வழக்கங்கள் மூலம் யாருக்கும் துக்கத்தை தர மாட்டார்கள். பார்வை, உள்ளுணர்வில் ஆன்மீகத்தன்மை மற்றும் அலௌகீகத்தன்மை இருக்கும்.

7. தூய்மையில் முழுமையாக இருப்பார்கள், பிரம்மசரியம் மட்டுமல்ல. ஆனால் பிரம்மாசாரியாக இருப்பார்கள். எவரிடத்திலும் அவர்களுடைய கண்கள் மூழ்காது. ஏனெனில் நான் யாருடைய குழந்தை என்ற போதை அவருக்கு இருக்கும்.

8. அவர்கள் எவருடைய அவகுணங்களையும் மனதில் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் எவருடைய அவகுணங்களையும் பார்க்க மாட்டார்கள். பழைய நடத்தை, பழைய சம்ஸ்காரத்தின் பக்கம் புத்தி போகாது. அவர்கள் எப்பொழுதும் சுய சிந்தனையில் இருப்பார்கள்.

9. சாகார பாபா எப்பொழுதும் தன்னை உலக சேவாதாரி என்று கூறினார், அதுபோல எந்தளவு மகானாக இருந்தாரோ, அந்தளவு பணிவாக இருந்தார். நிராகார், நிர் அகங்காரி, அவ்வாறு எப்பொழுதும் தன்னை சேவாதாரியாக புரிந்து கொள்வது, இதுவும் சம்பூரணத்தன்மையின் அடை யாளமாகும்.

10. அவர் தன்னை எப்பொழுதும் நிமித்தமாக புரிந்து கொள்வார். மகிமையை (புகழ் – பாராட்டுகளை) ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார். அவசியம் மகிமை ஏற்படும், ஏனெனில் சேவை செய்தார். ஆனால் நிமித்தம் எனப் புரிந்து கொண்டதன் காரணத்தினால் வாயிலிருந்து பாபா, பாபா என்று தான் வெளிவரும். அவர் மகிமையை கேட்டு குஷி அடையமாட்டார். மற்றும் நிந்தனையை கண்டு பயப்படவும் மாட்டார். இரண்டிலும் சமமான மனநிலையில் இருப்பார்.

11. அவர் அனைவருடைய தொடர்பையும் ஒரே ஒரு பாபாவுடன் தான் இணைப்பார். அவருடைய வாயிலிருந்து பாபாவுக்காக அன்பான வார்த்தைகள் தான் வெளிவரும். அன்பான தந்தை நமக்கு நமது மிகவும் அன்பான பொருளான திவ்ய புத்தி என்ற வெகுமதியை கொடுத்திருக்கின்றார். அவர் அந்த வெகுமதியை பத்திரமாக பாதுகாத்து வைப்பார்.

12. ஞானத்தின் மூன்றாவது கண் சதா திறந்தே இருக்கும், ஞானத்தின் கண் திறந்திருக்கும் காரணத்தினால் எப்பொழுதும் சக்திசாலியான எண்ணங்கள் தான் ஓடிக் கொண்டிருக்கும். இதுவும் சம்பூரணத்தன்மையின் அடையாளமாகும்.

13. அவருடைய ஒவ்வொரு செயலும் ஸ்ரீமத்திற்கு உட்பட்டு இருக்கும். ஸ்ரீமத்தில் மனதின் வழிமுறையை ஒருபோதும் கலப்படம் செய்ய மாட்டார்கள். தெய்வீக புத்தியின் ஆதாரத்தில் ஒவ்வொரு காரியமும் நடந்து கொண்டு இருந்தால், இதுவும் சம்பூரணத்தன்மையின் அடை யாளமாகும்.

14. அவர் கட்டளைக்கு கீழ்படிந்தவராக, நேர்மையானவராக இருப்பார். ஒரே பலம், ஒரே நம்பிக்கை, அனைத்து தொடர்பும் ஒருவரிடத்தில், எங்கும் தலைகுனிய மாட்டார், அதுபோன்ற பற்றுதல், தலைகுனிவிலிருந்து விடுபட்டு இருப்பார்.

15. அவர்களுக்கு எப்படிப்பட்ட சூழ்நிலையானாலும், எதுவும் புதியதல்ல என்று தோன்றும். 5000 வருடத்தின் விஷயமானது நேற்று நடந்ததை போன்று அனுபவமாகும். நல்லது. ஒம்சாந்தி

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top