24 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

November 23, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! நீங்கள் இங்கே இராஜ்யத்திற்கான அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்ள வந்துள்ளீர்கள், எந்த அளவு நினைவு செய்வீர்களோ, படிப்பின் மீது கவனம் கொடுப்பீர்களோ அந்த அளவு அதிர்ஷ்டம் உயர்வானதாக ஆகிவிடும்.

கேள்வி: -

சங்கமத்தில் நீங்கள் எந்த ஸ்ரீமத் (தந்தையின் வழியைக்) கேட்டு கடைபிடித்து 21 பிறவி களுக்கு தம்முடைய அதிர்ஷ்டத்தை உயர்வாக ஆக்கிக் கொள்கிறீர்கள்?

பதில்:-

சங்கம யுகத்தில் தந்தையின் ஸ்ரீமத் – இனிமையான குழந்தைகளே, நிர்விகாரி (விகாரமற்ற வர்களாக) ஆகுங்கள். ஆத்ம அபிமானி ஆவதற்கான முழுமையிலும் முழுமையான முயற்சி செய்யுங்கள். ஒருபோதும் எந்த பாவ கர்மமும் செய்யாமல் இருந்தால் 21 பிறவிகளுக்கு அதிர்ஷ்டம் உயர்வானதாக ஆகிவிடும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

அதிர்ஷ்டத்தை உருவாக்கி வந்துள்ளேன். .

ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் இந்தப் பாடலைக் கேட்டீர்கள். இப்போது இந்த இரண்டு வரிகளின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருப்பவர்கள் கை உயர்த்துங்கள்? அதிர்ஷ்டத்தை உருவாக்கி வந்துள்ளேன் – இதனை யார் சொன்னது? ஆத்மா. அனைவருடைய ஆத்மாவும் சொல்கிறது – அதிர்ஷ்டத்தை உருவாக்கி வந்துள்ளேன் என்று, என்ன அதிர்ஷ்டம்? புதிய உலகிற்குச் செல்வதற்கான அதிர்ஷ்டம். சொர்க்கம் என்பது புதிய உலகமாகும். இந்த பழைய உலகம் நரகமாகும். ஆக இந்த அனைத்து ஆத்மாக்களும் சொல்கின்றனர். ஆத்மாவுக்கு கண்டிப்பாக சரீரம் தேவைப்படுகிறது. அப்போதுதான் பேச முடியும். நாங்கள் பள்ளியில் அதிர்ஷ்டத்தை உருவாக்க வந்துள்ளோம் என ஜீவாத்மாக்கள் சொல்கின்றனர். படிப்பிக்கக் கூடியவர் யார்? சிவபாபா, ஞானக்கடல். மனிதர்களை தேவதைகளாக, தூய்மையற்றவர்களை தூய்மையானவர் களாக, நரகவாசிகளை சொர்க்கவாசிகளாக ஆக்கக் கூடியவர் அந்த ஒரு தந்தையே ஆவார். இந்த நரகத்தில் தீப்பிடிக்கப் போகிறது. உலகில் எந்த பள்ளியிலும் நாங்கள் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடம் வந்துள்ளோம் என குழந்தைகள் சொல்வதில்லை அல்லது தந்தையாக இருக்கிறேன், ஆசிரியராகவும் இருக்கிறேன், குருவாகவும் இருக்கிறேன் என சொல்பவர்களும் யாரும் கிடையாது. இந்த பிரம்மா கூட சொல்ல முடியாது. ஒரு சிவபாபா மட்டுமே சொல்கிறார் – நான் அனைவரின் தந்தை, ஆசிரியர், குருவாக இருக்கிறேன். அவர்தான் அமர்ந்து கற்பிக்கிறார். ஆக, இப்போது குழந்தைகள் அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் புதிய உலகின் இராஜ்யத்தின் அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்ள வந்துள்ளோம், இந்த பழைய உலகம் முடிய வேண்டியுள்ளது என்பது எங்களுக்குத் தெரியும் என குழந்தைகள் சொல்கின்றனர். தந்தை வந்து புதிய உலகை ஸ்தாபனை செய்கிறார். நீங்கள் 21 பிறவிகளுக்கு இராஜ்ய பாக்கியத்தை எடுப்பதற்காக படிக்கின்றீர்கள். அதாவது நீங்கள் இராஜ்யம் அடைவதற்கான அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்ள வந்துள்ளீர்கள். இங்கே இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இந்தப் பாடல் அந்த நாடகத்தைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டது, ஆனால் இதன் அர்த்தம் புரிய வைக்கப்படுகிறது. தந்தை அனைத்து வேத, சாஸ்திரங்களின் சாரத்தை அமர்ந்து புரிய வைக்கிறார். இந்த சமயம் முழு உலகிலும் பக்தி உள்ளது. சத்யுகத்தில் பக்தி, கோவில் முதலானவை இருப்பதில்லை. நீங்கள் அரைக் கல்ப காலம் பக்தி செய்தீர்கள், இப்போது பகவான் கிடைத்து விட்டார். முதன் முதலில் பாரதத்தில் இந்த தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது, பிறகு 84 பிறவிகள் எடுத்து எடுத்து அதிர்ஷ்டம் கெட்டுப் போய் விட்டது. இப்போது மீண்டும் அதிர்ஷ்டத்தை உருவாக்குகிறார். தந்தை வந்ததே அதிர்ஷ்டத்தை உருவாக்குவதற்காக. என்னை நினைவு

செய்யுங்கள் என குழந்தைகளுக்குச் சொல்கிறார். நீங்கள் மிகவுமே பாவாத்மாக்களாக ஆகி விட்டுள்ளீர்கள். முதன் முதலில் சிவபாபாவுக்கு பக்தி செய்யப்படுகிறது, அது அவிபசாரி (கலப் படமற்ற) பக்தி ஆகும். பிறகு பக்தியும் கூட விபசாரியாக (பலரை நினைவு செய்தல்) ஆகி விடுகிறது. ஆக, யார் பகவான் என சொல்லப்படுகிறாரோ அவர் நமக்கு கற்பிக்கிறார் என குழந்தைகளுக்கு முதன் முதலில் இந்த நிச்சயம் இருக்க வேண்டும். அவருக்கு எந்த சரீரமும் கிடையாது, அவர் இந்த சரீரத்தில் அமர்ந்து பேசுகிறார் – உங்களுடைய ஆத்மா எப்படி இந்த சரீரத்தில் வருவதன் மூலம் பேசத் தொடங்குகிறதோ அப்படி பேசுகிறார். சில சமயம் மனிதர்கள் இறந்து போகின்றனர், பிறகு மயானத்திற்கு எடுத்துச் செல்லும்போது அசையத் தொடங்கு கின்றனர். ஆத்மா சென்று பிறகு வந்தது என்பதல்ல. ஆத்மா முற்றிலும் சூட்சுமமானது அல்லவா, ஆக எங்கோ மறைந்து விட்டிருந்தது. சுய நினைவற்றிருந்தது, யாருக்கும் தெரிய வில்லை என சொல்லலாம். இப்படி அவ்வப்போது நடந்து விடுகிறது. சிதையிலிருந்தும் கூட எழுந்து விடுகின்றனர், பிறகு அவரை எழுப்பிக் கொள்கின்றனர். ஆக இது எதைக் குறிக்கிறது? ஆத்மா எங்கோ மறைந்திருந்தது. பிறகு தனது இடத்திற்கு வந்து விட்டது. ஆத்மா இல்லாவிட்டால் சரீரம் முற்றிலும் சவமாகி விடுகிறது. ஆக, ஆத்மாக்களின் தேசம் பரமதாமம் ஆகும். நாம் அங்கே அந்த வீட்டில் வசிப்பவர்களாக இருந்தோம். முதன் முதலில் ஆத்மாக்களாகிய நாம் (பரந்தாமம்) வீட்டிலிருந்து சத்யுகத்தில் வந்தோம். தேவி தேவதைகளாக இருந்த பாரதவாசிகள்தான் வந்திருப் பார்கள். உண்மையில் எந்தெந்த தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றனரோ, அவை கடைசி வரை நிலைத்திருக்கும். புத்த தர்மம் நிலையாக இருக்கும். கிறிஸ்தவ தர்மம் நிலைத்திருக்கும். இராஜ்யம் செய்து கொண்டிருந்த தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்களின் பெயரே மறைந்து விட்டது. தம்மை தேவி-தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் யாரும் கிடையாது.

பாரதவாசிகள் தம்முடைய தர்மத்தை மறந்து விட்டுள்ளனர் என தந்தை புரிய வைக்கிறார். நம்முடைய இல்லற தர்மம் தூய்மையாய் இருந்தது. சம்பூரண நிர்விகாரியாக மகாராஜா-மகாராணியின் இராஜ்யம் இருந்தது. அவர்களை பகவதி லட்சுமி, பகவான் நாராயணர் என சொல் கின்றனர். உண்மையில் பகவான் ஒருவரே, அவர்தான் ஞானக்கடல் என சொல்லப்படுகிறார். இந்த லட்சுமி நாராயணருக்குள் எந்த ஞானமும் கிடையாது. ஞானக்கடல் ஒரே ஒரு சிவபாபா தான். அவர் அமர்ந்து குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் கொடுக்கிறார். நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்தப் படிப்பை பிறகு அங்கே மறந்து விடுவீர்கள். நம்முடைய ஆத்மாவில் 84 பிறவிகளின் பதிவுகள் நிறைந்திருக்கின்றன என்பதை இப்போது நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆத்மா இப்போது ஞானத்தை எடுத்துக் (கற்றுக்) கொண்டிருக்கிறது. பிறகு சத்யுகத்தில் சென்று தன்னுடைய இராஜ்ய பாக்கியத்தை செயல்படுத்துவீர்கள். நாம் 84 பிறவி களின் சக்கரத்தைச் சுற்றினோம் என நீங்கள் சொல்வீர்கள். இப்போது பாபாவிடமிருந்து நாம் சொர்க்கத்தின் இராஜ்யத்தை அடைந்துக் கொண்டி ருக்கிறோம். அனைவருமே அந்த தாத்தா சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி அடைகின்றனர் – ஆனால் அவரவருடைய முயற்சியின் அடிப் படையில். இதில் பாகப்பிரிவினை (பகிர்ந்தளிப்பு) எதுவும் கிடையாது. அஞ்ஞான காலத்தில் பாகம் பிரிக்கப்படுகிறது அல்லவா. நான் வைகுண்டத்தை ஸ்தாபனை செய்கிறேன் என எல்லைக்கப் பாற்பட்ட தந்தை சொல்கிறார். அதில் உயர் பதவியை அடைவது என்பது உங்களின் முயற்சியின் ஆதாரத்தின் படி. எந்த அளவு தந்தையை நினைவு செய்வீர்களோ அந்த அளவு பாவ கர்மங்கள் வினாசமடையும். தூய்மை அடைவீர்கள். தங்கத்தை (பட்டியில்) உளையில் போடுகின்றனர் அல்லவா. அப்போது அதிலிருந்து கறை (கலப்படம்) நீங்கி உண்மையான தங்கக்கட்டியாக ஆகி விடுகிறது. இந்த ஆத்மா (பிரம்மா) கூட உண்மையான தங்கமாக இருந்தது. இங்கே நடிப்பை நடிக்க

வருகிறது. முதலில் தங்க யுகத்தினுடையதாக இருந்து, பிறகு முதலில் வெள்ளியின் கலப்படம் ஆகிறது. ஆத்மா கொஞ்சம் தூய்மையற்றதாக ஆகி விடுகிறது, பிறகு போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக தரம் குறைந்தபடி செல்கிறது. வீடு கூட முதலில் புதியதாக இருந்து, பிறகு போகப் போக பழையதாக ஆகிக் கொண்டே செல்கிறது. 100 வருடங்களுக்குப் பிறகு பழையது என சொல்வார்கள். அது போல உலகமும் கூட புதியதாக மற்றும் பழையதாக ஆகிறது. இன்றிலிருந்து 5000 வருடங்களுக்கு முன்பு புதியதாக இருந்தது, இந்த தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது, அது எங்கே சென்றது? 84 பிறவிகள் அனுபவித்து அனுபவித்து பழையதாக ஆகி விட்டது. ஆத்மாவும் அழுக்கடைந்து, கூடவே சரீரமும் அழுக்கானதாக ஆகிவிட்டது. அழகாக இருந்து கருப்பாக ஆகிவிட்டனர். கிருஷ்ணரையும் கூட வெள்ளையாகவும் கருப்பாகவும் காட்டுகிறோம் அல்லவா. கால் நரகத்தின் பக்கமும் முகத்தை சொர்க்கத்தின் பக்கமாகவும் காட்ட வேண்டும். நீங்களும் அந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களே. உங்களுடைய கால் நரகத்தின் பக்கமும் முகம் சொர்க்கத்தின் பக்கமும் உள்ளது. இப்போது நீங்கள் முதலில் நிர்வாண தாமத்திற்குச் சென்று பிறகு சொர்க்கத்தில் வரப் போகிறீர்கள். கலியுகத்திற்கு தீப்பிடிக்கப் போகிறது. அடை மழைபோல ஏவுகளைகளின் தாக்குதல், நெருப்பு, நில நடுக்கம் போன்றவை ஏற்படும். தூய்மையற்ற ஆத்மாக்கள் அனைவரும் கணக்கு வழக்கை முடித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். மீதி கொஞ்சம் பேர் தங்கியிருப்பார்கள். தூய்மையான ஆத்மாக்கள் வந்தபடி இருப்பார்கள். இப்போது அனைவருமே முட்களாக உள்ளனர். காமக் கோடரியை வீசுவது முள்ளாகி குத்துவது போலாகும். இங்கேயோ தந்தை சொல்கிறார் – சம்பூரண நிர்விகாரி ஆக வேண்டும். என்னை நினைவு செய்தால் நான் உங்களுக்கு சொர்க்கத்தின் ஆஸ்தியைக் கொடுப்பேன், நீங்கள் தூய்மை யடைந்து விடுவீர்கள் என தந்தை சொல்கிறார். நீங்கள் தூய்மையாக இருந்தபோது இல்லற விஷயங்களும் தூய்மையாக இருந்தன. இப்போது நீங்கள் தூய்மையற்றவராக ஆகிவிட்டீர்கள், எனவே இல்லறமும் தூய்மையற்றதாக விகாரம் நிறைந்ததாக உள்ளது. சத்யுகத்தில் விவாகாரங்கள் மற்றும் தொழில் உண்மையானதாக நடக்கும். அங்கே பொய் முதலானவை பேசக்கூடிய அவசியம் இருப்பதில்லை, எப்போது நிறைய செல்வத்தை சம்பாதிக்கும் பேராசை வருகிறதோ அப்போது பொய் பேசப்படுகிறது. அங்கேயோ அளவற்ற செல்வங்கள் கிடைக்கும். தானியங்கள் முதலானவற்றிற்கு விலை ஏதும் இருக்காது. அங்கே யாருமே ஏழையாக இருக்க மாட்டார்கள், யார் நல்ல முயற்சி செய்வார்களோ அவர்கள் மகாராஜாவாக ஆவார்கள். வைர வைடூரியங்களால் ஆன மாளிகைகள் கிடைக்கும். முழுமையாக முயற்சி செய்யாவிட்டால் பிரஜைகளில் சென்று விடுவீர்கள். ராஜா-ராணி, இளவரசன் – இளவரசி என முழுமையான குடும்பம் இருக்குமல்லவா. பிறகு பிரஜைகளிலும் வரிசைக்கிரமமாக பணக்கார மற்றும் ஏழை பிரஜைகள் இருப்பார்கள். அங்கே அனைவருமே தூய்மையாய் இருப்பார்கள். ராஜா-ராணி, மந்திரி கூட ஒருவர் மட்டுமே. அங்கே நிறைய மந்திரிகள் இருக்க மாட்டார்கள். ராஜாவிடம் இராஜ்யத்தை நடத்துமளவுக்கு சக்தி இருக்கும். ஆக, தந்தை புரிய வைப்பது போல குழந்தைகளும் பிறருக்கு புரிய வைக்க வேண்டும். பாரதவாசிகளான நாம் தேவி தேவதைகளாக இருந்தோம். சத்யுகத்தில் நம்முடைய இராஜ்யம் இருந்தது. இல்லற விஷயங்களில் நாம் தூய்மையாக இருந்தோம். சொர்க்க வாசிகளாக இருந்தோம், பிறகு நரக வாசிகளாக ஆவதற்கு 84 பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கும். ஏணியில் மிகவும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. நாம் சென்று சொர்க்கத்தில் இராஜ்யம் செய்வோம் என இப்போது புத்தியில் வந்துள்ளது. இப்போது தந்தையிடம் ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கிறோம். தந்தைதான் சத்தியத்தை உரைத்து நரனிலிருந்து நாராயணராக ஆக்குகிறார். சத்ய நாராயணரின் கதையைக் கேட்கும் அந்த மனிதர்கள் யாரும் நரனிலிருந்து நாராயணன் ஆவதில்லை. ஆக அது பொய்யான கதையல்லவா. இங்கே நீங்கள் அமர்ந்திருப்பதே நரனிலிருந்து

நாராயணன் ஆவதற்காக, அவர்கள் தூய்மையடையுங்கள், என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என சொல்வதில்லை. சத்ய நாராயணனின் கதையை பௌர்ணமியன்று சொல்கின்றனர். இப்போது இந்த சமயத்தில் பௌர்ணமியை 16 கலைகள் நிறைந்த சந்திரன் என சொல்கிறோம். முடிவில் சந்திரனின் மெல்லிய கோடு மட்டும் மிகுந்திருக்கும். அதனை அமாவாசை என சொல்கின்றனர். அமாவாசை என்றால் காரிருளின் இரவு. சத்யுகம், திரேதாவை பகல், துவாபர, கலியுகம் இரவு என சொல்லப்படுகிறது. இந்த அனைத்து விஷயங்களும் புரிந்து கொள்ள வேண்டியவை ஆகும். இதனை சிவபாபா அமர்ந்து படிப்பிக்கிறார். அவர் தந்தையாகவும் உள்ளார், ஆசிரியராகவும், குருவாகவும் உள்ளார். இவருக்குள் (பிரம்மாவுக்குள்) பிரவேசமாகி ஆத்மாக் களுக்கு ஞானம் கற்பிக்கிறார்.

எப்படி இவருடைய ஆத்மா புருவ மத்தியில் அமர்ந்திருக்கிறதோ அதுபோல நானும் வந்து இங்கே அமர்கிறேன். அமர்ந்து உங்களுக்குப் புரிய வைக்கிறேன். நீங்கள் முதலில் தூய்மையாக இருந்தீர்கள், பிறகு தூய்மையற்றவராக ஆகிவிட்டீர்கள். இப்போது தந்தையான என்னை நினைவு செய்யுங்கள், தூய்மையடையாமல் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியாது. தூய்மையடைந்தால் அப்போது பறந்து செல்வீர்கள். பதித பாவனா வாருங்கள், தூய்மையாக்குங்கள், அப்போது நாங்கள் பறந்து செல்வோம் என அனைவரும் அழைக்கின்றனர். தூய்மையற்றவர்கள் வீட்டிற்குச் செல்ல முடியாது. யார் நல்ல விதமாக படிப்பை தாரணை செய்கின்றனரோ அவர்கள் விரைவாக சொர்க்கத்திற்கு வருவீர்கள், இல்லாவிட்டால் தாமதமாக வருவீர்கள். புதிய வீட்டிற்கு வர வேண்டும் அல்லவா. புதிய வீட்டில் மகிழ்ச்சி இருக்கிறது அல்லவா. முதன் முதலில் சத்யுகத்தில் வரவேண்டும். மம்மா பாபா சத்யுகத்தில் வருகின்றனர், பிறகு நாம் ஏன் தாமதமாகச் செல்ல வேண்டும்? நீங்களும் பிரம்மாவை பின்பற்றுங்கள். தந்தையை நினைவு செய்தபடி இருங்கள். ஏதாவது விஷயத்தில் கஷ்டம் தெரிந்தது என்றால் சிவபாபாவிடம் கேளுங்கள். ஸ்ரீமத் மூலமே உயர்வானவர்களாக ஆவீர்கள். பழைய உலகத்திலோ ஐந்து விகாரங்களின் ரூபமான இராவணனின் வழிப்படி நடந்து வந்தீர்கள். முதன் முதலில் இருப்பது தேக அபிமானம். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம அபிமானி ஆக வேண்டும். ஆத்மாவாகிய நான் பரமதாமத்தில் வசிக்கக் கூடியவன், அது சாந்திதாமம் எனப்படுகிறது. இப்படிப்பட்ட விஷயங்களை வேறு யாரும் புரிய வைக்க முடியாது. தந்தைதான் புரிய வைக்கிறார், உங்களுடைய ஆத்மா இந்த கர்மேந்திரி யங்களின் மூலம் கேட்கிறது. சத்யுகத்தில் ஒருபோதும் சரீரம் கெட்டுப் போவதே இல்லை. இங்கேயோ அமர்ந்தபடியே அகால மரணம் ஏற்பட்டு விடுகிறது. சத்யுகத்தில் இப்படிப்பட்ட எந்த விஷயமும் நடப்பதில்லை, அது சொர்க்கம் என சொல்லப்படுகிறது. பிறகு நாம் சக்கரத்தைச் சுற்றி வந்து மறுபிறவிகள் எடுத்து எடுத்து 84 பிறவிகளின் சக்கரத்தை சுற்றி முடித்துள்ளோம், பிறகு தந்தை வந்து குழந்தைகளை சொர்க்கத்திற்குத் தகுதி வாய்ந்தவர்களாக ஆக்குகிறார். இப்போது நீங்கள் புதிய உலகிற்கு தகுதி வாய்ந்தவர்களாக ஆகியுள்ளீர்கள். இப்போது உள்ளது நரகமாகும். இப்போது நீங்கள் நரகவாசியிலிருந்து சொர்க்கவாசிகளாக ஆவதற்கான அதிர்ஷ்டத்தை உருவாக்கி கொள்ள வந்துள்ளீர்கள். நாங்கள் சிவபாபாவிடம் அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்ள வந்துள்ளோம். ஒவ்வொரு கல்பத்திலும் 5 ஆயிரம் வருடங்ளுக்குப் பிறகு நாங்கள் அதிர்ஷ்டத்தை உருவாக்குகிறோம். நாங்கள் சொர்க்க வாசிகளாக ஆகிறோம், பிறகு இராவண இராஜ்யம் தொடங்கும்போது நாங்கள் விகாரிகளாக ஆகி விடுகிறோம். இப்போது அனைவரும் விகாரிகளாக தூய்மையற்றவர்களாக உள்ளனர், இப்போது நீங்கள் வந்து புதிய உலகை ஸ்தாபனம் செய்கிறீர்கள் என (குழந்தைகள்) பாபாவிடம் சொல்கின்றனர். புதிய உலகில் குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே இருப்பீர்கள். மற்ற அனைவரும் சாந்தி தாமத்திற்குச் சென்று விடுவார்கள். மேலே ஆத்மாக்களின் மரம் உள்ளது. பிறகு அவரவருக்கான சமயங்களில் வருவார்கள். நம்முடைய இராஜ்யம்

இருக்கும்போது வேறு தர்மத்தவர்கள் இருக்க மாட்டார்கள். பிறகு துவாபரத்தில் இராவண இராஜ்யம் தொடங்கும். இந்த அனைத்து விஷயங்களையும் நல்ல விதமாக தாரணை செய்ய வேண்டும். இங்கே நரகவாசியிலிருந்து சொர்க்கவாசியாக ஆக வேண்டும். நரகவாசி மனிதர்களை அசுரர்கள் எனவும் சொர்க்கவாசி மனிதர்களை தேவதை எனவும் சொல்லப்படுகிறது. இப்போது அனைவருமே அசுர சுபாவமுள்ளவர்களாக இருக்கின்றனர். இப்போது தந்தை அமர்ந்து முயற்சி செய்வித்துக் கொண்டிருக்கிறார். தூய்மையடையுங்கள் என தந்தை சொல்கிறார். அனைத்து விஷயத்திலும் அறிவுரை கேட்டு நடந்து கொள்ளுங்கள். பாபா வேலை செய்யுமிடத்தில் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது, பொய் சொல்வதன் மூலம் கொஞ்சம் பாவம் ஏற்பட்டு விடுமே என சிலர் கேட்கின்றனர். அவர்கள் தந்தையை நினைவு செய்தபடி இருந்தார்கள் என்றால் பாவங்கள் நீங்கிவிடும். இன்றைய உலகில் அனைவருமே பாவம் செய்தபடி இருக்கின்றனர். எவ்வளவு லஞ்சம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த கண்காட்சி சித்திரங்கள் (உலக) வரைபடங்கள் (மேப்) போன்றதாகும். இப்படிப்பட்ட வரைபடங்கள் எங்கும் இருக்காது. ஒருவேளை யாராவது காப்பியடித்து உருவாக்கினாலும் கூட அதன் அர்த்தத்தை கொஞ்சமும் புரிந்து கொள்ள முடியாது. கண்காட்சி, விழாக்களின் சமயத்தில் நிறைய பேர் வருகின்றனர். 7 நாட்களுக்கு புரிந்து கொள்வதற்காக வந்தீர்கள் என்றால் நீங்கள் சொர்க்கவாசி ஆவதற்கு தகுதி வாய்ந்தவராக ஆகி விடுவீர்கள் என சொல்லப்படுகிறது. இப்போது நரகவாசிகளாக இருக்கிறீர்கள், ஏணிப்படிகளின் படத்தில் பாருங்கள், எவ்வளவு தெளிவாக உள்ளது. இது அசுத்தமான உலகம், பாவன (தூய்மை யான) உலகம் மேலே இருக்கிறது.

பாபா நாங்கள் நரகவாசியிலிருந்து சொர்க்கவாசியாக கண்டிப்பாக ஆகிவிடுவோம் என இப்போது குழந்தை களாகிய நீங்கள் சிவபாபாவிடம் வாக்குறுதி கொடுக்கிறீர்கள். இப்போது சிவாலயத் திற்குச் செல்வதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதால் விகாரத்தில் ஒருபோதும் செல்லக் கூடாது. மாயையின் புயல் காற்றுகள் நிறைய வரும் ஆனால் தூய்மையற்றவராக ஆகக் கூடாது. தூய்மையற்றவராக ஆகி விட்டால் பெரிய தவறு ஏற்பட்டுவிடும், பிறகு தர்மராஜாவின் மிகப் பெரிய தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. மனிதரிலிருந்து தேவதையாவதற்காக தன்னிடம் இருக்கக் கூடிய அசுர சுபாவங்கள், பொய் பேசும் பழக்கம் போன்றவைகளை தியாகம் செய்ய வேண்டும். தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும்.

2. வீட்டிற்குச் செல்வதற்காக கண்டிப்பாக தூய்மையடைய வேண்டும். மாயையின் புயல்கள் வந்தாலும் கர்மேந்திரியங்கள் மூலம் எந்த பாவ கர்மமும் செய்யக் கூடாது.

வரதானம்:-

யாருடைய சங்கல்பம் அல்லது கனவில் கூட பாபா, பாபாவின் காரியம், பாபாவின் மகிமை, பாபாவின் ஞானம் தவிர வேறு எதுவும் தென்படாமல் இருக்கிறதோ, அவர் தான் முழுமையாக நம்பிக்கைக்குரியவர் எனச் சொல்லப் படுவார். ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை புத்தியின் ஈடுபாடு சதா இந்த ஒரு சேர்க்கையில் மட்டுமே இருக்குமானால் அநேக சேர்க்கைகளின் நிறம் படிய முடியாது. ஆகவே முதல் உறுதி மொழி – மற்ற சகவாசங்களை விட்டு ஒரு சகவாசத்தை இணைத்தல் – இந்த உறுதிமொழியை நிறைவேற்றுவது என்றால் சம்பூர்ண நம்பிக்கைக்குரியவர் ஆவதாகும்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top