24 August 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

August 23, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! எது வரை உயிருடன் இருந்து வாழ்கிறோமோ அதுவரை தூய்மையின் உறுதியான விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், ஏனென்றால் இது கடைசி பிறவியாகும், தூய்மையடைந்து தூய்மையான உலகிற்குச் செல்ல வேண்டும்.

கேள்வி: -

தந்தையின் அன்பு மற்றும் அதிகாரம் எந்தக் குழந்தைகள் மீது இருக்கிறது?

பதில்:-

நல்ல விதமாக படித்து, படிக்க வைத்து நிரூபிக்கக் கூடியவர்கள் மீது. அவர்களின் மீது தந்தைக்கு அனைவரை விடவும் அதிக அன்பு இருக்கும். நல்ல விதமாக படிப்பவர்கள் தான் மாலையில் கோர்க்க ப்படுவார்கள்.

கேள்வி: -

எதிர்காலத்தின் தேவ பதவியை பிராப்தி செய்வதற்காக தனக்குள் எதனை சோதிக்க வேண்டும்?

பதில்:-

தெய்வீக குணங்களை தாரணை செய்வதில் என்னென்ன தடைகள் வருகின்றன என சோதனை செய்ய வேண்டும், அந்த தடைகளை யுக்தியுடன் விரட்ட வேண்டும். நாம் எந்த அளவு தூய்மையானவராக ஆகியுள்ளோம், எந்த முள்ளும் என்னை தடுத்து நிறுத்தி விடவில்லைதானே என்று என தன்னைப் பார்க்க வேண்டும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

ஆகாய சிம்மாசனத்தை விட்டு வாருங்கள் .

ஓம் சாந்தி. பக்தர்கள் பகவானை அதாவது தந்தையை அழைக்கின்றனர், ஏன் அழைக்கின்றனர்? ஏனென்றால் துக்கம் மிக்கவர்களாக இருக்கின்றனர். /துக்கத்திற்குப் பிறகு சுகம் கண்டிப்பாக வர வேண்டும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சுகம் இருந்தது, இப்போது இல்லை, மீண்டும் வந்து சகஜ இராஜயோகத்தைக் கற்பியுங்கள் என அழைக்கின்றனர். கற்பிக்கக் கூடிய தந்தை கண்டிப்பாக வேண்டும். எப்படி ஆத்மாக்களாகிய நீங்கள் கர்ப்பத்தில் வந்து சரீரத்தை எடுக்கிறீர் களோ அப்படி நான் எடுப்பதில்லை என தந்தை புரிய வைக்கிறார். நான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்க வேண்டும், ஆகையால் எனக்கு பெரிய சரீரம் தேவைப்படுகிறது. நான் தூய்மை யாக்குவதற்காக வரவே வேண்டும். மாயையாகிய இராவணன் உங்களை தூய்மையற்றவர்களாக ஆக்கியுள்ளது. ஆகையால் இந்த 5 விகாரங்களை தானமாகக் கொடுத்து விடுங்கள், அப்போது கிரஹணம் விட்டுப் போகும். முத-ல் முக்கியமானது தேக அபிமானமாகும். தன்னை இப்போது ஆத்ம அபிமானி என புரிந்து கொள்ளுங்கள். நான் இந்த தேகத்தில் இருக்கக் கூடிய ஆத்மாக் களுடன் பேசுகிறேன், அவர்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறேன். 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் கூட இந்த ஞானத்தைச் சொல்லியிருக்கிறேன். இராஜயோகம் கற்பித்திருக்கிறேன். ஒவ்வொரு கல்பத்திலும் கற்பிக்கிறேன். வந்த உடனேயே தூய்மையற்றவர்களை தூய்மையாக்கக் கூடிய தொழில் என்னுடைய தாகிறது. தந்தையின் நடிப்பு, வந்து குழந்தைகளை தூய்மையாக்குவ தாகும். நாமே தேவதைகளாக தூய்மையாக இருந்தோம், மீண்டும் தூய்மையாக வேண்டும். தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும். எதிர்காலத்தில் நீங்கள் சூரிய வம்சத்தின், சந்திர வம்சத்தின் இளவரசன், இளவரசியாக ஆகக் கூடியவர்கள். இந்த ஞானமே எதிர்காலத்தில் இளவரசன், இளவரசியாக ஆவதற்கானதாகும். ஆக, தெய்வீக குணங்களை தாரணை செய்யும் போது இளவரசன், இளவரசியாக ஆவீர்கள். நான் தாரணை செய்கிறேனா என தன்னைப் பார்க்க வேண்டும். என்னென்ன தடைகள் வருகின்றன? யுக்தியுடன் அந்த தடைகளை விரட்ட வேண்டும். தந்தையின் நினைவின் மூலமே கர்மாதீத் (கர்மங்களை வென்ற முழுமை) நிலையை அடைய வேண்டும். வரக்கூடிய முள்ளை

(தடைகளை) நீக்கி விட்டு மேலும் மேலும் முன்னேறிச் செல்ல வேண்டும். தேக அபிமானத்தை விட்டு விட்டு, ஆத்ம அபிமானியாகி தந்தையை நினைவு செய்ய வேண்டும். எந்த அளவு நினைவு செய்வீர்களோ அந்த அளவு பாதை தெளிவாகிக் கொண்டே செல்லும். இல்லற விஷயங்களில் இருந்தபடி தாமரை மலர் போல ஆக வேண்டும். ஒரு போதும் விகாரத்தில் செல்லக் கூடாது. முக்கியமான விஷயமே விகாரத்தினுடையதாகும். விகாரத்தில் செல்வதை நிறுத்த வேண்டும். எவ்வளவு தடைகள் வந்தாலும் கண்டிப்பாக தூய்மையடைய வேண்டும். பெரும்பாலும் தடைகள் பெண்களுக்கு ஏற்படும். நாம் தூய்மையாய் இருப்போம் என அவர்கள் விரும்புவார்கள். கிருஷ்ணபுரிக்குச் செல்ல விரும்புவார்கள். கிருஷ்ண ஜெயந்தியில் மிகவும் அன்புடன் கிருஷ்ணரை ஊஞ்சலில் ஆட்டுவார்கள். பூஜை செய்வார்கள், விரதம் இருப்பார்கள். அது வெறும் 7 நாட்களின் விரத நியமம் ஆகும். இப்போது நீங்கள் ஒரு போதும் விகாரத்தில் செல்ல மாட்டோம் என விரதம் இருங்கள் என தந்தை சொல்கிறார். எதுவரை வாழ்ந்திருக்கிறீர்களோ அதுவரை தூய்மையின் விரதத்தில் இருக்க வேண்டும்.

இந்த பழைய உலகத்தில் இது நம்முடைய கடைசி பிறவியாகும் என நீங்கள் அறிவீர்கள். நம்முடையது மட்டும் அல்ல, இந்த முழு உலகத்தினுடையதும் ஆகும். நாம் தூய்மையடைந்து தூய்மையான உலகத்திற்குச் செல்ல வேண்டும் என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நம்முடைய அடுத்த பிறவி சத்யுகத்தில் ஏற்படும். அந்த ஹட யோகி சன்னியாசிகள் இது நம்முடைய கடைசி பிறவி என்ற நினைவின் மூலம் தூய்மையடைவதில்லை. உடன் இருந்தாலும் ஒரு போதும் விகாரத்தில் செல்லக் கூடாது. இருவருமே விரதம் மேற்கொள்ள வேண்டும். அபலைகளின் மீது எவ்வளவு கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. அவர்கள்தான் கூக்குரலிடுகின்றனர். பிரபு, மானத்தைக் காப்பாற்றுங்கள் என ஆண்கள் ஒருபோதும் கூக்குரலிடுவதில்லை. மான பங்கப்படுவ திலிருந்து காப்பாற்றுங்கள் – இது தாய்மார்களின் கூக்குரலாகும். தாய்மார்கள் தந்தையை அழைக் கின்றனர் – ஓ பாபா என்னை மான பங்கப்படுவதிலிருந்து காப்பாற்றுங்கள். இது அதே கீதை, பாகவதத்தின் விஷயங்கள் ஆகும், பெயரை மட்டும் தவறுதலாக கிருஷ்ணருடையதைப் போட்டு விட்டனர். கிருஷ்ணர் பதித பாவனர் அல்ல. பதித பாவனர் ஒரே ஒரு தந்தை மட்டுமே. தூய்மை யடைவதற்காக அடிகளையும் வாங்க வேண்டியிருக்கும் என நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். கல்பத்திற்கு முன்பும் கூட இப்படி ஆகியிருந்தது. இப்போது மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு திரௌபதி அல்ல, நீங்கள் எத்தனை திரௌபதிகள் இருக்கிறீர்கள். பல தூய்மையற்றவர்களை தூய்மையாக்க வேண்டும். தூய்மையடைந்து தூய்மையாக்குவதற்காக தாய்மார்களாகிய நீங்கள் நிமித்தமாக ஆகியிருக்கிறீர்கள். நீங்கள் இன்னமும் கூட அதிகமாக படிப்பின் மீது கவனம் கொடுக்க வேண்டும். தன் போல் இருப்பவர்களை எழ வைக்க வேண்டும். சன்னியாசிகளுடையது துறவற மார்க்கமாகும். இது இல்லற மார்க்கம். இல்லற விஷயங்களில் இருந்தபடி தூய்மையாக ஆக வேண்டும். படித்து, படிப்பிக்க வேண்டும், இதன் மூலம் உயர்ந்த பதவி கிடைக்கும். படிப்பு மிகவும் சகஜமே. வைரத்திற்குச் சமமாக இருந்த, இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்த பாரதம் இப்போது இவ்வளவு மதிப்பிழந்து விட்டது ஏன் என புரிய வைக்க வேண்டும். நாங்கள் உங்களுக்கு எல்லைக்கப்பாற்பட்ட வரலாறு புவியியலை சொல்கிறோம். மீண்டும் சொர்க்கம் எப்படி ஏற்படும் என்பது மனிதர்களின் சிந்தனையில் கூட இல்லை.. பூஜைக்குரியவர்களாக இருந்த இலட்சுமி நாராயணரே பூஜாரிகளாக ஆகியுள்ளனர் என்பது யாருக்கும் தெரியாது. நீங்களே பூஜைக்குரியவர், நீங்களே பூஜாரி…. இது பரமாத்மாவைக் குறித்து சொல்வது அல்ல. பூஜைக் குரியவர்களாக இருந்தவர்களே பூஜாரியாக தமோபிரதானமாக ஆகியுள்ளனர். பூஜைக்குரியவராக இருந்தனர், கண்டிப்பாக மறுபிறவி எடுத்திருக்க வேண்டும்.

சத்யுகத்தில் வருபவர்கள் மறுபிறவி எடுக்க வேண்டும். சூரியவம்சத்தவராகிய நாம் சந்திர வம்சத்தவராக ஆகினோம், இப்போது பிராமண வம்சத்தவராக ஆகிறோம், பிறகு தேவதா வம்சத்த வராக ஆகப் போகிறோம். தந்தை இவரை தத்தெடுத்து பிரம்மாவாக ஆக்கினார். அதுபோல யாராவது நீங்கள் எப்படி ஆகினீர்கள்? என கேட்டால் அவர்களுக்குச் சொல்லுங்கள் – பிரம்மாவின் வாய் மூலம் பரமபிதா பரமாத்மா எங்களை தன்னுடைய வர்களாக ஆக்கினார். தந்தைதான் தூய்மை யற்றவர்களை தூய்மையாக்குவார். இப்போது நாங்கள் தூய்மையின் வாக்குறுதி கொடுக்கிறோம். தந்தையை நினைவு செய்வதன் மூலமே தூய்மையடைகிறோம். தந்தை கருணை காட்டுவாரா? கருணை காட்டியுள்ளார் அல்லவா. பரமதாமத்திலிருந்து தூய்மையற்ற உலகில் தூய்மையற்ற சரீரத்தில் வந்துள்ளார். இப்போது நான் வந்திருக்கிறேன், நான் கற்பிப்பதை கற்றுக் கொள்ளுங்கள், என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுக்கு சக்தி கிடைக்கும் என தந்தை சொல்கிறார். பாவ கர்மங்கள் அழியும், இதில் ஆசீர்வாதத்தின் விஷயமே இல்லை. நீங்கள் தயவு காட்டினீர்கள் என்றால் நாங்கள் 100 மார்க்குகள் எடுத்து தேர்ச்சியடைந்து விடுவோம் என ஆசிரியரிடம் யாராவது சொல்வார்களா என்ன? இவரும் கூட எல்லைக்கப்பாற்பட்ட ஆசிரியர் ஆவார் – படிக்க வைக்கிறார். யாருக்காவது ஞானம் தாரணை ஆவதில்லை என்றால் என்ன செய்வார். ஆசிரியர் அனைவருக்கும் தயவு காட்டினார் என்றால் அனைவருமே தேர்ச்சியடைந்து விடுவார்கள், பிறகு இராஜ்யம் எப்படி உருவாகும்? குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். தாய் தந்தையரை பின்பற்றுங்கள். தந்தையை நினைவு செய்யுங்கள், வேறு எந்த உபாயமும் கிடையாது. இல்லாவிட்டால் தந்தையை ஏன் அழைக்கிறீர்கள். எங்களை வந்து துக்கங்களிலிருந்து விடுவியுங்கள் என சாது சன்னியாசிகள் முதலான அனைவருமே சொல் கின்றனர். அதிகமான சங்கடங்கள் ஏற்படவுள்ளன, வினாசம் தொடங்கும்போது பிறகு கண்டிப்பாக எங்கோ பகவான் குப்தமான வேடத்தில் இருக்கிறார் என புரிந்து கொள்வார்கள். ஒருவேளை கிருஷ்ணர் இருந்தார் என்றால் முழு உலகிலும் தண்டோரா போட்டு விடுவார்கள். கிருஷ்ணர் வர முடியாது. இந்த தந்தை வர வேண்டியிருக்கிறது. கடைசி வரை தந்தை ஞானத்தைச் சொல்ல வேண்டியிருக்கிறது.. வருவதும் கூட குப்தமான ரூபத்தில். இரக்கம் எதுவும் கிடைக்காது. நிராகாரமான தந்தை அனைவருக்குமே ஒருவர்தான் ஆவார். அவர் தூய்மையற்றவர்களை தூய்மையாக்கி ஆஸ்தியை கொடுப்பதற்காக வந்திருக்கிறார். உங்களுடைய கடமையும் கூட அனைவருக்கும் தெரியப்படுத்துவது ஆகும். பரமபிதா பரமாத்மாவுடன் உங்களுக்கு என்ன உறவு? என கேட்க வேண்டும். தந்தைக்கு எவ்வளவு அளவற்ற குழந்தைகள் இருக்கின்றனர். பரமபிதா பரமாத்மாவின் வழி – ஒன்று என்னை நினைவு செய்யுங்கள், மற்றொன்று நல்ல விதமாகப் படியுங்கள். தந்தையை நல்ல விதமாக நினைவு செய்து உயர்ந்த ஆஸ்தியை அடைய வேண்டும். எல்லைக்கப்பாற்பட்ட வரலாறு புவியியலை உங்களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். படங்களை வைத்தும் கூட நீங்கள் புரிய வைக்க முடியும். பாரதம் சத்யுகத்தில் தலைக் கிரீடமாக இருந்தது. சூரிய வம்சத்து தேவி தேவதைகள் இராஜ்யம் செய்து கொண்டிருந்தனர், பிறகு சந்திர வம்சத்து இராஜ்யம் ஆயிற்று, கலைகள் குறைந்தபடி சென்றது. இதனையும் பார்க்க வேண்டும் அல்லவா. நல்ல விதமாக படித்தால் கற்றுக்கொள்வீர்கள்,. படிக்காவிட்டால் தோல்வியடைந்து விடுவீர்கள். யார் எச்சரிக்கை கொடுப்பார்கள்? இன்றைய நாட்களில் மாயை மிகவும் கவனக் குறைவுடன் இருக்கச் செய்கிறது. இங்கே பொய்யை மறைக்க முடியாது. ஏதாவது பாவ கர்மம் செய்தால் அது அதிகரித்துக் கொண்டே செல்லும். பாவம் அல்லது புண்ணியம் கண்டிப்பாக கணக்கு சேர்ந்து கொண்டே செல்கிறது. அதன்படியே அடுத்த பிறவி கிடைக்கிறது.. எந்த பாவத்தைச் செய்தாலும் அதற்குத் தகுந்தவாறுதான் பிறவியும் கிடைக்கும், ஆகையால் ஏதாவது பாவம் செய்தீர்கள் என்றால் உடன் தெரியப் படுத்துங்கள் என தந்தை சொல்கிறார். இறைவன் அனைத்தும் அறிவார் என்பதல்ல. தந்தைக்குத் தெரியப் படுத்த வேண்டும்.. இந்தப் பிறவியில் செய்த பாவங்கள் பற்றி ஆத்மாவுக்குத் தெரியும். நாம் என்னென்ன காரியங்கள் செய்திருக்கிறோம் என அனைத்தும் நினைவில் இருக்கும். நான் என்னென்ன செய்திருக்கிறேன் என பாப்தாதாவுக்குத் தெரியப்படுத்துங்கள். முக்கிய மான விஷயம் விகாரத்தினுடையது. திருடுவது, ஏமாற்றுவது என்பதெல்லாம் சிறு சிறு விஷயங்கள். முக்கியமானது விகாரத்தினுடைய விஷயம், காமம் மிகப் பெரிய எதிரி. விகாரத்தில் செல்பவர்கள் தான் பதிதர்கள் (தூய்மையற்றவர்கள்) எனப்படுகின்றனர். இந்த விகாரங்களின் மீது முதலில் வெற்றியடைய வேண்டும். உங்களுடைய எதிரியே இராவணன், அவன் தூய்மையற்றவர்களாக ஆக்குகிறான். இப்போது தூய்மையடைவதற்காக தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தையுடையவர்களாக ஆகி பிறகு விகாரத்தில் விழுந்தால் அதிகமான அடி விழும். முதலில் தேக அபிமானத்தை விட வேண்டும், பிறகு மிகப் பெரிய எதிரியான காமம். முழு யுத்தமும் இதன் மீதுதான். ஆக அனைத்து விஷயங் களையும் புரிந்து கொண்டு பிறகு மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு பேருக்கு உண்மை யான கீதை அல்லது சத்ய நாராயணரின் கதை, அமர கதையை சொன்னீர்கள் என பாபா கேட்பார். பாவாத்மாக்கள் அளவற்றவர்கள் இருக்கின்றனர். ஆக இந்தக் கணக்கையும் காட்டினீர்கள் என்றால் அப்போது நீங்கள் பிராமணர்கள் ஆகியிருக்கிறீர்கள் என புரிந்து கொள்வார். எவ்வளவு பேரை தனக்குச் சமமாக மாற்றினீர்கள். இவை சகஜ இராஜயோகத்தின் விஷயங்கள் ஆகும். தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். உலகத்தில் இது யாருக்கும் தெரியாது. தந்தையிடம் பலரின் சான்றிதழ்களும் (சர்டிஃபிகேட்கள்) வருகின்றன. இன்னார் இப்படி புரிய வைத்தார், அவரே சொர்க்கத்தின் எஜமானாக ஆக்குவதற்கு நிமித்த குருவாக ஆகினார் என எழுதுகின்றனர். பி. கு.க்கள் நிரூபித்துக் காட்டுகின்றனர். ஆனால் யார் ஆகின்றனரோ அவர்கள் பிறருக்குப் புரிய வைக்கிறார்களா? பிறரை அழைத்து வருகின்றனரா? அழைத்து வர வேண்டும் அல்லவா. யாருக்கு நிச்சயம் இருக்குமோ அவர்கள் சட்டென சொல்வார்கள், முதலில் தந்தையின் மடியில் வருவோம். கிறிஸ்தவர்களில் குழந்தை பிறந்தது என்றால் கிறிஸ்தவனாக ஆக்குகின்றனர். நாமும் கூட ஈஸ்வரனின் மடியில் குழந்தையாக ஆவோம். சத்குருவின் மடியில் வருவோம். மடியில் வந்தோம், தந்தையை சந்தித்தோம் என்றால் இது நம்முடைய ஆஸ்தியாக ஆகி விட்டது. இப்படிப் பட்ட போதை மிக்கவர் வெளிப்படுவது மிகவும் கடினமே. புரிய வைக்க வேண்டும் அல்லவா. முன்னே போகப் போக நல்ல விதமாக புரிந்து கொள்வார்கள். உங்களுக்குள் இந்த சக்தி நிரம்பும். பிறகு தந்தையைச் சந்திக்காமல் இருக்க முடியாது.. ஒரேயடியாக ஓடுவீர்கள். இவர் தாய் தந்தை யாகவும் இருக்கிறார், ஆசிரியரும் கூட, பிறகு குருவாகவும் இருக்கிறார். தாய் தந்தையின் மடியை அடைந்து விடுங்கள். குருவிடம் செல்கிறார்கள், ஆனால் அவர்கள் சொர்க்கத்தின் இராஜ்யத்தை எதுவும் கொடுப்பதில்லை. இராஜ்யம் தந்தையிடமிருந்துதான் கிடைக்கிறது. தந்தையே தான் ஆசிரியர், குருவாகவும் இருக்கிறார் எனும்போது ஏன் மூவரிடமிருந்தும் ஆஸ்தியை எடுக்கக் கூடாது. இது அதிசயம் அல்லவா. கிருஷ்ணர் தந்தையாக, ஆசிரியராக, குருவாக இருந்தார் என சொல்வதில்லை. கிருஷ்ணர் ஒரு சிறிய இளவரசன் ஆவார். இவர் தந்தையாகவும் இருக்கிறார், ஆசிரியராகவும் இருக்கிறார் மற்றும் குருவாகவும் இருக்கிறார் என இங்கே குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் உள்ளது. இவருக்கு தந்தை, ஆசிரியர், குரு என யாரும் கிடையாது. கிருஷ்ணருடைய தாய் தந்தையர் இருந்தனர் அல்லவா. பதித பாவனர் ஒரு தந்தையே ஆவார், யாருக்கு தாய் தந்தை இருக் கின்றனரோ அவர்கள் பதித பாவனராக ஆக முடியாது. அவரை பகவான் என சொல்ல முடியாது. பகவானுக்கு தாய் தந்தை யாரும் கிடையாது. இறைத் தந்தைக்கு தந்தை என யாரும் இருக்க முடியாது. இறைத்தந்தையே பதித பாவனர், விடுவிப்பவர் என அழைக்கப்படுகிறார். அவரை விடுவிப்பவர் யாரும் கிடையாது. இது தந்தையின் காரியமே ஆகும். மனிதர்களை பகவான் என சொல்ல முடியாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரரையும் கூட படைப்பவர் அந்த படைக்கக் கூடிய தந்தை ஆவார். உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவான் பாடப் படுகிறார். அவர் நம் அனைவரின் தந்தை ஆவார். கிருஷ்ணரை அனைவரின் தந்தை என சொல்ல முடியாது. நாம் அனைவருமே ஒரு நிராகார தந்தையின் குழந்தைகள் ஆவோம். அவர்தான் புதிய உலகைப் படைப்பவர் ஆவார். புதிய உலகம் சுகதாமம் என சொல்லப்படுகிறது. பிறகு புதியதிலிருந்து பழைய உலகமாக ஆகிறது. இராவண இராஜ்யமாக உள்ளது அல்லவா. இராவணனை எரிக்கவும் செய்கின்றனர், ஆனால் எதையும் புரிந்து கொள்வது கிடையாது.. பண்டிகைகள் கொண்டாடப்படுவதின் அர்த்தத்தையும் கூட எதுவும் புரிந்து கொள்வதில்லை. இது உங்களின் பல பிறவிகளின் கடைசியிலும் கடைசி பிறவி என தந்தை புரிய வைக்கிறார். இராவணனுடைய முடிவும் இப்போதுதான், பிறகு சத்யுகத்தில் உருவாக்க மாட்டார்கள். இந்த எதிரி எப்படிப்பட்டவனாக இருக்கிறான், இவனை எரித்தபடி இருக்கின்றனர். இவனுடைய பிறவி எப்போது ஏற்பட்டது? யாருக்கும் தெரியாது. சிவ ஜெயந்தி கொண்டாடுகின்றனர் என்றால் இராவண ஜெயந்தியும் கொண்டாடட்டுமே. கொஞ்சமும் புரிந்து கொள்வதில்லை. இவை விரிவான விஷயங்கள் என உங்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது. இதையும் புத்தியில் தாரணை செய்ய வேண்டும். வகுப்புக்கே வருவதில்லை என்றால் என்ன படிப்பார்கள்? படிப்பதில்லை, படிக்க வைப்பதில்லை என்றால் என்ன பதவி அடைவார்கள்? படித்து படிக்க வைப்பவரே நல்ல குழந்தை ஆவார். நிரூபணத்தைக் கொடுக்க வேண்டும். அனைவரும் குழந்தைகளே. நாம் நிறைய சேவை செய்து பலரை தனக்குச் சமமாக மாற்றினோம் என்றால் பாபாவின் நல்ல அன்பு கிடைக்கும் என புரிந்து கொள்ள வேண்டும். பாபா செல்லமாக கொஞ்சிக் கொண்டே இருப்பார். குழந்தாய் நல்ல விதமாக படி. ஒரு வகை கிளியும் கூட படிக்கக் கூடியது, அதற்கு கழுத்தில் மாலை இருக்கும். இங்கும் கூட நல்ல விதமாக படிப்பவர்களே மாலையில் உருட்டப்படுவார்கள். படிப்பதே இல்லை என்றால் காட்டுவாசி போன்றவர்களே. அவர்கள் விஜய மாலையில் வர முடியாது. குழந்தை களாகிய நீங்கள் நல்ல விதமாக படிக்க வேண்டும் மற்றும் படிப்பிக்க வேண்டும். இது சத்யமான கதை, அதனை சத்யமான தந்தை சொல்கிறார். சத்தியமான கண்டத்தை ஸ்தாபனை செய்கிறார். இலட்சுமி நாராயணரின் இராஜ்யத்தில் ஒருபோதும் பொய் சொல்வது கிடையாது. நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. இல்லற விஷயங்களில் இருந்தபடி தாமரை மலர் போல் இருக்க வேண்டும். உயிருடன் வாழும் வரை தூய்மையின் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

2. இரக்கத்தை வேண்டுவதை தவிர்த்து தாய் தந்தையரை பின்பற்ற வேண்டும். படிப்பை கவனத்துடன் படிக்க வேண்டும் மற்றும் படிப்பிக்க வேண்டும்.

வரதானம்:-

கர்மத்தில் யோகம் மற்றும் யோகத்தில் கர்மம் – அத்தகைய கர்மயோகி, அதாவது சிரேஷ்ட ஸ்மிருதி, சிரேஷ்ட ஸ்திதி மற்றும் சிரேஷ்ட வாயுமண்டலத்தை உருவாக்கக் கூடிய, அனைவரின் ஆசிர்வாதங்களுக்கு அதிகாரி ஆகி விடுவார். கர்மம் மற்றும் யோகத்தின் சமநிலை மூலம் ஒவ்வொரு கர்மத்திலும் பாபாவிடமிருந்து ஆசிர்வாதங்கள் கிடைக்கவே செய்கிறது. ஆனால் யாருடைய சம்பந்தம்-தொடர்பில் வந்தாலும், அவர்களிடமிருந்தும் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். அனைவரும் அவரை நல்லவர் என மதிப்பார்கள். இந்த நல்லவர் என ஏற்றுக் கொள்வது தான் ஆசிர்வாதங்கள் ஆகும். ஆக, எங்கே ஆசிர்வாதங்கள் உள்னவோ, அங்கே சகயோகம் உள்ளது. இந்த ஆசிர்வாதங்கள் மற்றும் சகயோகம் தான் வெற்றி மூர்த்தி ஆக்கி விடும்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top