23 September 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

September 22, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! மன்மனாபவ என்ற மந்திரத்தை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். ஒரு பாபாவை எப்போதும் பின்பற்றுங்கள். இதுவே பாபாவிற்கு உதவியாளர் ஆகுதல் ஆகும்.

கேள்வி: -

புருஷோத்தமர்களாக ஆவதற்கான எளிய மற்றும் சிரேஷ்டமான முயற்சி என்ன?

பதில்:-

புருஷோத்தமர்களாக ஆகக் கூடிய குழந்தைகளே! நீங்கள் சதா ஸ்ரீமத்படி நடந்து கொண்டே இருங்கள். ஒரு பாபாவை நினையுங்கள். வேறு எந்த விஷயத்திலும் தலையிடாதீர்கள். சாப்பிடுங் கள், அருந்துங்கள், அனைத்தையும் செய்யுங்கள். ஆனால் பாபாவை நினைத்துக் கொண்டே இருந்தால் புருஷோத்தமர் ஆகிவிடலாம். யார் மீது குருப்பார்வை இருக்கிறதோ அவர்களே புருஷோத்தமர் ஆகிறார்கள். அவர்கள் ஒரு போதும் ஸ்ரீமத்தை மீறுவதில்லை. அவர்கள் மூலமாக எந்த ஒரு தலைகீழான வேலையும் நடக்காது.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

ஒம் நமசிவாய..

ஓம் சாந்தி. இந்த மகிமை யாருடையது? ஒரு பரம்பிதா பரமாத்மாவினுடையது. யார் நன்றாக வேலை செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக மகிமை இருக்கிறது. யார் தீய வேலைகளைச் செய்கிறார்களோ அவர்களுக்கு நிந்தனை ஏற்படுகிறது. அக்பர் இருந்தார் என்றால் அவருக்கு மகிமை இருந்தது, ஔரங்கசீப்பிற்கு நிந்தனை இருந்தது. அவ்வாறே இராமரை மகிமை செய்வார் கள், இராவணனை நிந்தனை செய்வார்கள். பாரதத்தில் தான் இராம இராஜ்யம், இராவண இராஜ்யம் இருக்கிறது. இராம இராஜ்யத்திற்கு புருஷோத்தம இராஜ்யம் என்று கூறுவார்கள். இராவண இராஜ்யத்திற்கு அசுர இராஜ்யம் என்று கூறுவார்கள். இப்போது குழந்தைகளுக்கு சங்கமயுகத்தைப் பற்றி தெரிந்திருக்கிறது. இது புருஷோத்தம யுகம் ஆகும். இந்த பாரதத்தை புருஷோத்தமமாக மாற்றியே ஆக வேண்டும். வசிப்பவர் களும் புருஷோத்தமர்களாக வேண்டும். மேலும் வசிக்கக் கூடிய இடத்தையும் புருஷோத் தமாக ஆக்க வேண்டும். பாரதத்தைத் தான் சொர்க்கம் என்கிறார் கள். வசிக்கக் கூடியவர் களை, தேவி தேவதை, சொர்க்கவாசி என்கிறார்கள். எனவே இருவரும் உத்தமம் ஆகிறார் கள். புதிய உலகம் உத்தமாக இருக்கிறது. பழைய உலகம் கீழானதாக இருக் கிறது என அனைவருக்கும் தெரியும். உலகம் எப்படியோ அப்படியே வசிப்பவர்களும் இருக் கிறார்கள். புதிய பாரதம், பழைய பாரதம் என்றெல்லாம் பாடப்படுகிறது. வேறு எந்த கண்டத்திற்கும் புதிய கண்டம் என்று கூறுவதில்லை. புதிய உலகில் புதிய அமெரிக்கா புதிய சீனா என்றெல்லாம் இருக்காது. புது உலகத்தில் புதிய பாரதம் என்று பாடப்படுகிறது. ஆகவே, நியூ இன்டியா என்று கூறப்படுகிறது. புதிய பாரதம் என்று பெயர் வைக்கிறார்கள். ஆனால் பொருள் இல்லாமல் செய் கிறார்கள். நியூ இன்டியா இச்சமயம் எங்கிருந்து வந்தது? நியூ இன்டியாவில் டில்லி சொர்க்கமாக இருக்கிறது. இப்போது சொர்க்கம் எங்கே? குழந்தை களாகிய நீங்கள் இங்கே புருஷோத்தமர் ஆவதற்காக வருகிறீர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தது குருப்பார்வையாகும். புருஷோத்தமர் ஆவதால் குருப்பார்வை ஏற்படுகிறது. புதிய உலகத்தை உருவாக்கக் கூடிய எல்லையற்ற தந்தை மூலமாக நாம் எல்லையற்ற சுகத்தை அடைய முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். சத்யுகத்தில் புருஷோத்தமர் ஆகின்றோம். பிறகு கீழே வருகின்றோம் என்றால் மத்தியம், கீழானவர் ஆகிவிடு கின்றோம். இப்போது பாபா நம்மை சதோபிரதானமாக சத்யுக சொர்க்கவாசியாக புருஷோத்தமராக மாற்றிக் கொண்டிருக் கிறார் என குழந்தைகள் அறிகிறீர்கள். இது மிக மிக எளிதாகும். மருந்து எதுவும் சாப்பிட வேண்டிய தில்லை, வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை, நினைவு மட்டும் செய்ய வேண்டும். ஆகவே தான் இதற்கு சகஜமான நினைவு என்று கூறப்படுகிறது. நினைவின் மூலமாகவே பாவ ஆத்மாவிலிருந்து புண்ணிய ஆத்மா ஆக முடியும். அனைவருக்கும் முக்தி கிடைக்கும் என்பது நிச்சயமாகும். நான் அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் என்றால் நிச்சயமாக மனிதர்களின் உடல் அழிந்து போகும் என பாபா கூறுகின்றார். மீதம் ஆத்மாக்களை தூய்மையாக்கி அழைத்துச் செல்வேன். திரும்பச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பாபா ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றார். ஏனென்றால் ஆத்மா வின் சிறகுகள் துண்டிக்கப் பட்டிருக்கிறது. அதாவது தமோபிரதான ஆத்மாவாக இருக்கிறது. நீங்கள் யோக பலத்தினால் தூய்மையாக மாறுவதற்காக கடினமாக உழைக்கிறீர்கள். யார் செய்யவில்லையோ அவர்கள் கணக்கு வழக்கை ஒப்படைக்க வேண்டும். இதில் வேறு எதுவும் சிந்திக்க வேண்டியதில்லை. குழந்தைகளின் வேலை தந்தையிடமிருந்து முழு சொத்தையும் அடைய வேண்டும். பாபாவின் உதவியாளராகி அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும். அப்பாவிற்கும் சகயோகம், குழந்தை களுக்கும் சகயோகம். எப்படி சகயோகம் செய்வது? அதற்கு பாபாவைப் பார்த்து பின்பற்றுங்கள். அனைவருக்கும் புருஷோத்தமர் ஆவதற்காக என்னுடைய மந்திரத்தை அளித்துக் கொண்டே செல்லுங்கள். பாபா கல்ப கல்பமாக வந்து என்னை நினைக்காமல் தூய்மையாக முடியாது என்று கூறுகிறார். நான் கங்காஸ்நானம் செய்விக்கிறேனா என்ன? மன்மனாபவ என்ற மந்திரத்தை மட்டும் நினைக்க வேண்டும். இதன் பொருள் என்னை நினைத்தால் நீங்கள் தூய்மையாகி புருஷோத்தமராகி சொர்க்கத்திற்கு அதிபதியாவீர்கள். கணவன், மனைவி இருவருமே தூய்மை யான இல்லற மார்க்கத்திற்கு அதிபதியாவார்கள். பாபா இந்த விஷயங்கள் அனைத்தையும் தெளிவாகப் புரிய வைக்கிறார். நீங்கள் நடைமுறையில் மாறிக் கொண்டிருக்கிறீர்கள். பகவான் வந்து குழந்தைகளைப் புருஷோத்தமர்களாக மாற்றினார் என அறிகிறீர்கள். அதனால் தான் அழுக் கானவர்களைத் தூய்மையாக மாற்றக் கூடிய பதீத பாவனா வாருங்கள் என கூறுகிறார்கள். புருஷோத்தம மாதத்திற்கும் நிறைய மகிமைகளைக் கூறுகிறார்கள் அல்லவா? எனவே இந்த புருஷோத்தம யுகத்திற்கு நிறைய மகிமை இருக்கின்றது. கலியுகம் என்றால் இரவிற்கு பின் பகல் நிச்சயம் வரும். துக்கத்திற்குப் பிறகு சுகம் வருகிறது. இந்த வார்த்தை எவ்வளவு தெளிவாக இருக்கிறது. கணவன் மனைவி இருவரும் உயர்ந்ததிலும் உயர்ந்தவராக சிரேஷ்ட மானவர் களிலும் சிரேஷ்டமானவர்களாக மாறுகிறார்கள். ஏனென்றால், இது இல்லற மார்க்கம் ஆகும். சத்யுகம் புகழ் பெற்றது. அதற்கு சுகதாமம் என்று கூறப்படுகிறது. அவர்கள் துவாபர யுகத்தில் வருகிறார்கள். சன்னியாசத்தை மேற்கொண்டு உத்தமர் ஆகிறார்கள். பதீத பாவனர் தந்தையை தெரிந்துக் கொள்ளாத காரணத்தால் பதீத பாவனி கங்கை தூய்மையாக்கும் என நினைத்துக் கொண்டு தலை வணங்குகிறார்கள். கங்கை மற்றும் கடல் சந்திக்கும் (சங்கமம்) இடத்தில் விழா கொண்டாடுகிறார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா மிக தெளிவாகப் புரிய வைக்கின்றார். இருப்பினும் கோடியில் ஒரு சிலர் அந்த ஒரு சிலரிலும் ஒரு சிலரே புரிந்துக் கொள்கின்றனர் என பாபா கூறுகின்றார். அதிலும் ஆச்சரியபடக் கூடிய வகையில் ஞானம் கேட்கிறார்கள், பிறருக்கும் கூறுகின்றார்கள் பிறகு பிரிந்து ஓடு கின்றார்கள். டிஸ்சர்வீஸ்(சேவைக்கு பாதகம்) செய்கிறார்கள். சேவை மற்றும் டிஸ்சர்வீஸ் இரண்டும் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றது. நிறைய பேர் ஓடியும் போகிறார்கள். அவர்கள் பாபாவைத் தெரிந்துக் கொள்ளவில்லை. நீங்கள் பாவ ஆத்மாவிலிருந்து புண்ணிய ஆத்மாவாக மாறுகிறீர்கள். பிறகு குழந்தைகளே தடைகளையும் ஏற்படுத்துகிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய பாவம்! இராவணன் அனைவரையும் மகா பாவியாக மாற்றுகிறான். ஆனால் யார் குழந்தைகளாகி டிஸ்சர்வீஸ் செய்கிறார்களோ அவர் களுக்கு ட்ரிபுயூனல் (நீதிபதிகள்) அமர்கிறார்கள். பக்தி மார்க்கத்தில் இவ்வளவு கடுமையான தண்டனைகள் கிடைத்திருக்காது. ஆனால் இங்கே பாபாவினுடையவராகி டிஸ்சர்வீஸ் செய்தால் பாபாவின் வலது கரமாக தர்மராஜ் இருக்கின்றார். ஆகவே குழந்தைகளே என்னுடைய சேவையில் உதவியாளர் ஆகி, பிறகு தவறான வேலைகளைச் செய்யாதீர்கள், டிஸ்சர்வீஸ் செய்தால் அபலை களுக்கும் தடைகள் ஏற்படும் என பாபா கூறுகின்றார். தாய்மார்கள் மீது பாபாவிற்கு இரக்கம் வருகிறது. திரௌபதிக்கு பகவான் காலை பிடித்து விட்டார் அல்லவா? என்னை துயிலுரிக்கிறார்கள் என திரௌபதி அழைத்தாள். பாபா தாய்மார்களின் தலையில் கலசத்தை வைக்கின்றார். முதலில் தாய்மார்கள் பின்னால் ஆண்கள். ஆனால் இன்று ஆண்களுக்குள்ளும் கர்வம் நிறைய இருக்கிறது. அதாவது நான் மனைவிக்கு குரு, கணவன், ஈஸ்வரன், மனைவி என்னுடைய வேலைக்காரி என்று நினைக்கிறார்கள். இங்கே பாபா நிரகங்காரியாக இருந்து தாய்மார்களின் காலைப் பிடித்து விடுகிறார். நீங்கள் களைத்துப் போய்விட்டீர்கள். நான் உங்களுடைய களைப்பை நீக்குவதற்காக வந்திருக்கிறேன். தாய்மார்களாகிய உங்களை அனைவரும் புறக்கணித்தனர். சன்னியாசிகள் மனைவியை விட்டு விட்டுச் சென்று விட்டனர். ஒரு சிலருக்கு 5-7 குழந்தைகள் இருப்பார்கள். பார்த்துக் கொள்ள முடியவில்லை என்றால் துன்புற்று ஓடிவிடுகிறார்கள். படைத்துவிட்டு அவர் களை அலைய விட்டு விடுகிறார்கள். நான் யாரையும் அலைய விடுவதில்லை என்று பாபா கூறுகின்றார். நான் அனைவரின் துக்கத்தையும் நீக்கி சுகத்தை அளிக்கின்றேன். மாயை வந்து துக்கம் அளிக்கிறது. இது விளையாட்டாகும். அறியாமை காலத்தில் பகவான் துக்கம் அளிக்கிறார் என நினைக்கிறார்கள். ஆனால் பாபா ஈஸ்வரன் இந்த வேலையைச் செய்வதில்லை. இது கர்மத்திற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட நாடகம் ஆகும். யார் எப்படி கர்மத்தை செய்கின்றனரோ அப்படி பலனை அனுபவிக்கின்றனர். இச்சமயம் உயர்ந்த கர்மம் செய்ய வேண்டிய நேரம் ஆகும். தீய கர்மங்களைப் பற்றிய விசயம் கிடையாது. யாராவது நோய் வாய்ப்படுகிறார்கள், நஷ்டம் ஏற்படுகிறது என்றால், செயல்கள் கெட்டுப் போய் விடுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு சௌபாக்கியசாலி ஆகிறீர்கள். நீங்கள் 21 பிறவிகளுக்கு ஒரு போதும் கெட்ட கர்மம் செய்ய வேண்டியிருக்காது. எவ்வளவு பெரிய பலன் கிடைக்கிறது. எனவே பாபாவின் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். பாபா வேறு எந்த விசயத்திலும் தலையிடு வதில்லை. சாப்பிடுங்கள், அருந்துங்கள் எது வேண்டுமானாலும் செய்யுங்கள். அப்பா மற்றும் ஆஸ்தியை மட்டும் நினைவு செய்துக் கொண்டே இருங்கள். நாம் அழுக்கானவர்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். பாபா தூய்மையாவதற்கான வழி முறையைத் தெரிவிக்கிறார். அதன் படி செல்லுங்கள். நினைப்பதற்கு மட்டும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். மாயையின் புயலைப் பார்த்து பயப்படக் கூடாது. இதில் மறைவான உழைப்பிருக்கிறது. ஞானமும் குப்தமாக இருக்கிறது. முரளியை சொல்வது வெளிப்படையாக இருக்கிறது. ஆனால் இந்த முரளியினால் நீங்கள் தூய்மையாக மாட்டீர்கள். நினைவினால் தான் தூய்மை யாவீர்கள். எனவே எல்லையற்ற தந்தையை நினையுங்கள். மேலும் உதவியாளராக ஆகுங்கள். ஆன்மீக மருத்துவமனை மற்றும் பல்கலைக் கழகம் திறப்பதற்கான முயற்சி செய்யுங்கள். ஏதாவது ஒரு நல்ல இடம் இருந்தால் அங்கே சென்று சொற்பொழிவு ஆற்றுங்கள். நீங்கள் கையில் புத்தகத்தை எடுக்க வேண்டாம். உங்களுக்குள் முழு ஞானமும் இருக்கிறது. மற்றபடி புரிய வைப்பதற்காக மரம், திரிமூர்த்தி, சிருஷ்டி சக்கரம் போன்ற ரகசியத்தை அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும். நான் பிரம்மா மூலமாக பிராமணர்களைப் படைக்கிறேன் என்று பாபா கூறுகின்றார். பிராமணர்களின் குறிக்கோளாக விஷ்ணு நிற்கிறார். மாற்றக் கூடிய டீச்சராக நிராகாரராக இருக்கிறார். பிரம்மா மூலமாக ஸ்தாபனை, விஷ்ணு மூலமாக பாலனை…… போன கல்பத்திலும் இப்படிப்பட்ட சித்திரங்களை உருவாக்கினார். பாருங்கள் விஞ்ஞானம் போன்ற வற்றினால் எவ்வளவு ஏவுகணைகளை உருவாக்குகிறார்கள். எனவே குழந்தைகளாகிய நீங்கள் புருஷோத்தமர் ஆவதற்காக கடினமாக முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால் பல பிறவிகளின் சுமைகள் தலை மீது இருக்கிறது. ஒரு நொடியில் நிச்சயதார்த்தம் நடந்தது. பிறகு ஆத்மாக்கள் பாபா வைத்தான் நினைக்க வேண்டும். அப்போது கீழான நிலையிலிருந்து உயர்தவர்களாக மாறி விடலாம்.

மன்மனாபவ, நீங்கள் கர்மயோகி என பாபா கூறுகின்றார். நினைவின் சாôட் வைக்க வேண்டும். உங்களுடைய சண்டை மாயாவுடன் நடக்கின்றது. மிகவும் கடுமையான சண்டை யாகும். நீங்கள் நினைவிலிருப்பதற்கு முயற்சி செய்தால் மாயை பறந்து போய்விடும். ஞானத்தில் எந்த ஒரு குழப்பமும் இல்லை. ஆத்மாவில் 84 பிறவிகளின் சம்ஸ்காரம் பதிவாகி இருக்கிறது. இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகம் ஆகும். இந்த சக்கரம் சுழன்றுக் கொண்டே இருக்கிறது. முடிவதில்லை. சிருஷ்டி ஏன் படைக்கப்பட்டது என்று கேள்வி எழுவதில்லை. ஆத்மா எப்படி மாறும். புதிய ஆத்மா எங்கிருந்தும் வருவதில்லை. ஏற்கனவே எத்தனை ஆத்மாக்களோ அவ்வளவு தான். கூடுவதோ குறைவதோ கிடையாது. அனைவரும் நடிகர்கள் தான். நீங்கள் எல்லையற்ற நடிகர்கள். நீங்கள் யாரை எல்லாம் பார்க்கிறீர்களோ அத்தனை பேரும் நாடகத்தில் இருக்கிறார்கள். இவ்வளவு பேரும் மீண்டும் இருப்பார்கள். யாரும் மோட்சத்தைப் பெறுவதில்லை. மனிதர்கள் வருதல் போதல் என்ற சக்கரத்திலிருந்து விடுபட நினைக்கிறார்கள். ஆனால் விடுபட முடியாது. என்ன நடிப்பை நடத்திக் கொண்டு வந்தார்களோ அதில் மீண்டும் வர வேண்டும். நான் இந்த அழுக்கான உலகத்தில் வர வேண்டும், போக வேண்டும் என பாபா கூறுகிறார். நான் கல்ப கல்பமாக வருகிறேன். நானே இங்கு வர வேண்டியிருக்கும் போது குழந்தைகள் எப்படி வராமல் இருக்க முடியும். நீங்கள் 84 முறைகள் உடலில் வருகிறீர்கள். நான் ஒரு முறை தான் வருகிறேன். நான் வருவது போவது மிகவும் அதிசயமாக இருக்கிறது. உங்களுடைய நிலை மற்றும் வழியை நீங்கள் தான் அறிவீர்கள்….. என்று பாடுகிறார்கள். சத்கதி அடைவதற்கான என்ன வழி இருக்கிறதோ அதை நீங்கள் தான் அறிவீர்கள். வேறு யாரும் அறியவில்லை. அவர்கள் பாடு கிறார்கள். நீங்கள் நடைமுறையில் இருக்கிறீர்கள். முக்கியமான விஷயம் நினைவாகும். பிறகு குருடர்களுக்கு ஊன்று கோல் ஆக வேண்டும். இதுவே புருஷோத்தம சங்கமயுகம். இது 5000 வருடங்களுக்குப் பிறகு வருகிறது. புருஷோத்தம மாதம் மூன்று வருடங்களுக்கு பிறகு வருகிறது. இது அனைத்தும் பக்தி மார்க்கம் ஆகும். அவர்களுடைய மந்திரங்கள் பற்றி நிறைய புத்தகங்கள் உள்ளன. இங்கே அப்படிப்பட்ட விஷயங்கள் இல்லை. பக்தி செய்யாதவர்களை மத நம்பிக்கை அற்றவர் என கூறுகிறார்கள். அவர்களை யும் திருப்தி படுத்துவதற்கு ஏதாவது செய்ய வேண்டும். இனிமையான குழந்தைகளே! ஒரு போதும் டிஸ்சர்வீஸ் செய்ய முயற்சி செய்ய வேண்டாம் என பாபா கூறுகிறார். சிலர் துரோகி ஆகிவிடுகிறார்கள் என்றால், அவர்களை அஜாமில் (கொடிய பாவி) என்பார்கள். அஜாமில், சூரதாஸ் போன்ற எத்தனை கதைகள் உள்ளன. இது அனைத்தும் பக்தி மார்க்கம் ஆகும். அவர்களை விட அதிகமாக பாவ ஆத்மா யார் என்றால் யார் இங்கே வந்து விட்டு என்னுடையவராகி என்னை விவாகரத்து செய்து விடுகிறார்களோ அவர்களே என்னை நிந்தனை செய்கிறார்கள். அவர்களுக்கு ட்ரியுபுனல் அமர்கிறது. உறுதி மொழி எடுத்து விட்டு சேவைக்கு எதிராக நடந்தால் கடுமையான தண்டனை கிடைக்கும். பதவி உயர்ந்தது என்றால், பிறகு செய்கிற தவறுக்கும் கடுமையான தண்டனை இருக்கிறது. எனவே, எந்த ஒரு தவறும் செய்யக் கூடாது. சத்குருவை நிந்திப்பவர்கள் உயர்ந்த பதவியை அடைய முடியாது என பாடப்பட்டிருக்கிறது. அதாவது நரனிலிருந்து நாராயணனாக மாறக் கூடிய உயர்ந்த குறிக்கோளை அடைய முடியாது. குருக்களிடம் சென்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் குருவை நிந்திப்பவர்கள்….. என கூறுகிறீர்கள். அது என்ன பதவி? அவர்கள் அந்த பதவியைப் பற்றி கூற முடியாது. பாபாவின் தலைப்பாகையை அவர்கள் தங்கள் தலை மீது வைத்துக் கொண்டார்கள். ஒரு வேளை முழுமையாகப் படிக்க வில்லை என்றால், உயர்ந்த பதவியும் அடைய முடியாது என டீச்சர் கூறுகின்றார் தூய்மையான தேவி தேவதை யாக வேண்டும். இங்கே யாரும் தூய்மையாக இல்லை. இப்போது அனைவரும் தூய்மையாக மாற வேண்டும். 21 பிறவிகளுக்கு இராஜ்ய பாக்கியம் கிடைக்கிறது என்றால் இந்த கடைசி பிறவியில் தூய்மையாக வேண்டும். இது எவ்வளவு பெரிய பிராப்தி. பிராப்தி கிடைக்க வில்லை என்றால் அப்படி என்ன முயற்சி செய்கிறீர்கள். ஆனால் உயர்ந்த பிராப்தியில் தடைகளை ஏற்படுத்தி விழ வைக்கக் கூடியது மாயை ஆகும். ஓஹோ மாயா……

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. எந்த ஒரு டிஸ்சர்வீஸ் செயலும் செய்யக் கூடாது. பாபாவிற்கு நிந்தனை ஏற்படும் படி எந்த செயலும் செய்யக் கூடாது. அவமானத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும், புருஷோத்தமர் ஆக வேண்டும்.

2. மாயாவின் புயலைப் பார்த்து பயப்படாமல் தூய்மையாவதற்காக நினைவிலிருக்க முயற்சி செய்ய வேண்டும்.

வரதானம்:-

பாபாவிற்கு சமமாக லைட், மைட் ஹவுஸ் (ஒளி மற்றும் சக்தி மையமாக) ஆவதற்காக எதாவதொரு விஷயத்தை பார்க்கிறீர்கள் அல்லது கேட்கிறீர்கள் என்றால் அதனுடைய சாரத்தை தெரிந்துக் கொண்டு ஒரு நொடியில் உள்ளடக்குவது அல்லது மாற்றம் செய்வதற் கான பயிற்சி செய்யுங்கள். ஏன், என்ன என்ற கேள்விகளில் விரிவாக செல்லாதீர்கள், ஏனெனில் ஏதாவதொரு விஷயத்தில் விரிவாக செல்வதினால் நேரம் மற்றும் சக்திகள் விரயமாகி விடுகிறது. எனவே விஸ்தாரத்தை சுருக்கி சாரமான மனநிலையில் கொண்டு வருவதற்கான பயிற்சி செய்யுங்கள் – இதன் மூலம் மற்ற ஆத்மாக்களையும் ஒரு நொடியில் சுருக்கமாக ஞானத்தின் சாரத்தை அனுபவம் செய்ய வைக்க முடியும்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top