23 May 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

May 22, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! பாபாவின் ஸ்ரீமத் படி நடப்பதால் உயர்ந்தவர் ஆகலாம். இராவணனின் வழிப்படி நடந்தால் அனைத்து மரியாதைகளும் மண்ணோடு மண்ணாகி விடும்.

கேள்வி: -

ஈஸ்வரிய பிறப்புரிமையை அடையக் கூடிய வாரிசுக் குழந்தைகளின் அடையாளம் கூறுங்கள்?

பதில்:-

இப்படிப்பட்ட வாரிசுக் குழந்தைகள் 1. பாபாவை முழுமையாக பின்பற்றிக் கொண்டே செல்வார்கள். 2. சூத்திரர்களின் சங்கத்தில் (தொடர்பு) மிக மிக கவனமாக இருப்பார்கள். ஒரு போதும் அவர்களின் சங்கத்தில் வந்து பாபாவின் ஸ்ரீமத்தில் தனது மனம் சொல்லும் வழியை கலக்க மாட்டார்கள். 3. தன்னுடைய உண்மையிலும் உண்மையான கணக்கை பாபாவிற்குக் கூறுவார்கள். 4. ஒருவருக்கொருவர் எச்சரிக்கை கொடுத்துக் கொண்டு முன்னேற்றத்தை அடைந்து கொண்டே இருப்பார்கள். 5. ஒரு போதும் பாபாவின் கையை விட வேண்டும் என்று எண்ணவும் மாட்டார்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

தாயே ஓ, தாயே நீயே எங்களின் பாக்கிய விதாதா..

ஓம் சாந்தி. குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். ஜகதம்பா காமதேனுவைப் பற்றி வர்ணனை இருக்கிறது. இது ஜகதம்பாவின் மகிமையாகும். உண்மையில் குப்த ரூபத்தில் இவர் பிரம்ம புத்திரா நதியாவார். தாயும் நீயே தந்தையும் நீயே….. என்று பாடப்பட்டிருக்கிறது. சிவபாபா பிரம்மாவின் கமல வாயினால் குழந்தைகளை உருவாக்குகிறார். அப்படி என்றால் இவர் தாயாகி விட்டார் அல்லவா? இது ஆழமான விஷயங்கள் ஆகும். இந்த விஷயங்கள் சாஸ்திரங்களில் இல்லை. பாபா இந்த சாஸ்திரங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விஷயங் கள் என்று புரிய வைத்திருக்கிறார். தந்தை வந்து அனைத்து சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கின்றார். கீதையைப் பற்றி புரிய வைக்கிறார் என்பது கிடையாது. பாபாவோ அவரே ஞானக் கடலாக இருக்கிறார். நல்லது. இவர் கீதை பாகவதம் போன்றவைகளை படித்திருக் கலாம். சிவபாபா அது அனைத்தையும் படித்திருக்கிறார் என்று கூற முடியாது. இல்லை அவரோ நாலெட்ஜ்ஃபுல் ஆவார். நான் இந்த மனித சிருஷ்டியின் விதையாக இருக் கிறேன் என பாபா கூறுகிறார். சிருஷ்டியின் முதல், இடை, கடை ஞானம் எனக்குள் இருக் கிறது. நான் இவைகளை பிரம்மா மூலமாக வர்ணனை செய்கிறேன் என்று பாபா கூறுகிறார். பிறகு இந்த வர்ணனை மறைந்து போகிறது. இந்த உண்மையான கீதையை இப்போது நீங்கள் உருவாக்குகிறீர்கள். அதுவும் கையில் வராது. கீதை போன்றவை பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங் கள் ஆகும். அவைகள் மீண்டும் வெளியே வரும். இந்த சாஸ்திரங்கள் போன்றவை களை படிப்பதால் யாருக்கும் சத்கதி கிடைக்காது. இங்கே இருக்கக் கூடிய நடிகர்கள் அனைவரும் முதலில் சரீரம் இல்லாமல் முக்தி தாமத்தில் இருந்தனர். பிறகு இங்கே வந்து இந்த உடலை ஏற்று அவரவர் பாகத்தை நடிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதுவும் ஆத்மாவில் அழிவற்ற பாகம் நிரம்பி இருக்கிறது. இந்த சிருஷ்டிக் சக்கரம் கூட ஒன்று தான். இதைப் படைக்கக் கூடியவரும் ஒருவரே. ஒரேயொரு சிருஷ்டி சக்கரம் தான் சுழன்று கொண்டிருக் கிறது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட அழிவற்ற நாடகம் சத்யுகத்தில் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. இப்போது நீங்கள் மீண்டும் மாறிக் கொண்டிருக்கிறீர்கள். பரம்பிதா பரமாத்மா முதன் முதலில் பிரம்மாவின் வாய் மூலமாக பிராமண சிருஷ்டியைப் படைக்கிறார். முதன் முதலில் புதிய சிருஷ்டி சங்கமம் ஆகும். பழையது மற்றும் புதியது. பிராமணன் குடுமிக்குச் சமமானவர் ஆவார். கால் மற்றும் குடுமி, இதை சங்கமம் என்கிறார்கள். பிராமணர் களாகிய நீங்கள் பாபாவுடன் உலகத்திற்கு ஆன்மீக சேவை செய் கிறீர்கள். தந்தையும் ஆத்மாக் களுக்கு சேவை செய்கிறார். நீங்களும் ஆத்மாக்களின் சேவை செய்கிறீர்கள். அதாவது யார் கீழானவர்கள் ஆகிவிட்டார்களோ அவர்களை உயர்ந்தவர்களாக மாற்றுகின்றீர்கள். எனவே பாபாவின் ஸ்ரீமத்படி நடக்கக் கூடியவர்கள் தான் உயர்ந்ததிலும் உயர்ந்த பதவி பெறுகிறார்கள். குழந்தைகள் ஸ்ரீமத்தினால் தான் உயர்ந்தவர் ஆக வேண்டும் குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள், நாம் தேவி தேவதையாக சூரிய வம்சத்தினர், சந்திர வம்சத்தினராக இருந்தோம். பிறகு மாயை நமது மரியாதையை எடுத்துவிட்டது. பூஜைக்குரியவரிலிருந்து பூஜாரியாக அழுக்காக மாற்றிவிட்டது. ஸ்ரீமத்தினால் மனிதர்கள் உயர்ந்தவர்கள் ஆகிறார்கள். பிறகு இராவணனின் வழியினால் அனைத்து மரியாதையும் மண்ணோடு கலந்து விடுகிறது. இப்போது மீண்டும் சிவபாபாவின் வழிப்படி நடப்பதால் புதிய உலகத்தில் தேவதை யாகலாம். ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். காந்திஜி கூட புதிய பாரதம், புதிய இராஜ்யத்தை விரும்பினார் ஆனால் புதிய உலகம் என்று சத்யுகத்திற்கு கூறப்படுகிறது. இங்கேயோ ஒவ்வொரு நாளும் துக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. துக்கமும் அதிகரிக்கத்தான் வேண்டும். அப்போது தான் நான் வருகிறேன் என பாபா கூறுகிறார். நான் என்னுடைய வாக்கின் படி மீண்டும் வந்து சகஜ இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். சாஸ்திரங் கள் பிற்காலத்தில் உருவாகின்றன. இந்த கீதை போன்றவைகள் அவைகளே உருவாகும். இப்போது இந்த வினாச ஜுவாலையில் அனைத்தும் அழிந்து போகும். நீங்கள் இந்தச் சக்கரத்தை அறிகிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் பள்ளிக் கூடத்திற்குச் சென்று புரிய வைக்க வேண்டும்.

உங்களுடையது எல்லைக்குட்பட்ட வரலாறு புவியியல் ஆகும், இதற்கு யாரும் உலகின் வரலாறு புவியியல் என்று கூற மாட்டார்கள். குழந்தைகள் எல்லையற்ற வரலாறு புவியியலைக் கற்பிக்க வேண்டும் அப்போது இந்த உயர்ந்த பதவியைப் பெறலாம். இது எல்லைக்கப்பாற்பட்டதாகும். இதில் மூன்று உலகங்களின் ஞானமும் வந்து விடுகிறது. ஆரம்பத்தில் நிராகார உலகத்தில் நிறைய ஆத்மாக்கள் வசிக்கிறார்கள். கடைசியில் அனைத்து ஆத்மாக் களும். கீழே வந்து விடுகிறார்கள். சூட்சும வதனவாசி பிரம்மா, விஷ்ணு, சங்கரரின் நடிப்பும் இப்போது தான். எனவே நீங்கள் அவர்களிடம் சத்யுகத்தில் இலஷ்மி நாராயணனின் இராஜ்ஜியம் இருந்தது. பிறகு என்னாயிற்று என உங்களுக்குத் தெரியுமா? எனக் கேட்கலாம். திரேதாவின் கடைசி வரை ஒரேயொரு இலஷ்மி நாராயணனின் இராஜ்யம் இருந்ததா? எவ்வளவு காலம் இருந்தது மற்றும் எவ்வளவு பரப்பளவில் இருந்தது. இப்போது ஆகாயம் பூமியில் கூட பிரிக்கப்பட்டு விட்டது. அங்கே இது போன்ற விஷயங்கள் இல்லை. அங்கே பாரதத்தில் எல்லையற்ற இராஜ்யம் இருக்கிறது. இப்போதோ எவ்வளவு துண்டுகளாகி விட்டது. இது அனைத்தும் சேர்ந்து ஒன்றாக வேண்டும். ஆனாலும் ஆகாது. இப்போது பாபா எல்லையற்ற வரலாறு புவியியலைக் கூறுகின்றார். 84ன் சக்கரத்தில் உலகின் வரலாறு புவியியல் வந்து விடுகிறது. மேலும் கூடவே நிச்சயம் தூய்மை வேண்டும். இப்போது தூய்மையும் இல்லை, அமைதியும் இல்லை, சுகமும் இல்லை.

சந்நியாசிகளிடம் செல்வதால் அமைதி கிடைக்கிறது என மனிதர்கள் நினைக்கிறார்கள். அமைதி உங்களுடைய கழுத்து மாலையாகும் என பாபா கூறுகின்றார். உண்மையில் ஆத்மா வாகிய எனது சுய தர்மமே அமைதியாகும். ஆத்மா எங்கே வசிக்கக் கூடியது. என்றால் நிர்வாண தாமம் என்று கூறுவார்கள். ஆத்மாவின் சுய தர்மமே அமைதி என்றால் குரு போன்றவர்களுக்கு என்ன அமைதி கிடைக்கும்.? அசாந்தம் அடையச் செய்வது மாயை ஆகும். ஸ்ரீமத்படி இந்த மாயையை வெற்றி அடைந்து விடும் போது சத்யுகத்தில் தூய்மை சுகம், சாந்தி போன்ற ஆஸ்திகளைப் பெறலாம். அங்கே ஒரு போதும் யாரும் நான் அசாந்தியாக இருக்கிறேன், எனக்கு அமைதி வேண்டும் எனக் கூற மாட்டார்கள். பாரதத்தில் தான் தூய்மை, சுகம், அமைதி இருந்தது. இப்போது நீங்கள் சூத்திரனிலிருந்து மாறி பிராமணன் ஆகிறீர்கள்.

இச்சமயத்தில் நாம் எந்த தர்மத்தை சார்ந்தவர்கள் என்பது கூட பாரத வாசிகளுக்குத் தெரியவில்லை. நம்முடைய தர்மத்தை யார், எப்போது, படைத்தார்? ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஆரியர் மற்றும் படிக்காதவர்கள். தேவதைகளை பகவான் பகவதி என்கிறார்கள். ஏனென்றால் பகவானே வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கிறார். ஆனால் அவர்களின் பெயர். தேவி தேவதையாகும். பாரதத்தி னுடையது ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் ஆகும். இந்து தர்மம் இல்லை. இந்த பாபா அனைத்து விஷயங்களையும் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். இதுவும் குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் வரிசைக் கிரமத்தில் தான் பதிகிறது. நிறைய குழந்தைகள் சிவபாபாவை வாரத்தில் ஒரு முறை தான் கஷ்டபட்டு நினைக்கிறார்கள். தொடர்பு இல்லாததால் நினைவு மறந்து போகிறது. இதில் பிராமணர்களின் சங்கம் வேண்டும். ஒருவருக்கொருவர் எச்சரிக்கை செய்துக் கொண்டே இருக்கலாம். சூத்திரர்களின் சங்கம் இருந்தால் அதனுடைய தாக்கம் நிச்சயம் ஏற்படும். பாபாவிடமிருந்து முழு சொத்தும் அடைவதற்கு பின்பற்ற வேண்டும். வேலை தொழில் போன்றவைகளில் நாங்கள் வியாபாரத்தில் இருந்து கொண்டே, ஃபேக்டரியில் இருந்து கொண்டே எவ்வளவு நினைவில் இருக்கிறோம் என பாபாவிற்கு உண்மையை எழுத வேண்டும். தன்னுடைய நினைவின் சார்ட் அனுப்பினால் இவர் நல்ல முயற்சியாளர் என்று பாபா புரிந்து கொள்வார். இங்கேயோ பலர் பாப்தாதாவிற்கு கடிதம் எழுதுவதில்லை. சிலர் சதோபிரதானமாக முயற்சி செய்கிறார்கள். சிலர் ரஜோ, சிலர் தமோ என பாபா புரிய வைகின்றார். தமோ முயற்சியாளர்கள் யாரோ அவர்கள் சூரிய வம்சத்தினரரிடம் வந்து வேலை செய்வார்கள். பணக்கார பிரஜைகளின் முன்பு வேலை செய்வார்கள். இவர்களை விட யார் பாபாவினுடையவராகி ஆச்சரியப்படக் கூடிய வகையில் கேட்பார்கள், கூறுவார்கள், விட்டு பிரிந்தும் சென்று விடுவார்கள்….. அவர்களுக்கு குறைந்த பதவியே கிடைக்கும் அவர்களின் கெட்ட நிலை அனைத்திலும் மிகத் தாழ்ந்ததாகும். பாபாவிடமிருந்து முழு சொத்து அடைய வேண்டும் என்றால், கணக்கு வழக்கை அனுப்ப வேண்டும். அப்போது பாபா ரிசல்ட் கொடுப்பார். முழுமையாக முயற்சி செய்யவில்லை என்றால் மாயை ஒரேயடியாக சாப்பிட்டு விடுகிறது. ஆகையினால் சங்கம் மிகவும் அவசியம் என்று பாபா கூறுகிறார். சங்கம் இருந்தால் நாம் ஈஸ்வரிய குலத்தினர் என புரிந்து கொள்ளலாம். கணவன், மனைவி ஒன்றாக வாழுங்கள் ஆனால் நெருப்பு (விகாரம்) பட்டு விட்டால் அழிந்து போகும் என பாபா புரிய வைக்கிறார். பாபாவிற்கு நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள், வருவார்கள், இறப்பார்கள். ஈஸ்வரிய பிறப்பு அசுர பிறப்பை விட உயர்ந்ததாகும்.

தற்காலத்தில் அசுர பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். அதைத் தவிர்த்து ஈஸ்வரிய பிறந்த நாளைக் கொண்டாட ஆரம்பிக்க வேண்டும் என்பது உறுதியாகட்டும். பழைய பிறப்பை கொண்டாடுவதை நீக்கி புதியதைக் கொண்டாடுங்கள் என்று பாபா ஆலோசனை வழங்கு கின்றார். தற்போதோ திருமண நாளைக் கூட கொண்டாடுகிறார்கள். அதையும் தவிர்த்து விட வேண்டும். மாற்றம் வர வேண்டும். பாபா செல்லமான குழந்தைகளுக்கு, இது ஒன்றும் புதிய விˆயம் இல்லை எனக் கூறுகின்றார். நீங்கள் பல முறை இராஜ்ய பாக்கியத்தை இழக்கிறீர்கள், அடைகிறீர்கள். கல்ப கல்பமாக பாபாவிடம் இந்த ஒரு பிறப்பை தியாகம் செய்து 21 பிறவி களுக்கு சுகத்தை அடைந்திருக்கிறீர்கள் என்றால் ஏன் நாம் தூய்மையாகக் கூடாது? பாபா தங்களின் ஸ்ரீமத்படி நடப்போம். அரைக் கல்பமாக அசுர வழிப்படி நடந்தீர்கள். எனவே இங்கே மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மிகப் பெரிய ஆஸ்தியாகும். விஷயத்தைக் கேட்காதீர்கள். பள்ளிக் கூடத்தில் தேர்வில் தேர்ச்சி அடையவில்லை என்றால் முகம் வெளிறிப் போகிறது. இங்கேயும் மிகவும் தண்டனை அடைய வேண்டியிருக்கும். பாபா காட்சிகள் கூட செய்விக்கின்றார். நானே உங்களைப் படிக்க வைத்தேன், ஸ்ரீமத் படி நடங்கள் என்ற கூறினேன், இருப்பினும் ஏற்கவில்லை. எவ்வளவு தவறு செய்துள்ளீர்கள்! 100 மடங்கு தண்டனை கொடுப்பார். ஏனென்றால் பாபாவின் சேவையில் தடை களை ஏற்படுத்துகிறார்கள். பாபாவை நிந்தனை செய்கிறார்கள். ஸ்ரீமத்படி நடக்கக் கூடியவர்கள் சதா இனிமையாக இருப்பார்கள். யார் மீதாவது கோபப்பட்டால் அசுர வழி என்று புரிந்து கொள்ளுங்கள். பாபா சபையில் எங்களை அவமதித்து விட்டார், அனைவர் முன்பும் சொல்லி விட்டார் என சிலர் நினைக்கிறார்கள். அட, எல்லையற்ற தந்தை அனைவரின் மரியாதையையும் அதிகரிக்கின்றார். பாபாவிற்கு இவ்வளவு குழந்தைகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு வருவருக்கும் மறைத்து புரிய வைப்பாரா? பாபாவோ அனைவருக்கும் முன்பும் சொல்கின்றார். பாபாவின் ஸ்ரீமத்தினால் உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் ஆகலாம். தன்னுடைய வழிப்படி நடந்ததால் விழுந்து விடுவீர்கள். விழுந்து விழுந்து இறந்து போவார்கள். இங்கே இருப்பதோ கவலைகளின் சிதையாகும். எங்கே கவலையின் பெயரே இருக்காதோ அங்கே பாபா அழைத்துச் செல்கிறார். எனவே ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். பிறகு என்ன விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள். ஸ்ரீலஷ்மியை மணப்பதற்கு தைரியம் வேண்டும். தன்னுடைய முகத்தைக் கண்ணாடியில், நாம் எவ்வளவு தகுதி அடைந்திருக்கிறோம் எனப் பார்க்க வேண்டும். ஜகதம்பா முக்கியமானவர் ஆவார். 16000, 108ன் மாலை இருக்கிறது. ருத்ர யாகத்தைப் படைக்கும் போது இலட்சக் கணக்கான சாலிகிராமங்கள், ஒரு சிவனின் சித்திரத்தை உருவாக்குகிறார்கள். எனவே, நிச்சயமாக அவர்கள் அனைவரும் உதவியாளர்கள் அல்லவா. நீங்கள் அனைவரும் ஆன்மீகப் பயணிகள், பிரம்மாவின் வாய் வழி வம்சம். சங்கமயுக பிராமணர்கள் பரம பிதா பரமாத்மா பிரம்மா மூலமாக புதிய படைப்பைப் படைக்கிறார். தர்மத்தின் குழந்தைகளை உருவாக்குகிறார்கள். நீங்கள் சூத்திர தர்மத்திலிருந்து மாறி வந்து பிரம்மாவின் வாய் வழி வம்சத்தினர் ஆகிறீர்கள். மாயா மிகப் பெரிய எதிரியாகும். யோகம் செய்தவற்கு விடுவதில்லை. எங்களை யோகத்தில் அமர வையுங்கள் என ஒரு போதும் கூறாதீர்கள் என பாபா கூறுகிறார். ஒரே இடத்தில் அமர்ந்து யோகா செய்யக் கூடிய பழக்கம் வந்து விட்டால் பிறகு போகும் போதும் வரும் போதும் யோகா செய்ய முடியாது. நாங்கள் தீதியிடம் சென்று யோகத்தில் அமர்கிறோம் என கூறுவார்கள். போகும் போதும், வரும் போதும் பாபா மற்றும் ஆஸ்திகளை நினையுங்கள் என்று இந்த பாபா தான் கூறுகிறார். அவ்வளவு தான். அந்த கீதையைக் கூறுபவர்கள் இவ்வாறு கூற முடியாது. இந்த பாபா தான் என்னை மட்டும் நினையுங்கள் என்று கூறுகிறார். சொர்க்கத்தைக் கூட நீங்கள் சாட்சாத்காரம் செய்திருக்கிறீர்கள். பாபா இப்போது நிறைய செய்விப்பதில்லை. இல்லை என்றால் புதியவர்கள் மந்திரம் என நினைப்பார்கள்.

கீதை மம்மாவின் மகிமையைப் பற்றியது. மம்மா இவர் (பிரம்மா) ஆவார். ஆனால் தாய்மார்களைப் பார்த்துக் கொள்வதற்கு ஜகதம்பா நிச்சயிக்கப்பட்டிருக்கிறார். நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது அனைவரை விடவும் கூர்மையானவர். அவருடைய முரளி மிகவும் சுவையானது. ஸ்ரீகிருஷ்ணன் இளவரசனில் இருந்து ஏழ்மையாக ஆகிவிட்டார் என குழந்தை களாகிய நீங்கள் அறிகிறீர்கள். (ஸ்ரீகிருஷ்ணரின் சித்திரத்தைப் பார்த்து) நீ என்ன காரியம் செய்தாய் சொர்க்கத்திற்கே இளவரசன் ஆகிவிட்டாய் சொல். நிச்சயமாக முந்தைய பிறவியில் இராஜயோகத்தைக் கற்றிருப்பார். நிச்சயமாக பாபா தான் சொர்க்கத்தைப் படைப்பவர். அவர் கற்பித்திருப்பார். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. பாபாவின் சேவையில் தடை ரூபமாக இருக்கக் கூடாது. ஸ்ரீமத் படி நடந்து மிக மிக இனிமையாக மாற வேண்டும். யார் மீதும் கோபப்படக் கூடாது.

2. மாயாவிடமிருந்து தப்பிப்பதற்கு சங்கத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சூத்திரர்களின் சங்கத்தில் சேரக் கூடாது. பாபாவிற்கு தன்னுடைய உண்மையிலும் உண்ûமான கணக்கு வழக்கைக் கொடுக்க வேண்டும். ஈஸ்வரிய பிறந்த நாள் கொண்டாட வேண்டும் அசுர பிறந்த நாள் அல்ல.

வரதானம்:-

நேரத்தின் சூழ்நிலைகளுக்குத் தகுந்தபடி, தனது முன்னேற்றம் மற்றும் தீவிரவேகத்தோடு சேவை செய்வதற்கான மேலும் பாப்தாதாவின் அன்பிற்கான கைமாறு அளிப்பதற்கு தற்சமயத் தின் தபஸ்யா மிகவும் அவசியமாக இருக்கிறது. பாபாவிற்கு குழந்தைகளிடம் அன்பு இருக்கிறது, ஆனால் பாப்தாதா அன்பிற்கு கைமாறாக சொரூபத்தில் குழந்தைகளை தனக்கு சமமாகப் பார்க்க விரும்புகிறார். சமமானவர் ஆவதற்காக தபஸ்யா மூர்த்தி ஆகுங்கள். ஆகையால் நாலா பக்கத்தின் விஷயங்களை ஒதுக்கிவிட்டு எல்லைக்கு அப்பாற்பட்ட வைராக்கியம் உடையவர் ஆகுங்கள். ஒதுக்குதலை ஆதரவாளராக மாற்றிக்கொள்ளாதீர்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top