22 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

January 21, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே ! எந்த ஒரு விதமான பேராசையும் குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்கக் கூடாது. யாரிடமும் எதுவும் கேட்க வேண்டியதில்லை. ஏனென்றால், நீங்கள் வள்ளலின் குழந்தைகள் வழங்கக் கூடியவர்கள்.

கேள்வி: -

நீங்கள் இறை மாணவர்கள் உங்களுடைய லட்சியம் எது? எது இல்லை?

பதில்:-

பாபா மூலமாக கிடைத்துக் கொண்டிருக்கக் கூடிய ஞானத்தை கடைப்பிடித்தல், நல்ல மதிப்புடன் தேர்ச்சி பெறுதலே உங்களுடைய லட்சியமாகும். மற்றபடி இது வேண்டும், இது வேண்டும்….. இப்படிப்பட்ட ஆசைகளை வைப்பது உங்களுடைய லட்சியம் அல்ல. நீங்கள் எந்த ஒரு மனித ஆத்மாவுடனும் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொண்டு கணக்கு வழக்கை உருவாக்காதீர்கள். பாபாவின் நினைவிலிருந்து கர்மாதீத் ஆவதற்கான முயற்சி செய்யுங்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

குழந்தை பருவத்தை மறந்துவிடாதீர்…

ஓம் சாந்தி. இது ஆன்மீகத் தந்தை மற்றும் குழந்தைகளின் சம்மந்தம் என்பதை குழந்தைகள் அறிகிறீர்கள். ஆன்மீகத் தந்தையும் அமர்ந்திருக்கிறார். மேலும் குழந்தைகளும் இப்போது அமர்ந்திருக்கிறீர்கள். சன்னியாசி போன்றோர் இருப்பார்கள், தன்னுடைய ஆசிரமத்திலிருந்து எங்காவது சென்றால் இந்த சன்னியாசி இங்கே வசிக்கிறார், கீதா சாஸ்திரம் போன்றவைகளை கூறுகிறார் என்பர். இது ஒன்றும் புதியது அல்ல! ஈஸ்வரனை சர்வ வியாபி என்று சொல்வதால் அனைத்து ஞானமும் அழிந்து போகிறது. இப்போது இவரோ ஆன்மீகத் தந்தை. அவரை அனைத்து ஆத்மாக்களும் நினைக்கிறார்கள். ஆத்மா தான் ஓ, பரம்பிதா பரமாத்மா! என்கிறது. துக்கம் ஏற்படும் போது லௌகீகத்தை ஒன்றும் நினைக்க மாட்டார்கள். எல்லையற்ற தந்தையைத் தான் நினைக்கிறார்கள். சன்னியாசி போன்றோர் பிரம்ம தத்துவத்தை நினைத்தார் கள். அவர்கள் பிரம்ம ஞானிகள். தந்தையை நினைவு செய்வதில்லை. சிவோஹம் என்கிறார் கள். நாம் ஆத்மாவே பரமாத்மா என்கின்றனர். ஆனால் பிரம்மம் மற்றும் தத்துவமோ வசிக்க கூடிய இடமாகும். இந்த விˆயங்கள் முற்றிலும் புதியது. இந்த ஞானம் மறைந்து போகிறது. சாஸ்திரங்களில் என்னுடைய ஞானம் கிடையாது. என்னுடைய ஞானம் இல்லாத காரணத்தால் நீங்கள் யாருக்காவது புரிய வைக்கும் போது இது புதிய விˆயம் என்கிறார்கள். நிராகார் பரமாத்மா ஞானம் அளிக்கின்றார். இது அவர்களின் புத்தியில் வருவதில்லை. கிருஷ்ணர் ஞானம் கூறினார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே குழம்பிப் போகிறார்கள். பாபா ஒவ்வொரு விˆயத்தையும் தெளிவு படுத்திக் கூறுகிறார். பக்தி மார்க்கத்தில் நீங்கள் அனைவரும் நினைக்கிறீர்கள். பக்தர்கள், அனைவரும் பக்தர்களே, பகவான் ஒருவரே ஆவார். அனைவருக்குள்ளும் பகவான் இருக்கிறார் என புரிந்துக் கொண்ட காரணத்தால் அனைவரை யும் பூஜிக்கின்றார்கள். முதலில் தூய்மையான ஒரு சிவனின் பக்தி நடக்கிறது. ஆனால் அவர் என்ன செய்து விட்டுச் சென்றார், எப்போது வந்தார் என்ற ஞானம் இல்லை. இதை அறியவில்லை. ஆனால் அது தூய்யைமான பக்தியாகும். யார் மூலமாக சுகம் கிடைக்கிறதோ அவர்களின் பூஜை நடக்கிறது. லஷ்மி நாராயணனின் இராஜ்யத்தில் அளவற்ற சுகம் இருந்தது. அவர்கள் சொர்க்கத்தின் தேவதையாக இருந்தனர். லஷ்மி நாராயணனை சத்யுகத்தின் முதன் முதல் மகாராஜா மகாராணியாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் சத்யுகத்தின் ஆயுள் தெரியவில்லை. பாபா ஒவ்வொரு விˆயத்தையும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். குழந்தைகள் தான் பிராமணர்கள் ஆவார்கள். இது புதிய படைப்பு அல்லவா? பரம்பிதா பரமாத்மா பிரஜா பிதா பிரம்மா மூலமாக புது சிருஷ்டியைப் படைக்கின்றார் என நீங்கள் அனைவருக்கும் புரிய வைக்கலாம். இதை அனைவரும் புரிந்துக் கொள்கின்றனர். இல்லை என்றால் பிரஜா பிதா என்று ஏன் கூறுவார்கள். இந்த விˆயங்களை குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிகிறீர்கள். வேறு யாரும் அறியவில்லை. அவர்களுக்கு இந்த புது புது விˆயங்கள் புரிவதில்லை. கேட்டு கேட்டு உறுதியாகும் போது தான் நாம் எவ்வளவு ஆழமான இருளில் இருந்திருக்கிறோம் என புரிந்துக் கொள்கிறார்கள். பகவானைப் பற்றியும் அறியவில்லை. தேவதையை பற்றியும் அறியவில்லை. யார் வாழ்ந்து விட்டு சென்றனரோ அவர்களின் முன் பக்தி செய்கின்றனர். நீங்கள் ஜெயந்தி கொண்டாடுகிறீர்களே அந்த பரம்பிதா பரமாத்மாவுடன் உங்களுக்கு என்ன தொடர்பு இருக்கிறது என கேளுங்கள். அவர் என்ன செய்து விட்டு சென்றார் என்று எதையும் அவர்களால் கூற முடியாது. கிருஷ்ணரைப் பற்றி வெண்ணை திருடினார், இதை செய்தார், ஞானம் கொடுத்தார் என்று கூறுகிறார்கள். எவ்வளவு குழப்பம்? வள்ளல் ஒரு ஈஸ்வரன் தானே தவிர கிருஷ்ணரை வள்ளல் என கூற முடியாது. அவர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். இது அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. பாபா எவ்வளவு நன்றாகப் புரிய வைக் கிறார். சுருக்கமாக சில விˆயங்கள் கூட மனிதர்களின் புத்தியில் பதிவதில்லை. ஒரு வேளை ஒவ்வொருவரின் 84 பிறவிகளின் கதையை எடுத்தால் எவ்வளவு இருக்கும் என தெரியாது. இந்த விˆயங்களை விட்டு விட்டு என்னை மட்டும் நினையுங்கள் என பாபா கூறுகிறார். சிறிது விஸ்தாரமாக எப்போதாவது புரிய வைத்தால் மனிதர்களின் சந்தேகம் விலகி விடும். மற்றபடி என்னை நினையுங்கள் என்பது சிறிய விˆயம் தான். ஈஸ்வரனை நினையுங்கள் என்ற மந்திரம் கொக்கின்றார். ஆனால் ஈஸ்வரனை நினைப்பதால் உங்களின் விகர்மங்கள் அழியும், மேலும் ஈஸ்வரனிடம் செல்வீர்கள் என்று கூற மாட்டார்கள். கங்கையில் நீராடுவதால் விகர்மம் அழியாது என்பதை பாபா தான் புரிய வைக்கிறார். இச்சமயம் விகர்மங்களின் சுமை மிகவும் கடுமையானது. நல்ல கர்மங்கள் சிறிது தான் நடக்கிறது. மற்றபடி பல பிறவிகளாக விகர்மங்கள் நிறைய நடந்துள்ளன. எவ்வளவு தான் ஞானம் யோகத்தில் இருந்தாலும் இந்த விகர்மங்கள் விலகுவதில்லை. கர்மாதீத் ஆகும் போது உங்களுக்கு புதிய பிறவி புதிய உலகத்தில் கிடைக்கும். ஒரு வேளை சிறிது விகர்மம் இருந்தால் பழைய உலகில் இன்னொரு பிறவி எடுக்க வேண்டியிருக்கும். குழந்தைகளுக்கு நிறைய ஞானம் கிடைத்துக் கொண்டிருக் கிறது. வேறு எதுவும் புரியவில்லை என்றால் அப்பாவை நினையுங்கள் என்று பாபா கூறுகிறார். இதனால் நொடியில் சொர்க்கத்தின் சக்கரவர்த்தி பதவி கிடைத்து விடும். கடவுள், நண்பன் என்ற ஒரு கதை இருக்கிறது. அதில் ஒரு நாளைக்காக மட்டும் சக்ரவர்த்தி பதவியை கொடுத்தனர். ஆனால் இப்போது தாயும் தந்தையும் நீயே, நண்பனும். நீயே என்பது பாபா தான் என அறிகிறீர் கள். அப்படியென்றால், இறைவன் நண்பனாகி விட்டார் அல்லவா.? அல்லா அலாவுதீன், இறை நண்பன் என்ற இந்த விˆயங்கள் அனைத்தும் இச்சமயத்தினடையதாகும். ஒரு நொடியில் பாபா உங்களுக்கு சொர்க்கத்தின் இராஜ்ய பதவியை அளிக்கிறார். பெண் குழந்தைகள் தியானத்தில் (டிரான்ஸ்) செல்லும் போது அங்கே இளவரசன் இளவரசி ஆகியிருந்தனர். அங்கே இருக்கும் அனைத்து விˆயங்களையும் வந்து கூறினர். இப்போது நீங்கள் பாபாவை அறிகிறீர்கள். சொர்க்கத்தின் இறை தந்தை நிச்சயமாக புது உலகத்தின் சொர்க்கத்தைத் தான் படைப்பார் என அனைவரும் கூறுகிறார்கள். பாரதமே பொற் காலமாக இருந்தது. அச்சமயம் வேறு எந்த தர்மமும் இல்லை. கிறிஸ்து வருவதற்கு 3000 வருடங்களுக்கு முன்பு பாரதம் சொர்க்கமாக இருந்தது என கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். அங்கே லஷ்மி நாராயணன் இராஜ்யம் செய்தனர். ஆகவே தான் இவர்களுக்கு இந்த ஆஸ்தி எங்கிருந்து கிடைத்தது என கேட்கிறார்கள். பாரத வாசி களுக்கு இவர்களுடன் என்ன சம்பந்தம் இருக்கிறது? இவர்கள் முதலில் சொர்க்கத்திற்கு அதிபதியாக இருந்தனர். இப்போது நரகமாக இருக்கிறது. இவர்கள் எங்கே சென்றனர். பிறப்பு இறப்பை ஏற்கிறார்கள் அல்லவா? ஆத்மா பிறப்பு இறப்பில் வரும் போது தான் 84 பிறவிகளை எடுக்கும். இல்லையென்றால் எப்படி எடுக்கும் உலகத்தில் பல வழிகள் உள்ளன. சிலர் மறுபிறவியை ஏற்கிறார்கள். சிலர் ஏற்பதில்லை. பரம்பிதா பரமாத்மா சிவனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்க வேண்டும். இந்த பிரம்மா விஷ்ணு, சங்கர் யார்? எங்கே வசிக்கக் கூடியவர்கள். நீங்கள் சூட்சும வதனம் என்று கூறுவீர்கள். வேறு யாரும் கூற முடியாது. உங்களுக்கு எவ்வளவு எளிதாக இருக்கிறது. தாய்மார்களுக்கு தொழில், வேலை போன்ற எந்த கவலையும் கிடையாது. வீட்டில் வசிக்கக் கூடியவர்கள் எந்த ஒரு வேலை தொழில் பற்றிய கவலைகள் இல்லை. அப்பாவிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும். ஆண் களுக்கு ஆர்வம் இருக்கிறது. நீங்கள் தங்களின் பதவியை அடையுங்கள். உலகத்திற்கு அதிபதியாகுங்கள் என்று பாபா உங்களுக்கு கூறுகின்றார். பணக்காரர்களுக்கு எவ்வளவு கவலை இருக்கிறது. உலகத்தில் லஞ்சம் வாங்கும் பழக்கம் நிறைய இருக்கிறது. உங்களுக்கு லஞ்சம் போன்றவை வாங்க வேண்டிய அவசியம் இல்லை, அது வியாபாரிகளின் வேலையாகும். நீங்கள் இதிலிருந்து எல்லாம் விடு பட்டு இருக்கிறீர்கள். இருப்பினும் மாயை குடுமியுடன் பிடித்துக் கொள்கிறது. ஆகையால் ஏதாவது கொஞ்சம் பேராசை இருக்கிறது என்றால், மாணவர்களிடம் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். குழந்தைகளே யாரிடமும் கேட்காதீர்கள் என பாபா கூறுகிறார். நீங்கள் வள்ளலின் குழந்தைகள் அல்லவா? நீங்கள் கொடுக்க வேண்டுமா? அல்லது கேட்க வேண்டுமா? உங்களுக்கு என்ன வேண்டுமோ சிவபாபாவிடமிருந்து கிடைக் கிறது. வேறு யாரிடமிருந்தாவது வாங்கினால் அவர்களின் நினைவு வரும். ஒவ்வொரு பொருளையும். சிவபாபாவிடமிருந்து பெற்றால் அடிக்கடி உங்களுக்கு சிவபாபாவின் நினைவு ஏற்படும். உங்களின் கொடுக்கல் வாங்கலின் கணக்கு என்னுடன் தான் என்று சிவபாபா கூறு கின்றார். இந்த பிரம்மாவோ இடையில் தரகர் ஆவார். கொடுக்கக் கூடியவர் நானே! நீங்கள் என்னுடன் பிரம்மா மூலமாக தொடர்பு வையுங்கள். எந்த ஒரு பொருளையும் மற்றவர்களிடமிருந்து வாங்கினால், உங்களுக்கு அவர்களின் நினைவு ஏற்படும். மேலும் நீங்கள் விபச்சாரி ஆகிவிடுவீர்கள். சிவபாபாவின் பண்டாராவிலிருந்து நீங்கள் பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள், வேறு யாரிடமும் கேட்காதீர்கள். இல்லையென்றால், கொடுப்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. ஏனென்றால் அவர்கள் சிவபாபாவின் பண்டாராவிற்குக் கொடுக்க வில்லை. சிவபாபாவின் பண்டாராவிற்கு கொடுக்க வேண்டும். மனிதர் களிடம் கொடுக்கல் வாங்கலின் தொடர்பை நீண்ட காலம் வைத்திருந்தீர்கள். இப்போது உங்களுடைய தொடர்பு நேரடியாக சிவபாபாவிடம் உள்ளது. ஆனால் குழந்தைகளுக்குள் பேராசை என்ற பூதம் இருக்கிறது என பாபாவிற்குத் தெரிகிறது.

நாங்கள் சிவபாபாவைப் பார்க்கவில்லை என பல குழந்தைகள் கூறுகிறார்கள். அட, நீங்கள் உங்களைப் பார்த்திருக்கிறீர்களா? உங்களுக்கு தங்களின் ஆத்மாவின் காட்சி கிடைத்திருக் கிறதா? எங்களுக்கு சிவபாபாவின் சாட்சாத்காரம் வேண்டும் என கூறுகிறீர்கள். நம்முடைய ஆத்மா புருவ மத்தியில் இருக்கிறது என நீங்கள் அறிகிறீர்கள். சிவபாபாவும் புருவ மத்தியில் தான் இருப்பார். ஆத்மாவானது ஒரு உடலை விட்டு விட்டு இன்னொன்றை எடுக்கிறது என நீங்கள் அறிகிறீர்கள். எந்த நேரத்திலாவது ஆத்மாவின் காட்சி கிடைக்கலாம். ஆத்மா நட்சத்திரம் போன்று இருக்கிறது. காட்சியும் தெய்வீக திருஷ்டியினால் தான் கிடைக்கும். சரி, நீங்கள் கிருஷ்ணரின் பக்தி செய்யுங்கள். சாட்சாத்காரம் கிடைக்கலாம். பிறகு என்ன நன்மை இருக்கிறது. பரமாத்மாவின் சாட்சாத்காரமும் கிடைக்கிறது, என்ன நன்மை? இருப்பினும் நீங்கள் படிக்க வேண்டும் அல்லவா? பக்தி மார்க்கத்தில் காட்சிகள் கிடைக்கிறது என்றால், அவர்களை எவ்வளவு புகழ் பாடுகிறார்கள்! ஆனால் எதுவும் கிடைப்பதில்லை. சிவபாபா ஞானக் கடல் ஆவார். பிரம்மாவை ஞானக் கடல் என கூற மாட்டார்கள் அல்லவா? பிரம்மாவிற்கும் அவரிடமிருந்து ஞானம் கிடைக்கிறது. தற்காலத்தில் அனைவரின் முன்பும் சிவலிங்கத்தை வைத்து விடுகிறார்கள். எதையும் புரிந்துக் கொள்வதில்லை. பூஜை செய்கிறார்கள். ஆனால் யாருடைய வாழ்க்கை வரலாற்றை பற்றியும் சொல்ல தெரியாது. இந்த ஞான ரத்தினங்களைப் புரிந்துக் கொள்ள முடியாது. இரத்தினங்களை எடுத்துக் கொண்டிருக்கும் போதே மாயை பலரை குரங்காக்கி விடுகிறது. எங்களுக்கு இரத்தினங்கள் வேண்டிய தில்லை என கூறுகிறார்கள். இருப்பினும் சிவாலயத்திற்கு வருவார்கள். ஆனால் பிரஜை பதவியும் கிடைக்காது என்று பாபா புரிய வைக்கிறார். முயற்சி செய்து உயர்ந்த பதவி பெற வேண்டும். நான் வைகுண்டத்தின் சக்கரவர்த்தி பதவியை கொடுப்பதற்காக வந்திருக்கிறேன் என பாபா கூறுகிறார். நீங்கள் முயற்சி செய்து பிறரை தனக்கு சமமாக மாற்றுங்கள். நீங்கள் பூசாரிகளிடம் கூட இவர் யார் என கேட்கலாம். நெருப்பு வாங்குவதற்காக வந்தனர், பிறகு அதிபதியாகி அமர்ந்து விட்டனர் என கூறுகிறார்கள் அல்லவா? சில பூசாரிகளின் புத்தியில் கூட நன்கு பதிந்து விடுகிறது. நாம் பூஜாரியாக இருந்தோம். இப்போது பூஜைக்குரியவராக மாறிக் கொண்டிக் கின்றோம். இந்த லஷ்மி நாராயணன் பூஜைக்குரியவராக எந்த முயற்சியினால் மாறியிருக்கிறார்கள் என்று நீங்கள் புரிய வைக்கலாம். என்னுடைய பக்தர்கள் எங்கே இருக்கிறார்களோ அவர்களுக்கு புரிய வையுங்கள் என பாபா கூறுகிறார். சிவனுடைய கோவில், லஷ்மி நாராயணன் கோவில், ஜகத்தம்பா கோவிலில் செல்லுங்கள், பூசாரிகளுக்குப் புரிய வையுங்கள். அவர்கள் பிறகு மற்றவர்களுக்குப் புரிய வைப்பார்கள். பூசாரிகள் அமர்ந்து ஜகத்தம்பாவைப் பற்றி யாருக்காவது புரிய வைத்தால் அனைவரும் குஷி அடைவார்கள். நீங்கள் இந்த விஷயங்கள் அனைத்தையும் புரிந்துக் கொள்ளுங்கள் என அவர்களுக்குக் கூற வேண்டும். நீங்கள் யாருக்காவது அமர்ந்து இந்த தேவதைகளின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிவித்தால் உங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும். யார் ஆத்ம உணர்வில் இருக்கிறார்களோ அவர்களே இதையும் புரிய வைக்க முடியும். தேக உணர்வில் இருப்பவர்களுக்கு முழு நாளும் இது வேண்டும், இது வேண்டும் என்ற பேராசை இருக்கிறது. மாணவர்களுக்கு ஞானத்தின் இந்த பேராசை இருக்க வேண்டும் அதாவது நான் மதிப்புடன் தேர்ச்சி பெற வேண்டும். இது தான் படிப்பின் லட்சியம் ஆகும்.

நாடகத்தின் இரகசியத்தைக் புரிந்துக் கொள்ள வேண்டும். நாடகம் ஒன்றும் நீளமானது இல்லை. ஆனால் சாஸ்திரங்களில் இதன் ஆயுளை நீளமாக எழுதியிருக்கின்றனர். இது அனைத்தும் புத்தியில் வர வேண்டும். சேவை நிறைய இருக்கிறது. யாராவது செய்து காட்டுங்கள். பாபாவிடம் எந்த ஒரு கருணையும் கேட்க வேண்டியது இல்லை, பகவானிடம் பிள்ளை தாருங்கள், குலம் வளர்ச்சி அடையட்டும் என கேட்கிறார்கள். அட, பாபாவோ தனது குலத்தை விருத்தி அடைய செய்துக் கொண்டிருக்கிறார். இச்சமயம் தேவதா குலம் விருத்தி அடைந்துக் கொண்டிருக்கிறது. இப்போது ஈஸ்வரிய குலத்தின் விருத்தி ஏற்படுகிறது. நீங்களும் ஈஸ்வரிய வாரிசுகள், இந்த ஆசைகள் அனைத்தையும் விட்டு விட்டு ஒரு தந்தையை மட்டும் நினையுங் கள் என பாபா புரிய வைக்கிறார். பந்தனங்கள் போன்றவை இருக்கிறது. இது அனைத்தும் கர்மத்தின் கணக்காகும். பாபாவிற்கு எவ்வளவு பந்தனங்கள் இருக்கிறது பாருங்கள். எவ்வளவு குழந்தைகளைப் பற்றிய கவலை இருக்கிறது. எவ்வளவு சிறு சிறு பூசல்கள், இருக்கிறது. எவ்வளவு நிந்தனைகள் செய்கிறார்கள். சேவைக்கு குந்தகம் விளைவிப்பது எளிது. சேவை செய்வது கடினமாகும். ஒருவர் கெட்டவராக இருந்தால் 10-20 பேரை கெடுத்து விடுகிறார்கள். மீதம் 5-8 மிகவும் கஷ்டபட்டு வருகிறார்கள். பல சென்டர்களில் வந்துக் கொண்டும் இருக்கிறார்கள். பிறகு முகத்தில் கரியும் பூசிக் கொள்கிறார்கள். இவ்வாறு குரங்கு புத்தி உடையவர்கள் வாயு மண்டலத்தைக் கெடுக்கிறார்கள். இப்படிப் பட்டவர்களை ஏன் உட்கார வைக்கிறீர்கள். முகத்தில் கரி பூசினால் அவர்களின் தாக்கம் நீண்ட நேரம் இருக்கிறது. ரெஜிஸ்டரில் தெரிந்து விடுகிறது. நான்கு ஐந்து வருடங்கள் வந்து பிறகு வருவதை விட்டு விடுகின்றனர். இவ்வாறு செய்வதால் நீங்கள் இராஜ்ய பதவியைப் பெற முடியாது என பாபா புரிய வைக்கின்றார். கல்லாகி விட்டனர் என்பது போன்ற இந்திரப் பிரஸ்தத்தின் கதை கூட இருக்கிறது., நீங்களும் கல்புத்தி ஆகிவிடுவீர்கள் தங்கமாக முடியாது. இருப்பினும் முயற்சி செய்வதில்லை. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப் பட்டிருக்கிறது இராஜ்யத்தில் வரிசைக் கிரமம் வேண்டும். பணியாள், சண்டாளன் அனைவரும் வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகத் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. லௌகீக ஆசைகளை விட்டு விட்டு ஈஸ்வரிய குலத்தை விருத்தி செய்வதில் உதவியாளர் ஆக வேண்டும். எந்த வகையிலும் சேவைக்கு தடையை ஏற்படுத்தும் வேலையை செய்யக் கூடாது.

2. கொடுக்கல் வாங்கலின் தொடர்பு ஒரு தந்தையிடம் இருக்க வேண்டும். எந்த தேகதாரி யிடமும் இருக்கக் கூடாது

வரதானம்:-

இறுதி நேரத்தில் நாலாபுறங்களிலும் மனிதர்களுடைய, இயற்கையினுடைய குழப்பமும் மற்றும் சப்தமும் இருக்கும். கூக்குரல் இடுவதும், அசைக்கக்கூடிய வாயு மண்டலமும் இருக்கும். அத்தகைய சமயத்தில் ஒரு நொடியில் நான் அவ்யக்த ஃபரிஷ்தா மற்றும் நிராகாரி அசரீரி ஆத்மா ஆவேன் என்ற இந்தப் பயிற்சியே வெற்றியாளர் ஆக்கும். ஆகையினால், எஜமானன் ஆகி எப்பொழுது விரும்புகிறீர்களோ வாய் மூலம் இசை இசைக்க வேண்டும், காதுகள் மூலம் கேட்க வேண்டும், விரும்பவில்லை என்றால் ஒரு நொடியில் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் – இந்தப் பயிற்சி நீண்டகாலம் இருக்க வேண்டும். இந்தப் பயிற்சியே நினைவு அதாவது வெற்றி மாலையில் அழைத்துச் செல்லும்.

சுலோகன்:-

அன்பில் லயித்திருக்கும் நிலையை (லவ்லின் ஸ்திதி) அனுபவம் செய்யுங்கள்.

நாளின் ஆரம்ப வேளையில் அமிர்தவேளையில் தன்னுடைய உள்ளத்தில் பரமாத்ம அன்பை சம்பூரணமாக தாரணை செய்துவிடுங்கள். ஒருவேளை, உள்ளத்தில் பரமாத்ம அன்பு, பரமாத்ம சக்திகள், பரமாத்ம ஞானம் முழுமையாக இருக்குமானால் ஒருபொழுதும் வேறு யார் மீதும் பற்று அல்லது அன்பு செல்ல முடியாது.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

1 thought on “22 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris”

  1. 🌐🅱️🅰️🅱️🅰️ LOVE 🅱️🅰️🅱️🅰️ LOVE 🅱️🅰️🅱️🅰️ LOVE 🕉️ SHANTI 🇲🇰🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏👼☀️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top