22 August 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

22 August 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

21 August 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

பாக்கிசாலி குழந்தைகளின் சிறந்த பாக்கியங்களின் பட்டியல்

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று பாக்கியத்தை உருவாக்கக்கூடிய பாப்தாதா தனது பாக்கியசாலி குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு பிராமண குழந்தைகளின் பாக்கியம் (தலைவிதி) உலகத்திலுள்ள சிறந்த ஆத்மாக்களை விட மிகவும் உயர்ந்ததாக இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பிராமண ஆத்மாக் களும் கோடியில் சிலர், சிலரிலும் ஒரு சிலராகத் தான் இருக்கிறார்கள். உலகத்திலுள்ள 500 மில்லியன் ஆத்மாக்கள் எங்கே ! மற்றும் பிராமணர்களாகிய உங்களின் சின்னஞ்சிறிய உலகம் எங்கே! அவர்களை (உலகத்தை) ஒப்பிடுகையில் எந்தளவு குறைவானவர்களாக இருக்கின்றோம். ஆகையால் ஞானமில்லாத, தன்னைப் பற்றி தெரியாத ஆத்மாக்களை ஒப்பிடுகையில் பிராமண ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சிரேஷ்ட பாக்கியசாலிகளாக இருக்கிறீர்கள். ஒவ்வொரு பிராமணர்களின் நெற்றியிலும் பாக்கியத்தின் ரேகை மிக தெள்ள தெளிவாக நட்சத்திரத்தை போல ஜொலித்துக் கொண்டிருப்பதை பாப்தாதா பார்த்துக் கொண்டிருக் கிறார். எல்லைக்குட்பட்ட ஜோதிடர்கள் கைகளின் ரேகைகளின் அமைப்பை பார்க்கிறார். ஆனால் இந்த தெய்வீக ஈஸ்வரிய பாக்கியத்தின் ரேகையை ஒவ்வொருவரின் நெற்றியிலும் தென்படுகிறது. எந்தளவு உயர்ந்த பாக்கியம் அந்தளவு பாக்கியசாலி குழந்தைகளின் நெற்றியில் சதா அலௌகீக ஒளி ஜொலித்துக் கொண்டே யிருக்கும். பாக்கியசாலி குழந்தைகளின் மற்ற அடையாளங்கள் என்ன தென்படுகிறது? சதா முகத்தில் ஈஸ்வரிய ஆன்மீக புன்னகை உணர முடியும். பாக்கியசாலிகளின் கண்கள் அதாவது தெய்வீக பார்வை எவருக்கு வேண்டு மானாலும் எப்பொழுதும் குஷியின் அலை உருவாக்குவதற்கு கருவி ஆகிறது. யாருக்கெல்லாம் திருஷ்டி கிடைக்கிறதோ, அவர்களுக்கு ஆன்மீகத் தன்மையின், ஆன்மீக தந்தையின், பரமாத்மா நினைவு அனுபவமாகும். பாக்கியசாலி ஆத்மாக்களின் தொடர்பில் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் இலேசான அதாவது ஒளியின் அனுபவம் ஏற்படும். பிராமண ஆத்மாக்களில் கூட நம்பர்வார் (வரிசைகிரமம்) என்பது இறுதிவரை இருக்கத் தான் செய்யும், ஆனால் அடையாளங்களும் கூட நம்பர்வார் அனைத்து பாக்கியசாலி குழந்தைகளினுடையதாகும். போக போக மேலும் கூட பிரத்யக்ஷம் ஆகிக்கொண்டே இருக்கும்.

இப்பொழுது சிறிது காலம் போகவிடுங்கள்,. இன்னும் சிறிது காலத்தில் உச்சநிலை, இறுதி நிலை – இரண்டுமே அனுபவம் ஆகும்பொழுது நாலாபக்கத்திலும் ஞானமில்லாத ஆத்மாக்களை எல்லைக்குட் பட்ட வைராக்கிய உள்ளுணர்வில் வருவார்கள். மேலும் பாக்கியசாலி ஆத்மாக்களகிய நீங்களும் எல்லைக்கு அப்பாற்பட்ட வைராக்கிய உள்ளுணர்வை அனுபவத்தில் கொண்டு வருவீர்கள். இப்பொழுது உலகத்தினருக்கு வைராக்கியம் இல்லை. ஒருவேளை கொஞ்சம் அதிகமாக ரிகர்சல் (விநாசத்தின் ஒத்திகை) நடந்தாலும் கூட இது நடந்துக் கொண்டு தான் இருக்கும் என்று மேலும் அலட்சியம் என்ற தூக்கத்தில் தூங்கிவிடுகிறார்கள். ஆனால் எப்பொழுது உச்சநிலை மற்றும் இறுதி காலக்கட்டத்தின் காட்சி முன்னால் வருகிறது என்றால் தானாகவே எல்லைக்குட்பட்ட வைராக்கிய உள்ளுணர்வு உருவாகும் மேலும் உச்சக்கட்ட டென்சன் (மன உளைச்சல்) இருக்கும் காரணத்தினால் அனைவரது கவனமும் ஒரு பாபாவிடம் செல்லும். அந்த நேரத்தில் அனைத்து ஆத்மாக்களின் உள்ளத் திலிருந்தும் அனைவரையும் படைப்பவர், அனைவருக்கும் தந்தையானவர் ஒருவர் தான், மேலும் புத்தி பல வழிகளிலிருந்து விடுப்பட்டு ஒரு பக்கம் தானாகவே இருக்க வேண்டும் என்ற சப்தம் வெளிப்படும். அப்படிப்பட்ட நேரத்தில் பாக்கியசாலி ஆத்மாக் களாகிய உங்களின் எல்லைக்கு அப்பாற்பட்ட வைராக்கிய உள்ளுணர்வின் மனநிலை தானாகவே நிரந்தரமாகி விடும். மற்றும் ஒவ்வொருவரின் நெற்றியிலிருந்து பாக்கியத்தின் ரேகை தெளிவாக தென்படும். இப்பொழுதும் கூட உயர்ந்த பாக்கியசாலி குழந்தைகளின் புத்தியில் சதா என்ன இருக்கும்? பகவான் மற்றும் பாக்கியம்.

அமிர்தவேளையிலிருந்து தனது பாக்கியத்தின் பட்டியலை எடுங்கள். பாக்கியசாலி குழந்தைகளை அமிர்தவேளையில் சுயம் பாபா வந்து எழுப்புகிறார், மேலும் வரவேற்கவும் செய்கிறார். தூங்க நினைத் தாலும் கூட தூங்கவிடுவதில்லை, யாரோ எழுப்புகிறார்கள், அழைக் கிறார்கள் என்பது மிகவும் அன்பான குழந்தைகளின் அனுபவமாக இருக்கிறது. அப்படிப்பட்ட அனுபவம் ஏற்படுகிறதல்லவா. அமிர்தவேளையிலிருந்து தனது பாக்கியத்தை பார்த்தீர்களா. பக்தியில் தேவதைகளை பகவான் எனப் புரிந்துக் கொண்டு மணி அடித்து எழுப்பி விடு கிறார்கள், மேலும் உங்களை இறைவன் அவரே வந்து எழுப்பி விடுகிறார். எவ்வளவு பாக்கியசாலிகளாக இருக்கிறீர்கள். அமிர்தவேளையிலிருந்து பாபா குழந்தைகளின் சேவாதாரி யாகி சேவை செய்கிறார், பிறகு வரவேற்கவும் செய்கிறார் – வாருங்கள், பாபாவை போன்று மனநிலையை அனுபவம் செய்யுங்கள், என்னுடன் அமர்ந்துக் கொள்ளுங்கள். பாபா எங்கு அமர்ந்திருக்கிறார்? உயர்ந்த இடத்தில் (பரந்தாமம்) மற்றும் உயர்ந்த மனநிலையில். பாபாவுடன் அமர்ந்துக் கொண்டால் மனநிலை எப்படி இருக்கும். ஏன் கடின உழைப்பு செய்ய வேண்டும்.? பாபா வுடன் அமர்ந்துவிட்டால் சங் கா ரங் (யாருடன் அமர்ந்திருக்கிறோமோ, அவரை போன்று ஆகிவிடு வோம்). இடத்தை பொறுத்தும் மனநிலை தானாகவே அமையும். மதுபன் என்ற இடத்தை வந்து சேரும் பொழுது மனநிலை எப்படி இருக்கிறது? நினைவு செய்ய வேண்டியிருக்கிறதா அல்லது நினைவி லேயே இருக்கிறீர்களா? அதனால் தான் இங்கு இருப்பதற்கான ஆசை வைக்கிறோம் அல்லவா. இப்பொழுது அனைவருக்கும் மேலும் 15 நாட்கள் இருங்கள் என்றால் குஷியில் நாட்டியம் ஆடுவீர்கள் அல்லவா. எனவே இடத்தை பொறுத்து மன நிலையில் தாக்கம் ஏற்படு கிறது, அதுபோல அமிர்த வேளையில் பரந்தாமத்திலோ மற்றும் சூட்சமவதனத்திலோ சென்று விடுங்கள், பாபாவுடன் சென்று அமர்ந்து விடுங்கள். அமிர்த வேளை சக்திசாலியாக இருந்துவிட்டால், முழுநாளும் தானாகவே உதவி கிடைக்கும். எனவே தனது பாக்கியத்தை நினைவில் வையுங்கள். – ஆஹா எனது பாக்கியம்! தினசரி நடவடிக்கை இறைவனோடு ஆரம்பமாகிறது.

பிறகு தனது பாக்கியத்தை பாருங்கள் – பாபா, அவரே ஆசிரியராகி தொலை தூரத்திலிருந்து உங்களுக்கு படிப்பிக்க வருகிறார். உலகத்தினர் இறைவனை சென்று அடைவதற்காக முயற்சி செய் கிறார்கள், ஆனால் இறைவன் அவரே உங்களிடம் ஆசிரியராகி படிப்பிக்க வந்திருக்கிறார். எவ்வளவு பாக்கியசாலிகளாக இருக்கிறீர்கள். எவ்வளவு காலமாக சேவையின் கடமையை செய்துக் கொண்டிருக்கிறார். எப்பொழுதாவது அலட்சியமாக இருந்திருக்கிறாரா? இன்று தலை வலியாக இருக்கிறது, இன்று இரவு தூங்கவே இல்லை என சாக்குபோக்கு சொன்னாரா? எனவே பாபா களைப் பற்ற சேவாதாரி ஆகி சேவை செய்கிறார், அதனால் பாபாவை போல குழந்தைகளும் களைப்பற்ற சேவாதாரியாக இருக்க வேண்டும். தனது தினசரி நடவடிக்கை களை பாருங்கள். எவ்வளவு பெரிய பாக்கியமாக இருக்கிறது? பாபா சதா அன்பானவராக, செல்லமான குழந்தைகளுக்கு சொல்கிறார் – எந்தவித சேவையாக இருந்தாலும், லௌகீகமாகவோ, அலௌகீகமாகவோ அல்லது குடும்பத்திலோ, சேவை நிலையத்திலோ, – எந்தவித சேவை செய்யுங்கள், எந்தவித செயலையும் செய்யுங்கள், ஆனால் என் மூலம் செய்பவர் – செய்வித்துக் கொண்டிருக் கிறார், நான் கருவியாக இருக்கிறேன், நான் சேவை செய்வதற்காக கருவியாக இருந்து செய்துக் கொண்டிருக்கிறேன், செய்விப்பவர் செய்வித்துக் கொண்டிருக் கிறேன். இங்கும் கூட தனியாக இருப்பதில்லை, செய்விப்பவர் ரூபத்தில் பாபா காரியம் செய்யும் நேரத்திலும் கூட சேர்ந்தே இருக்கிறார். நீங்கள் வெறும் கருவியாக மட்டும் தான் இருக்கிறீர்கள். இறைவன் சிறந்த செய்விப்பவராக இருக்கிறார். ஏன் தனியாக செய்கிறீர்கள்? நான் தனியாக செய்கிறேன். இந்த உணர்வு இருக்கிறது என்றால் நான் என்ற எண்ணம் தான் மாயாவின் வாசலாக இருக்கிறது. அதன் பிறகு மாயா வந்துவிட்டது என்று சொல்கிறீர்கள். வாசல் கதவு திறந்திருக்கிறீர்கள் மற்றும் மாயாவும் காத்திருக்கிறது. மேலும் நீங்கள் நன்றாக ஏற்பாடு செய்தால், மாயா ஏன் வராது?

பாபா செய்ய வைக்கக் கூடியவர் ஒவ்வொரு செயலையும் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார் என்று இதைக் கூட தனது பாக்கியத்தின் நினைவில் வையுங்கள்? அதனால் சுமை அனுபவம் ஆகாது. எஜமானருக்கு தான் சுமை அனுபவம் ஆகும், உடன் இருப்பவருக்கு சுமை அனுபவம் ஆகாது. எஜமானர் ஆகிவிட்டால் சுமை வந்து விடுகிறது. நான் குழந்தை யாகவும் பாபா எஜமானராகவும் இருக்கிறார். எஜமானர் குழந்தைகள் மூலம் செய்துக் கொண்டிருக்கிறார். பெரியவர்கள் ஆகிவிட்டால் துக்கமும் பெரியதாக வந்துவிடுகிறது. குழந்தை யாகி, எஜமானரின் கட்டளைப்படி செய்யுங்கள். இது எவ்வளவு பெரிய பாக்கியமாக இருக்கிறது. ஒவ்வொரு காரியத்திலும் பாபா பொறுப்பாளராக மாற்றி விட்டு இலேசாக இருந்து பறந்துக் கொண்டேயிருங்கள். என்ன ஆகும்? மேலும் ஏதாவது பிரச்சனைகள் வந்துவிட்டால் சொல் கிறீர்கள் – பாபா, இப்பொழுது உங்களுக்கு தான் அனைத்தும் தெரியும். மேலும் பிரச்சனை முடிந்து விட்டால் குஷி அடைந்து விடுகிறோம். ஆனால் பிரச்சனைகள் அப்படி ஏன் வரவிட வேண்டும். செய்விப்பவர் பாபாவின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியமும் செய்தீர்கள் என்றால் செயலும் உயர்ந்ததாக இருக்கும், மேலும் உயர்ந்த செயலின் பலனாக – சதா குஷி, சதா இலேசானத் தன்மை, ஃபரிஸ்தா வாழ்க்கையின் அனுபவம் செய்துக் கொண்டேயிருப்பீர்கள், ஃபரிஸ்தா கர்மத்தின் சம்பந்தத்தில் வருவார்கள், கர்மத்தின் பந்தனத்தில் மாட்ட மாட்டார்கள். மேலும் பாபாவின் சம்மந்தம் செய்விப்பவருடன் இணைந்திருக்கிறது, ஆகையால் நிமித்தம் (கருவி) என்ற உணர்வில் நான் என்ற தன்மையின் அபிமானம் வராது. சதா பணிவுடையவராக ஆகி புது உலகத்தை உருவாக்கும் காரியத்தை செய்யுங்கள். எனவே உங்களுக்கு எவ்வளவு பாக்கியம் இருக்கிறது.

அதன் பிறகு பிரம்மா – போஜனம் யார் கொடுக்கிறார்கள்? பெயரே பிரம்மா போஜனம். பிரம்ம போஜனம் அல்ல, பிரம்மா போஜனம். எனவே பிரம்மா (பாபா) யக்ஞத்தின் பாதுகாவலராக எப்பொழுதும் இருக்கிறார். யக்ஞத்தின் குழந்தைகள் ஒவ்வொருவரும் அல்லது பிரம்மாவின் குழந்தைகளுக்காக பிரம்மா பாபாவின் மூலம் பிரம்மா போஜனம் கிடைக்கவே செய்கிறது. உலகத்தினர் எங்களுக்கு பகவான் உணவளிக்கிறார் (படி அளிக்கிறார்) என்று சொல்கிறார்கள். இறைவன் யார் என்றே தெரியாது, ஆனால் கடவுள் உணவளிக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆனால் பிராமண குழந்தைகளுக்கு பாபா தான் உணவளிக்கிறார். லௌகீகத்தில் சம்பாதித்து பணத்தை சேமித்து வைத்து, அதன் மூலம் உணவை சேகரித்தாலும் கூட முதலில் தனது வருமானத்தையும் கூட பாபாவின் பண்டாராவிற்கு தான் தருகிறீர்கள். பாபாவின் பண்டாரா (உண்டியல்) என்பது கள்ளம் கபடமற்றவரின் பண்டாரா ஆகிவிடுகிறது. ஒருபொழுதும் இந்த விதியை மறந்து விட வேண்டாம். இல்லையென்றால், நாம் தான் சம்பாதிக்கிறோம், நாமே உண்டுவிடுகிறோம் என்று சிந்தனை வரும். டிரஸ்டியாக இருங்கள், டிரஸ்டிக்கு ஒன்றும் ஆகாது. நாங்கள் எங்களுடைய வருமானத்தின் மூலம் உண்கிறோம் என்ற எண்ணம் கூட வரக் கூடாது. டிரஸ்டி என்று ஆகிவிட்டால் அனைத்தும் பாபாவின் கையில் ஒப்படைத்து விட வேண்டும். அனைத்தும் உன்னுடையது, என்னுடையது அல்ல. டிரஸ்டி (தர்மகர்த்தா – தர்மத்திற்கு உட்பட்டு செயல்படுவது) என்றாலே உன்னுடையது மற்றும் கிரஹஸ்தி (இல்லறவாசி) என்றாலே என்னுடையது. நீங்கள் யார்? இல்லறவாசி இல்லை தானே? இறைவன் உணவளித்துக் கொண்டிருக்கிறார், பிரம்மா போஜனம் கிடைக்கிறது – பிராமண ஆத்மாக்களுக்கு இந்த நஷô இயல்பாகவே இருக்கிறது, மேலும் பாபாவும் உத்திர வாதம் தருகிறார் – 21 ஜென்மத்திற்கு பிராமண ஆத்மாக்கள் பசியுடன் ஒருபொழுதும் இருக்க மாட்டார்கள். மிகவும் அன்புடன் பருப்பு – ரொட்டி, காய்கறிகள் கிடைக்கும். இந்த ஜென்மத் திலும் கூட பருப்பு – ரொட்டி அன்புடன் கடின உழைப்பின்றி சாப்பிடுகிறீர்கள். ஆகையால் அமிர்தவேளையிலிருந்து என்னென்ன பாக்கியம் கிடைக்கிறது. முழு நாளின் தினசரி நடவடிக்கைகளை சிந்தியுங்கள்.

தாலாட்டு பாடி பாபா தான் தூங்கவும் வைக்கிறார். பாபாவின் மடியில் தூங்கிவிட்டீர்கள் என்றால் களைப்பு, நோய் முதலியன அனைத்தும் மறந்து விடுவீர்கள் மற்றும் ஒய்வும் எடுப்பீர்கள். ஆ (வா) ராம் என்று அழைத்தால் மட்டும் போதும், ஆராம் (ஒய்வு) வந்துவிடும். தனியாக தூங்கிறீர்கள் என்றால் பலவித எண்ணங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கும். பாபாவோடு நினைவு என்ற மடியில் தூங்கி விடுங்கள். இனிமையான குழந்தைகளே, அன்பான குழந்தைகளே என்ற தாலாட்டு கேட்டுக் கொண்டே தூங்கிவிடுங்கள். பாருங்கள் எவ்வளவு அலௌகீக அனுபவம் ஏற்படுகிறது. எனவே அமிர்தவேளை யிலிருந்து இரவு வரை அனைத்தையும் பகவான் செய்ய வைத்துக் கொண்டிருக் கிறார். நடத்துபவர் நடத்திக் கொண்டிருக்கிறார், செய்விப்பவர் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார், சதா இந்த பாக்கியத்தை நினைவில் வையுங்கள். நினைவு வெளிக் கொணருங்கள். எல்லைக்குட்பட்ட போதைக் பொருளைக் கூட குடிக்காத வரை நஷô (போதை) வராது. அப்படியே அந்த போதை பொருளை (பாட்டிலை) வைத்திருந்தால் போதை ஏறுமா? இதைக் (ஞானத்தையும்) கூட புத்தியில் மட்டும் வைத்திருக்கிறீர்கள், ஆனால் இதை பயன்படுத்துங்கள். நினைவில் கொண்டு வருவது என்றால் அருந்துவது, வெளிக்கொணருங்கள். இதைத் தான் நினைவு சொரூபம் என்று சொல்லப்படுகிறது. புத்தியில் மட்டும் நினைவில் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. நினைவு சொரூபம் ஆகுங்கள். எவ்வளவு பாக்கியசாலிகளாக இருக்கிறோம். தினந்தோறும் தனது பாக்கியத்தை நினைவில் வைத்து சக்திசாலி ஆகுங்கள் மற்றும் பறந்துக் கொண்டே யிருங்கள். புரிந்ததா? என்ன செய்ய வேண்டும்? இரட்டை வெளிநாட்டை சேர்ந்தவர்கள் எல்லைக்குட்பட்ட நஷôவில் அனுபவசாலிகளாக இருக்கிறீர் கள், இப்பொழுது இந்த எல்லைக்கு அப்பாற்பட்ட நஷôவை நினைவில் வைத்தீர்கள் என்றால் சதா பாக்கியத்தின் உயர்ந்த கோடுகள் (அதிர்ஷ்ட) ஜொலித்துக் கொண்டிருக்கிறது, தெளிவாக தென்பட்டுக் கொண்டேயிருக்கும். இப்பொழுது சிலருக்கு மறைந்திருக்கிறது, சிலருக்கு தெளிவாக தென்படுகிறது. ஆனால் சதா நினைவில் வைத்தீர்கள் என்றால் நெற்றியில் ஜொலித்துக் கொண்டேயிருக்கும். மற்றவர் களையும் கூட அனுபவம் செய்ய வைத்துக் கொண்டேயிருப்பீர்கள். நல்லது.

சதா பகவான் மற்றும் பாக்கியம் – இந்த நினைவு சொரூபமான சக்திசாலியான ஆத்மாக் களை, சதா ஒவ்வொரு காரியத்திலும் செய்பவர் ஆகி காரியம் செய்யக் கூடிய உயர்ந்த ஆத்மாக்களுக்கு, சதா அமிர்தவேளையில் பாபாவுடன் உயர்ந்த இடத்தில், உயர்ந்த மனநிலை யில் நிலைத்திருக்கக் கூடிய பாக்கியசாலி குழந்தைகளுக்கு, சதா தனது நெற்றியின் மூலம் உயர்ந்த பாக்கியத்தின் ரேகைகளை மற்றவர்களுக்கும் அனுபவம் செய்யக் கூடிய விசேஷமாக பிராமணர்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

விடைபெறும் நேரத்தில் தாதி ஜானகி அவர்களின் மும்பாய் மற்றும் குருசேத்திரம்

சேவைக்கு செல்வதற்காக விடைபெற்றுக் கொண்டிருக்கிறார்.

மகாரதிகளின் கால்களில் சேவைக்கான சக்கரம் இருக்கவே செய்கிறது. எங்கு செல்கிறீர் களோ, அங்கு சேவையில்லாமல் இருக்க முடியாது. எந்த காரணத்திற்காக சென்றாலும் கூட சேவைக்காக தான் இருக்கும். ஒவ்வொரு அடியிலும் சேவையை தவிர ஒன்றுமே இல்லை. ஒருவேளை நடந்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றாலும் கூட நடப்பதிலும் சேவை அடங்கியிருக் கிறது. ஒருவேளை உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் யாரை அழைத்து உணவளிக்கிறீர்கள். அன்போடு ஏற்றுக் கொள்கிறார். எனவே இது கூட சேவையாகிவிட்டது. எழுந்தாலும், அமர்ந்தாலும், நடந்தாலும் கூட சேவை மட்டும் தான் இருக்கிறது. அப்படிப்பட்ட சேவாதாரியாக இருக்கிறீர்கள். சேவையின் வாய்ப்பு கிடைப்பதும் கூட பாக்கியத்தின் அடையாளமாகும். மிகப்பெரிய சக்கரவர்த்தி ஆகவேண்டு மென்றால் சேவையின் சக்கரமும் கூட பெரியதாக இருக்கும்.

வரதானம்:-

ஒவ்வொரு நாளும் சூழ்நிலைகள் மிகவும் தமோபிரதானமாக ஆகிக் கொண்டேயிருக்கும். வாயு மண்டலமும் மேலும் சீரழிந்துக் கொண்டேயிருக்கும். அப்படிப்பட்ட வாயுமண்டலத்தில் தாமரை மலரை போன்று விடுபட்டு இருந்து, தனது மனநிலையை சதோபிரதானமாக ஆக்க வேண்டும் – இதற்காக அந்தளவு தைரியம் மற்றும் சக்தியின் அவசியம் இருக்கிறது. நான் மாஸ்டர் சர்வசக்திவான் என்ற வரதானம் நினைவில் இருந்தால், இயற்கையின் மூலம், லௌகீக சம்மந்ததின் மூலம், தெய்வீக குடும்பத்தின் மூலம் எந்தவிதமான சோதனை தாள் வந்தாலும், – அவர்கள் எப்பொழுதும் ஒரே இரசனை, ஆடாத அசையாத மனநிலையில் இருப்பார்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top