19 September 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

September 18, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

திலாராம் தந்தையினுடைய இதய சிம்மாசனத்தை வென்ற தில் ருபா குழந்தைகளுடைய அடையாளங்கள்

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று திலாராம் (உள்ளத்தை கொள்ளை கொண்ட) தந்தை தன்னுடைய தில் ருபா (மனம் கவரும்) குழந்தைகளை சந்திப்பதற்காக வந்திருக்கின்றார். திலாராம் தந்தையினுடைய ஒவ்வொரு தில் ருபா அதாவது யாருடைய உள்ளத்தில் சதா திலாராமின் நினைவினுடைய இனிமையான இசை தானாகவே இசைத்துக் கொண்டே இருக்கிறதோ, அத்தகைய தில் ருபா, திலாராம் தந்தையின் உள்ளத்தை தன்னுடைய அன்பின் இசையினால் வென்றவர்கள் ஆவார்கள். திலாராம் தந்தையும் அத்தகைய குழந்தைகளின் குணத்தைப் பாடுகின்றார். எனவே, தந்தையின் உள்ளத்தை வென்றவர்கள் தானாகவே மாயையை வென்றவர்களாக, உலகை வென்றவர்களாக இருக்கின்றார் கள். எவ்வாறு ஒரு எல்லைக்குட்பட்ட இராஜ்ய சிம்மாசனத்தை வெல்கின்றார்கள் என்றால் அதில் வெல்வது என்பது சிம்மாசனதாரி ஆகுவது என்பதாகும். அவ்வாறு யார் தந்தையினுடைய இதய சிம்மாசனத்தை வென்றுவிடு கின்றார்களோ, அவர்கள் தானாகவே சதா சிம்மாசனதாரியாக இருக்கின்றார்கள். அவர் களுடைய உள்ளத்தில் சதா தந்தை இருக்கின்றார் மற்றும் தந்தை யினுடைய உள்ளத்தில் சதா அத்தகைய வெற்றி அடைந்த குழந்தை இருக்கின்றார். அத்தகைய உள்ளத்தை வென்ற குழந்தைகள் சுவாச சுவாசத்திலும் அதாவது ஒவ்வொரு வினாடியும் தந்தை மற்றும் சேவையைத் தவிர வேறு எந்தப் பாடலும் பாடமாட்டார்கள். என்னுடையவர் பாபா மற்றும் நான் தந்தையினுடையவர் என்ற இந்த ஒரு பாடல் சதா பாடுவார்கள். இவர் களையே திலாராம் தந்தையினுடைய இதய சிம்மாசனத்தை வென்ற தில் ருபா என்று கூறுகின்றார்கள்.

பாப்தாதா ஒவ்வொரு தில் ருபா குழந்தையினுடைய இனிமையான இசையை, அது விதவிதமான இசையாக உள்ளதா அல்லது ஒரே இசையாக உள்ளதா என்று சதா அந்த இசையைக் கேட்டுக்கொண்டே இருக்கின்றார்கள். சில நேரம் சிலர் தன்னுடைய பல வீனத்தின் பாடலும் பாடு கின்றார்கள், மேலும், சில நேரம் தந்தைக்கு பதிலாக தன்னுடைய பாடலையும் பாடுகின்றார்கள். தந்தையினுடைய மகிமையின் கூடவே தன்னுடைய மகிமையையும் தானே செய்து கொள்கிறார் கள். தந்தைக்குள் நீங்கள் இருக்கின்றீர்கள் அதாவது தந்தையினுடைய மகிமையில் உங்களுடைய மகிமையும் உள்ளது. யதார்த்தமான இசையான தந்தையின் பாடலைப் பாடுவதே சிரேஷ்டமான இசையாகும். யார் இதய சிம்மாசனத்தை வென்ற குழந்தைகளோ, அவர்களுடைய ஒவ்வொரு அடியில், திருஷ்டியில், பேச்சில், சம்பந்தம், தொடர்பில் ஒவ்வொருவருக்கும் தந்தை தான் தென்படு வார். வாய் அவர்களுடையதாக இருக்கும் ஆனால், சக்திசாலியான அன்பு நிறைந்த வார்த்தை யானது இந்த வார்த்தை இந்த ஆத்மாவினுடையது அல்ல, ஆனால், சிரேஷ்டமான அத்தாரிட்டி அதாவது சர்வசக்திவானின் வார்த்தையாகும் என்று தானாகவே தந்தையை பிரத்யட்சம் செய்யும். இப்பேற்பட்டவர்களுடைய திருஷ்டியின் ஆன்மிகத்தன்மை ஆத்மாக்களுக்கு தந்தையின் அனுபவத்தை செய்விக்கக்கூடியதாக இருக்கும். இவர்களுடைய அடியில் பரமாத்ம சிரேஷ்ட வழியினுடைய அடி இருக்கும். இவர் சாதாரண மனிதர் அல்ல ஆனால், அவ்யக்த ஃபரிஷ்தா ஆவார் என்ற அனுபவத்தை செய்விப்பவர்களை உள்ளத்தை வென்ற வர்கள் மற்றும் உலகத்தை வென்றவர்கள் என்று சொல்லப்படுகிறது.

வார்த்தைகள் மூலம் அனுபவம் செய்விப்பது என்பது சாதாரண விதியாகும். பேச்சு மூலம் பிரபாவத்தை ஏற்படுத்துபவர்கள் உலகிலும் அனேகர் உள்ளனர். ஆனால், உங்களுடைய பேச்சு தந்தையினுடைய நினைவை ஏற்படுத்த வேண்டும், இதுவே உங்களுடைய பேச்சின் விசேஷத்தன்மை ஆகும். தந்தையைப் பிரத்யட்சம் செய்வதற்கான சித்தி (வெற்றி) ஆத்மாக்களுக்கு சத்கதிக்கான வழியைக் காண்பிக்க வேண்டும். இது தனிப்பட்டது ஆகும். ஒருவேளை, உங்களுடைய மகிமை பாடப்பட்டது அதாவது மிகவும் நன்றாக உள்ளது, பேசும் கலை உள்ளது அல்லது அதிகாரப்பூர்வமான வார்த்தைகளாக உள்ளன என்று மகிமை பாடப்படுகிறது என்றால் இந்த மகிமை மற்ற ஆத்மாக்களுக்கும் பாடப்படுகிறது. ஆனால், உங்களுடைய பேச்சு தந்தை யினுடைய மகிமையை அனுபவம் செய்விக்க வேண்டும். இந்த விசேஷத்தன்மையே பிரத்யட்ச தாவின் திரையை விலக்கு வதற்கான சாதனமாகும். எனவே, யாருடைய உள்ளத்தில் சதா திலாராம் இருக்கின்றாரோ, அவருடைய வாய் மூலம் கூட அவர்களுடைய உள்ளத்தின் சப்தமானது திலாராமை தானாகவே பிரத்யட்சம் செய்யும். எனவே, ஒவ்வொரு அடியில், பேச்சில் என் மூலம் தந்தையின் பிரத்யட்சம் ஏற்படுகிறதா, என்னுடைய பேச்சு தந்தையுடன் சம்பந்தத்தை இணைக்கக்கூடிய பேச்சாக உள்ளதா? என்று சோதனை செய்யுங்கள். ஏனெனில், இப்பொழுது இறுதி சேவையின் நடிப்பே பிரத்யட்சத்தின் கொடியைப் பறக்கவிடுவதாகும். என்னுடைய ஒவ்வொரு அடியும் சிரேஷ்ட கர்மத்தின் நிலையை சொல்லக்கூடிய தந்தையை பிரத்யட்சம் செய்யக் கூடியதாக உள்ளதா? யாருடைய உள்ளத்தில் சதா தந்தை இருக் கின்றாரோ, அவர் தானகவே சன் ஷோஸ் ஃபாதர் (தந்தையைப் பிரத்யட்சம் செய்யக்கூடிய குழந்தை) என்பதை செயல்படுத்தக் கூடிய சமீபமான மற்றும் சமமான குழந்தையாவார்.

நாலாபுறங்களிலும் இப்பொழுது நம்முடைய பாபா, பிரம்மா குமாரிகளுடைய பாபா அல்ல, நம்முடைய பாபா என்ற இந்த சப்தம் ஒலிக்க வேண்டும். எப்பொழுது இந்த சப்தம் ஒலிக்குமோ, அப்பொழுது இனிய வீட்டினுடைய (பரந்தாமம்) கதவு திறக்கும். ஏனெனில், எப்பொழுது நம்முடைய பாபா என்று கூறுவார்களோ, அப்பொழுது முக்தி யினுடைய ஆஸ்தி கிடைக்கும். மேலும், உங்களுடன் அல்லது தந்தையுடன் ஊர்வலத்தில் வருபவர்களாகவே கூட இருக்கட்டும், ஆனால், அனைவரும் வீட்டிற்கு திரும்பிச் செல்லத் தான் வேண்டும், அழைத்துச் செல்லத்தான் வேண்டும். நம்முடைய பாபா வந்து விட்டார் – குறைந்ததிலும் குறைந்தது இந்த சப்தங்களை யாவது காதுகளால் கேட்பதற்கான, புத்தியால் அறிந்துகொள்வதற்கான அதிகாரியாகவாவது ஆகட்டும். யாரும் வஞ்சிக்கப்பட்டவராக ஆகிவிடக்கூடாது. விஷ்வத்தின் தந்தை ஆவார், விஷ்வத்தின் ஆத்மாக்களுக்கு இவ்வளவு கொஞ்சமாவது கொடுக்க வேண்டும் அல்லவா. நீங்கள் கடலை விழுங்கிவிட்டீர்கள், ஆனால், அவர்கள் ஒரு துளியின் தாகமுடன் இருப்பவர்கள். அவர்களுக்கு ஒரு துளியாவது கிடைக்கச் செய்வீர்கள் அல்லவா. இதற்காக என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு அடி, ஒவ்வொரு வார்த்தை தந்தையைப் பிரத்யட்சம் செய்யக்கூடியதாக இருக்கட்டும். அப்பொழுதே இந்த சப்தம் ஒலிக்கும். தந்தையை பிரத்யட்சம் செய்யக்கூடிய அத்தகைய குழந்தைகளையே திலாராமினுடைய தில்ருபா என்று கூறுகின்றார்கள். இவர் களுடைய உள்ளத்தில் இருந்து ஒரே ஒரு தந்தையின் இசை தான் இசைக்கும். எனவே, அப்பேற்பட்ட தில்ருபா ஆகியிருக்கின்றீர்கள் அல்லவா.

ஒரு பாடல் பாடுங்கள் அப்பொழுது இரண்டாவது பாடல் தானாகவே முடிவடைந்து விடும். இரண்டே வார்த்தைகளில் ஓ.கே. என்ற நற்செய்தியை மட்டும் சொல்லுங்கள். ஆன்மிக உரை யாடல் செய்யுங்கள். மற்ற பாடல்களைப் பாடுவதற்கு நேரம் கொடுக் காதீர்கள், எடுக்காதீர்கள். நற்செய்தியை சொல்வதற்கு சமயம் ஆவதில்லை. ஆனால், இராம கதையை சொல்வதற்கு சமயம் ஆகிறது. பாப்தாதா அப்பேற்பட்ட விசயங்களை இராம கதை என்று கூறுகின்றார்கள், கிருஷ்ண கதை என்று கூறுவதில்லை. இது 14 கலை உடையவர்களின் கதையாகும், 16 கலை உடையவர்களின் கதையல்ல. நீங்கள் இராம கதையை சொல்பவர்கள் இல்லை அல்லவா?

இப்பொழுது அதிக சேவை மீதம் உள்ளது. இப்பொழுது செய்திருப்பது கூட என்ன? சிந்தித்திடுங்கள், ஐநூற்றி ஐம்பது கோடி ஆத்மாக்கள் உள்ளனர், குறைந்ததிலும் குறைந்தது ஒரு துளியாவது கொடுங்கள், ஆனால், கொடுத்து தான் ஆகவேண்டும். அவர்கள் உங்களுடைய பக்தர்கள் ஆகட்டும் அல்லது உங்களுடைய பிரஜைகள் ஆகட்டும். தேவதைகள் ஆகின்றார்கள் என்றாலும் கொடுக்கத்தான் வேண்டும். பக்தியில் தேவதைகள் ஆகி பூஜிக்கப்படுவீர்கள் அல்லவா. கொடுத்தால் தானே தேவதை எனப் புரிந்து பூஜிப்பார் கள். பிரஜைகள் கூட ஏதாவது பிராப்தி கிடைத்தால் தானே ஏற்றுக்கொள்வார்கள். நீங்கள் எதுவும் செய்யாமல் எப்படி உங்களை தாயாக, தந்தையாக ஏற்றுக்கொள்வார்கள்? இராஜா கூட தாயும், தந்தையும் ஆவார். இரண்டு விதத்திலும் வள்ளலின் குழந்தைகள் வள்ளல் ஆகிக் கொடுக்க வேண்டும். ஆனால், கொடுக்கும் போது வள்ளலின் நினைவை ஏற்படுத்த வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்ததா? வெளி நாட்டில் அல்லது உள் நாட்டில் இத்தனை நிறைய கிளை நிலையங்கள் திறந்துவிட்டன, அதிகமாகி விட்டன என்று நினைக்காதீர்கள். ஆனால், கருணை உள்ளம் உடைய தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள் அல்லவா. அனைவரும் தன்னுடைய தாகமான, அலைந்து கொண்டிருக்கக்கூடிய சகோதரன், சகோதரி மீது கருணை காட்ட வேண்டும். யாரும் புகார் செய்துவிடக் கூடாது. நல்லது.

வெளிநாட்டில் இருந்து கூட அதிகமான நாயகிகள் (பிரியதரிசினிகள்) வந்து விட்டார்கள். எப்பொழுது அதிகமாக வருகின்றார்களோ, அப்பொழுது பிரிக்க வேண்டியதாக உள்ளது அல்லவா. சமயத்தையும் பிரித்து பங்கிட வேண்டியதாக உள்ளது. இரவைப் பகலாக ஆக்கிவிடுகின்றார்கள், வேறு என்ன செய்வார்கள். இதிலும் மகாதானி ஆகுங்கள். வரிசைக் கிரமமாக இருக்கும் போதிலும் தந்தையின் மீதான அன்பானது அனைத்தையும் விட நம்பர் ஒன் ஆக உள்ளது. என் மீது தந்தையின் அன்பு குறைவாக உள்ளது, இன்னொருவர் மீது அதிகமாக உள்ளது என்று ஒருபொழுதும் புரிந்து கொள்ளக்கூடாது. அனைவரின் மீதும் அதிகமாக உள்ளது. வார்த்தைகளில் சில நேரம் சிலரிடம் அதிகமாக பேசிவிடுகின்றார், சில நேரம் குறைவாகவும் பேசுகின்றார். ஆனால், உள்ளத்தின் அன்பு பேச்சில் பங்கிடப் படுவதில்லை. தந்தையினுடைய பார்வைகளில் ஒவ்வொரு குழந்தையும் நம்பர் ஒன் ஆவார்கள். இப்பொழுது நம்பர் எங்கு அவுட் (வெளியாகி) ஆகி உள்ளது? எதுவரை அவுட் ஆகிறதோ, அதுவரை ஒவ்வொருவரும் நம்பர் ஒன் ஆவார்கள், யார் வேண்டு மானாலும் நம்பர் ஒன் ஆக முடியும். பிரம்மாவோ எப்பொழுதும் நம்பர் ஒன்னில் இருக்கின்றார் என்று கூறினோம் அல்லவா. ஆனால், முதல் டிவிஷன் – தந்தையுடன் முதல் எண்ணில் வருவது என்றால் முதல் டிவிஷனில் வருவதாகும், அவர்களையும் நம்பர் ஒன் என்றே கூறலாம். எனவே, எதுவரை இறுதி முடிவு அவுட் ஆகவில்லையோ, அது வரை பாப்தாதா கூட நிகழ்கால சமயத்தின் அனுசாரம் இவர் கடைசியில் உள்ளார் என்பதை அறிந்திருந்த போதிலும், கடைசியில் இருப்பதாக நினைப்பதில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் கடைசியில் இருந்து முதல் எண்ணில் வரமுடியும், மார்ஜின் (வாய்ப்பு) உள்ளது. அவ்வப்போது என்ன நடக்கிறது – யார் மிகவும் வேகமாக செல்கின்றார்களோ, அவர்கள் அருகாமையில் வந்தபின் களைப்பு அடைந்து விடுகின்றார்கள், எனவே, நின்றுவிடு கின்றார்கள். மேலும், யார் மெது மெதுவாக செல் கின்றார்களோ, அவர்கள் ஒருபொழுதும் நிற்பதில்லை, முறைப்படி செல்கின்றார்கள். எனவே, அவர்கள் சென்றடைந்துவிடு கின்றார்கள். ஆகையினால், இப்பொழுது தந்தையின் பார்வையில் அனைவரும் நம்பர் ஒன் ஆவார்கள். எப்பொழுது ரிசல்ட் அவுட் ஆகுமோ, அப்பொழுதே இவர்கள் கடைசி எண், இவர்கள் முதல் எண் என்று சொல்வார்கள். இப்பொழுது சொல்ல முடியாது. ஆகையினால், தன்மீது நம்பிக்கை மட்டும் வைத்து பறந்து கொண்டே செல்லுங்கள்.

பாப்தாதாவிற்கு அனைவரையும் முன்னேற்றுவதற்கான உள்ளத்தின் அன்பு அனைவர் மீதும் உள்ளது. எப்பொழுதாவது யாரிடமாவது இரண்டு வார்த்தை குறைவாகப் பேசினால் அன்பு குறைவாக உள்ளது என்று அர்த்தம் அல்ல. உள்ளத்தில் கூட தந்தையின் அன்பினு டைய சிரேஷ்டமான சுப விருப்பங்கள் சதா நிறைந்திருக்கின்றன. பறந்து செல்லுங்கள் என்ற இந்த இரண்டே வார்த்தைகள் சொல்கின்றார் என்றாலும் இதில் கூட அன்புக்கடல் நிறைந்துள்ளது. பாபா என்மீது அதிகமாக அன்பு செலுத்துகின்றார் என்று யாரும் சொல்ல முடியாது. ஒருவேளை, யாராவது சொன்னாலும் அவர்களிடம் என்மீது உங்களை விட அதிகமாக அன்பு செலுத்துகின்றார் என்று சொல்லுங்கள். மேலும், அன்பு செலுத்துகின்றார், வெறும் வார்த்தைகளில் மட்டும் சொல்ல வில்லை. உள்ளத்தை மகிழ்விப்பதற்காக மட்டும் சொல்லவில்லை. குழந்தைகள் எவ்வளவு அலைந்து திரிந்தவர்கள், களைப்படைந்தவர்கள், குழப்பமடைந்தவர்கள் மீண்டும் 5000 ஆண்டு களுக்குப் பிறகு கிடைத்திருக்கின்றார்கள் என்பதை தந்தை அறிந்திருக்கின்றார். தந்தை தேடித் தேடி கண்டெடுத்துள்ளார். தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு – அனைத்து திசைகளிலிருந்தும் கண்டெடுத்துள்ளார். யாரைத் தேடி கண்டெடுத்திருக்கின்றாரோ, அவர்கள் மீது எவ்வளவு அன்பு இருக்கும்! இல்லை யென்றால் தேடியிருக்கவே மாட்டார் அல்லவா. மேலும், கடலிடம் அன்பின் குறைபாடு இருக்குமா என்ன? ஒவ்வொருவருடைய உள்ளத்தின் அன்பு எவ்வளவு உள்ளது என்பதை திலாராம் அறிவார். என்னவாக இருந்தாலும் அன்பில் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களே ஆவீர்கள். தந்தையின் மீதுள்ள அன்பிற்கான சான்றிதழை தந்தை முதலிலிலேயே கொடுத்து விட்டார். நல்லது.

நாலாபுறங்களிலும் உள்ள மிகவும் அன்பு நிறைந்த உள்ளத்தின் இசையை இசைக்கக் கூடிய திலாராமினுடைய தில் ருபாக்களுக்கு, சதா ஒவ்வொரு கர்மத்தில் ஷசன் ஷோஸ் ஃபாதர் செய்யக்கூடிய, சதா ஒவ்வொரு வார்த்தை மூலம், தந்தையுடன் சம்பந்தத்தை இணைக்கக்கூடிய, சதா தன்னுடைய ஆன்மிகப் பார்வை மூலம் ஆத்மாக்களுக்கு தந்தை யின் அனுபவத்தை செய்விக்கக்கூடிய, அப்பேற்பட்ட தந்தையை பிரத்யட்சம் செய்யக் கூடிய, தந்தையின் இதய சிம்மாசனத்தை வென்ற, மாயையை வென்ற, உலகத்தை வென்ற குழந்தைகளுக்கு திலாராம் தந்தையினுடைய அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

தனிப்பட்ட சந்திப்பு

1. நினைவின் சக்தியானது சதா ஒவ்வொரு காரியத்தில் முன்னேற்றவல்லது. நினைவின் சக்தி சதாகாலத்திற்கும் சக்திசாலி ஆக்குகிறது. நினைவு சக்தியின் அனுபவம் சர்வ சிரேஷ்ட அனுபவம் ஆகும். இந்த சக்தி ஒவ்வொரு காரியத்தில் வெற்றியின் அனுபவத்தை செய்விக் கின்றது. இந்த சக்தியின் அனுபவத்தினால் முன்னேறிக் கொண்டிருக்கும் ஆத்மா நான் – இதை நினைவில் வைத்து எவ்வளவு முன்னேற விரும்புகிறீர்களோ, அவ்வளவு முன்னேற முடியும். இந்த சக்தியினால் விசேஷமாக சகயோகம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

2. சதா ஒவ்வொரு காரியம் செய்யும்பொழுதும் தன்னை சாட்சி ஸ்திதியில் நிலைக்கச் செய்து காரியம் செய்விக்கக்கூடிய விடுபட்ட ஆத்மா நான் – இப்படி அனுபவம் செய் கின்றீர்களா? சாட்சி நிலை சதா ஒவ்வொரு காரியத்தையும் சகஜமாக வெற்றி அடைய வைக்கிறது. சாட்சி நிலை யானது எவ்வளவு அன்பானதாக உள்ளது! சாட்சியாகி காரியம் செய்யக்கூடிய ஆத்மா சதா விடுபட்ட மற்றும் தந்தைக்கு அன்பான ஆத்மாவாக இருக் கின்றது. எனவே, இந்தப் பயிற்சியோடு கர்மம் செய்யக்கூடிய அலௌகீக ஆத்மா நான், அலௌகீக அனுபவம் செய்யக்கூடிய, அலௌகீக வாழ்க்கை, சிரேஷ்டமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஆத்மா நான் – இந்த போதை உள்ளது அல்லவா? கர்மம் செய்துகொண்டே இந்தப் பயிற்சியை அதிகரித்துக்கொண்டே செல்லுங் கள். இந்தப் பயிற்சி கர்மாதீத நிலையை அடைய வைத்துவிடும். இந்தப் பயிற்சியை சதா அதிகரித்த வண்ணம், கர்மம் செய்து கொண்டே விடுபட்டவராக மற்றும் தந்தைக்கு அன்பானவராக இருக்க வேண்டும். இவர்களையே சிரேஷ்ட ஆத்மா என்று சொல்லப்படுகிறது.

3. சதா சிரேஷ்ட பொக்கிஷங்களால் நிரம்பிய ஆத்மா நான் – இப்படி அனுபவம் செய் கின்றீர்களா? யார் அளவிட முடியாத பொக்கிஷங்களால் நிரம்பி இருப்பார்களோ, அவர் களுக்கு ஆன்மிக போதை எவ்வளவு இருக்கும்! சதா அனைத்து பொக்கிஷங்களாலும் நிரம்பி இருக்கின்றேன் – இந்த ஆன்மிகக் குஷியினால் முன்னேறிக் கொண்டே செல்லுங் கள். அனைத்து பொக்கிஷங்கள் மூலம் ஆத்மாக்களை விழிப்படையச் செய்து துணைவர் ஆக்கிவிட்டீர்கள் என்றால் நிறைந் திருக்கும் மற்றும் சக்திசாலியான ஆத்மா ஆகி முன்னேறிக் கொண்டே இருப்பீர்கள்.

4. சதா புத்தியில் செய்விக்கக்கூடிய தந்தை செய்வித்துக் கொண்டிருக்கின்றார், நான் நிமித்தமாக இருக்கின்றேன் என்ற இந்த நினைவு உள்ளது அல்லவா. நிமித்தமாகி செய்பவர் கள் சதா இலேசாக இருப்பார்கள், ஏனென்றால், தந்தை செய்விக்கக்கூடிய பொறுப்பாளர் ஆவார். எப்பொழுது நான் செய்கின்றேன் என்ற இந்த நினைவு உள்ளதோ, அப்பொழுது சுமை உடையவர்கள் ஆகிவிடுகின்றார்கள் மற்றும் தந்தை செய்வித்துக்கொண்டு இருக்கின்றார் என்று நினைக்கும் பொழுது இலேசாக இருக்கின்றார்கள். நான் நிமித்தமாக இருக்கின்றேன், செய்விக்கக் கூடியவர் செய்ய வைத்துக்கொண்டு இருக்கின்றார், நடத்து விப்பவர் நடக்க வைத்துக்கொண்டு இருக்கின்றார் – இத்தகையவர்களையே கவலையற்ற இராஜாக்கள் என்று கூறப்படுகின்றது. எனவே, செய்விப்பவர் செய்ய வைத்துக்கொண்டு இருக்கின்றார். இந்த விதியினால் சதா முன்னேறிக் கொண்டே இருங்கள்.

5. பாப்தாதாவின் குடை நிழலில் இருக்கக்கூடிய சிரேஷ்ட ஆத்மா நான் – இந்த அனுபவம் ஏற்படுகிறதா? யார் இப்பொழுது குடை நிழலுக்குள் இருக்கின்றார்களோ, அவர் கள் தான் வெண்கொற்ற குடையின் கீழ் அரசாட்சி புரிபவர்கள் ஆகின்றார்கள். எனவே, குடை நிழலுக்குள் இருக்கக்கூடிய பாக்கியவான் ஆத்மா நான் – இந்த குஷி இருக்கிறது அல்லவா. குடை நிழல் தான் பாதுகாப்பு சாதனம் ஆகும். இந்தக் குடை நிழலுக்குள் எவரும் வர முடியாது. தந்தையின் குடை நிழலுக்குள் இருக்கின்றேன் – இந்த சித்திரத்தை சதா முன்னால் வையுங்கள்.

6. சதா தன்னுடைய ஆன்மிக ஃபரிஷ்தா சொரூபம் நினைவில் உள்ளதா? பிராமணரிலிருந்து ஃபரிஷ்தா, ஃபரிஷ்தாவிலிருந்து தேவதை – இந்தப் புதிருக்கான தீர்வு கண்டு விட்டீர்கள் அல்லவா! புதிர்களுக்கான தீர்வு காணத் தெரிகிறது அல்லவா. நொடியில் பிராமணரிலிருந்து தேவதை, தேவதையிலிருந்து சக்கரம் சுற்றி வந்து பிராமணன், பிறகு தேவதை. எனவே, நானே அது, அதுவே நான் என்ற புதிர் சதா புத்தியில் உள்ளதா? யார் புதிருக்கான தீர்வு காண்கின்றார்களோ, அவர்களுக்குத் தான் பரிசு கிடைக்கின்றது. எனவே, பரிசு கிடைத்திருக்கிறது அல்லவா! இப்பொழுது என்ன கிடைத்துள்ளதோ, அது எதிர்காலத்தில் கூட கிடைக்காது. பரிசாக என்ன கிடைத்துள்ளது? சுயம் தந்தை கிடைத்து விட்டார், தந்தையினுடையவர் ஆகிவிட்டீர்கள். எதிர்கால இராஜ்யத்திற்கு முன் இந்தப் பிராப்தி எவ்வளவு உயர்ந்தது! எனவே, சதா பரிசைப் பெற்றிருக்கும் சிரேஷ்ட ஆத்மா நான் – இந்த போதை மற்றும் குஷியில் சதா முன்னேறிக் கொண்டே இருங்கள். புதிர் மற்றும் பரிசு ஆகிய இரண்டும் நினைவில் சதா இருக்க வேண்டும். அப்பொழுது தானாகவே முன்னேறிக் கொண்டு இருப்பீர்கள்.

7. சதா உறுதித்தன்மை (திடதா) வெற்றியின் சாவி – இந்த விதியின் மூலம் விருத்தியை (வளர்ச்சி) அடையக்கூடிய சிரேஷ்ட ஆத்மா நான், இப்படி அனுபவம் ஆகிறது அல்லவா. உறுதியான எண்ணம் என்ற விசேஷத்தன்மையானது காரியத்தில் சகஜமாக வெற்றியை உருவாக்கி விசேஷ ஆத்மா ஆக்கிவிடுகிறது, மேலும், எந்த ஒரு காரியத்திலும் எப்பொழுது விசேஷ ஆத்மாவாக ஆகின்றீர்களோ, அப்பொழுது அனைவருடைய ஆசீர்வாதங்களும் தானாகவே கிடைக் கின்றன. ஸ்தூலத்தில் யாராவது ஆசீர்வாதம் கொடுக்கவில்லை என்றாலும் இது சூட்சுமமானது ஆகும், இதன் மூலம் ஆத்மாவில் சக்தி நிரம்புகிறது மற்றும் சுயமுன்னேற்றத்தில் சகஜமாக வெற்றி கிடைக்கிறது. எனவே, சதா உறுதித்தன்மை என்ற மகான் தன்மை மூலம் வெற்றியை அடையக்கூடிய மற்றும் அனைவருடைய ஆசீர்வாதங் களைப் பெறக்கூடிய சிரேஷ்ட ஆத்மா நான் – இந்த நினைவின் மூலம் முன்னேறிக் கொண்டே செல்லுங்கள்.

வரதானம்:-

ஆன்மிகத்தன்மையின் சர்வ சக்திகளை தனக்குள் தாரணை செய்யுங்கள், அப்பொழுது ஆன்மிகத்தன்மையின் நறுமணம் சகஜமாகவே அனேக ஆத்மாக்களை தன் பக்கம் கவர்ச்சி செய்யும். எவ்வாறு மனதின் சக்தி மூலம் இயற்கையை தமோபிர தானத்திலிருந்து சதோபிர தானம் ஆக்குகின்றீர்களோ, அவ்வாறு விஷ்வத்தின் மற்ற ஆத்மாக் கள், யார் உங்கள் முன்னால் வர முடியாதோ, அவர்களுக்கு தொலைவில் இருந்தபடியே கூட நீங்கள் ஆன்மிகத்தன்மையின் சக்தி மூலம் தந்தையின் அறிமுகம் மற்றும் முக்கிய செய்தியைக் கொடுக்க முடியும். இந்த சூட்சும இயந்திரத்தை எப்பொழுது தீவிரப்படுத்து கின்றீர்களோ, அப்பொழுது துடித்துக் கொண்டி ருக்கும் அனேக ஆத்மாக்களுக்கு கொஞ்ச மாவது கிடைக்கும் மற்றும் நீங்கள் விஷ்வ கல்யாண காரி என்று அழைக்கப்படுவீர்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top