18 October 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

October 17, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! பாபா எவ்வளவு தொலைவிலிருந்து உங்களுக்குக் கற்பிப்பதற்காக வருகின்றார், படிப்பிற்கான கட்டணம் கூட வாங்குவதில்லை என்றால் எவ்வளவு அன்போடு படிக்க வேண்டும்.

கேள்வி: -

ஆன்மிக அரசாங்கம் (Government) முழு உலகிற்காக இந்த இலவச பள்ளியைத் திறந்திருக் கிறது, ஏன்?

பதில்:-

ஏனெனில், அனைவரும் அனாதைகளாக, ஏழைகளாக ஆகிவிட்டனர். அத்தகைய ஏழைக் குழந்தை களிடமிருந்து தந்தை, கட்டணம் என்ன வாங்குவார்? இந்த கடைசி பிறவியில், தந்தை, அப்பேற்பட்ட கல்வியைக் கற்பிக்கின்றார், அதன் மூலம் நீங்கள் விஷ்வத்தின் எஜமானர் ஆகின்றீர்கள். படிப்பதற்காக வரும் புதுப்புது குழந்தைகளுக்குக் கூட எந்த நஷ்டமும் ஏற்படாது. இறுதியில் வந்திருந் தாலும் கொஞ்சம் உழைத்து, பழையவர் களை விட முன்னால் செல்ல இயலும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

விழிப்படையுங்கள் நாயகிகளே ! விழிப்படையுங்கள் !

ஓம்சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மிகக் குழந்தைகள் பாடல் கேட்டீர்கள். இங்கு குழந்தை களாகிய நீங்கள் ஆத்மஅபிமானி ஆகி அமர வேண்டும் என்று ஆன்மிகத் தந்தை கூறியிருக்கின்றார். பரமபிதா பரமாத்மா மற்றும் குழந்தைகள் இப்பொழுது வந்து சந்திக்கின்றோம். இந்த சிருஷ்டியில் ஆத்மாக்கள் மற்றும் பரமபிதா பரமாத்மாவினுடைய சந்திப்பு என்று இதற்கு கூறப்படுகிறது. இந்த சந்திப்பானது ஒரே ஒரு முறை தான் நடக்கிறது. அரைக்கல்பமாக சத்யுக, திரேதாயுகத்தில் எவரும் அழைக்கவே இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் சுகம் நிறைந்தவர்களாக இருக்கிறீர்கள். அந்த சுகத்தை ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது அடைந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் முதலில் சதோபிரதானமாக இருந்தீர்கள். இப்பொழுதோ தமோபிரதானமாக பதீதமாக ஆகிவிட்டீர்கள். பின்னர், தந்தை பாவனம் ஆக்குகின்றார். எப்பொழுது பூஜாரி ஆகின்றீர்களோ அப்பொழுதே துக்கம் நிறைந்தவர் களாக ஆகின்றீர்கள். 5 விகாரங்களின் காரணத்தினால் தான் துக்கம் ஏற்படுகிறது. எவ்வளவுக் கெவ்வளவு ஏணிப்படியில் இறங்குகின்றீர்களோ அவ்வளவு துக்கம் நிறைந்தவர்களாக ஆகின்றீர்கள். துக்கத்தினுடைய மலை விழப்போகின்றது என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இந்தப் பழைய உலகம் இப்பொழுது வினாசம் ஆக வேண்டும். பாபா நிராகாரமாக இருக்கின்றார். அவர் ஆசிரியராகி சாலிகிராமங்களாகிய நமக்குக் கற்பிக்கின்றார் என்பதை உங்களுடைய புத்தி அறிந்திருக்கிறது. குழந்தைகளே, நான் மீண்டும் உங்களை விஷ்வத்தின் எஜமானர் ஆக்குவதற்காக வந்திருக்கின்றேன். 5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் நீங்கள் சொர்க்கத்தின் எஜமானர்களாக இருந்தீர்கள். நினைவு இருக்கிறது அல்லவா! சங்கமயுகத்தில் தான் உங்களை ஆக்கியிருந்தேன். பின்னர் இப்பொழுது உங்களை மனிதனிலிருந்து தேவதையாக, வைகுண்டம்-சொர்க்கத்தின் எஜமானராக ஆக்குவதற்காக வந்திருக்கின்றேன். உங்களுக்கு இந்த ஆஸ்தி கொடுத்திருந்தேன். பின்னர் நீங்கள் 84 பிறவிகள் எடுக்க வேண்டியதாக இருந்தது. இப்பொழுது உங்களுடைய 84 பிறவிகள் முடிந்துவிட்டன. இப்பொழுது நான் வந்திருக்கின்றேன். பிறகு, நீங்கள் முதல் நம்பர் பிறப்பிலிருந்து ஆரம்பம் செய்ய வேண்டும். உங்களுடைய தந்தையாகிய நான், உங்களுக்கு, கற்பிக்கவும் செய்கின்றேன். இப்பொழுது தந்தை கற்பிப்பதற்கான கட்டணத்தை குழந்தைகளிடமிருந்து வாங்குவாரா? குழந்தைகளிடம் எவ்வாறு கட்டணம் வசூலிப்பார்! ஒரு பைசா கூட கட்டணமாகப் பெறுவதில்லை. உங்களுக்குக் கற்பிப்பதற்காக எவ்வளவு தொலைவில் இருக்கும் பரந்தாமத்தில் இருந்து வருகின்றேன். இந்த வேலை செய்வதற்காக தினமும் வருகின்றேன். சிலருடைய வேலை தொலைவில் எங்காவது இருந்தால் தினமும் வந்து செல்ல வேண்டியது இருக்கும் அல்லவா?, என்று கூறுகின்றார். பாபா ஞானக்கடலாக இருக்கின்றார். அவர் நமக்கு சிருஷ்டியின் முதல், இடை, கடை பற்றிய ஞானம் அளிக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். பகவானின் மகா வாக்கியம் – நான் நிராகாரமான பரமாத்மா, கிருஷ்ணர் அல்ல. நீங்கள் எந்தக் கிருஷ்ணரை பகவான் என்று நினைக்கின்றீர்களோ, அவர் பகவான் ஆக இயலாது. அவரோ (கிருஷ்ணர்) முழுமையாக 84 பிறவிகள் எடுக்கின்றார். பகவானிற்கு தனக்கென்று சரீரம் கிடையாது. எவ்வாறு நீங்கள் ஆத்மாவாக இருக்கிறீர்களோ, அவ்வாறே அவரும் ஆத்மாவாக இருக் கின்றார். ஆனால் வெறும் ஆத்மா என்று சொல்வதால் அனைவரைப் போல் ஆகிவிடும். ஆகையினால் என்னை பரம ஆத்மா என்று அழைக்கின்றனர். நாடகத் திட்டத்தின் அனுசாரமாக ஆத்மாவாகிய எனது பெயர் சிவன் ஆகும். நான் நிராகாரமாக இருக்கின்றேன். என்னை சிவபாபா என்று அழைக்கின்றனர். உண்மையில் எனது பெயர் ஒன்று மட்டும் தான். மற்றபடி வெவ்வேறு பெயர்கள் வைத்து விட்டார்கள். ருத்ரன் என்பது எனது பெயர் கிடையாது. கிருஷ்ணர் எந்த யக்ஞத்தையும் படைக்கவில்லை. இவை அனைத்தும் பொய் ஆகும். நான் தான் வந்து உங்களுக்கு சத்தியத்தைச் சொல்கின்றேன். உங்களை உண்மையிலும் உண்மையான நரனியிலிருந்து நாராயணர் ஆக்குவதற்காக நான் வந்திருக்கின்றேன். எனது வீடு மிகத்தொலைவில் உள்ளது. இங்கு வந்து இந்த சரீரத்தின் மூலம் உங்களுக்குக் கற்பிக்கின்றேன். முழு நாளும் இவருக்குள் நான் இருப்பதில்லை. சுற்றிக் கொண்டே இருக்கின்றேன். என்னை நிந்தனை செய்த காரணத்தினால் நீங்கள் மிகவும் துக்கம் நிறைந்தவர்களாக, மகான் பதீதமானவர்களாக ஆகிவிட்டீர்கள். பிரம்மா வையும் கூட சிலர் ஆதிதேவன் என்கின்றனர், சிலர் ஆதாம் என்கின்றனர், சிலர் மகாவீர் என்கின்றனர், நீங்கள் பிரஜாபிதா என்றழைக்கிறீர்கள். நீங்கள் என்னை அரைக்கல்பமாக நினைவு செய்தீர்கள். ஆகையினால், நான் இந்த மாற்றான் தேசத்தில் வரவேண்டியதாக இருக்கிறது. அனைவரும் பதீதமாக துக்கம் நிறைந்தவர்களாக இருக்கின்றனர். அனாதைகளாக இருக்கின்றனர். செல்வம் எதுவும் இல்லை. அனாதைகளுக்கும் கற்பிப்பதற்காக இந்த அரசாங்கம் கட்டணம் பெறுவதில்லை. இதுவோ மிகப்பெரிய ஆன்மிக அரசாங்கம் ஆகும். எல்லையற்ற தந்தையை எவரும் அறியவில்லை.எவ்வளவு ஜெபம், தவம், தானம், புண்ணியம் முதலியவை செய்கின்றார்கள். இதை ஏன் செய்கின்றீர்கள்? என்று கேட்கப்படுகிறது. இதன் மூலம் பகவானிடம் சென்று சேர்ந்துவிடுவோம் என்று கூறுவார்கள்.சிலர் ஜெபம், தவம் செய்வதால் சென்று சேர்ந்துவிடுவோம் என்றும், சிலர் சாஸ்திரங்களைப் படிப்பதால் சென்று சேர்ந்துவிடுவோம் என்றும் கூறுவார்கள். அவ்வாறு இயலாது என்று தந்தை கூறுகின்றார்.பக்தி செய்து செய்து நீங்கள் மேலும் பதீதம் ஆகிவிட்டீர்கள்.இறக்கைகள் உடைந்துவிட்டன.எதுவரை உங்களுக்குள் ஞானம் என்ற நெய் ஊற்றப்படவில்லையோ அதுவரை நீங்கள் பறக்க இயலாது. நெய் அல்லது பெட்ரோல் தீர்ந்துவிட்டதால் ஜோதி அணைந்துவிட்டது. பிறகு, நான் வந்து நிறைக்கின்றேன்.

பாபா வந்திருக்கின்றார் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இங்கு நீங்கள் குஷியாக இருக்கிறீர்கள். வீட்டிற்குச் சென்றவுடன் நீங்கள் மறந்துவிடுகிறீர்கள். உங்களிடமிருந்து நான் இந்த படிப்பிற்கான கட்டணம் வசூலிப்பதில்லை. இந்த ஒரு பிடி அவல் கொடுக்கிறோம் என்று நீங்கள் கூறுவீர்கள். இந்த ஒரு பிடி அவலை நீங்கள் பக்திமார்க்கத்தில் கொடுத்து வந்திருக்கிறீர்கள். அதற்கான கைமாறு அடுத்த பிறவியில் திரும்பக் கிடைக் கிறது. தந்தை எதிரில் அமர்ந்திருக்கின்றார் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இலவசமாகக் கற்பிக்கின்றார், ஏனென்றால் இவர்கள் தங்களிடம் வைத்திருப்பது என்ன என்று அறிந்திருக்கின்றார். எனவே, தந்தை உங்களிடமிருந்து எதையும் பெறமாட்டார். அந்தப் படிப்பில் எவ்வளவு செலவு செய்ய வேண்டியதாக இருக்கிறது! எத்தனை தேர்வுகள் தேர்ச்சி பெற வேண்டியதாக இருக்கிறது! நானோ ஒரே ஒரு கல்வியைத் தான் கற்பிக்கின்றேன். பள்ளிக்கு யாரெல்லாம் வந்து செல்கின்றார்களோ, அவர்களை சேர்த்துக்கொண்டே இருக் கின்றேன். யார் தாமதமாக வருகின்றார்களோ, அவர்கள் கொஞ்சம் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். அதற்கு பதிலாக தாமதமாக வரக்கூடியவர்களுக்கு நல்ல பாய்ண்ட்ஸ் கிடைக்கின்றன. யார் சீக்கிரம் சீக்கிரமாக படிக்கிறார்களோ அவர்களுக்கு எதுவும் குறையாது. புதுப்புது நல்ல பாய்ண்ட்ஸ் கிடைப்பதால் பழையவர்களை விட தீவிரமாகச் செல்கின்றனர். ஆரம்பத்தில் வந்தவர்களில் எத்தனை பேர் சென்றுவிட்டார்கள். நீங்கள் தாமத மாக வந்திருப்பது நல்லதாகி விட்டது, ஏனெனில், உங்களுக்கு ஆழத்திலும் ஆழமான பாய்ண்ட்ஸ் கிடைக்கின்றன. உலகீய படிப்பும் படியுங்கள், சரீர நிர்வாகத்திற்காக தொழிலும் செய்யுங்கள், என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் மற்றும் சக்கரத்தை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். இதை மறக்கக்கூடாது. இப்பொழுது நம்முடைய 84 பிறவிகளின் இறுதியாகும் என்பதை புரிந்திருக்கிறீர்கள் அல்லவா?

என்னை நினைவு செய்தால் நீங்கள் தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆகிவிடுவீர்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். நீங்கள் தந்தையையும் நினைவு செய்கிறீர்கள், பதியையும் நினைவு செய்கிறீர்கள். இப்பொழுது நான் உங்களுடைய பதிகளுக்கெல்லாம் பதியாக, தந்தைகளுக்கெல்லாம் தந்தையாக, ஆசிரியராகவும் இருக்கின்றேன். நான் உங்களுடைய அனைத்துமாக இருக்கின்றேன். சுகம் அளிப்பவர் ஆவேன். அந்த பதீத உறவினர்கள் முதலியோர் உங்களுக்கு துக்கம் தான் கொடுப்பார்கள். சத்யுகத்தில் யாரும் எவருக்கும் துக்கம் கொடுப்பதில்லை. சத்யுகத்தில் இராஜ்ய பாக்கியம் கொடுப்பதற்காக இப்பொழுது நான் வந்திருக்கின்றேன். இந்த சங்கமயுகத்தில் தான் தந்தையிடமிருந்து நாம் ஆஸ்தியைப் பெறுகிறோம் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் எவ்வளவு படிப்பீர்கள் என்பது உங்கள் கையில் உள்ளது. படிப்பு கூட மிக எளிதானதாகும். இதுவே சகஜ ஞானம், சகஜ நினைவு ஆகும். மரணம் கூட எதிரிலேயே உள்ளது. உங்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல நான் வந்திருக்கின்றேன். ஆகையினாலேயே, என்னை காலனுக்கெல்லாம் காலன் என்று கூறுகின்றனர். இவரை காலன் விழுங்கிவிட்டது என்றும் கூறுவார்கள். காலன், சரீரத்தை விழுங்குகிறது, ஆத்மாவை விழுங்க இயலாது. ஆத்மாவோ ஒரு சரீரத்தை விட்டுவிட்டு இன்னொன்றை எடுத்துக் கொள்கிறது. நடிப்பை நடிக்கிறது. ஒரேயடியாக இவை அனைத்தும் அழிந்துவிடும் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். யாரும் யாருக்காகவும் அழவே முடியாத அளவிற்கு மரணம் வரப்போகிறது. அனைவரும் வீட்டிற்குச் செல்லத்தான் வேண்டும். எப்பொழுது மீண்டும் மீண்டும் துக்கமான உலகத்திலேயே மறுபிறப்பு எடுக்கின்றார்களோ, அப்பொழுது அழுகிறார்கள். பாபா எங்களை தன்னுடன் அழைத்துச் செல்லுங்கள் என்றே நீங்கள் தந்தையை அழைத்தீர்கள். எனவே, இப்பொழுது பாபா வந்திருக்கின்றார். மனிதர்களாய் இருப்பவர் அனைவரையும் அழைத்துச் செல்கின்றார். வினாசம் ஏற்பட்டால் அனைவரும் மரணமடைவார்கள். எவரும் இருக்கமாட்டார்கள். அரசாங்கம் அதனுடைய திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. மனித சிருஷ்டியோ வளர்ந்து கொண்டே இருக்கிறது. சின்னச் சின்னக் கிளைகளில் கூட எத்தனை இலைகள் வெளிவருகின்றன. மரமானது வளரத்தான் செய்யும். ஆனால், அதற்கான ஆயுளும் அவசியம் உள்ளது. கல்ப மரத்தின் ஆயுளானது லட்சக்கணக்கான ஆண்டுகள் இருக்க இயலாது. பூஜைக்குரிய தேவி தேவதைகளாக ஆக்குவதற்காக, இப்பொழுது, தந்தை உங்களுக்குக் கற்பித்துக் கொண்டு இருக்கின்றார். முதன்முதலில் தந்தை உங்களுக்குத் தான் கிடைக்கின்றார். மற்ற தர்மத்தைச் சேர்ந்தவர்களோ வருவதே பின்னால் தான். சத்யுகத்தில் நீங்கள் வருகிறீர்கள். கற்பிப்பதுவும் உங்களுக்குத் தான். பாவனமான உலகிற்குச் செல்ல வேண்டுமானால் விகாரத்தில் செல்லாதீர்கள் என்று மட்டும் கூறுகின்றேன். ஆனாலும், நீங்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை, விˆம் இல்லாமல் நீங்கள் இருக்க இயலாதா? எனது வழிப்படி நடக்கவில்லை என்றால் உயர்ந்த பதவியையும் அடையமாட்டீர்கள். கிருஷ்ணபுரிக்குச் செல்வதே உங்களது ஆசையாக இருந்தது. எனில், கிருஷ்ணருடைய இராஜதானியில் செல்வீர்களா அல்லது பிரஜையிலா? கிருஷ்ணருடன் இளவரசன், இளவரசிகள் தான் விளையாடுவார்கள். பிரஜைகள் விளையாடமாட்டார்கள். இந்த மம்மா, பாபாவும் படித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த ராதை, கிருஷ்ணரே பிறகு சுயம்வரத்திற்குப் பின்பு லெட்சுமி, நாராயணர் ஆவார்கள் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இராஜ்யம் செய்பவர்களின் மாலை தான் உருவாகிறது அல்லவா. 8-ல் மணிகளில் வாருங்கள். நல்லது 8இல் இல்லையெனில் 108ல் ஆவது வாருங்கள்.குறைந்ததிலும் குறைந்தது 16108-ல் ஆவது வாருங்கள். இதுவோ இராஜயோகம். தந்தையின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். குடும்பத்தினருக்கும் புரிய வையுங்கள். பிறருக்குப் புரிய வைப்பதற்காக தந்தை உங்களுக்குப் புரிய வைக்கின்றார். பழைய உலகின் வினாசம் ஏற்பட்டே ஆகவேண்டும். மகாபாரத யுத்தம் புகழ்பெற்றது.. அப்பொழுது பகவான் வந்திருந்தார். பகவான் தான் வந்து இராஜயோகத்தைக் கற்பித்தார். சொர்க்கத்தின் ஸ்தாபனை மற்றும் நரகத்தின் வினாசம் நடந்திருந்தது. இது அதே சமயமாகும். பிறகு, இராஜ்யம் ஸ்தாபனை ஆகிவிடும். சத்யுகத்தில் வேறு தர்மமே கிடையாது. பாரதம் எவ்வளவு தலைசிறந்ததாக இருந்தது. எவ்வளவு செல்வச் செழிப்போடு இருந்தது. கிறிஸ்தவர் கள் அனைவரும் இங்கிருந்து தான் செல்வந்தர்கள் ஆனார்கள். சோமநாதர் கோவிலிலிருந்து எவ்வளவு செல்வத்தை ஒட்டகங்களில் நிறைத்து எடுத்துச் சென்றனர்! இது ஒரு கோவிலுக்கான விˆயம் ஆகும். பாரதத்தில் அனேக கோவில்கள் இருந்தன. தந்தை முழு மரத்தினுடைய இரகசியத்தைப் புரிய வைக்கின்றார். விதையாகிய நான் மேலே இருக்கின்றேன். இது தலைகீழான மரம் அல்லவா! நான் ஞானம் நிறைந்தவராக இருக்கின்றேன். பதீத பாவனரே வாருங்கள் என்று நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள். பிறகும் பெயர், ரூபத்தைக் கடந்தவர் என்று சொல்லிவிடுகிறார்கள். இராவணன் அனைவரையும் முற்றிலுமாக புத்தியற்றவர் ஆக்கி விட்டான். நம்முடைய தந்தை யார்? இந்த சக்கரம் எவ்வாறு சுழல்கிறது? என்பது இப்பொழுது உங்களுக்கு நினைவு வந்துவிட்டது. அனைவருடைய புரிதலும் ஒன்றுபோல் இருக்காது. ஒருவருடைய புத்தி மற்றொருவருடையது போல் இருக்காது. ஒருவருடைய முகச்சாயல் இன்னொருவருடையது போல் இருக்காது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தந்தை யினுடையவர் ஆக வேண்டும் அல்லவா! அவர் தந்தையும் ஆவார், ஆசிரியரும் ஆவார், சத்குருவும் ஆவார். இவர் கட்டணம் எதுவும் வசூலிப்பது இல்லை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எந்த செலவும் இல்லாமல் உங்களுக்கு 21 பிறவிகளுக்காக இராஜ்யம் கிடைக்கிறது. நீங்கள் பக்திமார்க் கத்தில் ஈஸ்வர அர்ப்பணம் என்று ஏதாவது கொடுத்ததற்கு, அடுத்த பிறவியில் உங்களுக்குக் கிடைத்தது. இப்பொழுதோ நான் நேரடியாக வந்து பாரதத்தை சொர்க்கம் ஆக்குகின்றேன். இதில் என்னவெல்லாம் செலவாகிறதோ, அது குழந்தைகளுடையது தான் ஆகிறது. குழந்தைகளுக்குத் தான் செலவு செய்ய வேண்டும் என்று சொல்வோம். செலவு செய்வதற்காக இந்த ஒரு பிரம்மாவை, நல்ல முறையில் பிடித்துவிட்டேன். இவருக்குள் பிரவேசம் செய்து இவர் மூலம் அனைத்தும் செய்விக்கப்பட்டது. இவர் உடனே ஸ்வாஹா செய்து விட்டார். இவரிடம் இருந்த அனைத்தையும் கொடுத்துவிட்டார். பிச்சைக்காரன் ஆகிவிடுங்கள். பின்னர் அத்தகைய இளவரசன் ஆக்குவேன் என்று கூறி பாபா காட்சி காண்பித்தார். இப்பொழுது இதை என்ன செய்வது? என்ற எண்ணம் வந்தது. வினாசம் ஆகியே தீர வேண்டும். குரங்கு போல் கையை மூடிக்கொள்ளாதீர்கள், திறந்து விடுங்கள் என்று பாபா கூறினார். உடனே திறந்துவிட்டார். இல்லையென்றால் இத்தனை குழந்தைகளுக்கு எவ்வாறு செலவு எப்படி நடக்கும்? ஒன்றும் அறியாத ராஜா, அனுபவிக்கும் மந்திரி கதையாகிவிடும்.

பணத்திற்காக ஒருவரைத் தான் பிடித்தேன். குழந்தைகளாகிய உங்களுடைய பட்டி நடைபெற வேண்டி யிருந்தது. பள்ளிக்கூடமும் உருவானது. இப்பொழுது நீங்கள் சாமர்த்தியசாலியாகி, பிறகு, பிறருக்கும் கூட கற்பிக் கின்றீர்கள். நீங்கள் எத்தனை பேருக்கு நன்மை செய்கிறீர்கள்? தந்தை கல்யாணகாரியாக இருக்கின்றார். அனைவரை யும் நரகத்திலிருந்து விடுவித்து சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்றார். இப்பொழுது எவ்வளவு முயற்சி செய்வீர்களோ அவ்வளவு உயர்பதவி அடைவீர்கள். பிரஜைகளுக்காக படவிளக்கக் கண்காட்சிகள் முதலிய யுக்திகள் மேலும் உருவாகிக்கொண்டே இருக்கும். அனேக பிரஜைகள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள். ராஜா, ராணி குறைவாக இருப்பார்கள். பிரஜைகள் என்றால் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் இருப்பார்கள் அல்லவா. ராஜா ராணியோ ஒருவர் இருப்பார். அங்கு சண்டை, சச்சரவு போன்றவை இருக்காது. இப்பொழுதோ மரணம் எதிரில் இருக்கிறது என்பதை குழந்தைகள் நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். எவ்வளவு யோகத்தில் இருப்பீர்களோ, அவ்வளவு பாவ ஆத்மாவிலிருந்து புண்ணிய ஆத்மா ஆவீர்கள். வேறு எந்த உபாயமும் கிடையாது. நல்ல குழந்தைகள் தாய் தந்தையைப் பின்பற்றுகிறார்கள். தந்தை பாவனம் ஆகின்றார், குழந்தை ஆக வில்லை என்றால் அவர் கெட்ட புத்திரன் ஆவார் அல்லவா! இதில் பற்றற்றவர் ஆக வேண்டியுள்ளது. எனக்கு ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாருமில்லை. ஆஸ்தியும் அவரிடமிருந்து கிடைக்கும். இப்பொழுது புது உலகத்தின் ஆஸ்தியை தந்தையிடமிருந்து பெறவேண்டுமென்றால் பதீதம் ஆகாதீர்கள். பாவனம் ஆகாமல் புது உலகிற்குச் செல்ல இயலாது. பல பிறவிகளாக செய்யப்பட்ட பாவத்திற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டியுள்ளது. 63 பிறவிகளின் பாவங்களுக்கான தண்டனை கிடைக்கின்றது. கர்ப்பச்சிறையிலும் தண்டனை அனுபவிக் கின்றார்கள். சத்யுகத்தில் சிறைச்சாலை போன்றவை இருக்காது. அது சொர்க்கம் ஆகும். இப்பொழுது தந்தை சாதாரண உடலில் வந்திருக்கின்றார். ஆகையினால் தந்தையை அடையாளம் காணவில்லை. தந்தையுடன் யோகத்தை ஈடுபடுத்துவதன் மூலம் ஆத்மா பாவனமாகும். நான் பதீத உலகம், பதீத சரீரத்தில் வருகின்றேன். பின்னர் இவரை நம்பர் ஒன் பாவனம் ஆக்குகின்றேன். தத்தத்துவம். நீங்களும் பாவனம் ஆகின்றீர்கள், என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் தந்தையின் குழந்தைகளாகி இருக்கின்றீர்கள். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளும் ஆவீர்கள். ஆகையினால் பாப்தாதா என்று கூறப்படுகின்றது. இப்பொழுது நேரம் மிகவும் குறைவாக உள்ளது என்று தந்தை புரிய வைக்கின்றார். சரீரத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. தந்தையை நினைவு செய்து கொண்டே யிருங்கள். சுயதரிசன சக்கரதாரி ஆகுங்கள். முழு நாளும் இந்த விஷயங்கள் நினைவில் இருக்க வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய்,தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. முழுமையிலும் முழுமையாக பற்றற்றவர் ஆக வேண்டும். ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாருமில்லை என்ற இந்தப் பாடத்தைப் பக்கா செய்ய வேண்டும். நல்ல குழந்தையாகி தாய் தந்தையைப் பின்பற்ற வேண்டும்.

2. சிறிது செலவுகூட செய்யாமல் படிப்பின் மூலம் 21 பிறவிகளுக்கான இராஜ்யம் கிடைக்கிறது எனில் மிகுந்த ஈடுபாட்டுடன் கல்வியைக் கற்க வேண்டும். சுயதரிசன சக்கரதாரி ஆக வேண்டும்.

வரதானம்:-

எந்த குழந்தைகள் அனைத்து பொக்கிங்களினால் சதா முழுமையானவராகவும் நிரம்பியவராகவும் இருக்கிறார்களோ, அவர்களின் கண்கள் மற்றும் நெற்றியின் மூலம் ஈஸ்வரிய நசா தென்படும். அவர்களின் முகமே சேவை செய்யும். யாரிடம் குறைவாக அல்லது அதிகமாக சேமிப்பு ஆகிறதோ அதுவும் கூட அவர்களின் முகத்தின் மூலம் தென்பட்டுவிடுகிறது. எவ்வாறு யாராவது உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களாக இருந்தால் அவர்களின் முகத்தின் மூலம் அதனுடைய ஜொலிப்பு மற்றும் கௌரவம் தென்படுகிறது. அதுபோல உங்களுடைய முகம் மற்றும் ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொரு செயலையும் தெளிவாக காட்டும் பொழுது உண்மையான சேவாதாரி என்று சொல்லாம்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top