18 May 2021 TAMIL Murli Today – Brahma Kumaris

May 17, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! காலன்களுக்கெல்லாம் காலனான பாபா, உங்களை காலன் மீது வெற்றி அடையுமாறு செய்விக்க வந்துள்ளார். மன்மனாபவ என்ற மந்திரத்தினால் தான் நீங்கள் காலன் மீது வெற்றி அடைவீர்கள்.

கேள்வி: -

ஆன்மீக தந்தை ஆன்மீக பிரயாணிகளாகிய உங்களுக்கு, எந்த ஒரு விசேஷ அறிவுரை அளிக்கிறார்?

பதில்:-

ஹே ஆன்மீக பயணிகளே! நீங்கள் தேக உணர்வை விடுத்து ஆத்ம உணர்வுடையவராக ஆகுங்கள். இராவணன் அரைக்கல்பமாக உங்களை தேக அபிமானியாக ஆக்கினான். இப்பொழுது ஆத்ம அபிமானி ஆகுங்கள். இந்த ஆன்மீக ஞானத்தை சுப்ரீம் ஆத்மா தான் உங்களுக்கு அளிக்கிறார், வேறு யாரும் கொடுக்க முடியாது.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

ஓம் நமோ சிவாய….

ஓம் சாந்தி. குழந்தைகள் தங்களுடைய தந்தையின் மகிமையை கேட்டீர்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் என்றும் பாடப்படுகிறது. அவர் அனைத்து குழந்தைகளின் தந்தை ஆவார். மற்றவர்கள் அனைவருமே தங்களுக்குள் சகோதரர்கள் ஆவார்கள். மேலும் அனைவரின் (ஆத்ம்மாக்களின்) தந்தையும் ஒருவர் ஆவார். அவர் தான் சிவபாபா. ஹே குழந்தைகளே! பக்தி மார்க்கத்தில் உங்களுக்கு இரண்டு தந்தைகள் இருக்கின்றார்கள் என்பதை தந்தை புரிய வைத்துள்ளார் – லௌகீக தந்தை மற்றும் பரலோக தந்தை. படைப்பவரிடமிருந்து படைப்பிற்கு ஆஸ்தி கிடைக்கிறது. அது எல்லைக்குட்பட்ட ஆஸ்தி. இது எல்லையில்லாத ஆஸ்தி ஆகும். எல்லையில்லாத தந்தை ஒரே ஒருவர் ஆவார். அவரிடமிருந்து எல்லையில்லாத ஆஸ்தி கிடைக்கிறது. அவர் நிராகாரமானவர் ஆவார். அவருடைய பெயர் பரமபிதா பரமாத்மா சிவன் என்பதாகும். சிவபரமாத்மாய நம என்றும் கூறுகிறார்கள். அவர் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார். உங்களுடைய புத்தி நிராகார தந்தையின் பக்கம் செல்கிறது. அவர் பரந்தாமத்தில் இருக்கிறார். அங்கிருந்து தான் ஆத்மாக்களாகிய நீங்கள் வருகிறீர்கள். தந்தையும் அங்கு தான் இருக்கிறார். அவர் தான் அனைவருக்கும் சத்கதி அளிப்பவர். அதில் கூட பாரதம் பரமபிதா பரமாத்மாவின் ஜன்ம பூமி ஆகும். சிவஜெயந்தி கூட இங்கு கொண்டாடுகிறார்கள். அந்த ஆத்மீக தந்தைக்குத் தான் ஞானக் கடல், பதீத பாவனர், லிபரேட்டர், கைடு என்று கூறப்படுகிறது. அவரே துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் – இதை பாரதவாசிகள் அறிந்துள்ளார்கள். இது துக்கதாமம் ஆகும். பாரதம் தான் சுக தாமமாக இருந்தது. தந்தை குழந்தைகளுக்கு அமர்ந்து புரிய வைக்கிறார் – ஹே பாரதவாசிகளே, உங்களுடைய ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் இருந்த பொழுது நீங்கள் உலகிற்கு அதிபதியாக இருந்தீர்கள். தேவி தேவதா தர்மம் உயர்ந்ததாக, கர்மம் சிறந்ததாக, இருந்தது. இப்பொழுது தர்மம் தாழ்ந்து, கர்மம் சீர்கெட்டு, போய்விட்டது. தங்களை தூய்மையான தேவதை என்று அழைத்து கொள்ள முடியவில்லை. கலியுக கடைசி வரை பக்தி மார்க்கம் நடக்கிறது. இதில் ஞானம் இருப்பதில்லை. ஞானத்தினால் சத்கதி ஆகிறது. அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளலான தந்தை வராதவரை சத்கதியாக முடியாது. நான் கல்பத்தின் சங்கமத்தில் வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். இச்சமயத்தில் இருப்பதே பதீதமான உலகம்.ஒருவர் கூட பாவனமாக இருப்பதில்லை. சந்நியாசிகள் பவித்திரமாக ஆகிறார்கள் என்றாலும் கூட அவர்கள் மறுபிறவி இங்கேயே எடுக்க வேண்டி உள்ளது. விஷத்தினால் பிறவி எடுக்க வேண்டி உள்ளது. திரும்பிப் போக முடியாது. சக்கரம் முடிவடையும் பொழுது தான், தந்தை வந்து அழைத்துச் செல்கிறார். இதற்கு ஆத்மீக ஞானம் என்றே கூறப்படுகிறது. சுப்ரீம் ஆத்மா, ஆத்மீக ஞானம் அளிக்கிறார். சுப்ரீம் ஆத்மா தான் ஞானக் கடல், பதீத பாவனர் ஆவார். மற்றபடி சாஸ்திரங்களின் ஞானம் பக்தி மார்க்கத்தினுடையது ஆகும். யக்ஞம், தவம், தீர்த்தம் ஆகியவை செய்து, இன்னுமே கீழே விழுந்து வந்தீர்கள் என்று தந்தை கூறுகிறார். நீங்கள் முதலில் சதோபிரதானமாக இருந்தீர்கள். பாரதத்தில் தூய்மை இருந்த பொழுது சாந்தி, சுகம் இருந்தது. ஹெல்த், வெல்த் இரண்டுமே இருந்தது. இன்றிலிருந்து 5 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய விஷயம் ஆகும். இந்த பாரதம் சொர்க்கமாக இருந்தது. அச்சமயம் வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை. ஒரே ஒரு ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் மட்டும் இருந்தது. அதை பரமபிதா பரமாத்மா ஸ்தாபனை செய்திருந்தார். சொர்க்கத்தின் ஸ்தாபனை அவர் தான் செய்வார். மனிதர்கள் செய்ய முடியாது. கிருஷ்ணரை படைப்பவர் என்று கூற முடியாது. இல்லை. ஒரே ஒரு நிராகார சிவன் தான் படைப்பவர் ஆவார். மற்றவை அவருடைய படைப்பு ஆகும். படைப் பவரிடமிருந்து தான் படைப்பிற்கு ஆஸ்தி கிடைக்கிறது.

நான் உங்களுடைய எல்லையில்லாத தந்தை என்று தந்தை புரிய வைக்கிறார். நான் உங்களுக்கு 21 பிறவிகளுக்கு எல்லையில்லாத ஆஸ்தியை அளிக்கிறேன். சூரிய வம்ச, சந்திர வம்சத்தின் பவித்திர தர்மத்தை ஸ்தாபனை செய்கிறேன்.பிராமண தர்மம் என்பது உச்சி (குடுமி) ஆகும். எல்லோரையும் விட உயர்ந்தவர் ஆன்மீக தந்தை. ஆத்மாக்களை தனக்குச் சமமாக ஆக்குகிறார். தந்தை ஞானக் கடல், சுகக் கடல் ஆவார். எனவே உங்களையும் அதுபோல ஆக்குகிறார். பாரதம் தான் சுகதாமமாக இருந்தது. இப்பொழுது துக்கதாமம் உள்ளது. .தந்தை எப்படி வருகிறார் என்பது யாருக்குமே தெரியாது. சத்யுக ஆரம்ப முதல் கலியுக கடைசி வரையும் இந்த முழு சரித்திரம் பூகோளமே பாரதத்தினுடையது ஆகும். இந்த லட்சுமி நாராயணர் எவ்வளவு ஆரோக்கியமாகவும் செல்வந்தராகவும் இருந்தார்கள். ஒரு பொழுதும் நோய்வாய்ப்பட்டிருக்க வில்லை. இப்பொழுது காலன் மீது வெற்றி அடைவதற்கான கல்வியை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு காலன்களுக்கெல்லாம் காலன் மகா காலன் என்று கூறப்படுகிறது.அவர் உங்களை காலன் மீது வெற்றி அடையுமாறு செய்விக்கிறார். பெயர் கூட சிவாய நம:- என்று கூறக் கேட்டுள்ளீர்கள். நீங்கள் பரமாத்மா சர்வவியாபி, நாய், பூனையில் இருக் கிறார் என்று கூற மாட்டீர்கள். இதற்கு தர்மத்திற்கு நிந்தனை என்று கூறப்படுகிறது. தந்தையை நிந்தனை செய்கிறார்கள். இப்பொழுது இது கல்பத்தின் சங்கமத்தின் நேரம் ஆகும். இச்சமயம் தான் விநாச காலத்தில் அன்பில்லாத (விபரீத) புத்தி என்று கூறப்படுகிறது. இப்பொழுது விநாசம் முன்னால் நின்றுள்ளது. கீதையில் கூட யாதவர்கள், கௌரவர்கள், பாண்டவர்கள் என்ன செய்து சென்றார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. அனைத்து சாஸ்திரங்களுக்கும் தலையாயதாக இருப்பது ஸ்ரீமத் பகவத் கீதை ஆகும். அதிலிருந்து தான் பிறகு மற்ற சாஸ்திரங்கள் வெளிப்பட்டுள்ளன. கீதை தேவதா தர்மத்தின் சாஸ்திரம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நான் வந்து, உங்களை சூத்திரரிலிருந்து பிராமணராக ஆக்கு கிறேன் என்று தந்தை கூறுகிறார். மீண்டும் உங்களை தேவி தேவதையாக ஆக்குகிறேன். பிறகு நீங்கள் க்ஷத்திரியர், வைசியர், சூத்திரராக ஆகிறீர்கள். நீங்கள் 84 பிறவிகள் எப்படி எடுக்கிறீர்கள் என்பதை தந்தை புரிய வைக்கிறார். யார் முதன் முதலில் சத்யுகத்தில் வருகிறார்களோ அவர்களே அவசியம் எல்லோரையும் விட அதிகமான பிறவிகள் எடுக்கிறார்கள். பாரத வாசிகளாகிய நீங்கள் அதிக பட்சம் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள். குறைந்த பட்சம் ஒரு பிறவி. இதையும் தந்தை தான் அமர்ந்து புரிய வைக்கிறார். தந்தையைத் தவிர வேறு யாரையும் ஞானக் கடல் என்று கூறப்பட மாட்டாது. பதீத பாவனர், ஞானக் கடல் என்று கூறும் பொழுது புத்தி மேலே சென்று விடுகிறது. தந்தை தான் அனைவரையும் விடுவித்து திரும்ப அழைத்துச் செல்கிறார். அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல், ஒரே ஒரு தந்தை ஆவார்.நல்லது. பிறகு அனைவருக்கும் துர்க்கதி எப்படி ஆகிறது. யார் செய்கிறார்? சத்கதி என்று சத்யுகத்திற்கும், துர்க்கதி என்று கலியுகத்திற்கும் கூறப்படுகிறது. நான் கல்ப கல்பமாக குழந்தைகளாகிய உங்களுக்கு வந்து சத்கதி அளிக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். குழந்தைகளாகிய நீங்கள் முழு உலகத்தின் சரித்திரம் பூகோளம் பற்றி அறிந்துள்ளீர்கள். பள்ளிக் கூடங்களிலோ பாதி சரித்திர, பூகோளம் கற்பிக்கிறார்கள். சத்யுகம், திரேதாவில் யார் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இந்த இலட்சுமி நாராயணர் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள் என்ற படமோ சரியாக உள்ளது. எவ்வளவு காலம் அவர்களுடைய ராஜதானி நடந்தது என்பதை நீங்கள் கூற முடியும். கிறித்துவர்களின் பரம்பரை 2 ஆயிரம் வருடங்கள் நடந்தது. பௌத்திய பரம்பரை இவ்வளவு காலம் நடந்தது. இஸ்லாமியர்….. அதற்கு முன்பு சந்திர வம்சத்தினர் இருந்தார்கள். அது 1250 வருடங்கள் நடந்தது. சத்யுக, திரேதா வில் சூரிய வம்சத்தினர், சந்திர வம்சத்தினர் தான் இருந்தார்கள். வேறு எந்த தர்மமும் இருக்க வில்லை. நீங்கள் தான் சூரிய வம்சத்தினர், சந்திர வம்சத்தினராக ஆகிறீர்கள். இப்பொழுது மீண்டும் பிராமண வம்சத்தினர் ஆகி உள்ளீர்கள். இந்த முழு நாடகமும் பாரதத்தில் தான் அமைந்துள்ளது. பாரதம் தான் நரகம் மற்றும் சொர்க்கமாக ஆகிறது. மற்ற தர்மத்தினருக்காக கூற மாட்டார்கள். அவர்கள் சொர்க்கத்தில் இருப்பதே இல்லை. யாராவது இறந்தால் சொர்க்கவாசி ஆனார் என்று கூறுகிறார்கள். ஆனால் புரிந்துக் கொள்வது இல்லை. நரகவாசிகள் நரகத்தில் தான் ஜென்மம் எடுக்க வேண்டி வரும். சொர்க்க வாசிகள் சொர்க்கத்தில் தான் மறுபிறவி எடுப்பார்கள். இந்த இலட்சுமி நாராயணர் சொர்க்கவாசியாக இருந்தார்கள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். அவர்கள் இந்த ராஜதானியை எப்படி பெற்றார்கள்? இலட்சக்கணக்கான வருடங் களின் விஷயமோ நினைவில் இருக்க முடியாது. சத்யுகத்தில் இந்த சாஸ்திரங்கள் ஆகியவை இருப்பதில்லை. இவை முழுவதுமே பக்தியின் சாமான்கள் ஆகும். படியில் கீழே இறங்க வேண்டியே உள்ளது. சதோபிரதான நிலையிலிருந்து சதோ, ரஜோ, தமோவில் – இந்த படி இறங்குவதற்கு 5 ஆயிரம் வருடங்கள் பிடிக்கிறது. சத்யுகத்தில் 16 கலை சம்பூர்ணம் பிறகு திரேதாவில் 2 கலை குறைவு. ஆத்மாவில் வெள்ளியின் கலப்படம் ஆகியது. செம்பு யுகத்தில் வரும் பொழுது, செம்பினுடைய கலப்படம் ஆகியது. இச்சமயம் முற்றிலுமே தமோபிரதானமாக உள்ளது. ஆத்மாவில் தான் துருபிடிக்கிறது. நீங்கள் தான் முழுமையாக 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். இதை ஆன்மீக தந்தையான சிவபாபா வந்து, ஆன்மீக குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். நீங்கள் இப்பொழுது ஆத்ம ஆபிமானி ஆக வேண்டும். இராவணின் பிரவேசம் ஆகிய உடனே, எல்லோரும் தேக அபிமானி ஆகி விடுகிறார்கள். இப்பொழுது தங்களை ஆத்மா என்று உணர வேண்டும் நாம் தான் 84 பிறவிகள் எடுத்து பல்வேறு பாகம் நடித்துக் கொண்டே வந்துள்ளோம். இப்பொழுது 84ன் சக்கரம் முடிவடைந்தது. இப்பொழுது சரீரம் கூட இற்றுப் போன நிலை அடைந்துள்ளது. துவாபரத்திலிருந்து இராவண இராஜ்யம் ஆகிறது. சத்யுகத்தில் இருப்பது இராம இராஜ்யம். சத்யுகத்தில் நீங்கள் ஆத்ம அபிமானியாக இருந்தீர்கள். துவாபர கலியுகத்தில் நீங்கள் தேக அபிமானி ஆகி விடுகிறீர்கள். ஆத்மாவையும் அறியாமல் இருக்கிறீர்கள். பரமாத்மாவையும் அறியாமல் இருக்கிறீர்கள்.

ஆத்மா ஒரு நட்சத்திரம் ஆகும் என்று தந்தை புரிய வைக்கிறார். புருவ மத்தியில் பிரகாசிக்கும் அதிசய மான நட்சத்திரம்….. அதை திவ்ய திருஷ்டி இன்றி பார்க்க முடியாது. அது முற்றிலுமே சூட்சுமமானது. ஆத்மா தான், ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்றை எடுக்கிறது. ஆத்மாக்களாகிய நாம் 84 பிறவிகள் எடுத்துள்ளோம். பரமபிதா பரமாத்மா கூட பிந்து (புள்ளி) ஆவார். அவருக்கு தான் ஞானக்கடல் பதீத பாவனர், நாலேஜ் ஃபுல் என்று கூறப்படுகிறது. பரமபிதா பரம ஆத்மாவிடம் படைப்பின் முதல் இடை கடை பற்றிய ஞானம் உள்ளது. விதை ரூபமாக இருக்கும் காரணத்தால், அவருக்கு சத்-சித் ஆனந்த சொரூபம் என்று கூறப்படுகிறது. தந்தையிடம் இருக்கும் ஞானத்தை அவர் அவசியம் கூற வேண்டி இருக்கும். இது ஆன்மீக ஞானம் ஆகும். அனைத்து ஆத்மாக்களின் தந்தை வந்து, ஆத்மாக்களுக்கு படிப்பிக்கிறார். நீங்கள் ஆத்ம உணர்வுடையவராக ஆக வேண்டும். சிவபாபா நமக்கு படிப்பிக்கிறார். அவரே நாலேஜ்ஃபுல் ஆவார். பாபா தான் வந்து சொர்க்கத்தின் படைப்பை படைக்கிறார். உங்களை சொர்க்கத்திற்கு தகுதியுடையவராக ஆக்குகிறார். இந்த சிருஷ்டி சக்கரத்தின் ரகசியத்தை எந்த மனிதரும் அறியாமல் உள்ளார்கள். தந்தையையே அறியாத காரணத்தால் பாரதத்திற்கு இந்த நிலை ஆகி உள்ளது. பாரதத்தில் தூய்மை இருந்த பொழுது சுகம், சாந்தி இருந்தது. இப்பொழுது இருப்பதே நரகம் பிறகு சொர்க்கத்தில் யாராவது எப்படி செல்ல முடியும்? முற்றிலுமே கல்புத்தி ஆகி விட்டுள்ளார்கள்.

நான் குழந்தைகளுக்காக ஏதாவதொரு பரிசு எடுத்து வருவேன் அல்லவா? என்று தந்தை கூறுகிறார். உங்களை சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்குகிறேன். யார் முந்தைய கல்பத்தில் ஆஸ்தி எடுத்தார்களோ அவர்களே இப்பொழுது எடுப்பார்கள், மனிதனிலிருந்து தேவதையாக ஆவார்கள். உண்மையில் எல்லோருமே பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் ஆவார்கள். இப்பொழுது பிரம்மா மூலமாக சிவபாபா படைப்பை படைத்துக் கொண்டிருக்கிறார். பிரம்மா குமார் குமாரி ஆகிக் கொண்டே செல்கிறார்கள். சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி எடுப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும்.தமோபிரதான நிலையிலிருந்து, சதோபிரதானமாக ஆக வேண்டும். குழந்தைகளே ! என்னை நினைவு செய்தீர்கள் என்றால் உங்களுடைய எல்லா விகர்மங்களும் விநாசம் ஆகும் என்று தந்தை கூறுகிறார். இந்த ஆன்மீக ஞானத்தை தந்தையை தவிர வேறு யாருமே அளிக்க முடியாது. ஆன்மீக தந்தை தான் ஆத்மாக்களுக்கு ஞானம் அளிக்கிறார். நீங்கள் ஆன்மீக யாத்திரை மேற்கொள்கிறீர்கள். தேக அபிமானத்தை விடுத்து தேஹீ (ஆத்ம) அபிமானி ஆகிறீர்கள். ஆத்மா அழியாதது ஆகும். ஆத்மாவில் தான் நடிப்பின் பாகம் நிரம்பி உள்ளது. ஆத்மா எப்படி 84 பிறவிகளின் பாகம் நடிக்கிறது என்பது இப்பொழுது தெரிய வந்துள்ளது. நாம் சூரிய வம்சத்தினராக இருந்தோம். பிறகு சந்திர வம்சத்தினர் ஆனோம். மீண்டும் நாம் சூரிய வம்சத்தினர் ஆக வேண்டும். இப்பொழுது தந்தை சதோபிரதானமாக ஆவதற்கான அறிவுரை அளிக்கிறார் என் ஒருவனை நினைவு செய்யுங்கள். பகவான் வாக்கியம் – கீதையின் பகவான் சிவபாபாவே ஆவார். ஸ்ரீ கிருஷ்ணர் அல்ல. கிருஷ்ணருடைய ஆத்மா கூட இப்பொழுது கற்றுக் கொண்டிருக்கிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான, காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு ,தாய், தந்தையாகிய, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. ஆன்மீக யாத்திரை செய்ய வேண்டும் மற்றும் செய்விக்க வேண்டும். தங்களை சதோபிர தானமாக ஆக்குவதற்காக ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஆத்ம அபிமானி ஆவதற்காக முழுமையாக முயற்சி செய்ய வேண்டும்.

2. காலத்தின் மீது வெற்றி அடைவதற்காக, தந்தையின் அறிவுரையை கவனத்தில் கொள்ள வேண்டும் தங்களை ஆத்மா என்று உணர்ந்து, ஆத்மாக்களுக்கு ஞானம் அளிக்க வேண்டும்

வரதானம்:-

எப்படி விதையில் முழு விருட்சம் அடங்கி உள்ளதாக இருக்குமோ, அதே போல சப்தத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் சங்கமயுகத்தின் அனைத்து விசேˆ குணங்களும் அனுபவம் ஆகின்றன. மாஸ்டர் விதை ரூபம் ஆவது என்றால், அமைதி மட்டுமல்ல ஆனால் அமைதியுடன் கூடவே ஞானம், அதீந்திரிய சுகம், அன்பு, ஆனந்தம், சக்தி போன்ற அனைத்து குணங்களின் அனுபவம் செய்தல். இந்த அனுபவம் சுயம் தனக்கு மட்டும் ஏற்படுவதில்லை. ஆனால் மற்ற ஆத்மாக்கள் கூட அவரது முகத்தின் மூலமாக அனைத்து குணங்களின் அனுபவம் செய்கிறார்கள். ஒரு குணத்தில் அனைத்து குணங்களும் அடங்கியதாக இருக்கும்.

சுலோகன்:-

மாதேஷ்வரி அவர்களின் விலை மதிப்பிட முடியாத மகா வாக்கியம்.

யாருக்கு பகவானே துணைவனாக இருக்கிறாரோ அவரை

புயல்கள் மற்றும் சூறாவளி எப்படி தடுக்க முடியும்.

யாருக்கு பகவானே துணையோ, அவரை புயலும் சூறாவளியும் எப்படி தடுக்க முடியும் .. .. .. .. பாருங்கள், இந்த பாடல் ஆத்மா மற்றும் பரமாத்மா இரண்டு பொருட்கள் ஆவார்களேயன்றி, இறைவன் சர்வவியாபி (எங்கும் நிறைந்தவர்) அல்ல என்பதை நிரூபிக்கிறது. ஏனெனில் யாருடைய துணை இறைவனோ, அவர் ஆஜராக இருக்கும் பொழுது கூட இந்த சிருஷ்டியில் இவ்வளவு துக்கம் ஏன்? மனிதர்கள் ஏன் இவ்வளவு பரம ஏழைகளாகவும், யாசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்? பரமாத்மாவோ சுக சொரூபமாக இருக்கிறார். எனவே பரமாத்மாவை சர்வவியாபி என்று கூறுவது பரமாத்மாவை அவமதிப்பது போன்றதாகும். பகவான் ஆஜராக இருக்கிறார் என்றால், உலகம் சுகசொரூபமாக இருக்க வேண்டுமா? இல்லை, துக்கத்தின் ரூபமா? பிறகு பரமாத்மாவை கூப்பிடுவதன் அவசியம் என்ன?

எனவே இந்த சமயத்தில் மாயை தான் சர்வவியாபி ஆகுமே அல்லாமல் பரமாத்மா எப்பொழுதும் ஆஜராக இருக்கிறார் என்பதல்ல. பரமாத்மா ஒரு முறை சங்கமத்தில் மட்டுமே வருகிறார். அப்பொழுது அவரை (ஹாஜிர்-நாஜிர்) ஆஜராக இருக்கிறார், பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று கூறலாம். மற்றபடி அவரது நினைவு அனைவருடைய இதயங்களில் அவசியம் வியாபித்துள்ளது. சரீரத்தை இயக்கக் கூடிய சக்தியோ ஒவ்வொருவருக்கும் இருக்கும். பல்வேறு சம்ஸ்காரங்கள் உடைய ஆத்மா ஆகுமேயன்றி பரமாத்மா அல்ல. இப்பொழுது பரமாத்மாவின் துணையை ஏன் பெற்றுள்ளீர்கள் என்பதை சிந்திக்க வேண்டும். இந்த மாயையின் புயல் மற்றும் சூறாவளியை கடந்து செய்வதற்காக. எனவே அவசியம் மாயையின் புயல் என்று ஏதோ இருக்கிறது. அதை கடந்து செல்வதற்காக அந்த பரமாத்மாவின் ஆத்மாக்களாகிய நாம் வேண்டுகிறோம். ஒரு வேளை அவர் ஆஜராக இருந்திருந்தார் என்றால் மாயையின் குழப்பமும் இருக்காது, அவரது துணையை பெறுவதற்காக நினைவு செய்ய வேண்டியும் இருக்காது. எனவே ஆத்மாக்களாகிய நாம் மற்றும் பரமாத்மா இருவருக்கும் இந்த நாடகத்தில் பாகம் உள்ளது. எனவே எப்பொழுது பரமாத்மா வருகிறாரோ, அப்பொழுது அவரது முழுமையான துணையை பெற்று அவருடையவராக ஆகி விட வேண்டும். அப்பொழுது தான் மாயை யின் புயல்களிலிருந்து விடுதலை பெறுவீர்கள். அவர் அனைவருக்கும் சுகம் அளிக்கும் வள்ளலாகத் தான் இருக்கிறார் என்றாலும் கூட நடைமுறையில் யார் அவருடைய ஆதாரத்தை பெறுகிறார்களோ அவர்களுக்குத் தான் அவரது துணை கிடைக் கிறது. எனவே அந்த குழந்தைகளுக்கு கூடுதலான பிராப்தி ஆகிறது. அவர் உலகத்திற்குள்ளே வந்து ஆஜராக ஆகி இருக்கிறார். என்றாலும் கூட …… ஓகோ, ஆச்சரியகரமாக உள்ளது. உலகம் இவரை அறியாத காரணத்தால் இவரது துணையை பெறுவதில்லை. ஒரு வேளை இவரது முழுமையான துணையை பிடித்து கொண்டீர்கள் என்றால் அவர் உதவி அளிப்பதில் புகழ் பெற்றவர். ஒரு அடி நீங்கள் முன்னால் வந்தீர்கள் என்றால், நான் பத்து அடிகள் முன்னால் வருவேன் என்று கூறுகிறார். எனவே அவர் முழுமையான ஆஸ்தியை அளிக்கிறார். அதில் எந்தவொரு குறைவும் இருப்பதில்லை. நல்லது.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top