18 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

January 17, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே, அதிகாலையில் எழுந்து பாபாவை மிகுந்த அன்போடு நினைவு செய்யுங்கள், பாபாவை நினைவு செய்வீர்களானால் பாபாவும் அன்பு செய்வார், கவர்ச்சி ஏற்படும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

உங்களை அடைந்த நாங்கள் உலகத்தை அடைந்தோம்…

ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு பாபா அடிக்கடி புரிய வைக்கிறார் – குழந்தைகளே, தன்னை ஆத்மா என உணருங்கள். இந்த சரீரம் என்னுடையதில்லை. இதுவும் அழிந்துவிடப் போகிறது. நாம் பாபாவிடம் செல்ல வேண்டும். இது போல் ஞானத்தின் போதையில் இருப்பதன் மூலம் உங்களிடம் மிகுந்த கவர்ச்சி ஏற்படும். இதையோ அறிவீர்கள் – இந்தப் பழைய சரீரத்தை விட்டுவிட வேண்டும். இங்கே இனியும் இருக்க வேண்டாம். இந்த சரீரத்தின் மீது வைத்த மோகம் நீங்கிவிட வேண்டும். இந்த சரீரத்தில் சேவைக்காக மட்டுமே இருக்கிறோம். இதன் மீது மோகம் இல்லை. இப்போது வீட்டுக்குப் போய்விட வேண்டும். இந்த சங்கம யுகத்தின் சமயமும் கூட புருஷார்த்தத்திற்காக மிகவும் அவசியமாகிறது. இப்போது நாம் புரிந்து கொண்டோம் – நாம் 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வந்திருக்கிறோம். பாபா சொல்கிறார் – உங்களது வேலை-தொழிலை தாராள மாகச் செய்யுங்கள். இல்லற விவகாரங் களில் இருந்தாலும் புத்தியில் இது நினைவிருக்க வேண்டும் – இவை அனைத்துமே முடிந்துவிடப் போகின்றன. இப்போது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். பாபாவும் எப்போதும் வீட்டில் வசிக்கிறார் இல்லையா? 8 மணி நேரத்தை வேலை-தொழில் முதலிய வற்றில் ஈடுபடுத்துங்கள். 8 மணி நேரம் ஓய்வெடுங்கள். மீதி நேரத்தில் எல்லையற்ற தந்தையுடன் இந்த ஆன்மிக உரையாடல் செய்யுங்கள்.

பாபாவின் ஸ்ரீமத்: நிரந்தர நினைவின் யாத்திரையில் இருங்கள். எவ்வளவு நினைவு யாத்திரை யில் இருக்கிறீர்களோ, அந்த அளவு இயற்கை உங்களுக்கு தாசி ஆகி விடும். சந்நியாசிகள் ஒரு போதும் வேண்டுவ தில்லை. அவர்கள் யோகியாகவோ இருக்கிறார்கள் இல்லையா? நாம் பிரம்மத்தில் ஐக்கியமாகி விடுவோம் என்ற நிச்சயம் அவர்களுக்கு உள்ளது. அதில் மிகவும் பக்காவாக உள்ளனர். இப்போது நாம் போகிறோம், சரீரத்தை விட்டுச் சென்று விடுவோம் என்று அதற்காகக் கடுமையாக முயற்சி செய்கின்றனர். பக்தி மார்க்கத்தில் அநேக பக்தர்கள் தேவதைகளைச் சந்திப்பதற்காக தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். ஆத்மாவின் கொலை என்பது கிடையாது. அவ்வாறு நடைபெறுவதில்லை. மற்றப்படி சரீரத்தை அழித்துக் கொள்கின்றனர். குழந்தைகள் நீங்கள் யோகத்தில் அமர்ந்தால் அமரர் போல் ஆகி விடுகிறீர்கள். ஒரு போதும் எந்த ஒரு சிந்தனையும் வராது – அதாவது செய்வோம் – ஆனால் அந்த அவஸ்தா வலிமையுள்ளதாக இருக்க வேண்டும். முதலிலோ தனக்குள்ளே பார்க்க வேண்டும் – நமக்குள் எந்த ஒரு குறையும் இல்லையே? குறை இல்லை என்றால் சேவையும் நன்றாகச் செய்ய முடியும். தந்தை மகனை எடுத்துக்காட்டுவார். மகன் தந்தையை எடுத்துக் காட்டு வார். பாபா உங்களைத் தகுதியுள்ளவராக ஆக்கினார் மற்றும் குழந்தைகள் நீங்களும் பிறகு புதிது-புதிதாக வருபவர்களுக்குத் தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். குழந்தைகளை பாபா திறமைசாலிகளாக ஆக்கி யிருக்கிறார். பாபாவுக்குத் தெரியும் – மிகவும் நல்ல-நல்ல குழந்தைகள் உள்ளனர் – அவர்கள் சேவை செய்து விட்டு வருகின்றனர். இரவு-பகல் இதே சிந்தனை ஓடுகிறது – நாம் அவர்களின் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொடுப்பது? இதனால் நமது வாழ்க்கையும் முன்னேற்றத்தை அடைந்து விடும். குஷி ஏற்படுகிறது. ஒவ்வொரு வருக்கும் ஊக்கம் இருக்கிறது. நாம் நம்முடைய கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு உயர்வை உண்டாக்க வேண்டும். தங்களைப் போன்றவர்களுக்கு சேவை சேய்வோம். பாபாவும் சொல்கிறார் – தர்மம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். பாபா அமர்ந்து குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்கிறார் – குழந்தைகளே, நீங்கள் முதலில் தனக்குத் தானே முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாபாவுக்குத் தெரியும், ஆன்மிகக் கல்ப விருட்சம், கல்பத்திற்கு முன் போலவே உள்ளது. இது விருட்சம் இல்லையா, இதில் அனைத்துப் பிரிவுகளும் உள்ளன. நீங்கள் இன்னும் முன்னால் போனால் அனைத்து சாட்சாத்காரங்களும் காண்பீர்கள். எப்படி அனைவரும் உள்ளனர், வம்சாவளியோ நிச்சயமாக உள்ளது இல்லையா? புத்தியும் சொல்கிறது – அங்கிருந்து ஆத்மாக் கள் பிறகு நம்பர்வார் வருவார்கள். ஆக, குழந்தைகளிடம் விசார் சாகர் மந்தன் நடைபெற வேண்டும் – அதாவது இப்படி-இப்படி சேவை செய்ய வேண்டும், இதையெல்லாம் செய்ய வேண்டும், அதோடு கூடவே பாபாவின் நினைவும் இருக்க வேண்டும். நினைவின் மூலம் தான் முன்னேற்றம் ஏற்படும். பாபா சொல்வார் – டிராமா பிளான் படி எது கடந்து சென்றதோ, அது சரியாகவே நடந்தது.

செல்லக் குழந்தைகளே, இன்னும் போனால் உங்களுக்குள் யோக சக்தி வந்து விடும். பிறகு நீங்கள் யாருக்காவது கொஞ்சம் சொல்லிப் புரிய வைத்தாலும் சட்டென்று புரிந்து கொள்வார்கள். இதுவும் ஞான பாணம் தான் இல்லையா? அம்பு தைத்து விட்டால் அது காயத்தை ஏற்படுத்தி விடும். முதலில் காயப் படுகின்றனர். பிறகு பாபாவுடையவராக ஆகி விடுகிறார்கள். தனிமையில் அமர்ந்து யுக்திகளை உருவாக்க வேண்டும். இரவில் தூங்கிக் காலையில் எழுந்தோம் என்று அந்த மாதிரி இருக்கக் கூடாது. அதிகாலையில் எழுந்து பாபாவை மிகுந்த அன்போடு நினைவு செய்ய வேண்டும். இரவில் கூட நினைவிலேயே தூங்க வேண்டும். பாபாவை நினைவு செய்யவே இல்லை என்றால் பிறகு பாபா எப்படி அன்பு செலுத்துவார்? கவர்ச்சி இருக்காது. பாபாவுக்குத் தெரியும், டிராமாவில் அனைத்து வகைகளிலும் நம்பர்வார் உருவாக வேண்டும். பிறகும் சும்மா அமைதியாக இருந்து விட மாட்டார். புருஷார்த்தம் செய்விப்பார் இல்லையா? குழந்தைகள் டிராமா என்று சொல்லிக் கொண்டு நின்றுவிடக் கூடாது. இல்லை என்றால் கடைசி நேரத்தில் மிகவும் வருந்த நேரிடும் – வீணாக நான் இது போல் செய்து விட்டேன். மாயா வசமாகி விட்டேன். பாபாவுக்கோ இரக்கம் வருகிறது. திருந்தவில்லை என்றாலோ அவர்களின் கதி என்னவாகும்? அழுவார்கள், அரற்றுவார்கள். தண்டனை பெறுவார்கள். எனவே பாபா குழந்தை களுக்கு அடிக்கடி அறிவுரை சொல்கிறார் – குழந்தைகளே, நீங்கள் சம்பூர்ணம் ஆக வேண்டும். அடிக்கடி தன்னை சோதித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும் – பாபாவிடமிருந்து நமக்கு அனைத்தும் கிடைத்தன, பிறகு என்னிடம் எந்தப் பொருள் குறைவாக உள்ளது? தனக்குள் சோதித்துப் பார்க்க வேண்டும். எப்படி நாரதரிடம் கேட்டார்கள் இல்லையா? லட்சுமியை மணந்து கொள்ளத் தகுதியானவர் என்று தன்னைத் தான் புரிந்து கொண்டிருக் கிறாயா? பாபாவும் கேட்கிறார் – லட்சுமியை மணக்கத் தகுதியுள்ளவராக ஆகியிருக்கிறீர்களா? இன்னும் என்னென்ன குறைகள் உள்ளன? அவற்றை நீக்குவதற்கான முயற்சி செய்ய வேண்டும். புதுப்புதுக் குழந்தைகளுக்கும் கூடப் புரிய வைக்கப் படுகிறது. சொல்லுங்கள் – உங்களிடம் எந்த ஒரு குறையும் இல்லையே? ஏனென்றால் நீங்கள் இப்போதே சம்பூர்ணம் ஆக வேண்டும். பாபா வருவதே உங்களை சம்பூர்ணம் ஆக்குவதற்குத் தான். ஆகவே தனக்குள் தானே கேட்டுக் கொள்ளுங்கள் – நாம் இந்த லட்சுமி-நாராயணர் போல் சம்பூர்ணம் ஆகியிருக் கிறோமா? குறை கள் இருக்குமாயின் பாபாவுக்குச் சொல்ல வேண்டும் – இந்த-இந்தக் குறைகள் எனக்குள்ளிருந்து இன்னும் வெளியேறவில்லை. அதற்கு உபாயம் ஏதாவது சொல்லுங்கள். நோய் வந்தால் அது டாக்டர் மூலமாகத் தான் வெளியேறும். ஆகவே நேர்மையுடன், உண்மையுடன் பாருங்கள் – எனக்குள் என்ன குறை உள்ளது? குறை களைச் சொல்வீர்களானால் பாபா ஆலோசனை தருவார். குறைகள் அநேகரிடம் உள்ளன. யாருக்காவது கோபம் உள்ளது, பேராசை உள்ளது அல்லது தவறான சிந்தனைகள் உள்ளன என்றால் அவருக்கு ஞானம் தாரணை ஆகாது. பாபா தினம்-தினம் புரிய வைக்கிறார் – அது போல் இவ்வளவு சொல்லிப் புரிய வைப்பதற்கான தேவை இல்லை. ஆனால் இவை தாரணை செய்வதற்கான விஷயங்கள். 5 விகாரங்களை வெல்வதற்கான விஷயம் என்பது இப்போதைய விஷயம் தான். உங்களிடம் அந்த (அலைய வைக்கிற) பூதம் எதுவும் இல்லை. இந்த ஜென்ம-ஜென்மாந்தரத்தின் பூதங் களாகிய 5 விகாரங்கள் உங்களுக்குள் பிரவேசமாகியுள்ளன. அவை தாம் உங்களுக்கு துக்கம் கொடுத்துள்ளன. காமம் என்ற பூதம் பற்றி நாள்தோறும் புரிய வைக்கப் படுகிறது. கண்கள் மிகவும் ஏமாற்றுகின்றன. ஆகவே ஆத்மாவைப் பார்ப்பதற்கான பயிற்சியை நல்லபடியாகப் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். நான் ஆத்மா, இவரும் ஆத்மா. ஆத்மாக்களாகிய நீங்களோ சகோதர-சகோதரிகள் இல்லையா? ஆக, இந்த சரீரத்தைப் பார்க்கக் கூடாது. ஆத்மாக்கள் நாம் அனைவரும் வீட்டுக்குத் திரும்பிச் செல்லப் போகிறவர்கள். நம்மை அழைத்துச் செல்வதற்காக பாபா வந்திருக்கிறார். மற்றப்படி நாம் சர்வகுண சம்பன்னம் ஆகியிருக்கிறோமா என்பதைப் பார்க்க வேண்டும். எந்த குணங்கள் குறைவாக உள்ளன? ஆத்மாவைப் பார்த்துச் சொல்லப் படுகிறது – இந்த ஆத்மாவுக்குள் இந்தக் குறை உள்ளது. பிறகு அமர்ந்து கரண்ட் கொடுக்க வேண்டும் – இவரிடமிருந்து இந்த நோய் விலகிப் போகட்டும். குழந்தைகள் பாபாவுடன் மிக இனிமையிலும் இனிமையான ஆன்மிக உரையாடல் செய்ய வேண்டும் – பாபா நீங்கள் இவ்வாறு இருக்கிறீர்கள். பாபா நீங்கள் எவ்வளவு இனிமையானவர்! ஆக, பாபாவின் நினைவு மூலம், பாபாவை மகிமை செய்வதன் மூலம் இந்த பூதங்கள் ஓட்டமெடுத்துக் கொண்டே இருக்கும் மற்றும் குழந்தைகள் உங்களுக்குக் குஷியாகவும் இருக்கும்.

நீங்கள் அறிவீர்கள், இந்த மரம் மிகவும் மெது-மெதுவாக விருத்தியடைந்து கொண்டிருக்கிறது. மாயாவோ நாலாபுறத்தில் இருந்தும் முற்றுகை இடுகிறது. மாயாவின் நிழல் அந்த மாதிரி படிகிறது – அதனால் ஒரேயடியாக மறந்து விடுகின்றனர். பாபாவின் கையை விட்டுவிடுகி ன்றனர். உங்களில் ஒவ்வொரு குழந்தையின் தொடர்பும் பாபாவுடன் உள்ளது. மற்றப்படி குழந்தைகளோ அனைவரும் நம்பர்வார் நிமித்தமாக உள்ளனர். நல்லது.

மிக இனிமையான, மிகவும் செல்லமான, தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகள் அனைவர்க்கும் தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் உயிருக்குயிரான, உளப்பூர்வமான அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

அவ்யக்த மகாவாக்கியம் — கடைசி சேவையின் கடைசி சொரூபம்

தனது கடைசி சொரூபத்தின் சாட்சாத்காரம் ஆகிக் கொண்டே இருக்கிறதா? நீங்கள் நெருக்கத்தில் வர-வர எண்ணம் உங்கள் முன்னிலையிலேயே இருக்கிற அந்த மாதிரி அனுபவ மாகும். இந்த மாதிரி நாம் இப்போதே ஆகப் போகிறோம் என்பதாக உணர்வீர்கள். எப்படி முதுமையின் அவஸ்தா உள்ளவர்களுக்கு இந்த ஸ்மிருதி உள்ளது – இப்போது முதுமை யடைந்து விட்டேன். இப்போது போய்க் குழந்தையாகப் பிறப்பேன். அதே போல் தன்னுடைய கடைசி சொரூபத்தின் ஸ்மிருதியாக இல்லை, ஆனால் முன்னிலையில் தெளிவான ரூபத்தில் சாடசாத்காரம் ஆகும். இப்போது இவ்வாறு இருக்கிறேன். பிறகு இது போல் ஆவேன். எப்படி ஆரம்பத்தில் சொன்னோம் – எப்போது இலக்கைச் சென்று சேர்வீர்களோ, அப்போது இது போல் புரிந்து கொள்வீர்கள் — அடி எடுத்து வைப்பதில் தாமதமாகி யிருக்கிறது. ஒரு காலை வைத்தாகி விட்டது. இரண்டாவதை வைக்க வேண்டும். இவ்வளவு வேறுபாடு தான் உள்ளது. ஆக, அந்த மாதிரி தனது கடைசி ஸ்டேஜின் சமீப நிலை அனுபவம் ஆகிறதா? வெளிப்படையான, தெளிவான சாட்சாத்காரம் கிடைக்கிறதா? எப்படி கண்ணாடியில் தனது ரூபம் தெளிவாகத் தெரிகிறதோ, அது போலவே இந்த ஞானத்தின் கண்ணாடியில் தனது கடைசி சொரூபம் தெளிவாகத் தெரிய வேண்டும். எப்படி மிக நல்ல அழகிய ஆடை எதிரில் வைக்கப் பட்டுள்ளது மற்றும் தெரிந்திருக்கிறது — இப்போது இதை நாம் அணிந்து கொள்ளப் போகிறோம். ஆக, விரும்பாமலே கூட தாரணை செய்வதற்கான சமயம் அருகில் நெருங்கி வர-வர கவனம் அங்கே செல்லும். ஏனென்றால் எதிரில் காணப்படுகிறது. அதே போல் தனது கடைசி சொரூபம் எதிரில் காணப்படுகிறதா? ஃபரிஸ்தாக்களின் ரூபம் என்னவாக இருக்கிறது? ஒளி ரூபம். பார்ப்பவர்களும் கூட அந்த மாதிரி அனுபவம் செய்வார்கள் – இவர்கள் ஒளி ஆடை அணிந்தவர்கள். ஒளி தான் இவர்களது கிரீடம், ஒளி தான் இவர்களது ஆடை, ஒளி தான் இவர்களது அலங்காரம். எங்கே பார்த்தாலும் ஒளியையே பார்ப்பார்கள். நெற்றிக்கு மேல் பார்ப்பார்களானால் ஒளிக் கிரீடம் தென்படும். கண்களிலும் கூட ஒளிக் கிரணங்கள் வெளிப்படுவது தென்படும். ஆக, அத்தகைய ரூபம் உங்கள் முன்பு தெரிகிறதா? ஏனென்றால் மைட் ரூபம், அதாவது சக்தி ரூபத்தின் பார்ட் என்ன நடைபெறுகிறதோ, அது எதன் மூலம் பிரசித்தமாகும்? லைட் ரூபத்தின் மூலம். யாரேனும் முன்னால் வருவார்களானால் ஒரு விநாடியில் அவர்கள் அசரீரி ஆகிவிட வேண்டும். அது லைட் ரூபத்தின் மூலம் தான் நடைபெறும். அது போல் நடமாடும் போதும் லைட் ஹவுஸ் ஆகி விடுவீர்கள் – அப்போது யாருக்குமே இந்த (ஸ்தூல) சரீரம் தென்படாது. விநாசத்தின் சமயத்தில் பரீட்சையில் பாஸாக வேண்டுமானால் சர்வ பரிஸ்திதிகளையும் எதிர்கொள்வதற்காக லைட் ஹவுஸ் ஆகிவிட வேண்டும். நடமாடும் போதும் தனது இந்த ரூபம் அனுபவமாக வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும். சரீரம் என்பதே முற்றிலும் மறந்து போக வேண்டும். ஏதேனும் காரியம் செய்ய வேண்டும், நடந்து செல்ல வேண்டும், பேச வேண்டும் என்றாலும் அவர்களும் நிமித்த ஆகாரி லைட் ரூபத்தை தாரணை செய்ய வேண்டும். எப்படி பார்ட் நடிக்கும் போது ஆடையை அணிந்து கொள்கிறீர்கள், காரியம் முடிந்ததும் ஆடையைக் களைந்து விடுகிறீர்கள். ஒரு விநாடியில் தாரணை செய்வீர்கள், ஒரு விநாடியில் விலகி விடுபட்டு விடுவீர்கள். எப்போது இந்தப் பயிற்சி பக்கா ஆகிவிடுமோ, அப்போது இந்தக் கர்ம போகம் முடிந்து போகும். எப்படி இஞ்செக்ஷன் போட்டு வலியைப் போக்கி விடுகின்றனர். ஹடயோகிகளோ சரீரத்திலிருந்து விடுபடுவதற்கான அப்பியாசம் செய்விக்கின்றனர். அதே போல் இந்த ஸ்மிருதி சொரூபம் என்ற இஞ்செக்ஷன் போட்டு தேகத்தின் ஸ்மிருதியிலிருந்து மறைந்து விட வேண்டும். தானும் தன்னை ஒளி ரூபமாக அனுபவம் செய்வீர்களானால் மற்றவர்களும் அதே அனுபவம் செய்வார்கள். கடைசி சேவை இது தான். இதன் மூலம் அனைத்துக் காரியங் களும் விவகாரங்களும் லைட்டாக, அதாவது லேசாக ஆகிவிடும். மலையும் கடுகாகும் என்று பழமொழி உள்ளதல்லவா, அது போல் எந்த ஒரு காரியமும் லைட் ரூபம் ஆவதன் மூலம் லேசாகி விடும். புத்தியை ஈடுபடுத்துவதற்கும் கூடத் தேவை இருக்காது. லேசான காரியத்தில் புத்தியை ஈடுபடுத்த வேண்டி இருக்காது. ஆக, இதே லைட் சொரூபத்தின் ஸ்திதியில், மாஸ்டர் அனைத்துமறிந்தவர் அல்லது மாஸ்டர் திரிகாலதரிசியின் லட்சணம் என்ன உள்ளதோ, அது வந்து விடும். செய்யவா வேண்டாமா என்று கூட யோசிக்க அவசியமிருக்காது. யதார்த்தமாக எதைச் செய்ய வேண்டுமோ, அதே சங்கல்பம் தான் புத்தியில் இருக்கும். அந்த அவஸ்தாவுக் கிடையில் எந்த ஒரு கர்மபோகத்தின் உணர்வும் இருக்காது. எப்படி இஞ்செக்ஷனின் போதையில் பேசுகின்றனர், ஆடுகின்றனர், அனைத்தும் செய்து கொண்டிருந்தாலும் ஸ்மிருதி இருப்பதில்லை. செய்து கொண்டிருக்கிறோம் என்ற ஸ்மிருதி இருப்பதில்லை. தானாகவே நடந்து கொண்டிருக்கும். அதே போல் எந்த விதமான கர்மபோகம் அல்லது கர்மம் ஆனாலும் அதுவாக நடந்து கொண்டே இருக்கும். ஆனால் ஸ்மிருதி இருக்காது. அது தன் பக்கமாகக் கவர்ந்திழுக்காது. அந்த மாதிரி ஸ்டேஜ் தான் கடைசி ஸ்டேஜ் எனப்படும். அந்த மாதிரி அப்பியாசம் ஆக வேண்டும். இந்த ஸ்டேஜ் எவ்வளவு சமீபமாக உள்ளது? முற்றிலும் முன்னிலை வரை சென்று சேர்ந்து விட்டீர்களா? விரும்பும் போது லைட் ரூபம் ஆகிவிட வேண்டும். விரும்பும் போது சரீரத்தில் வந்து விட வேண்டும் அல்லது எதையெல்லாம் செய்ய வேண்டுமோ, அதைச் செய்யலாம். சதா காலம் அந்த ஸ்திதி ஏக்ரஸ் நிலையில் எப்போது இருக்கிறதோ, அது வரை இடையிடையில் கொஞ்ச நேரமாவது அந்த ஸ்டேஜ் இருக்க வேண்டும். பிறகு அப்படி இருந்து-இருந்து அது நிரந்தரமாகி விடும். எப்படி சாகாரத்தில் (பிரம்மா பாபாவை) ஆகார் – ஒளியாக அனுபவம் செய்தோம் இல்லையா? இந்த பூமியில் அவர் வாழ்ந்து கொண்டிருந்த போதிலும் அவரை ஃபரிஸ்தாவாக அனுபவம் செய்தீர்கள். அந்த மாதிரி ஸ்டேஜ் வரப் போகிறது இல்லையா? ஆரம்பத்தில் அநேகருக்கு இந்த சாட்சாத்காரம் ஆயிற்று. ஒளியே ஒளியாகக் காணப்பட்டது. தனது ஒளிக் கிரீடத்தின் சாட்சாத்காரம் கூட அநேக தடவை ஆனது. ஆரம்பத்தில் எது சேம்புளாக இருந்ததோ, அது கடைசியில் நடைமுறை சொரூபம் ஆகும். சங்கல்பம் வெற்றி பெறுவதை சாட்சாத்காரமாகப் பார்ப்பீர்கள். எப்படி வாய்மொழி மூலம் நீங்கள் வழிகாட்டுதல் கொடுக்கிறீர்கள் இல்லையா? அது போல் சங்கல்பத்தால் அனைத்துக் காரியங்களையும் நீங்கள் நடத்த முடியும். விஞ்ஞானத்தின் சக்தியினால் கீழே பூமியில் இருந்து மேலே வரை டைரக்ஷனை எடுத்துச் செல்கின்றனர். அப்போது சிரேஷ்ட சங்கல்பத்தினால் காரியம் நடக்க முடியாதா? சயின்ஸ் காப்பி செய்தது சைலன்ஸில் இருந்து தான். ஆக, உதாரணம் கொடுப்பதற்காக முன்பே தெளிவான ரூபத்தில் உங்கள் முன்னால் உள்ளது. கல்பத்திற்கு முன்போ நீங்கள் இதைச் செய்திருக்கிறீர்கள் இல்லையா? மீண்டும் சொல்வதற்கான தேவை இல்லை. எப்படி சொல்வதன் மூலம் விஷயத்தைத் தெளிவு படுத்துகிறார்கள், அது போல் சங்கல்பத்தால் அனைத்துக் காரியங்களும் நடைபெற வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு அனுபவம் செய்து கொண்டே செல்கிறீர்களோ, ஒருவர் மற்றவரின் சமீபமாக வரவும் போகவும் செய்கிறீர்கள் என்றால் சங்கல்பங்களும் இருவருக்கும் சமமானதாக இருக்கும். லைட் ரூபம் ஆவதன் மூலம் வீண் சங்கல்பங்கள், வீண் நேரம் எல்லாம் முடிந்து போகும். அதன் பிறகு என்ன சங்கல்பம் எழ வேண்டுமோ அது மட்டுமே எழும். உங்கள் புத்தியிலும் அதே சங்கல்பம் மற்றும் யார் செய்ய வேண்டுமோ, அவர்களின் புத்தியிலும் அதே சங்கல்பம் எழும் – அதாவது இதையே செய்ய வேண்டும். புதுமையோ இது தான் இல்லையா? இந்தக் காரியத்தை யாராவது பார்த்தால் புரிந்து கொள்வார்கள் — இவர்களின் காரியங்கள் சொல்வதால் அல்ல, சமிக்ஞைகள் மூலம் நடைபெறுகிறது. கண்களால் பார்த்தார்கள், புரிந்து கொண்டார்கள். சூட்சும வதனம் இங்கே தான் உருவாக வேண்டும். நல்லது. ஓம் சாந்தி.

வரதானம்:-

எந்தக் குழந்தைகள் பாபாவுக்கு சிநேகியாக உள்ளனரோ, அவர்கள் சதா பிரம்மா பாபாவின் புஜங்களில் நிறைந்து இருப்பார்கள். பிரம்மா பாபாவின் இந்த புஜங்கள் தாம் உங்களுடைய பாதுகாப்பிற்கான சாதனமாகும். யார் அன்பானவராக, சிநேகியாக இருக்கிறார்களோ, அவர்கள் சதா புஜங்களுக்குள் இருப்பார்கள். ஆக, சேவையில் பாப்தாதாவின் புஜங்கள் நீங்கள் மற்றும் நீங்கள் இருப்பது பாபாவின் புஜங்களில். இந்த இரண்டு காட்சிகளையும் அனுபவம் செய்யுங்கள் – சில நேரம் புஜங்களில் நிறைந்து விடுங்கள், சில நேரம் புஜங்கள் ஆகி சேவை செய்யுங்கள். நாம் பகவானின் வலது கரம் என்ற போதை இருக்கட்டும்.

சுலோகன்:-

அன்பில் லயித்திருக்கும் நிலையை (லவ்லின் ஸ்திதி) அனுபவம் செய்யுங்கள்.

பாபாவுக்குக் குழந்தைகள் மீது அவ்வளவு அன்பு உள்ளது, அவர் அமிர்தவேளையில் இருந்தே குழந்தைகளுக்குப் பாலனை செய்கிறார். நாளின் ஆரம்பமே எவ்வளவு சிரேஷ்டமாக உள்ளது! சுயம் பகவான் சந்திப்பதற்காக அழைக்கிறார், ஆன்மிக உரையாடல் செய்கிறார், சக்திகளை நிரப்புகிறார். பாபாவின் அன்பின் பாடல்கள் உங்களை எழுப்பி விடுகின்றன. எவ்வளவு அன்போடு அழைக்கிறார், எழுப்புகிறார் – இனிமையான குழந்தைகளே, அன்பான குழந்தைகளே, வாருங்கள் ஆக, இந்த அன்பின் பாலனையினுடைய நடைமுறை சொரூபமாகிய சகஜ யோகி வாழ்க்கையை அனுபவம் செய்யுங்கள்.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

1 thought on “18 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris”

  1. 🌞👁️ HAPPY BABA SHANTI BABA OM SHANTI 💗🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🕉️🇲🇰

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top