18 April 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

18 April 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

17 April 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! என்னுடையது என்று என்னவெல்லாம் உள்ளனவோ அவையனைத்தும் தந்தையினுடையவை என்று உறுதி செய்யுங்கள். பின்னர், தர்ம கர்த்தா (டிரஸ்டி) ஆகி, பராமரித்தீர்கள் எனில், அனைத்தும் தூய்மை ஆகிவிடும். சிவபாபாவின் பொக்கிஷத்திலிருந்து உங்களுக்கு பாலனை கிடைக்கும்.

கேள்வி: -

சிவபாபாவிடம் முழுமையாக பலியான பின்பு எந்த விசயத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும்?

பதில்:-

நீங்கள் பலியாகி விட்டீர்கள் எனில், அனைத்தும் சிவபாபாவினுடையது ஆகிவிட்டது. பின்னர், ஒவ்வொரு அடியிலும் ஆலோசனை பெற வேண்டும். ஒருவேளை, ஏதாவது தவறான செயல் புரிந்தால் மிகுந்த பாவம் ஏறிவிடும். எந்தப் பணம் சிவபாபாவினுடையது ஆகி விட்டதோ, அதன் மூலம் எந்தப் பாவச் செயலும் செய்ய முடியாது. ஏனெனில், ஒவ்வொரு பைசாவும் வைரம் போன்றதாகும். இதை மிகவும் பாதுகாக்க வேண்டும். எதுவும் வீணாகி விடக்கூடாது. உங்களுடைய எதையும் பாபா பெறுவதில்லை. ஆனால், உங்களிடம் உள்ள பணத்தை, மனிதர்களை சோழியிலிருந்து வைரம் போல் ஆக்கக்கூடிய சேவையில் ஈடுபடுத்த வேண்டும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

இன்று மனிதன் இருளில் இருக்கின்றான்..

ஓம்சாந்தி. இது பக்தி மார்க்கத்தினருக்காக உள்ள பாடல் ஆகும். நீங்கள் இந்தப் பாடலைப் பாட முடியாது. ஏனெனில், பகவானே! வந்து உனது அறிமுகத்தைக் கொடு! என்றும் கூறுகின்றனர். பிரபு தான் வந்து தனது அறிமுகத்தை அளிக்கின்றார். பிரபு, ஈஸ்வரன், பகவான் என்று எப்படி அழைத்தாலும், அது குறிப்பது ஒருவரைத் தான். பிரபு என்பதற்குப் பதிலாக நீங்கள் பாபா என்று அழைக்கிறீர்கள். அப்பொழுது முற்றிலும் (மிகவும்) எளிதாகி விடுகிறது. பாபா என்ற வார்த்தை குடும்பத்தைச் சேர்ந்ததாகும். முழு படைப்பும் தந்தையினுடையதே ஆகும். எனவே, அனைவரும் குழந்தைகள் ஆகிவிட்டனர். தந்தை என்று கூறுவது மிகவும் எளிதாகும். பிரபு அல்லது கடவுள் என்று மட்டும் கூறுவதனால் தந்தை என்று புரிந்து கொள்ளவில்லை. இந்தத் தந்தையின் அன்பு மற்றும் தந்தையின் ஆஸ்தியைப் பற்றியும் அறிய இயலாது. தந்தை சொர்க்கத்தைப் படைக் கின்றார். இவ்வளவு சின்ன விசயத்தைக் கூட எவரும் புரிந்து கொள்ளவில்லை. ஏமாற்றம் அடைவதிலேயே அரைக்கல்பம் ஆகிவிடுகிறது. பாபா வந்து ஒரு நொடியில் அறிமுகம் கொடுக்கின்றார். பாபாவிற்கு எதிரில் குழந்தைகள் அமர்ந்து உள்ளனர். ஆனாலும் கூட போகப் போக நம்பிக்கை விட்டு போகிறது.. ஒருவேளை உறுதியான நம்பிக்கை இருக்கிறது என்றால், உண்மையிலும் உண்மையான பிராமணன் ஆகிவிட வேண்டும். நாம் சிவபாபாவின் பேரக் குழந்தைகள் ஆவோம், பாபாவின் வீட்டைச் சேர்ந்தவர்கள் ஆகிவிட்டோம். பிராமணர்களாகிய நாம் சிவபாபாவினுடைய பொக்கிஷத்திலிருந்து சாப்பிடுகின்றோம் என்று புரிந்திருக்கின்றனர். பிராமணர்கள் ஆகிவிட்டீர்கள் என்றால், பிரம்மா போஜனம் பிராமணர்களினுடையதாக ஆகி விட்டது. சிவபாபாவினுடைய பொக்கிஷத்தின் போஜனம் ஆகி விட்டது, இந்த நம்பிக்கை இருக்க வேண்டும். நாமே சிவபாபாவினுடையவர்கள் ஆவோம். விவாகரத்திற்கான விசயமே கிடையாது. பிராமணர்களாகிய நாம் சிவபாபாவின் குழந்தைகள் ஆவோம். நம்முடையது அனைத்தும் பாபா வினுடையதாகும், தந்தையினுடையது அனைத்தும் நம்முடையதாகும். வியாபாரிகள் கணக்குப் போட வேண்டும் அல்லவா? நம்முடையது அனைத்தும் தந்தையினுடையது, தந்தையினுடையது அனைத்தும் நம்முடையது என்றால், யாருடைய தராசு நிறைந்திருக்கிறது? நம்மிடம் இருப்பதோ அற்பமானதாகும். மேலும், பாபாவினுடைய இராஜ்யம் நம்முடையதாகும் என்று நாம் கூறுகின்றோம் எனில், வித்தியாசம் உள்ளது அல்லவா? நாம் ஈஸ்வரன் மூலம் விஷ்வத்தின் எஜமானர் ஆகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நம்மிடம் என்னவெல்லாம் உள்ளனவோ அவற்றை தந்தைக்குக் கொடுத்துவிடு கிறோம். பின்னர் தந்தை, குழந்தைகளே, நீங்களே தர்மகர்த்தா (டிரஸ்டி) ஆகி பராமரியுங்கள் என்று கூறுகின்றார். இது சிவபாபாவினுடையது என்று புரிந்து கொள்ளுங்கள். தன்னையும் கூட சிவபாபாவின் குழந்தை என்று புரிந்து நடந்தீர்கள் என்றால், அனைத்தும் தூய்மை ஆகிவிட்டது என்று அர்த்தம். வீட்டில் உண்ணுவதும் பிரம்மாபோஜனம் ஆகிவிடுகிறது. சிவபாபாவின் பொக்கிஷம் ஆகிவிடுகிறது. ஏனெனில், பிராமணர்கள் தான் தயாரிக்கின்றனர். ஈஸ்வரனால் கொடுக்கப்பட்டது என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால், இங்கேயோ தந்தை எதிரில் வந்திருக்கின்றார். இப்பொழுது நாம் அவரிடம் பலியாகிவிடுவோம். நாம் ஒருமுறை பலியாகி விட்டோம் என்றால் அது சிவபாபாவின் பொக்கிஷம் ஆகிவிட்டது. அதைத் தான் பிரம்மா போஜனம் என்று கூறப்படுகிறது. நாம் என்ன சாப்பிடுகின்றோமோ அது சிவனுடைய பொக்கிஷத்தினுடையதாகும் என்று புரிய வைக்கப்படுகிறது. அவசியம் தூய்மையாக இருக்க வேண்டும். உணவு கூட தூய்மை ஆகிவிடுகிறது. ஆனால், எப்பொழுது பலி ஆகிறீர்களோ அப்பொழுது தான் தூய்மை ஆகிறது. கொடுக்க வேண்டியது எதுவும் அல்ல, பலி (சரணடைய) மட்டும் ஆக வேண்டும். பாபா, இவை அனைத்தும் உங்களுடையவை ஆகும். நல்லது குழந்தை களே, டிரஸ்டி ஆகி பராமரியுங்கள். சிவபாபாவினுடையது எனப் புரிந்து உணவு உண்டீர்கள் என்றால் அது சிவபாபாவினுடைய பொக்கிஷத்திலிருந்து உண்பது போன்றதாகும். ஒருவேளை சிவபாபாவை மறந்துவிட்டால் பின்னர் அது தூய்மையாக இயலாது. குழந்தைகளாகிய நீங்கள் தனது குடும்பத்தையும் பராமரிக்க வேண்டும். ஆனால், தன்னை டிரஸ்டி எனப் புரிந்து கொண்டிருந்தால் வீட்டில் இருந்தவாறே சிவபாபாவின் பொக்கிஷத்திலிருந்து தான் சாப்பிடு கிறீர்கள். யாரெல்லாம் பலியாகிவிட்டார்களோ அவர்கள் சிவபாபாவினுடையவர்கள் ஆகி விட்டார்கள். எதுவும் புரியவில்லை என்றால் கேளுங்கள். சிவபாபாவினுடைய பொக்கிஷத் திலிருந்து ஏதாவது பாவச்செயலுக்கு செலவு செய்வது என்பது கூடாது. சிவபாபாவினுடைய பணத்தைக் கொண்டு புண்ணியம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பைசாவும் வைரம் போன்ற தாகும். அதன்மூலம் அனேகருக்கு நன்மை ஏற்பட வேண்டும். ஆகையினால், மிகவும் பாதுகாக்க வேண்டும். எதுவும் வீண் ஆகிவிடக் கூடாது. ஏனெனில், இந்த பணத்தின் மூலம் மனிதர்கள் சோழியிலிருந்து வைரம் போல் ஆகின்றனர். என்னுடையது கூட உங்களுடையது என்று பாபா கூறுகின்றார். ஒரு பாபா மட்டும் தான் சுயநலமற்ற வராவார். அனைத்து குழந்தைகளுக்கும் சேவை செய்கின்றார். தந்தை கூறுகின்றார் – நான் என்ன செய்யப் போகின்றேன்?, அனைத்தும் உங்களுடையதே ஆகும். நீங்கள் தான் இராஜ்யம் செய்யப் போகிறீர்கள். குழந்தைகளாகிய உங்களை சுகம் நிறைந்தவர்களாக ஆக்குகின்றேன். என்னுடைய நடிப்பே அவ்வாறு தான். ஸ்ரீமத் கூட கிடைத்துக் கொண்டே இருக்கிறது. யாராவது கன்னிகை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் என்றால், ஞானத்தில் வரவில்லை என்றால், போகவிடுங்கள் என்று கூறிவிடுவார். குழந்தை கட்டளைப்படி நடப்பவராக (ஆக்ஞாகாரி) இல்லை என்றால், ஆஸ்திக்கு உரிமையானவரும் இல்லை. ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால், சிரேஷ்டமானவரும் இல்லை, உரிமையானவரும் இல்லை. பின்னர், தண்டனையும் அடைய வேண்டியது இருக்கும். கண் இழந்தவர்களின் ஊன்றுகோல் ஆகுங்கள் என்பது தந்தையின் கட்டளை ஆகும். அவர்கள் எதையும் புரிந்திருக்கவில்லை.

நாம் கூட முதலில் முற்றிலும் குரங்கு போல் தூய்மையற்றவர்களாக இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபா இப்பொழுது நம்முடைய சேனையை உதவிக்காக எடுத்திருக்கின்றார். நமக்கு அறிவுரைகள் வழங்கி கோவிலில் பூஜை செய்வதற்குத் தகுதியானவர் ஆக்கிக் கொண்டிருக்கின்றார், விஷ்வத்தின் (உலகின்) எஜமானர் ஆக்குகின்றார். மற்ற அனைவருக்கும் தண்டனைகள் வழங்கி, முக்திதாமத்திற்கு அனுப்பிவிடுகின்றார். எல்லையற்ற தந்தை யினுடைய அனைத்து விசயங்களும் எல்லையற்றவை ஆகும். ஒரு இராமர், சீதையினுடைய விசயம் அல்ல. தந்தை அனைத்து சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கின்றார். மனிதர்கள் படிப்பதோ அதிகம் ஆனால், எதையும் புரிந்து கொள்ள வில்லை. எனவே, அவர்கள் படித்தும் படிக்காதது போல் ஆகிவிடுகிறது. படித்து படித்து மேலும் கலைகள் குறைந்து தூய்மை அற்றவர்களாக, கீழானவர்களாக ஆகிவிட்டனர். பதீத பாவனரே வாருங்கள் என்று அழைக் கின்றனர். பிறகு, கங்கையில் நின்று கொண்டு தானம் செய்யுங்கள் என்று கூறுகின்றனர். நாம் தூய்மை ஆகவேண்டும், இதில் தானம் செய்வதற்கான விஷயம் என்ன உள்ளது! கங்கை நீரில் தானம் செய்கின்றனர். பெரிய பெரிய இராஜாக்கள் தங்க நாணயத்தை ஆற்றில் வீசுகின்றனர். பின்னர், பூஜாரிகள் வருமானத்திற்காக ஏதாவது சொல்கின்றனர். 21 பிறவிகளுக்கான வருமானத்தை தந்தை உங்களுக்காக உருவாக்குகின்றார். தந்தை எவ்வளவு நல்ல முறையில் புரிய வைத்து தூய்மையாக்குகின்றார். பாரதம் தான் தூய்மையாக இருந்தது. இப்பொழுது தூய்மையற்றதாக ஆகி விட்டது. பாபா வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு அறிமுகம் கொடுக்கின்றார் – நீங்கள் பிராமணர் ஆகியிருக்கிறீர்கள், சமர்ப்பணம் ஆகியிருக்கிறீர்கள் எனில், நீங்கள் சிவபாபாவினுடைய பொக்கிஷத்திலிருந்து சாப்பிடுகிறீர்கள். சமர்ப்பணம் ஆகவில்லை எனில், அசுர பொக்கிஷத்திலிருந்து சாப்பிடுகிறீர்கள் என்று அர்த்தம். தன்னுடைய பொறுப்பு களை இங்கே எடுத்துக்கொண்டு வாருங்கள் என்று பாபா கூறுவதில்லை. நீங்களே பராமரியுங் கள் ஆனால், டிரஸ்டி ஆகி பராமரியுங்கள். நிச்சயபுத்தி உடையவர்களாக இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் சிவபாபாவின் பொக்கிஷத்திலிருந்து உண்பது போன்றதாகும். உங்களுடைய இருதயம் சுத்தமாகிவிடும். பிராமண தேவிதேவதா நமஹ ! என்று பாடவும் செய்கின்றனர். இந்த பிராமணர்கள் தான் நமஹ (நமஸ்காரம்) செய்வதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள். பிரம்மா மூலம் பாபா நம்மை சூத்திரனிலிருந்து பிராமணர் ஆக்குகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். கல்ப கல்பமாக பாபா வந்து நம்மை இராவண இராஜ்யத்திலிருந்து விடுவித்து சுகம் நிறைந்தவர் ஆக்குகின்றார். அங்கே துக்கத்தின் பெயரே கிடையாது. பாரதத்தில் எத்தனை அதிகத்திலும் அதிகமான குருக்கள், வித்வான்கள், பண்டிதர்கள் உள்ளனர்! ஒவ்வொரு பெண்ணின் பதி கூட குரு ஆவார். எத்தனை அதிகமான குருக்கள் ஆகிவிட்டனர்! எவ்வளவு தலைகீழான காரியம் நடத்தப்படுகிறது. உங்களுக்கு அனைத்தும் பதியே ஆவார், இவருடைய கட்டளைப்படி தான் நடக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்விக்கிறார்கள். முதல் கட்டளை யிலேயே பூஜைக்கு உரியவராக இருந்த குமாரி உடனே பூஜாரி ஆகிவிடுகிறார். அனைவருக் கும் முன்பு தலைவணங்க வேண்டியதாக உள்ளது. பின்னர், காமவிகாரத்தில் ஈடுபடுங்கள் என்று இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. எனவே, எவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டு விட்டது! இங்கேயோ எனக்கு உதவி செய்யும் குழந்தைகள் வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். அவர்கள் கால்களில் ஏன் விழ வேண்டும்? குழந்தைகள் வாரிசு ஆவர். பணிவை வெளிப் படுத்துவதற்காக கால்களில் விழ வேண்டிய அவசியம் இல்லை. நமஸ்காரம் (வணக்கம்) கூறலாம். நாம் பாபாவிடமிருந்து ஆஸ்தியைப் பெறுவதற்காக வந்திருக்கிறோம், பிறகு, மாயை முற்றிலும் மறக்க வைத்து விடுகிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள். விவாகரத்து கொடுத்துவிடுகின்றனர். மாயை புத்தியை அழித்துவிடுகிறது. யார் சிவனுடைய பொக்கிஷத் திலிருந்து சாப்பிட்டார்களோ, குடித்தார்களோ, அவர்களது பொக்கிஷம் நிறைந்து இருக்கும்; எனவே, காலன், பகைவன் போன்ற அனைத்தும் விலகிவிட்டது என்று பாபா இன்று புரியவைத் திருக்கிறார். அவர்கள் அமரர் ஆகிவிடுகின்றனர். நீங்கள் பலி ஆகிவிட்டீர்கள் என்றால், அனைத்தும் சிவபாபா வினுடையதாக ஆகிவிட்டது, உறுதியான நம்பிக்கை வேண்டும். ஏதாவது பாவச்செயல் செய்துவிட்டால் மிகுந்த பாவம் ஏறிவிடும். ஒவ்வொரு அடியிலும் அறிவுரைகள் பெற வேண்டும், இது நீண்ட ஏற்றம் ஆகும். எத்தனை பேர் கீழே விழுந்து விடுகின்றனர்! பாபா, பாபா என்று 8,10 வருடங்களாக கூறியவர்களைக் கூட மாயை அடித்துவிடுகிறது. எப்பொழுதாவது குழப்பம் ஏற்பட்டால் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் அறிவுரை களைக் கேளுங்கள் என்று பாபா கூறுகின்றார். சில குழந்தைகள், நாங்கள் இராணுவத்தில் சேவை புரிகிறோம், அங்குள்ள உணவை உண்ண வேண்டியதாக உள்ளது எனக் கூறுகின்றனர். வேறு என்ன செய்ய முடியும்? என்று பாபா கூறுகின்றார். பாபாவிடமிருந்து அறிவுரைகளைப் பெற்றுவிட்டால் பொறுப்பாளர் பாபா ஆவார். பாபா, வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டியுள்ளது, விருந்தில் (பார்ட்டி) அமர வேண்டியுள்ளது என்று அனேகர் கேட்கின்றனர். சைவ உணவு கிடைக்கிறது, ஆனாலும் விகாரிகள் தான் அல்லவா! நீங்கள் ஏதாவது சாக்குபோக்கு சொல்ல முடியும், தேநீர் அருந்துகின்றனர். அனேக விதமான யுக்திகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இவரது வலது கரமாக தர்மராஜரும் இருக்கின்றார். இந்த சமயம் ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத் பெற வேண்டும். மிக உயர்ந்த பதவியாகும். நாம் விஷ்வத்தின் எஜமானர் ஆக முடியும் என்று யாருடைய கனவிலும் கூட நினைவு வந்திருக்காது. முற்றிலும் அறிந்திருக்கவில்லை. எத்தனை வைர வைடூரியங்களால் ஆன மாளிகைகள் இருந்தன! சோமநாத் கோவிலில் எவ்வளவு செல்வம் இருந்தது! அனைத்தையும் ஒட்டகத்தில் நிறைத்து எடுத்துச் சென்றுவிட்டனர். இப்பொழுது அத்தகைய சமயம் வரப்போகிறது. அதில் யாருடைய செல்வம் புழுதியாகும் இராம நாமம் உடன் இருக்கிறது (இராம் இராம் சத்ய) என்று கூறு கின்றனர் அல்லவா! உண்மையான வருமானம் செய்பவர்களின் கை நிரம்பி இருக்கும். மற்ற அனைவரும் காலியான கையுடன் செல்வார்கள். உங்களுடைய பொருள் உங்களுக்காகத் தான் என்று தந்தை கூறுகின்றார். நானோ ஆசை அற்றவன். இத்தகைய ஆசை அற்றவர் எவரும் கிடையாது. இந்த சமயத்தில் அனைவரும் தமோபிரதானமாக தூய்மையற்றவராக ஆக வேண்டும். முழுமையாக தூய்மையற்றவர் ஆகி பின்னர் முழுமையாக தூய்மையானவர் ஆகவேண்டும். தந்தை கூறுகின்றார் – புதிய உலகத்தைப் படைக்க வேண்டும் என்று எனக்கு எண்ணம் எழுந்தது, நான் எனது பாகத்தை நடிப்பதற்காக வந்திருக்கின்றேன். எவரெல்லாம் பெரிய பெரியவர்களோ, முக்கியமானவர்களோ அவர்கள் அனைவரும் தக்க சமயத்தில் பாகத்தை ஏற்று நடிக்கிறார்கள். ஞானக்கடலான தந்தை குழந்தைகளாகிய உங்களையும் கூட ஞானம் நிறைந்தவராக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள். இதற்கு முன் இந்த ஞானம் கிடையாது. இப்பொழுது நீங்கள் அனைவருடைய வாழ்க்கை சரித்திரத்தையும் அறிவீர்கள். தர்ம ஸ்தாபகர்கள் கூட முக்கியமானவர்கள் அல்லவா? மேலிருந்து எடுத்துக்கொண்டால் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் சிவபாபா படைப்பாளர் ஆவார். பிறகு பிரம்மா, விஷ்ணு, சங்கரர். பிறகு பிரம்மா மூலம் பிராமணர்களைப் படைக்கின்றார். இந்த ஜெகதம்பா சரஸ்வதி பிராமணி ஆவார் என்பதை பிறர் எப்படி அறிவார்கள்! முன்பும் இதே சமயத்தில் இவர் தவம் செய்திருந்தார். இராஜயோகம் கற்பித்தார். இப்பொழுதும் கூட அதே காரியத்தை செய்துகொண்டு இருக்கின்றார். இந்த ஞானத்தை சிந்தனை செய்ய வேண்டும். இருக்க வேண்டியது உங்கள் வீட்டில் தான். அனைவரும் இங்கே தங்க முடியாது. ஆம், யார் தந்தையினுடைய சேவையில் நிரந்தரமாக இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் கடைசியில் இங்கு வந்து தங்குவார்கள். அவர்கள் நிறைய நாடகத்தின் அதிசயமான பாகத்தை காண்பார்கள். வைகுண்டத்தின் மரம் அருகாமையில் வந்துகொண்டே இருக்கும். அமர்ந்து கொண்டு காட்சியைப் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். நீங்கள் முழுமையாக பரிஸ்தாவாக இங்கே தான் ஆகிறீர்கள். மனித ஆத்மாக்கள் அனைவரும் சரீரத்தை விட்டுவிடுவார்கள். ஆத்மாக்கள் திரும்பிச் சென்றுவிடும். பாபா வழிகாட்டி ஆகி அனைவரையும் திரும்ப அழைத்துச் செல்வார். இந்த ஞானம் கூட இப்பொழுதே உள்ளது. சத்யுகத்தில் ஞானம் என்ற பெயரே இருக்காது. அங்கே இருப்பது பிராப்தி ஆகும், இப்பொழுது செய்வது முயற்சி ஆகும்.

21 பிறவிகளுக்கு தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெறுவதற்காக நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். நாம் பிராமணர்கள் என்று நீங்கள் புரியவைக்க முடியும். உற்றார் உறவினர் போன்றோருக்கு நீங்கள் தந்தையின் நினைவில் இருந்து உணவு தயாரித்து உபசரித்தீர்கள் என்றால், அவர்களுடைய இருதயமும் சுத்தமாகிவிடும். இறுதியில் யார் மீதம் இருப்பார்களோ அவர்கள் மிகுந்த ஆனந்தமான காட்சிகளைக் காண்பார்கள். பாபா அடிக்கடி தன்னுடைய வீடு மற்றும் பிற போன்ற அனைத்தையும் காண்பித்துக் கொண்டே இருப்பார். ஆரம்பத்தில் நீங்கள் அதிக காட்சிகளைக் கண்டிருக்கிறீர்கள். பிறகு இறுதியில் அதிகக் காட்சிகளைக் காணப் போகிறீர்கள். யார் சென்று விடுவார்களோ அவர்கள் எதையும் காணமாட்டார்கள். இந்த விகாரங்களை முழுமையாக விட்டுவிட வேண்டும். அப்பொழுதே வைர வைடூரியங்களால் அலங்காரம் செய்யப்படும். விடவில்லை என்றால் அந்தளவு அலங்காரமும் இருக்காது. இப்பொழுது நீங்கள் ஞான இரத்தினங்களால் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தை களுக்கு, ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. உண்மையான வருமானம் செய்து கையை நிறைத்துக்கொண்டு செல்ல வேண்டும். ஒரு தந்தையிடம் உண்மையான வியாபாரம் செய்யக்கூடிய உண்மையான வியாபாரி ஆக வேண்டும்.

2. இருதயத்தை சுத்தமாக்குவதற்காக தந்தையின் நினைவில் இருந்து பிரம்மா போஜனத்தை தயாரிக்க வேண்டும். யோகயுக்த் (ஞானம் மற்றும் தந்தை உணவை உண்ண வேண்டும் மற்றும் பிறருக்கும் பரிமாற வேண்டும். விகாரங்களை விடுத்து ஞான இரத்தினங்களால் தன்னை அலங்கரிக்க வேண்டும் மற்றும் பிறருக்கும் அலங்காரம் செய்து விட வேண்டும்.

வரதானம்:-

எந்தக் குழந்தைகள் பரமாத்மாவுக்குப் பிரியமானவர்களோ, அவர்கள் சதா அவரது மன சிம்மாசனத்தில் அமர்கிறார்கள். திலாராமின் மனதிலிருந்து பிரிப்பதற்கு யாருக்கும் தைரியம் வராது. அதனால் நீங்கள் உலகத்தின் முன்னால் பெருமிதத்துடன் சொல்கிறீர்கள் – நாங்கள் பரமாத்மாவுக்குப் பிரியமானவர்களாக ஆகி விட்டோம். இதே பெருமிதத்தில் இருப்பதால் அனைத்துக் கவலைகளில் இருந்தும் விடுபட்டு இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு போதும் தவறு தலாகக் கூட சொல்வதில்லை – இன்று என் மனம் கொஞ்சம் கவலையாக இருக்கிறது, என் மனம் ஈடுபடுவதில்லை இந்த வார்த்தையே வீணானதாகும். எனது என்று சொல்வது என்றால் கஷ்டத்திற் குள்ளாவதாகும்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top