17 October 2021 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
16 October 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
மூன்று சம்மந்தங்களின் எளிதான மற்றும் உயர்ந்த பாலனை
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
இன்று உலகத்திற்கு அன்பான பாப்தாதா நாலாபக்கங்களிலுமுள்ள விசேஷமாக தந்தையின் அன்பான குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். பாபாவின் அன்பு மற்றும் குழந்தைகளின் அன்பு இரண்டும் ஒன்றை விட ஒன்று அதிகமாகவே இருக்கிறது. அன்பு மனதிற்கு மற்றும் உடலுக்கு அலௌகீக சிறகுகளை அருகாமையில் கொண்டு வருகிறது. அன்பிற்கு ஆன்மீக ஈர்ப்பு இருக்கிறது. அது குழந்தைகளை பாபாவின் பக்கம் கவர்ந்திழுத்து சந்திப்பை கொண்டாடுவதற்கு காரணமாகி விடுகிறது. மனதினால், சாகார சரீரத்தின் மூலம் சந்திப்பை கொண்டாடினாலும், இரண்டு விதமான அனுபவம் அன்பின் ஈர்ப்பினால் தான் ஏற்படுகிறது. ஆன்மீக பரமாத்ம அன்பினால் தான் பிராமணர் களாகிய உங்களூக்கு ஆன்மீக பிறவி கிடைக்கிறது. இன்று அவ்வப்பொழுது ஆன்மீக அன்பின் தேடல் மூலம் நாலாபக்களிமுள்ள பிராமண குழந்தைகளின் அன்பு நிறைந்த முகங்களை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நாலாபக்கமுள்ள பல குழந்தைகளுடைய மனதின் பாடல், இதய பூர்வமான சந்திப்பை பாப்தாதா கேட்டுக் கொண்டிருக்கிறார். பாப்தாதா அனைத்து அன்பான குழந்தைகள் அருகாமையில் இருந்தாலும் சரி, வெகுதொலைவில் இருந்தாலும் சரி, இதயபூர்வமாக அருகில் இருக்கிறார்கள், அன்பிற்கான கைமாறாக ஆசீர்வாதங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் – சதா பாக்கியசாலி ஆகுக ! சதா பாக்கியசாலி ஆகுக ! எப்பொழுதும் குஷி என்ற ஊட்டச்சத்து மூலம் ஆரோக்கியமானவர் ஆகுக ! எப்பொழுதும் குஷியின் பொக்கிஷத்தினால் நிறைந்தவர் ஆகுக! ஆன்மீக அன்பு தெய்வீக பிறவியை கொடுத்தது, இப்பொழுது வரத்தை அளிக்கும் வள்ளல் பாப்தாதாவின் ஆசீர்வாதங்களினால் தெய்வீக பாலனை கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஒருவரின் மூலமாக, ஒரே சமயத்தில், ஒன்று போலவே அனைவருக்கும் பாலனை கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் கிடைத்துள்ள பாலனைகளின் தாரணைகள் நம்பர்வார் உருவாக்குகிறது. அதுபோல விசேஷமாக மூன்று சம்மந்தங்களின் பாலனை மிகவும் உயர்ந்ததாகவும், எளிதாகவும் இருக்கிறது. பாப்தாதாவின் மூலம் ஆஸ்தி கிடைக்கிறது. ஆஸ்தியின் நினைவு மூலம் பாலனை ஏற்படுகிறது. இதில் எந்த கஷ்டமும் இல்லை. ஆசிரியர் மூலம் படிப்பிக்கும் இரண்டு வார்த்தைகளை கடைப்பிடிப்பதில் எந்த வித சிரமமும் இல்லை. சத்குருவின் ஆசீர்வாதங்களின் அனுபவத்தை பெறுவது – இதிலும் எந்தவித சிரமமும் கிடையாது. ஆனால் பல குழந்தைகளின் தாரணையில் குறைபாடு இருக்கும் காரணத் தினால் அவ்வப்பொழுது எளிதாக இருப்பதை சிக்கலாக்கி விடும் பழக்கமாகிவிடுகிறது. கடினமாக உழைப்பதற்கான சம்ஸ்காரம் எளிதாக அனுபவமாகும் காரணத்தினால் உதவி யற்றவர் ஆகி விடுகிறார்கள், மேலும் உதவியற்றவர் ஆகிவிடுவதால், தாரணையின் குறைபாடு இருப்பதால் மற்றவர்களுக்கு வசமாகிவிடுகிறார்கள். அப்படிப்பட்ட மற்றவர்களுக்கு வசமான குழந்தைகளின் வாழ்க்கையை பார்த்து பாப்தாதாவிற்கு இரக்கம் ஏற்படுகிறது. ஏனெனில் பாபாவினால் எந்தவொரு குழந்தைகளின் குறை, பலவீனத்தை பார்க்க முடிவதில்லை. இது தான் பாபாவுடைய ஆன்மீக அன்பின் அடையாளம். தனது குடும்பத்தின் குறைபாடு தனது குறைபாடாகும், ஆகையால் பாபாவிற்கு வெறுப்பு ஏற்படுவது கிடையாது, கருணை உருவாகிறது. பாப்தாதா அவ்வப்பொழுது குழந்தைகளின் ஆரம்பத்திலிருந்து இதுவரைக்குண்டான ஜாதகத்தை பார்க்கிறார். சில குழந்தைகளின் ஜாதகத்தை பார்க்கும் பொழுது இரக்கம் தான் வருகிறது. மேலும் சில குழந்தைகளின் ஜாதகத்தை பார்க்கும் பொழுது நிவாரணம் அளிக்கக் கூடியதாக இருக்கிறது. தன்னை முதலிருந்து இதுவரை ஜாதகத்தை சோதனை செய்யுங்கள். தன்னை தானே பார்த்தால் தெரிந்துக் கொள்ள முடியும். மூன்று சம்மந்தங் களின் பாலனையின் தாரணை எளிதாகவும் உயர்ந்ததாகவும் இருக்கிறதா? ஏனெனில் எளிமையாக இருப்பது கூட இரண்டு விதமாக இருக்கிறது. ஒன்று வரதானங்களினால் வாழ்க்கை வாழ்வது எளிதாக வும், இரண்டாவது அலட்சியமாக, கவனகுறைவாக – இப்படியும் கூட எளிதாக வாழ்கிறார்கள். ஆசீர்வாதங்களினால் மற்றும் ஆன்மீக வளர்ப்பினால் சகஜமாக வாழக்கூடிய ஆத்மாக்கள் கவனத் துடன் இருக்கிறார்கள், அலட்சியமாக இருக்க மாட்டார்கள். ஆனால் கவனம் என்று பதற்றத்துடன் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட கவனத்துடன் வாழும் ஆத்மாக்களின் நேரம், சமயம், சாதனம் மற்றும் சூழ்நிலைகளுக்கு தகுந்தப்படி பிராமண குடும்பத்தின் துணை, பாபாவின் விசேஷமான ஒத்துழைப்பு உதவிய கரமாக இருக்கிறது. ஆகையால் அனைத்தும் எளிதாக அனுபவம் ஆகிறது. இவை அனைத்தும் எனக்கு உதவியாளராக இருக்கிறதா என்று சோதனை செய்யுங்கள்? இந்த அனைத்து விஷயங்களின் ஒத்துழைப்பு தான் சகஜயோகியாக மாற்றிவிடுகிறது. இல்லையென்றால் எப்பொழுதாவது சின்னஞ்சிறிய சூழ்நிலை, சாதனம், நேரம், துணை (உதவியாளர்கள்) முதலியன இருந்தாலும் கூட எறும்புக்கு சமம் தான், ஆனால் சின்ன எறும்பு கூட மகாரதி (யானை) யை மயக்கமடைய செய்துவிடுகிறது. மயக்கம் என்றாலே வரதானங்களின் எளிதான பாலனையின் உயர்ந்த மனநிலையிலிருந்து கீழே தள்ளிவிடுகிறது. உதவியற்ற நிலை மற்றும் கடின உழைப்பு – இந்த இரண்டும் தான் மயக்கத்தின் அடையாளமாகும். எனவே இந்த விதியின் மூலம் தனது ஜாதகத்தை சோதனை செய்யுங்கள். புரிந்ததா என்ன செய்ய வேண்டும்?
நல்லது – சதா மூன்று விதமான சம்மந்தங்களின் பாலனையில் வளரக்கூடிய, சதா திருப்திமணி ஆகி திருப்தியாக இருக்கக்கூடிய மற்றும் திருப்தியின் ஜொலிப்பை பரப்பக்கூடிய, எப்பொழுதும் தீவிர முயற்சியாளராகி தன்னை முதல் (சத்யுகத்தின்) பிறவியில் முதலாவது உரிமையை அடைய செய்ய வைக்கக்கூடிய, அப்படிப்பட்ட பாக்கியசாலி குழந்தைகளுக்கு வரத்தை அளிக்கும் பாபாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
பார்ட்டிகளுடன் சந்திப்பு:
அனைவரும் வெகுதொலைவில் இருந்து வந்துள்ளீர்கள். அனைவரையும் விட வெகுதூரத்திலிருந்து பாப்தாதா வந்திருக்கிறார். நீங்கள் சொல்வீர்கள் – எங்களுக்கு கடின முயற்சி தேவைப்படுகிறது. பாப்தாதாவிற்கும் கூட, எல்லைக்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்கக் கூடியவர் எல்லைக்குட்பட்ட நிலையில் வருகிறார் – இதுவும் கூட மிக தனிப்பட்ட விஷயமாகும். இருப்பினும் லோன் (வேறு உடலை கடன்) வாங்க வேண்டி யிருக்கிறது. நீங்கள் அனைவரும் பயணசீட்டு (டிக்கெட்) எடுக்கிறீர்கள், பாபா லோன் எடுக்கிறார். அனைவருக்கும் ஆசீர்வாதம் கிடைத்ததா? 7-8 முறை வந்திருந்தாலும் கூட, ஒவ்வொரு மண்டலத்திற்கும் (ஜோன்) ஏதாவது விசேஷத்தன்மை இருக்கிறது. ஆகையால் அனைத்து மண்டலங்களும் இங்கு வந்துள்ளீர்கள். அயல் நாட்டை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள், உள்நாட்டை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். சர்வதேச குழுவாக இருக்கிறது அல்லவா. நல்லது.
தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள்: அனைத்தையும் விட மிகப்பெரிய குரூப் தமிழ்நாடாக இருக்கிறது. தமிழ் நாட்டின் விசேஷத்தன்மை என்னவாக இருக்கிறது? அன்பின் அதிர்வலைகளை உணர்கிறார்கள். பாபாவுடைய அன்பு அழிவற்ற லிப்ட் ஆகிவிடுகிறது. படி ஏறுவது பிடித்திருக்கிறதா? அல்லது லிப்ட்டில் செல்வது பிடித்திருக் கிறதா? படி ஏறுவது என்றாலே உழைப்பு, லிப்ட்டில் செல்வது எளிதாக இருக்கும். எனவே அன்பில் ஒருபொழுதும் அலட்சியமாக இருக்காதீர்கள். இல்லையென்றால் லிப்ட் செல்லும் பொழுது சிக்கல் ஏற்பட்டுவிடும். ஏனெனில் ஒருவேளை மின்சார தடை ஏற்பட்டு விட்டால் லிப்ட் நிலை என்னாகும்? மின்சாரம் தடை ஏற்படுவதால், தொடர்பு துண்டிக்கப்படுவதினால், சுகத்தின் அனுபவத்தை உணர முடிவதில்லை. எனவே அன்பில் அலட்சியம் ஏற்பட்டு விட்டால், பாபாவிட மிருந்து சக்தி (கரண்ட்) கிடைக்காது, அதனால் லிப்ட் வேலை செய்யாது. அன்பு நன்றாக இருக்கிறது, நல்லதிலும் நல்லது செய்துக் கொண்டேயிருக்க வேண்டும். எனவே இந்த லிப்ட் என்ற பரிசை கூடவே வைத்திருக்க வேண்டும்.
மைசூர் குரூப்: மைசூரின் சிறப்பம்சம் என்ன? மைசூரை சேர்ந்த குழந்தைகளுக்கு பாப்தாதா பரிசு கொடுத்துக் கொண்டிருக்கிறார். சங்கமயுகத்தின் அழகான பருவகால பழம். சங்கமயுகத்தின் பழம் மிகவும் இனிமையானதாக இருக்கும். பருவக்காலம் தவறிய பழம் என்ன தான் நன்றாக இருந்தாலும் கூட அது நல்ல தல்ல. எனவே மைசூரை சேர்ந்தவர்களுக்கு சங்கமயுகத்தின் பருவகால பழம் என்பது – உடனடி (கைமேல்) பலன். அவ்வப்பொழுது உயர்ந்த காரியம் செய்கிறீர்கள், உடனடியாக கர்மத்தின் பிரதிபலன் கிடைத்துவிடுகிறது. ஆகையால் எப்பொழுதும் நாம் சங்கமயுகத்தின் பருவகால புத்தம் புது பழத்தை உடனடியாக உண்ணக் கூடியவர்கள், பலனை அடையக் கூடியவர்கள் என்ற இந்த நஷாவின் நினைவில் தன்னை வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல நல்ல வளர்ச்சி செய்துக் கொண்டிருக்கிறீர்கள், தமிழ்நாட்டிலும் கூட வளர்ச்சி மிகவும் நன்றாக இருக்கிறது.
ஈஸ்டர்ன் ஜோன்: கிழக்கிலிருந்து என்ன உதயமாகிறது? சூரியன் உதயமாகிறதல்லவா. எனவே கிழக்கு பகுதியை சேர்ந்தவர்களுக்கு பாப்தாதா ஒரு சிறப்பான மலரை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதுவும் விசேஷத் தன்மையின் ஆதாரத்தில். சூரியகாந்தி பூ – அது எப்பொழுதும் சூரிய ஒளியில் மலர்ந்திருக்கும். முகம் சூரியனின் பக்கம் இருக்கிறது, ஆகையால் தான் சூரியகாந்தி மலர் என்று சொல்லப்படுகிறது. அதனுடைய முகத்தை பார்த்தீர்கள் என்றால் சூரியனின் கிரணங்களை போன்று இருக்கும். – அதுபோல நாலாபக்கத்திலுமுள்ள இதழ்கள் கிரணங்களை போன்று வட்டமாக இருக்கும். எனவே எப்பொழுதும் ஞான சூரியன் பாப்தாதாவிற்கு முன்பாக இருக்கக் கூடிய, ஒருபொழுதும் ஞான சூரியனிடமிருந்து விலகியிருப்பவர்கள் அல்ல. எப்பொழுதும் அருகிலும் நெருக்கத்திலும் இருக்கக் கூடியவர்கள். இதைத் தான் சூரிய காந்தி மலர் என்று சொல்லப்படுகிறது. அதுபோல சூரிய காந்தி பூவை போன்று எப்பொழுதும் ஞான சூரியனின் பிரகாசத்தின் மூலம் தானும் ஜொலிப் புடன் இருந்துக் கொண்டு, மற்ற அனைவரையும் கூட ஜொலிக்க வைக்கக் கூடியவர்கள் – இது தான் ஈஸ்டர்ன் மண்டலத்தின் சிறப்பம்சமாகும். எப்படி பார்த்தாலும் ஞான சூரியன் ஈஸ்டர்ன் ஜோனிலிருந்து தான் உதயமாகிறது. அங்கு தான் வந்தார் அல்லவா. எனவே ஈஸ்டர்ன் ஜோனில் இருக்கக் கூடியவர்கள் அனைவரையும் தனது இராஜ்யம், பகலில் (சத்யுகத்திற்கு) அழைத்துச் செல்லக் கூடியவர்கள், வெளிச்சத்திற்கு அழைத்து வரக்கூடியவர் களாக இருப்பவர்கள்.
பனாரஸ் குரூப்: பனாரஸின் சிறப்பம்சம் என்ன? ஒவ்வொருவரிடத்திலும் ஆன்மீகச்சாறு (தன்மையை) நிரப்பக் கூடியவர்கள். சாறு இல்லாமல் இவர்கள் (பனாரஸ்) இல்லை, இவர்கள் (பனாரஸ்) இல்லாமல் சாறு இல்லை. ஆனால் அனைவரிடத்திலும் ஆன்மீகத் தன்மையை நிரப்பக் கூடியவர்கள், அனைவருக்கும் பரமாத்மாவின் அன்பை, அன்பின் சாறை அனுபவம் செய்ய வைக்கக் கூடியவர்கள். ஏனெனில் பாபாவின் அன்பின் சாராம்சத்தில் நிறைந்து விடுகிறீர்கள் என்றால், மற்ற அனைத்தும் சாரமில்லாததாக (சுவையற்றதாக) இருக்கும். ஆத்மாக்களிடத்தில் பரமாத்மாவின் அன்பின் சாராம்சத்தில் நிறைந்திருக்கக் கூடியவர்கள். ஏனெனில் அங்கு (பனாரஸ் – காசி) சாரம் அதிகமாக இருக்கும். பக்தியின் சுவையில் இருக்கக் கூடியவர்களுக்கு பரமாத்மாவின் அன்பின் சுவை அனுபவம் செய்ய வைக்கக் கூடியவர்கள். எப்பொழுதுமே எதில் அதிகப்படியான சாரம் (சுவை) இருக்கும்? பனாரஸை சேர்ந்தவர்கள் சொல்லுங்கள். ரஸ்குல்லாவில். பெயர் ஆரம்பம் ஆவதே ரஸ் என்று இருக்கிறது. அதனால் சதா ஞானத்தின் ரஸ்குல்லா உண்ணக் கூடியவர்கள், ஊட்டிவிடக் கூடியவர்கள். எனவே சதா அமிர்தவேளையில் முதலாவதாக மனதிற்கு, வாய்க்கு ரஸ்குல்லா வினால் இனிமையாக மாற்றக் கூடியவர்கள். ஆகையால் பனாரஸை சேர்ந்தவர்களுக்கு இனிப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார் – ரஸ்குல்லா.
மும்பை குரூப்: பம்பாய்க்கு தொடக்கத்திலேயே ஆசீர்வாதம் கிடைத்து விட்டது, நர்தேசாவர் என்றாலே அனைவரையும் செல்வந்தராக்க கூடியவர். நர்தேசாவர் என்பதன் பொருளே – யார் எப்பொழுதும் செல்வத்தினால் நிரம்பி இருக்கிறார்கள். பம்பாயை சேர்ந்தவர்களின் சிறப்பம்சம் – ஏழையை செல்வந்தர்களாக மாற்றக் கூடியவர்கள், அது பாபாவின் பட்டப்பெயராக இருக்கிறது – ஏழை பங்காளன். எனவே ஏழை பங்காளன் தந்தையின் குழந்தைகள், ஏழைகளை செல்வந்தன் ஆக்கக்கூடிய வர்கள் என்று பம்பாயை சேர்ந்தவர்களுக்கு கூட பாப்தாதா பட்டப்பெயர் கொடுத்திருக்கிறார். ஆகையால் எப்பொழுதும் தன்னையும் பொக்கிஷங்களினால் நிறைத்து மற்றும் மற்றவர்களையும் நிறைந்தவர்களாக மாற்றுங்கள். ஆகையால் ஏழை பங்காளன் தந்தையின் உதவி செய்யக் கூடியவர்கள் என்பது சிறப்பம்சமாகும். எனவே பம்பாயை சேர்ந்தவர்களுக்கு பட்டபெயர் கொடுக்கப் பட்டுள்ளது. இனிப்பு கொடுக்கவில்லை, பட்டபெயர்.
குலூமனாலி குரூப்: குலூமனாலியின் சிறப்பம்சம் என்ன? குலூ-வில் தேவதைகளுக்கு திருவிழா நடை பெறுவதை போன்று வேறு எங்கும் நடைபெறுவதில்லை. எனவே குலூ மற்றும் மனாலியை சேர்ந்தவர்களை தேவதைகள் சந்திக்கக் கூடிய இடம் என்று சொல்லப்படுகிறது. அதனால் தேவதைகள் என்றாலே தெய்வீக குணமுடையவர்கள். தெய்வீக குணங்களின் தாரணையின் நினைவு சின்னம் தான் தேவதைகளின் உருவம். எனவே தேவதைகளின் அன்பிற்கும், சந்திப்பிற்கான சிற்பம் இந்த பூமியினுடையதாக இருக்கிறது. ஆகையால் பாப்தாதா அப்படிப்பட்ட பூமியில் வசிக்கக்கூடிய குழந்தைகளுக்கு விசேஷமாக தெய்வீக குணங்களின் பூங்கொத்து பரிசாக கொடுத்துக் கொண்டிருக் கிறார். இந்த தெய்வீக குணங்களின் மலர் கொத்து மூலம் நாலாபக்கத்திலும் ஆத்மா மற்றும் பரமாத்மாவின் சந்திப்பதற்கான விழாவை கொண்டாடுகிறார்கள். அவர்கள் தேவதைகளை சந்திப்பதற் கான விழாவை கொண்டாடுகிறார்கள், நீங்கள் தெய்வீக குணங்களின் மலர் கொத்து மூலம் ஆத்மா பரமாத்மாவின் சந்திப்பை கொண்டாடிக் கொண்டியிருக்கிறீர்கள். ஆனால் மேலும் கூட மிக வேகமாக சந்திப்பை கொண்டாடுவதை அனைவரும் பார்ப்பார்கள். தேவதைகளின் சந்திப்பு தேவதைகளுடன் இருக்கிறது, ஆனால் இந்த சந்திப்பு (திருவிழா) அனைத்தையும் விட மிக உயர்ந்தது. ஆகையால் தெய்வீக குணங்களின் நறுமணம் கொண்ட மலர்செண்டின் பரிசை எப்பொழுதும் தன்னுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
மீட்டிங்கை சேர்ந்தவர்களுடன்: மீட்டிங்கில் வந்திருப்பவர்கள் யாருக்காக வந்திருக்கிறீர்கள். ஒழுங்கமைப் பதற்காக, நிகழ்ச்சி நிரலை ஒழுங்கமைப்பதற்காக, சொற்பொழிவாளர்களை தேர்வு செய்வதற்கு, அமர்வதற்கான இருக்கைகளை ஒழுங்கமைப்பு செய்வதற்காக வந்திருக்கிறீர்கள். எவ்வாறு பேசுவதற்காக வடிவமைக்கிறீர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை உருவாக்குகிறீர்கள், அதுபோல சொற்பொழிவாளர்கள் மற்றும் வரக்கூடிய பார்வையாளர்களாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு இப்பொழுதே சிரேஷ்ட அதிர்வலைகளை கொடுங்கள், அது பேசுவதற்கான மேடையை சிறிது நேரத்திற்காக அமைப்பது மட்டுமில்லை, ஆனால் எப்பொழுதும் தனது உயர்ந்த மனநிலையில் நிலைத்திருப்பது. ஆகையால் பாப்தாதா மீட்டிங்கை சேர்ந்தவர்களுக்கு அழிவற்றதாக வடிவமைப் பதற்கான கருவியை பரிசாக கொடுத்திருக்கிறார், இதன் மூலம் வடிவமைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். இன்றைய உலகம் இயந்திர உலகமாக இருக்கிறதல்லவா. மனிதர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் செயலை கருவி களினால் (இயந்திரம்) எளிதாகவும் விரைவாகவும் முடிந்துவிடும். எனவே இப்பொழுது தன்னுடைய வடிவமைப்பு கருவியை உபயோகத்தில் கொண்டு வாருங்கள். அது மிக விரைவாக ஒழுங்கமைந்து அமைந்துவிடும். ஏனெனில் தன்னுடைய தங்க மயமான உலகம் மற்றும் சுகம் நிறைந்த உலகத்திற்கான திட்டப்படி அனைவருக்கும் இருக்கை களை உருவாக்க வேண்டும் அல்லவா. பிரஜைகளையும் உருவாக்க வேண்டும் என்றால் பிரஜைகளின் பிரஜை களையும் கூட உருவாக்க வேண்டும். இராஜா – இராணி உருவாகிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் இராயல் குடும்பம் இருக்கிறது, செல்வந்தர்களின் குடும்பங்கள் இருக்கிறது. அதன் பின் பிரஜைகள், வேலைகாரர்கள் இருக்கிறார்கள், எத்தனை விதமான வடிவமைப்புகள் இருக்கின்றன. எனவே இப்பொழுது வடிவமைத்தலின் இயந்திரத்தை மீட்டிங்கில் வந்திருப்பவர்கள் விசேஷமாக விரைவு படுத்துங்கள். வேகமாக செய்ய வேண்டு மென்றால் தீவிர முயற்சியாளர் ஆக வேண்டும். இது தான் அதனுடைய ஸ்வீட்ச். தீவிர முயற்சியாளர் ஆவது என்றாலே விரைவாக வடிவமைக்கும் கருவியை ஆன் செய்ய வேண்டும். மிகப்பெரிய பொறுப்பு. எனவே இப்பொழுது தனது இராஜ்யத் திற்கான வடிவமைக்கும் கருவியை விரைவுப்படுத்துங்கள்.
இரட்டை அயல்நாட்டவர்களின் குரூப்: இரட்டை அயல்நாட்டை சேர்ந்த குழந்தைகள் இன்றைய கால கட்டத்தில் செயற்கை கோளின் திட்டத்தை போடுகிறார்கள். பாபாவை வெளிப்படுத்துவதற்கான குஷியில் மிக நன்றாக முன்னேறிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆகையால் பாப்தாதா சதா டபுல் லைட்டாக இருப்பதற்கான பரிசை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் செயற்கைகோளின் நிகழ்ச்சியை செய்வதற்காக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள், மேலும் பாப்தாதா சதா டபுல் லைட் என்ற பரிசை கொடுத்துக் கொண்டிருக்கிறார். எப்பொழுதும் தனது டபுல் லைட்டின் மனநிலையில் நிலைத்திருக்கக் கூடிய – அதுபோல இரட்டை அயல்நாட்டை சேர்ந்த குழந்தைகளுக்கு மனதிற்கு ஒய்வளிக்கக் கூடிய பாப்தாதா தனது மனதின் அன்பை பரிசாக கொடுத்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த குழந்தைகள் விசேஷமாக நினைவு செய்துக் கொண்டேயிருக் கிறார்கள். மிகவும் நன்றாக ஊக்க உற்சாகத்தின் மூலம் உலகத்திற்கு சேவை செய்யும் சாதனம் நன்றாக உருவாகிக் கொண்டேயிருக்கிறது. ஐக்கிய நாடுகளும் கூட சேவைக்கு துணையாக இருக்கிறார்கள். பாரத்தின் சேவை தான் அஸ்திவாரமாகும். ஆகையால் பாரத்திற்கு கூட விசேஷமான சேவைக்கு துணையாக (ஜகதீஷ் சகோதர்) இருக்கிறார். அஸ்திவாரம் பாரதம் தான், மேலும் வெளிப்படுத்து வதற்காக பொறுப்பாக இருப்பது அயல்நாடு. வெளிப்படுத்துவதற்கான சப்தம் வெகுதொலை விலிருந்து பாரதத்திற்கு முரசொலியாக வரும். குழந்தை களின் அதிர்வலைகள் வந்துக் கொண்டே யிருக்கிறது. அதுபோல லண்டனை சேர்ந்தவர்களும் கூட உதவி யாளர்களாக இருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்களும் கூட விசேஷ சேவைக்கு உதவியாளர்களாக இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்களும் கூட குறைந்தவர்கள் கிடையாது. அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கிறது. பாப்தாதா உள்நாடு – வெளிநாட்டின் ஒவ்வொரு பொறுப்பிலுள்ள சேவாதாரி குழந்தைகளுக்கு அவரவர்களின் சிறப்பம்சங்களுக்கு தகுந்தவாறு விசேஷ அன்பு நினைவுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவரின் மகிமையும் தனிப்பட்டது. ஒவ்வொருவரின் மகிமையை வர்ணனை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால் பாப்தாதா வின் இதயத்தில் ஒவ்வொரு குழந்தைகளின் விசேஷத் தன்மையின் மகிமையும் இருக்கிறது.
மதுபனை சேர்ந்த சேவாதாரிகளும் கூட சேவை செய்யும் தைரியத்திற்கு உதவியளிக்கிறார்கள். ஆகையால் தைரியமுள்ள குழந்தைகளுக்கு பாபாவின் உதவி கிடைக்கும் என்று பாப்தாதாவிற்கு பாடப்பட்டுள்ளது. அதுபோல சேவை நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே மதுபனை சேர்ந்தவர் களும் கூட தைரியத்தின் தூண் ஆகிறார்கள். மேலும் மதுபனை சேர்ந்தவர்களின் தைரியத்தினால், நீங்கள் அனைவரும் தங்குவதற்கான, உண்பதற்கான, உறங்குவதற்கான, குளிப்பதற்கான உதவி கிடைக்கிறது. ஆகையால் பாப்தாதா அனைத்து மதுபனை சேர்ந்த குழந்தைகளின் தைரியத்திற்கான வாழ்த்துக்களை கொடுத்துக் கொண்டிருக் கிறார். நல்லது.
வரதானம்:-
பார்வையினால் உலகம் மாறும் என்ற பழமொழி இருக்கிறது. உங்களுடைய சதோபிரதானமான பார்வை, எப்படிபட்ட தமோகுணம் (கீழான நிலை), இரஜோபிரதானமான ஆத்மாவின் பார்வை, உள்ளுணர்வு மற்றும் அவர்களின் மனநிலையை மாற்றம் செய்துவிடுகிறது. உங்களுக்கு முன்னால் யார் வந்தாலும், அவர்களுக்கு உங்களின் பார்வை மூலம், மூன்று உலகத்தின், தனது முமுமையான வாழ்க்கை வரலாற்றை பற்றி தெரிந்துக் கொள்ளுவார்கள் – இதற்கு தான் பார்வையின் மூலம் மகிழ்ச்சியை கொடுப்பது என்பதாகும். கடைசியில் ஞானத்தின் சேவை செய்ய இயலாத பொழுது இந்த சேவை நடைபெறும்.
சுலோகன்:-
அதாவது தெய்வீகத் தன்மையாகும்.
குறிப்பு : இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்று கிழமை. உலக அமைதிக்கான தினமாகும். பாபாவின் அனைத்து குழந்தைகளும் மாலை 6.30 மணியிலிருந்து 7.30 மணி வரை விசேஷமாக இரண்டு புருவங்களுக்கு மத்தியில் விற்றிருந்து, தனது ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரத்தை தெய்வீக பார்வையினால் பார்த்துக் கொண்டே, லைட், மைட் ஹவுஸ் ஆகி இயற்கை உட்பட முழு உலகத்திற்கும் சர்ச்லைட் (ஒளி கிரணங்களை) கொடுப்பதற்கான சேவை செய்யுங்கள்.
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!