14 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

November 13, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

வரம் கொடுக்கும் வள்ளலை திருப்திப்படுத்தும் எளிய விதி

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று வரதாதா பாபா தன்னுடைய வரதானி குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து கொண்டி ருக்கின்றார். வரதாதாவின் குழந்தைகள் அனைவரும் வரதானி குழந்தைகளாக இருக்கிறீர்கள். ஆனால் வரிசைக்கிரமமாக இருக்கிறீர்கள். வரதாதா அனைத்துக் குழந்தை களுக்கும் வரதானங் களின் பையை நிறைத்துக் கொடுக்கின்றார். இருப்பினும் வரிசைக்கிரமம் ஏன் ஏற்படுகிறது? கொடுப்பதில் வரதாதா வரிசைக்கிரமமாக கொடுப்பதில்லை. ஏனெனில் வரதாதாவிடம் அளவற்ற வரதானங்கள் இருக்கின்றன, யார், எவ்வளவு எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ பொக்கிஷம் திறந்திருக்கிறது. இவ்வாறு திறந்திருக்கும் பொக்கிஷத்தில் சில குழந்தைகள் அனைத்துப் பொக்கிஷங் களினால் சம்பன்னமாக ஆகின்றனர், சில குழந்தைகள் இயன்ற அளவிற்கு சம்பன்னமாக ஆகின்றனர். அனைவருக்கும் நிறைத்துக் கொடுப்பதில் போலாநாத் வரதாதாவின் ரூபத்தில் தான் இருக்கின்றார். முன்பே கூறி யிருந்தேன் – தாதா, பாக்கிய விதாதா மற்றும் வரதாதா. மூன்றில் வரதாதாவின் ரூபத்தில் பகவான் கள்ளங்கபட மற்றவர் என்று கூறப்படு கின்றார். ஏனெனில் வரதாதா மிக விரைவில் திருப்தியடைந்து விடு கின்றார். திருப்திப்படுத்தும் விதியை அறிந்து கொண்டால் போதும், வெற்றி அதாவது வரதானங்களினால் பை நிறைத்துக் கொள்வது மிகவும் எளிதாகி விடும். வரதாதாவை திருப்திப்படுத்துவதற்கான எளிய விதியை அறிவீர்களா? அவருக்கு மிகவும் பிடித்த மானவர் யார்? அவருக்கு ஒன்று (ஏக்) என்ற வார்த்தை மிகவும் பிரியமானதாக இருக்கிறது. எந்தக் குழந்தைகள் ஆரம்பத்திலிருந்து இன்று வரை ஒரு விரதத்தில் (ஏக்விரதா) இருக்கிறார்களோ, அவர்களே வரதாதாவிற்கு மிகவும் பிரியமானவர்கள் ஆவர்.

ஒரு விரதம் என்றால் தூய்மையாக இருப்பது மட்டுமல்ல, அனைத்துச் சம்பந்தங்களிலும் ஏக்விரதா. சங்கல்பத் திலும், கனவிலும் கூட மற்றொரு விரதம் இருக்கக் கூடாது. ஒரு விரதம் என்றால் விருத்தியில் சதா ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும். இரண்டாவது – எனக்கு சதா ஒரு தந்தையைத் தவிர வேறு யாருமில்லை என்ற விரதம் உறுதியாக எடுத்திருக்க வேண்டும். சில குழந்தைகள் ஒரு விரதத்துடன் (ஏக்விரதா) இருப்பதில் மிகுந்த புத்திசாலித்தனத்தை காண்பிக் கின்றனர். எந்த புத்திசாலித்தனம்? தந்தையிடமே இனிய விசயங்களைக் கூறு கின்றனர் – தந்தை, ஆசிரியர், சத்குரு என்ற முக்கிய சம்பந்தம் தங்களிடம் இருக்கிறது. ஆனால் சாகார சரீரத்துடன் இருக்கின்ற காரணத்தினால், சாகார உலகில் வசிக்கின்ற காரணத்தினால் சாகாரதத்தில் உதவி புரிவதற்கு, சேவை புரிவதற்கு, கலந்தாலோசிப்பதற்கு யாராவது சாகாரத்தில் அவசியம் துணை தேவைப்படுகிறது. ஏனெனில் தந்தை நிராகாராக, ஆகாரமாக இருக்கின்றார். ஆகையால் சேவைக்கு துணை தேவைப்படுகிறது. வேறு எதுவும் கிடையாது. ஏனெனில் நிராகாரி, ஆகாரி சந்திப்பு செய்வ தற்காக சுயம் ஆகாரியாக, நிராகார ஸ்திதியில் நிலைத்திருக்க வேண்டி யிருக்கிறது. அது அவ்வப் பொழுது கடினமாக இருக்கிறது. ஆகையால் அந்த நேரத்தில் சாகாரத்தில் துணை தேவைப் படுகிறது. புத்தியில் அதிக விசயங்கள் நிறைந்து விடும் போது என்ன செய்வீர்கள்? கேட்பதற்கு ஆள் வேண்டும் அல்லவா! ஏக்விரதா ஆத்மாவிடம் இப்படிப்பட்ட சுமையான விசயங்கள் இருக்கவே இருக்காது. ஒருபுறம் தந்தையை மிகவும் குஷிபடுத்துகின்றீர்கள் – தாங்கள் தான் சதா என் கூடவே இருக்கிறீர்கள், அது போதும். சதா தந்தை என்னுடன் துணையாக இருக்கின்றார். பிறகு அந்த நேரத்தில் எங்கு சென்று விடுகின்றார்? தந்தை சென்று விடுகின்றாரா? அல்லது நீங்கள் தூர விலகி விடு கிறீர்களா? ஒவ்வொரு நேரத்திலும் துணையாக இருக்கின்றாரா? அல்லது 6-8 மணி நேரம் துணையாக இருக்கின்றாரா? என்ன உறுதிமொழி கொடுத்திருக்கிறீர்கள்? துணையாக இருக்கிறீர்கள், துணையாக இருப்பீர்கள், துணையாக செல்வோம் – இந்த உறுதிமொழியில் உறுதி யாக இருக்கிறீர்கள் தானே? பிரம்மா பாபாவிடத்திலும் முழு சக்கரத்திலும் துணையாக நடிப்பு நடிப்போம் என்று உறுதி மொழி கொடுத்திருக்கிறீர்கள். இவ்வாறு உறுதிமொழி கொடுத்த பின்பும் சாகாரத்தில் விசேஷமாக எந்த துணை தேவைப்படுகிறது?

அனைவரின் ஜாதகமும் பாப்தாதாவிடம் இருக்கிறது. பாப்தாதாவின் முன் நீங்கள் தான் துணையாக இருக்கிறீர்கள் என்று கூறுவீர்கள். எப்பொழுது பிரச்சனை வருகின்றதோ, அப்பொழுது தந்தைக்கு புரிய வைக்க ஆரம்பித்து விடுகிறீர்கள் – இவ்வாறு நடக்கவே செய்யும், இது வேண்டும் அல்லவா! இதை ஏக்விரதா என்று கூற முடியுமா? துணை என்றால் அனைவரும் துணைவர்களாக இருக்க வேண்டும், யாரும் விசேஷமாக இருக்கக் கூடாது. இதைத் தான் ஏக்விரதா என்று கூறப்படுகிறது. எனவே வரதாதாவிற்கு இப்படிப்பட்ட குழந்தைகள் மிகவும் பிரியமானவர்களாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட குழந்தைகளின் அனைத்துப் பொறுப்புகளையும் ஒவ்வொரு நேரத்திலும் வரதாதா தந்தை சுயம் எடுத்துக் கொள்கின்றார். இப்படிப்பட்ட வரதானி ஆத்மாக்கள் ஒவ்வொரு நேரத்திலும், ஒவ்வொரு பிரச்சனையின் பொழுதும் வரதானங்கள் நிறைந்திருக்கக் கூடிய ஸ்திதியை அனுபவம் செய்வார் கள் மற்றும் சதா எளிதாக கடந்து செல்வார்கள், நேர்மை யுடன் தேர்ச்சி பெறுபவர்களாக ஆவார்கள். வரதாதா அனைத்து பொறுப்புகளையும் எடுத்துக் கொள்வதற்குத் தயாராக இருக்கும் பொழுது பிறகு ஏன் தன் மீது பொறுப்புகளின் சுமைகளை தூக்கிக் கொள்கிறீர்கள்? என்னுடைய பொறுப்பு என்று நினைப்பதால் தான் பிரச்சனைகளின் பொழுது நேர்மையுடன் தேர்ச்சிப் பெற முடிவது கிடையாது. ஆனால் உந்துதல் தேர்ச்சி பெறுகிறீர்கள். சிலருடைய துணையின் உந்துதல் தேவைப்படுகிறது. ஒருவேளை பேட்டரி முழுமையாக சார்ஜ் இல்லை யெனில் காரை தள்ளி விடுவார்கள் அல்லவா! தனியாக தள்ள முடியாது, துணை தேவைப் படும். இதனால் வரதானிகள் வரிசைக்கிரமமாக ஆகிவிடு கின்றனர். ஆக வரதாதாவிற்கு ஒரு சப்தம் மிகவும் பிடித்திருக்கிறது – ஏக்விரதா. ஒரே பலம் ஒரே நம்பிக்கை. ஒருவரிடம் நம்பிக்கை, இன்னொருவரிடம் பலம் என்று கூறப்படவில்லை. ஒரே பலம் ஒரே நம்பிக்கை என்று தான் பாடப்பட்டிருக்கிறது. கூடவே ஏக்மத் (ஒரே வழி), மன வழி, பிறரது வழி கூடாது. ஏக்ரஸ் (ஒரே ரசனை) – வேறு எந்த மனிதன் மற்றும் பொருட்களின் ரசனை இல்லை. இதே போன்று ஏக்தா (ஒற்றுமை), ஏகாந்தப் பிரியன் (தனிமை விரும்புபவர்). ஆக ஒன்று என்ற சப்தம் பிரியமானதாக ஆகிவிடுகிறது அல்லவா! இவ்வாறு இன்னும் உருவாக்குங்கள். தந்தை அந்த அளவிற்கு கள்ளங்கபடமற்றவராக இருக்கின்றார், அவர் ஒன்றிலேயே திருப்தி அடைந்து விடுகின்றார். இப்படிப்பட்ட கள்ளங்கபடமற்ற வரதாதாவை திருப்திப்படுத்துவதற்கு ஏன் கடினமாக இருக்கிறது? ஒன்று என்ற பாடத்தை மட்டும் பக்கா செய்தால் போதும். 5-7 -ல் செல்ல வேண்டிய அவசியமில்லை. வரதாதாவை திருப்திப்படுத்துபவர்கள் அம்ருதவேளை லிருந்து இரவு வரை ஒவ்வொரு தினசரி காரியத்தில் வரதானங்களினாலேயே வளர்கின்றனர், நடக்கின்றனர் மற்றும் பறக்கின்றனர். இப்படிப்பட்ட வரதானி ஆத்மாக்களுக்கு ஒருபோதும் எந்த கடினமும் அது மனதளவில், சம்பந்தம்-தொடர்பில் அனுபவம் ஆகாது. ஒவ்வொரு சங்கல்பம், ஒவ்வொரு விநாடி, ஒவ்வொரு செயல், ஒவ்வொரு அடியில் வரதாதா மற்றும் வரதானம் சதா நெருக்கத்தில், எதிரில் சாகார ரூபத்தின் அனுபவம் ஏற்படும். சாகாரத்தில் உரையாடிக் கொண்டிருப்பதைப் போன்று அவர்கள் அனுபவம் செய்வார்கள். அவர்களுக்கு கடின உழைப்பின் அனுபவம் இருக்காது. இப்படிப் பட்ட வரதானி ஆத்மாக் களுக்கு விசேஷ மாக இந்த வரதானம் பிராப்தியாக கிடைக்கிறது – நிராகார் மற்றும் ஆகாரத்தை சாகாரத்தில் அனுபவம் செய்ய முடியும். இப்படிப்பட்ட வரதானிகளின் முன் பாபா சதா ஆஜராக இருக்கின்றார். கேட்டீர்களா? வரதாதாவை திருப்திப்படுத்தும் விதி மற்றும் பலன் – விநாடியில் செய்ய முடியுமா? ஒன்றில் இரண்டை கலந்து விடாமல் இருந்தால் போதும். ஒன்று என்ற பாடத்தின் விரிவான விளக்கத்தை பிறகு கூறுகின்றேன்.

பாப்தாதாவிடம் அனைத்துக் குழந்தைகளின் சரித்திரமும் இருக்கிறது, சாதூரியமும் இருக்கிறது. அனைவரின் ரிசல்ட்டும் பாப்தாதாவிடம் இருக்கிறது அல்லவா! சாதூர்ய விசயங் களும் அதிகம் சேர்ந்து விட்டது. புதுப் புது விசயங்களைக் கூறுகிறீர்கள், கேட்டுக் கொண்டிருக் கின்றேன். பாப்தாதா பெயரைக் குறிப்பிடுவது கிடையாது. ஆகையால் தந்தைக்குத் தெரியாது என்று நினைக்கின்றனர். இருப்பினும் வாய்ப்புகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். குழந்தைகள் உண்மையைப் புரிந்து கொள்வதில் கள்ளங்கபடமின்றி இருக்கின்றனர் என்று தந்தை நினைக்கின்றார். இதில் கள்ளங்கபடமின்றி இருக்காதீர்கள். நல்லது.

குழந்தை அயல்நாடுகளுக்குச் சென்று சுற்றி வந்து சேர்ந்து விட்டது. (ஜானகி தாதி, டாக்டர் நிர்மலா மற்றும் சகோதரர் ஜெகதீஷ் அயல்நாட்டுக்குச் சென்று திரும்பி வந்திருக்கின்றனர்)

ரிசல்ட் நன்றாக இருக்கிறது. மேலும் சேவையில் வெற்றி அடைவதில் சதா விருத்தி கிடைத்தே தீரும். ஐக்கிய நாடுகள் சபையின் விசேஷ சேவைக்கான காரியத்தில் சம்பந்தம் இருக்கிறது. பெயர் அவர்களுடையது, காரியம் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆத்மாக் களுக்கு எளிதாக செய்தி சேர்ந்து விட வேண்டும் – உங்களது இந்த காரியம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆக அங்கு நிகழ்ச்சிகளும் நன்றாக நடைபெற்றது. ரஷியா பாக்கி இருந்தது, அவர்களும் வரவேண்டியிருந்தது. பாப்தாதா முன் கூட்டியே வெற்றிக்கான அன்பு நினைவு களை கொடுத்து விட்டார். பாரதத்தின் தூதுவராக ஆகிச் சென்றீர்கள், பாரதத்தின் பெயர் வெளிப்பட்டு விட்டது அல்லவா! சக்கரவர்த்தியாக ஆகி சுற்றி வருவதில் போதை வருகிறது அல்லவா! எவ்வளவு ஆசிர்வாதங்களை சேமித்து வந்திருக்கிறீர்கள்! டாக்டர் நிர்மலாவும் சுற்றிக் கொண்டே இருக்கின்றார். அனைவரும் சேவையில் ஈடுபட்டிருக்கிறீர்கள். ஆனால் நேரத்தின் அநுசாரமாக விசேஷ சேவை நடைபெறுகிறது எனில் விசேஷ சேவைக்கான வாழ்த்துக்கள் கொடுக்கின்றேன். சேவையின்றி இருக்க முடியாது. இலண்டன், அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரே-யா – நீங்கள் இந்த 4 மண்டலங்களை உருவாக்கியிருக்கிறீர்கள் அல்லவா ஐந்தாவது பாரதம். பாரதவாசிகள் சந்திப்பதற்கு முதல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எந்த சேவை செய்து வந்திருக்கிறீர்கள் மற்றும் நாளை என்ன செய்ய இருக்கிறீர்களோ அனைத்தும் நன்றாக இருக்கிறது. மேலும் சதா நன்றாகவே இருக்கும். நான்கு மண்டலங்களிலும் உள்ள அனைத்து அயல்நாட்டுக் குழந்தைகளுக்கு இன்று விசேஷமாக அன்பு நினைவுகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். ரஷ்யாவும் ஆசியாவில் வந்து விடுகிறது. சேவைக்கான பலன் நன்றாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. தைரியமும் நன்றாக இருக்கிறது, ஆகையால் உதவியும் கிடைத்துக் கொண்டிருக்கிறது மற்றும் கிடைத்துக் கொண்டே இருக்கும். பாரதத்திலும் இப்போது விசால காரியம் செய்வதற்கான திட்டம் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் விசேஷதா மற்றும் சேவையின் ஈடுபாட்டில் மூழ்கியிருப்பதற்கான வாழ்த்துக்கள் மற்றும் அன்பு நினைவுகள். நல்லது.

அனைத்து குழந்தைகளுக்கும் எளிதாக வெற்றியை பலனாக அடைவதற்கான யுக்தியை கூறியிருக்கின்றேன். இந்த விதியை சதா பயன்பாட்டில் கொண்டு வரக் கூடிய பிரயோகி மற்றும் சகஜயோகிகளுக்கு, சதா வரதாதாவின் வரதானங்களினால் சம்பன்ன வரதானி குழந்தைகளுக்கு, சதா ஒன்றின் பாடத்தை ஒவ்வொரு அடியிலும் சாகார சொரூபத்தில் கொண்டு வரக் கூடியவர்களுக்கு, சதா நிராகார, ஆகார தந்தையின் துணையின் அனுபவத்தின் மூலம் சதா சாகார சொரூபத்தில் ஆஜராகும் அனுபவம் செய்யக் கூடியவர்களுக்கு, இவ்வாறு சதா வரதானி குழந்தைகளுக்கு பாப்தாதாவின் தாதா, பாக்கிய விதாதா மற்றும் வரதாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாதி ஜானகியிடம்: எந்த அளவிற்கு அனைவருக்கும் தந்தையின் அன்பை கொடுக்கிறீர்களோ, அந்த அளவிற்கு அன்பின் பொக்கிஷம் அதிகரித்துக் கொண்டே செல்லும். ஒவ்வொரு நேரத்திலும் அன்பு மழை பொழிந்து கொண்டே இருக்கிறது – இவ்வாறு அனுபவம் ஏற்படுகிறது அல்லவா! ஒரு அடி அன்பு கொடுங்கள் மற்றும் அடிக்கடி அன்பு அடையுங்கள். அனைவருக்கும் அன்பு தான் தேவைப்படுகிறது. ஞானம் கேட்டு விட்டீர்கள் அல்லவா! ஒரு சில குழந்தைகளுக்கு அன்பு தேவைப்படுகிறது, சில குழந்தைகளுக்கு சக்தி தேவைப்படுகிறது. ஆக என்ன சேவை செய்தாய்? இந்த சேவை தான் செய்தாய் அல்லவா – சிலருக்கு தந்தையின் அன்பு, சிலருக்கு தந்தையின் சக்திகளை கொடுத்தாய். ஞானத்தின் இரகசியங்களை அறிந்து கொண்டீர்கள். இப்போது தேவைப் படுவது அவர்களிடத்தில் ஆர்வம்-உற்சாகம் சதா இருக்க வேண்டும், அதில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் பாப்தாதா இரட்டை அயல்நாட்டுக் குழந்தைகளுக்கு சபாஸ் கொடுக்கின்றார் – வேறு தர்மத்திற்கு சென்று விட்டீர்கள் அல்லவா! வித விதமான தேசம், வித விதமான வழக்கங்கள் இருப்பினும் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள். சில வாரிசு குழந்தைகளும் உருவாகியிருக்கின்றனர். நல்லது.

மகாராஷ்டிரா – புனே குரூப்: அனைவரும் மகான் ஆத்மாக்களாக ஆகிவிட்டீர்கள் அல்லவா! முன்பு தன்னை மகாராஷ்டிராவில் வசிப்பவன் என்று கூறினீர்கள். இப்பொழுது சுயம் மகான்களாக ஆகிவிட்டீர்கள். தந்தை வந்து ஒவ்வொரு குழந்தையையும் மகான்களாக ஆக்கிவிட்டார். உலகில் உங்களை விட மகான் வேற யாராவது இருக்கிறார்களா? அனைவரை யும் விட பாரதவாசிகள் தான் வீழ்ச்சி அடைந்தனர், அதிலும் 84 பிறவிகள் எடுத்த பிராமண ஆத்மாக்கள் வீழ்ச்சி அடைந்தனர். எந்த அளவிற்கு வீழ்ச்சியோ, அந்த அளவிற்கு இப்பொழுது எழுச்சி அடைந்து விட்டீர்கள். அதனால் தான் பிராமணர்கள் என்றால் உச்சிக் குடுமி என்று கூறுகின்றனர். உயர்ந்த இடத்தை குடுமி என்று கூறுவார்கள். மலைகளில் உயர்வான இடத்தைக் கூட குடுமி என்று கூறுவார்கள். எப்படி யிருந்தவன் எப்படி ஆகிவிட்டேன் என்ற குஷி இருக்கிறது. பாண்டவர்களுக்கு அதிக குஷி இருக்கிறதா? அல்லது சக்திகளுக்கு இருக்கிறதா? (சக்திகளுக்கு) ஏனெனில் சக்திகளை மிகவும் கீழே தள்ளி விட்டீர்கள். துவாபர யுகத்திலிருந்து ஆண் உடல் தான் ஏதாவது பதவி அடைந்து வந்தது. தர்மங்களிலும் கூட இப்பொழுது தான் பெண்கள் மகாமண்டலேஸ்வரி ஆகியிருக்கின்றனர். இல்லையெனில் மகாமண்டலேஸ்வர் என்று தான் கூறப்பட்டு வந்தது. எப்போது தந்தை தாய்மார்களை முன் வைத்தாரோ, அப்பொழுதிலிருந்து அவர்களும் 2-4 மண்டலேஸ்வரிகளை வைத்து விட்டனர். இல்லையெனில் தர்ம காரியங்களுக்கு ஒருபோதும் தாய்மார்களுக்கு ஆசனம் கொடுக்கப்பட்டது கிடையாது. ஆகையால் தாய்மார்களுக்கு அதிக குஷி இருக்கிறது. பாண்டவர்களுக்கும் அதிக மகிமை இருக்கிறது. பாண்டவர்கள் வெற்றியை பலனாக அடைந்து விட்டனர். பாண்டவர்கள் என்ற பெயர் தான் பயன்படுத்துகின்றனர். ஆனால் சக்தி களுக்குத் தான் அதிக பூஜைகள் நடைபெறுகிறது. முதலில் குருக்களுக்கு பூஜித்தனர், இப்பொழுது சக்திகளுக்கு செய்கின்றனர். கணேசருக்கு அல்லது ஹனுமானுக்கு விழித்திருப்பது கிடையாது, சக்திகளுக்குச் செய் கின்றனர். ஏனெனில் சக்திகள் இப்பொழுது சுயம் விழிப்படைந்து விட்டனர். ஆக சக்திகள் தங்களது சக்தி ரூபத்தில் இருக்கிறீர்கள் தானே! அல்லது அவ்வப்பொழுது பலவீனமாக ஆகிவிடுகிறீர்களா? தாய்மார்களுக்கு தேக சம்பந்தத்தின் பற்றுதல் பலவீனமாக ஆக்குகின்றது. சிறிது குழந்தைகளின் மீது, பேரன்-பேத்திகளின் மீது பற்றுதல் இருக்கிறது. பாண்டவர்களுக்கு எந்த விசயம் பலவீனம் ஆக்குகின்றது? பாண்டவர்களுக்குள் அகங்காரத்தின் காரணத்தினால் கோபம் விரைவில் வருகிறது. ஆனால் இப்பொழுது வெற்றி அடைந்து விட்டீர்கள் அல்லவா! இப்பொழுது சாந்த சொரூப பாண்டவர்களாக ஆகிவிட்டீர்கள், தாய்மார்கள் பற்றற்றவர் களாக ஆகிவிட்டீர்கள். தாய்மார்களிடம் பற்றுதல் உள்ளது என்று உலகத்தினர் கூறுவர், ஆனால் தாய்மார்களாகிய நாம் பற்றற்றவர்களாக இருக்கின்றோம் என்று சவால் விட வேண்டும். இவ்வாறே பாண்டவர்களும் சாந்த சொரூபம். யார் வந்தாலும் இந்த ஆச்சரியப் பாட்டு பாட வேண்டும் – இவர்கள் அனைவரும் சாந்த சொரூபமானவர்களாக ஆகிவிட்டனர், கோபத்தின் அம்சம் கூட தென்படுவது கிடையாது. கண்களிலும் வரக் கூடாது. கோபம் கிடையாது, ஆனால் ஆவேசம் வருகிறது என்று சிலர் கூறுகின்றனர். அதுவும் கோபத்தின் அம்சம் ஆகிவிடுகிறது அல்லவா! ஆக பாண்டவர்கள் வெற்றியாளர்கள் அதாவது சங்கல்பத்திலும் முற்றிலுமாக சாந்தம், வார்த்தை மற்றும் செயல்களிலும் சாந்த சொரூபம். தாய்மார்கள் முழு உலகின் முன் தனது பற்றற்ற ரூபத்தை காட்டுங்கள். இது அசம்பவம் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். ஆனால் நீங்கள் இது சம்பவம் மற்றும் எளிதானது என்று கூறுகின்றீர்கள். இலட்சியம் வையுங்கள், இலட்சணம் அவசியம் வந்து விடும். நினைவு எப்படியோ அப்படி ஸ்திதி ஏற்பட்டு விடும். பூமியில் தாய்-தந்தையின் அன்பு என்ற நீர் இருக்கிறது, ஆகையால் பலன் எளிதாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. நன்றாக இருக்கிறது. சேவை மற்றும் சுய முன்னேற்றம் இரண்டையும் பார்த்து பாப்தாதா குஷி அடைகின்றார். வெறும் சேவையைப் பார்த்து மட்டும் அல்ல. எந்த அளவிற்கு சேவையில் முன்னேற்றமோ, அந்த அளவிற்கு சுய முன்னேற்றத்திலும் – இரண்டும் இணைந்தே இருக்க வேண்டும். எந்த ஆசையும் இருக்கக் கூடாது. அனைத்தும் தானாகவே கிடைத்துக் கொண்டிருக்கிறது எனில் ஏன் ஆசைப்பட வேண்டும்? கூறாமல், கேட்காமல் இவ்வளவு கிடைத்து விட்டது எனில் கேட்க வேண்டிய அவசியமில்லை. ஆக இவ்வாறு திருப்தியாக இருக்கிறீர்கள் தானே! இந்த பட்டம் தனது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – திருப்தியாக இருக்கின்றேன் மற்றம் அனைவரையும் திருப்திப்படுத்தி பிராப்தி சொரூபமாக ஆக்கக் கூடியவன். ஆக திருப்தியாக இருப்பது மற்றும் திருப்திப்படுத்துவது – இது விசேஷ வரதானமாகும். அதிருப்தியின் பெயர், அடையாளம் இருக்கக் கூடாது. நல்லது.

குஜராத் குரூப்: பிராமண வாழ்க்கையில் கடைசிப் பிறவியின் காரணத்தினால் சரீரத்தில் எவ்வளவு தான் பலவீனமாக அல்லது நோயாளியாக இருந்தாலும், நடக்க முடியலாம் அல்லது நடக்க முடியாமலும் இருக்காலும், ஆனால் மனம் என்ற விமானத்திற்கு இறக்கைகளை கொடுத்து விட்டேன். சரீரத்தினால் நடக்க முடியாது, ஆனால் மனதினால் பறக்க முடியும் அல்லவா! ஏனெனில் 63 பிறவிகளாக அலைந்து அலைந்து பலவீனமாக ஆகிவிட்டீர்கள், சரீரம் தமோ குணமாக ஆகிவிட்டது என்பதை பாப்தாதா அறிவார். எனவே பலவீனம் ஆகி விட்டீர்கள், நோயாளி களாக ஆகிவிட்டீர்கள். ஆனால் அனைவரின் மனமும் ஆரோக்கியமாக இருக்கிறது. சரீரம் ஆரோக்கியமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் மனதில் எந்த நோயும் கிடையாது அல்லவா! அனைவரின் மனமும் இறக்கைகளினால் பறக்கக் கூடியது. சக்திசாலி யான மனதின் அடையாளம் – விநாடியில் எங்கு விரும்புகிறீர்களோ, அங்கு சென்றடைந்து விடும். இவ்வாறு சக்திசாலியாக இருக்கிறீர்களா அல்லது சில நேரங்களில் பலவீனம் ஆகிவிடுகிறீர்களா? மனம் பறக்க ஆரம்பித்து விட்டால், பயிற்சி ஏற்பட்டு விட்டால் பிறகு விநாடியில் எங்கு விரும்புகிறீர்களோ, அங்கு சென்று விட முடியும். சில நேரம் சாகார வதனம், சில நேரம் பரந்தாமம் – ஒரு விநாடிக்கான வேகமாகும். ஆக அந்த அளவிற்கு தீவிர வேகத்தில் இருக்கிறீர்களா? சதா தனது பாக்கியத்தின் பாட்டை பாடி பறந்து கொண்டே இருங்கள். சதா அமிர்தவேளையில் தனது பாக்கியத்தின் ஏதாவது ஒரு விசயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், பலவிதமான பாக்கியம் கிடைத்திருக்கிறது, பலவிதமான பிராப்திகள் கிடைத் திருக்கிறது, சில நேரம் ஏதாவது பிராப்தியை எதிரில் கொண்டு வாருங்கள், சில நேரம் வேறு பிராப்தியை எதிரில் வையுங்கள், பிறகு முயற்சி மிகவும் ரமணீகர மானதாக ஆகிவிடும். முயற்சியில் ஒருபோதும் தன்னை போராக நினைக்கமாட்டீர்கள், புதுமை யின் அனுபவம் செய்வீர்கள். இல்லையெனில் சில குழந்தைகள் கூறுகின்றனர் – நான் ஆத்மா, சிவபாபாவின் குழந்தை என்று சதா கூறிக் கொண்டு தான் இருக்கிறீர்கள். ஆனால் ஆத்மாவாகிய எனக்கு தந்தை என்ன என்ன பிராப்திகளைக் கொடுத்திருக்கின்றார்? என்ன என்ன பட்டங்களைக் கொடுத்திருக்கின்றார்? என்ன என்ன பொக்கிஷங்களைக் கொடுத்திருக்கின்றார்? இவ்வாறு வித விதமான நினைவுகளைக் கொண்டு வாருங்கள். பட்டியல் உருவாக்குங்கள், நினைவிற்கான பட்டியல் எவ்வளவு நீண்டதாக இருக்கிறது! சில நேரம் பொக்கிஷங்களை நினைவில் வையுங்கள், சில நேரம் சக்திகளை நினைவில் வையுங்கள், சில நேரம் குணங்களை வையுங்கள், சில நேரம் ஞானத்தை வையுங்கள், சில நேரம் பட்டங்களை வையுங்கள். வெரைட்டியில் சதா மன மகிழ்ச்சி ஏற்பட்டு விடும். மன மகிழ்ச்சிக்கான நிகழ்ச்சி ஏதாவது இருக்கிறது எனில் வெரைட்டி நடனம் இருக்கும், வெரைட்டி உணவு இருக்கும், வெரைட்டி மனிதர்களின் சந்திப்பு இரக்கும். அப்போது தான் மன மகிழ்ச்சி ஏற்படும் அல்லவா! அதே போன்று இதுவும் சதா மன மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக விதவிதமான விசயங்களை சிந்தியுங்கள். நல்லது.

வரதானம்:-

முயற்சிக்கு முக்கிய ஆதாரம் கிரஹிக்கும் சக்தியாகும். எவ்வாறு விஞ்ஞானம் முதலில் ஒலியை கிரஹிக்கிறதோ, அதே போன்று நீங்கள் அமைதி சக்தியின் மூலம் தனது ஆதி தெய்வீக சன்ஸ்காரங்களை கிரஹியுங்கள். இதற்கு நான் இவ்வாறு இருந்தேன், மீண்டும் ஆகிக் கொண்டிருக் கின்றேன் என்ற நினைவு சதா இருக்க வேண்டும். எந்த அளவிற்கு அந்த சன்ஸ்காரங்களை கிரஹிக்கின்றீர்களோ, அந்த அளவிற்கு அதன் சொரூபமாக ஆவீர்கள். 5 ஆயிரம் ஆண்டிற்கான விசயம் நேற்றைய விசயம் போன்று தெளிவாக அனுபவம் ஆக வேண்டும். தனது நினைவை அந்த அளவிற்கு சிரேஷ்டமாக மற்றும் தெளிவாக ஆக்குங்கள், அப்போது சக்திசாலியாக ஆவீர்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top