13 June 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

June 12, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

அன்பு மற்றும் சக்தியின் சமநிலை

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று ஸ்மிருதி சொரூபம் ஆக்கக்கூடிய சமர்த் (சக்தி) தந்தை நாலாபுறமும் உள்ள ஸ்மிருதி சொரூப, சமர்த் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இன்றைய நாள் பாப்தாதாவின் அன்பில் மூழ்குவதோடு கூடவே அன்பு மற்றும் சக்தி – இரண்டினுடைய சமமான ஸ்திதியை அனுபவம் செய்வதற்கான நாள் – ஸ்மிருதி தினம், அதாவது அன்பு மற்றும் சக்தி – இரண்டின் சமநிலையினுடைய வரதானத்தின் நாள். ஏனென்றால் எந்தத் தந்தையின் ஸ்மிருதியில், அன்பில் மூழ்கியிருக்கிறீர்களோ, அந்த பிரம்மா பாபா, அன்பு மற்றும் சக்தி யினுடைய உயர்ந்த அடையாளமாவார். அவ்வப்போது அதிக அன்பு, அவ்வப் போது உயர்ந்த சக்திசாலி. அன்பின் மூலம் ஒவ்வொரு குழந்தையையும் சதா சக்திசாலி ஆக்கினார். அன்பில் மட்டும் தன் பக்கமாகக் கவர்ந்திழுக்கவில்லை. ஆனால் அன்பின் மூலம் சக்தி சேனையை உருவாக்கி, உலகத்திற்கு முன்னால் சேவைக்கு நிமித்தமாக ஆக்கினார். சதா சிநேகி பவ என்பதோடு நஷ்டோமோகா – கர்மாதீத் பவ என்ற பாடத்தை யும் கற்பித்தார். கடைசி வரை குழந்தைகளுக்கு சதா விலகிய மற்றும் சதா அன்பானவர் – இதையே கண்களின் திருஷ்டி மூலம் வரதானமாகக் கொடுத்தார்கள்.

இன்றைய நாள் நாலாபுறமும் உள்ள குழந்தைகள் பலவித சொரூபத்தின் மூலம் பலவித சம்மந்தங் களின் மூலம் அன்பின் மூலம் மற்றும் பாப்-சமான் ஆவதற்கான ஸ்திதியின் அனுபூதி மூலம் சந்திப்பதற்காக பாப்தாதாவின் வதனத்தில் வந்து சேர்ந்துள்ளனர் – சிலர் புத்தி மூலமாக, இன்னும் சிலர் திவ்ய திருஷ்டி மூலம். பாப்தாதா அனைத்துக் குழந்தைகளின் அன்பினுடைய மற்றும் சமான் ஸ்திதி யினுடைய நினைவு மற்றும் அன்பை மனதார ஸ்வீகாரம் செய்தார். மேலும் பதிலுக்கு அனைத்துக் குழந்தைகளுக்கும் பாப்தாதா சமான் பவ என்ற வரதானத்தைக் கொடுத்தார் மற்றும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பாப்தாதாவுக்குத் தெரியும் – குழந்தைகளுக்கு பிரம்மா பாபா மீது மிகுந்த அன்பு உள்ளது. சாகாரத்தில் பாலனை பெற்றிருந்தாலும் சரி, இப்போது அவ்யக்த ரூபத்தில் பாலனை பெற்றுக் கொண்டிருந்தாலும் சரி, ஆனால் பெரிய அம்மாவாக இருப்பதால் அம்மாவிடம் குழந்தை களுக்கு அன்பு இயல்பாகவே உள்ளது. இக்காரணத்தால் பாபாவுக்குத் தெரியும் – பிரம்மா என்ற அம்மாவை அதிகமாக நினைவு செய்கின்றனர். ஆனால் அன்பின் பிரத்தியட்ச சொரூபம் – சமமாக ஆவ தாகும். எவ்வளவுக்கெவ்வளவு மனதின் உண்மையான அன்பு உள்ளதோ, குழந்தை யின் மனதில் அந்த அளவுக்குத் தான் தந்தையைப் பின்பற்றுவதற்கான ஊக்கம்- உற்சாகம் காணப்படுகிறது. இந்த அலௌகிக அம்மாவின் அலௌகிக அன்பு வியோகி (மறந்தவராக) ஆக்குவதல்ல. சகஜயோகி, இராஜ யோகி, அதாவது இராஜாவாக ஆக்குவதாகும். அலௌகிக அம்மாவுக்கு, குழந்தைகள் மீது அலௌகிகப் பாசம் உள்ளது – ஒவ்வொரு குழந்தையும் இராஜா ஆக வேண்டும். அனைவரும் இராஜாக் குழந்தையாக ஆக வேண்டும். பிரஜையாக அல்ல. பிரஜைகளை உருவாக்குபவரே தவிர பிரஜையாக ஆகுபவர் அல்ல.

இன்று வதனத்தில் தாய்-தந்தையரின் ஆன்மிக உரையாடல் நடந்து கொண்டிருந்தது. பாபா, பிரம்மா வாகிய அம்மாவிடம் கேட்டார் – குழந்தைகளுக்கு விசேஷமாக அன்பின் தினமாக எது நினைவுக்கு வருகிறது? உங்களுக்கும் கூட விசேஷமாக நினைவு வருகிறது இல்லையா? ஒவ்வொருவருக்கும் தனது நினைவு வருகிறது மற்றும் அந்த நினைவுகளில் மூழ்கி விடுகிறீர்கள். இன்றைய தினம் விசேஷ அலௌகிக நினைவுகளின் உலகம் என்று ஒன்று உள்ளது. ஒவ்வோரடியிலும் விசேஷமாக சாகார சொரூபத்தின் சரித்திரங்களின் நினைவு தானாகவே வருகிறது. ஆகவே பாபாவும் கூட பிரம்மா என்ற அம்மாவிடம் இதையே கேட்டார். பிரம்மா என்ன சொல்லியிருப்பார் என்று உங்களுக்குத் தெரியுமா? உலகமோ குழந்தைகளுடையது தான். பிரம்மா சொன்னார் – அமிர்தவேளையில் முதலில் சமமாக உள்ள குழந்தைகள் நினைவில் வருவார்கள். சிநேகி குழந்தைகள் மற்றும் சமமான குழந்தை கள். சிநேகி குழந்தைகளுக்கு சமமாக ஆவதற்கான இச்சை மற்றும் சங்கல்பம் உள்ளது. ஆனால் இச்சை, சங்கல்பத்தோடு கூடவே சதா சக்திசாலியாக இருப்பதில்லை. அதனால் சமமாக ஆவதில் நம்பர் முன்னால் வருவதற்கு பதிலாகப் பின்னால் சென்று விடுகிறது. அன்பு, ஊக்கம்-உற்சாகத்தில் கொண்டு வருகிறது. ஆனால் பிரச்சனைகள் அன்பு மற்றும் சக்தி ரூபத்தின் சமான் ஸ்திதி ஆவதில் அங்கங்கே பலவீனமாக்கி விடுகிறது. பிரச்சனைகள் சதா சமமாக ஆவதற்கான ஸ்திதியிலிருந்து தூர மாக்கி விடுகிறது. அன்பின் காரணமாக பாபாவை மறக்கவும் முடிவதில்லை. பக்கா பிராமணர்களாகவே இருக் கிறார்கள். பின்தங்கி விடுபவர்களும் இல்லை. அமரர்களாகவும் உள்ளனர். பிரச்ச னைகளைப் பார்த்துத் தான் சிறிது சமயத்திற்கு மனக்கலக்கம் அடைந்து விடு கிறார்கள். ஆகவே நிரந்தர அன்பு மற்றும் சக்தியின் சமான் ஸ்திதியின் அனுபவம் செய்ய முடிவதில்லை.

இச்சமயத்தின் பிரமாணம் ஞானம் நிறைந்தவர், சக்தி நிறைந்தவர், வெற்றி நிறைந்தவரின் ஸ்திதியில் நீண்ட கால அனுபவி ஆகி விட்டிருக்கிறீர்கள். மாயாவின், இயற்கையின் மற்றும் ஆத்மாக்களின் மூலமாக உருவாகியுள்ள பிரச்சினைகளின் அநேக தடவை அனுபவி ஆகி யிருக்கும் ஆத்மாக்கள் நீங்கள். புது விஷயம் இல்லை. திரிகாலதரிசி நீங்கள். பிரச்சினைகளில் முதல்-இடை-கடை மூன்றைப் பற்றியும் அறிவீர்கள். அநேக கல்பங்களின் விஷயத்தையோ விடுங்கள். ஆனால் இந்தக் கல்பத்தின் பிராமண வாழ்க்கையில் கூட புத்தி மூலம் அறிந்து வெற்றியாளர் ஆவதில் அல்லது பிரச்சினைகளைக் கடந்து சென்று அனுபவி ஆவதில் புதியவர் இல்லை நீங்கள். பழையவர் ஆகி விட்டீர்கள். ஒரு வருடத்தினராகவும் இருக்கலாம். ஆனல் இந்த அனுபவத்தால் பழையவர்கள். எதுவும் புதிதல்ல என்ற பாடமும் கூட படித்திருக்கிறீர்கள். எனவே நிகழ்காலத்தின் பிரமாணம் இப்போது பிரச்சினைகளைப் பார்த்து பயப்படுவதில் சமயத்தை வீணாக்கி விடக் கூடாது. சமயத்தை இழப்பதால் நம்பர் பின்னால் போய்விடும்.

ஆக, பிரம்மாவாகிய அம்மா சொன்னார் – ஒன்று, விசேஷ சிநேகி குழந்தை மற்றும் இன்னொன்று சமான் ஆகக் கூடியவர். இரண்டு விதமான குழந்தைகளைப் பார்த்து, இந்த சங்கல்பம் வந்தது – நிகழ்காலத்தின் பிரமாணம் பெரும்பான்மையான குழந்தைகளை இப்போது சமான் ஸ்திதியின் சமீபத்தில் பார்க்க விரும்புகிறோம். சமமான ஸ்திதி உள்ளவர் களும் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் சமநிலையின் அருகில் சென்று சேர்ந்து விட வேண்டும் – இது தான் அமிர்தவேளையில் குழந்தை களைப் பார்த்துப் பார்த்து சமமாக ஆவதற்கான நாள் நினைவு வந்து கொண்டிருந்தது. நீங்கள் ஸ்மிருதி தினத்தை நினைவு செய்து கொண்டிருக்கிறீர்கள் மற்றும் பிரம்மா என்ற அம்மா, சமமாக ஆவதற்கான நாளை நினைவு செய்து கொண்டிருந்தார். இந்த சிரேஷ்ட சங்கல்பத்தை நிறைவேற்ற வேண்டும். அதாவது ஸ்மிருதி தினத்தை சமர்த் (சக்திசாலி) தினமாக ஆக்க வேண்டும். இந்த அன்பின் பிரத்தியட்ச பலனைத் தான் தாய்-தந்தையர் பார்க்க விரும்பு கின்றனர். பாலனையின் அல்லது பாபாவின் வரதானங் களின் சிரேஷ்ட பலன் இது தான். தாய்-தந்தையர்க்கும் கூட பிரத்தியட்ச பலனைக் காட்டக்கூடிய சிரேஷ்ட குழந்தைகள் நீங்கள். இதற்கு முன்பும் கூட சொல்லியிருக்கிறோம் – அதிக பட்ச அன்பின் அடையாளம் இது – அதாவது சிநேகி, சிநேகியின் குறைகளைப் பார்க்க முடிவ தில்லை. எனவே இப்போது தீவிர வேகத்தில் சமமான ஸ்திதிக்கு சமீபமாக வாருங்கள். இது தான் தந்தையின் அன்பு. ஒவ்வொரடியிலும் தந்தையைப் பின்பற்றிக் கொண்டே செல்லுங்கள். பிரம்மா ஒரே ஒரு விசேச ஆத்மா – அவருடைய தாய்-தந்தை என்ற இரண்டு பார்ட்டுகளும் சாகார ரூபத்தில் விதிக்கப்பட்டுள்ளது. எனவே பார்ட்தாரி மகான் ஆத்மாவின் இரட்டை சொரூபம் குழந்தை களுக்கு அவசியம் நினைவுக்கு வருகிறது. ஆனால் பிரம்மா என்ற தாய்-தந்தையின் சிரேஷ்ட ஆசை – அனைவரும் சமமாக ஆக வேண்டும் – இதையும் நினைவு செய்ய வேண்டும். புரிந்ததா? இன்றைய ஸ்மிருதி தினத்தின் சிரேஷ்ட சங்கல்பம் – சமமாக ஆகியே தீர வேண்டும். சங்கல்பத்திலாயினும், பேச்சிலாயினும், சம்மந்தம்- தொடர்பிலாயினும் சமம் என்றால் சமர்த் ஆக வேண்டும். எவ்வளவு தான் பெரிய பிரச்சினையாக இருந்தாலும் எதுவும் புதிதல்ல என்ற இந்த ஸ்மிருதி மூலம் சமர்த் ஆகி விடுவீர்கள். இதில் கவனக்குறை வாக இருந்து விடக் கூடாது. கவனக்குறைவிலும் கூட எதுவும் புதிதல்ல என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அநேக தடவை வெற்றியாளர் ஆவதில் நத்திங் நியூ என்ற விதி மூலம் சதா சித்தியை அடைந்து கொண்டே செல்லுங்கள். நல்லது.

நாலாபுறமும் உள்ள அனைத்து அன்பு மற்றும் சக்தியின் சமமான ஸ்ததியில் நிலைத் திருக்கக் கூடிய, சதா தாய்-தந்தையரின் சிரேஷ்ட ஆசையைப் பூர்த்தி செய்யக் கூடிய, ஆசைகளின் தீபங்களுக்கு, சதா ஒவ்வொரு விதி மூலம் சேவையின் மகத் துவத்தை அறிந்திருக்கக் கூடிய, சதா ஒவ்வோரடியிலும் தந்தையைப் பின்பற்றக்கூடிய, தாய்-தந்தை யருக்கு சதா அன்பு மற்றும் சக்தி மூலம் சமமாக ஆவதற்கான பலனைக் காட்டக் கூடிய, அத்தகைய ஸ்மிருதி சொரூபக் குழந்தைகளுக்கு, சக்திசாலி தினத்தில், சக்திசாலி தந்தையின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.

சேவாகேந்திரங்களுக்காக மூன்றடி நிலம் கொடுக்கக் கூடிய நிமித்த

சகோதர-சகோதரிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் உரையாடல் –

விசேஷ சேவையின் பிரத்தியட்ச பலனாகிய பிராப்தியைப் பார்த்துக் குஷி யடைந்து கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? வருங்காலமோ சேமிப்பாகியுள்ளது. ஆனால் நிகழ்காலமும் கூட சிரேஷ்டமானதாக ஆகி விட்டது. நிகழ்காலத்தின் பிராப்தி என்பது வருங்காலத்தை விடவும் சிரேஷ்டமானது. ஏனென்றால் அப்ராப்தி (பிராப்தி யற்ற நிலை) மற்றும் பிராப்தியின் அனுபவத்தினுடைய ஞானம் இச்சமயம் தான் உள்ளது. அங்கே (சத்யுகத்தில்) அப்ராப்தி என்றால் என்னவென்றே தெரியாது. ஆக, இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் பற்றித் தெரியாது. ஆனால் இங்கே வித்தியாசத்தின் அனுபவம் உள்ளது. ஆகவே இச்சமயத்தின் பிராப்தியினுடைய அனுபவத்திற்கு மகத்துவம் உள்ளது. யாரெல்லாம் சேவைக்கு நிமித்த மாகிறார்களோ, அப்போது உடனடி தானம் மகா புண்ணியம் எனப் பாடப் பட்டுள்ளது. எந்த ஒரு விஷயத்திற்கும் யாராவது நிமித்தமாகிறார் என்றால் உடனடியாக தானம் செய்கிறார் என்பதால் அதற்குப் பிரதிபலனாக மகா புண்ணியத்தின் அனுபூதி ஏற்படுகிறது. அது என்ன? எப்போதெல்லாம் யாராவது வெற்றி சொரூபமாகி சேவை செய்கிறாரோ, அச்சமயம் விசேஷமாகக் குஷியின் அனுபவம் அடைகிறார்கள் இல்லையா? வர்ணனை செய்கிறீர்கள் – இன்று மிக நன்றாக அனுபவம் ஆனது. ஏன் ஆயிற்று? பாபாவின் அறிமுகம் கொடுத்து வெற்றியின் அனுபவம் செய்தீர்கள். யாராவது அறிமுகம் கேட்டு விழித்துக் கொள்கிறார் அல்லது அறிமுகம் கேட்டதும் மாற்றமடைந்து விட்டார் என்றால் அவருடைய பிராப்தியின் பிரபாவம் உங்கள் மீதும் படுகிறது. மனதில் குஷியின் பாடல் ஒலிக்கத் தொடங்குகிறது – இது தான் பிரத்தியட்ச பலன் என்ற பிராப்தி. ஆக, சேவை செய்பவர் என்றால் சதா பிராப்தியின் பலனை அனுபவம் செய்பவர். பழம் (பலன்) சாப்பிடுபவர் என்னவாகிறார்? ஆரோக்கியம் நிறைந்தவராகிறார் இல்லையா? டாக்டர்களும் கூட பலவீனமானவராக யாரையாவது பார்த்தால் என்ன சொல்கிறார்கள்? பழம் சாப்பிடுங்கள். ஏனென்றால் தற்போது மற்ற சக்திக்கான பொருள்கள் – வெண்ணெய் சாப்பிடுங்கள், நெய் சாப்பிடுங்கள் என்றால் அதையோ ஜீரணிக்க முடிவதில்லை. தற்போது சக்திக்காகப் பழங்களைக் கொடுக்கிறார்கள். ஆக, சேவைக்கும் கூட பிரத்தியட்ச பலன் என்ற பழம் கிடைக்கிறது. உடலினால் சேவையும் செய்யுங்கள். குஷி ஏற்படுகிறது. சுத்தம் செய்கிறீர்கள் என்றாலும் அந்த இடம் தூய்மையாக ஜொலிக் கிறது என்றால், உண்மையான மனதோடு செய்கிற காரணத்தால் அப்படி ஜொலிக்கும் இருப்பிடத்தைப் பார்க்கும் போது குஷி ஏற்படுகிறது இல்லையா?

எந்த ஒரு சேவைக்கும் புண்ணியத்தின் பலன் தானாகவே கிடைத்து விடுகிறது. புண்ணியத்தின் பலன் சேமிப்பாகவும் செய்கிறது. பிறகு இப்போதும் கூடக் கிடைக்கிறது. நீங்கள் ஏதாவதொரு காரியம் செய்கிறீர்கள், சேவை செய்கிறீர்கள் என்றாலும் யாராவது உங்களுக்குச் சொல்வார்கள் – மிக நல்ல சேவை செய்கிறீர்கள், களைப்பற்றவராக, எலும்பு தேய சேவை செய்கிறீர்கள். ஆக, இதைக் கேட்டுக் குஷி ஏற்படுகிறது இல்லையா? அப்போது பலன் கிடைத்து விட்டது இல்லையா? வாயினால் சேவை செய்தாலும் சரி, கைகளால் செய்தாலும் சரி, ஆனால் சேவை என்றால் சேவை தான். இதுவும் சேவைக்கு நிமித்தமாகி விட்டீர்கள் என்றாகிறது இல்லையா? மகத்துவம் வைப்பதன் மூலம் மகான் தன்மை அடைந்து விடுகிறீர்கள். ஆக, இது போல் இனி மேலும் கூட சேவையின் மகத்துவத்தை அறிந்து, சதா ஏதேனுமொரு சேவையில் பிஸியாக இருங்கள். மாணவர்கள் யாருமே கிடைக்க வில்லை என்றால் என்ன சேவை செய்வேன், கண்காட்சி எதுவும் நடைபெற வில்லை, சொற்பொழிவு எதுவும் நடக்க வில்லை என்றால் என்ன சேவை செய்வேன் – என்று நினைக்கிறீர்கள். சேவைக்கான களம் என்பது மிகப்பெரியது. எனக்கு சேவையே கிடைக்கவில்லை என்று யாரும் சொல்ல முடியாது. வாயுமண்டலத்தை உருவாக்குவதற்கான சேவை இன்னும் எவ்வளவு உள்ளது! இயற்கையையும் மாற்றியமைப்பவர்கள் நீங்கள். ஆக, இயற்கையின் மாற்றம் எப்படி நிகழும்? சொற்பொழிவு செய்வோமா என்ன? உள்ளுணர்வு மூலம் வாயுமண்டலம் உருவாகும். வாயுமண்டலத்தை உருவாக்குவது என்றால் இயற்கையின் மாற்றம் ஏற்படுவதாகும். இது எவ்வளவு பெரிய சேவை! இப்போது நடந்திருக்கிறதா? இப்போதோ இயற்கை பரீட்சை வைத்து நம்மை சோதித்துக் கொண்டிருக்கிறது. ஆக, ஒவ்வொரு நொடியும் சேவைக்கான மிகப்பெரிய களம் இருக்கிறது. எனக்கு சேவைக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று யாரும் சொல்ல முடியாது. நீங்கள் நோய் வாய்ப் பட்டிருந்தாலும் கூட அப்போதும் சேவை செய்ய முடியும். யாராயிருந்தாலும் சரி, படிக்காதவராக இருந்தாலும், படித்தவராக இருந்தாலும், எந்த விதமான ஆத்மாவாக இருந்தாலும், அனைவருக்குமே சேவைக் கான சாதனம் மிகப் பெரிதாக உள்ளது. சேவைக்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது கிடையாது., கிடைத்திருக்கிறது.

ஆல்ரவுண்ட் சேவாதாரி ஆக வேண்டும். கர்மனா சேவைக்கும் கூட 100 மார்க் உள்ளது. பேச்சும் எண்ணமும் சரியாக உள்ளது, ஆனால் கர்மனாவின் பக்கம் ஈடுபாடு அல்லது ஆர்வம் இல்லையென்றால் 100 மார்க் போய் விட்டது. ஆல்ரவுண்ட் சேவாதாரி என்றால் அனைத்து விதமான சேவைகளின் மூலம் முழு மதிப்பெண் பெறுபவர். அவர் தாம் ஆல்ரவுண்ட் சேவாதாரி எனப்படுவார். ஆக, அந்த மாதிரி இருக்கிறீர்களா? பாருங்கள், ஆரம்பத்தில் குழந்தைகளின் பட்டி நடைபெற்ற போது கர்மனாவின் பாடம் எவ்வளவு பக்காவாக ஆக்கப்பட்டது! தோட்டக்காரராகவும் ஆக்கினார் என்றால் செருப்புத் தைப்பவராகவும் ஆக்கினார். பாத்திரம் தேய்ப்பவராகவும் ஆக்கினார் என்றால் சொற்பொழிவாற்று பவராகவும் ஆக்கினார். ஏனென்றால் இதற்கான மதிப்பெண்களும் இல்லாமல் போய்விடக் கூடாது. அங்கேயும் லௌகிகப் படிப்பில் நீங்கள் ஏதாவது லேசான பாடத்தில் ஃபெயிலானால்- விசேஷமான பாடம் இல்லை, நம்பர் மூன்று-நான்கு பாடங்கள் உள்ளன. ஆனால் அதிலும் கூட ஃபெயிலாகி விட்டால் பாஸ் வித் ஆனர் ஆக மாட்டீர்கள். மொத்தத் தில் மதிப்பெண்களோ குறைந்து விட்டன இல்லையா? அது போல் அனைத்துப் பாடங் களையும் சோதித்துப் பாருங்கள். எல்லாப் பாடங்களிலும் மதிப்பெண் பெற்றிருக்கிறேனா? எப்படி இவர்கள் (யக்ஞத்திற்காக வீடு-இடம் தருவதற்கு) நிமித்த மாகியிருக்கிறார்கள். இந்த சேவை செய்தார்கள், இதற்கான புண்ணியம் கிடைத்தது என்றால் மார்க் கிடைக்கும். ஆனால் முழு மதிப்பெண் பெற்றோமா? இல்லையா? என்பதை சோதித்துப் பாருங்கள். ஏதாவதொரு கர்மனா சேவை செய்ய வேண்டியதும் கூட அவசியமாகும். ஏனென்றால் கர்மனாவுக்கும் கூட 100 மதிப்பெண்கள் உண்டு. குறைவாக இல்லை. இங்கே அனைத்துப் பாடங்களுக்கும் 100 மதிப்பெண்கள் உண்டு. அங்கோ ஓவியத்தில் கொஞ்சம் மதிப்பெண் இருக்கும். கணிதப் பாடத்தில் அதிக மதிப்பெண் இருக்கும். இங்கே அனைத்துப் பாடங்களுமே மகத்துவம் வாய்ந்தவை. ஆகவே மனம்,, வார்த்தையில், (வாய்மொழி சேவை) மார்க் எடுத்தோம், உடல் மூலம் சேவையிலும் மதிப்பெண் எடுக்காமல் இருந்து விட்டு, நான் பெரிய மகாவீர் என்று நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. அனைத்துப் பாடங்களிலும் மார்க் பெற வேண்டும். அத்தகையவர் தாம் சேவாதாரி எனப்படுவார். ஆக, இது எந்த மாதிரி குரூப்? ஆல்ரவுண்ட் சேவாதாரியா அல்லது இருப்பிடம் தருவதில் மட்டும் சேவா தாரியா? பயனுள்ளதாக ஆக்குவதில் நீங்கள் நன்றாகவே செய்திருக்கிறீர்கள். எவ்வளவு பயனுள்ளதாக ஆக்குகிறீர்களோ, அந்த அளவுக்கு மாலிக் ஆகிறீர்கள். சமயத்திற்கு முன்பாகவே பயனுள்ளதாக ஆக்க வேண்டும் – இது புத்திசாலி ஆவதற்கான அடையாளம். ஆக, புத்திசாலித்தனமான காரியம் செய்திருக்கிறீர்கள். பாப்தாதாவும் தைரியம் வைக்கக்கூடிய குழந்தைகளைப் பார்த்துக் குஷியடைகிறார். நல்லது.

வரதானம்:-

எந்தக் குழந்தைகள் ஒரு சர்வசக்திவான் தந்தைக்கு அன்பானவர்களாக இருக்கிறார் களோ, அவர்கள் அனைத்து ஆத்மாக்களுக்கும் தானாகவே அன்பானவர்களாக ஆகிவிடு வார்கள். இந்த ஆழமான இரகசியத்தை யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் இராஜ்யுக்த், யோகயுக்த் அல்லது தெய்வீக குணங்களினால் யுக்தியுக்த் ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு இரகசியங்களை புரிந்து கொண்ட ஆத்மா அனைத்து ஆத்மாக்களையும் எளிதாகவே திருப்திப்படுத்தி விடுவார்கள். யார் இந்த இரகசியத்தை அறிந்து கொள்ளவில்லையோ அவர்கள் சில நேரம் பிற ஆத்மாக்களை கோபப்படுத்துவார்கள் மற்றும் சில நேரம் சுயம் கோபத்துடன் இருப்பார்கள். ஆகையால் சதா அன்பின் இரகசியத்தை அறிந்து கொண்டு இராஜ்யுக்த் ஆகுங்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top