13 December 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

13 December 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

12 December 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே ! சிறந்தவர்களாக ஆக வேண்டும் என்றால் ஸ்ரீமத் படி முழுமையாக நடக்கவும். ஸ்ரீமத் படி நடக்காமல் இருப்பதே எல்லாவற்றையும்

கேள்வி: -

எந்த குழந்தைகளின் குரல் அடைத்துப் போய்விடுகிறது, புத்தியிலிருந்து ஞானம் வெளியேறி விடுகிறது?

பதில்:-

யார் போக போக (அபவித்திரமாக) தூய்மையிழந்து விடுகிறார்களோ, படிப்பை விட்டு விட்டு தந்தையை கைவிட்டு விடுகிறார்களோ, அவர்களுடைய புத்தியிலிருந்து ஞானம் வெளியேறி விடுகின்றது. நிர்விகாரி ஆகாத வரையும் அவினாஷி ஞானம் புத்தியில் பதிய முடியாது. புத்தியின் பூட்டு திறக்க முடியாது. புதிதமாக (தூய்மையற்றவர்களாக) ஆகுபவர்களின் உணவு பழக்கங்கள் கூட ஆசுத்தமாக ஆகி விடுகிறது. அவர்கள் மாயாவி மனிதர்களுடன் போய் சேர்ந்து கொண்டு விடுகிறார்கள். பிறகு குரலே அடைத்து போய் விடுகிறது. யாருக்குமே அவர்களால் ஞானத்தை கூற முடியாது.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

உன்னை அடைந்து நாங்கள் ….

ஓம் சாந்தி. இந்த பாடலை யார் பாடிக் கொண்டிருக்கிறார்கள், யார் தந்தையிடமிருந்து மூன்று உலகங்களின் அரசாட்சியை பெற்று விட்டிருக்கிறார்கள் உங்களிடமிருந்து என்ன வெல்லாம் கிடைத்துள்ளதோ அவற்றை யாருமே அகற்ற முடியாது. உங்களை யாருமே அகற்ற முடியாது. அதாவது காலன் உங்கள் உயிரை எடுக்க முடியாது. உங்களது இராஜ்யத் தையும் யாரும் எடுக்க முடியாது. நாம் அந்த எஜமானரிடமிருந்து ஆஸ்தி பெற்று கொண்டி ருக்கிறோம் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். தந்தைக்கு எஜமானன் (மாலிக்) என்று கூட கூறுகிறார்கள். ஆனால் அந்த எஜமானரிடமிருந்து என்ன கிடைக்கிறது என்பது பற்றி எதுவுமே தெரியாது. எஜமானரை நாம் எப்படி நினைவு செய்வது? அவரது பெயர் ரூபம் என்ன? எதுவுமே தெரியாது. எஜமானர் அல்லது அதிபதியோ முழு சிருஷ்டியின் அதிபதி ஆவார் அல்லவா? அவர் படைப்பு கர்த்தா ஆவார். நாம் படைப்பு ஆவோம். பாபா வாரிசுகளை அல்லது குழந்தைகளை படைக்கிறார். பிறகு அவர்களை தனது எஜமானராக ஆக்கி விடுகிறார். குழந்தைகள் பிறகு தந்தையின் எஜமானர் ஆகி விடுகின்றனர். என்னுடைய தந்தையிடம் என்ன சொத்து இருக்கிறதோ அதற்கு நான் எஜமானன் ஆவேன் என்று குழந்தைகள் கூறுகிறார்கள். குழந்தைகளின் சொத்திற்கு நான் எஜமானன் ஆவேன் என்று தந்தையோ கூற மாட்டார். இது மிகவுமே புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். அறிவுள்ள குழந்தைகளே புரிந்து கொள்ள முடியும். புத்தி தூய்மையாக இல்லை என்றால் அதில் இரத்தினங்கள் நிலைத்திருக்க முடியாது. (தேஹ அபிமானி) ஆத்ம உணர்வுடையவர் களாக ஆகும் பொழுதே இரத்தினங்கள் நிலைத்திருக்க முடியும். ஆத்ம உணர்வுடையவராக ஆகி இருக்க வேண்டும். மேலும் தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். அந்த தந்தையை நினைவு செய்ய வேண்டும். எப்படி லௌகிக தந்தை குழந்தைகளை உற்பத்தி செய்கிறார், பின் குழந்தைகள் எஜமானர் ஆகி விடுகிறார்கள். என்னுடைய தந்தை என்று குழந்தைகள் கூறுவார்கள். என்னுடைய குழந்தைகள் என்று தந்தை கூறுவார். ஆனால் குழந்தை களிடம் ஒன்றுமே இல்லை. அவர்களுக்கோ தந்தையின் சொத்து கிடைக்கிறது. குழந்தைகளின் சொத்து என்னுடையது என்று தந்தை ஒரு பொழுதும் கூற மாட்டார். குழந்தைகள் என்னுடைய சொத்திற்கு எஜமானர் ஆவார்கள் என்று தந்தை புரிந்திருப்பார். இது மிகவுமே தாரணை செய்வதற் குரிய விஷயங்கள் ஆகும். தாரணை ஆவதில்லை ஏனெனில் குறைபாடுகள் இருக்கின்றன. எனக்குள் நிறைய குறைபாடுகள் உள்ளன என்று உணர வேண்டும். முதல் நம்பர் குறையாவது – ஸ்ரீமத்படி நடப்பதில்லை. ஸ்ரீமத் மூலமாகத் தான் சிறந்தவர் ஆக வேண்டும். ஸ்ரீமத் இராஜயோகத்தை கற்பிக்கிறது. ஸ்ரீ என்றால் நிராகார பகவான் கூறுகிறார். எனவே, ஞானக்கடல் பதித பாவன் பரமபிதா பரமாத்மா உடன் உங்களுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது என்று நாங்கள் கேள்வி கேட்கிறோம். இதை மிகவும் பெரிய பெரிய பலகையில் எழுத வேண்டும். பரமாத்மா சொர்க்கத்தின் படைப்புக் கர்த்தா ஆவார். எனவே, யாருக்கு பரமாத்மாவிடம் சம்பந்தம் இருக்கிறதோ அவர்கள் கூட அவசியம் சொர்க்கத்தின் அதிபதியாக ஆகியே விடுவார்கள்.

தந்தை வந்து குழந்தைகளுக்கு சலாம் வணங்குகிறார். சலாம் மாலேகம் குழந்தைகளே மாலேகம் சலாம் என்று குழந்தைகள் கூறுகிறார்கள். நானோ பிரமாண்டத்திற்கு மட்டுமே அதிபதி ஆவேன். நீங்கள் பிராமாண்டம் மற்றும் உலகம் இரண்டிற்குமே அதிபதி ஆகிறீர்கள். எனவே பாபா குழந்தைகளுக்கு டபிள் சலாம் இரண்டு முறை வணங்குகிறார். ஒரே ஒரு எல்லையில்லாத தந்தை உங்களுக்கு எவ்வளவு பலன் எதிர்பாராத வேலை செய்கிறார். லௌகிக தந்தை பலன் எதிர்பார்த்து வேலை செய்வதில்லை. நான் வானப்பிரஸ்த நிலைக்கு செல்லும் பொழுது குழந்தைகள் எனக்கு சேவை செய்வார்கள் என்ற ஆசை தந்தைக்கு இருக்கும். உண்மையில் குழந்தைகள் தந்தைக்கு சேவை செய்து கொண்டிருந்தார்கள் – இந்த நியமம் இருந்தது. தற்காலத்திலோ பைசா எல்லாம் எடுத்து விடுவார்கள். குழந்தை களாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள் – நமக்கு இப்பேர்ப்பட்ட அரசாட்சி தந்தையிடமிருந்து கிடைக்கிறது. இலட்சுமி நாராயணருக்காக கூட நீங்கள் இவ்வாறு எழுதுங்கள் – இவர்களை அறிந்துள்ளீர்களா? இவர்களுக்கு இந்த சொர்க்கத்தின் அரசாட்சியை யார் கொடுத்தார்? அவசியம் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவர் தான் கொடுப்பார். பழைய உலகமாக ஆகும் பொழுதுதானே புதிய உலகத்தை ஸ்தாபனை செய்வார். எனவே இலட்சுமி நாராயணர் ஸ்ரீமத்படி நடந்ததன் மூலமாக இதை ஆஸ்தியை பெற்றார்கள். ஸ்ரீமத் இராஜ யோகம் மற்றும் எளிய ஞானத்தை கற்பிக்கிறது. யாருக்கு புரிய வைக்கிறாரோ அவர்கள் இராஜ ஆகி விடுகிறார்கள். முதல் நம்பரில் இருப்பவர் ஸ்ரீகிருஷ்ணர் அவர் அந்த மாதிரி என்ன கர்மங்கள் செய்ததன் காரணமாக தனது தாய் தந்தையரை விடவும் அதிகமான பதவியை அடைந்தார்? யாரிடம் கிருஷ்ணருக்கு ஜென்மம் ஏற்பட்டதோ அவர்கள் எங்கே மகாராஜா மகாராணியாக இருந்தார்கள்? நிர்விகாரியாக ஆகி இல்லாதவரையும் அவினாஷி ஞானம் புத்தியில் பதிய முடியாது. பவித்திரமாக இருக்கும் பொழுதுதான் புத்தியின் பூட்டு திறக்கிறது. தூய்மையற்றவர்களாக ஆகும் பொழுது எல்லாமே புத்தியிலிருந்து வெளியேறி விடும். நிறைய குழந்தைகள் கைவிட்டு விடுகிறார்கள். படிப்பையே விட்டு விடுகிறார்கள். அவர்கள் ஒரு பொழுதும் பிறகு எவருக்கும் ஞானத்தை கூற முடியாது. பதிதமாக – தூய்மையற்றவர்களாக ஆகி விடுகிறார்கள். உணவு கூட ஆசுத்தமானவற்றை உட்கொள் கிறார்கள். மாயாவி மனிதர்களுடன் போய் சேர்ந்து கொள்கிறார்கள். அவர்களுடைய குரல் அடைத்து போய் விடுகிறது. இந்த விஷயங்கள் கூட சாஸ்திரங்களில் இருக்கிறது. பிருந்தா வனத்தில் நடனம் ஆகியவை நடந்து கொண்டிருந்தது, யாருக்காவது கூறினீர்கள் என்றால் குரல் அடைத்து போய்விடும் என்று தடை விதித்து கொண்டிருந்தார்கள். உண்மையில் இது ஞானத்தின் விஷயங்கள் ஆகும். ஒரு வேளை கைவிட்டு போய்விட்டார்கள், போய் நிந்தனை செய்கிறார்கள் என்றால் குரல் அடைத்து போய் விடும். சத்குருவை நிந்திப்பவர்கள் பதவி அடைய முடியாது என்று கூறுகிறார்கள் அல்லவா! சிருஷ்டி (பதிதமாக) தூய்மை யற்றதாக, பழையதாக ஆகி விடும் பொழுது நான் வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். மனிதர்கள் தமோ பிரதானமாக ஆகவே வேண்டியுள்ளது. என்ன காரியம் செய்வார்களோ, அவற்றை தவறாகத் தான் செய்வார்கள். ஏனெனில் தவறான வழி கிடைத்து கொண்டிருக் கிறது. ஸ்ரீமத் இல்லை தவறான வழி பதிதமாக இழந்தவர்களாக ஆக்கி விடுகிறது. இதற்கு முன்பு ப்ரஷ்ட்டாசாரி இழிந்தவர் என்ற வார்த்தையே இருக்கவில்லை. சன்னியாசிகள் பாவனமாக ஆக வேண்டும் என்பதற்காக விகாரங்களை துறக்கிறார்கள்.

எனவே பரமபிதா பரமாத்மா உடன் உங்களுடைய சம்பந்தம் என்ன என்ற இந்த விஷயத்தை முதன் முதலில் புரிய வைக்க வேண்டும். எல்லாரும் பகவானை நினைவு செய்கிறார்கள். எல்லா பக்தர்களும் எனக்கு பிரியமானவர்கள் என்று பகவான் கூறுகிறார். ஏனெனில் நான் தான் அவர்கள் அனைவருக்கும் கதி சத்கதி வழங்க வேண்டி உள்ளது. பகவான் வந்து பக்தர்களுக்கு பக்தியின் பலன் கொடுக்கிறார். எனவே பக்தர்கள் பகவானுக்கு பிரியமானவர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் துர்க்கதியை அடைந்துள்ளீர்கள், இப்பொழுது நான் சத்கதி அளிக்க வந்துள்ளேன் என்று பாபா புரிய வைக்கிறார். பக்திக்கு பின்னால் அவசியம் பகவான் வர வேண்டி உள்ளது. உங்களுக்காக தான் நான் முதலில் பக்தியின் பலனை கொடுக்க வேண்டி உள்ளது. மற்றவர்களோ ஆரம்பத்திலிருந்தே என்னுடைய பக்தர்களாக இல்லை. அவர்களோ அனேகர்களுக்கு பக்தி செய்கிறார்கள். நீங்களோ என்னுடைய பிரியமான குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் அதிபதியாக இருந்தீர்கள் பிறகு மாயை இராவணன் உங்கள் மீது வெற்றி அடைந்து விட்டான். மேலும் பிறகு பக்தி ஆரம்பமாகிவிட்டது. இது கூட நாடகம் ஆகும். நானோ அனைவருக்கும் சத்கதி அளிக்கிறேன். இப்பொழுது நீங்கள் என்னுடைய வழிப்படி நடக் கிறீர்கள் அல்லவா. வழியை காட்டுவதற்காக அவசியம் நான் வரவேண்டி உள்ளது. இல்லை என்றால் எப்படி சத்கதிக்கான வழியை நான் கூற முடியும்? நான் இந்த முதல் நம்பர் பக்தரின் உடலில் வருகிறேன். இவர் நந்தி வாகனம் ஆவார். சிவனின் கோவிலில் முன்னால் நந்தி வாகனம் வைக்கிறார்கள். இப்பொழுது சிந்தித்து பாருங்கள் – பரமபிதா பரமாத்மா எருதுவின் உடலிலோ வர மாட்டார். இராஜயோகத்தை எருதுவின் மூலமாக எப்படி கற்பிப் பேன்? ஞானக் கடல் எருமை மாட்டிற்குள் இறங்குவாரா என்ன? இப்பொழுது நீங்கள் ஞானவான் ஆகிறீர்கள். ஸ்ரீமத்படி நடந்து இலட்சுமி நாராயணர் சூரிய வம்சத்தின் இராஜா இராணி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த இராஜதானியை யாருமே நம்மிடமிருந்து பறிக்க முடியாது. எந்த ஒரு புயலும் தாக்க முடியாது. நாம் அமரபுரியின் அதிபதி ஆகிறோம். இது மரண உலகம் ஆகும். அமரநாத் பாபா தான் காலன் மீது வெற்றி அடையுமாறு செய்விக்க கூடியவர் ஆவார். அவரது பாகம் தனி ஆகும். நீங்கள் அனைவரும் பார்வதி கள் ஆவீர்கள். நான் அமர்நாத் ஆவேன். நான் ஒரு பொழுதும் பிறப்பு இறப்பில் வருவதில்லை. அமரபுரி சொர்க்கத்திற்கு அதிபதியாக உங்களை ஆக்குகிறேன். பாரதவாசி கணக்கு வைகுண்டம் மிகவும் பிரியமானதாக படுகிறது. இன்னார் வைகுண்டவாசி ஆகி விட்டார் என்று கூறுவார் கள். மிகவுமே வாயை இனிக்க செய்து விட்டார்கள். இப்பொழுது வைகுண்டம் உண்மையில் சத்யுகத்தில் தான் இருக்கும். சத்யுகமாக இருக்கும் பொழுது புனர் ஜென்மம் கூட சத்யுகத்தில் எடுப்பார்கள். பிறகு திரேதாவில் வரும் பொழுது புனர் ஜென்மம் கூட திரேதாவில் எடுக் கிறார்கள். பிறகு துவாபாரத்தில் வரும் பொழுது புனர் ஜென்மம் கூட துவாபாரத்தில் எடுப் பார்கள். ஆனால் கலியுகத்தில் இறப்பவர்கள் சத்யுகத்தில் புனர் ஜென்மம் எடுக்க முடியுமா என்ன? சொர்க்கத்தில் ஜென்மம் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றால் இது படிப்பை பொறுத்தது. நான் உங்களை சிருஷ்டிக்க அதிபதி ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகிறார் நான் பலன் எதிர்பாராதவன் ஆவேன். நான் உலகிற்கு அதிபதி ஆவது இல்லை. நீங்கள் சொர்க்கத்திற்கு செல்லும் பொழுது நான் ஓய்வெடுப்பவன் ஆகி விடுகிறேன். நான் சக்கரத்தில் வருவது இல்லை. இந்த ஈசுவரிய ஜென்மத்திற்கு பிறகு நீங்கள் தெய்வீக மடியில் ஜென்மம் எடுப்பீர்கள். இப்பொழுது நீங்கள் ஜென்ம ஜென்மாந்திரமாக ஆசுரிய மடியில் ஜென்மம் எடுக்கிறீர்கள். ப்ரஷ்ட்டாசாரி – (இழிந்தவர்களாக) ஆகி உள்ளீர்கள். சத்யுகத்தில் எல்லோரும் சிரேஷ்டாச்சாரி – (சிறந்தவர்களாக) இருப்பார்கள். இப்பொழுது நீங்கள் ஸ்ரீமத் மூலம் சிரேஷ்டாச்சாரி ஆகிக் கொண்டு இருக்கிறீர்கள். அங்கு விஷம் (விகாரம்) இருப்பதில்லை. இங்கு சந்நியாசிகள் இருக்கிறார்கள் என்றாலும் கூட ஜென்மமோ விகாரங் களால் எடுக்கிறார்கள் அல்லவா? சத்யுகத்தில் விகாரங்களால் ஜென்மம் ஏற்படுவதில்லை. இல்லை என்றால் சம்பூர்ண நிர்விகாரி என்று கூற முடியாது. அங்கு மாயை இருப்பதில்லை. ஆனால் இந்த விஷயங்கள் கூட ஒருவரு டைய புத்தியில் பதிந்தால் தானே.

இப்பொழுது குழந்தைகளே நீங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும் பிறகு சொர்க்கத்தில் வந்து ஆட்சி புரிய வேண்டும் என்று பாபா கூறுகிறார். ஆத்மாக்கள் பாகம் உற்று நடிக்க பரந்தாமத்திலிருந்து வருகிறார்கள். பிறகு பதித பாவனர் வந்து (லிபரேட்) விடுவிக்காத வரை ஒருவர் கூட திரும்பி போக முடியாது. இன்னார் நிர்வாண நிலையை அடைந்தனர் என்று பொய்க் கூறிக் கொண்டே இருக்கிறார்கள். தந்தை வந்து எல்லா விஷயங்களையும் நல்ல முறையில் புரிய வைக்கிறார். பரமபிதா பரமாத்மா உடன் உங்கள் சம்பந்தம் என்ன என்பதை முதன் முதலில் புரிய வையுங்கள். மற்றவர்கள் யாருக்குமே இது பேல் கேள்வி கேட்கக் கூட தெரியாது. நீங்கள் கல்ப கல்பமாக கல்புத்தி யிலிருந்து தங்க புத்திபின் தங்க புத்தியிலிருந்து கல்புத்தியாக ஆகிக் கொண்டே வந்துள்ளீர்கள். இதுவோ நல்ல முறையில் புரிய வைக்கப்படுகிறது. ஆனால் நம்பிக்கை ஏற்பட்டால் தானே மிகச் சரியாக நாம் சிவபாபாவின் குழந்தைகள் ஆவோம். நான் உங்களை சுகதாமம் அழைத்து செல்ல வந்துள்ளேன், போகலாமா? என்று பாபா கூறுகிறார். அங்கு இந்த விஷம் (விகாரம்) கிடைக்காது. முக்கியமான விஷயமே தூய்மையினுடையது ஆகும். யார் முந்தைய கலபத்தில் இருந்தார்களோ அவர்களே இப்பொழுதும் தூய்மையாக இருக்க முடியும். எப்பொழுது இந்த பந்தனம் அனுபகமோ, பாபா தெரியவில்லையே என்று நிறைய பெண் குழந்தைகள் எழுது கிறார்கள். யுக்தி (வழிமுறை) கூறுங்கள். அந்த நேரம் வரும் பொழுது பந்தனம் அறுபட்டு விடும் குழந்தைகளே என்று பாபா கூறுகிறார். பாபா என்ன செய்ய முடியும்? ஒரு பந்தனம் வேண்டுமானால் விடுபட்டு விடும் பிறகு குழந்தைகள் ஆகியோர் மீது மோகம் ஏற்பட்டு விடுகிறது. இவை அனைத்திலிருந்தும் புத்தியை நீக்குவதில் மிகவுமே உழைப்பு பிடிக்கிறது. ஒரு சிலரோ இன்னுமே அதிகமான மோகத்தில் வந்து விடுகிறார்கள். நிறைய பேர் மோகத்தில் தொங்குகிறார்கள். நீங்கள் ஒரு தந்தையிடம் மோகம் கொள்ளுங்கள், அப்பொழுது தான் தாரணை ஆகும் என்று பாபா கூறுகியார். ஒரு சிலரால் ஞானம் எடுக்க முடியவில்லை என்றால் ஓடிப் போய் விடுகிறார்கள். பிறகு அவப்பெயர் ஏற்பட்டு விடுகிறது. நாடகத்தில் முந்தைய கல்பத்திலும் இவ்வாறு நடந்திருந்தது. எந்த விநாடி கடந்து விட்டதோ அது டிராமா. அம்மா இறந்தாலும் ஹலுவா சாப்பிடுங்கள் மனைவி இறந்தாலும் ஹலுவா சாப்பிடுங்கள்……. பக்குவப்படாதவர்களுக்கு சிறிது உதறல் ஏற்படுகிறது. நிறைய சன்னியாசி கள் கூட இவ்வாறு இருக்கிறார்கள். நிலைக்க முடியவில்லை என்றரி இல்லறத் திற்கு சென்று விடுகிறார்கள். நடத்தையே அவ்வாறு இருக்கும். இங்கோ ஒரே ஒரு முக்கிய விஷயம் ஆகும். நாம் கூட அந்த தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற்று கொண்டிருக்கிறோம். நீங்கள் கூட அவரை தந்தை என்று புரிந்துள்ளீர்கள். அன்று சொர்க்கத்தின் ஆஸ்தி பெற்று கொண்டு விடுங்கள். ஓரே ஒரு விஷயம் தான் – ஒரு நொடியில் ஜீவன் முக்தி கடைசியில் சிறிதளவு புரியவைத்தாலும் கூட மனிதர்கள் சட்டென்று புரிந்து கொண்டு விடுவார்கள். அநேக வழிகள் உள்ளன அதனால் பாரதம் இழிந்ததாக ஆகி விட்டுள்ளது. பிறகு ஒரே ஒருவரின் வழி மூலமாக அரை கல்பத்திற்கு பாரதம் சிறந்ததாக ஆகி விடுகிறது. அவசியம் தந்தைதான் சிறந்ததாக ஆக்குவார். அனைவரையும் கரையை கடக்க செய்பவர் ஒரே ஒரு தந்தை ஆவார். எனவே அவசியம் மூழ்கடிப்பவர்களும் யாராவது இருக்கக் கூடும். விகாரங்களை சன்னியாசம் செய்யவே வேண்டி இருக்கும். அப்பொழுதுதான் நீங்கள் தூய்மையான உலகிற்கும் அதிபதி ஆக முடியும் என்று தந்தையோ அனைவருக்கும் கூறுகிறார். பாபா ஆஸ்தி அளித்துக் கொண்டிருக்கிறார். ஏராளமான பிரம்மாகுமாரிகள் இருக்கிறார்கள் நீங்களும் பி.கே. ஆவீர்கள். ஆஸ்தி ஆன்மீக தந்தையிடமிருந்து கிடைக் கிறது. எவ்வளவு சுலபமாகும். ஆனால் ஒரு சிலர் சொல்வது மட்டும், செய்வது இல்லை. அப்பொழுது யாருக்குமே அம்பு போல பதிவதில்லை. சொல்வதால் மற்றவருக்கு நன்மை கூட ஏற்பட்டு விடலாம். ஆனால் சுயம் செய்யவில்லை என்றால் விழுந்து விடுவார். இப்படி கூட நிறைய பேர் இருக்கிறார்கள். பாபா குழந்தைகளுக்கு முழுமையான ஆஸ்தியை (உயில்) ஒப்படைத்து விடுகிறார். இப்பொழுது நீங்கள் தகுதி உடையவர்களாக ஆகி சொர்க்கத்திற்கு அதிபதி ஆகுங்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகு காலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக தந்தையின் ஆன்மீக குழந்தைகளுக்கு நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. சிரேஷ்டாச்சாரில் (சிறந்தவர்) ஆக வேண்டும் என்றால் தங்களுடைய அனைத்து குறைபாடுகளையும் நீக்கி எப்பொழுதம் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். புத்தியில் ஞான இரத்தினங்களை ஆத்ம உணர்வுடையவராக ஆகி தாரணை செய்ய வேண்டும்.

2. தங்களது சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும். ஞானத்தை தாரணை செய்வதற்காக அனைவரிடமிருந்தும் மோகத்தை நீக்கி ஒரு தந்தையிடம் மட்டுமே மோகம் கொள்ள வேண்டும்.

வரதானம்:-

எப்படி தந்தை மீத சினேகம் உடையவராக ஆகி உள்ளீர்களோ அதே போல தந்தையை துணையாக ஆக்கிக் கொள்வீர்கள் என்றால் மாயை தூரத்திலிருந்தே மூர்ச்சை அடைந்து விடும். உன்னிடமே உண்பேன் உன்னிடமே அமருவேன் உன்னிடமே ஆத்மாவை மகிழ்விப்பேன்……. என்று ஆரம்பத்தில் நீங்கள் எடுத்துக் கொண்ட வாக்குறுதி யின்படி உங்கள் முழு தினசரியில் ஒவ்வொரு செயலையும் தந்தையுடன் கூட செய்தீர்கள் என்றால் மாயை தொந்தரவு கொடுக்காது. மாயையின் அழிவு ஏற்பட்டு விடும். எனவே துணைவனை எப்பொழுதும் கூட வைத்திருங்கள். துணையின் சக்தி மூலமாக அல்லது சந்திப்பில் மூழ்கி இருப்பதால் மாயை வென்றவர்கள், உலகை வென்றவர்கள் ஆகி விடுங்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top