12 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

January 11, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! தந்தையிடமிருந்து முழு ஆஸ்தியையும் பெற வேண்டும் என்றால், விகாரங்களை அவசியம் தானம் கொடுக்க வேண்டும். தேஹி அபிமானியாக (ஆத்ம உணர்வுடையவராக) வேண்டும். மம்மா பாபா என்று கூறுகிறீர்கள் என்றால் தகுதியுடையவர் ஆகுங்கள்.

கேள்வி: -

ஆஸ்திகராக ஆகி இருக்கும் குழந்தைகள் கூட எந்த ஒரு விஷயத்தின் காரணமாக நாஸ்திகராக ஆகி விடுகிறார்கள்?

பதில்:-

தேக அபிமானத்தின் காரணமாக ! நாங்கள் எல்லாமே அறிந்திருக்கிறோம் என்று கூறு கிறார்கள். பழைய நடத்தையை விடுவதே இல்லை. ஞானத்தின் குண்டு (மனதில்) பாய்ந்த பின்னரும் மாயாவின் குண்டடியை வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். நான் ஆத்மா ஆவேன். தேஹி அபிமானியாக வேண்டும். இந்த விஷயத்தை மறந்து விடும் பொழுது ஆஸ்தி காராக ஆன பிறகும் கூட நாஸ்திகராகி விடுகிறார்கள். ஈசுவரிய மடியிலிருந்து இறந்து விடு கிறார்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

இன்று இல்லை என்னில் நாளை.. ..

ஓம் சாந்தி. அதுவும் கடிகாரமாகும். இது எல்லையில்லாத கடிகாரமாகும். அதில் கூட கால், அரைக் மற்றும் முழுவதும் காண்பிக்கப்பட்டுள்ளன. இதில் கூட அவ்வாறே ஆகும். 4 பாகங்கள் உள்ளன. 15 – 15 நிமிடங்கள் கிடைத்துள்ளன. அதே போல இது பிறகு ஒன்றிலிருந்து ஆரம்பம் செய்கிறோம். இதில் அரைகல்பம் பகலாகும். அரைக் கல்பம் இரவாகும். எப்படி வரை படத்தில் பார்க்கிறீர்கள் – வட துருவத்தில் 6 மாதம் இரவு இருக்கும். எனவே அவசியம் தென் துருவத்தில் 6 மாதம் பகல் இருக்கும். இங்கு கூட பிரம்மாவின் பகல் அரைக்கல்பம் மற்றும் இரவு அரைக்கல்பம் ஆகும். இது நாடகத்தின் சக்கரமாகும். இதற்கு கல்ப விருட்சம் என்று கூறப்படுகிறது. இதன் ஆயுள் எவ்வளவு என்பது உலகத்தார் அறியாமல் இருக்கிறார்கள். பெயரே கல்ப விருட்சம் என்பதாகும். இவ்வளவு ஆயுள் உடைய பெரிய விருட்சம் எதுவும் இல்லை. எனவே இது ஆலமரத்திற்கு ஒப்பிடப்படுகிறது. அதனுடைய அஸ்திவாரம் அழுகி விட்டுள்ளது. ஆனால் விருட்சம் மட்டும் நிற்கிறது. எனவே ஒரு கால் உடைந்து விட்டுள்ளது என்றும் பாடப்படுகிறது. பிற 3 கால்கள் மீது நின்றுள்ளது. அரைக்கல்பம் பகல் மற்றும் அரை கல்பம் இரவு அல்லது அரைகல்பம் ஞானம் மற்றும் அரைகல்பம் பக்தி என்பது உலகத் தாருக்குத் தெரியாது. அவர்கள் பாதிப் பாதி என்று செய்ய முடியாது. சத்யுகத்திற்கு நீண்ட காலம் கொடுத்துள்ளார்கள். எனவே பாதிப் பாதி என்று ஆக முடியாது. எந்த கணக்குமே இருப்பதில்லை. மனிதர்கள் ஆஸ்திகர் மற்றும் நாஸ்திகர் என்ற வார்த்தைகளின் பொருளைக் கூட அறியாமல் இருக்கிறார்கள். அரை கல்பம் சிருஷ்டி ஆஸ்திகராக இருக்கிறது. அரைக் கல்பம் நாஸ்திகராக இருக்கிறது. அந்த ஆஸ்திக தன்மையின் ஆஸ்தி தந்தையிடமிருந்து கிடைக்கிறது. சிவராத்திரி எப்பொழுது ஆகிறது என்பது யாருக்குமே தெரியாது. தந்தை வந்து இரவைப் பகலாக்குவதற்கான நேரம் வேண்டும் அல்லவா? பாபா தான் வந்து பக்தியின் பலனை அளித்து பக்தியிலிருந்து விடுவிக்க வேண்டியுள்ளது. பரமபிதா பரமாத்மா கூட அவசியம் வர வேண்டியுள்ளது. பதீத பாவனரே ! வாருங்கள், என்று அழைக்கிறார்கள். பதீதபாவனர் யார் என்பதை யாரும் அறியாமல் உள்ளார்கள். எனவே அவருக்கு நாஸ்திகர் என்று கூறப்படுகிறது. அறிந்திருப்பவர்கள் கூட வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப இருக்கிறார்க.ள இங்கு இருப்பவர் கள் கூட மிகச் சரியாக அறியாமல் இருக்கும் காரணத்தால் ஆச்சரியப்படும் வகையில் ஞானம் கேட்டார்கள், பிறகு கூறினார்கள், ஓடி விடுபவர்களாக ஆகி விடுகிறார்கள். தூய்மையாக இருக்க வேண்டும் என்பது பாபாவின் முதன் முதலாவதான கட்டளையாகும். நிறைய சென்டர்களில் விகாரி மனிதர்கள் கூட அமிருதத்தைப் பருகச் செல்கிறார்கள். தாரணை எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். விகாரங்களைக் கூட விடுவதில்லை. யார் அமிருதத்தை விடுத்து விஷத்தைப் பருகு கிறார்களோ அவர்களுக்கு பஸ்மாசுரன் என்று கூறப்படுகிறது. காமச்சிதையில் ஏறி சாம்பலாகி விடுகிறார்கள். தேவதையாக ஆகி விடுவதில்லை. முதலில் விகாரங்களின் தானம் கொடுக்க வேண்டும். தானம் கொடுத்தால் தான் பாபா, மம்மா, என்று கூறுவதற்குத் தகுதியுடையவராக ஆக முடியும். கோபம் கூட குறைந்தது அல்ல. கோபத்தில் வந்து முதலில் வசைமொழிகள் கூறுகிறார்கள். பிறகு அடிக்கவும் ஆரம்பித்து விடுகிறார்கள். ஒருவரை யொருவர் கொலை கூட செய்து விடுகிறார்கள். பத்திரிக்கைகளில் இது போன்ற சமாச்சாரம் நிறைய பிரசுரம் ஆகிறது. பாபாவிடமிருந்து ஆஸ்தியைப் பெற வேண்டும் என்றால், எந்த விகாரங்களினால் துர்க்கதியாகி விட்டுள்ளதோ அவற்றை அவசியம் தானம் கொடுக்க வேண்டி இருக்கும். குழந்தைகளே ! நீங்கள் அசரீரியாகி செல்ல வேண்டும் என்று பாபா கூறுகிறார். இந்த தேக உணர்வை விடுங்கள். எவ்வளவு காலம் நீங்கள் தேக அபிமானியாக இருந்தீர்கள். சத்யுகத்தில் நீங்கள் ஆத்ம அபிமானியாக இருந்தீர்கள். ஆத்மாவாகிய நாம் ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்றை எடுக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தீர்கள். அங்கு மாயை இருப்பதில்லை. எனவே துக்கத்தின் விஷயம் இருப்பதில்லை. இங்கு பெரிய மனிதர்கள் யாராவது நோய்வாய்ப்பட்டார்கள் என்றால் பத்திரிக்கைகளில் வெளி வந்து விடுகிறது. எவ்வளவு அவர்களைக் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்கிறார் கள். பாருங்கள், இப்பொழுது போப்பிற்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது. ஆனால் இச்சமயம் எல்லோரும் நாஸ்திகராக இருக் கிறார்கள். காட்ஃபாதர் இறை தந்தையை அறியாமலேயே இருக்கிறார்கள் என்றால் நாஸ்திகர் என்று தானே கூற வேண்டும். இல்லையா? ஒரு தந்தைக்கு 5-7 குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால், எங்களுடைய இந்த தந்தை எங்கும் நிறைந்தவர் ஆவார் என்று குழந்தைகள் கூறுவார்களா என்ன? நான் படைப்புகர்த்தா ஆவேன். இது என்னுடைய படைப்பு ஆகும். படைப்பில் படைப்பவர் எப்படி வியாபித்திருக்க முடியும் என்று தந்தை கூறுகிறார். எப்படி முடியும் என்று இந்த தந்தையும் கூறுகிறார். எவ்வளவு சுலபமான விஷயமாகும். பிறகும் புரிந்து கொள்வது இல்லை. எனவே உண்மையில் பரமபிதா பரமாத்மா நமது தந்தை ஆவார் என்று கூறும் வகையில், முதலில் நாஸ்திகரிலிருந்து ஆஸ்திகாராக ஆக்குங்கள் என்று தந்தை புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். அவரிடமிருந்து ஆஸ்தி பெற வேண்டும். கன்னியை தானம் கொடுக்கும் பொழுது கொடுக்கும் பைசாவைக் கூட ஆஸ்தி என்றே கூறுவார்கள். சுகத்தின் ஆஸ்தி யார் கொடுக்கிறார்கள், துக்கத்தின் ஆஸ்தியை யார் கொடுக்கிறார்கள் என்பதை அறியாமல் உள்ளார்கள். பாரதவாசிகள் சொர்க்கத்தையே மறந்து விட்டனர். சொர்க்கத்தின் பெயர் கூட சொல்கிறார்கள். இன்னார் சொர்க்கத்திற்குச் சென்று விட்டார் என்று கூறுகிறார்கள். ஆனால் புரிந்து கொள்வதில்லை. முற்றிலுமே (துச்ச) புத்தியில்ல்லாதவர் களாக இருக்கிறார்கள் என்று தந்தை கூறுகிறார். பதீதபாவனரே, வாருங்கள் ! என்று பாடுகிறார்கள். ஆனால் தங்களை பதீதர்கள் (தூய்மையற்றவர்கள்) என்று புரிந்துள்ளார்களா என்ன? முதலில் அல்ஃப் தந்தையைப் பற்றி புரிய வையுங்கள் என்று தந்தை கூறுகிறார். பரமபிதா பரமாத்மா உடன் உங்களுக்கு என்ன சம்பந்தம்? எங்களுக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள் என்றால், தந்தையை அறியாமல் இருக்கிறீர்களா என்று கேளுங்கள். லௌகீக தந்தை சரீரத்தின் படைப்புக்கர்த்தா ஆகிறார். பரமபிதா பரமாத்மா ஆத்மாக்களின் தந்தை ஆவார். எனவே நீங்கள் தந்தையை அறியாமல் இருக்கிறீர்களா? எவ்வளவு சுலபமான விஷயம் ஆகும். ஆனால் குழந்தைகளின் புத்தியில் பதிவதில்லை. இல்லையென்றால் சேவை செய்ய முற்பட வேண்டும். பரமபிதா பரமாத்மாவுடன் என்ன சம்பந்தம் இருக்கிறது? பிரஜாபிதா பிரம்மாவுடன் என்ன சம்பந்தம் இருக்கிறது? அவர் பரமபிதா ஆவார். இவர் பிரஜாபிதா ஆவார். பிரஜாபிதா என்றால் அவசியம் இங்கு இருப்பார் அல்லவா? பிரஜாபிதா பிரம்மா என்ற பெயரை கேள்வி பட்டுள்ளீர்களா? நிராகார பரமாத்மா சிருஷ்டியை எப்படிப் படைத்தார்? எனவே பிரஜாபிதா சாகாரமானவர் ஆவார். எனவே அவரது குழந்தைகள் பி.கே. கூட அவசியம் இருப்பார்கள். குழந்தைகள் தான் ஆஸ்திக்குத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். ஆனால் நல்ல நல்ல குழந்தைகள் கூட யுக்தியுடன் புரிய வைப்பதில்லை. புதுப்புது விஷயங்களைப் பாபா புரிய வைக்கிறார். பிறகும் குழந்தைகள் தங்களுடைய பழைய நடத்தையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். புதியதை தாரணை செய்வதில்லை. தேக அபிமானம் இருக்கிறது. நாங்கள் எல்லாமே அறிந்துள்ளோம் என்பார்கள். ஆனால் முதல் விஷயமே தெரியாத காரணத் தினால் தான் கையை விட்டு விடுகிறார்கள். ஆஸ்திகரிலிருந்து நாஸ்திகராகி விடுகிறார்கள். ஈசுவரிய மடியில் வந்து பிறகு இறந்து விடுகிறார்கள். பாபா மம்மா என்று கூறிக் கொண்டு இருந்தாலும் கூட, பிறகு பாருங்கள் எப்படி இறந்து போகிறார்கள். மாயையின் அல்லது தேக அபிமானத்தில் குண்டடி பட்டதோ இல்லையோ இறந்து விட்டார். இது ஞானத்தின் குண்டு. அது மாயையின் குண்டு.மாயை எப்பேர்ப்பட்ட குண்டு போட்டு விடுகிறது என்றால் வருவதையே விட்டு விடுகிறார்கள். பாண்டவர்களாகிய உங்களுடைய யுத்தம் மாயையுடன் ஆகும்.

என்னை ஞானக் கடல் என்று கூறுகிறார்கள் என்று தந்தை புரிய வைக்கிறார். ஞானக் கடலிலிருந்து ஞான கங்கைகள் வெளிப்பட்டுள்ளனவா? இல்லை தண்ணீரினுடையதா? அங்கு கங்கையின் படத்தை கூட தேவியாகக் காண்பிக்கிறார்கள். ஆனாலும் கூட இவர் யார் என்பது புத்தியில் வருவதில்லை. தேவ தேவதையோ எவரொரு வருக்கும் அமிருதத்தை பருகுமாறு செய்ய முடியாது. வேள்வி எப்பொழுதும் பிராமணர்கள் மூலமாக இயற்றப் படுகிறது. வேள்வியில் பிறகு யுத்தத்தின் விஷயம் எங்கிருந்து வந்தது? இந்த விஷயங்களை அறிவுள்ள குழந்தைகள் தான் புரிந்து கொள்கிறார்கள். முட்டாள்கள் மறந்து விடுகிறார்கள். பள்ளிக் கூடத்தில் கூட வரிசைக் கிரமமான அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். 12 மாதங்கள் வேண்டு மானாலும் பள்ளிக் கூடத்தில் அமர்ந்திருக்கலாம். ஆனால் படிப்பின் மீது கவனம் வைக்க வில்லை என்றால், படிக்க முடியாமல் இருப்பார்கள். தந்தை ஆத்மாக் களுக்குக் கற்பிக்கிறார். அவர்கள் மனிதர்களுக்குக் கற்பிக்கிறார்கள். ஹே ஆத்மா, கேட்கிறாயா? என்று தந்தை கூறுவார். வேறு யாருமே ஆத்மாவிடம் உரையாட முடியாது. அதிர்ஷ்ட நட்சத்திரங்களே ! புரிந்து கொள்கிறீர்களா? என்று தந்தை கூறுவார். உங்களுக்கு கற்பிக்கிறேன். ஆத்மா தான் செய்கிறது மற்றும் செய்விக்கிறது. செய்பவர் மற்றும் செய்விப்பவராக ஆத்மாவும் இருக்கிறது. பின் பரமாத்மாவும் இருக்கிறார். எப்படி ஆத்மா ஆத்மா மூலமாக செய்விக்கிறாரோ அதே போல பரமாத்மா தந்தை ஆத்மாக்கள் மூலமாக செய்விக்கிறார். நான் ஆத்மாக்களாகிய உங்கள் மூலமாக நல்ல காரியம் செய்விக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். முதன் முதலில் இந்த கேள்விப் பதிலை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் பரலௌகீக பரமபிதா பரமாத்மா ஆவார். அவர் லௌகீக தந்தை ஆவார். ஆத்மா மற்றும் சரீரம் தனியாகும் அல்லவா? சரீரத்தின் தந்தை லௌகீக தந்தை. ஆத்மாக்களின் தந்தை பரமபிதா பரமாத்மா ஆவார். அவர் பெரிய தந்தை ஆவார். அனைத்து பக்தர்களும் அவரைத் தான் நினைவு செய்கிறார்கள். அனைவருக்கும் பதீதபாவனர் அவரே ஆவார். தற்காலத்தில் அநேக குருக்கள் இருக்கிறார்கள். தங்களுக்கு ஜகத்குரு என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள். ஜகதம்பாக்கள் கூட நிறைய பேர் வெளிப்பட்டுள்ளார்கள். இவை எல்லாமே பொய்யாகும். பொய் இருக்கும் இடத்தில் உண்மை பற்றி தெரிய வருவது கடினமாக உள்ளது. நீள நீளமாகப் பெயர்களை வைத்துக் கொண்டு அமர்ந்துள்ளார்கள். ஆனால் உண்மையை மறைக்க முடியாது. உண்மை இருந்தால் நடனமாடலாம் என்பது பழமொழி. நடனமாடிக் கொண்டே இருங்கள். நடனம் பிரச்சித்தமானதாகும். நீங்கள் ஆஸ்திகர் ஆகி விட்டீர்கள், தாரணை செய்தீர்கள் என்றால் சொர்க்கத்தில் நீங்கள் நடனமாடுங்கள். தேவதைகள் தான் நடனமாடுவார்கள். பதீதமான (தூய்மையற்ற) உலகம் நரகமாகும். எனவே நரகத்தை சொர்க்கமாக அல்லது பாவன உலகமாக இந்த குருமார்கள் சாதுக்கள் அமைப்பார்களா என்ன? இதற்கு கும்பிபாக் – பயங்கரமான நரகம் என்று கூறப்படுகிறது. சொர்க்கம் சிவாலயம் என்று கூறப்படுகிறது. முதலில் பரமபிதா பரமாத்மா நமது தந்தை ஆவார். அவர் பிரஜாபிதா பிரம்மா மூலமாகத் தான் பிராமணர்களின் படைப்பைப் படைத்துள்ளார் என்று எழுதுமாறு செய்யுங்கள். நாங்கள் சிவபாபாவின் பேரன்கள் ஆகிறோம். ஆஸ்தி கூட அவர் தான் கொடுப்பார். ஞானக் கடல் கூட அவரே ஆவார். அழியாத ஞான ரத்தினங்களை பிரம்மா மூலமாக அளிக்கிறார். முதலில் பிரம்மாவிற்குக் கிடைக்கிறது. பிறகு முகவம்சாவளிக்குக் கிடைக்கிறது. பள்ளிக் கூடத்தில் கூட ஒரு சிலர் பின்னால் வந்திருந்தாலும் கூட முன்னேறிச் சென்று விடுகிறார்கள். ஏனெனில், நன்றாகப் படிக் கிறார்கள். இங்கு கூட நல்ல முறையில் படிக்க வேண்டும் மற்றும் படிப்பிக்க வேண்டும். யார் பிறரை தங்களுக்குச் சமானமாக ஆக்குவதில்லையோ அவர்களிடம் நிச்சயம் ஏதோ கொஞ்சம் குறைகள் உள்ளன, எனவே தான் தாரணை ஆவதில்லை. காமவிகாரத்தின் பாதி போதை இருந்தாலும் கூட தாரணை ஆவது கடினமாக இருக்கும். பாபா காமத்தின் புயல் மிகவும் தொல்லைப்படுத்துகிறது என்று எழுதுகிறார்கள். வேதாளம் போல ஆக்கி விடுகிறது.

குழந்தைகளே ! காமம் மகா எதிரி ஆகும் என்று தந்தை கூறுகிறார். அதை யோகபலத்தால் வெல்லுங்கள். முந்தைய கல்பத்தில் கூட நீங்கள் வென்றுள்ளீர்கள். தந்தையின் பீடத்தில் அமர்ந்துள்ளீர்கள். அதற்குப் பின்னால் ராயல் குடும்பம் கூட உள்ளது. ஒரு பிறவி மட்டும் தூய்மையாக இருப்பதால் இவ்வளவு உயர்ந்தவராகி விடுவீர்கள். தூய்மையாக ஆகாமலிருந் தால் நிறைய நஷ்டம் ஏற்பட்டு விடும். மரணம் எதிரிலேயே உள்ளது. விபத்துக்கள் ஆகியவை எவ்வளவு ஆகிக் கொண்டே போகின்றன. ரஜோபிரதான நிலையின் பொழுது இவ்வளவு மரணங்கள் ஆவதில்லை. இப்பொழுது பகட்டுக்கள் நிறைய உள்ளன. இதற்கு முன்பு இவ்வளவு இயந்திரங்கள் ஆகியவை இருக்கவில்லை. இதற்கு முன்பு யுத்தங்கள், கப்பல்கள் அல்லது ஆகாய விமானங்கள் மூலமாக நிகழ்ந்து கொண்டிருந்ததா என்ன? இது எல்லாமே இப்பொழுது வெளிப்பட்டுள்ளது. நீங்கள் இங்கு இருக்கவில்லை. முதலில் சத்யுகத்தில் இருந்தீர்கள். பிறகு சங்கமத்தில் தான் வந்து இருக்க வேண்டும். அந்த சுகம் மீண்டும் உங்களுக்கு சொர்க்கத்தில் கிடைக்க வேண்டி உள்ளது. ஆகாய விமானம் தயாரிப்பவர்கள் கூட அங்கு இருப்பார்கள் பிரஜைகளாக கூட யாராவது ஓரிருவர் அங்கே வந்து விடுவார்கள். தற்போது சம்ஸ்காரத்தை இங்கிருந்து எடுத்துச் செல்வார்கள். பிறகு வந்து தயாரிப்பார்கள். இப்பொழுது விநாசத்திற்காக அமைக்கிறார்கள். பிறகு சுகத்தில் அவை பயன்படும். அங்கு (ஃபூல் ப்ருஃப்) மிகவும் எளிதானதாக யார் வேண்டுமானாலும் இயக்கக் கூடியதாக இருக்கும். மாயையின் பகட்டினால் அழிவு ஏற்படும். விநாசம் அவசியம் ஆக வேண்டி உள்ளது அல்லவா? பிராமணர்கள் மூலமாக யக்ஞம் கூட படைக்கப்பட்டுள்ளது. இதில் முழு பழைய உலகம் ஸ்வாஹா ஆகி விடும். பிராமணர்கள் மூலமாகத் தான் யக்ஞம் இயற்றுகிறார்கள். கிடைப்பதும் பிராமணர்களுக்குத் தான். பிராமண வர்ணம் தான் தேவதா வர்ணமாக ஆகிறது. சிவபாபா பிரம்மா மூலமாக பிராமணர்களைப் படைக்கிறார். பிராமணர்கள் பிறகு தேவதை ஆகிறார்கள். அவ்வளவு நேரான விஷயங்கள் ஆகும். ஆனால் குழந்தைகள் மீது மிகவும் ஆச்சரியம் ஏற்படுகிறது. ஏனெனில், இவ்வளவு சுலபமான விஷயங்களைக் கூட அநேக குழந்தைகள் தாரணை செய்ய முடியாமல் இருக்கிறார்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. தந்தையிடம் எப்பொழுதும் உண்மையாக இருக்க வேண்டும். விகாரங்களை தானம் கொடுத்த பிறகு பஸ்மாசுரன் ஆகக் கூடாது. தூய்மைக்கான கட்டளையை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

2. விகாரங்களின் சூட்சுமமான போதையை யோக பலத்தினால் நீக்கி விட வேண்டும். படிப்பை நல்ல முறையில் படிக்க வேண்டும் மற்றும் படிப்பிக்க வேண்டும்.

வரதானம்:-

தீவிர புருஷார்த்தியின் முன்னால் சதா இலக்கு (சென்று சேர வேண்டிய இடம் – அடைய வேண்டிய லட்சியம்) முன்னால் இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் ஒரு போதும் இங்கே-அங்கே பார்க்க மாட்டார்கள். முதல் நம்பரில் வரக்கூடிய ஆத்மாக்கள் வீணானவற்றைப் பார்த் தாலும் பார்க்காதவராக இருப்பார்கள். வீணானவற்றைக் கேட்டாலும் கேளாதவராக இருப்பார் கள். அவர்கள் இலக்கை முன்னால் வைத்து பிரம்மா பாபாவைப் பின்பற்றுவார்கள். எப்படி பிரம்மா பாபா தம்மை செய்பவராக உணர்ந்து கர்மம் செய்தார், ஒரு போதும் செய்விப்பவர் என உணர்ந்ததில்லை. ஆகவே பொறுப்பைப் பராமரித்தாலும் கூட சதா லேசாக இருங்கள். அந்த மாதிரி தந்தையைப் பின்பற்றுங்கள்.

சுலோகன்:-

அன்பில் மூழ்கிய ஸ்திதியின் அனுபவம் செய்யுங்கள்:

பாபாவுக்குக் குழந்தைகள் மீது அவ்வளவு அன்பு உள்ளது – தினமும் அன்பிற்குப் பிரதிபலன் கொடுப்பதற்காக இவ்வளவு பெரிய கடிதத்தை எழுதுகிறார். அன்பு நினைவு தருகிறார் மற்றும் துணைவர் ஆகி, கூடவே இருக்கிறார். எனவே இந்த அன்பில் தன்னுடைய அனைத்து பலவீனங்களையும் பலியிட்டு, சமமான ஸ்திதியில் நிலைத்து விடுங்கள்.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top