12 December 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

December 11, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

யோகயுக்த், யுக்தியுக்த் ஆவதற்கான யுக்தி

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று பாப்தாதா தனது அனைத்து குழந்தைகளில் விசேஷமாக இரண்டு வகையான குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார். ஒன்று சதா யோகயுக்த் மற்றும் ஒவ்வொரு காரியத்தில் யுக்தியுக்த். இரண்டாவது யோகிகளாக இருக்கின்றனர், ஆனால் சதா யோகயுக்த் ஆக இருப்பது கிடையாது, மேலும் சதா ஒவ்வொரு காரியத்தில் யுக்தியுக்த் ஆக இருப்பது கிடையாது. மனம், சொல், செயல் லி மூன்றில் ஏதாவது ஒன்றில் யுக்தி யுக்த் ஆக இருப்பது கிடையாது. பிராமண வாழ்க்கை என்றால் இயற்கையாக யோகயுக்த் மற்றும் சதா யுக்தியுக்த் ஆக இருப்பதாகும். பிராமண வாழ்க்கையின் அலௌகீகதா மற்றும் விசேஷதா அல்லது விடுபட்ட மற்றும் அன்பான நிலை லி யோக யுக்த் மற்றும் யுக்தி யுக்த் ஆகும். ஆனால் சில குழந்தைகள் இந்த விசேஷ தாவில் சகஜமாக மற்றும் இயற்கையாக நடந்து கொண்டிருக்கின்றனர். சிலர் கவனமும் செலுத்துகின்றனர், இருப்பினும் இரண்டு விசயங்களின் அனுபவம் செய்ய முடிவது கிடையாது. இதற்கான காரணம் என்ன? ஞானம் அனைவரிடத்திலும் இருக்கிறது. இலட்சியமும் அனைவருக்கும் ஒன்று தான். இருப்பினும் சிலர் இலட்சியத்தின் ஆதாரத்தில் இந்த இரண்டு இலட்சணங்கள் அதாவது யோகயுக்த் மற்றும் யுக்தியுக்த் ஸ்திதியின் அனுபவத்தில் அருகாமையில் இருக்கின்றனர், சிலர் சில நேரம் தீவிர முயற்சியின் மூலம் நெருக்கத்தில் வருகின்றனர். ஆனால் சில நேரம் நெருக்கத் திலும், சில நேரம் போகப்போக ஏதாவது காரணத்திற்கு வசமாகி நின்று விடுகின்றனர். ஆகையால் சதா இலட்சிணத்தின் நெருக்கத் தின் அனுபவம் செய்வது கிடையாது. அனைத்து பிராமண ஆத்மாக்களில் இந்த சிரேஷ்ட இலட்சியத் தின் நெருக்கத்தில் நம்பர் ஒன் ஆக இருப்பது யார்? பிரம்மா பாபா. இதை பலனாக அடைவதற்கு என்ன விதியை கடைபிடித்தார்? சதா யோகயுக்த் ஆக இருப்பதற்கான எளிய விதி லி சதா தன்னை சாரதி மற்றும் சாட்சி என்று புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

சிரேஷ்ட ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் இந்த ரதத்தின் சாரதியாக இருக்கிறீர்கள். இரதத்தை இயக்கக் கூடிய ஆத்மா சாரதியாக இருக்கிறீர்கள். இந்த நினைவு தானாகவே இந்த ரதம் அதாவது தேகத்திலிருந்து விடுபட்டவர்களாக ஆக்கி விடும், எந்த வகையான தேக உணர்விலிருந்தும் விடுபட்டவராக ஆக்கி விடும். தேக உணர்வு இல்லையெனில் எளிதாக யோகயுக்த் ஆகிவிடுவீர்கள். மேலும் ஒவ்வொரு காரியத்திலும் யோக யுக்த், யுக்தி யுக்த் ஆக தானாகவே ஆகிவிடுவீர்கள். தன்னை சாரதி என்று புரிந்து கொள்வதன் மூலம் அனைத்து கர்மேந்திரியங்களும் தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அதாவது அனைத்துக் கர்மேந்திரியங்களை சதா இலட்சியம் மற்றும் இலட்சணத்தின் நெருக்கத்தில் கொண்டு செல்லும் கட்டுப்படுத்தும் சக்தி வந்து விடும். சுயம் சாரதியாக இருப்பவர் எந்த ஒரு கர்மேந்திரியத்திற்கும் வசமாக முடியாது. ஏனெனில் மாயை யார் மீதாவது யுத்தம் செய்கிறது எனில், மாயை யுத்தம் செய்வதற்கான விதி என்னவென்றால் ஏதாவது ஸ்தூல கர்மேந்திரியம் அல்லது சூட்சும சக்திகளாகிய மனம்லிபுத்திலிசன்ஸ்காரத்தை வசமாக்கி விடும். சாரதி ஆத்மாக்களாகிய உங்களுக்கு தந்தையிடமிருந்து கிடைத்திருக்கும் மகாமந்திரம், வசீகர மந்திரத்தை மாற்றி விடுகிறது, அதாவது வசீகரன் என்பதற்குப் பதிலாக வசமாக்கி விடுகிறது. ஒரே ஒரு விசயத்திற்கு வசமாகி விட்டால் அனைத்து பூதங்களும் பிரவேசமாகி விடும். ஏனெனில் இந்த பூதங்களும் தங்களுக்குள் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறது. ஒரு பூதம் வந்தால் அது அனைவற்றிற்கும் அழைப்பு கொடுக்கும். பிறகு என்ன நடக்கிறது? இந்த பூதம் சாரதி நிலையிலிருந்து சுய நலமுடையவர்களாக ஆக்கி விடுகிறது. பிறகு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எப்போது சாரதி என்ற நினைவு வருகிறதோ, அப்போது பூதங்களை விரட்டும் யுத்தம் செய்கிறீர்கள். யுத்த ஸ்திதியை யோக யுக்த் ஸ்திதி என்று கூற முடியாது. ஆகையால் யோக யுக்த் அல்லது யுக்தியுக்த் என்ற இலட்சியத்தின் நெருக்கத்தில் செல்வ தற்குப் பதிலாக நின்று விடுகிறீர்கள். மேலும் முதல் நம்பர் ஸ்திதியிலிருந்து இரண்டாம் நம்பருக்கு வந்து விடுகிறீர்கள். சாரதி என்றால் வசமாகக் கூடியவர்கள் அல்ல, ஆனால் வசப்படுத்தி நடத்தக் கூடியவர்கள். ஆக நீங்கள் அனைவரும் யார்? சாரதிகள் அல்லவா!

சாரதி என்றால் ஆத்ம அபிமானி. ஏனெனில் ஆத்மா தான் சாரதியாக இருக்கிறது. பிரம்மா பாபா இந்த விதியின் மூலம் நம்பர் ஒன் நிலை பலனாக அடைந்தார். அதனால் தான் தந்தையும் இவருக்கு சாரதியாக ஆனார். சாரதி ஆவதற்கான நினைவுச் சின்னத்தை தந்தை செய்து காண்பித்தார். தந்தையை பின்பற்றுங்கள். சாரதி ஆகி சதா சாரதி வாழ்க்கை யில் மிகவும் விடுபட்டவர் மற்றும் அன்பான ஸ்திதியின் அனுபவத்தை செய்வித்தார். ஏனெனில் தேகத்தை அடிமையாக ஆக்கி தந்தை பிரவேசிக்கின்றார், அதாவது சாரதியாக ஆகின்றார். தேகத்திற்கு அடிமையாவது கிடையாது, ஆகையால் விடுபட்டவர் மற்றும் அன்பானவராக இருக்கின்றார். இதே போன்று பிராமண ஆத்மாக் களாகிய நீங்கள் அனைவரும் கூட பாப்சமான் சாரதி ஸ்திதியில் இருங்கள். நடந்தாலும், சுற்றினாலும் நான் சாரதி அதாவது அனைத்தையும் நடத்தக் கூடிய விடுபட்டவன் மற்றும் அன்பானவன் என்ற ஸ்திதியில் நிலைத்திருக்கின்றேனா? என்பதை சோதியுங்கள். இடையிடையில் இதை சோதியுங்கள். முழு நாளும் கடந்த பின்பு இரவு சோதிக்க வேண்டும் என்று இருக்கக் கூடாது. முழு நாளும் கடந்து விட்டது எனில் கடந்து போன நேரம் சதா கால வருமான மின்றி சென்று விட்டது. ஆகையால் இழந்த பின்பு விழிப்புணர்வில் வரக் கூடாது. இதை இயற்கையான சன்ஸ்காரமாக ஆக்கிக் கொள்ளுங்கள். எதை? சோதனை செய்வது. ஒருவரது பழைய சன்ஸ்காரம் பிராமண வாழ்க்கையில் இப்பொழுதும் முன்னேறுவதற்குத் தடையாக இருக்கிறது எனில் விரும்பா விட்டாலும் சன்ஸ்காரத்திற்கு வசமாகி விடுகின்றார், எதை செய்யக் கூடாது என்று விரும்புகிறாரோ அதை செய்து விடுகின்றார் என்று கூறுகிறீர்கள் அல்லவா! எப்போது தவறான சன்ஸ்காரம் விரும்பாவிட்டாலும் ஏதாவது காரியங்களை செய்வித்து விடுகிறதோ, அதே போன்று இயற்கையாகவே சோதனை செய்யும் சன்ஸ்காரத்தை தனது சுத்த சன்ஸ்காரமாக ஆக்கிக் கொள்ள முடியாதா? எந்த கடின உழைப்புமின்றி சோதனை செய்யும் சுத்த சன்ஸ்காரம் தானாகவே காரியம் செய்வித்துக் கொண்டே இருக்கும். மறந்து விட்டேன் அல்லது மிகவும் பிசியாக இருந்து விட்டேன் என்று கூறமாட்டீர்கள். அசுத்தம் என்றால் வீண் சன்ஸ்காரம். சில குழந்தைகளிடம் அசுத்த சன்ஸ்காரம் கிடையாது, ஆனால் வீண் சன்ஸ்காரம் இருக்கிறது. இந்த அசுத்த சன்ஸ்காரம், வீண் சன்ஸ்காரம் மறக்க நினைத்தாலும் மறக்க முடிவது கிடையாது. என்னுடைய உள்ளுணர்வு கிடையாது, ஆனால் இது என்னுடைய பழைய சுபாவம் அல்லது சன்ஸ்காரம் என்று கூறுகிறீர்கள். ஆக அசுத்தத்தை மறப்பது கிடையாது, பிறகு சுத்த சன்ஸ்காரம் எப்படி மறந்து விடுகிறது? சாரதி என்ற ஸ்திதி தானாகவே சுய முன்னேற்றத்திற்கான சுத்த சன்ஸ்காரத்தை வெளிப்படுத்துகிறது. மேலும் இயற்கையாகவே சரியான நேரத்தில் எளிதாக சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும். அசுத்த பழக்கங்களில் நிர்பந்தம் ஆகிவிடு வீர்கள், மேலும் இந்த (நல்ல) பழக்கத்தில் உறுதியானவர்களாக ஆகிவிடுவீர்கள். ஆக கேட்டீர்களா லி சதா யோகயுக்த்லியுக்தியுக்த் ஆக இருப்பதற்கான விதி என்ன? சாரதியாக ஆகி நடந்து கொள்ள வேண்டும். சாரதி தானாகவே சாட்சியாக இருந்து கொண்டு செய்வார் கள், பார்ப்பார்கள், கேட்பார்கள். அனைத்திலும் சாட்சி ஆகி பார்ப்பது, சிந்திப்பது, செய்வது போன்ற அனைத்தும் செய்தாலும் ஒட்டாமல் அதாவது மாயாவின் பாதிப்பிலிருந்து விடுபட்டு இருப்பார்கள். ஆக பாடத்தை பக்கா செய்தீர்கள் தானே! பிரம்மா பாபாவை பின்பற்றக் கூடியவர்கள் அல்லவா! பிரம்மா பாபாவின் மீது அதிக அன்பு இருக்கிறது அல்லவா! அன்பின் அடையாளம் சமம் ஆவதாகும் அதாவது பின்பற்ற வேண்டும்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் தந்தையின் மீது எவ்வளவு அன்பு இருக்கிறது! தந்தை ஆசிரியர்களை சதா தனது சேவையின் நெருங்கிய துணைவர்களாக நினைக்கின்றார். எனவே முதலில் ஆசிரியர்கள் பின்பற்று வீர்கள் அல்லவா! இதில் முதலில் நான் என்ற இலட்சியம் வையுங்கள். பொறாமையினால் முதலில் நான் என்று கூடாது, அது நஷ்டமாக்கி விடும். சப்தம் ஒன்று தான் முதலில் நான். ஆனால் ஒன்று பொறாமைக்கு வசமாகி முதலில் நான். இதன் மூலம் முதல் என்பதற்குப் பதிலாக கடைசிக்கு வந்து விடுவர், முதல் நம்பரிலிருந்து கடைசிக்கு வந்து விடுவர். மேலும் தந்தையைப் பின்பற்றுவதில் முதலில் நான் என்று கூறினால் மற்றும் செய்தால் முதல் நம்பரின் கூடவே நீங்களும் முதலாவதாக ஆகிவிடு வீர்கள். பிரம்மா முதல் நம்பர் அல்லவா! ஆக சதா இந்த இலட்சியம் வையுங்கள் லி ஆசிரியர் என்றால் தந்தையை பின்பற்றுபவர் மற்றும் நம்பர்ஒன் தந்தையை பின்பற்றுபவர். பிரம்மா நம்பர்ஒன் ஆனார் எனில் பின்பற்றக் கூடியவர்களும் நம்பர் ஒன் இலட்சியம் வையுங்கள். ஆசிரியர்கள் அனைவரும் இதில் உறுதியாக இருக்கிறீர்கள் அல்லவா! பின்பற்றுவதில் தைரியம் இருக்கிறதா? ஏனெனில் ஆசிரியர்கள் என்றால் நிமித்தம் ஆகக் கூடியவர்கள், பல ஆத்மாக்களுக்கு நிமித்தமாக இருக்கிறீர்கள். ஆக நிமித்தமாக இருப்பவர் களின் மீது எவ்வளவு பொறுப்புகள் இருக்கின்றன! பிரம்மா பாபா நிமித்தமாக இருந்தார் அல்லவா! ஆக பிரம்மா பாபாவைப் பார்த்து எத்தனை பிராமணர்கள் தயாராகி இருக் கின்றனர்! அதே போன்று ஆசிரியர்கள் எந்த காரியம் செய்தாலும் லி சமையல் செய்து கொண்டிருந்தாலும், சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாலும் லி ஆனால் எந்த ஒரு காரியம் செய்தாலும் நான் பல ஆத்மாக்களுக்கு நிமித்தமானவன். நான் என்ன மற்றும் எப்படி செய்கின்றேனோ, நிமித்த ஆத்மாவாகிய என்னைப் பார்த்து மற்றவர்களும் செய்வார்கள் என்ற நினைவு இருக்க வேண்டும். ஆகையால் பாப்தாதா சதா கூறுகின்றார் லி ஒருபுறம் சொற்பொழிவு செய்ய வேண்டும், மற்றொரு புறம் பாத்திரங்கள் சுத்தப்படுத்த வேண்டும். இரண்டு காரியங்களிலும் யோகயுக்த், யுக்தியுக்த். காரியம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் ஸ்திதி சதா யோகயுக்த் மற்றும் யுக்தியுக்த் ஆக இருக்க வேண்டும். சொற்பொழிவு செய்து கொண்டிருப்பதால் யோகயுக்த் ஆக இருந்தேன், பாத்திரங்கள் சுத்தம் செய்வது அதாவது சாதாரண காரியம் செய்து கொண்டிருப்பதால் ஸ்திதி சாதாரணமாக ஆகிவிட்டது என்று இருக்கக் கூடாது. ஒவ்வொரு நேரத்திலும் தந்தையை பின்பற்ற வேண்டும். கேட்டீர்களா!

முன் வரிசையில் அமர்ந்திருக்கிறீர்கள் அல்லவா! முன்னால் அமர்வது எவ்வளவு நன்றாக இருக்கிறது! அதே போன்று சதா முன்னேறிக் கொண்டே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஏதாவது கடுமையான சன்ஸ்காரம் உங்களை பின்னுக்குக் கொண்டு செல்ல முயற்சித்தால் இந்தக் காட்சியை நினையுங்கள். முன்னால் அமர்வது நன்றாக இருக்கிறது எனில் முன்னேற்றம் அடைவதில் ஏன் பின்னால் இருக்க வேண்டும்? ஆக ஏதாவது விசயம் வருகிறது எனில் மதுவனத்திற்கு வந்து விடுங்கள், தனக்குள் தைரியம், உற்சாகத்தை கொண்டு வாருங்கள். ஏனெனில் பின்னால் இருப்பதற்கு வரும் காலங்களில் அநேகம் பேர் வருவார்கள். நீங்களும் பின்னால் இருந்து விட்டால் பின்னால் இருப்பவர்கள் முன்னால் செல்ல அனுமதிக்க வேண்டியிருக்கும். ஆகையால் நான் சதா முன்னேறிச் செல்லக் கூடியவன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னால் இருப்பது என்றால் பிரஜை ஆவதாகும். பிரஜையாக ஆகக் கூடாது அல்லவா! பிரஜை யோகியாக கிடையாது, இராஜயோகி அல்லவா! ஆக தந்தையை பின்பற்றுங்கள். நல்லது.

அயல் நாட்டினர் என்ன செய்வீர்கள்? தந்தையை பின்பற்றுவீர்கள் தானே! எதுவரை வந்தடைவீர்கள்? அனைவரும் முன்னால் (முன் இருக்கை) வருவீர்கள். யாரெல்லாம் வந்திருக்கிறீர்களோ, தந்தையை பின்பற்றி விரைவாகச் செல்ல வேண்டும் மற்றும் முதலில் வர வேண்டும். முதலாவதாக ஒரே ஒருவர் தான் வருவார் என்று யோசிக்காதீர்கள். ஆனால் முதல் கிரேட்டில் பலர் இருப்பார்கள் அல்லவா! முதல் நம்பரில் பிரம்மா வருவார். ஆனால் முதல் கிரேட்டில் துணைவர்கள் இருப்பார்கள், ஆகையால் முதல் நம்பர் வர வேண்டும். ஒருவர் மட்டுமே இருக்கமாட்டார், முதல் கிரேட்டில் பலர் இருப்பார்கள். ஆகையால் முதல் நம்பர் முடிவாகி விட்டது, ஆகையால் இரண்டாம் நம்பர் தான் வர முடியும் என்று யோசிக்காதீர்கள். இரண்டாவது கிரேட்டிற்கு செல்லக் கூடாது. யார் உடனடியாக கேட்டு நடக்கின்றார்களோ அவர்கள் தான் அர்ஜீன். முதல் நம்பர் என்றால் அர்ஜீன். முதல் நம்பரில் வருவதற்கு அனைவருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அனைவரும் வர முடியும். முதல் கிரேட் எல்லையற்றது, குறைவானது கிடையாது. ஆக அனைவரும் முதலில் வருவீர்கள் தானே! பக்காவாக இருக்கிறீர்களா? நல்லது.

சதா பிரம்மா பாபாவை பின்பற்றக் கூடியவர்களுக்கு, சதா இயற்கையாகவே யோக யுக்த்லியுக்தியுக்தாக இருக்கக் கூடியவர்களுக்கு, சதா சாரதியாகி கர்மேந்திரியங்களை சிரேஷ்ட வழியில் நடத்துபவர்களுக்கு, சதா இலட்சியத்தின் நெருக்கத்தில் இருப்பவர்களுக்கு, இவ்வாறு சர்வசிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

மண்டலம் வாரியாக அவ்யக்த பாப்தாதா உச்சரித்த இனிய மகாவாக்கியம் லி இந்தூர் மண்டலம்

பாப்தாதாவின் சிரேஷ்ட வழியானது சிரேஷ்ட நிலையை (கதி) அடையச் செய்திருக் கிறது லி இவ்வாறு அனுபவம் செய்கிறீர்கள் தானே! வழி எப்படியோ அப்படித் தான் நிலை இருக்கும். ஆக தந்தையின் சிரேஷ்ட வழி இருக்கிறது எனில் நிலையும் சிரேஷ்டமாக இருக்கும் அல்லவா! கடைசி வழி எப்படியோ அப்படித் தான் நிலை என்று கூறப்பட்டிருக் கிறது. இவ்வாறு ஏன் கூறப்பட்டிருக்கிறது? ஏனெனில் தந்தை சக்கரத்தின் இறுதியில் வந்து பின் சிரேஷ்ட வழி கொடுக்கின்றார். ஆக இறுதி நேரத்தில் சிரேஷ்ட வழியை அடைகின்றீர்கள் மற்றும் அநேக பிறவிகள் சத்கதியை பலனாக அடை கின்றீர்கள். ஆக இந்த நேரத்திற்கான எல்லையற்ற கடைசி நிலையின் மூலம் கதி சிரேஷ்டம் ஆகிவிடு கிறது. இந்த நேரத்திற்கான நினைவுச் சின்னம் தான் பக்தியில் நடைபெற்று வருகிறது. ஒரு பிறவி யின் சிரேஷ்ட வழியினால் எத்தனை பிறவிகள் வரை சிரேஷ்ட கதியை பலனாக அடை கின்றீர்கள்! அனைத்து நினைவுச் சின்னங்களும் இந்த சங்கமயுகத்திற்கானதாகும். நினைவுச் சின்னங்கள் ஏன் உருவாக்கப் பட்டிருக்கின்றன? ஏனெனில் இந்த நேரத்தில் நினைவில் இருந்து காரியங்கள் செய்கிறீர்கள். ஒவ்வொரு காரியமும் நினைவுச் சின்னமாக ஆகிவிட்டது. நீங்கள் அமிர்தவேளையில் விதிப்பூர்வமாக எழுந்திருக்கிறீர்கள். பாருங்கள், உங்களது நினைவுச் சின்னமான சிலைகளையும் விதிப்பூர்வமாக எழுப்புகின்றனர், எவ்வளவு அன்பாக எழுப்புகின்றனர்! அது ஜடச் சிலை தான், ஆனாலும் எவ்வளவு மனதார, அன்பாக எழுப்புகின்றனர்! எழுப்பவும் செய்கின்றனர், படைக்கவும் செய்கின்றனர், தூங்க வைக்கவும் செய்கின்றனர். ஏனெனில் நீங்கள் இந்த நேரத்தில் அனைத்தையும் நினைவு என்ற விதிப்படி செய்கிறீர்கள். சாப்பிடுவதும் விதிப்படி சாப்பிடுகின்றீர்கள். போக் வைத்து விட்டு சாப்பிடு கிறீர்கள் தானே? அல்லது அவ்வாறே சாப்பிட்டு விடுகிறீர்களா? ஒருவருக்கு சாப்பாடு கொடுக்க வேண்டியிருப்பதால் சீக்கிரம் சீக்கிரமாக போக் வைத்து விட்டேன் என்று இருக்கக் கூடாது. ஒருவேளை ஒருவருக்கு கொடுக்க வேண்டியிருந்தால், வழியில்லை எனில் முன் கூட்டியே ஒரு பங்கு அவசியம் எடுத்து வைத்து விட வேண்டும். அவருக்கு சாப்பாடு கொடுத்து விட்டு பிறகு போக் வைக்கலாம் என்று இருக்கக் கூடாத. விதிப்பூர்வ மாக சாப்பிடுவதனால் வெற்றியை பலனாக அடைகிறீர்கள், குஷி அடைகிறீர்கள், நிரந்தர நினைவு எளிதாக இருக்கிறது.

ஆக அமிர்தவேளையிலிருந்து இரவு தூங்கும் வரை எந்த காரியம் செய்தாலும், நினைவு விதிப்பூர்வமாக செய்யும் போது ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி கிடைத்து விடும். வெற்றி என்றால் உடனடிப் பலன் கிடைத்துக் கொண்டே இருக்கும். அனைத்தையும் விட மிகப் பெரிய வெற்றி லி உடனடிப் பலனாக அதீந்திரிய சுகத்தின் அனுபவம் ஏற்படுவதாகும். சதா சுகத்தின் அலைகளில், குஷியின் அலைகளில் விளையாடிக் கொண்டே இருப்பீர்கள். முதலில் உடனடிப் பலன் கிடைக்கிறது, பிறகு எதிர்கால பலனும் கிடைக்கிறது. இந்த நேரத்திற்கான உடனடிப் பலன் எதிர்கால அநேக பிறவிகளின் பலனை விட சிரேஷ்ட மானது. ஒருவேளை இப்பொழுது உடனடிப் பலன் அடைய வில்லை எனில் முழு கல்பத்தில் ஒருபோதும் உடனடிப் பலன் கிடைக்காது. இப்பொழுது செய்கிறீர்கள், இப்பொழுதே அடைகிறீர்கள் லி இது தான் உடனடிப் பலன் என்று கூறப்படுகிறது. சத்யுகத்திலும் என்ன பலன் கிடைக்குமோ, அது இந்த பிறவிக்கானது கிடைக்கும், அடுத்த பிறவிக்கானது அல்ல. ஆனால் இங்கு என்ன கிடைக்கிறதோ, அது உடனடிப் பலன் அதாவது இப்பொழுதே அடையக் கூடிய பலனாகும். எனவே உடனடிப் பலனிலிருந்து வஞ்சிப்பட்டு இருந்து விடக் கூடாது, சதா பலன் அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த உடனடிப் பலன் நன்றாக இருக்கிறது அல்லவா! இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பற்றி என்றாவது யோசித்திருப்பீர்களா? பகவான் மூலம் பலன் கிடைக்கும் லி இது கனவிலும் கூட இல்லாமல் இருந்தது. ஆக எந்த ஒரு விசயம் சிந்தனையிலேயே இல்லை, அது நடந்து விட்டால் எவ்வளவு குஷி ஏற்படும்! இன்றைய நாட்களில் அல்பகால லாட்டரி இருக்கிறது, எவ்வளவு குஷி அடைகின்றனர்! ஆனால் இது உடனடிப்பலன் மற்றும் எதிர்கால பலன் கொடுத்து விடுகிறது. ஆக போதை இருக்கிறது அல்லவா! சில நேரம் அதிகமாகவும், சில நேரம் குறைந்து விடுகிறதா? சதா ஏக்ரஸ் ஸ்திதியில் பறந்து கொண்டே செல்லுங்கள். விநாடியில் பறக்கக் கற்றுக் கொண்டீர்கள் தானே! அல்லது அதிக நேரம் தேவைப் படுகிறதா? சங்கல்பம் செய்தீர்கள், சென்றடைந்து விட வேண்டும் லி இந்த அளவிற்கு வேகம் இருக்கிறதா? நல்லது.

இன்டோர் மண்டலத்தைச் சார்ந்தவர்கள் அனைவரும் திருப்தியாக இருக்கிறீர்கள் அல்லவா! தாய்மார்கள் சதா திருப்தியாக இருக்கிறீர்களா? லௌகீகக் குடும்பத்திலும் ஒருபோதும் அதிருப்தி அடைவதில்லை தானே? சில நேரம் சலிப்படைந்து விடுகிறீர்களா? தொந்தரவு செய்யும் குழந்தை களினால் சலிப்படைகிறீர்களா? ஒருபோதும் சலிப்படையக் கூடாது. நீங்கள் எந்த அளவிற்கு சலிப்படைவீர்களோ, அந்த அளவிற்கு அவர்கள் அதிகமாக தொந்தரவு செய்வார்கள். ஆகையால் டிரஸ்டியாகி, சேவாதாரி ஆகி சேவை செய்யுங்கள். என்னுடையது என்று வந்தால் சலிப்படைவீர்கள். என்னுடைய குழந்தை இப்படி செய்கிறது. ஆக எங்கு என்னுடையது இருக்கிறதோ, அங்கு சலிப்பு ஏற்படும். எங்கு உன்னுடையதுலிஉன்னுடையது என்று வந்து விடுகிறதோ, அங்கு நீந்த ஆரம்பித்து விடுகிறீர்கள். நீந்தக் கூடியவர்கள் தானே! சதா உன்னுடையது என்றால் சுவமானத்தில் இருப்ப தாகும். எனதுலிஎனது என்று கூறுகின்றீர்கள் எனில் அபிமானத்தில் வருவதாகும், உனதுலி உனது என்றால் சுவமானத்தில் இருக்கிறீர்கள். ஆக சதா சுவமானத்தில் இருக்கக் கூடியவர் கள் என்றால் உனதாக ஆக்கக் கூடியவர்கள் லி இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நல்லது.

இரட்டை அயல்நாட்டினரும் செல்லமானவர்கள். குறைவாக இருக்கின்றனர். எவ்வளவு குஷியுடன் இருக்கிறீர்கள், அதை வர்ணிக்க முடியுமா? எல்லையற்ற தந்தை எனில் பிராப்தியும் எல்லையற்றதாக இருக்கிறது. ஆகையால் எல்லைக்குட்பட்டதில் எண்ணி விட முடியாது. பாப்தாதா இரட்டை அயல்நாட்டினரின் தீவிர முயற்சியின் வேகத்தைப் பார்த்து குஷி அடைகின்றார். பாரதவாசிகள் பாரதத்தின் விசயங்களை அறிவீர்கள். ஆனால் இவர்கள் அறிந்து கொள்ளாமலேயே நெருக்கத்தில் வந்து தீவிர முயற்சியாளர்களாக ஆகியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! ஆக இரட்டை அதிர்ஷ்டசாலிகளாக ஆகிவிட்டீர்கள். பாரதவாசிகளுக்கு நாம் தான் ஒவ்வொரு கல்பத்திலும் அழிவற்ற பாரதவாசிகளாக ஆவோம் என்ற போதை இருக்கிறது. அழிவற்றது பாரத கண்டம் என்ற போதை இருக்கிறது அல்லவா! ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கான போதை இருக்கிறது. அனைவரும் பாரதத்திற்கு வந்தே ஆக வேண்டும் அல்லவா! ஆனால் நீங்கள் அமர்ந்திருப்பது பாரதத்தில். நல்லது. ஓம்சாந்தி.

வரதானம்:-

யோகியின் நெற்றியில் மூன்றாவது கண் நினைவுச் சின்னமாக காண்பிக்கின்றனர். யோகி குழந்தைகளாகிய நீங்களும் தங்களது நெற்றியின் மூலம் மூன்றாவது கண்ணின் சாட்சாத்காரம் செய்விப்பதற்காக சதா புத்தியின் மூலம் ஒரு தந்தையின் தொடர்பில் இருங்கள். ஒன்று பாபா, மற்றொன்று நான் லி மூன்றாவதாக யாருமில்லை. எப்போது இந்த ஸ்திதி ஏற்படுமோ அப்போது மூன்றாவது கண்ணின் சாட்சாத்காரம் ஏற்படும். ஒருவேளை புத்தியில் மூன்றாவதாக யாராவது வந்து விட்டால், பிறகு மூன்றாவது கண் மூடப்பட்டு விடும். ஆகையால் மூன்றாவது கண் சதா திறந்து இருக்க வேண்டும் லி இதற்கு மூன்றாவதாக யாரும் வந்து விடக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top