11 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

January 10, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தாய் - ஞானத்தின் வானம்பாடி ஆகி தன்னைப் போல் பிறரையும் மாற்றும் சேவை செய்யுங்கள், தனது நினைவு யாத்திரைப் பயணம் சரியாக உள்ளதா? என உங்கள் மனதை நீங்கள் கேளுங்கள்.

கேள்வி: -

எந்த விசேஷ புருஷார்த்தத்தின் (முயற்சி) மூலமாக ஏழையிலிருந்து இளவரசராக ஆக முடியும்?

பதில்:-

ஏழையிலிருந்து இளவரசர் ஆக வேண்டும் என்றால் புத்தியின் லைன் (பாதை) தெளிவாக இருக்க வேண்டும். ஒரு தந்தையைத் தவிர வேறு எதுவும் நினைவிற்கு வரக் கூடாது. இந்த சரீரம் கூட என்னுடையது அல்ல. இது போல உயிருடன் இருந்தே இறப்பதற் கான புருஷார்த்தம் செய்பவர்களே ஏழைகள். அவர் களுக்குத் தான் வானபிரஸ்த நிலை ஆகும். ஏனெனில் இப்பொழுதோ தந்தையுடன் கூடவே வீடு செல்ல வேண்டும். பிறகு சுக தாமத்தில் வர வேண்டும் என்பது அவர்களது புத்தியில் இருக்கும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

ஓம் சாந்தி. படிப்பில் அதிகமான கவனம் எந்த விஷயத்தின் மீது வைக்க வேண்டும் என்பதை இனிமை யிலும் இனிமையான குழந்தைகள் அறிந்துள்ளார்கள். சர்வகுண சம்பன்னராக 16 கலை சம்பூர்ணமாக, சம்பூர்ண நிர்விகாரி, மரியாதா புருஷோத்தமர், அஹிம்சா பரமோ தர்மத் தினராக ஆக வேண்டும். என்னிடம் இந்த எல்லா குணங்களும் உள்ளனவா என்று பார்க்க வேண்டும். என்னவாக ஆக வேண்டுமோ அந்த பக்கம் தான் கவனம் செல்லும் அல்லவா? இவ்வாறு ஆவது எப்படி? படிப்பது மற்றும் படிப்பிப்பது மூலமாக எல்லை யில்லாத தந்தையை நாள் முழுவதிலும் எவ்வளவு நினைவு செய்கிறோம்? எத்தனை பேருக்கு கற்பிக்கிறோம்? சம்பூர்ணமாக இதுவரையும் யாரும் ஆகவில்லை. வரிசைக்கிரமமாக அவரவர் புருஷார்த்தப்படி உள்ளார்கள். இந்த குழந்தை என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தந்தை ஒவ்வொரு குழந்தை மீதும் கவனம் கொள்கிறார். என் பெயரில் என்ன சேவை செய்கிறார்கள்? எத்தனை பேருடைய அதிர்ஷ்டத்தை உயர்ந்ததிலும் உயர்ந்ததாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்? ஒவ்வொருவரும் அவரவர் நிலை மற்றும் அவரவர் குஷி பற்றியும் அறிந்துள்ளார்கள். ஒவ்வொருவருக்கும் அதீந்திரிய சுகத்தின் வாழ்க்கை அவரவர்களுக்கு அனுபவம் ஆகிறது. தந்தையின் நினைவின் மூலமாகத்தான் தமோபிரதான நிலையிலிருந்து சதோபிரதானமாக ஆகிறோம் என்ற நிச்சயம் குழந்தைகள் உங்களுக்கு உள்ளது. நினைவு யாத்திரையே சுலபமான உபாயமாகும்.

என்னுடைய நினைவு யாத்திரை சரியாக உள்ளதா? மற்றவர்களை எனக்குச் சமமாக ஆக்குகிறேனா? ஞானத்தின் வானம்பாடி ஆகி உள்ளேனா என்று தங்களது மனதை தானே கேட்க வேண்டும். பிராமணர்களாகிய நீங்கள் தான் தெய்வீக குணங்களை தாரணை செய்து மனிதனிலிருந்து தேவதை ஆகிறீர்கள். உங்களைத் தவிர வேறு யாருமே தேவதை ஆகுபவர் கள் இல்லை. நீங்கள் தான் தெய்வீக குடும்பத்தின் சம்பந்தியினர் ஆகிறீர்கள். அங்கு உங்களுடையது தெய்வீகப் பரிவாரம் ஆகும். நாம் தெய்வீக பரிவாரத்தினுடையவராக ஆவதற்காக நிறைய புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். குழந்தைகள் படிப்பது கூட முறைப்படி படிக்க வேண்டும். ஒரு நாள் கூட (ஆப்ஸெண்ட்) வராமலிருந்து விடக் கூடாது. நோய்வாய்ப்பட்டிருந்தாலும் சரி, படுக்கையில் படுத்திருந்தாலும் சரி, புத்தியில் சிவபாபாவின் நினைவு இருக்க வேண்டும். நாம் பாபாவின் குழந்தைகள் ஆவோம். பாபா நம்மை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார் என்பதை ஆத்மா அறிந்துள்ளது. எவ்வளவு சகஜமான நினைவு ஆகும். இந்த பயிற்சியும் வேண்டும். புத்தியில் ஒரு பாபாவின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். பாபா வந்து விட்டார். நாம் சாந்தி தாமத்திற்குச் சென்று பிறகு சுக தாமத்தில் வருபவர்கள் ஆவோம். இறுதிவரை, ஒரு சிவ பாபாவின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். என்ற அளவிற்கு கடின முயற்சி வேண்டும், மற்ற தொடர்புகளை விடுத்து ஒருவரிடம் மட்டுமே தொடர்பை இணைக்க வேண்டும். வாயால் எந்த ஒரு ஜபமும் செய்ய வேண்டியதில்லை. மற்றவர்களை தங்களுக்குச் சமமாக ஆக்கு வதற்கு கற்பிக்கவும் வேண்டும். நீங்கள் எந்த சதோபிரதான நிலையில் இங்கு வந்தீர்களோ அதே நிலையில் போய் பிறகு அதே நிலையில் சத்யுகத்திற்கு வர வேண்டும் என்று தந்தை புரிய வைக்கிறார். எவ்வளவு சகஜமானது!. பக்தி மார்க்கத்தில் நீங்கள் பாடிக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் எப்பொழுது வருவீர்களோ அப்பொழுது நாங்கள் மற்ற தொடர்புகளை விடுத்து உங்கள் ஒருவரிடம் மட்டுமே தொடர்பை இணைப்போம் என்று. இதில் உழைப்பு உள்ளது. பவித்திர தாவின் விஷயம் கூட முக்கியமானதாகும். இல்லற விவகாரங்களில் இருந்தபடியே தாமரை மலர் போல ஆக வேண்டும். அந்த தாமரை கூட தண்ணீருக்கு, பூமிக்கு மேலே இருக்கிறது. சைதன்ய (உயிருள்ள) மலர்களாகிய நீங்கள் கூட பூமிக்கு மேலே உள்ளீர்கள். எனவே நீங்கள் கூட நாங்கள் தூய்மையாக இருந்தபடியே உங்கள் ஒருவரை மட்டுமே நினைவு செய்வோம் என்று உறுதி எடுக்க வேண்டும். கடைசியில் உங்களைத் தவிர வேறு யாருடைய நினைவும் வரக் கூடாது. எந்த ஒரு அவகுணமும் கூட இருக்கக் கூடாது. எந்த குழந்தைகள் இது போல ஆகிறார்களோ அவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்த பயிற்சி நல்ல முறையில் செய்ய வேண்டும். சில சமயங்களில் நிலை வாடிப் போனதாக ஆகி விடுகிறது என்பதை குழந்தைகள் அறிவார்கள். மாயை சட்டென்று தொட்டாற் சிணுங்கிபோல ஆக்கிவிடுகிறது. ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்பது மிகவும் அவசியம் ஆகும். நான் எந்த அளவு தந்தையின் நினைவில் இருந்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். எந்த அளவு தந்தையின் சேவையில் நேரத்தை ஒதுக்குகிறேன்? யார் எப்படி இருந்தாலும் சரி, குழந்தை களாகிய நீங்கள் சேவை செய்து கொண்டே இருக்க வேண்டும். யார் ஆஸ்தியைப் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் என்று சோதிக்க வேண்டும். எப்படி ஒரு தேளுக்கு இது கல்லா அல்லது மென்மையான பொருளா என்று தெரிந்து விடுகிறது. பின் கல்லை ஒருபொழுதும் கொட்டாது. உங்களுடைய தொழிலே இது போலத்தான். நீங்கள் எல்லையில்லாத தந்தையின் மாணவர்கள் ஆவீர்கள் அல்லவா? படிப்பின் மீது தான் மிகுந்த ஆதாரம் உள்ளது. ஆரம்பத்தில் குழந்தைகள் முரளி இன்றி ஒரு நாளும் இருக்க முடியாமல் இருந்தார்கள். எவ்வளவு துடித்து கொண்டி ருந்தார்கள். (வகுப்பில் மூத்த சகோதரிகள் உனது முரளியில் மாயாஜாலம் என்ற பாட்டு பாடினார்கள்). பந்தனத்தில் இருக்கும் பெண்களுக்கு எப்படி முரளியை சேர்ப்பித்துக் கொண்டி ருந்தார்! முரளியில் தான் மாயாஜாலம் உள்ளது அல்லவா? என்ன மாயாஜாலம்? உலகத்தின் அதிபதி ஆவதற்கான மாயாஜாலம். இதை விட பெரிய மாயாஜாலம் எதுவும் இருப்பதில்லை. ஆக அந்த நேரத்தில் உங்களுக்கு முரளி மீது எவ்வளவு மதிப்பு இருந்தது. முரளியை சேர்ப்பிப் பதற்காக எவ்வளவு முயற்சி செய்து கொண்டிருந்தீர்கள். படிப்பு இல்லை என்றால் பாவம் நிலைமை என்ன ஆகும் என்று நினைத்து கொண்டிருந்தீர்கள். இங்கு முரளி மீது முழுமையான கவனமே கொடுக்காத அப்பேர்ப்பட்ட குழந்தைகளும் நிறைய உள்ளார்கள் என்பதை பாபா அறிந்திருக்கிறார். முரளியோ குழந்தைகளுக்கு புத்துணர்வு தருகிறது. உங்களை உலகிற்கே அதிபதியாக ஆக்கக் கூடிய அந்த பகவானின் முரளியைக் கேட்கவில்லை என்றால், பகவானான ஆசிரியர் என்ன கூறுவார்! பாபாவிற்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. போகப்போக நிறைய குழந்தைகளுக்கு மாயையின் புயல் எப்படித் தாக்குகிறது என்றால் முரளி படிப்பதை, வகுப்பிற்கு வருவதையே விட்டு விடுகிறார்கள். ஞானத்தின் மீது வெறுப்பு என்றால், பாபாவின் மீது வெறுப்பு. தந்தையிடம் வெறுப்பு என்றால் உலக அரசாட்சியிடம் வெறுப்பு. மாயை முற்றிலும் கீழே கொண்டு போய் விடுகிறது. புத்தியை ஒரேயடியாகக் கொன்று (மழுங்க வைத்து) விடு கிறது. அதனால் ஒன்றுமே புரிந்து கொள்வது இல்லை. பக்தியோ நிறைய செய்கிறார்கள் தான். ஆனால் முற்றிலும் குருட்டு நம்பிக்கை உடையவராக, புத்தி யற்றவராக ஆகி விட்டுள்ளார்கள்.

சுயம் தந்தையே கூறுகிறார்: நீங்கள் எவ்வளவு தகுதி உடையவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது தகுதி யற்றவராக ஆகி விட்டுள்ளீர்கள். இப்பொழுது நான் மீண்டும் குழந்தைகளாகிய உங்களை தகுதி உடையவர்களாக ஆக்குவதற்காக வந்துள்ளேன். எனவே ஸ்ரீமத்படி அவசியம் நடக்க வேண்டும். இதில் வேறு ஒன்றும் செய்ய வேண்டியது இல்லை. தந்தையை நினைவு செய்யுங்கள் மற்றும் படியுங்கள் அவ்வளவே என்று தந்தை கூறுகிறார். பள்ளிக் கூடத்தில் குழந்தைகள் படிக்கவும் செய்கிறார்கள் மற்றும் ஆசிரியரையும் நினைவு செய்கிறார்கள். நடத்தையைக் கூட திருத்திக் கொள்ள வேண்டும். உங்களுடைய லட்சியமும் எதிரிலேயே உள்ளது. நீங்கள் இது போல ஆக வேண்டும். அவர்களது நடத்தை நன்றாக உள்ளது. அதனால் தான் நாள் முழுவதும் மனிதர்கள் நீங்கள் சர்வகுண சம்பன்னர்கள்….. என்று பாடுகிறார்கள். மனிதர்களுக்கு தந்தையின் அறிமுகம் கிடைக்காதவரை இருளில் உள்ளார்கள். முழு உலகத்தின் மனிதர்கள் இச்சமயம் அநாதைகளாக உள்ளார்கள். அவர்களுக்கு தந்தையின் செய்தியை சேர்ப்பிக்க வேண்டும். நீங்கள் எல்லையில்லாத தந்தையின் குழந்தைகள் அல்லவா? தந்தை கூறுகிறார், என்னை நினைவு செய்தீர்கள் என்றால், உங்களது விகர்மங்கள் விநாசம் ஆகும். எல்லோருக்கும் எப்படி செய்தியைச் சேர்ப்பிக்கலாம் என்ற யுக்தியை குழந்தைகள் எடுத்து வர வேண்டும். பத்திரிக்கைத் தாட்கள் மூலம் ஒரு தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் பாவனமாக ஆகிவிடுவீர்கள் என்ற செய்தி எல்லோருக்கும் போய் சேரும். எல்லா ஆத்மாக்களும் முதலில் பாவனமாக இருந்தார்கள். இப்பொழுது எல்லாருமே அபவித்திரமாக உள்ளார்கள். இங்கு எந்த ஒரு பவித்திர ஆத்மாவும் இருக்க முடியாது. பவித்திர ஆத்மாக்கள் தூய்மையான உலகத்தில்தான் இருப்பார்கள். ஆத்மா தூய்மையாக ஆகி விடும் பொழுது பின் இந்த பழைய சட்டையை விடவேண்டி உள்ளது. ஆத்மா பாவனமாகவும் சரீரம் பதீதமாகவும் இருப்பது என்று ஆக முடியாது. எனவே பாபாவை நினைவு செய்து செய்து தங்களை தமோபிர தான நிலையிருந்து சதோபிரதானமாக ஆக்க வேண்டும். முதன் முதலில் நீங்கள் வரும் பொழுது தூய்மையாக இருந்தீர்கள். இப்பொழுது மீண்டும் தூய்மை ஆக வேண்டும். ஆத்மா தூய்மையாக ஆகிச் சென்று விடும். பிறகு தூய்மையான உலகத்தில் வரும். சாந்திதாமத்திற்குச் சென்று பின் கர்ப்ப அரண்மனையில் வருவீர்கள். அங்கு துக்கத்தின் பெயர் அடையாளம் இருப்பதில்லை. இராவண இராஜ்யமே இல்லை. ஆனால் புருஷார்த்தம் செய்து உயர்ந்த பதவி அடைய வேண்டும். இதற்கானது தான் இந்த படிப்பு ஆகும். சொர்க்கத்திலோ எல்லோரும் செல்வார்கள். ஆனால் உயர்ந்த பதவி அடைவதற்கான புருஷார்த்தம் செய்ய வேண்டும். சொர்க்கத்தின் ஸ்தாபனை மற்றும் நரகத்தின் விநாசம் ஆகிக் கொண்டிருக்கிறது என்பதையோ அறிந்துள்ளீர்கள். சிவாலயம் ஸ்தாபனை ஆகியது என்றால் வைசியாலயம் முடிந்து போய் விடும். சிவாலயத்திலோ வர வேண்டி உள்ளது. ஒருவர் இந்த சரீரத்தை விட்ட பின்னர் போய் இளவரசர் இளவரசி ஆவார்கள். ஒரு சிலர் பிரஜையில் போய் விடுவார்கள். யாருடைய (புத்தியின்) பாதை முற்றிலும் தெளிவாக உள்ளதோ, ஒரு தந்தையைத் தவிர வேறு யாருடைய நினைவும் வருவதில்லையோ அவருக்கு முழுமையான ஏழை என்று கூறப்படுகிறது. சரீரத்தைக் கூட நினைவு செய்யக் கூடாது. அதாவது உயிருடன் இருந்தே இறக்க வேண்டும். நாமோ இப்பொழுது நம்முடைய எல்லை யில்லாத வீட்டிற்குச் செல்ல வேண்டும். நமது வீட்டை மறந்திருந்தோம். இப்பொழுது தந்தை நினைவூட்டி இருக்கிறார்.

நீங்கள் வானப்பிரஸ்தி ஆவீர்கள் என்பதை தந்தை இனிமையிலும் இனிமையான குழந்தை களுக்குப் புரிய வைக்கிறார். இச்சமயம் உங்கள் அனைவருக்கும் வானப்பிரஸ்தி நிலை ஆகும். இப்பொழுது நான் சப்தத்திற்கு அப்பாற்பட்ட இடத்திற்கு எல்லா குழந்தைகளையும் அழைத்துச் செல்ல வந்துள்ளேன். வானப் பிரஸ்த நிலையில் செல்வதற்காக எல்லா பக்தர்களும் பக்தி செய்கிறார்கள். எல்லோரும் வானபிரஸ்த நிலையில் எப்படி செல்கிறார்கள் என்பதை இப்பொழுது தந்தை புரிய வைக்கிறார். அவர்களுக்கு இந்த வார்த்தையின் பொருள் கூடத் தெரியாது. பெயர் மட்டும் கேள்விப்பட்டுள்ளார்கள். துவாபரயுகம் முதற் கொண்டு லௌகீக குருக்கள் மூலமாக நிறைய புருஷார்த்தம் செய்துள்ளார்கள் என்றாலும் கூட யாருமே திரும்பிப் போக முடியாது. இப்பொழுது சிறியவர்களோ அல்லது பெரியவர்களோ அனைவருக்குமே வானப்பிரஸ்த நிலை ஆகும். உண்மையிலும் உண்மையான வானபிரஸ்த நிலையோ உங்களுடையது ஆகும். ஏனெனில் திரும்பிச் செல்ல வேண்டும். எல்லையில்லாத தந்தை அனைவரையும் அழைத்துச் செல்ல வந்துள்ளார். எனவே குழந்தைகளுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும். அனைவரையும் தந்தை தான் ஸ்வீட் சைலன்ஸ் ஹோம் லி இனிமையான அமைதி இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஏனெனில் ஆத்மாக்களுக்கு இப்பொழுது அமைதி வேண்டும். இங்கோ அமைதி இருக்க முடியாது. சாந்தி தாமத்தின் அதிபதியோ ஒரு பாபா மட்டுமே ஆவார். எஜமானன் வந்தால் தானே அனைவரை யும் அழைத்துச் செல்வார். சாந்தி தாமத்திற்குச் செல்வதற்காகத் தான் பக்தி செய்து கொண்டி ருந்தீர்கள். நாம் சுகதாமத்திற்குப் போகலாம் என்று யாரும் கூறுவ தில்லை. எனது ஸ்ரீமத்படி நடந்தீர்கள் என்றால் நான் உங்கள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்வேன் என்று குழந்தைகளாகிய உங்களுக்கு நான் உறுதி கொடுக்கிறேன் என்று பாபா கூறுகிறார். ஒருவர் சுகதாமத்திற்கு வரவில்லை என்றாலும் கூட சாந்தி தாமத்திற்கு அவசியம் அழைத்துச் செல்வேன். யாரையுமே விட மாட்டேன். செல்ல மாட்டேன் என்றால் தண்டனை வழங்கி, அடி உதை கொடுத்தாவது அழைத்துச் செல்வேன். எப்படி குழந்தைகளுக்கு தண்டனை கொடுக்கப் படுகிறது அல்லவா? குழந்தைகளாகிய உங்களையும் அவ்வாறே அழைத்துச் செல்வேன். ஏனெனில் நாடகத்தில் பாகமே அப்படித்தான் உள்ளது. எனவே சம்பாத்தியத்தை செய்து கொண்டு சென்றீர்கள் என்றால் நல்லது. பதவியும் நன்றாகக் கிடைக்கும். பின்னால் வருபவர் கள் என்ன சுகம் அடைவார்கள். பாபா கூறுகிறார், நீங்கள் விரும்பினாலும் சரி, விரும்பா விட்டாலும் சரி, உங்களுடைய எல்லா சரீரங்களுக்கும் நெருப்பு வைத்து விட்டு, ஆத்மாக்களை அவசியம் கூட்டிச் செல்ல வேண்டும். எனது வழிப்படி நடந்து சர்வகுணங்களின் சம்பன்னராக 16 கலை சம்பூர்ணமாக ஆனீர்கள் என்றால், உயர்ந்த பதவி அடைவீர்கள். ஏனெனில், என்னை அழைத்திருப்பதே வாருங்கள், வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள்! அதாவது மரணம் கொடுங்கள் என்று தான். மரணம் வந்து விட்டது போலவே தான் என்பதை எல்லோரும் அறிந்துள்ளார்கள். சீ. சீ. யாக இருப்பவர்கள் யாரும் இங்கே இருக்கப் போவதில்லை. நான் அனைவரையும் சீ. சீ.. உலகத்திலிருந்து அவசியம் கூட்டிச் செல்வேன் என்று தந்தை கூறுகிறார். யார் நல்ல முறையில் படிப்பார்களோ அவர்களே சுக தாமத்தில் வருவார்கள். சுகதாமம் அல்லது சொர்க்கம் ஒன்றும் ஆகாயத்தில் இல்லை. உங்களது நினைவார்த்த கோவில் தில்வாலா ஆகும். ஆதிதேவன் அமர்ந்துள்ளார். பாப்தாதா ஆவார்கள் அல்லவா? இவருடைய சரீரத்திலே பாபா வீற்றிருக்கிறார். இது தந்தை மற்றும் தாதா இருவரும் அமர்ந்துள்ளார்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.. இச்சமயம் குழந்தைகளாகிய நீங்கள் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அதன் அடையாளம் இந்த கோவிலில் காணப்படுகிறது,. மகாரதி, குதிரை படையும் உள்ளார்கள். (மாடல்) மாதிரி பார்த்து வருகிறீர்கள் அல்லவா? தில்வாலா கோவில் எவ்வளவு ரமணீகரமானது. கல்ப கல்பமாக மிகச் சரியாக இவ்வாறே கோவில் அமையும். பின் நீங்கள் போய் பார்ப்பீர்கள். இவை எல்லாமே இடிந்து போய் விடும். மீண்டும் எப்படி அமையும் என்று நீங்கள் கூறுவீர்கள். இந்த சிந்தனை செய்யக் கூடாது. சொர்க்கம் இப்பொழுது எங்கே உள்ளது? பின் சொர்க்கத்தின் அரண்மனைகள் அமையுமா? இந்த மலைகள் எல்லாம் இடிந்து போய் விடும். மீண்டும் அமையுமா? அபுமலை மீண்டும் அமையுமா… நிறைய குழந்தைகள் இந்த விஷயத்தில் மிகவும் குழம்புகிறார்கள். குழம்ப வேண்டிய அவசியமில்லை என்று தந்தை கூறுகிறார். துவாரகை கடலுக்குக் கீழே சென்று விட்டது மீண்டும் வெளிப்படும் என்று கூறு கிறார்கள். கீழே என்ன பொருள் போயிற்றோ அது போய் விட்டது. முடிந்து போய் விடும்.

சொர்க்கத்தில் நாம் நமது அரண்மனை ஆகியவற்றைக் கட்டுவோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அங்கு முற்றிலுமே சதோபிரதானமாக எல்லாமே புதுப்புது பொருட்களாக இருக்கும். நீங்கள் அங்கு இருக்கும் பழங்கள் ஆகியவற்றைப் பார்த்து வருகிறீர்கள். நாம் அங்கு செல்லக் கூடியவர்கள் ஆவோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். உலகத்தின் சரித்திரம் பூகோளம் திரும்ப நடைபெறுகிறது. பின் சொர்க்கம் கூட திரும்பி வரும். இந்த நிச்சயம் இருக்க வேண்டும். ஆனால் ஒருவரது அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் இது எப்படி ஆக முடியும் என்பார்கள். இத்தனை பேர் எல்லோரும் மீண்டும் வருவார்களா, மீண்டும் அரண்மனை ஆகிய வற்றை அமைப்பார்களா என்பார்கள். சோமநாத்தின் கோவிலை கொள்ளை அடித்துச் செல்வார்கள். மீண்டும் கோவில் கட்டுவார்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த விளையாட்டே பூஜிக்கத் தக்க நிலையிலிருந்து பூசாரி, பூசாரியிலிருந்து பூஜிக்கத்தக்கவர் ஆவதற்குரியதாகும். பிராமணர், தேவதை, க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர்…… இது சக்கரம் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் கோடானுகோடி பாக்கியசாலி ஆகிறீர்கள். உங்களது ஒவ்வொரு அடியிலும் கோடியின் முத்திரை பதிந்து விடுகிறது. நமது ஒவ்வொரு அடியிலும் கோடி உள்ளது. அதாவது படிப்பு என்ற ஒவ்வொரு அடியிலும் கோடி அடங்கி உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். எந்த அளவு படிப்பீர்களோ அந்த அளவு உயர்ந்த பதவி அடைவீர்கள். சத்யுகம் என்பது தங்க யுகம் ஆகும். அங்கு இருக்கும் பூமி கூட எவ்வளவு அழகானதாக இருக்கும். எவ்வளவு அழகான அரண்மனைகள் அமைகின்றன. ஒவ்வொரு பொருளும் சதோபிர தானமாக இருக்கும். பார்க்கும் பொழுதே கண்கள் குளிர்ந்து போய் விடும். அப்பேர்ப்பட்ட ராஜதானிக்கு நீங்கள் அதிபதி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். எனவே எவ்வளவு நல்ல முறையில் புருஷார்த்தம் செய்ய வேண்டும். புருஷார்த்தத்தினால் தான் பிராலப்தம் (பலன்) அமைகிறது. குழந்தைகளுக்கு ஞானமோ புத்தியில் உள்ளது. தந்தையை நினைவு செய்ய வேண்டும். லௌகீக சம்பந்தத்தின் மீதுள்ள பற்றை நீக்க வேண்டும். ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. தந்தையின் நினைவில் இருந்து எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். ஒரு பொழுதும் வாடிப்போகக் கூடாது. நோய்வாய்ப்பட்டிருந்தால் கூட முரளி அவசியம் கேட்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும்.

2. படிப்பின் மூலம் ஒவ்வொரு அடியிலும் கோடி சேமிப்பு செய்ய வேண்டும் மற்ற தொடர்பை விடுத்து ஒரு தந்தையிடம் இணைக்க வேண்டும்.

வரதானம்:-

எப்படி பிரம்மா தந்தை திட சங்கல்பத்துடன் ஒவ்வொரு செயலிலும் வெற்றியை அடைந்தார். ஒரு தந்தையை தவிர வேறு யாருமில்லை லி இதை நடைமுறையில் செயல் புரிந்து காண்பித்தார். ஒரு பொழுதும் மனமுடைந்தவர் ஆகவில்லை. எப்பொழுதும் நத்திங் நியூ லி எதுவும் புதிதல்ல என்ற பாடத்தில் வெற்றியாளராக ஆனார். இமயமலை போன்ற பெரிய விஷயத்தைக் கூட மலையிலிருந்து பஞ்சு போல ஆக்கி வழியை அமைத்தார், ஒரு பொழுதும் பயப்படவில்லை, அதே போல எப்பொழுதும் பெரிய மனது வையுங்கள், மகிழ்ச்சியான மனதுடன் இருங்கள். ஒவ்வொரு அடியிலும் பிரம்மா தந்தையை பின்பற்றினீர்கள் என்றால், சமீபத் திலிருப்பவராகவும், சமானமானவராகவும் ஆகி விடுவீர்கள்.

சுலோகன்:-

அன்பில் மூழ்கியிருக்கும் மனநிலையை அனுபவம் செய்யுக்கள் :

எந்த அளவிற்கு எல்லையில்லாத பிராப்திகளில் மூழ்கி இருப்பீர்களோ, அந்த அளவிற்கு எல்லைக்குட்பட்ட கவர்ச்சிகளிலிருந்து அப்பாற்பட்டு பரமாத்ம அன்பில் ஒன்றி இருக்கும் அனுபவம் செய்வீர்கள். உங்களுடைய இந்த (லவ்லீன் ஸ்திதி) முழ்கிய நிலை வாயுமண்டலத்தில் ஆன்மீகத்தின் நறுமணத்தை பரப்பும்.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top