09 July 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

July 8, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! உங்களுடைய கெட்டுப் போனதை சீர்திருத்தும் அதாவது துரதிஷ்டசாலியை அதிர்ஷ்டசாலியாக ஆக்கக் கூடியவர் ஒரு பாபா தான், அவர் தான் உங்களுக்கு ஞானம் கொடுத்து அதிர்ஷடசாலியாக ஆக்குகின்றார்.

கேள்வி: -

குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஆன்மீக பட்டியில் அமருவதற்கான ஒரு விதி என்ன?

பதில்:-

ஆன்மீகப் பட்டி என்றால் நினைவு யாத்திரையில் அமரக் கூடியவர்களின் எண்ணம் ஒரு போதும் இங்கும் அங்கும் செல்லக் கூடாது, ஒரு பாபாவை நினைவு செய்ய வேண்டும். உங்கள் புத்தி இங்கும் அங்கும் செல்கின்றது என்றால் தூங்கி விழுவீர்கள், கொட்டாவி வரும், இதனால் வாயுமண்டலம் கெட்டு விடும். தனக்குத் தானே நஷ்டத்தினை உண்டாக்குகின்றீர்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

உள்ளத்தின் உதவியாளனை துண்டித்து விட வேண்டாம்

ஓம் சாந்தி! இனிமையிலும்லிஇனிமையான ஆன்மீகக் குழந்தைகள் பாட்டின் இரண்டு வார்த்தை களைக் கேட்டீர்கள். குழந்தைகளுக்கு எச்சரிக்கை கொடுக்கின்றார். இந்த நேரத்தில் கூட பிராமணர் களான உங்களைத் தவிர அனைவரின் அதிர்ஷ்டமும் கெட்டு விட்டது. நீங்களும் கூட இப்பொழுது கெட்டதை சீர்திருத்திக் கொண்டு இருக்கின்றீர்கள். பாபாவைத் தான் அதிர்ஷ்டத்தை உருவாக்கக் கூடியவர் என்று சொல்லப்படுகின்றது. நீங்கள் சிவபாபா எவ்வளவு இனிமையானவர் என்று அறிவீர்கள். பாபா என்ற வார்த்தையே மிகவும் இனிமை யானது. பாபாவிடமிருந்து தான் அனைத்து ஆத்மாக்களுக்கும் ஆஸ்தி கிடைக்கின்றது. லௌகீக தந்தையால் ஆண் குழந்தைகளுக்கு ஆஸ்தி கிடைக்கின்றது, பெண் குழந்தைகளுக்கு இல்லை. ஆனால் இங்கே ஆண் குழந்தை களும், பெண் குழந்தைகளும் ஆஸ்திக்கு அதிகாரி ஆகின்றார்கள். பாபா தன்னுடைய குழந்தைகளுக்கு அதாவது ஆத்மாக்களுக்கு கற்பிக்கின்றார். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதை புரிந்து கொண்டீர்கள். உண்மையில் இதுதான் சகோதரத்துவம் என்று சொல்லப்படுகின்றது ! ஒரு பகவானின் குழந்தைகள் பின்பு ஏன் இவ்வளவு சண்டை போடுகின்றார்கள். அனைவரும் தங்களுக்குள் சண்டை போடு கின்றார்கள். அநேக தர்மம், அநேக வழி மேலும் முக்கியமான விஷயம் இராவண இராஜ்யத்தில் சண்டை நடக்கின்றது, ஏனென்றால் விகாரம் அனைவரிடமும் நுழைந்துள்ளது. காம விகாரத்திற்காக எவ்வளவு சண்டை போடுகின்றார்கள் ! அப்படி அநேக இராஜாக்கள் சண்டை போட்டுள்ளார்கள். காமத்திற்காக அதிக சண்டை போட்டு உள்ளார்கள். எவ்வளவு சந்தோஷம் அடை கின்றார்கள். யாரிடமாவது மனதைப் பறி கொடுத்து விட்டால் கொலையும் கூட செய்கின்றார்கள். காமம் மஹா எதிரி. கோபமுள்ளவரை கோபக்காரன் என்று தான் சொல்கின்றோம். பேராசை உள்ளவரை பேராசைக்காரன் என்று சொல்கின்றோம். ஆனால் காமம் உள்ளவருக்கு மட்டும் அநேக பெயர் வைத்துள்ளார்கள். ஆகையால் தான் அமிர்த்தை விட்டு விஷத்தை ஏன் குடிக்கின்றீர்கள் என்று சொல்கின்றார்கள். சாஸ்திரத்தில் அமிர்தம் என்ற பெயரை வைத்துள்ளார்கள். கடலைக் கடையும் போது அமிர்தம் வெளிப்பட்டது என்று சொல்கின்றார்கள். இலட்சுமியிடம் தான் கலசம் கொடுத்துள்ளார்கள். எவ்வளவு கதைகள் உள்ளன. இதில் கூட பெரிய திலும் பெரிய விஷயம். சர்வவியாபி என்ற விஷயம், கீதையின் பகவான் யார் என்ற விஷயம், மேலும் பதீதலிபாவனர் யார்? கண்காட்சியில் இந்த விஷயங்களின் படங்களை வைத்து புரிய வைக்க வேண்டும். பதீதலி பாவனன், ஞானக்கடல் மேலும் அதிலிருந்து வெளிப்பட்ட ஞான கங்கைகள் அதாவது தண்ணீரின் நதியா அல்லது கடலா? எவ்வளவு நல்லலிநல்ல விஷயங்கள் புரிய வைக்கப்படுகின்றது ! .பாபா உட்கார்ந்து புரிய வைக்கின்றார் – இனிமையிலும், இனிமையான குழந்தைகளே! உங்களை யார் பாவனம் ஆக்கு கின்றார்? கெட்டுப் போனதை சீர்திருத்தக் கூடியவர் யார்? இந்த பதீதலிபாவனன் எப்பொழுது வருகின்றார்? இந்த விளையாட்டு எப்படி உருவாகி உள்ளது? யாரும் அறிவதில்லை. பாபாவுக்குத் தான் ஞானக்கடல், கருணைக்கடல், அமைதிக்கடல் என்று சொல்லப்படுகின்றது. கெட்டுப் போனதை சீர்திருத்தக் கூடியவர் ஒருவர்தான் என்று சொல்லப்படுகின்றது. இராவணன் தான் நம்மைக் கெடுக் கின்றார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்த விளையாட்டே வெற்றி, தோல்வி யானது. இராவணனைக் கூட நீங்கள் அறிவீர்கள் உருவ பொம்மையை ஒவ்வொரு வருடமும் எரிக்கின்றார்கள். இவர் பாரதத்தின் எதிரி. பாரதத்தில் தான் ஒவ்வொரு வருடமும் எரிக்கின்றார்கள். அவர்களிடம் போய் நீங்கள் எப்பொழுதிலிருந்து இதை எரிக்கின்றீர்கள் என்று கேளுங்கள். அவர்கள் காலம்-காலமாக, உலகப் படைப்பின் ஆரம்பத்திலிருந்து செய்கின்றோம் என்று சொல்வார்கள். சாஸ்திரத்தில் என்ன எல்லாம் படித்தோமோ அது தான் உண்மை என்று சொல்லிக் கொண்டு வந்தோம். ஈஸ்வரனை சர்வ வியாபி என்று சொல்வது முக்கியமான விஷயமாகும். பாபா இது யாருடைய தவறு என்று சொல்வதில்லை. இது நாடகத்தில் பதிவாகியுள்ளது. வெற்றிலி தோல்வியின் விளையாட்டு. மாயாவிடம் தோல்வியே தோல்வி, மாயாவிடம் வெற்றியே வெற்றி ! மாயாவிடம் எப்படி தோல்வி அடைகின்றீர்கள் என்பதைப் புரிய வைக்கின்றார். முழு அரைக்கல்பம் இராவண இராஜ்யம் நடக்கின்றது. ஒரு வினாடி கூட வித்தியாசம் ஏற்படாது. இராம இராஜ்யத்தின் ஸ்தாபனை, இராவண இராஜ்யத்தின் வினாசம் நடக்கின்றது. நாடகத்தில் அதன் நேரப்படி சரியாக நடக்கின்றது. சத்தியயுகத்தில் இலங்கை இருப்பதில்லை. அது புத்த தர்மத்தின் தேசம். எழுத படிக்கத் தெரிந்தவர்கள் இலண்டன் இந்தப் பக்கம் உள்ளது, அமெரிக்கா இந்தப்பக்கம் உள்ளது என்று தெரிந்துள்ளார்கள். படிப்பால் புத்தியின் பூட்டு திறக்கப்படுகின்றது, ஒளி கிடைக்கின்றது. இதற்கு ஞானத்தின் மூன்றாவது கண் என்று சொல்லப்படுகின்றது. வயதானவர்கள் நிறைய விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. இவர்கள் அந்த ஒரே ஒரு விஷயம் தாரணை செய்ய வேண்டும் அது தான் கடைசியில் உதவும். மனிதர்கள் சாஸ்த்திரம் நிறைய படிக்கின்றார்கள். கடைசியில் ஒன்று சொல்கின்றார்கள் ராம்லிராம் என்று சொல்லுங்கள். சாஸ்த்திரம் படியுங்கள், வேதம் படியுங்கள் என்று சொல்வதில்லை. கடைசியில் இராமரை நினையுங்கள் என்று சொல்கின்றார்கள். வாழ்க்கையில் அதிக காலம் எதைப் பற்றி அதிகம் நினைக்கின்றார்களோ அது தான் கடைசியில் நினைவு வரும். இப்பொழுது அழிவு அனைவருக்கும் வரப் போகின்றது. அனைவரும் யாரை நினைப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும். சிலர் சிருஷ்ணரை, சிலர் தன்னுடைய குருவை நினைப்பார்கள். தேகத்தை நினைத்தால் விளையாட்டு முடிந்து விடும். இங்கு ஒரு விஷயம் தான், தன்னை ஆத்மா என்று நினைத்து பாபாவை நினைவு செய்யுங்கள் என்று உங்களுக்குப் புரிய வைக்கின்றார். நாம் எவ்வளவு நேரம் நினைக்கின்றோம் என்று சார்ட் வையுங்கள். எவ்வளவு நினைக்கின்றோமோ, அவ்வளவு பாவனம் ஆகிக் கொண்டே போவீர்கள். கங்கையில் குளிப்பதால் பாவனம் ஆக முடியாது. இது ஆத்மாவின் விஷயம் அல்லவா ! ஆத்மா தான் பதீத், ஆத்மா தான் பாவனம் ஆகின்றது இல்லையா? ஆத்மா ஒரு (ஸ்டார்) புள்ளி போன்று உள்ளது என்று பாபா புரிய வைக்கின்றார். இரு புருவங்களுக்கும் மத்தியில் உள்ளது. ஆத்மா ஸ்டார் மிக சூட்சமமானது என்று சொல்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் தான் இந்த விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியும். நான் கல்ப-கல்பம் சங்கமயுகத்தில் தான் வருகின்றேன் என்று பாபா சொல் கின்றார். மற்றவர்கள் கல்பம் என்ற வார்த்தையை விட்டு யுகம்லியுகம் என்ற வார்த்தையைப் போட்டு விட்டார்கள். அதனால் மனிதர்கள் எவ்வளவு தவறாகப் புரிந்துள்ளார்கள். கல்ப-கல்பமாக சங்கம யுகத்தில் வருகின்றேன் என்று நான் சொல்கின்றேன். அடர்ந்த இருள் மேலும் பிரகாகசமான வெளிச்சம் இரண்டும் நடுவில் சங்கமம். மற்றபடி யுக-யுகமா வருவதற்கு அவசியம் இல்லை. ஏணிப்படி இறங்கிக் கொண்டே தான் வருகின்றது. எப்பொழுது 84 ஜென்மம் முழுமையாக நீங்கள் எடுத்து முடிக்கின்றீர்களோ அப்பொழுது நான் வருகின்றேன் என்று பாபா கூறுகின்றார். இந்த ஞானம் முழு உலகத்திற்கானதாகும். சன்யாசிகள் சொல்லிவிடு கின்றார்கள் இந்த படமெல்லாம் கற்பனை யானது என்று. ஆனால் இதில் கற்பனைக்கான விஷயம் என்பதே இல்லை. இது அனைவருக்கும் புரியவைக்கின்றோம், இல்லையென்றால், மனிதர்களுக்கு எப்படித் தெரியும்? அதனால் தான் இந்த படங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி அனைத்து தேசத்திலும் அநேக முறை போடப்படுகின்றது. அதிகமாக பாரதவாசி குழந்தைகள்தான் உள்ளார்கள் என்று பாபா சொல்கின்றார். ஆனாலும் அனைவரும் குழந்தைகள் தான். இது அநேக தர்மத்தின் மரம். நீங்கள் காமம் என்ற சிதையில் உட்கார்ந்ததால் எரிந்து விட்டீர்கள் என்று புரிய வைக்கின்றார். சத்திய யுகத்தில் யார் முதலில் வருகின்றார்களோ அவர்களே துவாபர யுகத்தில் முதன் முதல் வந்து காம அக்னியில் எரிகின்றார்கள் அதனால் தான் கருப்பாக ஆகிவிட்டார்கள். இப்பொழுது அனைவருக்கும் சத்கதி ஏற்பட வேண்டும். நீங்கள் தான் நிமித்தமாக உள்ளீர்கள். உங்களுக்குப் பின்னால் தான் அனைவருக்கும் சத்கதி ஏற்பட வேண்டும். பாபா எவ்வளவு எளிமையாகப் புரிய வைக்கின்றார். பாபாவை மட்டும் நினைவு செய்யுங்கள் என்று சொல்கின்றார். ஆத்மா தான் துர்கதியை அடைந்து விட்டது. ஆத்மா பதீதமாக ஆனதால் உடல் கூட அவ்வாறே கிடைக்கின்றது. ஆத்மாவை பாவனம் ஆக்குவதற்காக பாபா எளிய வழியைக் கற்றுக்க் கொடுக்கின்றார்.

திரிமூர்த்தி படத்தில் பிரம்மாவின் படத்தைப் பார்த்து மனிதர்கள் ஐயோ-ஐயோ ! என்று சொல் கின்றார்கள். இவரை பிரம்மா என்று ஏன் சொல்கின்றீர்கள்? பிரம்மாவோ சூட்சுமவாசி தேவதை, அவர் இங்கே எப்படி வந்தார்? இந்த தாதா புகழ் பெற்றவராக இருந்தார். செய்தித்தாள்களில் எல்லாம் இவர் பெயர் வந்தது, ஒரு வைர வியாபாரி தன்னை ஸ்ரீகிருஷ்ணன் என்று சொல்கின்றார், எனக்கு 16108 ராணிகள் வேண்டும் என்று சொல்கின்றார். அவரை விரட்டுவதற்காக போராட்டம் அதிகமானது. இப்பொழுது ஒவ்வொருவருக்கும் எப்படி புரிய வைப்பது ? இத்தனை மனிதர்கள் உள்ளார்கள். அபுவில் கூட யாராவது வந்தால் உடனே கேட்கின்றார்கள் நீங்கள் பிரம்மா குமாரிகளிடம் போகின்றீர்களா? அவர்கள் மந்திரம் போடுகின்றார்கள். ஆண்-பெண் இருவரையும் சகோதரன்-சகோதரி ஆக ஆக்கு கின்றார்கள். பெரிய-பெரிய விஷயம் கூறி மனதைக் கெடுத்துவிடுகின்றார்கள். நீங்கள் என்னை ஞானக்கடல், உலகத்தின் சர்வ சக்திவான் என்று சொல்கின்றீர்கள் அல்லவா என்று பாபா கேட்கின்றார். உலகின் சர்வசக்திவான் என்றால், வேத சாஸ்த்திரங்கள் அனைத்தையும் அறிந்தவர். பெரிய பண்டிதர்களைக் கூட சக்தி என்று சொல்கின்றோம். ஏனென்றால், அவர்கள் அனைத்து வேத, சாஸ்த்திரம் படித்தவர்கள் பனாரஸ் சென்று பட்டத்தை வாங்குகின்றார்கள். மஹா மஹோ பாத்தியாய, ஸ்ரீ,ஸ்ரீ 108 சரஸ்வதி என்ற இந்த பட்டம் யாவும் அங்கு தான் கிடைக்கின்றது. யார் மிகவும் புத்திசாலிகளோ அவர்களுக்கு இந்த பட்டம் கிடைக்கின்றது. சாஸ்த்திரத்தில் ஜனகரைக் கூட எழுதி உள்ளார்கள். யாராவது உண்மையான பிரம்ம ஞானத்தை சொல்லுங்கள் என்று கேட்கின்றார். இங்கு பிரம்ம ஞானி யாரும் இல்லை. அனைத்தும் இங்குள்ள விஷயங்கள் தான். கதைகளைப் பெரியதாக்கி விட்டார்கள். சங்கரர்-பார்வதி கதைகள் கூட எழுதி உள்ளார்கள். எவ்வளவு கதைகள் எழுதி உள்ளார் கள். சங்கரர் அமர்ந்து பார்வதிக்கு கதை சொன்னதாக காட்டுகின்றார்கள், உண்மையில் சிவன் தான் சொல்கின்றார். ஆனால் அவர்கள் சங்கரர் பார்வதி பெயரை எழுதி விட்டார்கள். பாகவதம் இவை அனைத்தும் இப்பொழுது நடக்கும் விஷயம் தான், பிறகு கதையாக எழுதி விட்டார்கள். இராஜாவுக்குப் போய் இந்த ஞானம் சொல்வோம் என்று அவர்கள் எண்ணத்தில் தோன்றியது. இராஜாக்களுக்கு போய் ஞானம் கொடுங்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். நீங்கள் சூர்ய வம்சத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள், பிறகு சந்திர வம்சம், வைஷ்ய வம்சம், சூத்திர வம்சம் ஆகின்றீர்கள். உங்களுடைய இராஜதானி போய் விட்டது. இப்பொழுது மீண்டும் புருஷார்த்தம் செய்து சூர்யவம்ச இராஜ்யத்தை அடைகின்றீர்கள். இராஜ யோகத்தைக் கற்றுக் கொடுக்கக் கூடிய பாபா வந்துள்ளார். பின்பு வந்து சுய இராஜ்யத்தை அடையுங்கள். இராஜாக்களிடம் எத்தனை கடிதங்கள் போகின்றது ஆனால் அவருக்கு கிடைக்கின்றதா என்ன, அவரின் (பர்ஸனல் செகரட்ரி) தனிச் செயலர் கடிதங்களைப் பார்க்கின்றார்கள், எவ்வளவு கடிதங்களை எரிந்து விடு கின்றார்கள். முக்கியமான விஷயங்களாக இருந்தால் தான் இராஜாவிற்குக் காட்டுகின்றார்கள். அஷ்டாவக்கிரன் ஜனகருக்கு ஒரு வினாடியில் ஜீவன் முக்தியின் காட்சியைக் காண வைத்தார் என்று சொல்லப்படுகின்றது. இப்பொழுது பாபா வந்து எவ்வளவு நல்ல விதமாகப் புரிய வைக்கின்றார். யார் புரிந்து கொள்ளவில்லையோ அவர்கள் தான் இங்கும், அங்கும் பார்ப்பார்கள். அவர்கள் புத்தியில் உட்காரவில்லை என்று பாபா உடனே புரிந்து கொள்கின்றார். அனைவரும் நல்லவிதமாக கேட்கின்றார்களா என்று பாபா நாலா புறமும் பார்க்கின்றார். இவர்கள் புத்தி எங்கோ அலைந்து கொண்டு இருக்கின்றது என்றால், கொட்டாவி விட்டுக் கொண்டே இருப்பார் கள், புத்தியில் ஞானம் பதியாத பொழுது தூங்கி வழிவார்கள், நஷ்டமாகிவிடுகிறது, கராச்சியில் குழந்தைகளுக்கு யோக பாட்டி நடத்தப்பட்டது, தூக்கம் வந்தால் உடனே வெளியில் சென்று விடுவார்கள், அவர்களாகவே தான் வந்து அமர்ந்தார்கள், வெளியில் இருந்து யாரும் வரவில்லை, . ஆரம்பத்தில் இவர்களுக்கு பெரிய நடிப்பின் பார்ட் இருந்தது. பெரிய கதை இருக்கும். ஆரம்பத்தில் குழந்தைகள் மிகவும் தியானத்தில் போய் விடுவார்கள். இப்பொழுது கூட மந்திரவாதி (மந்திரம் செய்பவர்கள்) என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். பரமபிதா பரமாத்மாவை மந்திரவாதி என்று சொல்கின்றார்கள் அல்லவா? அவர்களுக்கு பாபாவின் மீது மிகவும் அன்பு உள்ளது, அதனால் தான் பார்த்தவுடன் தியானத்தில் போய் விடுகின்றார்கள் என்று பாபா பார்க்கின்றார். வைகுண்டம் என்பது பாரதவாசிகளுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் யாராவது இறந்தால் கூட வைகுண்டவாசி ஆகிவிட்டார், சொர்க்கவாசி ஆகிவிட்டார் என்று சொல்கின்றார்கள். இப்பொழுது இது நரகமாக உள்ளது. அனைவரும் நரகவாசிகள் ஆகி விட்டார்கள், அதனால் தான் யாராவது இறந்தால் சொர்க்க வாசி ஆகி விட்டார் என்று சொல்கின்றார்கள். ஆனால் யாரும் சொர்க்கத்திற்குப் போவதில்லை. இப்பொழுது நீங்கள் மட்டும் தான் அறிவீர்கள் நாம் தான் சொர்க்கவாசியாக இருந்தோம், பின்பு 84 ஜென்மம் எடுத்து நரகவாசி ஆகி விட்டோம். இப்பொழுது மீண்டும் பாபா சொர்க்கவாசியாக ஆக்கிக் கொண்டிருக்கின்றார். சொர்கத்தில் தான் நமது இராஜதானி இருந்தது. இராஜதானியில் அநேக பதவிகள் இருக்கின்றது. முயற்சி செய்து மனிதனிலிருந்து நாராயணன் ஆக வேண்டும். மம்மாலிபாபா எதிர்காலத்தில் இலட்சுமி-நாராணன் ஆகின்றார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்கள். இப்பொழுது புருஷார்த்தம் செய்து கொண்டு இருக்கின்றீர்கள், ஆகையால் தான் தாய்-தந்தையைப் பின்பற்றுங்கள் என்று சொல்லப்படுகின்றது. இவர்கள் எப்படி முயற்சி செய்தார்களோ, அப்படி நீங்களும் செய்யுங்கள். சுயதர்சன-சக்கரதாரி ஆக வேண்டும் இது கூட நினைவு இருக்க வேண்டும். நீங்கள் பாபாவை நினைவு செய்யுங்கள், ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். திரிகாலதர்ஷி ஆகுங்கள். உங்களுக்கு முழு சக்கரத்தின் ஞானம் உள்ளது, இதில் முழ்கியிருங்கள். மற்றவர்களுக்குப் புரிய வையுங்கள். இந்த சேவையிலேயே ஈடுபட்டு இருந்தால் மற்ற எந்த தொழில் வேலை ஆகியன நினைவு வராது. நல்லது.

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) சத்தியுகத்தில் உயர்ந்த பதவி அடைவதற்காக தாய்-தந்தையை முழுமையாகப் பின்பற்றுங்கள்.அவர்களை போன்று முயற்சி செய்யுங்கள். சேவையில் முழ்கியிருங்கள். ஒருமித்த மனதோடு படியுங்கள்.

2) நினைவின் சார்ட்டை உண்மையானதாக வைக்க வேண்டும். தன்னை ஆத்மா என்று நினைத்து பாபாவை நினைவு செய்யுங்கள், தேகம் தேக சம்மந்தப்பட்டவர்களை நினைவு செய்ய வேண்டாம்.

வரதானம்:-

ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் இணைந்தே (சேர்ந்து) இருக்கிறது, எதுவரை இந்த சிருஷ்டியில் பாகம் இருக்கிறதோ, அதுவரை பிரிக்கவே முடியாது. அதே போன்று சிவன் மற்றும் சக்தி இரு வருக்கும் அந்த அளவிற்கு ஆழமான சம்மந்தம் இருக்கிறது. யார் சதா சிவசக்தி சொரூபத்தின் ஸ்திதியில் இருந்து நடந்து கொள்கிறார்களோ, அவர்களது ஈடுபாட்டில் மாயை தடை போட முடியாது. அவர்கள் சதா துணை மற்றும் சாட்சி நிலையின் அனுபவம் செய்வார்கள். சாகாரத்தில் துணையாக இருப்பது போன்று அனுபவம் செய்வார்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

1 thought on “09 July 2021 TAMIL Murli Today | Brahma Kumaris”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top