09 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

09 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

8 January 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

திரிதேவ் (மூன்று தேவர்கள்) படைப்பவர் மூலம் வரதானங்களின் பிராப்தி

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று மூன்று தேவர்களையும் படைப்பவர் தம்முடைய சாகார மற்றும் ஆகார (சூட்சும) படைப்புகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இரண்டு படைப்புகளுமே மிகவும் பிரியமானவை. அதனால் படைப்பவர் படைப்பைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறார். படைப்புகள் சதா இந்தக் குஷியின் பாடலைப் பாடுகிறார்கள் — ஆஹா படைப்பவர்! படைப்பவர் சதா இந்தப் பாடலைப் பாடுகிறார் – ஆஹா என்னுடைய படைப்பு! படைப்புகள் பிரியமானவர்கள். யார் பிரியமான வராக இருக்கிறாரோ, அவருக்கு சதா அனைத்தும் கொடுத்து சம்பன்னமாக்குகிறார். ஆக, பாபா ஒவ்வொரு சிரேஷ்ட படைப்பையும் விசேஷமாக மூன்று சம்பந்தங்களிலும் எவ்வளவு சம்பன்னமாக்கியிருக்கிறார்! தந்தையின் சம்பந்தத்தில் கொடுக்கும் வள்ளலாகி ஞான கஜானாக் களால் சம்பன்னமாக்கினார். ஆசிரியர் ரூபத்தில் பாக்கிய விதாதா ஆகி அநேக ஜென்மங் களுக்கு பாக்கியவான் ஆக்கினார். சத்குரு ரூபத்தில் வரதாதா ஆகி வரதானங்களால் பையை நிரப்பி விட்டார். இது தான் அவிநாசி சிநேகம் அல்லது அன்பு. அன்பின் விசேஷத் தன்மை இது தான் – யாரிடம் அன்பு உள்ளதோ, அவரது குறைகளை பார்க்க நன்றாக இருப்பதில்லை (சகித்துக் கொள்ள இயலாது). குறையை அற்புதத்தின் ரூபத்தில் மாற்றி விடுவதற்கான சுப சங்கல்பம் உள்ளது. அன்பில் பாபாவுக்கு குழந்தைகளின் கடின உழைப்பைப் பார்க்க (சகித்துக் கொள்ள) முடிவதில்லை. ஏதாவது கடின உழைப்பு அவசியம் என்றால் செய்யுங்கள். ஆனால் பிராமண வாழ்க்கையில் கடினமாக உழைப்பதற்கான அவசியமே இல்லை. ஏனென்றால் வள்ளல், விதியை உருவாக்குபவர் மற்றும் வரங்களை வழங்கும் வள்ளல் (தாதா, விதாதா, வரதாதா) மூன்று சம்பந்தங்களிலும் அந்த அளவுக்கு நிறைந்தவராக ஆகி விடுகிறீர்கள் – அதனால் முயற்சி இன்றி ஆன்மிக மகிழ்ச்சியில் இருக்க முடிகிறது. ஆஸ்தியும் உள்ளது, படிப்பும் உள்ளது மற்றும் வரதானமும் உள்ளது. யாருக்கு மூன்று ரூபங்களிலும் பிராப்தி உள்ளதோ, அத்தகைய சர்வ பிராப்திகள் உள்ள ஆத்மாவுக்கு கடினமாக உழைப்பதற்கான அவசியம் என்ன உள்ளது? சில நேரம் ஆஸ்தியின் ரூபத்தில் அல்லது பாபாவை வள்ளல் ரூபத்தில் நினைவு செய்யுங்கள். அப்போது ஆன்மிக அதிகாரி நிலையின் நஷா இருக்கும். ஆசிரியர் ரூபத்தில் நினைவு செய்வீர்களானால் இறைமாணவன், அதாவது பகவானின் ஸ்டூடன்ட் — என்ற பாக்கியத்தின் நஷா இருக்கும். சத்குரு ஒவ்வோர் அடியிலும் வரதானங் களால் நடத்திக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கர்மத்திலும் சிரேஷ்ட வழிமுறை — பாப்தாதாவின் வரதானம். யார் ஒவ்வோர் அடியிலும் சிரேஷ்ட வழிமுறையில் நடக்கிறார் களோ, அவர்களுக்கு ஒவ்வோரடியிலும் கர்மத்தின் வெற்றிக்கான வரதானம் சகஜமாக, தானாக மற்றும் அவசியம் கிடைக்கும். சத்குருவின் வழிமுறை சிரேஷ்ட கதியை அடையச் செய்கிறது. கதி- சத்கதி அடையச் செய்கிறது. சிரேஷ்ட வழிமுறை மற்றும் சிரேஷ்ட கதி. தனது இனிய வீடு, அதாவது கதி, மற்றும் இனிய ராஜ்யம், அதாவது சத்கதி – இதையோ அடையவே செய்கிறீர்கள். ஆனால் பிராமண ஆத்மாக் களுக்கு இன்னும் விசேஷமான கதி கிடைக்கிறது. அது இச்சமயத்திலும் கூட சிரேஷ்ட வழிமுறையின் சிரேஷ்ட கர்மத்தின் உடனடி பலன், அதாவது வெற்றி. இந்த சிரேஷ்ட கதி சங்கமயுகத்தில் தான் பிராமணர்களாகிய உங்களுக்குக் கிடைக்கிறது. ஆகவே சொல்கின்றனர் – எப்படி வழிமுறையோ, அப்படி கதி. அவர்களோ இறப்புக்குப் பின் கதி கிடைக்கும் என நினைக்கின்றனர். அதனால் அந்த் மதி ஸோ கதி எனச் சொல்கின்றனர். ஆனால் பிராமண ஆத்மாக்களாகிய உங்களுக்கு இந்தக் கடைசி மர்ஜீவா ஜென்மத்தில் ஒவ்வொரு கர்மத்திற்கான வெற்றியின் பலன், அதாவது கதியினை அடைவதற்கான வரதானம் கிடைத்து விட்டுள்ளது. நிகழ்காலம் மற்றும் வருங்காலம் – சதா சத்கதி இருக்கவே செய்கிறது. வருங்காலத்திற்காக நீங்கள் காத்திருப்பதில்லை. சங்கமயுக பிராப்திகளினுடைய மகத்துவம் இது தான். அவ்வப்போது கர்மம் செய்யுங்கள் மற்றும் அவ்வப் போது பிராப்தியின் அதிகாரத்தைப் பெறுங்கள். இதைத் தான் ஒரு கையால் கொடுங்கள், இன்னொரு கையால் பெறுங்கள் எனச் சொல்வது. எப்போதாவது கிடைத்துவிடும் அல்லது வருங்காலத்தில் கிடைத்து விடும். இது ஆறுதலுக்கான வியாபாரமன்று. உடனடி தானம் மகா புண்ணியம் – அப்படிப்பட்ட பிராப்தி. இதைத் தான் உடனடி வியாபாரம் எனச் சொல்வது. பக்தியில் காத்துக் கொண்டே இருங்கள் – கிடைத்து விடும், கிடைத்து விடும் பக்தியில் எப்போதாவது. இங்கே பாபா சொல்கிறார் — இப்போதே எடுத்துக் கொள்ளுங்கள். ஆதி ஸ்தாபனையில் கூட உங்களுக்குப் புகழ் இருந்தது — இங்கே சாட்சாத்காரம் உடனே கிடைக்கிறது – அது நடக்கவும் செய்தது. ஆக, ஆரம்பத்திலிருந்து உடனடி வியாபாரம் நடை பெற்றது. இதைத் தான் படைப்பவருக்குப் படைப்பின் மீது உண்மையான அன்பு எனச் சொல்வது. முழுக் கல்பத்திலும் அந்த மாதிரி அன்பானவர் யாரும் இருக்கவே முடியாது. எவ்வளவு தான் புகழ் பெற்ற அன்பானவராக இருந்தாலும் சரி, இது அழியாத அன்பு மற்றும் அழியாத பிராப்தி. ஆக, அந்த மாதிரி அன்பானவர் யாரும் இருக்கவே முடியாது. எனவே பாபாவுக்கு குழந்தைகளின் கடின உழைப்பைப் பார்த்து இரக்கம் வருகிறது. வரதானி, சதா ஆஸ்திக்கு அதிகாரி ஒரு போதும் கடின உழைப்பு செய்ய முடியாது. பாக்கியவிதாதா ஆசிரியரின் பாக்கியவான் குழந்தைகள் சதா பாஸ் வித் ஆனர் ஆவார்கள். ஃபெயிலாவதும் இல்லை, வீண் விஷயங்களை உணர்வதும் (ஃபீலிங்) இல்லை.

கடின உழைப்பிற்கான காரணங்கள் இரண்டு தான் — மாயாவின் விக்னங்களால் ஃபெயிலாகி விடுகின்றனர் அல்லது சம்பந்தம்-தொடர்பில், பிராமணர்களின் அல்லது அஞ்ஞானிகளின் – இரண்டு சம்பந்தங்களிலும் கர்மத்தில் வரும் போது சின்ன விஷயத்தில் வீணானதை உணர்கின்றனர். இதை நீங்கள் ஃப்ளூ நோய் எனச் சொல்கிறீர்கள். ஃப்ளூ என்ன செய்கிறது? ஒன்று குழப்பம் ஏற்படுகிறது. அதில் சரீரம் ஆடிப்போகிறது. மேலும் இந்த ஆத்மாவின் ஸ்திதி ஆட்டம் காணுகின்றது. மனம் ஆடுகிறது மற்றும் வாய் கசப்பாகிறது. இங்கேயும் வாயினால் கசப்பான (கடும்) சொல் பேசத் தலைப்படுகின்றனர். பிறகு என்ன நடக்கிறது? சில நேரம் குளிர், சில நேரம் சூடு (வெப்பம்) அதிகமாகி விடுகிறது. இங்கேயும் எப்போது ஃபீலிங் வருகிறதோ, அப்போது உள்ளுக்குள் ஆவேசம் வருகிறது. வெப்பம் அதிகரிக்கிறது – இவர் என்ன இப்படிப் பேசினார்? இவர் ஏன் இப்படிச் செய்தார்? இது போல் கேட்பது ஆவேசம். இதில் நீங்கள் அனுபவி தான் இல்லையா? பிறகு என்ன நடக்கிறது? உணவு-பானம் நன்றாக இருப்பதில்லை. இங்கேயும் சிலர் நல்ல ஞானத்தின் விஷயங்களையும் சொல்வார்கள். இருந்தாலும் அது சிலருக்கு நன்றாக இருப்பதில்லை. கடைசியில் ரிசல்ட் என்னவாகிறது? பலவீனம் வந்து விடுகிறது. இங்கேயும் கொஞ்ச நேரம் வரை பலவீனம் இருக்கிறது. அதனால் ஃபெயிலாகவும் வேண்டாம், ஃபீல் பண்ணவும் (வருத்தப்படவும்) வேண்டாம். பாப்தாதா சிரேஷ்ட வழிமுறை தருகிறார். சுத்த உணர்வு (ஃபீலிங்) இருக்க வேண்டும் – நான் சர்வ சிரேஷ்டமான, அதாவது கோடியில் ஓர் ஆத்மா, நான் தேவ ஆத்மா, மகான் ஆத்மா, பிராமண ஆத்மா. விசேஷ பார்ட்தாரி ஆத்மா. இந்த ஃபீலிங்கில் இருப்பவர்க்கு வீண் ஃபீலிங் என்ற ஃப்ளூ வராது. இந்த சுத்த ஃபீலிங்கில் இருங்கள். எங்கே சுத்த ஃபீலிங் இருக்குமோ, அங்கே அசுத்த ஃபீலிங் இருக்க முடியாது. ஆகவே ஃப்ளூ நோயிலிருந்து, அதாவது கடின உழைப்பிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். மேலும் சதா தன்னை அந்த மாதிரி அனுபவம் செய்வீர்கள் – நாம் வரதானங்களால் வளர்ந்து கொண்டிருக்கிறோம், வரதானங்களால் முன்னேறிப் பறந்து கொண்டிருக்கிறோம், வரதானங்களால் சேவையில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

கடினமாக உழைப்பது நன்றாக இருக்கிறதா அல்லது கடினமாக உழைப்பது பக்கா ஆகி விட்டுள்ளதா? கடின உழைப்பு நன்றாக இருக்கிறதா அல்லது மகிழ்ச்சியில் இருப்பது நன்றாக இருக்கிறதா? சிலருக்கு கடின உழைப்பின் காரியமல்லாமல் எந்த ஒரு காரியமும் பிடிக்காது. அவர்களை நாற்காலியில் ஓய்வாக அமர்த்தி வைப்பீர்களானால் சொல்வார்கள் — எனக்கு கடினமாக உழைக்கிற மாதிரி வேலை கொடுங்கள். இது ஆத்மாவுக்கான உழைப்பு மற்றும் ஆத்மா 63 பிறவிகளாக உழைத்துக் களைத்துப் போயிருக்கிறது. 63 பிறவிகளாகத் தேடிக் கொண்டே இருந்தீர்கள் இல்லையா? யாரையாவது தேடுவதில் கடின உழைப்பு உள்ளது இல்லையா? ஆகவே முன்பே களைத்துப் போனவர்களாக இருக்கிறீர்கள். 63 பிறவிகளாகக் கடினமாக உழைத்து முடித்து விட்டீர்கள். இப்போது ஒரு பிறவியாவது மகிழ்ச்சியில் இருங்கள். 21 பிறவிகளோ வருங்காலத்தின் விஷயம். ஆனால் இந்த ஒரு பிறவி விசேஷமானது. கடின உழைப்பு மற்றும் மகிழ்ச்சி இரண்டையும் நீங்கள் அனுபவம் செய்ய முடியும். வருங்காலத் திலோ அங்கே (சத்யுகத்தில்) இந்த விஷயங்கள் அனைத்தும் மறந்து போகும். மகிழ்ச்சியோ இப்போது தான். மற்றவர்கள் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் மகிழ்ச்சியில் இருக்கிறீர்கள். நல்லது.

டீச்சர்கள் பக்தி செய்திருக்கிறீர்களா? எத்தனைப் பிறவிகளாக பக்தி செய்தீர்கள்? இந்தப் பிறவியிலோ பக்தி செய்யவில்லை தானே? உங்கள் பக்தி முதல் பிறவியில் முடிந்து விட்டது. பிறகு எப்போதிருந்து பக்தியை ஆரம்பித்தீர்கள்? யாருடன் ஆரம்பித்தீர்கள்? பிரம்மா பாபாவோடு கூடவே நீங்களும் பக்தி செய்தீர்கள். எந்தக் கோயிலில் செய்தீர்கள்? ஆக, பக்தியிலும் ஆதி ஆத்மாக்கள், ஞான மார்க்கத்திலும் கூட ஆதி ஆத்மாக்கள். ஆரம்ப கால பக்தியில் கலப்படமற்ற பக்தியாக இருந்த காரணத்தால் பக்தியின் ஆனந்தம், சுகம் அந்தச் சமயத் தின் படி குறையவில்லை. அந்த சுகம் மற்றும் ஆனந்தம் கூட உங்கள் இடங்களில் உயர்ந்ததாக இருந்தது.

பக்த மாலையில் நீங்கள் இருக்கிறீர்களா? நீங்கள் பக்தியை ஆரம்பித்த போது பக்த மாலையில் நீங்கள் இல்லையா? இரட்டை வெளிநாட்டினர் பக்த மாலையில் இருந்தார்களா? பக்தர் ஆனீர்களா அல்லது பக்த மாலையில் இருந்தீர்களா? இப்போது அனைவரும் யோசித்துக் கொண்டுள்ளனர் – நாம் இருந்தோமா அல்லது நாம் இல்லையா? விஜயமாலையிலும் இருந்தீர்கள். பக்த மாலையிலும் இருந்தீர்களா? பூஜாரியாகவோ ஆனீர்கள். ஆனால் பக்த மாலையில் இருந்தீர்களா? பக்த மாலை என்பது வேறு. நீங்களோ ஞானியில் இருந்து பக்தரானீர்கள். அவர்கள் பக்தராகவே இருக்கிறார்கள். ஆக, பக்த மாலை மற்றும் ஞானிகளின் மாலைக்கிடையில் வேறுபாடு உள்ளது. ஞானிகளின் மாலை என்பது விஜயமாலை. மேலும் யார் வெறுமனே பக்தர்களாக மட்டுமே இருக்கிறார்களோ, அப்படிப்பட்ட தீவிர பக்தர்கள், பக்தியின்றி வேறு விஷயங்களைக் கேட்கவும் விரும்பாதவர்கள். பக்தி மட்டுமே உயர்ந்தது என நினைக்கின்றனர். ஆக, பக்த மாலை வேறு, ஞான மாலை வேறு. பக்தியை நீங்கள் அவசியம் செய்தீர்கள். ஆனால் பக்த மாலையில் இருந்ததாகச் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் பக்தியின் பார்ட் நடித்து முடித்த பிறகு நீங்கள் அனைவரும் ஞானத்தில் வந்தாக வேண்டும். அவர்கள் தீவிர பக்தர்கள். நீங்கள் தீவிர ஞானிகள். ஆத்மாவில் சம்ஸ்காரங்களின் வேறுபாடு உள்ளது. பக்தர் என்றால் சதா யாசிக்கிற சம்ஸ்காரம் இருக்கும். நான் தாழ்ந்தவன், தந்தை உயர்ந்தவர் என்ற சம்ஸ்காரம் இருக்கும். அவர்கள் ராயல் பிச்சைக்காரர்கள். மற்றும் ஆத்மாக்களாகிய உங்களிடம் அதிகாரித் தன்மையின் சம்ஸ்காரம் உள்ளது. ஆகவே அறிமுகம் கிடைத்ததுமே அதிகாரி ஆகி விட்டீர்கள். புரிந்ததா? பக்தர்களுக்கும் கூட ஏதாவது இடம் கொடுங்களேன்! இரண்டிலும் நீங்கள் வருவீர்களா என்ன? அவர்களுக்கும் அரைக்கல்பம், உங்களுக்கும் அரைக்கல்பம் தான். அவர்களும் மகிமையின் மாலையில் வந்தாக வேண்டும். பிறகும் கூட உலக மனிதர்களில் நல்லவர்களாக உள்ளனர். வேறு பக்கமோ புத்தி செல்வ தில்லை. தந்தையின் பக்கம் மட்டுமே உள்ளது. சுத்தமாகவோ இருக்கிறார்கள். பவித்திரதாவின் பலன் கிடைக்கிறது — மகிமைக்குத் தகுதியுள்ளவராக. உங்களுக்குப் பூஜை நடைபெறும். அவர்களுக்குப் பூஜை நடப்பதில்லை. சிலைகளை மட்டும் உருவாக்கி வைக்கின்றனர் — மகிமை பாடுவதற்காக. மீராவுக்கும் கூட கோவில் இருக்காது. தேவதைகளுக்குச் செய்வது போல் மீராவுக்குப் பூஜை இருக்காது. மகிமையின் பாடல் மட்டுமே இருக்கும். இப்போது கடைசிப் பிறவியில் எதற்கு வேண்டு மானாலும் பூஜை நடைபெறலாம். பூமிக்கும் பூஜை என்றால் மரத்துக்கும் பூஜை. ஆனால் நியமத்தின் படி அவர்களுக்கு மகிமைப் பாடல் மட்டும் தான். பூஜை கிடையாது. நீங்கள் தாம் பூஜைக்குரியவர் ஆகிறீர்கள். ஆக, நீங்கள் பூஜைக்குரிய ஆத்மாக்கள் – இந்த நஷாவை சதா நினைவில் வையுங்கள். பூஜைக்குரிய ஆத்மா ஒரு போதும் எந்த ஒரு அபவித்திர சங்கல்பத்தையும் தொடக்கூட மாட்டார்கள். அந்த மாதிரி பூஜைக் குரியவராக ஆகியிருக்கிறீர்கள். நல்லது.

நாலாபுறமும் உள்ள ஆஸ்திக்கு அதிகாரியான ஆத்மாக்களுக்கு, சதா படிப்பில் பாஸ் வித் ஆனர் ஆகக்கூடிய, சதா வரதானங்கள் மூலமாக வரதானி ஆகி, மற்றவர்களையும் வரதானி ஆக்கக்கூடிய — அத்தகைய தந்தை, ஆசிரியர், சத்குருவுக்குப் பிரியமான, சதா ஆன்மிக மகிழ்ச்சியில் இருக்கக்கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

பஞ்சாப் – இராஜஸ்தான் குரூப் : சதா தன்னை புனித அன்னப்பறவை என அனுபவம் செய்கிறீர்களா? புனித அன்னப்பறவை என்றால் சக்திசாலி மற்றும் வீணானதைப் பகுத்தறிபவர்கள். அந்த அன்னப்பறவை கூழாங்கற்களையும் இரத்தினங்களையும் வேறுபடுத்தும். முத்துகளையும் கற்களையும் வேறுபடுத்தும். ஆனால் புனித அன்னப்பறவை களான நீங்கள் எதைப் பகுத்தறிபவர்கள்? சக்திசாலி எது, வீணானது எது மற்றும் சுத்தமானது எது, அசுத்தமானது எது? எப்படி அன்னப்பறவை ஒரு போதும் கூழாங்கற்களை எடுத்துக் கொள்ளாது. இரண்டையும் தனித்தனியாகப் பிரித்து வைத்து விடும். கல்லை விட்டு விடும், அதை கிரகிக்காது. அதே போல் புனித அன்னப்பறவைகள் நீங்கள் வீணானற்றை விட்டு விடுகிறீர்கள். சக்திசாலி சங்கல்பங்களை தாரணை செய்கிறீர்கள். வீணானவை வந்து விட்டாலும் கூட அதை தாரணை செய்ய மாட்டீர்கள். வீணானவற்றை தாரணை செய்பவர் களை புனித அன்னப்பறவை எனச் சொல்ல மாட்டார்கள். அவற்றைக் கொக்குகள் தாம் தாரணை செய்யும். வீணானவற்றை நிறையக் கேட்டீர்கள், பேசினீர்கள், செய்தீர்கள். ஆனால் அதன் விளைவு என்னாயிற்று? இழந்தீர்கள், அனைத்தையும் இழந்து விட்டீர்கள் இல்லையா? உடலையும் இழந்து விட்டீர்கள். தேவதைகளின் உடலைப் பாருங்கள் மற்றும் இப்போதைய உடலையும் பாருங்கள் — என்னவாக உள்ளது? எவ்வளவு வேறுபாடு! இளைஞர்களைக் காட்டிலும் முதியவர்கள் நன்றாக உள்ளனர். ஆக, உடலையும் இழந்தீர்கள், மனதின் சுகம்-சாந்தியையும் இழந்தீர்கள். செல்வத்தையும் இழந்தீர்கள். உங்களிடம் எவ்வளவு செல்வம் இருந்தது! அளவற்ற அந்த செல்வமெல்லாம் எங்கே போனது? வீணானவற்றில் இழந்தீர்கள். இப்போது சேமித்துக் கொண்டிருக்கிறீர்களா அல்லது இழந்து கொண்டிருக்கிறீர்களா? புனித அன்னப்பறவைகள் என்றால் இழப்பவர்கள் அல்ல, சேமிப்பவர்கள். இப்போது 21 பிறவிகளுக்கு உடலும் நல்லதாகக் கிடைக்கும் மற்றும் மனமும் சதா குஷி நிறைந்ததாக இருக்கும். இப்போது மண் எப்படி நிறைய உள்ளதோ, அது போல் செல்வம் நிறைந்திருக்கும். இப்போது மண்ணும் கூட மதிப்பு வாய்ந்ததாக ஆகி விட்டது. ஆனால் அங்கே இரத்தினங்களுடனோ நீங்கள் விளையாடுவீர்கள். இரத்தினங்களால் மாளிகை அலங்கரிக்கப் பட்டதாக இருக்கும். ஆக, எவ்வளவு சேமித்துக் கொண்டிருக்கிறீர்கள்? யாருக்கு சேமிப்பாகிறதோ, அவர்களுக்குக் குஷி இருக்கும். சேமிப்பாகவில்லை என்றால் மனம் சிறியதாகி விடும் (இதயம் சுருங்கி விடும்). சேமிப்பாகுமானால் உள்ளம் பெரியதாகி விடும். இப்போது எவ்வளவு பெரிய இதயம் (பரந்த உள்ளம்) ஆகி விட்டது! ஆக, ஒவ்வோர் அடியிலும் சேமிப்புக் கணக்கு அதிகமாகிக் கொண்டே போகிறதா அல்லது எப்போதாவது தான் சேமிக்கிறீர்களா? தனது சார்ட்டை நல்லபடியாகப் பார்த்திருக்கிறீர்களா? இந்த மாதிரி சமயத்திலும் கூட எந்த ஒரு விஷயமும் வீணானதாக ஆகாமல் உள்ளதா? இப்போதோ சங்கமயுகத்தின் மதிப்பினைப் பற்றித் தெரிந்து விட்டது இல்லையா? சங்கமயுகத்தின் ஒரு விநாடி எவ்வளவு பெரியது! இது நினைவிருக்குமானால் ஒரு விநாடியைக் கூட வீணாக்க மாட்டீர்கள். ஒரு விநாடியை இழப்பது என்றால் வருடத்தை இழப்பதாகும் – சங்கமத்தின் ஒரு விநாடிக்கு அவ்வளவு மகத்துவம் உள்ளது. ஆகவே சேமிப்பவர்களே தவிர இழப்பவர்கள் அல்ல. ஏனென்றால் ஒன்று, இழப்பது நடக்கும் அல்லது சேமிப்பாகும். முழுக் கல்பத்திலும் வருமானம் சம்பாதிப்பதற்கான நேரம் இப்போது தான். ஆகவே புனித அன்னப்பறவை என்றால் கனவிலும் நினைவிலும் கூட ஒரு போதும் எதையும் இழந்து விட மாட்டார்கள்.

ஹோலி என்றால் பவித்திரதாவின் சக்தி மூலம் அபவித்திரதாவை ஒரு விநாடியில் விரட்டுபவர்கள். தனக்காக மட்டுமில்லாமல் மற்றவர்களுக்காகவும் கூட. ஏனென்றால் முழு உலகையும் மாற்ற வேண்டும் இல்லையா? பவித்திரதாவின் சக்தி எவ்வளவு உயர்ந்தது! இதையோ அறிவீர்கள் இல்லையா? பவித்திரதா என்பது அத்தகைய ஓர் அக்னி – அது உலகத்தின் குப்பைகளை ஒரு விநாடியில் சாம்பலாக்கி விடக்கூடியது. சம்பூர்ண பவித்திரதா என்பது அப்படிப்பட்ட ஒரு சிரேஷ்ட சக்தியாகும். கடைசியில் அனைவரும் சம்பூர்ணம் ஆகிவிடும் போது உங்கள் சிரேஷ்ட சங்கல்பத்தின் ஈடுபாட்டின் அக்னி மூலம் இந்தக் குப்பைகள் அனைத்தும் சாம்பலாகி விடும். யோக ஜுவாலை இருக்க வேண்டும். கடைசி நேரத்தில் இது போல் மெது-மெதுவாக சேவை நடைபெறாது. நினைத்ததும் நடந்து விட்டது – இதைத் தான் அதி தீவிர வேகமான சேவை எனச் சொல்வார்கள். இப்போது உங்களுக்குள் நிரப்பிக் கொண்டிருக்கிறீர்கள். பிறகு காரியத்தில் ஈடுபடுத்துவீர்கள். எப்படி தேவிகளின் நினைவுச் சின்னங்களைக் காட்டுகின்றனர் — ஜுவாலை மூலம் அசுரர்களை பஸ்மம் செய்து விட்டதாக. அசுரர் இல்லை, ஆனால் அசுர சக்திகளை அழித்து விட்டனர். இது எந்தச் சமயத்தின் ஞாபகார்த்தம்? இப்போதைய சமயத்தினுடையது இல்லையா? ஆக, அந்த மாதிரி ஜுவாலாமுகி ஆகுங்கள். நீங்கள் ஆகவில்லை என்றால் யார் ஆவார்கள்? ஆகவே இப்போது ஜுவாலாமுகி ஆகி, அசுர சம்ஸ்காரம், அசுர சுபாவம் அனைத்தையும் பஸ்மம் செய்யுங்கள். உங்களுடைய சம்ஸ்காரங்களை பஸ்மம் செய்து முடித்து விட்டீர்கள் இல்லையா? அல்லது இப்போது தான் செய்து கொண்டிருக்கிறீர்களா? நல்லது.

பஞ்சாப் காரர்கள் பயமற்றவர்களாகவோ ஆகி விட்டார்கள். பயப்படுபவராகவோ இல்லை தானே? ஜுவாலாமுகி நீங்கள், ஏன் பயப்பட வேண்டும்? ஏற்கனவே இறந்து போய் விட்டீர்கள், பிறகு எதற்கு பயம்? மேலும் இராஜஸ்தான் தங்களின் இராஜ்ய அதிகாரத்தை ஒரு போதும் மறக்கக் கூடாது. இராஜ்யத்தை மறந்து இராஜஸ்தானின் பாலைவனமோ நினைவுக்கு வரவில்லையே? அங்கே மணல் நிறைய இருக்கிறது இல்லையா? ஆக, சதா புது ராஜ்யத்தின் நினைவு இருக்கட்டும். அனைவரும் பயமற்ற ஜுவாலாமுகி ஆகி, இயற்கை மற்றும் ஆத்மாக் களுக்குள் உள்ள தமோகுணங்களை பஸ்மம் செய்பவர் ஆகுங்கள். இது மிகப்பெரிய காரியம். வேகமாகச் செய்வீர்களானால் நிறைவு பெற்று விடும். இப்போதோ மனிதர்களுக்கே செய்தி போய்ச் சேரவில்லை. இயற்கை பற்றிய விஷயமோ பின்னால் தான் வரும். எனவே வேகத்தைத் தீவிரமாக்குங்கள். ஒவ்வொரு தெருவிலும் சென்டர் இருக்க வேண்டும். ஏனென்றால் சூழ்நிலையின்படி ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெருவுக்குச் செல்ல இயலாமல் போகும். ஒருவர் மற்றவரைப் பார்க்கக் கூட முடியாத நிலை உருவாகும். ஆகவே ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு தெருவிலும் சென்டர் ஆகிவிடும் இல்லையா? நல்லது.

வரதானம்:-

எப்படி பிரம்மா பாபா சாதாரண உடலில் இருந்தாலும் சதா புருஷோத்தமராக அனுபவம் ஆனது. சாதாரணத் தன்மையில் புருஷோத்தம நிலையின் ஜொலிப்பு காணப்பட்டது. அது போல் தந்தையைப் பின்பற்றுங்கள். கர்மம் சாதாரணமானதாக இருந்தாலும் ஸ்திதி உயர்ந்ததாக இருக்க வேண்டும். முகத்தின் மீது உயர்ந்த வாழ்க்கையின் பிரபாவம் தெரிய வேண்டும். எப்படி லௌகிக ரீதியில் அநேகக் குழந்தைகளின் நடத்தை மற்றும் முகம் தந்தைக்கு சமமாக உள்ளது. இங்கே முகத்தின் விஷயம் இல்லை. ஆனால் நடத்தை தான் சித்திரம். ஒவ்வொரு நடத்தை மூலம் பாபாவை அனுபவம் செய்ய வேண்டும். பிரம்மா பாபாவுக்கு சமமாக புருஷோத்தம ஸ்திதி இருக்க வேண்டும். அப்போது பாபாவுக்கு சமமானவர் எனச் சொல்வார்கள்.

சுலோகன்:-

மூழ்கிய நிலையின் அனுபவம் செய்யுங்கள்

இந்தப் பரமாத்ம அன்பு என்பது ஆனந்தமயமான ஊஞ்சலாகும். இந்த சுகம் தரும் ஊஞ்சலில் சதா ஆடிக் கொண்டிருங்கள். பரமாத்ம அன்பில் மூழ்கி இருப்பீர்களானால் ஒரு போதும் எந்த ஒரு பரிஸ்திதி அல்லது மாயாவின் நிழலும் வர முடியாது.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top