08 August 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

August 7, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இரட்டை அயல்நாட்டு பிராமணக் குழந்தைகளின் சிறப்பம்சங்கள்

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று பாக்கியவிதாதா பாப்தாதா தனது சிரேஷ்ட பாக்கியவான் குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார். ஒவ்வொரு குழந்தையின் பாக்கியமும் சிரேஷ்டமானது தான், ஆனாலும் அதில் வரிசைக்கிரமம் இருக்கிறது. இன்று பாப்தாதா அனைத்துக் குழந்தைகளின் உள்ளத்தில் ஆர்வம்-உற்சாகத்திற்கான திட சங்கல்பத்தை கேட்டுக் கொண்டிருக்கின்றார். சங்கல்பத்தின் மூலம் அனைவரும் செய்த உரையாடல் சங்கல்பம் செய்தவுடனேயே பாப்தாதாவிடம் வந்து சேர்ந்து விட்டது. சங்கல்பத்தின் சக்தி வார்த்தைகளின் சக்தியை விட மிக சூட்சுமமாக இருக்கின்ற காரணத் தினால் மிகவும் விரைவான வேகத்தில் செல்கின்றது மற்றும் சென்றடைகின்றது. உரை யாடலுக்கான மொழி சங்கல்பத்தின் மொழியாகும். விஞ்ஞானிகள் சப்தங்களை புரிந்து கொள்கின்றனர். ஆனால் சங்கல்பத்தை புரிந்து கொள்வதற்கு சூட்சும சாதனம் வேண்டும். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையின் சங்கல்பத்தின் மொழியை சதா கேட்கின்றார், அதாவது சங்கல்பத்தை புரிந்து கொள்கின்றார். இதற்கு புத்தி மிகவும் சூட்சுமானதாக, தூய்மையானதாக, தெளிவானதாக இருக்க வேண்டும். அப்போது தான் தந்தையின் பதிலுரையை புரிந்து கொள்ள முடியும்.

பாப்தாதாவிடம் அனைவரின் திருப்தி அல்லது சதா குஷியாக இருப்பதற்கான, தடை களற்று இருப்பதற்கான, சதா பாப்சமான் ஆவதற்கான சிரேஷ்ட சங்கல்பம் வந்தடைந்து விட்டது. மேலும் குழந்தைகளின் திட சங்கல்பத்தின் மூலம் சதா வெற்றிக்கான வாழ்த்துக்களை பாப்தாதா கொடுத்துக் கொண்டிருக்கின்றார். ஏனெனில் எங்கு திடத்தன்மை இருக்கிறதோ, அங்கு வெற்றி உறுதி. இது சிரேஷ்ட பாக்கியவான் ஆவதற்கான அடையாள மாகும். சதா உறுதியான மனநிலை, சிரேஷ்ட மனநிலை இருக்க வேண்டும். சங்கல்பத்திலும் பலவீனம் இருக்கக் கூடாது – இதைத் தான் சிரேஷ்ட நிலை என்று கூறப்படுகின்றது. குழந்தைகளின் விசாலமான உள்ளத்தைப் பார்த்து சதா விசால உள்ளம், விசால புத்தி, விசால சேவை மற்றும் விசால சன்ஸ்காரம் போன்ற சதா விசாலமானவர் ஆகுக என்ற வரதானத்தையும் வரதாதா கொடுத்துக் கொண்டிருக்கின்றார். விசால உள்ளம் என்றால் எல்லையற்ற நினைவு சொரூபம் ஆகும். ஒவ்வொரு விசயத்திலும் எல்லையற்று அதாவது விசாலமாக இருப்பதாகும். எங்கு எல்லையற்ற நிலை இருக்கிறதோ, அங்கு எந்த விதமான எல்லைக்கு உட்பட்டவைகள் தன் பக்கம் ஈர்க்காது. இது தான் பாபாவை போல கர்மாதீத் பரிஸ்தா வாழ்க்கை என்று கூறப்படு கிறது. கர்மாதீத் நிலை என்றாலே அனைத்து வகையான எல்லைக்குட் பட்ட சுபாவ, சம்ஸ்காரத்தி-ருந்து விடுபட்டு இருப்பதாகும். எல்லைக்குப்பட்டது பந்தனமாகும், எல்லை யற்றது நிர்பந்தன் ஆகும். ஆக சதா இந்த விதியின் மூலம் வெற்றியை பிராப்தியாக அடைந்து கொண்டே இருப்பீர்கள். அனைவரும் தனக்குள் என்ன திட சங்கல்பம் செய்தீர்களோ, அது சதா நிலையானதாக, உறுதியானதாக இருக்கட்டும், அழிவற்றதாக இருக்கட்டும், அதாவது உடைந்து விடக் கூடாது. இவ்வாறு சங்கல்பம் செய்திருக்கிறீர்கள் அல்லவா! மதுவன் என்ற அடையாளக் கோடு வரை சங்கல்பம் செய்யவில்லை தானே? சதா கூடவே இருக்கும் அல்லவா?

முரளிகள் அதிகம் கேட்டிருக்கிறீர்கள். இப்போது என்ன கேட்டீர்களோ, அதை செய்ய வேண்டும். ஏனெனில் இந்த சாகார உலகில் சங்கல்பம், வார்த்தை மற்றும் செயல் மூன்றிற்கும் மகத்துவம் இருக்கிறது, மூன்றில் தான் மகான் நிலை இருக்கிறது – இது தான் சம்பன்ன நிலை என்று கூறப்படுகிறது. இந்த சாகார உலகிலேயே முழு மதிப்பெண்கள் பெற வேண்டி யது மிகவும் அவசிய மாகும். ஒருவர் எனது சங்கல்பம் மிகவும் சிரேஷ்டமானதாக இருக்கிறது என்று நினைக்கின்றார். ஆனால் செயல் மற்றும் வார்த்தைகளில் வித்தியாசம் இருந்தால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா? ஏனெனில் சங்கல்பத்தின் ஸ்தூல கண்ணாடி வார்த்தை மற்றும் செயலாகும். சிரேஷ்ட சங்கல்ப முடையவரின் வார்த்தை இயற்கையாகவே சிரேஷ்டமாக இருக்கும். ஆகையால் மூன்று விசேஷத் தன்மைகள் இருந்தால் தான் நம்பர்ஒன் ஆவதாகும்.

பாப்தாதா இரட்டை அயல்நாட்டுக் குழந்தைகளைப் பார்த்து, சதா குழந்தைகளின் விசேஷத்தாவைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார். அந்த விசேஷதா என்ன? எவ்வாறு பிரம்மா பாபாவின் சிரேஷ்ட சங்கல்பத்தின் மூலம் மற்றும் சிரேஷ்ட சங்கல்பத்தின் ஆவாஹனம் மூலம் தெய்வீகப் பிறப்பை பிராப்தியாக அடைந்தார். அதே போன்று சிரேஷ்ட சங்கல்பத்தின் விசேˆ படைப்பின் காரணத்தினால் தனது சங்கல்பங்களை சிரேஷ்டம் ஆக்குவதில் விசேˆ கவனம் இருக்கிறது. சங்கல்பத்தின் மீது கவனம் இருக்கின்ற காரணத்தினால் மாயாவின் எந்த வகையான சூட்சும யுத்தத்தையும் விரைவாகவே அறிந்து விடுகிறீர்கள், மேலும் மாற்றுவதற் காக அல்லது வெற்றி அடைவதற்கான முயற்சி செய்து சீக்கிரம் அழிப்பதற்கான உழைப்பும் செய்கிறீர்கள். சங்கல்ப சக்தியை சதா சுத்தமாக ஆக்குவதில் கவனம் நன்றாக இருக்கிறது. தன்னை பரிசோதிக்கும் பயிற்சி நன்றாக இருக்கிறது. சூட்சும பரிசோதனையின் காரணத்தினால் சிறிய தவறையும் உணர்ந்து தந்தையின் முன், நிமித்தமாக இருக்கும் குழந்தைகளின் முன் வைப்பதில் சுத்தமான உள்ளத்துடன் இருக்கிறீர்கள். ஆகையால் இந்த விதியின் மூலம் அசுத்தங்கள் (குப்பைகள்) சேர்வது கிடையாது. பெருபான்மையானவர்கள் சுத்தமான உள்ளத் துடன் பேசுவதில் சங்கோசப்படுவது கிடையாது, ஆகையால் எங்கு சுத்தம் இருக்கிறதோ, அங்கு தெய்வீக குணங்கள் எளிதாக தாரணை ஆகிவிடுகிறது. தெய்வீக குணங்களின் தாரணை அதாவது ஆவாஹனம் செய்வதற்கான விதியே தூய்மை ஆகும். எவ்வாறு பக்தியிலும் லெட்சுமியை அல்லது வேறு எந்த ஒரு தேவியை ஆவாஹனம் செய்கின்றனர் எனில் ஆவாஹனம் செய்யும் விதி தூய்மையை கடைபிடிக்கின்றனர். ஆக இந்த தூய்மை என்ற சிரேஷ்ட சுபாவம், தெய்வீக சுபாவத்தை தானாகவே ஆவாஹனம் செய்கின்றது. இந்த விசேஷதா அதிகபட்சம் இரட்டை அயல்நாட்டுக் குழந்தைகளிடம் இருக்கிறது. ஆகையால் தீவிர வேகத்தில் முன்னேறு வதற்கான பொன்னான வாய்ப்பு நாடகப்படி கிடைத்திருக்கிறது. இதைத் தான் கடைசியில் வந்திருந்தாலும் வேகமாக செல்ல முடியும் என்று கூறப்படுகிறது. வேகமாகச் செல்வதற்கான இந்த விசேˆதா நாடகப்படி கிடைத் திருக்கிறது. இந்த விசேஷதாவை சதா நினைவில் வைத்து இலாபத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வந்தது, தெளிவாக்கியது பிறகு சென்று விட்டது. இதைத் தான் மலையை பஞ்சு போன்று ஆக்குவது என்று கூறப்படுகிறது. பஞ்சு விநாடியில் பறக்கும் அல்லவா! ஆனால் மலைக்கு எவ்வளவு காலம் தேவைப்படும்? ஆக தெளிவாக்குகிறீர்கள், தந்தையின் முன் வைக்கிறீர்கள் மற்றும் தூய்மை என்ற விதியின் மூலம் பரிஸ்தா ஆகிறீர்கள், பறந்து விடுகிறீர்கள். இதைத் தான் கடைசியில் வந்திருந் தாலும் வேகமாக பறப்பது என்று கூறப்படுகிறது. நாடகப்படி இந்த விசேஷதா கிடைத்திருக்கிறது. சில குழந்தைகள் பரிசோதிக்கவும் செய்கின்றனர், மேலும் தன்னை மாற்றிக் கொள்ளவும் செய்கின்றனர் என்பதை பாப்தாதா பார்க்கவும் செய்கின்றார். ஏனெனில் நான் வெற்றி அடைந்தே தீர வேண்டும் என்ற இலட்சியம் இருக்கிறது. மெஜாரிட்டி ஆத்மாக்களிடம் இந்த நம்பர் ஒன் இலட்சியம் இருக்கிறது.

இரண்டாவது விசேஷதா – பிறப்பு எடுத்ததும், ஆஸ்தி அடைந்ததும் சேவைக்கான ஆர்வம்-உற்சாகம் தானாகவே உருவாகி விடுகிறது. சேவையில் ஈடுபடுவதன் மூலம் ஒன்று சேவைக்கான உடனடிப்பலன் குஷி கிடைக்கிறது மற்றும் சேவையின் மூலம் விசேஷ பலமும் கிடைக்கிறது. மேலும் சேவையில் பிசியாக இருக்கின்ற காரணத்தினால் தடையற்று (நிர்விக்ன) இருப்பதற்கான சகயோகமும் கிடைக்கிறது. ஆக சேவையின் ஆர்வம்-உற்சாகம் தானாகவே ஏற்படுவது, நேரம் ஒதுக்குவது மற்றும் தனது உடல்-மனம்-பொருளை வெற்றி யாக்குவது – இதுவும் நாடகப்படி விசேஷதா என்ற லிப்ட் கிடைத்திருக்கிறது. தனது விசேஷதாக்களை அறிவீர்கள் அல்லவா! இந்த விசேஷதாக்களின் மூலம் தன்னை எந்த அளவிற்கு முன்னேற்றிக் கொள்ள விரும்புகிறீர்களோ, அந்த அளவிற்கு முன்னேற்றிக் கொள்ள முடியும். நாடகப்படி எந்த ஒரு ஆத்மாவும் நான் கடைசியில் வந்திருக்கின்றேன், ஆகையால் முன்னேற முடியாது என்ற சாக்கு கூற முடியாது. இரட்டை அயல்நாட்டுக் குழந்தைகளுக்கு தங்களது விசேஷதாக் களின் பொன்னான வாய்ப்புகள் இருக்கிறது. பாரதவாசிகளுக்கு அவர்களுக்கான தங்கமான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் இன்று இரட்டை அயல்நாட்டுக் குழந்தைகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றார். நாடகத்தில் விசேˆமாக பதிவாகியிருக் கின்ற காரணத்தினால் எந்த ஒரு கடைசி ஆத்மாவின் சாக்குப் போக்கும் செல்லுபடி ஆகாது. ஏனெனில் இந்த நாடகம் மிகச் சரியாக உருவாக்கப் பட்டிருக்கிறது. இந்த விசேஷதாக்களின் மூலம் சதா பறந்து கொண்டே செல்லுங்கள். புரிந்ததா? தெளிவாகி விட்டதா? அல்லது இப்பொழுதும் ஏதாவது சாக்கு போக்கு இருக்கிறதா? மன மகிழ்ச்சி என்ற இனிப்பை தந்தைக்கு கொடுத்து விட்டீர்கள். திட சங்கல்பம் செய்தீர்கள் என்றால் மன மகிழ்ச்சி என்ற இனிப்பு தந்தைக்கு கொடுத்து விட்டீர்கள். இது அழிவற்ற இனிப்பாகும். குழந்தைகளின் வாயும் சதா இனிப்பாக இருக்கிறது, தந்தையின் வாய் இனிப்பாகவே இருக்கிறது. ஆனால் வேறு எந்த போக் வைக்காதீர்கள், மன மகிழ்ச்சி என்ற போக் மட்டுமே வைக்க வேண்டும். ஸ்தூல போக் எதை விருப்புகிறீர்களோ அதை வையுங்கள். ஆனால் மனதின் சங்கல்பத் தின் போக் சதா மன மகிழ்ச்சி என்ற இனிப்பு மட்டுமே வைக்க வேண்டும்.

தந்தைக்குக் கடிதம் எழுதும் போது இரண்டு வார்த்தைகள் மட்டும் கடிதத்தில் எழுதினால் போதும் என்று பாப்தாதா கூறுகின்றார். அந்த இரண்டு வார்த்தைகள் எது? ஓ.கே. அதிக காகிதங்களும் செல வாகாது, பேனா மையும் செலவாகாது, நேரமும் செலவாகாது. சேமிப்பாகி விடும். ஓ.கே என்றால் தந்தையின் நினைவும் இருக்கின்றது மற்றும் இராஜ்யத்தின் நினைவும் இருக்கின்றது. ஓ என்று எழுதும் போது பாபாவின் சித்திரமாக ஆகிவிடுகிறது அல்லவா! கே என்றால் கிங்டம் (இராஜ்யம்). ஆக ஓ.கே என்று எழுதுகிறீர்கள் என்றால் தந்தை மற்றும் ஆஸ்தி இரண்டின் நினைவும் வந்து விடுகிறது. எனவே அவசியம் கடிதம் எழுத வேண்டும், ஆனால் இரண்டு வார்த்தைகளில் எழுத வேண்டும். கடிதம் வந்து சேர்ந்து விடும். மற்றபடி உள்ளத்தின் ஆர்வத்தை பாப்தாதா அறிவார். அன்பான உள்ளத்தின் விசயங்கள் திலாராம் தந்தையிடம் வந்து சேர்ந்து விடுகிறது. இந்த கடிதம் எழுதுவதற்கு அனைவருக்கும் வருகிறது தானே? மொழி தெரியாதவர்களும் எழுத முடியும். இதில் அனைவருக்கும் ஒரே ஒரு மொழியாக ஆகிவிடும். இந்த கடிதம் பிடித்திருக்கிறது தானே! நல்லது.

இன்று முதல் குரூப்பின் கடைசி நாளாகும். அனைத்து பிரச்சனைகளும் அழிந்து விட்டது, டோலி சாப்பிடுவது மற்றும் கொடுப்பது தான் பாக்கி இருக்கிறது. என்ன பாக்கி இருக்கிறது? இப்போது மற்றவர்களை இவ்வாறு ஆக்க வேண்டும். சேவை செய்ய வேண்டும் அல்லவா! தடைகளற்ற (நிர்விக்ன) சேவாதாரிகளாக ஆகுங்கள். நல்லது.

சதா பாப்சமான் ஆவதற்கான ஆர்வம்-உற்சாகத்தில் பறக்கக் கூடிய, சதா தன்னை பரிசோதித்து மாற்றிக் கொண்டு சம்பூர்ணம் ஆகக் கூடிய, சதா சங்கல்பம், வார்த்தை மற்றும் செயல் மூன்றிலும் சிரேஷ்டம் ஆக்கக் கூடிய, சதா தூய்மையின் மூலம் சிரேஷ்டதாவை தாரணை செய்யக் கூடிய, இப்படிப்பட்ட தீவிர வேகத்தில் பறக்கக் கூடிய விசேஷ ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

ஆஸ்திரேலியா குழுவிலுள்ள சிறு குழந்தைளுடன் பாப்தாதாவின் சந்திப்பு: அனைவரும் இறை மாணவர்கள் அல்லவா! அந்தப் படிப்பு தினசரி படிப்பது போன்று இந்த படிப்பும் தினசரி படிக்கிறீர்களா? முரளி கேட்பதற்கு பிடித்திருக்கிறதா? முரளி என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடிகிறதா? தந்தையை தினமும் நினைவு செய்கிறீர்களா? அதிகாலையில் எழுந்ததும் காலை வணக்கம் கூறுகிறீர்களா? ஒருபோதும் இந்த காலை வணக்கம் தவற விடக்கூடாது. காலை வணக்கமும் கூற வேண்டும், இரவு வணக்கமும் கூற வேண்டும். மேலும் சாப்பிடும் போதும் நினைவு செய்ய வேண்டும். பசிப்பதால் தந்தையை மறந்து விட்டேன் என்று இருக்கக் கூடாது. சாப்பிடுவதற்கு முன்பு அவசியம் நினைவு செய்ய வேண்டும். நினைவு செய்தீர்கள் எனில் படிப்பில் அவசியம் நல்ல நம்பர் அடைவீர்கள். ஏனெனில் யார் தந்தையை நினைவு செய்கிறார்களோ, அவர்கள் சதா தேர்ச்சி பெறுவார்கள், ஒருபோதும் தோல்வி அடைய முடியாது. ஆக சதா தேர்ச்சி பெறுகிறீர்களா? ஒருவேளை தேர்ச்சி பெற வில்லையெனில் இவர் சிவபாபாவின் குழந்தையாக இருந்தும் தோல்வி அடைந்து விட்டார் என்று அனைவரும் கூறுவர். தினசரி முரளியிலிருந்து ஒரு கருத்தையாவது தனது தாயிடம் அவசியம் கேட்க வேண்டும். நல்லது. மிகவும் பாக்கியசாலிகளாக இருக்கிறீர்கள், பாக்கியவிதாதாவின் பூமிக்கு வந்து சேர்ந்திருக் கிறீர்கள். தந்தையை சந்திப்பதற்கான பாக்கியம் கிடைத்திருக்கிறது. இது குறைந்த பாக்கியம் கிடையாது.

அவ்யக்த பாப்தாதாவுடன் தனிப்பட்ட சந்திப்பு

1) தந்தையிடமிருந்து அடைந்த அனைத்துப் பொக்கிஷங்களையும் அனைத்து ஆத்மாக் களுக்கும் பயன்படுத்தக் கூடிய நிறைந்த ஆத்மாக்களாக ஆகி, மற்றவர்களையும் நிறைந்தவர் களாக ஆக்கக் கூடிய ஆத்மாக்களாக இருக்கிறீர்களா? எத்தனை பொக்கிஷங்களில் நிறைந்திருக்கிறீர்கள்? யார் நிறைந்திருக்கிறார்களோ, அவர்கள் சதா பகிர்ந்து கொடுப்பார்கள். அழிவற்ற பொக்கிஷமாக இருக்கிறது. யார் வருகின்றார்களோ, அவர்கள் நிறைந்து செல்ல வேண்டும், யாரும் வெறும் கைகளுடன் செல்ல முடியாது. இதைத் தான் அகண்ட பொக்கிஷம் என்று கூறப்படுகிறது. சில நேரம் மகாதானி ஆகி தானம் செய்ய வேண்டும், சில நேரம் ஞானி ஆகி ஞான அமிர்தம் பருக வைக்க வேண்டும், சில நேரம் வள்ளலாகி, செல்வத்தின் தேவியாக ஆகி செல்வம் கொடுக்க வேண்டும் – இவ்வாறு அனைவரின் சுப ஆசைகளையும் தந்தையின் மூலம் நிறைவேற்றக் கூடியவர்களாக இருக்கிறீர்கள். எந்த அளவிற்குப் பொக்கிஷங் களை கொடுக்கிறீர்களோ, அந்த அளவிற்கு அதிகரித்துக் கொண்டே செல்லும். இதைத் தான் சதா செல்வந்தர் என்று கூறப்படுகிறது. யாரும் வெறும் கை களுடன் சென்று விடக் கூடாது. அனைவரின் வாயி-ருந்தும் இந்த ஆசிர்வாதம் தான் வெளிப்பட வேண்டும் ஆஹா எனது பாக்கியம். இவ்வாறு மகாதானி, வரதானியாக ஆகி உண்மையான சேவாதாரி ஆகுங்கள்.

2) நாடகப்படி சேவைக்கான வரதானமும் சதா முன்னேற்றத்தில் கொண்டு செல்கிறது. ஒன்று தகுதியின் மூலம் சேவை பிராப்தியாக அடைவது, இரண்டாவது வரதானத்தின் மூலம் சேவை பிராப்தியாக அடைவது. அன்பும் சேவைக்கான சாதனமாக ஆகிறது. மொழி அறியாதவர்களாகவும் இருக்கலாம், ஆனால் அன்பின் மொழி அனைத்து மொழிகளை விட சிரேஷ்டமானது. ஆகையால் அன்பான ஆத்மாவிற்கு சதா வெற்றி கிடைக்கிறது. யார் அன்பு மொழியை அறிந்திருக்கிறார்களோ, அவர்கள் எங்கிருந்தாலும் வெற்றி அடைந்து விடுவர். சேவை சதா தடையற்று நடைபெற வேண்டும் – இதைத் தான் சேவையில் வெற்றி என்று கூறப்படுகிறது. ஆக அன்பின் விசேஷதாவின் மூலம் ஆத்மாக்கள் திருப்தியடைந்து விடுகின்றனர். அன்பின் களஞ்சியம் நிறைந்திருக்கிறது, இதை பகிர்ந்து கொண்டே செல்லுங்கள். தந்தையிடமிருந்து எதை நிறைத்து வைத்திருக்கிறீர்களோ, அதை பகிர்ந்து கொடுங்கள். தந்தையிடமிருந்து அடைந்த இந்த அன்பு தான் முன்னேற்றிக் கொண்டே செல்லும்.

3) சேவைக்கான வரதானமும் சேவைக்கு நிமித்தமாக ஆக்கி விடுகிறது. தந்தையின் மீது அன்பு இருக்கிறது எனில் மற்றவர்களையும் தந்தைக்கு அன்பானவர்களாக ஆக்கி நெருக்கத்தில் கொண்டு வருவீர்கள். எவ்வாறு தந்தையின் அன்பு உங்களை தன்னுடையவராக ஆக்கி விட்டதால் அனைத்தை யும் மறந்து விட்டீர்கள். இவ்வாறு அனுபவியாக ஆகி மற்றவர்களையும் அனுபவியாக ஆக்கிக் கொண்டே இருங்கள். சதா தந்தையின் அன்பிற்கு ப-யாகக் கூடிய ஆத்மா நான் என்ற போதையில் இருங்கள். தந்தை மற்றும் சேவை – இந்த ஈடுபாடு தான் முன்னேறுவதற்கான சாதனமாகும். எவ்வளவு பிரச்சனைகள் வேண்டு மென்றாலும் வரட்டும், ஆனால் தந்தையின் அன்பு உதவி செய்து முன்னேற்றத்தில் கொண்டு செல்லும். ஏனெனில் அன்பானவர்களுக்கு அன்பின் கைமாறு பலமடங்கு கிடைக்கிறது. அன்பு என்பது அப்படிப்பட்ட ஒரு சக்தி, எந்த ஒரு விசயமும் கடினமாகத் தோன்றாது. ஏனெனில் அன்பில் மூழ்கி விடுகிறீர்கள். இதைத் தான் விட்டில் பூச்சி தீபத்தில் பலியாகி விட்டது என்று கூறப்படுகிறது. சுற்றி வரக் கூடியவர்கள் அல்ல, பலியாகக் கூடியவர்கள், அன்புடன் இருக்கக் கூடியவர்கள். ஆக அன்பு மற்றும் சக்தி – இரண்டின் சமநிலையின் மூலம் சதா முன்னேறுங்கள் மற்றும் முன்னேற்றிக் கொண்டே செல்லுங்கள். சமநிலை (பேலன்ஸ்) தான் தந்தையின் ஆசிர்வாதத்தை அடையச் செய்கிறது மற்றும் அடைய வைத்துக் கொண்டே இருக்கும். பெரியவர்களின் குடை நிழலும் சதா முன்னேற்றத்தில் கொண்டு செல்லும். தந்தையின் குடை நிழல் இருக்கவே இருக்கிறது, இருப்பினும் பெரியவர்களின் குடை நிழலும் தங்கமான கொடுப்பினை ஆகும். ஆக சதா கொடுப்பினைகளை கொண்டாடி முன்னேறிக் கொண்டேச் செல்லும் போது எதிர்காலம் தெளிவாகி விடும்.

4) ஒவ்வொரு அடியிலும் தந்தையின் துணையின் அனுபவம் செய்பவர்கள் தானே! எந்தக் குழந்தைகளை தந்தை விசேஷமாக சேவைக்க நிமித்தமாக ஆக்கியிருக்கின்றாரோ, நிமித்தம் ஆக்கிய தன் கூடவே சேவையில் ஒவ்வொரு அடியிலும் சகயோகியாகவும் ஆகின்றார். பாக்கியவிதாதா ஒவ்வொரு குழந்தைக்கும் பாக்கியத்தின் விசேஷதா கொடுத்திருக்கின்றார். அந்த விசேˆதாவை காரியத்தில் பயன்படுத்தி சதா முன்னேறிக் கொண்டே செல்லுங்கள், மற்றவர்களையும் முன்னேற்றுங்கள். சேவையானது சிரேஷ்ட பிராமணர்களின் பின்னால் வரக் கூடியது. சேவைக்குப் பின்னால் நீங்கள் கிடையாது. எங்கு செல்கிறீர்களோ, அங்கு சேவை பின்னால் வருகின்றது. எவ்வாறு ஒளி எங்கு இருக்கிறதோ, அங்கு நிழல் அவசியம் இருக்கும். இவ்வாறு நீங்கள் டபுள் லைட்டாக இருப்பதால் உங்கள் பின்னால் சேவை நிழல் போன்று வரும். ஆகையால் சதா கவலையற்றவர்களாக ஆகி தந்தையின் குடைக்குள் முன்னேறிக் கொண்டே செல்லுங்கள்.

5) உள்ளத்தில் சதா பாப்சமான் ஆவதற்கான ஆர்வம் இருக்கிறது தானே? சமம் ஆகும் போது தான் நெருக்கத்தில் இருப்பீர்கள். அருகில் இருக்க வேண்டும் அல்லவா! அருகில் இருப்பவர்களிடம் சமம் ஆவதற்கான ஆர்வம் இருக்கவே செய்கிறது. மேலும் சமம் ஆவது கடினமும் கிடையாது. எந்த காரியம் செய்தாலும், காரியம் செய்வதற்கு முன் இந்தக் காரியம் தந்தை எப்படி செய்வார் என்பதை நினைவில் கொண்டு வாருங்கள். இந்த நினைவு தானாகவே தந்தையின் காரியம் போன்று பின்பற்ற வைக்கும். இது அமர்ந்து யோசிக்க வேண்டிய விசயம் அல்ல. படியில் ஏறும் போதும், இறங்கும் போதும் சிந்திக்க முடியும். மிகவும் எளிய விதியாகும். தந்தையிடம் ஒப்பிட்டுக் கொண்டே சென்றால் போதும். மேலும் பாபாவிற்குச் சமமாக ஆகியே தீர வேண்டும் என்ற நினைவில் இருங்கள். அப்போது ஒவ்வொரு காரியத்திலும் எளிதாக வெற்றியின் அனுபவம் செய்து கொண்டே இருப்பீர்கள். நல்லது.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) இப்போது நாம் வனவாசத்தில் உள்ளோம் – அதனால் மிக மிக சாதாரணமாக இருக்க வேண்டும். தேகத்தின் அல்லது ஆடைகளின் மீது எந்த ஓர் அபிமானமும் வைக்கக் கூடாது. எந்த ஒரு கர்மம் செய்து கொண்டிருந்தாலும் பாபாவின் நினைவினுடைய நஷா அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

2) நாம் எல்லையற்ற தியாகி மற்றும் இராஜரிஷி. – இதே நஷாவில் இருந்து தூய்மையாக வேண்டும். ஞான செல்வங்களால் நிரம்பப் பெற்று தானம் செய்ய வேண்டும். உண்மையிலும் உண்மையான வியாபாரி ஆகி தனது கணக்கை வைத்திருக்க வேண்டும்.

வரதானம்:-

எவ்வாறு சரீர சக்திக்காக ஜீரணிக்கும் சக்தி அவசியமானதாக இருக்கிறதோ, அதே போன்று ஆத்மாவை சக்திசா-யாக ஆக்குவதற்கு சிந்தனை சக்தி தேவை. சிந்தனை சக்தியின் மூலம் அனுபவ சொரூபமாக ஆகிவிடுவது தான் அனைத்தையும் விட மிகப் பெரிய சக்தியாகும். இப்படிப்பட்ட அனுபவி ஒருபோதும் ஏமாற்றம் அடைய முடியாது. கேள்விப்பட்ட விசயங் களில் குழப்பமடைய மாட்டார். அனுபவி சதா சம்பன்னமாக இருப்பார். அவர் சதா சக்திசா-யாக, மாயாபுரூப், விக்னபுரூப் ஆகிவிடுவார்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top