07 November 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

07 November 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

6 November 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே ! தந்தையை மறந்து சேற்றில் சிக்கி இருக்கும் மனிதர்களை சேற்றிலிருந்து வெளியேற்றுவதற்காக முயற்சி செய்யுங்கள். ஞான சிந்தனை செய்து அனைவருக்கும் தந்தையின் சத்தியமான அறிமுகத்தை கொடுங்கள்.

கேள்வி: -

கீதையை எந்த தர்மத்தின் சாஸ்திரம் என்று கூறுவார்கள்? இதில் புரிந்து கொள்ள வேண்டிய இரகசியத்துடன் கூடிய விசயம் எது?

பதில்:-

கீதையின் சாஸ்திரம் பிராமண தேவி தேவதா தர்மத்தின் சாஸ்திரம் ஆகும். பிராமண தேவி தேவதாய நமஹ! என்று கூறப்படுகிறது. இதை தேவதா தர்மத்தின் சாஸ்திரம் என்று மட்டும் கூறமாட்டார்கள். ஏனெனில் தேவதைகளிடமோ இந்த ஞானம் இல்லவே இல்லை. பிராமணர்கள் இந்த கீதையின் ஞானத்தை கேட்டு தேவதை ஆகிறார்கள். எனவே பிராமணர் தேவி தேவதைகள் இருவருக்குமுடையதாகும் இந்த சாஸ்திரம். இது ஒன்றும் இந்து தர்மத்தின் சாஸ்திரம் என்று கூறப்படுவதில்லை. இது நன்றாகப் புரிந்து கெள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். கீதை ஞானத்தை சுயம் நிராகார சிவபாபா உங்களுக்கு கூறிக் கொண்டிருக்கிறார், கிருஷ்ணர் அல்ல.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

அவரும் நம்மை விட்டு பிரிய மாட்டார் .. 

ஓம் சாந்தி. பாபா குழந்தைகளுக்கு நல்ல முறையில் புரிய வைக்கிறார். எந்த தந்தை? பரலோக தந்தை. லௌகீக தந்தைக்கோ இத்தனை குழந்தைகள் இருப்பதில்லை. பரலௌகீக தந்தைக்கு இத்தனை குழந்தைகள் (ஆத்மாக்கள்) இருக்கிறார்கள். அவர்கள் ஹே பதீத பாவனரே, அனைவருக் கும் சத்கதி அளிக்கும் வள்ளல், ஓ பரமபிதா பரமாத்மா என்று நினைவு செய்துக் கொண்டே இருக்கிறார்கள். எனவே பிதா என்று கூறி அழைக் கிறார்கள். பரமபிதா பரமாத்மா நிராகார பகவானுவாக்கு. நிராகார பரமாத்மாவோ ஒருவர் மட்டுமே இருப்பார் அல்லவா? இருவர் இருக்க முடியாது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் ஆவார் என்பது குழந்தைகளின் புத்தியில் பதிந்துள்ளது. அவர் எங்கு இருக்கிறார்? எங்கு ஆத்மாக்கள் இருக்கிறார்களோ அங்கு இருக்கிறார். இறைவன், பிரபு, பகவான் என்று கூறுவதால் சுகத்தின் ஆஸ்தி எடுப்பதற்கான விசயம் வருவ தில்லை. தந்தை என்று கூறுவதால் ஆஸ்தி நினைவிற்கு வருகிறது. ஆனால் மனிதர்கள் தந்தையை அறியாமல் இருக்கிறார்கள். பாரதவாசிகள் நாடகப்படி இராவணனின் வழியில் சென்று தங்களுக்கே துர்கதி செய்கிறார்கள். எனவே பிரம்மா, விஷ்ணு, சங்கரன் சூட்சும சரீரதாரி ஆவார்கள் என்பதை முதன் முதலில் புரிய வைக்க வேண்டும். மனிதர்கள் ஸ்தூல தேகதாரிகள் ஆவார்கள். ஆனால் ஸ்தூல அல்லது சூட்சும தேகதாரியை தந்தை என்று கூறமாட்டார்கள். தந்தை பரமபிதா பரமாத்மா என்று நிராகாரமானவருக்குக் கூறப்படுகிறது. துர்கதி ஏற்படும் வகையில் என்ன தவறு ஏற்பட்டது? தந்தை மூலமாக உண்மையான கீதை கேட்பதால் சத்கதி ஆகிறது. எனவே எவரொரு வருக்கும் முதன் முதலில் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். இது அடிப்படை விஷயமாகும். ஆனால் யாருடைய புத்தியிலும் பதிவதில்லை. அதனால் தான் பாபா இந்த சுவரொட்டியை அச்சடிக்க செய்திருந்தார் – கீதையின் பகவான் கிருஷ்ணர் என்ற குழந்தையா? அல்லது பரமபிதா பரமாத்மாவா? கீதை எந்த தர்மத்தின் சாஸ்திரம்? பிராமண தேவி தேவதா தர்மத்திற்கானது என்று கூறுவது சரி ஆகும். எப்படி கிறித்துவர்களின் தர்ம சாஸ்திரம் பைபிள் உள்ளதோ அதே போல கீதையை தேவி தேவதா தர்மத்தினரின் சாஸ்திரம் என்று மட்டும் கூற மாட்டோம். பிராமண தேவி தேவதா தர்மம் என்று பிராமணர்களை சேர்க்க வேண்டும். பிராமண தேவி தேவதாய நமஹ! என்று கூறுகிறார்கள். தேவதைகளிடம் ஞானம் இல்லை என்று பாபா கூறி உள்ளார். கீதை ஏதோ நமது தர்மத்தின் சாஸ்திரம் ஆகும் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. ஞானம் இருப்பது பிராமணர்களுக்கு. பிராமண தர்மத்திற்கு மட்டும் சாஸ்திரம் கீதை என்று கூறமாட்டார்கள். ஏனெனில் தந்தை இரண்டு தர்மங்களின் ஸ்தாபனை செய்கிறார். எனவே இரண்டு தர்மங்களினுடைய சாஸ்திரம் என்று கூறுவார்கள். அங்கோ இந்து தர்மத்தின் சாஸ்திரம் என்பார்கள். ஆரியர்களினுடையது என்றும் கூறி விடுவார்கள். ஆரிய சமாஜத்தையோ தயானந்தர் ஸ்தாபனை செய்தார். அது புதிய தர்மம் என்றாலும் கூட தேவி தேவதா தர்மத்தினுடையது ஒன்றும் கிடையாது. கீதையின் பகவான் யார் என்பதே அடிப்படை விஷயமாகும். கீதையில் கிருஷ்ணருடைய பெயரைப் போட்டு கீதையை குறையுள்ளதாக ஆக்கி விட்டுள்ளார்கள். ஏனெனில் என்னிடமிருந்து புத்தியோகம் விடுபட்டு விட்டது. கீதையில் பாருங்கள் எத்தனை விஷயங்களை கூறி இருக்கிறார்கள். மேலும் கீதா பாடசாலைக்கு எவ்வளவு மதிப்பு உள்ளது. எனவே இப்பொழுது தேவதா மற்றும் பிராமண தர்மம் மறைந்து விட்டுள்ளது. பூசாரிகள் பிராமண தேவி தேவதாய நமஹ! என்று கூறுகிறார்கள். பிராமணர்கள் எப்படி தேவதை ஆனார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. இதை யார் கூறுவது? நான் பிரம்மா முகவம்சாவளியாக ஆக்கி தேவதையாக ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகிறார். எனவே கீதை பிராமண தேவி தேவதா தர்மத்தின் சாஸ்திரம் ஆகும். தேவதா தர்மம் என்று மட்டும் கூறினாலோ பின் இந்த இலட்சுமி நாராயணரிடம் ஞானம் இல்லையே. இந்த விசயங்கள் புரிந்து கொள்ள வேண்டியது ஆகும். ஆனால் யார் புரிய வைப்பது, ருத்ர ஞான வேள்வியிலிருந்து விநாச ஜ்வாலை கொழுந்து விட்டு எரிந்தது என்று சிவபாபா கூறுகிறார். ருத்ர யக்ஞம் எங்கே? கிருஷ்ணர் எங்கே? வித்தியாசம் உள்ளது. இந்த ஞான யக்ஞத்திற்கு பிறகு சத்யுகத்தில் எந்தவொரு ஸ்தூலமான வேள்வி உருவாக்குவதில்லை. இப்பொழுது துயரங்களை நீக்குவதற்காக யக்ஞத்தை படைக்கிறார்கள். அங்கு இந்த வேள்வியை உருவாக்கும்படியான எந்தவொரு துயரமும் (இன்னல்கள்) ஏற்படுவதே இல்லை. கீதையில் ருத்ர யக்ஞம் பற்றியும் எழுதி உள்ளார்கள். மேலும் பகவானுவாச் (பகவான் கூறுகிறார்) என்றும் எழுதி உள்ளார்கள். எனவே கீதையில் மாவில் ஒரு துளி உப்பு அளவிற்கு உண்மை இருக்கிறது. மற்றது எல்லாம் பொய் ஆகும். இப்பொழுது இந்த ஞான சிந்தனை (சிந்தனை கடலை கடைதல்) சிவபாபா செய்ய மாட்டார். பிரம்மா மற்றும் பிரம்மா குமார், குமாரிகள் செய்ய வேண்டும். இச்சமயம் மனிதர்களோ ஒரேயடியாக சேற்றில் சிக்கி உள்ளார்கள். சேற்றிலிருந்து வெளியேறு வதில் மிகுந்த கடின முயற்சி தேவைப்படுகிறது. அதனால் தான் தந்தையை அழைக் கிறார்கள். நீங்கள் 5 விகாரங்கள் என்ற இராவணன் மீது தான் வெற்றி அடைய வேண்டும். பிறகு சத்யுகத்தில் ஜீவ ஆத்மாக்களாகிய நீங்கள் சுகத்தில் இருப்பீர்கள். எங்கெல்லாம் சத்சங்கங்கள் உள்ளனவோ அங்கு சென்று நீங்கள் கேட்கலாம். பயப்பட வேண்டிய விஷயம் எதுவுமில்லை. எல்லோரும் இருளில் உள்ளார்கள். மரணம் முன்னால் நின்றுள்ளது. அப்படி இருக்க இப்பொழுதோ கலியுகத்தில் 40 ஆயிரம் வருடங்கள் உள்ளன என்று கூறுகிறார்கள். இதற்கு கோரமான இருள் என்று கூறப்படுகிறது. கும்பகர்ணனின் உறக்கத்தில் உறங்கி உள்ளார்கள். பக்தியின் பலனை பகவான் கொடுக்க வருகிறார். சத்கதி அளிக்கிறார் என்று கூறுகிறார்கள். எனவே துர்கதியில் உள்ளார்கள் அல்லவா? கீதையில் ஒரு வேளை சிவ பரமாத்மாவின் பெயர் இருந்திருந்தது என்றால் அதை எல்லோரும் ஏற்றிருப்பார்கள். உண்மையில் நிராகாரமானவர் இராஜயோகம் கற்பித்திருந்தார் என்று ஏற்றுக் கொண்டிருப் பார்கள். யுத்த மைதானத்தின் விஷயம் எதுவும் இல்லை. யுத்த மைதானத்தில் இவ்வளவு பெரிய ஞானத்தை எப்படி கொடுப்பார். இராஜயோகம் எப்படி கற்பிப்பார்? முக்கிய தர்மங்கள் நான்கு ஆகும். தர்ம சாஸ்திரங்களும் நான்கு ஆகும். இப்பொழுதோ அநேக அநேக தர்மங்கள், அநேக சாஸ்திரங்கள், அநேக படங்கள் உள்ளன. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் சிவபாபா ஆவார் என்பது இப்பொழுது குழந்தைகளின் புத்தியில் பதிந்துள்ளது. பிறகு கீழே வந்தீர்கள் என்றால் பிரம்மா, விஷ்ணு, சங்கரன். பிறகு சாகாரத்தில் இலட்சுமி நாராயணர். பிறகு அவர்களது பரம்பரை. சங்கமத்தில் பிரம்மா, சரஸ்வதி அவ்வளவு தான். ருத்ர யக்ஞம் அமைக்கும் பொழுது சிவனுக்கு லிங்கம் அமைத்து பூஜை செய்து பிறகு மூழ்கடித்து விடுகிறார்கள். தேவிகளுக்கு பூஜை செய்து பிறகு மூழ்கடித்து விடுகிறார்கள். எனவே ஆண், பெண் பொம்மைகளின் பூஜை ஆகி விட்டது அல்லவா? ஏனெனில் அவர்களது தொழில் பற்றி யாருக்குமே தெரியாது. அவரது மகிமை பதீத பாவனர் என்பதாகும். எனவே எப்படி பாவ ஆத்மாக்களை தூய்மையாக்குகிறார். இப்பொழுதோ நீங்கள் விழித்தெழுந்து மற்றவர்களை எழுப்ப வேண்டும். அதாவது தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். தந்தையை அறியாமல் உள்ளார்கள். பைசா மட்டும் சம்பாதித்து கொண்டு கதை கூறிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் என்ன ஆயிற்று. நீங்கள் வித்யுத் மண்டலியில் கூட போய் புரிய வையுங் கள். இந்த யுத்தத்தில் எல்லோருமே அவசியம் இறக்க வேண்டி உள்ளது. இந்த ருத்ர ஞான வேள்வி யிலிருந்து விநாச ஜ்வாலை கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருக்கிறது. நாங்கள் இவ்வளவு பெரிய பெரிய குண்டுகள் அமைத்துள்ளோம் என்று எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். எனவே முந்தைய கல்பத்திலும் இவற்றினால் விநாசம் ஆகி இருந்தது. இந்த அனைத்து குண்டுகளை முந்தைய கல்பத்தில் இவர்கள் கடலில் ஒன்றும் வீசி இருக்கவில்லை. எனவே இப்பொழுது கூட விநாசம் ஆக வேண்டி உள்ளது. விநாச காலத்தில் அன்பில்லாத புத்தி உடையவர்கள் என்று கூறுகிறார்கள், யார்? கௌரவர்கள் மற்றும் யாதவர்கள். இப்பொழுதோ குடியரசு இராஜ்யம் ஆகும். எனவே இந்த சுவரொட்டிகளை இலட்சக் கணக்குகளில் எல்லா மொழிகளிலும் அச்சடியுங்கள். ஆங்கிலத்திலோ அவசியம் அச்சடிக்க வேண்டும். எங்கெல்லாம் கீதா பாடசாலைகள் உள்ளனவோ அங்கெல்லாம் விநியோகித்து கொண்டே செல்லுங்கள். சுவரொட்டியில் (போஸ்டர்) விலாசம் கூட எழுதப்பட்டிருக்க வேண்டும். டைரக்ஷன் (உத்தரவோ) பாபா கொடுக்கிறார். செய்வதோ குழந்தை களினுடைய வேலை ஆகும். சிவ பாபா என்று எழுதப் பட்டுள்ளது. எனவே சிவபாபாவும் தந்தை பிரம்மாவும் தந்தை. ஆனால் குழந்தைகளுக்கு ஆஸ்தி சிவபாபாவிடமிருந்து கிடைக்க வேண்டி உள்ளதே அன்றி பிரம்மாவிடமிருந்து அல்ல. பிரம்மாவிற்கு கூட அவரிடமிருந்து தான் கிடைக்கிறது.

கீதை (வார, மாத) இதழ்களிலும் கூட முதன் முதலில் தந்தையின் சரியான அறிமுகத்தை எழுதுங்கள் என்று பாபா நிறையவே புரிய வைத்துள்ளார். பின் யார் பிராமணராக ஆகக் கூடியவர்களாக இருப்பார்களோ அவர்களுக்கு சட்டென்று அம்பு போல பதியும். இல்லையென்றால் சஞ்சிகையை வாங்கினார்கள், பின் வீசி விடுவார்கள். எப்படி ஏதாவதொரு குரங்கிடம் புத்தகம் கொடுத்தீர்கள் என்றால் ஒரேயடியாக வீசி விடும். ஒன்றுமே புரியாமல் இருக்கும். அதனால் தான் தந்தை கூறுகிறார், இந்த ஞானத்தை எனது பக்தர்களுக்கும் மற்றும் கீதை படிப்பவர்களுக்கும் கொடுங்கள். அதில் கூட யாருடைய பாக்கியத்தில் இருக்குமோ அவர்கள் புரிந்து கொள்வார்கள். இதுவோ நரகமாக உள்ளது என்று தந்தை கூறுகிறார். இங்கு பிறக்கும் குழந்தைகள் ஆகியோர் கூட ஒருவருக் கொருவர் துக்கம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒருவரையொருவர் கொன்றுக் கொண்டே இருக்கிறார்கள். மற்றபடி கருடபுராணத்தில் காண்பித்துள்ள விஷம் நிறைந்த வைத்தரணி நதி என்பதோ கிடையாது. இந்த உலகமே நரகம் ஆகும். எனவே இப்பொழுது நரகவாசி, பின் சங்கமவாசி ஆகிறோம் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். நாளைக்கு மீண்டும் சொர்க்கவாசி ஆகப் போகிறோம். எனவே முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

இரவு வகுப்பு : 23.03.1968.

உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஒரு பகவான் அதாவது ஃபாதர் – தந்தை. யாருடைய தந்தை? யாரெல்லாம் ஆத்மாக்கள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் தந்தை. யாரெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களோ, அவர்களுக்குள் இருக்கும் ஆத்மாக்களின் தந்தை. இப்பொழுது பாகம் ஏற்று நடிக்க வரும் அனைத்து ஆத்மாக்களும் அவசியம் மறுபிறவி எடுக்கிறார்கள். ஒரு சிலர் மிகவும் குறைவான பிறவி எடுக்கிறார்கள். ஒரு சிலர் 84 பிறவிகள் எடுக்கிறார்கள். ஒரு சிலர் 80, மேலும் ஒரு சிலர் 60 – தேகதாரிகள் யாரெல்லாம் மனிதர்களோ – இந்த இலட்சுமி நாராயணர் உலகின் மீது ஆட்சி புரியக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அந்த நேரத்தில் புது உலகத்தில் வேறு எந்த பரம்பரையும் இருக்கவில்லை – யாரெல்லாம் தேகதாரி மனிதர்களாக உள்ளார்களோ, அவர்கள் யாருக்குமே சத்கதி அளிக்க முடியாது. முதன் முதலில் இருப்பது ஸ்வீட் சைலன்ஸ் ஹோம் – இனிமையான அமைதியின் இல்லம். அனைத்து ஆத்மாக்களின் வீடு. தந்தையும் அங்கு இருக்கிறார். அதற்கு நிராகார உலகம் என்று கூறப்படுகிறது. தந்தை உயர்ந்ததிலும் உயர்ந்தவர். பிறகு இருப்பதற்கான இடம் கூட உயர்ந்ததிலும் உயர்ந்தது ஆகும். நான் உயர்ந்ததிலும் உயர்ந்த வன் என்று தந்தை கூறுகிறார். நான் கூட (கீழே) வர வேண்டி உள்ளது. எல்லோரும் என்னை அழைக்கிறார்கள். யாரெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் அவசியம் மறுபிறவி எடுத்தே ஆக வேண்டும். ஒரே ஒரு தந்தை மட்டும் எடுப்பதில்லை. புனர் ஜென்மமோ அனைவரும் எடுத்தே ஆக வேண்டும். எந்தவொரு தர்மஸ்தாபகராக இருந்தாலும் சரி – புத்த அவதாரம் என்று கூறுகிறார்கள் அல்லவா? தந்தைக்குக் கூட அவதாரம் என்று கூறுகிறார்கள். அவரும் வர வேண்டி உள்ளது. இப்பொழுது எல்லா ஆத்மாக்களும் இங்கு ஆஜராகி இருக்கிறார்கள். யாருமே திரும்பிப் போக முடியாது. புனர் ஜென்மம் எடுக்கிறார்கள். அதனால் தான் மக்கள் தொகை அதிகமாகிறது அல்லவா. புனர்ஜென்மம் எடுத்து எடுத்து இச்சமயத்தில் அனைவரும் தமோபிரதானமாக உள்ளார் கள். தந்தை தான் வந்து ஞானம் தருகிறார். தந்தை தான் ஞானம் நிறைந்தவர் ஆவார். முதல், இடை, கடை பற்றிய ஞானம் அவருக்குள் இருக்கிறது. அவருக்கு தான் ஞானக் கடல், ஆனந்தக் கடல் என்று கூறப்படுகிறது. அமைதிக் கடல், என்றைக்கும் தூய்மையானவர் மற்றபடி மனிதர்கள் தூய்மையாக மற்றும் தூய்மையற்றவராக ஆகிறார்கள். இந்த இலட்சுமி நாராயணர் தேவதா பரம்பரையின் முதல் நம்பர் ஆவார்கள். இவர்கள் தான் முழுமையாக 84 பிறவிகள் எடுக்க வேண்டியுள்ளது. புனர் ஜென்மம் இங்கே தான் எடுக்கிறார்கள். பிறகு கடைசியில் தந்தை வந்து அனை வரையும் தூய்மையாக ஆக்கி கூட அழைத்துச் செல்கிறார். தந்தைக்குத் தான் லிபரேட்டர் (விடுவிப்பவர்) என்று கூறப்படுகிறது. இச்சமயம் அனைத்து தர்ம ஸ்தாபகர்களும் இங்கு ஆஜராகி உள்ளார்கள். மற்றபடி கொஞ்ச பேர் இருப்பார்கள். அவர்கள் வந்துக் கொண்டே இருக்கிறார்கள். எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கும். அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஒரே ஒரு தந்தை தான். சாந்திதாமம் அல்லது சுகதாமத்திற்கு அதிபதியாக ஆக்குகிறார். நீங்கள் தான் முழுமையாக 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். முதலில் வந்த நீங்கள் தான் மீண்டும் முதலில் வருவீர்கள். கிறிஸ்து மீண்டும் தனது நேரத்தில் வருவார். கிறிஸ்துவிடம் எவரையும் திரும்பி அழைத்து செல்வதற்கான வலிமை இல்லை. திரும்ப அழைத்து செல்வதற்கான வலிமை ஒரே ஒரு தந்தையிடம் தான் உள்ளது. இச்சமயம் இருப்பது இராவண இராஜ்யம், அசுர இராஜ்யம். 84 பிறவிகளில் விகாரங்கள் முழுமையாக பிரவேசித்துக் கொண்டு விடுகிறது. நீங்கள் தேவதைகளின் உலகத்திற்கு அதிபதியாக இருந்தீர்கள். பிறகு இராவண இராஜ்யத்தில் நீங்கள் விகாரி ஆகி விட்டுள்ளீர்கள் என்று தந்தை கூறுகிறார். புனர்ஜென்மம் அவசியம் அனைவரும் எடுக்க வேண்டி உள்ளது. தர்ம ஸ்தாபனை செய்து திரும்பிச் சென்று விடுவது – என்பது முடியாது. அவர்கள் அவசியம் பாலனை செய்ய வேண்டி உள்ளது. பிரம்மா மூலமாக புதிய உலகத்தின் ஸ்தாபனை, பழைய உலகத்தின் விநாசம் என்று பாடப்பட்டுள்ளது. புதிய உலகத்தில் ஒரே ஒரு தர்மம், ஒரே ஒரு தேவதா பரம்பரை இருந்தது. இப்பொழுது அது இல்லை. படங்கள் மட்டும் உள்ளன. (காட்ஃபாதர்) பரமபிதாவினுடைய தர்மத்தை தவிர மற்ற எல்லா தர்மங்களும் இருக்கின்றன. யாரெல்லாம் தேகதாரிகள் இருக்கிறார்களோ, அவர்கள் அவசியம் புனர் ஜென்மம் எடுக்கிறார்கள். பாரதம் அழியாத கண்டமாகும். இது ஒரு பொழுதும் விநாசம் ஆவதில்லை, அழிவற்றதாகும். இவர் களுடைய இராஜ்யம் இருக்கும் பொழுது வேறு எந்த கண்டமும் இருக்கவில்லை. இவர்களுடைய இராஜ்யம் மட்டுமே இருந்தது. சூரிய வம்சத்தினர், சந்திர வம்சத்தினர் அவ்வளவே. வேறு யாரும் இல்லை. புது உலகத்திற்கு சொர்க்கம், தேவதைகளின் உலகம் என்று கூறப்படுகிறது. நிராகார உலகத்திற்கு சொர்க்கம் என்று கூறப்படுவதில்லை. அது இனிய அமைதி யான இல்லம். நிர்வாண தாமம் ஆகும். ஆத்மாவிற்கு பரமபிதா பரமாத்மாவைத் தவிர வேறு யாரும் ஞானம் கொடுக்க முடியாது. ஆத்மா மிகவும் சிறிய பிந்து ஆகும். அனைத்து ஆத்மாக்களின் தந்தை பரம ஆத்மா (சுப்ரீம் ஸோல்) ஆவார். அவருக்கு சுப்ரீம் ஃபாதர் என்று கூறப்படுகிறது. அவர் ஒரு பொழுதும் புனர்ஜென்மத்தில் வர முடியாது. இச்சமயம் நாடகத்தின் கடைசி ஆகும். இந்த முழு உலகம் மேடை ஆகும். இதில் நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. இதனுடைய கால அளவு 5000 வருடங்கள் ஆகும். இது புருஷோத்தம சங்கம யுகம் ஆகும். இப்பொழுது தந்தை வந்து அனைவரையும் உத்தமரிலும் உத்தமர்களாக ஆக்குகிறார். ஆத்மாக்கள் அழியாதவையாக இருக்கவே இருக்கிறது. இந்த நாடகம் கூட அழியாததாகும். அமைந்த அமைக்கப்பட்ட நாடகமாகும். யார் கடந்து சென்றார்களோ, பிறகு அதே நேரத்தில் வருவார்கள். முதன் முதலில் இவர்கள் வந்திருந்தார்கள். இலட்சுமி நாராயணர் இப்பொழுது இல்லை. உண்மையிலும் உண்மை யான சத்தியத்தின் சங்கம் இது ஆகும். நல்லது.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை மற்றும் தாதாவின் அன்பு நினைவு மற்றும் இரவு வணக்கம். ஓம் சாந்தி.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. ஞான மனனம் (சிந்தனை கடலை கடைதல்) செய்து மனிதர்களை சேற்றிலிருந்து வெளியேற்ற வேண்டும். யார் கும்பகரணனின் உறக்கத்தில் உறங்கி உள்ளார்களோ அவர்களை எழுப்ப வேண்டும்.

2. சூட்சுமமான அல்லது ஸ்தூல தேகதாரிகளிடமிருந்து புத்தி யோகத்தை நீக்கி ஒரு நிராகார தந்தையை நினைவு செய்ய வேண்டும். அனைவரின் புத்தி யோகத்தை ஒரு தந்தையிடம் இணையுமாறு செய்ய வேண்டும்.

வரதானம்:-

சம்பூரண தூய்மையின் மிகவும் விரிவுரை உயர்ந்ததாகவும் எளிதானதாகவும் இருக்கிறது. சம்பூரண தூய்மையின் பொருள் கனவிலும் கூட தூய்மையற்ற தன்மை மனம் மற்றும் புத்தியை தொட்டு விட முடியாது – இதைத் தான் உண்மையான வைஷ்ணவர் என்று சொல்லப்படுகிறது. இப்பொழுது நம்பர்வார் முயற்சியாளர்களாக இருந்தாலும் முயற்சியின் இலட்சணம் சம்பூரண தூய்மையாகும். மேலும் இது எளிதாகவும் இருக்கும், ஏனெனில் அசம்பவத்தையும் சம்பவமாக செய்யக்கூடிய சர்வசக்திவான் பாபா துணைவராக இருக்கிறார்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top