07 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

November 6, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

உடல், மனம், செல்வம் மற்றும் மக்களின் (உறவுகள்) பாக்கியம்

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று உண்மையான சாகேப் (பிரபு) தம்முடைய இளவரசர், இளவரசிகளைப் பார்த்துக் கொண்டி ருக்கிறார். தந்தை சத்தியமானவர் என்று சொல்லப்படுகிறார். ஆகவே பாப்தாதா மூலம் ஸ்தாபனை செய்யப்பட்டுள்ள யுகத்தின் பெயரும் சத்திய யுகம். பாபாவின் மகிமையும் கூட சத்தியமான தந்தை, சத்தியமான ஆசிரியர், சத்தியமான குரு எனச் சொல்கின்றனர். சத்தியத்தின் மகிமை சதா சிரேஷ்டமானதாகவே இருந்துள்ளது. சத்தியமான தந்தையிடம் நீங்கள் அனைவரும் சத்தியநாராயணன் ஆவதற்காக சத்தியமான கதை கேட்டுக் கொண்டி ருக்கிறீர்கள். அத்தகைய உண்மை யான சாகேப் தம்முடைய குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் – எத்தனைக் குழந்தைகள் உண்மையான சாகேபைத் திருப்திப் படுத்தி யுள்ளனர்? உண்மையான சாகேபின் அனைத்திலும் பெரிய விசேஷத் தன்மை – அவர் வள்ளலாக, விதாதாவாக, வரதாதாவாக உள்ளார். திருப்தியாக இருக்கக்கூடிய குழந்தைகளின் அடையாளம் – சதா வள்ளல் அவர்களிடம் திருப்தி யடைவார். அதனால் அத்தகைய குழந்தை கள் சதா தங்களை ஞானத்தின் கஜானா, சக்திகளின் கஜானா, குணங்களின் கஜானா, அனைத்துக் கஜானாக்களாலும் நிரம்பப் பெற்றவராக அனுபவம் செய்வார்கள். ஒரு போதும் தங்களைக் கஜானாக்களில் காலியாக இருப்பதாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள். எந்த ஒரு குணம் அல்லது சக்தி அல்லது ஞானத்தின் ஆழமான இரகசியத்திலிருந்து வஞ்சிக்கப்பட்ட வராக ஆக மாட்டார்கள். குணங்களின் அல்லது சக்திகளின் சதவிகிதம் இருக்கலாம். ஆனால் எந்த ஒரு குணமோ எந்த ஒரு சக்தியோ அத்தகைய ஆத்மாக்களிடம் இல்லை என்று அந்த மாதிரி இருக்க முடியாது. எப்படி சமயத்தின் படி குழந்தைகள் பலர் சொல் கின்றனர் – என்னிடம் மற்ற சக்திகளோ இருக்கின்றன. ஆனால் இந்த சக்தி அல்லது குணம் இல்லை. ஆகவே இல்லை என்ற சொல் அவர்களுக்குத் தடை செய்யப் பட்டுள்ளது. அத்தகைய வள்ளலின் குழந்தைகள் சதா செல்வந்தராக இருப்பார்கள். அதாவது நிறைந்தவராக அல்லது சம்பன்னமாக இருப்பார்கள். இன்னொரு மகிமை பாக்கிய விதாதா. ஆக, பாக்கிய விதாதா சாகேபின் திருப்தியின் அடையாளம் – அத்தகைய மாஸ்டர் பாக்கிய விதாதா குழந்தைகளின் நெற்றியின் மீது சதா பாக்கியத்தின் நட்சத்திரம் ஜொலித்துக் கொண்டிருக்கும். அதாவது அவருடைய மூர்த்தி மற்றும் வடிவத்தின் மூலம் சதா ஆன்மிக ஜொலிப்பு தென்படும். மூர்த்தியின் மூலம் சதா திருப்தியாக இருப்பதற்கான தோற்றம் காணப்படும். முகத்தின் மூலம் சதா ஆன்மிக வடிவம் அனுபவமாகும். இதைத் தான் நெற்றியில் ஜொலித்துக் கொண்டுள்ள பாக்கியத்தின் நட்சத்திரம் எனச் சொல்வது. ஒவ்வொரு விஷயத்திலும் உடல், மனம், செல்வம், மக்கள் – நான்கு ரூபத்திலும் தங்களின் பாக்கியத்தை அனுபவம் செய்வார்கள். இதில் ஏதாவது ஒரு பாக்கியத்தின் பிராப்தியைக் குறைவாக அனுபவம் செய்வார்கள் என்று அப்படி இல்லை. எனது பாக்கியத்தில் மூன்று விஷயங்களோ சரியாக உள்ளன, மற்றப்படி ஒரு விஷயத்தில் குறை உள்ளது என்று அந்த மாதிரி இல்லை.

உடலின் பாக்கியம் – உடலின் கணக்கு வழக்கு ஒரு போதும் பிராப்தி அல்லது புருஷார்த் தத்தின் மார்க்கத் தில் விக்னம் அனுபவம் ஆகாது. உடல் ஒரு போதும் சேவையிலிருந்து வஞ்சிக்கப் பட்டவர் ஆக விடாது. கர்ம போகத்தின் சமயத்திலும் அத்தகைய பாக்கியவான் ஏதாவதொரு விதத்தில் சேவைக்கு நிமித்தமாவார். கர்மபோகத்தை நடத்துவார், ஆனால் கர்மபோக வசமாகிக் கூக்குரலிட மாட்டார். கூக்குரலிடுவது என்றால் கர்மபோகத்தைப் பற்றி அடிக்கடி வர்ணனை செய்வது அல்லது அடிக்கடி கர்மபோகத்தின் பக்கம் புத்தி மற்றும் சமயத்தை ஈடுபடுத்திக் கொண்டே இருப்பது. சிறிய விஷயத்தைப் பெரிய விஸ்தாரமாக்குவது – இதைத் தான் கூக்குரலிடுவது எனச் சொல்வது மற்றும் பெரிய விஷயத்தை ஞானத்தின் சாரத்தினால் முடித்து விடுவது – இதைத் தான் நடத்துவது எனச் சொல்வது. ஆக, சதா இவ்விஷயத்தை நினைவு வையுங்கள் – யோகி வாழ்க்கைக்காக சிறிய கர்மபோகமாயினும், பெரியதாயினும் அதனை வர்ணனை செய்யாதீர்கள். கர்மபோகத்தின் கதையை விஸ்தார மாக்காதீர்கள் ஏனென்றால் வர்ணனை செய்வதில் சமயம் மற்றும் சக்தி அந்தப் பக்கமே இருக்கிற காரணத்தால் உடல்நலம் பற்றிய உணர்வுள்ள வராகவே ஆகி விடுகின்றனர். ஆத்ம உணர்வுள்ளவர் ஆவதில்லை. இந்த உடல் நல உணர்வு ஆன்மிக சக்தியிலிருந்து சிறிது-சிறிதாக நெர்வஸ் ஆக்கி விடுகிறது. அதனால் ஒரு போதும் அதிகம் வர்ணனை செய்யாதீர்கள். யோகி வாழ்க்கை என்பது கர்மபோகத்தைக் கர்மயோகமாக மாற்றக் கூடியதாகும். இவை தாம் உடலின் பாக்கியத்திற்கான அடையாளங்கள்.

மனதின் பாக்கியம் – மனம் சதா மகிழ்ந்திருக்கும். ஏனென்றால் பாக்கியத்தை அடைவதற் கான அடையாளம் மகிழ்ச்சியுடன் இருப்பதேயாகும். யார் நிறைவாக இருக்கிறார்களோ, அவர்கள் சதா மனதால் புன்சிரித்துக் கொண்டே இருப்பார்கள். மனதின் பாக்கியவான் சதா இச்சா மாத்திரம் அவித்யாவின் (ஆசை பற்றி அறியாத) ஸ்திதி உள்ளவராக இருப்பார்கள். பாக்கிய விதாதா திருப்தியடைகின்ற காரணத்தால், சர்வ பிராப்திகளும் நிறைந்திருப்பதாக அனுபவம் செய்கிற காரணத்தால் மனதின் பற்றுதல் அல்லது வளைந்து கொடுத்தல் என்பது மனிதர் அல்லது பொருள் களின் பக்கம் இருக்காது. இதைத் தான் சார ரூபத்தில் மன்மனாபவ எனச் சொல்கிறீர் கள். மனதை பாபாவின் பக்கம் ஈடுபடுத்துவதில் உழைப்பு இருக்காது. ஆனால் சகஜமாகவே மனம் பாபாவின் அன்பான உலகில் இருக்கும். ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை – இந்த அனுபவத்தைத் தான் மனதின் பாக்கியம் எனச் சொல்கின்றனர்.

செல்வத்தின் பாக்கியம் – ஞான செல்வமோ இருக்கவே செய்கிறது. ஆனால் ஸ்தூல செல்வத் திற்கும் கூட மகத்துவம் உள்ளது. செல்வத்தின் பாக்கியத்தினுடைய அர்த்தம் இதுவல்ல – அதாவது பிராமண வாழ்க்கையில் லட்சாதிபதி, கோடீஸ்வரர் ஆவார்கள் என்பதல்ல. ஆனால் செல்வத்தின் பாக்கியத்தின் அடையாளமாவது – சங்கமயுகத்தில் பிராமணர்களாகிய உங்களுக்கு எவ்வளவு உண்ணவும் அருந்தவும் ஓய்வெடுப்பதற்குமான அவசியம் உள்ளதோ, அவ்வளவு ஓய்வாகக் கிடைக்கும். மேலும் அதோடு கூடவே சேவைக்காக செல்வம் வேண்டும். ஆக, சேவைக் காகவும் ஒரு போதும் சமயத்தில் குறைவு அல்லது இழுபறி அனுபவமாகாது. எப்படி யாவது, எங்கிருந்தாவது சேவைக்கான சமயத்தில் பாக்கியவிதாதா பாபா யாரையாவது நிமித்த மாக்கவே செய்வார். செல்வத்தின் பாக்கியவான் ஒரு போதும் தனது பெயருக்காகவோ புகழுக்காகவோ ஆசைப்பட்டு சேவை செய்ய மாட்டார். பெயர்-புகழுக்கான ஆசை இருக்குமானால் அத்தகைய சமயத்தில் பாக்கியவிதாதா சகயோகம் தர மாட்டார். அவசியம் மற்றும் ஆசைக்கிடையில் இரவு-பகலுக்குள்ள வேறுபாடு உள்ளது. உண்மையான தேவை உள்ளது மற்றும் உண்மையான மனம் உள்ளது என்றால் எந்த ஒரு சேவையின் காரியத்திலும், காரியமோ வெற்றி பெறத் தான் செய்யும், ஆனால் உண்டியலில் இன்னும் கூட நிறைந்து விடும், சேமிப்பாகும். அதனால் பாடல் உள்ளது — சிவனுடைய பண்டாரா மற்றும் உண்டியல் சதா நிறைந்திருக்கும். ஆக, உண்மையான மனம் உள்ளவர்கள் மற்றும் உண்மையான சாகேப் திருப்தியாவதற்கான அடையாளம் பண்டாராவும் நிறைந்திருக்கும், உண்டியலும் நிறைந்திருக்கும். இது தான் செல்வத் தினுடைய பாக்கியத்தின் அடையாளமாகும். விஸ்தாரமோ நிறைய உள்ளது. ஆனால் சாரத்தில் சொல்லிக் கொண்டிக் கிறோம்.

நாலாவது விஷயம் மக்களின் (உறவுகள்) பாக்கியம் – ஜனம் அல்லது மக்கள் என்றால் பிராமணப் பரிவாரம் மற்றும் லௌகிகப் பரிவாரம். லௌகிகப் பரிவாரத்தில் வரக்கூடிய ஆத்மாக்கள் மற்றும் அலௌகிக சம்பந்தத்தில் வரக்கூடிய ஆத்மாக்கள். ஆக, மக்களின் மூலமாக பாக்கியத்தின் அடையாளம் – மக்களின் பாக்கியவான் ஆத்மாவுக்கு மக்கள் மூலமாக சதா அன்பு மற்றும் சகயோகத்தின் பிராப்தி கிடைத்துக் கொண்டே இருக்கும். குறைந்தது 95 சதவிகிதம் ஆத்மாக்கள் மூலம் பிராப்தியின் அனுபவம் அவசியம் இருக்கும். இதற்கு முன்பே சொல்லியிருக்கிறோம் – 5 சதவிகித ஆத்மாக்களின் கணக்கு-வழக்கும் முடிவடைகிறது. அதனால் அவர்கள் மூலமாக சில நேரம் அன்பு கிடைக்கும், சில நேரம் பரீட்சையும் இருக்கும். ஆனால் 5 சதவிகிதத்தைக் காட்டிலும் அதிகம் இருக்கக் கூடாது. அந்த மாதிரி ஆத்மாக்கள் மூலமாகவும் கூட சிறிது-சிறிதாக சுப பாவனை, சுப விருப்பம் மூலமாகக் கணக்கை முடித்துக் கொண்டே இருங்கள். எப்போது கணக்கு முடிந்து போகுமோ, அப்போது கணக்குப் புத்தகமும் முடிந்து போகும் இல்லையா? பிறகு கணக்கு-வழக்கு மிச்சமே இருக்காது. ஆக, பாக்கியவான் ஆத்மாவின் அடையாளம் – மக்களின் மிச்சமுள்ள கணக்கு-வழக்கை சகஜமாக முடித்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் 95 சதவிகித ஆத்மாக்கள் மூலமாக சதா அன்பு மற்றும் சகயோகத்தின் அனுபவம் செய்ய வேண்டும். மக்களின் பாக்கியவான் ஆத்மாக்கள், மக்களின் சம்பந்தம்-தொடர்பில் வந்து கொண்டே சதா சம்பன்னமாக இருப்பார்கள். கேள்வி கள் நிறைந்த உள்ளத்தினராக இல்லாமல், மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராக — இவர் ஏன் இப்படிச் செய்கிறார் அல்லது ஏன் சொல்கிறார்? இந்த விஷயம் இப்படி இல்லை, அப்படி இருக்க வேண்டும். உள்ளத்தினுள் இந்தக் கேள்வி எழுகின்றது என்றால் அவர்கள் கேள்வி கேட்பவர் எனப்படுகிறார்கள். மற்றும் கேள்வி கேட்பவர்கள் ஒரு போதும் சதா மகிழ்ச்சி நிறைந்தவராக இருக்க முடியாது. அவர்களின் உள்ளத்தில் சதா ஏன் என்ற க்யூ இருந்து கொண்டிருக்கும். அதனால் அந்தக் க்யூவை முடித்து விடுவதில் தான் நேரம் சென்று விடுகிறது மற்றும் இந்தக் க்யூ பிறகு அந்த மாதிரி உள்ளது – நீங்கள் அதை விட்டுவிட விரும்பினாலும் கூட விட முடியாது. அதற்காக நேரம் கொடுக்க வேண்டி இருக்கும். ஏனென்றால் இந்தக் க்யூவைப் படைப்பவர் நீங்கள். எப்போது படைப்பைப் படைத்து விட்டீர்களோ, அப்போது பாலனை செய்ய வேண்டியதிருக்கும். பாலனையிலிருந்து தப்ப முடியாது. எவ்வளவு தான் நிர்பந்தமாக ஆனாலும் சரி, சமயமும் சக்தியும் கொடுக்க வேண்டியதிருக்கும். அதனால் இந்த வீண் படைப்பைக் கட்டுப்படுத்துங்கள். இந்தப் பிறப்பைக் கட்டுப் படுத்துங்கள். புரிந்ததா? தைரியம் உள்ளதா? எப்படி மக்கள் சொல்கிறார்கள் இல்லையா – இதுவோ ஈஸ்வரன் கொடுத்தது, நமது பிழை என்று எதுவும் இல்லை. அதே போல் பிராமண ஆத்மாக்கள் பிறகு சொல்கிறார்கள் – டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளது. ஆனால் டிராமாவின் மாஸ்டர் படைப்பவர், மாஸ்டர் ஞானம் நிறைந்தவர் ஆகி, ஒவ்வொரு கர்மத்தையும் உயர்ந்ததாக ஆக்கிக் கொண்டே செல்லுங்கள். நல்லது.

டீச்சர்கள் கேட்டீர்களா? உண்மையான சாகேப் என் மீது எவ்வளவு திருப்தியாக உள்ளார்? இதன் இரகசியத்தையோ கேட்டீர்கள் இல்லையா? இரகசியத்தைக் கேட்பதில் டீச்சர்கள் அனைவரும் ராஜ்யுக்த் (ஞான ரகசியங்களை அறிந்தவர்) ஆனீர்களா, அல்லது மனதில் இது போல் வருகிறதா – இந்த பாக்கியம் என்னிடம் குறைவாக உள்ளது? சில நேரம் செல்வத்தின் ஈர்ப்பில், சில நேரம் மக்களின் ஈர்ப்பில் – அந்த மாதிரி வாழ்க்கையின் அனுபவமோ செய்வ தில்லை தானே? ஒரே ஒரு ஸ்லோகன் சொல்லப் பட்டது – விசேஷமாக நிமித்த டீச்சர்களுக் காக, ஆனால் அனைவர்க்குமாக. ஒவ்வொரு விஷயத்திலும் பாபாவின் ஸ்ரீமத் படி இதோ வந்தேன் – இதோ வந்தேன் (ஜீ ஹஜுர் – ஜீ ஹஜுர் ) என்று சொல்லிக் கொண்டே இருங்கள். குழந்தைகளின் ஜீ ஹஜுர் எனச் சொல்வது மற்றும் பாபா குழந்தைகள் முன்னால் ஹாஜிர் ஹஜுர். ஆவது. எப்போது ஹஜுர் ஹாஜிர் ஆகி விட்டாரோ, அப்போது எந்த ஒரு விஷயத்திலும் குறைவு என்பதே இருக்காது. சதா சம்பன்னமாகி விடும். வள்ளல் மற்றும் பாக்கிய விதாதா – இருவருடைய பிராப்திகளின் பாக்கிய நட்சத்திரம் நெற்றியின் மீது ஜொலிக்கத் தொடங்கி விடும். டீச்சர்களுக்கோ டிராமாவின் அனுசாரம் மிகுந்த பாக்கியம் கிடைத்துள்ளது. நாள் முழுவதும் பாபா மற்றும் சேவை தவிர வேறு என்ன வேலை உள்ளது? வேலையே இது தான். இல்லறவாசிகளுக்கோ எவ்வளவு பராமரிக்க வேண்டி உள்ளது! உங்களுக்கோ ஒரே வேலை தான். அநேக விஷயங்களில் சுதந்திரப் பறவையாக இருக்கிறீர்கள். உங்களது பாக்கியத்தைப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? ஏதேனும் தங்கத்தாலான கூண்டோ வைரங்களாலான கூண்டோ உருவாக்கி விடவில்லை தானே? உருவாக்குவதும் தானே, சிக்கிக் கொள்வதும் தானே! பாபாவோ சுதந்திரப் பறவை ஆக்கினார், பறக்கும் பறவை ஆக்கினார். மிக-மிக-மிக அதிர்ஷ்டசாலிகள் நீங்கள். புரிந்ததா? ஒவ்வொருவருக்கும் பாக்கியத்தின் விசேஷத் தன்மை அவசியம் கிடைத்துள்ளது. இல்லறவாசிகளின் விசேஷத் தன்மை வேறு, டீச்சர்களின் விசேஷத் தன்மை வேறு, கீதா பாடசாலை நடத்துபவர்களின் விசேஷத் தன்மை வேறு. வித-விதமான விசேஷத் தன்மைகளுடன் நீங்கள் அனைவரும் விசேஷ ஆத்மாக்கள். ஆனால் சேவா கேந்திரங்களில் வசிக்கக் கூடிய நிமித்த டீச்சர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. நல்லது!

சதா அனைத்து வித பாக்கியத்தையும் அனுபவம் செய்யக்கூடிய அனுபவி ஆத்மாக் களுக்கு, சதா ஒவ்வோரடியிலும் ஜீ ஹஜுர் எனச் சொல்லக் கூடிய பாபாவின் உதவிக்கு அதிகாரி சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சதா கேள்வி கேட்பவராக இருப்பதற்கு பதிலாக மகிழ்ச்சி நிறைந்தவராக இருப்பவர்கள் – அத்தகைய புகழ்ச்சிக்குத் தகுதியுள்ள, யோகி ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் குரூப் – அனைவரும் தங்களை மகாவீர் மற்றும் மகாவீரங்கணைகள் எனப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? மகாவீராகவோ இருக்கிறீர்கள், ஆனால் சதா மகாவீராக இருக்கிறீர்களா? அல்லது சில நேரம் மகாவீர், சில நேரம் கொஞ்சம் பலவீனமாகி விடுகிறீர்களா? சதா கால மகாவீர் என்றால் சதா லைட் ஹவுஸ் மற்றும் மைட் ஹவுஸ். ஞானம் என்பது லைட் (ஒளி), யோகம் என்பது மைட்(சக்தி). ஆக, மகாவீர் என்றால் ஞானம் நிறைந்த ஆத்மாவும் கூட, யோகம் நிறைந்த ஆத்மாவும் கூட. ஞானம் மற்றும் யோகம் இரண்டு சக்திகள் – லைட் மற்றும் மைட் நிறைந்தவராக இருக்க வேண்டும். இதைத் தான் மகாவீர் என்பது. எந்த ஒரு பரிஸ்திதியிலும் ஞானம், அதாவது லைட்டின் குறைபாடு இருக்கக் கூடாது. மேலும் மைட், அதாவது யோகத்தின் குறைபாடும் இருக்கக் கூடாது. ஒன்றின் குறைபாடு இருந்தாலும் பரிஸ்திதியில் ஒரு நொடியில் பாஸ் ஆக முடியாது. நேரம் பிடிக்கும். பாஸாகி விடுவீர்கள். ஆனால் சமயத்தில் பாஸாகவில்லை என்றால் அது என்ன பாஸ்? எப்படி ஸ்தூல படிப்பில் கூட ஒரு பாடத்தில் ஃபெயிலானாலும் மீண்டும் ஒரு வருடம் படிக்க வேண்டி உள்ளது. ஒரு வருடத் திற்குப் பிறகு பாஸானால் சமயம் போய் விட்டது இல்லையா? அது போல் யார் ஞானம் நிறைந்த, யோகம் நிறைந்த ஆத்மாவாக உள்ளாரோ, லைட் மைட் இரண்டு சொரூபமும் இல்லை — அவருக்கும் பரிஸ்திதியிலிருந்து பாஸாவதில் சமயம் பிடிக்கிறது. சமயத்தில் பாஸாகாத சம்ஸ்காரம் ஆகி விடுகிறது என்றால் முடிவிலும் (ஃபைனல்) கூட அந்த சம்ஸ்காரம் முழுப் பாஸ் ஆக விடாது. ஆக, பாஸ் ஆகக் கூடியவர்கள் தாம், ஆனால் சமயத்தில் பாஸ் ஆகிறவர் இல்லை. யார் சமயத்தில் முழுப் பாஸ் ஆகிறாரோ, அவருக்குத் தான் பாஸ் வித் ஆனர் எனச் சொல்வார்கள். பாஸ் வித் ஆனர் என்றால் தர்மராஜரும் கூட அவருக்கு (ஆனர்) மதிப்புக் கொடுப்பார். தர்ம ராஜபுரியிலும் கூட தண்டனைகள் இருக்காது. மதிப்பு இருக்கும். இவர் பாஸ் வித் ஆனர் என்ற மகிமையின் பாடல் இருக்கும்.

ஆக, பாஸ் வித் ஆனர் ஆக வேண்டுமானால் தன்னை எந்த ஒரு விஷயத்திலும், எந்த ஒரு சம்ஸ்காரத்திலும், சுபாவத்திலும், குணங்களிலும், சக்திகளிலும் குறைந்தவராக வைக்கக் கூடாது. அனைத்து விஷயங்களிலும் முழுமையாக (கம்ப்ளீட்) வேண்டும். அதாவது பாஸ் வித் ஆனர் ஆக வேண்டும். ஆக, அனைவரும் அது போல் ஆகி விட்டீர்களா, ஆகிக் கொண்டிருக்கிறீர்களா? (ஆகிக் கொண்டிருக்கிறோம்). அதனால் தான் விநாசம் தடைப் பட்டுள்ளது. நீங்கள் தாம் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள். உலகத்தின் விநாசம் என்றால் மாற்றத்திற்கு முன்னால் பிராமணர்களின் குறைகளின் விநாசம் நடைபெற வேண்டும். பிராமணர்களின் குறைகளின் விநாசம் நடைபெற வில்லை என்றால் உலகத்தின் விநாசம், அதாவது மாற்றம் எப்படி ஏற்படும்? ஆகவே மாற்றத்தின் ஆதார மூர்த்திகள், பிராமணர்களாகிய நீங்கள் தாம்.

பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் காரர்களோ, முதலிலேயே தயாராக வேண்டும். நீங்கள் கடைசி முடிவைக் கொண்டு வருபவர்கள் தயாராகவில்லை, அதனால் தீவிரவாதிகள் தயாராகி விட்டார்கள். ஆக, அனைவரும் முதல் நம்பர் பெறக்கூடியவர்களா அல்லது எது கிடைத்தாலும் திருப்தியடைந்து விடுவீர்களா? அநேகரை விடவும் நல்லவர்கள் நாம் என்று அந்த மாதிரி யோசிக்க வில்லை தானே? நல்லவர்களோ தாம், ஆனால் நல்லவரிலும் நல்லவராக ஆக வேண்டும். கோடியில் சிலராகவோ ஆகி விட்டீர்கள் – இது பெரிய விஷயம் கிடையாது. ஆனால் அந்தச் சிலரிலும் ஒரு சிலராக ஆக வேண்டும். அதனால் சதா எவர்-ரெடியாக இருங்கள். கடைசியில் தயார் – அப்படி இல்லை. எவர்ரெடி என்றால் எப்போதும் தயாராக இருப்பவர்கள். ஆகிக் கொண்டி ருக்கிறோம் என்று சொல்வீர்களானால் புருஷார்த்தம் தீவிரமாக இருக்காது.

பாபாவின் பார்வை முதலில் பஞ்சாப் மீது பட்டது இல்லையா? ஆக, பாபாவின் பார்வை முதலில் பட்டது என்றால் வருவதும் முதல் நம்பரில் வர வேண்டும். அஸ்திவாரம் இட்டவர்கள் நீங்கள். ஆகவே அஸ்திவாரம் எப்போதும் பக்காவாக உள்ளது. கச்சா என்றால் முழுக் கட்டடமும் கச்சா ஆகி விடும். ஆகவே சதா இதே ஸ்லோகனை நினைவு வையுங்கள் – ஒவ்வொரு பரிஸ்திதியிலும் பாஸ் வித் ஆகக்கூடியவர்கள். இதற்கான விதி – எவர்ரெடியாக இருக்க வேண்டும். நல்லது.

அனைத்திலும் பெரிய ஜோன் மதுபன் தான். பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகள் அனைவருக்கும் அசல் வீடு மதுபன் தான் இல்லையா? ஆத்மாக்களின் வீடு பரம்தாம். ஆனால் பிராமணர்களின் வீடு மதுபன். ஆகவே நீங்கள் அமிர்தசரஸ் அல்லது லூதியானாவைச் சேர்ந்தவர்கள் இல்லை, பஞ்சாப் அல்லது ஹரியானாவைச் சேர்ந்தவர்களும் இல்லை. ஆனால் உங்கள் நிரந்தர முகவரி மதுபன். மற்ற அனைத்தும் சேவாஸ்தானங்கள். இல்லறத்தில் இருந்தாலும் சேவா ஸ்தானம், வீடு இல்லை. இனிமையான வீடு மதுபன். அந்த மாதிரி புரிந்து கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? அல்லது அதே வீடு நினைவு வருகிறதா? நல்லது.

வரதானம்:-

ஒரே மாதிரி மணிகள், ஒருவரின் ஈடுபாடு மற்றும் ஒரே சீரான ஸ்திதியில் நிலைத்திருந்து, ஒருவரின் வழிப்படி நடக்கக் கூடியவர்கள், தங்களுக்குள் சங்கல்பத்தில் கூட ஒரு வழி, அவர்கள் தாம் மாலையில் கோக்கப் படுவார்கள். ஆனால் உள்ளடக்கும் சக்தி இருக்கும் போது தான் ஒரு வழியின் சூழ்நிலை உருவாகும். எந்த ஒரு விஷயத்திலாவது வேறுபாடு ஆகி விட்டால் அந்த வேறுபாட்டை உள்ளடக்குங்கள். அப்போது உங்களுக்குள் ஒற்றுமையின் மூலம் நெருங்கி வருவீர் கள் மற்றும் அனைவரின் முன்னால் திருஷ்டாந்த ரூபம் ஆவீர்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top