07 December 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

December 6, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே ! குழந்தைகளாகிய உங்களின் உள்ளத்தை அடைவதற்காக உள்ளத்தைக் கவரும் தந்தை வந்திருக்கிறார். ஆகையால், தூய்மையான உள்ளம் உடையவர் ஆகுங்கள்

கேள்வி: -

சத்யுக பதவியின் ஆதாரம் முக்கியமாக எந்த விஷயத்தின் மீது இருக்கிறது?

பதில்:-

தூய்மை. தூய்மைதான் முக்கியமானதாகும். சென்டரில் வருபவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். ஒரு வேளை தூய்மையாக மாறவில்லை என்றால், ஞானம் புத்தியில் பதியாது. யோகத்தைக் கற்றுக் கொண்டே தூய்மையற்றவராகி விட்டார்கள் என்றால், அனைத்தும் மண்ணோடு மண்ணாகிப் போகும். ஒரு வேளை தூய்மையாக இருக்க முடியவில்லை என்றால் வகுப்பிற்கு அவர்கள் வர வேண்டாம் பரவாயில்லை, பொருட் படுத்தாதீர்கள். யார் எவ்வளவு படிக்கிறார்களோ, தூய்மையாக மாறுகிறார்களோ அவ்வளவு செல்வந்தராக மாறுவார்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

கடைசியில் அந்த நாள் வந்தது இன்று…

ஓம் சாந்தி. இப்போது அந்த நாள் மீண்டும் வந்து விட்டது என ஆன்மீகக் குழந்தை களுக்குத் தெரியும். எந்த நாள்? பாரதத்தில் மீண்டும் சொர்க்கத்தின் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது, அதாவது லஷ்மி நாராயணனின் இராஜ்யம் ஸ்தாபனையாகிக் கொண்டிருக்கிறது என்பது குழந்தைகளாகிய நீங்கள் மட்டும் தான் அறிகிறீர்கள். எனவே, குழந்தைகளுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும். எந்த பதீத பாவனர் தந்தையை நாம் அழைக்கிறோமோ அவர் வந்திருக்கிறார். அவரே விடுவிக்கக் கூடியவர், வழிகாட்டி மற்றும் துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர். ஒரு முறை விடுவித்து விட்டார் பிறகு எப்படி சிக்கிக் கொண்டீர்கள்? இதுவும் யாருக்கும் தெரியவில்லை. இப்படிப் பட்ட கல் புத்தி உடைய மனிதர்களுக்குப் புரிய வைப்பதில் எவ்வளவு கடின உழைப்பு இருக்கிறது. கடமைகளைக் கூட பாருங்கள், எப்படி கொடுக்க பட்டிருக்கிறது. மிகவும் அழுக்கான துணிகளை வந்து துவையுங்கள். ஆத்மா மற்றும் உடல் இரண்டும் தேவதை களுக்குத் தூய்மையாக இருக்கின்றது. இராவண இராஜ்யத்தில் உடல் யாருக்கும் தூய்மையாக இருக்க முடியாது. உடல் அழுக்காகத் தான் இருக்கிறது. இந்த விஷயங்கள் அனைத்தையும் யாரும் அறியவில்லை. ஆத்மா சிறிது தூய்மையாக இருந்தால் அதனுடைய பிரபாவம் வெளிப்படுகிறது. இருப்பினும் அழுக்காக ஆகத்தான் வேண்டும் அல்லவா? எல்லையற்ற தந்தை பதீத பாவனர் 5 விகாரங்கள் சைத்தான், அதை விட்டு விடுங்கள் என கூறுகின்றார். ஒரு வேளை நான் கூறுவதை ஏற்க வில்லை என்றால் உங்களை தர்மராஜ் துன்புறுத்து வார். நீங்கள் சர்வ சக்திவான் கூறுவதை ஏற்கவில்லை, என்றால் தர்மராஜ் மிகவும் கடினமான தண்டனைகளைக் கொடுப்பார். பாபா தூய்மையாக மாற்றுவதற்காக வந்திருக்கிறார். நாம் தான் பரிசுத்தமான தேவி தேவதைகளாக இருந்தோம் என நீங்கள் அறிகிறீர்கள். இப்போது நாம் தூய்மை யற்றவர்களாக மாறியிருக்கிறோம். எனவே, இப்போது உடனே அதை விட்டு விட வேண்டும். தேக உணர்வு கூட சைத்தானின் வழியாகும். அதையும் விட வேண்டும். முதல் நம்பர் விகாரம் எதுவோ அதையும் விட வேண்டியிருக்கிறது. பாபாவுடன் இந்த சபையில் தூய்மையற்றவர் யாரும் அமர முடியாத நாளும் வரும். யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். மிக அழுக்கானவர்களை வெளி யேற்றுங்கள். இந்திர சபையில் வர அனுமதிக்க மாட்டார்கள். பிறகு எவ்வளவு பெரிய கோடீஸ் வரனாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும் சபையில் வர முடியாது. வெளியில் இருந்து அவர்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது. ஆனால் பாபாவின் சபையில் அனுமதிக்கப் படுவதில்லை. இப்போது பயத்திற்காக அனுமதிக்க படுகிறது. பிறகு கிடையாது. யாராவது தூய்மை யற்றவர்கள் வந்து அமர்ந்தால் பாபாவிற்கு நன்றாக இல்லை என பாபா இப்போது கூறுகிறார். இவ்வாறு பலர் இருக்கிறார்கள். அவர்கள் மறைந்து வந்து அமர்கிறார்கள். இப்படி செய்பவர்கள் மிகவும் தண்டனையை அனுபவிப்பார்கள். கோவில்களுக்கு, குருதுவாருக்கு கூட நீராடி விட்டு செல்கிறார்கள். நீராடாமல் யாரும் செல்வதில்லை. அது ஸ்தூலத்தில் நீராடுவதாகும். இதுவோ ஞான ஸ்நானம் ஆகும். அதை விட சுத்தமாக மாற வேண்டும். அசைவம் சாப்பிடுபவர்கள் கூட யாரும் வர முடியாது. நேரம் வரும் போது பாபா கண்டிப்பானவர் ஆகி விடுவார். உலகத்தில் பக்தியின் வேகம் எப்படி இருக்கிறது எனப் பாருங்கள். யார் அதிகமாக சாஸ்திரங் களை படிக்கிறார்களோ அவர்களே சாஸ்திரங்களின் பட்டத்தைப் பெறுகிறார்கள். இப்போது நீங்கள் சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொண்டு என்ன செய்வீர்கள்? இப்போது அனைத்தையும் மறந்து விடுங்கள் என பாபா கூறுகின்றார். அனைத்தையும் மறந்து விடுங்கள் என இப்போது பாபா கூறுகின்றார். ஒரு தந்தையை மட்டும் நினைவு செய்தால் நீங்கள் தூய்மை யாகி விஷ்ணுபுரிக்கு அதிபதி ஆகிவிடுவீர்கள். இந்த விஷயங்களை நன்கு புரிந்துக் கொள்ளும் போது இந்த சாஸ்திரம் போன்ற அனைத்தையும் மறந்து விடுவீர்கள். இந்த படிப்பைப் படித்து வக்கீல் போன்றவர்களாக மாறுகிறார்கள். அது அனைத்தையும் விட உயர்ந்த படிப்பு (இராஜயோகம்) இதுவாகும். இதை பரமாத்மா நாலெட்ஜ்ஃபுல் வந்து படிக்க வைக்கின்றார். அவரை பதீத பாவனா ! வாருங்கள், என்று அழைக்கிறார்கள். ஆனால் நாம் தூய்மையற்றவராக இருக்கிறோம் என்பதை அறியவில்லை. சத்யுகத்தை இராம இராஜ்யம் என்கிறார்கள், கலியுகத்திற்கு இராவண இராஜ்யம் என்கிறார்கள். பாபா இதைப் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். இச்சமயம் அனைவரும் தூய்மையற்றவராக இருக்கிறார்கள். தூய்மையான தேவி தேவதைகள் பூஜிக்கப்படு கிறார்கள். அவர்களுக்கு முன்பு தூய்மையற்றவர்கள் சென்று தலை வணங்குகிறார்கள். இதிலிருந்து அவர்கள் தூய்மை யில் அனைவரையும் விட உயர்ந்தவர்கள் என்பது தெளிவாகிறது. சன்னியாசி களையும் விட உயர்ந்தவர் ஆவார். சன்னியாசிகளின் கோவில் கிடையாது. இப்போது தமோபிரதான மான பக்தியில் சென்று விட்டதால் அவர்களின் சித்திரங்களையும் வைக்கிறார்கள். அதற்குத் தான் தமோபிரதானமான பக்தி என கூறப்படுகிறது. மனிதர்களின் பூஜை, 5 தத்துவங்களின் பூஜை. சதோபிரதானமான பக்தி இருந்த போது ஒருவரின் பூஜை நடந்தது. அதற்குத் தூய்மையான பக்தி என்று பெயர். தேவதைகளை அவர் தான் இவ்வாறு மாற்றினார். எனவே, ஒருவரின் பூஜை தான் செய்ய வேண்டும். ஆனால் இவ்வாறு டிராமா உருவாக்கப் பட்டிருக்கிறது. மிக உயர்ந்த நிலையிலிருந்து, உயர்ந்த, மத்திய, கீழான நிலையில் வந்து தான் ஆக வேண்டும். இங்கேயும் இப்படித் தான் சிலர் மிக உயர்ந்தவர்களாக ஆகி விடுகிறார்கள், சிலர் உயர்ந்த, சிலர் மத்தியமானவர்களாக சிலர் கீழானவர் களாக ஆகிறார்கள்.

சத்யுகத்தில் முதல் தரமான தூய்மை இருக்கிறது. அங்கே உடலுக்கு எந்த ஒரு மதிப்பும் இல்லை. மின்சாரத்தில் வைத்ததும் முடிந்தது. எலும்பு போன்றவைகளை நதியில் போடுதல் போன்றவை கிடையாது. உடலை எங்கேயும் தூக்கிக் கொண்டு செல்ல மாட்டார்கள். இந்த கஷ்டமான விஷயம் கூட கிடையாது. மின்சாரத்தில் போட்டதும் முடிந்தது. இங்கே உடலுக்குப் பின்னாடி எவ்வளவு மனிதர்கள் அழுகிறார்கள். நினைக்கிறார்கள். பிராமணர் களுக்கு உணவு அளிக்கிறார்கள். அங்கே இந்த விஷயமெல்லாம் எதுவும் கிடையாது. புத்தியினால் வேலை செய்ய வேண்டும். அங்கே என்னென்ன நடக்கும். சொர்க்கம் என்றால் என்ன? இதுவே நரகம், பொய்யான கண்டமாகும். அதனால் தான் பொய்யான உடல், பொய்யான மாயை…… என பாடப் பட்டிருக்கிறது. பசுவதை செய்வதை நிறுத்துங் கள் என அரசாங்கம் கூறுகிறது. முதலில் இந்த வதை மிகவும் கடுமையானது, ஒருவருக் கொருவர் மீது காம விகாரத்தில் விழுதல் இந்த துன்புறுத்துதலை நிறுத்துங்கள், காமம் மிகப் பெரிய எதிரி, முதல், இடை, இறுதி வரை துக்கம் கொடுக்கிறது. அதை வெற்றி அடையுங்கள் என அவர் களுக்கு எழுத வேண்டும். நீங்கள் தூய்மையாக மாறினால் தூய்மையான உலகத் திற்கு அதிபதியாகலாம். அங்கே தேவதைகளுக்கு புதிய இரத்தம் இருக்கிறது. அவர்கள் சொல்கிறார்கள், குழந்தைகளுக்கு புதிய இரத்தம் உள்ளது என்று, ஆனால் இங்கே புதிய இரத்தம் எங்கிருந்து வந்தது? இங்கே இருப்பதே பழைய இரத்தம் தான். சத்யுகத்தில் புதிய உடல் கிடைக்கும் போது புதிய இரத்தம் இருக்கும். இங்கே இந்த உடலும் பழையது என்பதால் இரத்தமும் பழையதாகும். இப்போது இதை விட வேண்டும். மேலும் தூய்மையாக வேண்டும். பாபாவைத் தவிர வேறு யாரும் (தேவதா தர்மத்தை) உருவாக்க முடியாது. அனைவரின் தர்மங்களும் தனித்தனியாகும். ஒவ்வொருவரும் அவரவர் தர்ம சாஸ்திரத்தைப் படிக்க வேண்டும். சமஸ்கிருதத்தில் முக்கியமானது கீதையாகும். நான் சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொடுக்க முடியாது என்று பாபா கூறுகிறார். எந்த மொழியை இந்த பிரம்மா அறிவாரோ, அதில் தான் நான் புரிய வைக்கிறேன். நான் ஒரு வேளை சமஸ்கிருதத்தில் கூறினால் இந்த குழந்தை எப்படி புரிந்துக் கொள்ளும். இது தேவதைகளின் மொழி கிடையாது. சில சமயங்களில் பெண் குழந்தைகள் வந்து அவ்விடத்தின் மொழியை தெரிவிக் கிறார்கள். இந்த மொழிகளை கற்பதால் சரீர நிர்வாகத்தின் பொருட்டு சிலர் லட்சம், சிலர் கோடி கணக்கில் சம்பாதிக்கிறார்கள். இங்கே நீங்கள் எவ்வளவு சம்பாதித்துக் கொண்டிருக் கிறீர்கள். சத்யுகத்தில் நாம் மகாராஜா மகாராணி ஆவோம் என நீங்கள் அறிகிறீர்கள். எவ்வளவு நிறைய படிக்கிறீர்களோ அவ்வளவு நிறைய பணக்காரர் ஆகிறீர்கள். ஏழை மற்றும் பணக்காரரில் வித்தியாசம் இருக்கிறது அல்லவா. தூய்மையே அனைத்திற்கும் ஆதாரம் ஆகும். சென்டருக்கு வருபவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். தூய்மை ஆகவில்லை என்றால் ஞானம் புத்தியில் பதியாது. 5-7 நாட்கள் வந்து மீண்டும் தூய்மை அற்றவர் ஆகிவிட்டால் ஞானம் முடிந்தது. யோகம் கற்று கற்று ஒரு வேளை தூய்மை அற்றவர் ஆகிவிட்டால் அனைத்தும் மண்ணோடு மண்ணாகிப் போகும். ஒரு வேளை யாரும் தூய்மை ஆக முடியவில்லை என்றால் வர வேண்டாம். பராவில்லை, பொருட்படுத்தக் கூடாது. பல பிறவிகளின் பாவச் சுமை தலை மீது இருக்கிறது. நினைவு செய்யாமல் எப்படி போகும்? ஒரு நொடியில் ஜீவன் முக்தி என பாடப் பட்டிருக்கிறது. பாபா கூறுவதை செய்ய வேண்டும். முழு உலகமும் பதீத பாவனா, வாருங்கள் ! என அழைக்கிறார்கள். நாம் தூய்மையற்றவராக இருக்கிறோம். ஆனால் யாரும் தூய்யைமாக மாற வில்லை. எனவே, யாரும் திரும்பப் போக முடியாது. அவர்கள் பிரம்மத்தை பரமாத்மா என நினைக் கிறார்கள். பரமாத்மா என்றால் என்ன என்ற ஞானமும் யாருக்கும் முழுமையாக இல்லை. பிரம்மம் பரமாத்மா கிடையாது. பிரம்மத்தில் யாரும் கலந்து விட முடியாது. இருந்தாலும் மறுபிறவியில் அனைவரும் வரத்தான் வேண்டும். ஏனென்றால் ஆத்மா அழிவற்றது. புத்தர் திரும்ப போய்விட்டார் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர் ஸ்தாபனை செய்ததை நிச்சயமாக பாலனையும் செய்வார். இல்லையெனில் யார் பாலனை செய்வார்கள்? அவர் திரும்ப எப்படிப் போக முடியும்.? நாங்கள் முக்தியில் சென்று அமர்ந்துக் கொள்வோம் என நீங்கள் கூறுவது கிடையாது. நாம் நமது தர்மத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். பிறகு அதை பராமரிக்கவும் செய்வோம் என நீங்கள் அறிகிறீர்கள். அது தூய்மையான தர்மமாகவும் இருந்தது. இப்போது அது தூய்மையற்றதாக மாறி விட்டது. இந்த தர்மத்தைச் சார்ந்தவர்கள் தான் வருவார்கள். இப்போது நாற்று நடப்பட்டுக் கொண்டிருக் கிறது. அனைத்தையும் விட இனிமையிலும் இனிமையான மரம் இந்த தேவி தேவதா வினுடைய தாகும். இதனுடைய ஸ்தாபனை காரியம் நடந்துக் கொண்டிருக்கிறது. சாஸ்திரம் போன்ற எதை யெல்லாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்களோ அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையதாகும். யார் வந்து மனிதனிலிருந்து தேவதையாக (நம்மை) மாற்றுகிராறோ அந்த ஒரு பாபாவிற்குப் புகழ் பாடப்பட்டிருக்கிறது. எனவே, இவ்வாறு மாற்றக் கூடிய தந்தையை எவ்வளவு நன்றாக நினைக்க வேண்டும். நாடகத்தின் படி பக்தி மார்க்கமும் நடக்க வேண்டும் என்பதை அறிகிறீர்கள். உண்மையில் அனைவருக்கும் சத்கதியை வழங்கு பவர் ஒருவரே. எனவே பூஜையும் ஒருவருக்குத் தான் செய்ய வேண்டும். தேவி தேவதை யாக சதோபிரதானமாக இருந்தவரே 84 பிறவிகளை அனுபவித்து மிக கீழானவராகி இருக் கின்றனர். இப்போது மீண்டும் மிக உயர்ந்தவராக மாற வேண்டும். பாபாவின் நினை வில்லாமல் அவ்வாறு மாற முடியாது. தந்தையைத் தவிர வேறு யாரிடமும் மாற்றுவதற்கான சக்தி இல்லை. நினைவும் ஒருவரைத் தான் செய்ய வேண்டும். இது தூய்யைமான நினை வாகும். பல பேரை நினைத்தல் தூய்மையற்றது. அனைவரின் ஆத்மாவும் சிவன் நம்முடைய தந்தை என அறிகின்றது. ஆகவே தான் அனைத்து பக்கங்களிலும் எங்கு பார்த்தாலும் சிவனை பூஜிக்கின்றார்கள். தேவி தேவதைகளுக்கு முன்பு சிவனை வைத்திருக்கின்றனர். உண்மையில் தேவதை கள் பூஜை செய்யவில்லை. துக்கத்தில் அனைவரும் நினைக் கின்றனர். சுகத்தில் நினைப்பதில்லை ர்ன்உ பாடலும் இருக்கிறது. பிறகு தேவதைகள் எப்படி பூஜை செய்வார்கள். அது தவறாகும். பொய்யான மகிமைகளைக் காண்பிக்கக் கூடாது. சிவபாபாவை அறிந்துக் கொள்வதேயில்லை, பிறாகு எப்படி நினைவு செய்வது ! எனவே அந்த சித்திரத்தை எடுத்து விட வேண்டும். மற்றபடி பூஜை செய்யக் கூடியவர்கள், ஒரு கிரீடம் உடையவர்களைக் காண்பிக்க வேண்டும். சாது சன்னியாசிகள் யாருக்கும் ஒளிக் கிரீடம் கிடையாது. ஆகவே பிராமணர்களுக்கு ஒளிக் கிரீடத்தைக் காண்பிக்க முடியாது. யாருக்கு ஞானத்தின் பக்கம் முழு கவனம் இருக்குமோ அவர்கள் திருத்தம் செய்துக் கொண்டே இருப்பார்கள். தவறற்றவர்களாக யாரும் மாறவில்லை. தவறுகள் நடந்துக் கொண்டே இருக்கும். திரிமூர்த்தியின் சித்திரம் எவ்வளவு நன்றாக இருக்கிறது. இவர் தந்தை, இவர் தாதா. நீங்கள் என்னை நினைவு செய்தால் இவ்வாறு மாறிவிடலாம் என பாபா கூறுகின்றார். ஆத்ம உணர்வுடையவர் ஆக வேண்டும். எனக்கு தந்தையைத் தவிர வேறு யார் மீதும் பற்று இல்லை என ஆத்மா கூறுகிறது. நாம் இங்கே இருந்தாலும் சாந்திதாமம் மற்றும் சுகதாமத்தை நினைக்கின்றோம். இப்போது துக்க உலகத்தை விட வேண்டும். ஆனால் புதிய வீடு தயாராகும் வரை பழைய வீட்டில் இருக்க வேண்டும். புதிய வீட்டிற்குச் செல்ல தகுதி அடைய வேண்டும் ஆத்மா தூய்மையானதும், வீட்டிற்குச் சென்று விடும். எவ்வளவு எளிதாக இருக்கிறது. முக்கியமான விஷயம் பரமாத்மா யார், இந்த தாதா யார் என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும். பாபா இவர் மூலமாக ஆஸ்தி அளிக்கிறார். குழந்தைகளே மன்மனாபவ என பாபா கூறுகின்றார், என்னை நினைத்தால் நீங்கள் தூய்மையான தேவதையாகி சத்யுகத்திற்குப் போகலாம். மற்றபடி அனைவரும் அச்சமயம் முக்தி தாமத்தில் இருப்பார்கள். அனைத்து ஆத்மாக்களையும் சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்பவர் பாபா தான். எவ்வளவு எளிதாக இருக்கிறது. குழந்தைகளுக்கு மிகவும் குஷி இருக்க வேண்டும். மனம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். மனம் சுத்தமாக இருந்தால் விருப்பம் நிறை வேறிவிடும் என கூறப்படுகிறது. உண்மை யான மனதைக் கவர்ந்தவர் ஆத்மாக்களின் தந்தை ஆவார். மனதைக் கவர்ந்தவர் என பாபாவிற்குக் கூறப்படுகிறது. அவர் வருவதே அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொள்வதற்காக. சங்கமத்தில் வந்த அனைவரின் உள்ளத்தையும் கவருகிறார். ஆத்மாக்களின் மனதை கவர்ந்துக் கொள்பவர் பரமாத்மா ஆவார். மனிதர்களின் மனதை ஈர்க்கக் கூடியவர்கள், மனிதர்கள். இராவண இராஜ்ஜியத்தில் அனைவரும் ஒருவர் மற்றவரின் மனதைக் கெடுக்கிறார்கள்.

குழந்தைகளாகிய உங்களுக்கு போன கல்பத்திலும் இந்த திரிமூர்த்தி சித்திரத்தைப் பற்றி புரிய வைக்க பட்டது. அதனால் தான் இப்போதும் வெளியிடப்பட்டியிருக்கிறது அல்லவா? எனவே நிச்சயமாகப் புரிய வைக்க வேண்டும். இப்போது புரிய வைப்பதற்கு எத்தனை சித்திரங்கள் வந்திருக்கிறது. ஏணிப்படம் எவ்வளவு நன்றாக இருக்கிறது. இருப்பினும் புரிந்து கொள்வதில்லை. அட, பாரதவாசி களாகிய நீங்கள் தான் 84 பிறவிகளை எடுத்துள்ளீர்கள். இபபோது இது கடைசி பிறவியாகும். நான் நல்லதைத் தான் சொல்கிறேன். நீங்கள் 84 பிறவிகளை நாங்கள் எடுக்கவில்லை என ஏன் கூறுகிறீர்கள். அப்படி என்றால் நீங்கள் சொர்க்கத்திற்கு வர முடியாது. இருப்பினும் நரகத்தில் வருவீர்கள். சொர்க்கத்திற்கு வர விரும்புவது இல்லை. பாரதம் தான் சொர்க்கமாக மாற வேண்டும். இது புரிந்துக் கொள்ள வேண்டிய கணக்காகும். மகாரதிகள் நன்கு அமர்ந்து புரிய வைக்கலாம். சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொள்ள வேண்டும். நாம் சென்று யாருக்கு தானம் (ஞானம்) கொடுப்பது? செல்வம் (ஞானம்) இல்லை என்றால் தானம் கொடுப்பதன் எண்ணமே வராது. என்ன ஆசை வைத்து வந்துள்ளீர்கள் என முதலில் கேட்க வேண்டும். தரிசனம் போன்ற விஷயங்கள் இங்கே இல்லை. எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சுகத்தை அடைய வேண்டும். இரண்டு தந்தை இருக்கிறார்கள் அல்லவா? எல்லையற்ற தந்தையை அனைவரும் நினைக்கிறார்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி எப்படி கிடைக்கிறது என்பதை வந்து புரிந்துக் கொள்ளுங்கள். இதையும் புரிந்துக் கொள்பவர்கள் தான் புரிந்துக் கொள்வார்கள். இராஜ்யத்தை அடையக் கூடியவர்கள் என்றால் உடனே புரிந்துக் கொள்வார்கள். வீட்டில் அமர்ந்துக் கொண்டே, வேலைகளை செய்துக் கொண்டே பாபாவை நினையுங்கள். நினைப்பதால் தான் பாவங்கள் அழியும் என்று பாபா கூறுகின்றார். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. ஒரு போதும் மற்றவர்களின் மனதை கெடுக்கக் கூடாது. சேவை செய்ய வேண்டும் என்ற ஆவல் இருக்க வேண்டும். ஞான செல்வம் இருக்கிறது என்றால், நிச்சயம் தானம் செய்ய வேண்டும்.

2. புதிய வீட்டிற்குச் செல்வதற்கு தன்னை தகுதி படுத்திக் கொள்ள வேண்டும். நினைவின் பலத்தினால் ஆத்மாவை தூய்மையாக்க வேண்டும்.

வரதானம்:-

யார் அலங்கரிக்கப்பட்டவர்களாக இருப்பார்களோ அவர்கள் ஒரு பொழுதும் தேக அகங்காரி யாக ஆக முடியாது. நிராகாரி மற்றும் அலங்காரியாக இருப்பது – இதுவே மன் மனாபவ, மத்யாஜிபவ ஆகும். எப்போது இந்த சுயஸ்திதியில் எப்பொழுதும் நிலைத் திருந்தீர்கள் என்றால் அனைத்து (பரஸ்திதி) நிலைமைகளையும் சுலபமாகவே கடந்து சென்று விடுவீர்கள். இதனால் அநேக பழைய சுபாவங்கள் முடிந்து போய் விடுகின்றன. சுயத்தில் ஆத்மாவின் உணர்வுடன் பார்க்கும் பொழுது பழைய பழக்க வழக்கங்களின் விஷயங்கள் முடிந்து போய் விடுகின்றன. மேலும் எதிர்கொள்ளக் கூடிய அனைத்து சக்தி களும் சுயத்தில் வந்து விடுகின்றன.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top