05 September 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

September 4, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

புது உலக சித்திரத்திற்கான ஆதாரம் நிகழ்கால சிரேஷ்ட பிராமண வாழ்க்கை

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று உலகைப் படைப்பவர், உலகின் சிரேஷ்ட அதிர்ஷ்டத்தை உருவாக்குபவராகிய பாப்தாதா தங்களின் சிரேஷ்ட அதிர்ஷ்டத்தின் சித்திர – சொரூப குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக் கிறார். பிராமண ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் உலகத்தின் சிரேஷ்ட அதிர்ஷ்டத்தின் சித்திரங்கள். பிராமண வாழ்க்கையின் சித்திரத்தின் மூலம் வருங்கால சிரேஷ்ட அதிர்ஷ்டம் தெளிவாகக் காணப்படும். பிராமண வாழ்க்கையின் ஒவ்வொரு சிரேஷ்ட கர்மம் வருங்கால சிரேஷ்ட பலனை அனுபவம் செய்விக்கும். பிராமண வாழ்க்கையின் சிரேஷ்ட சங்கல்பம் வருங் கால சிரேஷ்ட சம்ஸ்காரத்தைத் தெளிவு படுத்துகிறது. ஆக, நிகழ்கால பிராமண வாழ்க்கை என்பது வருங்கால அதிர்ஷ்டசாலி உலகத்தின் சித்திரம். பாப்தாதா அத்தகைய வருங்கால சித்திரங் களாகிய குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறார். சித்திரங்களும் நீங்கள் தாம், வருங்கால அதிர்ஷ்டத்திற்கான ஆதார மூர்த்திகளும் நீங்கள் தாம். நீங்கள் சிரேஷ்டமாகும் போது தான் உலகமும் சிரேஷ்டமாகிறது. உங்களது பறக்கும் கலையின் ஸ்திதியோ உலகத்தின் பறக்கும் கலை ஆகிறது. பிராமண ஆத்மாக்கள் நீங்கள் அவ்வப்போது எந்த மாதிரி ஸ்டேஜிலிருந்து கடந்து செல்கிறீர்களோ, அப்போது உலகத்தின் ஸ்டேஜ்களும் கூட மாற்றமடைந்து கொண்டே இருக்கின்றன. உங்களுக்கு சதோப்ரதான் ஸ்திதி உள்ளதென்றால் உலகமும் சதோப்ரதானமாக உள்ளது, கோல்டன் ஏஜ்டாக உள்ளது. நீங்கள் மாறுவீர்களானால் உலகமும் மாற்றமடைகின்றது. அவ்வளவு ஆதார மூர்த்திகளாக நீங்கள் இருக்கிறீர்கள்.

நிகழ்காலத்தில் பாபாவுடன் கூடவே எவ்வளவு சிரேஷ்ட பார்ட் நடித்துக் கொண்டி ருக்கிறீர்கள்! முழுக் கல்பத்திலும் அனைத்திலும் பெரியதிலும் பெரிய விசேஷ பார்ட்டை இந்த சங்கமயுகத்தில் நடித்துக் கொண்டி ருக்கிறீர்கள். பாபாவுடன் கூடவே சகயோகி ஆகி, உலகத்தின் ஒவ்வோர் ஆத்மா வின் அநேக ஜென்மங்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறீர்கள். பாபாவிடமிருந்து முக்தி மற்றும் ஜீவன்முக்திக்கான அதிகாரம் கிடைக்கச் செய்வதற்கு நிமித்தம் ஆகியிருக்கிறீர்கள். அனைவரின் ஆசைகளை நிறைவேற்றக் கூடிய பாப்-சமான் காமதேனு நீங்கள். விருப்பங்களைப் பூர்த்தி செய்பவர்கள். அந்த மாதிரி ஒவ்வோர் ஆத்மாவிற்கும் இச்சா மாத்திரம் அவித்யா ஸ்திதியை அனுபவம் செய்விக்கிறீர்கள். அதன் மூலம் அரைக்கல்பத்திற்கு அநேக ஜென்மங் களுக்கு, பக்தி செய்யும் ஆத்மாக் களுக்கோ ஜீவன்முக்த் அவஸ்தாவில் இருக்கும் ஆத்மாக் களுக்கோ எந்த ஓர் இச்சையும் இருக்காது. ஒரு ஜென்மத்தின் ஆசையை நிறைவேற்றக் கூடிய ஆத்மாக்கள் இல்லை, ஆனால் அநேக ஜென்மங்களுக்கு இச்சா மாத்திரம் அவித்யாவின் அனுபவம் செய்விப் பவர்கள் நீங்கள். எப்படி பாபாவின் அனைத்து பண்டாராக்களும், அனைத்துக் கஜானாக் களும் சதா நிறைந்திருக்கின்றனவோ, அப்பிராப்தியின் பெயர்-அடையாளம் கூட இருப்ப தில்லையோ, அது போல் பாப்-சமானாக சதா மற்றும் சர்வ கஜானாக்களும் நிரம்பியவர்கள் நீங்கள்.

பிராமண ஆத்மா என்றால் பிராப்தி சொரூப ஆத்மா, நிறைவான ஆத்மா. எப்படி பாபா சதா லைட் ஹவுஸ், மைட் ஹவுஸாக இருக்கிறாரோ, அது போல பிராமண ஆத்மாக்களும் பாப்-சமான் இருக்கிறீர்கள், லைட் ஹவுஸாக இருக்கிறீர்கள். அதனால் ஒவ்வோர் ஆத்மாவையும் அவரது இலக்கைச் சென்றடைய வைப்பதற்கு நிமித்தமாக இருக்கிறீர்கள். எப்படி பாபா ஒவ்வொரு சங்கல்பம், ஒவ்வொரு சொல், ஒவ்வொரு கர்மத்தின் மூலமாகவும் ஒவ்வொரு சமயம் வள்ளலாக இருக்கிறார், வரதாதாவாக இருக்கிறார், அத்தகைய பிராமண வாழ்க்கையின் சித்திரமாக இருக்கிறீர்களா? எந்த ஒரு சித்திரத்தை உருவாக்கினாலும் அதில் அனைத்து விசேஷதாக்களையும் காட்டுகிறீர்கள் இல்லையா? அது போல் தற்சமயத்தின் பிராமண வாழ்க்கையின் சித்திரத் தினுடைய விசேஷதாக்களைத் தனக்குள் நிரப்பிக் கொண்டீர்களா? மிகப்பெரிய ஓவியர் நீங்கள், உங்களுடைய சித்திரத்தை வரைந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய சித்திரம் உருவானதும் உலகத்தின் சித்திரம் உருவாகிக் கொண்டே இருக்கிறது. அது போல் அனுபவம் செய்கிறீர்கள் இல்லையா?

அநேகர் கேட்கிறார்கள் இல்லையா – புது உலகில் என்ன இருக்கும் என்று? ஆக, புது உலகின் சித்திரமே நீங்கள் தான். உங்கள் வாழ்க்கையின் மூலம் வருங்காலம் தெளிவாகி விடும். இந்தச் சமயமும் உங்கள் சித்திரத்தில் பாருங்கள், யாராவது பார்த்தால் சதா காலத் திற்கும் மகிழ்ச்சி நிறைந்தவராக ஆகி விட வேண்டும் – அந்த மாதிரி சித்திரம் உருவாகியுள்ளதா? யாராவது கொஞ்ச மாவது அசாந்தியின் அலை உள்ளவராக இருந்தாலும் கூட உங்கள் சித்திரத்தைப் பார்த்ததுமே அசாந்தியையே மறந்து விட வேண்டும், சாந்தியின் அலைகளில் ஆடுபவராக ஆகிவிட வேண்டும். அப்பிராப்தி சொரூபமாக இருப்பவர்கள், பிராப்தியின் அனுபூதியைத் தானாகவே அடைந்து அனுபவம் செய்ய வேண்டும். ஒன்று மில்லாதவராகி வர வேண்டும், அவர்கள் அனைத்தும் நிரம்பியவராகிச் செல்ல வேண்டும். உங்களைப் புன்சிரித்தவாறு பார்த்து மனதின் அல்லது கண்களின் அழுகையை மறந்து போக வேண்டும். புன்சிரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நீங்களும் கூட பாபாவுக்குச் சொல்கிறீர்கள் இல்லையா – புன்சிரிக்கக் கற்றுத் தந்தீர்கள் என்று? ஆக, உங்களது வேலையே அழுகையிலிருந்து விடுவிப்பது மற்றும் புன்சிரிக்கக் கற்றுத் தருவது. ஆக, அத்தகைய சித்திரம் பிராமண வாழ்க்கை. சதா இதை ஸ்மிருதியில் வையுங்கள் – நாம் அத்தகைய ஆதார மூர்த்தி, அஸ்திவாரம். விருட்சத்தின் சித்திரத்தில் பார்த்தீர்களா – பிராமணர்கள் எங்கே அமர்ந்துள்ளனர் என்று? அஸ்திவாரத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் இல்லையா? பிராமணரின் அஸ்திவாரம் உறுதியானது. அதனால் அரைக்கல்பம் ஆடாத, அசையாத நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் சாதாரண ஆத்மாக்கள் இல்லை, ஆதார மூர்த்திகள், அஸ்திவாரம் நீங்கள்.

இச்சமயத்தின் உங்களது சம்பூர்ண ஸ்திதி சத்யுகத்தின் 16 கலை சம்பூர்ண ஸ்திதிக்கு ஆதாரமாகும். இப்போதைய ஒரு வழிமுறை, அங்கே ஒரே ராஜ்யத்தின் ஆதார மூர்த்தியாகும். இங்குள்ள சர்வ கஜானாக்களின் நிறைந்த தன்மை – ஞானம், குணம், சக்திகள், சர்வ கஜானாக்கள் அங்கே நிரம்பிய தன்மைக்கு ஆதாரமாகும். இங்குள்ள தேகக் கவர்ச்சியிலிருந்து விடுபட்ட நிலை, அங்கே உடலின் ஆரோகியத்தின் பிராப்திக்கான ஆதாரமாகும். அசரீரி நிலையின் ஸ்திதி, நோயற்ற தன்மை மற்றும் நீண்ட ஆயுளின் ஆதார சொரூபமாகும். இங்குள்ள கவலையற்ற மகாராஜாவின் வாழ்க்கை அங்கே ஒவ்வொரு விநாடியின் மன மகிழ்ச்சியின் வாழ்க்கை இதே ஸ்திதியின் பிராப்திக்கான ஆதாரம் ஆகிறது. இங்குள்ள சிறிய உலகம் பாப்தாதாவின் தாய்-தந்தை மற்றும் சகோதர-சகோதரி, அங்கே சிறிய உலகத் திற்கான ஆதாரம் ஆகிறது. ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை – இங்குள்ள இந்த இடைவிடாத-நிலையான சாதனை, அங்கே இடை விடாத, நிலையான, அளவற்ற, நிர்விக்ன சாதனங்களின் பிராப்திக்கான ஆதாரம் ஆகிறது. இங்குள்ள சிறிய உலகம் பாப்தாதா அல்லது தாய்-தந்தை மற்றும் சகோதர-சகோதரி, அங்கே சிறிய உலகத்திற்கான ஆதாரம் ஆகிறது. இங்கே ஒரு தாய்-தந்தையின் சம்பந்தத்தின் சம்ஸ்காரம் அங்கேயும் ஒரே உலகத்தின் உலக-மகாராஜன் மற்றும் உலக மகாராணியை தாய்-தந்தை ரூபத்தில் அனுபவம் செய்கிறீர்கள். இங்குள்ள அன்பு நிறைந்த பரிவாரத்தின் சம்பந்தம் அங்கேயும் ராஜா மற்றும் பிரஜைகளாக ஆனாலும் சரி, ஆனால் பிரஜைகளும் கூட தங்களைப் பரிவாரம் என உணர்ந்திருப்பார்கள். அன்பின் சமீப நிலை பரிவாரத்திற்கு இருக்கும். பதவிகள் இருந்தாலும் கூட அவை அன்பின் பதவிகளாக இருக்கும். வெட்கம் மற்றும் பயத்தினுடையதாக இருக்காது. ஆக, வருங்கால சித்திரங்கள் நீங்கள் தாம் இல்லையா? இந்த அனைத்து விஷயங்களையும் தங்கள் சித்திரத் தில் உள்ளதா எனச் சோதித்துப் பாருங்கள் – எது வரை சிரேஷ்ட சித்திரம் ஆகி, தயாராகியிருக்கிறோம் – இது வரை ரேகைகளை வரைந்து கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் திறமை சாலியான ஓவியர்கள் தாம் இல்லையா?

பாப்தாதா இதையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர் — ஒவ்வொருவரும் எது வரை சித்திரத்தைத் தயார் செய்துள்ளனர்? மற்றவர்கள் பற்றிப் புகார் தெரிவிக்க முடியாது – இவர் இதைச் சரியாகச் செய்யவில்லை, அதனால் இப்படி ஆயிற்று. தனது சித்திரத்தைத் தானே உருவாக்க வேண்டும். மற்றப் பொருள்களோ பாப்தாதா விடமிருந்து கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அதிலோ குறை இல்லை இல்லையா? இங்கேயும் விளையாட்டைக் கற்றுக் கொடுக்கிறீர்கள் இல்லையா? அதில் பொருள்களை வாங்கிப் பிறகு உருவாக்குகிறீர்கள். உருவாக்குபவர் மேல் உள்ளது – எவ்வளவு விரும்புகிறீர்களோ, அவ்வளவு பெற்றுக் கொள்ள முடியும். பெற்றுக் கொள்பவர்கள் மட்டும் பெற்றுக் கொள்ள முடியும். மற்றப்படி திறந்த பஜார். பாப்தாதா இந்தக் கணக்கு வைப்பதில்லை — இரண்டு பெற வேண்டுமா அல்லது நான்கு பெற வேண்டுமா என்று. அனைத்திலும் பெரிய சித்திரத்தை உருவாக்கியிருக்கிறீர்கள் இல்லையா? சதா தன்னை அந்த மாதிரி புரிந்து கொள்ளுங் கள் – நாம் தான் வருங்கால அதிர்ஷ்டத்தின் சித்திரம். அது போல் புரிந்து கொண்டு ஒவ்வோரடி யையும் எடுத்து வையுங்கள். சிநேகியாக இருப்பதால் சகயோகியாகவும் இருக்கிறீர்கள். மற்றும் சகயோகியாக இருக்கும் காரணத்தால் பாபாவின் சகயோகம் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் உள்ளது. சில ஆத்மாக்களுக்கு அதிக சகயோகம், இன்னும் சிலருக்குக் குறைவு என்று அந்த மாதிரி கிடையாது. பாபாவின் சகயோகம் ஒவ்வோர் ஆத்மாவுக்காகவும் ஒன்றுக்குப் பல மடங்கு பிரதி பலனாக பல கோடி மடங்கு இருக்கவே செய்கிறது. சகயோகிகளாக யாரெல்லாம் இருக்கிறீர்களோ, அவர்கள் அனைவர்க்கும் பாபாவின் சகயோகம் சதா கிடைக்கின்றது மற்றும் எது வரை இருக்கிறார்களோ, அது வரை இருக்கும். எப்போது பாபாவின் சகயோகம் உள்ளதோ, அப்போது ஒவ்வொரு காரியமும் நடந்தே விட்டது. அது போல் அனுபவமும் செய்கிறீர்கள் மற்றும் செய்து கொண்டே செல்லுங்கள். எந்த ஒரு கஷ்டமும் இல்லை. ஏனென்றால் பாக்கியவிதாதா மூலம் பாக்கியத்தின் பிராப்திக்கு ஆதாரம் உள்ளது. எங்கே பாக்கியம் உள்ளதோ, வரதானம் உள்ளதோ, அங்கே கஷ்டமென்பதே இல்லை.

யாருக்கு மிக நல்ல சித்திரம் உள்ளதோ, நிச்சயமாக அவருக்கு முதல் நம்பர் வரும். ஆக, அனைவரும் முதல் டிவிஷனில் வருபவர்கள் தாமே? முதல் நம்பரில் ஒருவர் வருவார், ஆனால் முதல் டிவிஷன் என்பதோ உள்ளது இல்லையா? ஆக, எதில் வர வேண்டும்? முதல் டிவிஷன் அனைவருக்காகவும் தான். கொஞ்சம் செய்ய வேண்டியது நல்லது தான். பாப்தாதாவோ அனைவர்க்கும் வாய்ப்பளித்துக் கொண்டிருக்கிறார் — பாரத வாசிகளாக இருந்தாலும் சரி, இரட்டை வெளிநாட்டினராக இருந்தாலும் சரி. ஏனென்றால் இப்போது ரிசல்ட் இன்னும் வெளியாகவில்லை. சில நேரம் நல்ல-நல்ல ரிசல்ட் வெளியாவதற்கு முன்கூட்டியே வெளியாகி விடுகிறது. ஆக, இந்த இடம் கிடைத்து விடும் இல்லையா? ஆகவே யாரெல்லாம் எடுத்துக் கொள்ள விரும்பு கிறீர்களோ, இப்போது வாய்ப்புள்ளது. பிறகு இடமில்லை என்று போர்டு வைத்து விடுகின்றனர் இல்லையா? இந்த இருக்கைகள் நிறைந்து விடும். அதனால் நன்கு பறந்து செல்லுங்கள். ஓடாதீர்கள், ஆனால் பறந்து செல்லுங்கள். ஓடுகிறவர்களோ, கீழே பின்தங்கி விடுவார்கள். பறக்கிறவர்கள் பறந்து விடுவார்கள். பறந்து கொண்டே செல்லுங்கள், பறக்க வைத்துக் கொண்டே செல்லுங்கள். நல்லது.

நாலாபுறமும் உள்ள சர்வ சிரேஷ்ட அதிர்ஷ்டத்தின் சிரேஷ்ட சித்திர சொரூப மகான் ஆத்மாக்களுக்கு, சதா தன்னை உலகத்தின் ஆதார மூர்த்தியாக அனுபவம் செய்யக்கூடிய குழந்தை களுக்கு, சதா தனக்குள்ள பிராப்தி சொரூப அனுபூதிகள் மூலம் மற்றவர்களையும் பிராப்தி சொரூபத்தை அனுபவம் செய்விக்கும் சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சதா பாபாவின் அன்பு மற்றும் சகயோகத்தின் பல மடங்கு அதிகாரத்தை அடையக்கூடிய பூஜைக்குரிய, பிராமணரலிருந்து தேவாத்மா ஆகிறவர்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தனிப்பட்ட முறையில் உரையாடல்: பாபாவின் கை சதா நெற்றி மீது இருக்கவே செய்கிறது – அந்த மாதிரி அனுபவம் செய்கிறீர்களா? சிரேஷ்ட வழிமுறை தான் சிரேஷ்ட கை. ஆக, எங்கே ஒவ்வோரடியிலும் பாபாவின் கை, அதாவது சிரேஷ்ட வழிமுறை உள்ளதோ, அங்கே சிரேஷ்ட வழிமுறையினால் சிரேஷ்ட காரியமாகத் தானாகவே ஆகி விடும். சதா கையின் ஸ்மிருதியினால் சக்திசாலி ஆகி, முன்னேறச் செய்து கொண்டே செல்லுங்கள். பாபாவின் கை சதா முன்னேற வைக்கும் அனுபவத்தைச் செய்விக்கும். எனவே இந்த சிரேஷ்ட பாக்கியத்தை ஒவ்வொரு காரியத் திலும் ஸ்மிருதியில் வைத்து முன்னேறிச் சென்று கொண்டே இருங்கள். சதா கை உள்ளது. சதா வெற்றி தான்.

கேள்வி: சகஜயோகியாக சதா இருப்பதற்கான சகஜ விதி என்ன?

பதில்: பாபா தான் உலகம் — இந்த ஸ்மிருதியில் இருப்பீர்களானால் சகஜயோகி ஆகி விடுவீர்கள். ஏனென்றால் நாள் முழுவதும் உலகத்தின் மீது தான் புத்தி செல்கிறது. பாபா மட்டுமே உலகம் என்று ஆகி விட்ட பிறகு புத்தி எங்கே செல்லும்? உலகத்தில் தான் செல்லும் இல்லையா? காட்டிற்கோ செல்லாது. ஆக, எப்போது பாபா மட்டுமே உலகம் என ஆகிவிட்டதோ, அப்போது சகஜயோகி ஆகி விடுவீர்கள். இல்லையென்றால் முயற்சி செய்ய வேண்டி இருக்கும். இங்கிருந்து புத்தியோகத்தை அகற்றுங்கள். அங்கே இணையு ங்கள். சதா பாபாவின் அன்பில் மூழ்கியிருப்பீர் களானால் அவரை மறக்க முடியாது. நல்லது.

அவ்யக்த பாப்தாதாவுடன் இரட்டை வெளிநாட்டு சகோதர-சகோதரிகளின் சந்திப்பு

இரட்டை வெளிநாட்டினரிடம் சேவைக்கான ஊக்கம் நன்றாக உள்ளது. அதனால் விருத்தியும் நன்றாகச் செய்து கொண்டிருக்கிறீர்கள். வெளிநாட்டு சேவையில் 14 ஆண்டு களில் நன்றாக விருத்தி செய்திருக்கிறீர்கள். லௌகிக் மற்றும் அலௌகிக் – இரட்டைக் காரியம் செய்து கொண்டே முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். இரட்டைக் காரியத்தில் சமயத்தையும் ஈடுபடுத்துகிறீர்கள் மற்றும் புத்தியின், சரீரத்தின் சக்தியையும் ஈடுபடுத்துகிறீர்கள். இதுவும் புத்தியின் அற்புதம். லௌகிக் காரியம் செய்து கொண்டே சேவையில் முன்னேறுவது – இதுவும் தைரியமான வேலையாகும். அத்தகைய தைரியமான குழந்தைகளின் காரியத்தில் பாப்தாதா சதா உதவியாளராக இருக்கிறார். எவ்வளவு தைரியமோ, அதைவிடப் பல மடங்கு பாபா உதவியாளராக இருக்கவே செய்கிறார். ஆனால் இரண்டு பார்ட்டையும் நடித்துக் கொண்டே முன்னேற்றத்தை அடைந்து கொண்டிருக்கிறீர்கள். இதைப் பார்த்து பாப்தாதா சதா குழந்தைகள் மீது மகிழ்ச்சி கொள்கிறார். மாயாவிடமிருந்தோ விடுபட்டு விட்டீர்கள் இல்லையா? யோகயுக்த்தாக இருப்பீர் களானால் மாயாவிடமிருந்தும் விடுபட்டு இருப்பீர்கள். யோகயுக்த் இல்லை யென்றால் மாயாவிட மிருந்து விடுபட்டவர் களாகவும் இல்லை. மாயாவுக்கும் கூட பிராமண ஆத்மாக்கள் மீது பிரியம் உள்ளது. யார் பயில்வானாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு பயில்வானோடு தான் மஜா வருகிறது. மாயாவும் சக்திசாலியாக உள்ளது. நீங்களும் சர்வசக்திவான் என்றால் மாயாவுக்கு சர்வ சக்திவானோடு விளையாடுவது தான் நன்றாக இருக்கிறது. இப்போதோ மாயாவை நல்ல படியாகத் தெரிந்து கொண்டு விட்டீர்கள் இல்லையா, அதாவது அவ்வப்போது புது ரூபத்தில் வந்து விடுகிறது. ஞானம் நிறைந்தவர் என்பதன் அர்த்தமே பாபாவையும் அறிவது, படைப் பையும் அறிவது மற்றும் மாயாவையும் அறிவது. படைப்பவர் மற்றும் படைப்பு பற்றி அறிந்து கொண்டீர்கள் மற்றும் மாயாவை அறிந்து கொள்ளவில்லை என்றால் ஞானம் நிறைந்தவர் இல்லை என்றாகிறது.

ஒரு போதும் எந்த ஒரு விஷயத்திலும், உடல் பலவீனமாக ஆனாலும் சரி, அல்லது காரியத்தின் அதிக சுமை இருந்தாலும் சரி, ஆனால் மனதால் ஒரு போதும் களைத்துப் போகக் கூடாது. உடலின் களைப்பு மனதின் குஷியினால் முடிந்து போகும். ஆனால் மனதின் களைப்பு சரீரத்தின் களைப்பையும் கூட அதிகப் படுத்தி விடும். மனம் ஒரு போதும் களைத்துப் போகக் கூடாது. களைத்துப் போவீர்களானால் ஒரு விநாடியில் பாபாவின் வதனத்திற்கு வந்து விடுங்கள். மனம் களைத்துப் போவதெல்லாம் இருக்குமானால் பிராமண வாழ்க்கையின் ஊக்கம்-உற்சாக அனுபவம் என்ன இருக்க வேண்டுமோ, அது இருக்காது. சென்று கொண்டு தான் இருக்கிறோம், ஆனால் நடத்துபவர் நடத்திக் கொண்டிருக்கிறார் என்று அத்தகைய அனுபவம் இருக்காது. முயற்சி செய்து சென்று கொண்டிருக்கிறோம் என்றால் எப்போது முயற்சி அனுபவம் ஆகிறதோ, அப்போது களைப்பும் இருக்கும். எனவே எப்போதுமே புரிந்து கொள்ளுங்கள் — செய்விப்பவர் செய்வித்துக் கொண்டிருக்கிறார், நடத்துபவர் நடத்திக் கொண்டிருக்கிறார்.

சமயம், சக்தி – இரண்டிற்கும் தகுந்தவாறு சேவை செய்து கொண்டே செல்லுங்கள். சேவை ஒரு போதும் நின்று விட முடியாது. இன்று இல்லையென்றாலும் நாளை நடந்தே தீரும். உண்மையான மனதோடு, மனதின் அன்போடு எவ்வளவு சேவை செய்ய முடியுமோ, அவ்வளவு செய்கிறீர்கள் என்றால் பாப்தாதா ஒரு போதும் புகார் சொல்ல மாட்டார் – இவ்வளவு காரியம் செய்தீர்கள், இவ்வளவு செய்யவில்லை என்று. பாராட்டு (சபாஷ்) கிடைக்கும். சமயத்திற்கேற்றவாறு, சக்திக் கேற்றவாறு உண்மையான மனதோடு சேவை செய்வீர்களானால் உண்மையான மனதில் சாஹப் (பிரபு) திருப்தியடைவார். உங்கள் காரியம் மிச்சமிருந்தாலும் கூட பாபா எப்படியாவது அதை முழுமை பெறச் செய்வார். எந்த சேவை எந்தச் சமயம் நடைபெற வேண்டுமோ, அது நடந்தே தீரும். மிச்சமிருக்காது. யாராவது ஓர் ஆத்மாவுக்கு டச் பண்ணி பாப்தாதா தம்முடைய குழந்தை களுக்கு சகயோகி ஆக்குவார். யோகி குழந்தைகளுக்கு அனைத்து வித சகயோகமும் சமயத்தில் கிடைக்கவே செய்கிறது. ஆனால் யாருக்குக் கிடைக்கும்? உண்மையான மனம் உள்ள உண்மை யான சேவாதாரி களுக்கு. ஆக, குழந்தைகள் அனைவரும் சேவாதாரிக் குழந்தைகளாக இருக்கிறீர்களா? நம் மீது சாஹப் திருப்தியடைகிறார் – அந்த மாதிரி அனுபவம் செய்கிறீர்கள் இல்லையா? நல்லது.

வரதானம்:-

சேவையில் ஏறும் கலையில் தனது வெற்றிக்கான முக்கிய ஆதாரம் – ஒரு தந்தையிடம் உடையாத அன்பு. ஒரு தந்தை தவிர வேறு யாரும் தென்படக் கூடாது. சங்கல்பத்தில் கூட பாபா, பேச்சிலும் பாபா, கர்மத் திலும் பாபாவின் துணை. அத்தகைய லவ்லீன் ஆத்மா ஒரு சொல் பேசினாலும் அவருடைய அன்பின் சொல், மற்ற ஆத்மாவையும் கூட அன்பில் கட்டிப் போட்டு விடும். அத்தகைய லவ்லீன் ஆத்மாவின் ஒரு பாபா என்ற சொல் தான் மந்திரத்தின் வேலை செய்யும். அவர் ஆன்மிக மந்திரவாதி ஆகி விடுவார்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top