05 December 2021 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
4 December 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
சதா மகிழ்ச்சியாக எப்படி இருப்பது?
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
இன்று பாப்தாதா நாலாபுறம் உள்ள குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். எதைப் பார்த்தார்? ஒவ்வொரு குழந்தையும் சுயம் ஒவ்வொரு சமயமும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்? அதோடு கூடவே மற்றவர்களைத் தன் மூலமாக எவ்வளவு மகிழ்ச்சியடைய வைக்கிறார்? ஏனென்றால் பரமாத்ம பிராப்திகள் அனைத்தினுடைய பிரத்தியட்ச சொரூபத்தில் மகிழ்ச்சி தான் முகத்தின் மீது காணப் படுகிறது. மகிழ்ச்சி என்பது பிராமண வாழ்க்கையின் விசேஷ ஆதாரமாகும். அல்ப கால மகிழ்ச்சி மற்றும் சதா கால நிரம்பிய நிலையின் மகிழ்ச்சி – இதற்கிடையில் இரவு-பகலுக்குள்ள வேறுபாடு உள்ளது. அல்பகால மகிழ்ச்சி, அல்பகால பிராப்தி அடைந்தவரின் முகத்தின் மீது சிறிது காலத்திற்கு அவசியம் காணப்படும். ஆனால் ஆன்மிக மகிழ்ச்சி தன்னையோ மகிழ்விக்கவே செய்கிறது. ஆனால் ஆன்மிக மகிழ்ச்சியின் வைப்ரேஷன் மற்ற ஆத்மாக்கள் வரையிலும் கூடச் சென்று சேர்கின்றது. மற்ற ஆத்மாக்களும் சாந்தி, சக்தியின் அனுபவம் அடைகின்றனர். எப்படி பழம் தரும் மரம் தனது குளிர்ந்த நிழலில் கொஞ்ச நேரம் மனிதர்களுக்குக் குளிர்ச்சியின் அனுபவம் செய்விக் கிறது மற்றும் மனிதர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். அது போல் பரமாத்ம பிராப்திகள் என்ற பழம் நிறைந்த ஆன்மிக மகிழ்ச்சியைப் பெற்ற ஆத்மாக்கள் மற்றவர்களுக்கும் தங்களுடைய பிராப்தி களின் நிழலில் உடல்-மனதின் சாந்தி மற்றும் சக்தி யின் அனுபவம் செய்விக்கின்றனர். மகிழ்ச்சியின் வைப்ரேஷன் சூரியனின் கிரணங்களுக்கு சமமாக, வாயு மண்டலத்தை, மனிதரை மற்றும் அனைத்து விஷயங்களையும் மறக்கச் செய்து, உண்மையான ஆன்மிக சாந்தியின், குஷியின் அனுபவமாக மாற்றி விடுகிறது. இப்போதைய சமயத்தின் அஞ்ஞானி ஆத்மாக்கள் தங்களின் வாழ்க்கையில் அதிகம் செலவழித்தும் கூட மகிழ்ச்சியில் இருக்க விரும்புகின்றனர். நீங்கள் என்ன செலவழித்தீர்கள்? பைசா செலவு செய்யாமலே கூட சதா மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் இல்லையா? அல்லது மற்றவர்களின் உதவியினால் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? பாப்தாதா குழந்ûதாகளின் சார்ட்டை சோதித்துக் கொண்டிருந்தார். என்ன பார்த்தார்? ஒன்று, சதா மகிழ்ச்சியாக இருப்பவர்கள். இரண்டாவது மகிழ்ச்சி யாக இருப்பவர்கள். சதா என்ற சொல் இங்கே இல்லை. மகிழ்ச்சியும் மூன்று விதமானதாகப் பார்த்தார். 1) தன் மூலமாக மகிழ்ச்சி 2) மற்றவர் மூலமாக மகிழ்ச்சி 3) சேவையின் மூலம் மகிழ்ச்சி. மூன்றிலும் மகிழ்ச்சி என்றால் பாப்தாதாவைத் தானாகவே மகிழ்வித்து விட்டீர்கள். மேலும் எந்த ஆத்மா மீது பாபா மகிழ்ச்சியாக இருக்கிறாரோ, அவரோ சதா வெற்றி மூர்த்தியாகவே இருக்கிறார்.
பாப்தாதா பார்த்தார், அநேகக் குழந்தைகள் தங்களிடமே மகிழ்ச்சியற்றவராக இருக்கிறார்கள். சிறு விஷயத்தின் காரணத்தால் மகிழ்ச்சியற்று இருக்கிறார்கள். முதல்-முதல் பாடம் நான் யார் என்பதைத் தெரிந்திருந்த போதும் மறந்து விடுகின்றனர். பாபா என்னவாக ஆக்கினாரோ, என்ன கொடுத்தாரோ, அதை மறந்து விடுகின்றனர். பாபா ஒவ்வொரு குழந்தையையும் முழு ஆஸ்திக்கு அதிகாரி ஆக்கி யிருக்கிறார். சிலருக்கு முழுமையாகவும் சிலருக்குப் பாதியும் கொடுக்கவில்லை. யாருக்காவது பாதி அல்லது கால்வாசி கிடைத் திருக்கிறதா என்ன? பாதி கிடைத்திருக்கிறதா அல்லது பாதியை எடுத்திருக்கிறீர்களா? பாபாவோ அனைவருக்கும் மாஸ்டர் சர்வசக்திவான் என்ற வரதானத்தை அல்லது ஆஸ்தியைக் கொடுத்திருக்கிறார். சில சக்திகளைக் குழந்தைகளுக்குக் கொடுத் திருக்கிறார், சில சக்திகளைக் கொடுக்கவில்லை என்று அந்த மாதிரி இல்லை. தமக்காக எதையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை. சர்வகுண சம்பன்னம் ஆக்கியிருக்கிறார், சர்வ பிராப்தி சொரூபம் ஆக்கியிருக் கிறார். ஆனால் பாபா மூலம் என்ன பிராப்திகள் கிடைத்துள்ளனவோ, அவற்றைத் தனக்குள் நிறைத்துக் கொள்ள முடிவதில்லை. எப்படி ஸ்தூல செல்வம் அல்லது சாதனங்களைப் பெற்றிருந்த போதிலும் செலவு செய்வதற்கு வருவதில்லை அல்லது சாதனங் களைப் பயன்படுத்துவதற்கு வருவதில்லை என்றால் பிராப்தி இருந்த போதும் அதிலிருந்து வஞ்சிக்கப் பட்டவராய் இருந்து விடுகின்றனர். அது போல் அனைத்துப் பிராப்திகள் அல்லது கஜானாக்கள் அனைவரிடமும் உள்ளன. ஆனால் காரியத்தில் ஈடுபடுத்துவதற்கான விதி வருவதில்லை மற்றும் சமயத்தில் பயன்படுத்த வருவதில்லை. பிறகு சொல்கின்றனர் – இதைச் செய்ய வேண்டும், இதைச் செய்யக் கூடாது எனப் புரிந்து கொண்டிருந்தேன். ஆனால் அந்தச் சமயம் இதை மறந்து விட்டேன். இப்போது புரிந்து கொள்கிறேன், அப்படி ஆகக்கூடாது. அந்தச் சமயம் ஒரு விநாடி போய் விட்டாலும் கூட வெற்றியின் குறிக் கோளைச் சென்றடைய முடியாது. ஏனென்றால் சமயம் என்ற வண்டி போய் விட்டது. ஒரு விநாடி தாமதித்தாலும் சரி, ஒரு மணி நேரம் தாமதித்தாலும் சரி, சமயமோ முடிந்து விட்டது இல்லையா? மேலும் சமயம் என்ற வண்டி போய் விட்டது என்றால் பிறகு தன்னிடம் மனச்சோர்வடைந்து விடுகின்றனர் மற்றும் மகிழ்ச்சியற்ற தன்மையின் சம்ஸ்காரம் வெளிப்பட்டு விடுகின்றது — எனது பாக்கியமே இப்படித் தான் உள்ளது, டிராமாவில் எனது பார்ட்டே இப்படித் தான் உள்ளது. இதற்கு முன்பே கூட சொல்லியிருக்கிறோம் – தனக்குத் தான் மகிழ்ச்சியற்றவராக இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, மனச்சோர் வடைவது. இரண்டாவது காரணம், மற்றவர்களின் விசேஷ குணம், பாக்கியம் மற்றும் பார்ட்டைப் பார்த்துப் பொறாமை ஏற்படுவது. தைரியம் குறைந்து விடுகிறது, பொறாமை அதிகமாகிறது. மனச்சோர்வடைந்தவர்களும் ஒரு போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஏனென்றால் இரண்டு கணக்கின் படியும் அத்தகைய ஆத்மாக்களின் ஆசை ஒரு போதும் நிறைவேறுவதில்லை. மேலும் இச்சைகள் அச்சா ஆக விடுவதில்லை. ஆகவே அவர்கள் மகிழ்ச்சியாக இருப்ப தில்லை. மகிழ்ச்சியாக இருப்பதற்கு சதா ஒரு விஷயத்தை புத்தியில் வையுங்கள் – டிராமாவின் நியமத்தின் படி சங்கம யுகத்தில் ஒவ்வொரு பிராமண ஆத்மாவுக்கும் ஏதேனுமொரு விசேஷ குணம் கிடைத்துள்ளது. மாலையில் கடைசி 16000- வது மணியாக இருந்தாலும் அவருக்கும் ஏதாவதொரு விசேஷ குணம் கிடைத்துள்ளது. அதிலிருந்தும் முன்னால் செல்லுங்கள் — ஒன்பது லட்சம் எனப் பாடப்பட்டுள்ளது – அவர்களுக்கும் கூட ஏதாவதொரு விசேஷ குணம் கிடைத்துள்ளது. தனது விசேஷ குணத்தை முதலில் அறிந்து கொள்ளுங்கள் மற்றும் காரியத்தில் ஈடுபடுத்துங்கள். வெறுமனே மற்றவர்களின் விசேஷ குணத்தை மட்டும் பார்த்து விட்டு மனச்சோர்வு அல்லது பொறாமையில் வராதீர்கள். ஆனால் தனது விசேஷ குணத்தைக் காரியத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் ஒரு விசேஷ குணமானது இன்னும் மற்ற விசேஷ குணங்களையும் கொண்டு வரும். ஒன்றுக்கு முன்னால் பிந்தி (பூஜ்யம்) வைத்துக் கொண்டே போனால் எவ்வளவு ஆகி விடும்? ஒன்றுக்கு ஒரு பிந்தி வைப்பீர்களானால் 10 ஆகிவிடும். மேலும் இரண்டாவது பிந்தி வைத்தால் 100 ஆகிவிடும். மூன்றாவது வைத்தால் இந்தக் கணக்கோ வருகிறது தானே? காரியத்தில் ஈடுபடுத்துவது என்றால் அதிகரிப்பது. மற்றவர்களைப் பார்க்காதீர்கள். தன்னுடைய விசேஷ குணத்தைக் காரியத்தில் ஈடுபடுத்துங்கள். எப்படி பாருங்கள், பாப்தாதா எப்போதும் போலி தாதியின் உதாரணம் சொல்கிறார். மகாரதிகளின் பெயர் எப்போதாவது வருகிறது, ஆனால் இவருடைய பெயர் வருகிறது. என்ன விசேஷ குணம் இருந்ததோ, அதைக் காரியத்தில் ஈடுபடுத்தினார். சமையலறையைத் தான் கவனித்துக் கொள்கிறார், ஆனால் விசேஷ குணத்தைக் காரியத்தில் ஈடுபடுத்தியதன் மூலம் விசேஷ ஆத்மாக்களின் உதாரணம் பாடப் படுகிறது. அனைவரும் மதுபன் பற்றி வர்ணனை செய்கின்றனர் என்றால் தாதிகளின் விஷயங்களைச் சொல்வார்கள் என்றால் போலி தாதி பற்றியும் சொல்வார்கள். சொற்பொழிவோ செய்வதில்லை. ஆனால் விசேஷ குணத்தைக் காரியத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் தானும் விசேஷமானவராக ஆகி விட்டார். மற்றவர்களும் விசேஷமான பார்வையில் பார்க்கின்றனர். ஆக, மகிழ்ச்சியாக இருப்பதற்காக என்ன செய்யப் போகிறீர்கள்? விசேஷ குணத்தைக் காரியத்தில் கொண்டு வாருங்கள். அப்போது விருத்தி யாகி விடும் மற்றும் எப்போது அனைத்தும் வந்து விடுகின்றனவோ, அப்போது சம்பன்னம் ஆகி விடுவீர்கள். மேலும் மகிழ்ச்சியின் ஆதாரம் சம்பன்னதா. யார் தன்னிடம் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ, அவர்கள் மற்றவர்களிடமும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சேவையின் மீது மகிழ்ச்சியாக இருப்பார்கள். எந்த ஒரு சேவை கிடைத்தாலும் அதில் மற்றவர்களை மகிழ்வித்து சேவையில் நம்பர் முன்னால் பெற்று விடுவார்கள். அனைத்திலும் பெரியதிலும் பெரிய சேவையை உங்கள் மகிழ்ச்சி நிறைந்த மூர்த்தி செய்யும். ஆக, பாபா எந்த மாதிரி சார்ட்டைப் பார்த்தார் என்பதைக் கேட்டீர்களா? நல்லது.
டீச்சர்களுக்கு முன்னால் அமர்வதற்கான பாக்கியம் கிடைத்துள்ளது. ஏனென்றால் வழிகாட்டி ஆகி வருகின்றனர் என்றால் அதிக முயற்சி செய்கின்றனர். ஒருவரை சுகதா மிலிருந்து அழைக்கிறார்கள் என்றால் இன்னொருவரை விஷால் பவனில் இருந்து அழைப் பார்கள். நல்ல பயிற்சி ஆகி விடுகிறது. சென்டரிலோ நீங்கள் நடைப்பயிற்சி செய்வதில்லை. தொடக்க காலத்தில் சேவை ஆரம்பித்த போது நடந்து சென்றீர்கள் இல்லையா? உங்கள் பெரிய தாதிமாரும் நடந்து சென்றனர். பொருள்கள் நிறைந்த பெரிய பையைக் கையில் எடுத்துக் கொண்டு நடந்து சென்றனர். தற்சமயத்திலோ நீங்கள் அனைவரும் தயாராக அனைத்தும் இருக்கும் போது வந்திருக்கிறீர்கள். ஆக, நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் இல்லையா? உருவாக்கப்பட்ட சென்டர்கள் கிடைத்து விட்டன. சொந்தக் கட்டடமாகி விட்டது. முதலிலோ யமுனைக் கரையில் வசித்தீர்கள். ஒரே அறை — இரவில் தூங்குவதற்கு, பகலில் சேவைக்கென்று இருந்தது. ஆனால் குஷி-குஷியோடு செய்த தியாகம் செய்ததால் அதற்கான பாக்கியத்தின் பழத்தை (பலனை) இப்போது சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பழத்தைச் சாப்பிடுகிற நேரத்தில் நீங்கள் வந்திருக்கிறீர்கள். இவர்கள் விதைத்தார்கள், நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பழத்தைச் சாப்பிடுவதோ மிகவும் சுலபம் இல்லையா? இப்போது அந்த மாதிரி பலன் சொரூபக் குவாலிட்டியை (தரம்) வெளிக்கொண்டு வாருங்கள். புரிந்ததா? குவான்ட்டிட்டியோ (எண்ணிக்கை) இருக்கவே செய்கிறது மற்றும் இதுவும் கூட வேண்டும். ஒன்பது லட்சம் வரை செல்ல வேண்டுமானால் குவான்ட்டிட்டி, குவாலிட்டி – இரண்டும் வேண்டும். ஆனால் 16 ஆயிரத்தின் பக்கா மாலை தயார் செய்யுங்கள். இப்போது குவாலிட்டி சேவை மீது அடிக்கோடிடுங்கள் (விசேஷ கவனம் செலுத்துங்கள்).
ஒவ்வொரு குரூப்பிலும் டீச்சர்களும் வருகிறார்கள், குமாரிகளும் வருகிறார்கள். ஆனால் குமாரிகள் வெளிப்படுவதில்லை (சமர்ப்பணமாவதில்லை). மதுபன் பிடித்திருக்கிறது, பாபா விடம் அன்பும் உள்ளது. ஆனால் சமர்ப்பணமாவதற்கு யோசிக்கின்றனர். தாமாக முன்வரு கிறவர்கள் நிர்விக்னமாகச் செல்கின்றனர். யார் சொல்வதால் செல்கின்றனரோ, அவர்கள் நிற்கின்றனர், பிறகு செல்கின்றனர். அவர்கள் அடிக்கடி உங்களுக்குத் தான் சொல்வார்கள் – நாங்களோ முதலிலேயே சொல்லியிருந்தோம் – சரண்டராகக் கூடாது என்று. சிலர் யோசிக்கின்றனர் – இதிலோ (சென்டருக்கு) வெளியில் இருந்து கொண்டு சேவை செய்தால் நல்லது. ஆனால் வெளியில் இருந்து கொண்டு சேவை செய்வது மற்றும் தியாகம் செய்து சேவை செய்வது – இதில் வேறுபாடு நிச்சயமாக உள்ளது. யார் சமர்ப்பணத்தின் மகத்துவத்தை அறிந்திருக்கிறார்களோ, அவர்கள் சதா தங்களை அநேக விஷயங்களில் இருந்து விடுவித்துக் கொண்டு ஓய்வாக வந்துள்ளனர். அநேகர் முயற்சியிலிருந்து விடுபட்டு விட்டனர். ஆக, டீச்சர்கள் தங்களின் மகத்துவத்தை நன்கு அறிந்திருக்கிறீர்கள் இல்லையா? வேலை மற்றும் இந்த சேவை – இரண்டு பணிகளையும் செய்பவர்கள் நல்லவர்களா அல்லது ஒரு பணி செய்பவர்கள் நல்லவர்களா? அவர்கள் பிறகும் கூட இரட்டைப் பார்ட் நடிக்க வேண்டி உள்ளது. நிர்விக்னமாக உள்ளனர் என்றாலும் டபுள் பார்ட்டோ உள்ளது இல்லையா? உங்களுக்கோ ஒரு பார்ட் தான். இல்லற வாசிகள் மூன்று பார்ட் நடிக்க வேண்டி உள்ளது – ஒன்று படிப்பினுடையது, இரண்டாவது சேவை யினுடையது மற்றும் அதோடு கூடவே இல்லறத்தைப் பேணிக் காப்பது. நீங்களோ அனைத்து விஷயங்களில் இருந்தும் விடுபட்டு விட்டீர்கள். நல்லது.
சதா மகிழ்ச்சியின் விசேஷதா நிறைந்த அனைத்து சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, சதா தனது விசேஷ தாவை அறிந்து காரியத்தில் ஈடுபடுத்தக் கூடிய புத்திசாலி மற்றும் சாரமுள்ள (சென்ஸிபிள் மற்றும் எசன்ஸ்ஃபுல்) ஆத்மாக்களுக்கு, சதா மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய, மற்றவர்களை மகிழ்விக்கின்ற உயர்ந்த மகான் ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.
ஆக்ரா – ராஜஸ்தான் சதா தன்னை அழியாத ஆசனதாரி சிரேஷ்ட ஆத்மா என உணர்ந்திருக்கிறீர்களா? ஆத்மா அழியாதது என்றால் அதன் ஆசனமும் அழியாத ஆசனமாகி விட்டது இல்லையா? இந்த ஆசனத்தின் மீது அமர்ந்து ஆத்மா எவ்வளவு காரியங்கள் செய்கிறது! ஆசனத்தில் அமரக்கூடிய ஆத்மா நான் — இந்த ஸ்மிருதி மூலம் சுயராஜ்யத்தின் ஸ்மிருதி தானாகவே வருகின்றது. இராஜாவும் எப்போது ஆசனத்தில் அமர்கிறாரோ, அப்போது ராஜ்யத்தின் நஷா, ராஜ்யத்தின் குஷி தானாகவே இருக்கின்றது. ஆசனத்திற் குரியவர் என்றால் சுயராஜ்ய அதிகாரி ராஜா நான் — இந்த ஸ்மிருதி மூலம் அனைத்துக் கர்மேந்திரியங்களும் தாமாகவே கட்டளைப்படி நடக்கும். யார் அழியாத ஆசனத்திற்குரியவர் என உணர்ந்து நடக்கிறார்களோ, அவர்களுக்காக பாபாவின் மன சிம்மாசனமும் உள்ளது. ஏனென்றால் ஆத்மா என உணர்வதன் மூலம் பாபாவின் நினைவு தான் வருகிறது. பிறகு தேகமும் இல்லை, தேகத்தின் சம்பந்தங்களும் இல்லை, பதார்த்தங்களும் இல்லை. ஒரு பாபா மட்டுமே உலகம். அதனால் அழியாத ஆசனத்திற்குரியவர் பாபாவின் மன சிம்மாசன தாரியாகவும் ஆகிறார். ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை என்று யார் இருக் கிறார்களோ, அவர்கள் தாம் பாபாவின் மனதில் இருக்கிறார்கள். ஆக, இரட்டை ஆசனம் ஆகி விட்டது. யார் தேடிக் கண்டெடுக் கப்பட்ட குழந்தைகளாக இருக்கிறார்களோ, அன்பானவர்களாக இருக்கிறார்களோ, அவர்களை சதா மடியில் அமர்த்தி வைப்பார்கள். மேலே அமர்த்துவார்கள், கீழே அல்ல. ஆக, பாபாவும் சொல்கிறார், ஆசனத்தில் அமருங்கள். கீழே வராதீர்கள். யாருக்கு ஆசனம் கிடைக்கிறதோ, அவர் வேறு இடத்தில் அமர்வாரா என்ன? ஆக, அழியாத ஆசனம் அல்லது மன சிம்மாசனத்தை மறந்து, தேகத்தின் பூமியில், மண்ணில் வராதீர்கள். தேகத்தை மண் எனச் சொல் கிறீர்கள் இல்லையா? மண்ணோடு மண்ணாகி விடும் என்று சொல்கின்றனர் இல்லையா? ஆக, தேகத்தில் வருவது என்றால் மண்ணில் வருவதாகும். யார் ராயல் குழந்தைகளாக இருக்கிறார்களோ, அவர்கள் ஒரு போதும் மண்ணில் விளையாட மாட்டார்கள். பரமாத்ம குழந்தைகளோ, அனைவரிலும் ராயலானவர்கள். ஆக, ஆசனத்தில் அமர்வது நன்றாக உள்ளதா அல்லது கொஞ்சம்-கொஞ்சம் எண்ணம் உள்ளதா – மண்ணின் மீதும் பார்ப்போம் என்று? அநேகக் குழந்தைகளுக்கு மண்ணைத் தின்பது அல்லது மண்ணில் விளையாடுவது பழக்கமாக உள்ளது. அந்த மாதிரியோ இல்லை தானே? 63 பிறவிகளாக மண்ணில் விளையாடினீர்கள். இப்போது பாபா சிம்மாசனதாரி ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்றால் மண்ணோடு எப்படி விளயாடு வீர்கள்? யார் மண்ணோடு விளையாடுகிறார்களோ, அவர்கள் அழுக்காகி விட்டார்கள். இப்போது பாபா சுத்தமாக்கி விட்டார். சதா இதே ஸ்மிருதி மூலம் சக்திசாலி ஆகுங்கள். சக்திசாலி ஒரு போதும் பலவீனமா வதில்லை. பலவீனமாவது என்றால் மாயாவின் நோய் வருவதாகும். இப்போதோ சதா ஆரோக்கிய மானவர் ஆகி விட்டீர்கள். ஆத்மா சக்திசாலி ஆகி விட்டது. சரீரத்தின் கணக்கு-வழக்கு வேறு பொருள். ஆனால் மனம் சக்திசாலி ஆகி விட்டது இல்லையா? சரீரம் பலவீனமாகி விட்டது, சரியாக இயங்கவில்லை என்றால் அது கடைசி. அது நடக்கத் தான் செய்யும். ஆனால் ஆத்மா சக்திசாலியாக இருக்க வேண்டும். சரீரத்தோடு ஆத்மாவும் பலவீனமாகக் கூடாது. ஆக, சதா நினைவு வைக்க வேண்டும் – டபுள் ஆசனதாரி ஆகி, டபுள் கிரீடதாரி ஆக வேண்டும். நல்லது.
அனைவரும் திருப்தியாக இருக்கிறீர்கள் இல்லையா? திருப்தி என்றால் மகிழ்ச்சியாக இருப்பது. சதா மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா அல்லது அவ்வப்போது மட்டும் இருக்கிறீர்களா? சில நேரம் மகிழ்ச்சியற்ற நிலை, சில நேரம் மகிழ்ச்சி – அந்த மாதிரி இல்லையே? ஒரு போதும் எந்த விஷயத் தாலும் மகிழ்ச்சியற்றவராக ஆவதில்லையே? இன்று இதைச் செய்து விட்டோம், இன்று இது நடந்து விட்டது, நேற்று அது நடந்து விட்டது – அந்த மாதிரி கடிதமோ எழுதுவதில்லை தானே? சதா மகிழ்ச்சியாக இருப்பவர்கள் தங்களின் ஆன்மிக வைப்ரேஷன் மூலம் மற்றவர்களையும் மகிழ்விப் பார்கள். நான் மகிழ்ச்சியாகவோ இருக்கவே செய்கிறேன் என்று அந்த மாதிரி இல்லை. ஆனால் மகிழ்ச்சியின் சக்தி அவசியம் பரவும். ஆக, வேறு யாரையாவது மகிழ்விப்பவராக இருக்கிறீர்களா அல்லது தன் வரையில் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் சரி என நினைக்கிறீர்களா? மற்றவர் களையும் மகிழ்விப்பேன் — பிறகோ இப்போது அந்த மாதிரி எந்தக் கடிதமும் வராது. மகிழ்ச்சியற்ற நிலையின் கடிதம் ஏதாவது வருகிறது என்றால் திரும்ப அவருக்கே அனுப்ப வேண்டும் இல்லையா? அந்த நேரம் மற்றும் இந்தத் தேதி நினைவு வைக்க வேண்டும். ஆம், இந்தக் கடிதம் எழுதுங்கள் – நான் ஓ.கே. மற்றும் அனைவரும் என்னோடு ஓ.கே.யாக இருக்கிறார்கள். இந்த இரண்டு வரி எழுதுங்கள், போதும். நானும் ஓ.கே. மற்றவர்களும் என்னோடு ஓ.கே. இவ்வளவு செலவு ஏன் செய்கிறீர்கள்? இதுவோ இரண்டு வரி கார்டிலேயே வந்து விடும் மற்றும் அடிக்கடி எழுதாதீர்கள். அநேகரோ தினம் கார்டு அனுப்பி விடுகின்றனர். நாள் தோறும் அனுப்பக் கூடாது. மாதத்தில் இரண்டு தடவை, 15 நாளுக்கு ஒன்று ஓ.கே. என்ற கார்டு எழுதுங்கள். மற்றக் கதைகளை எழுத வேண்டாம். தனது மகிழ்ச்சியின் மூலம் மற்றவர் களையும் மகிழ்விக்க வேண்டும். நல்லது.
வரதானம்:-
ஆன்மிக சேவாதாரிகளுக்கு சேவை தவிர வேறு எதுவும் தோன்றாது. அவர்கள் மனம்-சொல்-செயலால் ஒரு விநாடி கூட சேவையிலிருந்து ஓய்வு (ரெஸ்ட்) பெற மாட்டார்கள். அதனால் சிறந்தவ ராக (பெஸ்ட்) ஆகி விடுகிறார்கள். அவர்கள் சேவைகளில் வெற்றி பெறுவதற்காக சதா இந்த ஸ்லோகனைத் தான் நினைவு வைப்பார்கள் – உள்ளடக்குவது மற்றும் எதிர்கொள்வது – இது தான் நமது இலக்கு. அவர்கள் தங்களின் பழைய சம்ஸ்காரங்களை உள்ளடக்குகிறார்கள் மற்றும் மாயாவை எதிர்கொள்கிறார்கள், தெய்வீகப் பரிவாரத்தை அல்ல. அத்தகைய ஞானம் நிறைந்தவராக இருப்ப தோடு கூடவே சக்தி நிறைந்தவராகவும் இருக்கிற குழந்தைகள் தாம் ஆன்மிக சேவாதாரி எனச் சொல்லப் படுகிறார்கள்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!