05 August 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

05 August 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

4 August 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! உங்கள் அதிர்ஷ்டத்தை விழிக்கச் செய்ய பாபா வந்துள்ளார், தூய்மையானால் தான் அதிர்ஷடம் விழிப்படையும்.

கேள்வி: -

குழந்தைகளின் அதிர்ஷ்டம் விழித்துள்ளது என்றால் அவர்களின் அடையாளம் என்ன?

பதில்:-

தேவதைகள் மிகவும் அழகாகவும் அவர்கள் சுகத்தின் தேவதையாக இருப்பார்கள். அவர்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து சுகத்தின் ஆஸ்தியை பெற்று அனைவருக்கும் சுகத்தினைக் கொடுப்பார்கள். அவர்கள் ஒருபோதும் மற்றவர்களுக்கு துக்கம் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் வியாசரின் உண்மையிலும் உண்மையான சுகதேவர்கள். 2) அவர்கள் ஐந்து விகாரத்தினை சன்யாசம் செய்தது உண்மையிலும்-உண்மையான இராஜயோகி, இராஜரிஷி என்று அழைக்கப்படுகின்றனர். 3) அவர்களின் மனநிலை ஒருநிலையாக இருக்கும், அவர்கள் எந்த விஷயத்திற்காகவும் அழ மாட்டார்கள். அவர்களைத் தான் மோகத்தை வென்றவர்கள் என்று கூறலாம்.(மனதைக் கவர்பவர்களாக) பவித்திர மாகவும் இருப்பவர் கள். அழகான தோற்றத்தின் காரணத்தால் அவர்களின் சித்திரங் களிலும் கூட கவர்ச்சி உள்ளது. தேவதைகளிடம் பவித்திரதாவின் விசேஷ குணம் உள்ளது. அந்த குணத்தின் காரணத்தால் தான் அபவித்திர மனிதர்கள் அவர்கள் முன் தலை வணங்குகின்றனர். யாரிடம் அனைத்து தெய்வீக குணங்களும் உள்ளனவோ, யார் சதா குஷியாக உள்ளனரோ, அவர்கள் தான் அழகானவர்களாக ஆகின்றனர்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

அதிர்ஷ்டத்தை எழுப்பி வந்துள்ளேன்.. ..

ஓம்சாந்தி. பாடலின் ஒரு வரியைக் கேட்டவுடன் இனிமையிலும் இனிமையான குழந்தை களுக்கு மெய் சி-ர்ப்பு ஏற்பட வேண்டும். இது பொதுவான பாடல் தான், ஆனால் இந்த பாடலின் சாரத்தை யாரும் அறியவில்லை. பாபா தான் வந்து ஒவ்வொரு பாடலின், சாஸ்த்திரத்தின் அர்த்தத்தை புரிய வைக்கின்றார். இனிமை யிலும் – இனிமையான குழந்தைகள் கூட இந்த கலியுகத்தில் அனைவரின் அதிர்ஷ்டம் உறங்கி உள்ளது என்பதை தெரிந்து கொண்டீர்கள். சத்திய யுகத்தில் அனைவரின் அதிர்ஷ்டம் விழிப்படைந்திருக்கும். உறங்கிக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டத்தை விழிக்கச் செய்யக் கூடியவர், மேலும் வழி காட்டக் கூடியவர், அதாவது அதிர்ஷ்டத்தை உருவாக்கக் கூடியவர் ஒரு பாபா தான். அவர் தான் வந்து குழந்தைகளின் அதிர்ஷ்டத்தை விழிக்கச் செய்கின்றார். உலகத்தில் எப்படி குழந்தைகள் பிறந்தவுடன் அதிர்ஷ்டம் விழித்து விடுகின்றது. குழந்தைகள் பிறந்தவுடன் நாங்கள் வாரிசுகள் என்பது புரிந்து விடுகின்றது. இது நிச்சயிக்கப்பட்ட எல்லையற்ற விஷயம் ஆகும். கல்ப-கல்பமாக நம்முடைய அதிர்ஷ்டம் விழித்துக் கொள்கின்றது பின்பு உறங்கி விடுகின்றது. பாவனம் ஆகின்றீர்கள் என்றால், அதிர்ஷ்டம் விழித்துக் கொள்கின்றது என்று அர்த்தமாகும். தூய்மையான இல்லற ஆசிரமம் என்று கூறப்படுகின்றது. ஆசிரமம் என்ற சொல்லே தூய்மையைக் குறிக்கின்றது. பவித்திர கிரஹஸ்த ஆசிரமம் ஆகும், அதற்கு எதிர்மறையாக உள்ளது அபவித்திர பதீத தர்மம் ஆகும், ஆசிரமம் என்று சொல்ல முடியாது. கிரஹஸ்த தர்மம் என்பது அனைவருக் கும் உள்ளது. மிருகங்களுக்கும் கூட உள்ளது. குழந்தைகளை அனைவரும் பெற்று எடுக்கின்றார்கள். மிருகங் களுக்கும் கூட கிரஹஸ்த தர்மம் என்று கூறுவார்கள். இப்பொழுது நாம் சொர்க்கத்தில் பவித்திர கிரஹஸ்த ஆசிரமமாக இருந்தது என்பதை குழந்தைகள் நீங்கள் அறிந்து கொண்டீர்கள். அவர்கள் தேவி-தேவதைகளாக இருந்தார்கள். அவர்களைத் தான் சர்வ குண சம்பன்ன என்று புகழ்பாடப் படுகின்றது, நீங்கள் உங்களையே பாடிக் கொண்டு இருந்தீர்கள். இப்பொழுது நாம் மனித நிலை யிலிருந்து தேவதையாக மீண்டும் ஆகிக் கொண்டு இருக்கின்றோம் என்று நீங்கள் அறிந்து கொண்டீர்கள். தேவி-தேவதைகளின் தர்மமாக இருந்தது. பின்பு பிரம்மா-விஷ்ணு-சங்கரர் கூட தேவதை என்று கூறுகின்றார்கள். பிரம்மா தேவதாய நமஹ! விஷ்ணு தேவதாய நமஹ! சிவனுக்காக பரமாத்மாய நமஹ! என்று கூறுகின்றார்கள் வித்தியாசம் ஏற்படுகின்றது அல்லவா? சிவனையும், மேலும் சங்கரையும் ஒன்று என்று கூற முடியாது. கல் புத்தியாக இருந்த நீங்கள் பாரஸ் புத்தியாக ஆகிக் கொண்டிருக்கின்றீர்கள். தேவதைகளை கல் புத்தி என்று கூற முடியாது. பின்பு நாடகத்தின் படி இராவண இராஜ்யம் வரும் போது அவர்களும் கூட ஏணிப்படியில் கீழே இறங்க வேண்டி உள்ளது. பாரஸ் புத்தியிலிருந்து கல் புத்தி ஆக வேண்டும். அனைவரையும் விட புத்திசாலியாக ஆக்கக் கூடியவர் ஒரு சிவபாபா தான். உங்களை பாரஸ் புத்தி ஆக்குகின்றார். நீங்கள் இங்கே பாரஸ் புத்தியாக மாற்றிக்கொள்ள வந்துள்ளீர்கள். பாரஸ்நாத்துக்குக் கூட கோவில் உள்ளது. அவர் தான் புத்திசாலிக் கெல்லாம், புத்திசாலி ஆவார். இந்த ஞானம் குழந்தைகளின் புத்திக்கு டானிக் ஆகும். புத்தி எவ்வளவு மாறுகின்றது. தீயதைப் பார்க்காதீர்கள்! என்று பாடப்படுகின்றது இதற்கு குரங்கைக் காட்டுகின்றார்கள். மனிதர்கள் தான் குரங்குக்கு சமமாக ஆகி விட்டார்கள். வனகுரங்கையும் மனிதனோடு ஒப்பிடு கின்றார்கள். இதைத்தான் முட்கள் நிறைந்த காடு என்று சொல்லப்படுகின்றது. ஒருவருக்கு ஒருவர் எப்படி துக்கம் கொடுக்கின்றார்கள். இப்பொழுது குழந்தைகள் உங்களது புத்திக்கு டானிக் கிடைத்துக் கொண்டிருக் கின்றது. எல்லையற்ற தந்தை டானிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். இதை படிப்பு என்று கூறலாம், இதை ஞான அமிர்தம் என்றும் கூறுகின்றார்கள். இது தண்ணீர் ஒன்றும் இல்லை. தற்காலத்தில் அனைத்து விஷயங்களையும் அமிர்தம் என்று கூறுகின்றார்கள். கங்கை நீரைக் கூட அமிர்தம் என்று கூறுகின்றார்கள். தேவதைகளின் கால்களைக் கழுவி அதை குடிக்கின்றார்கள், தண்ணீரை தேவதை முன்னால் வைக்கின்றார்கள் அதைக் கூட அமிர்தத்தின் அஞ்சலி (கிருபை) என்று நினைக்கின்றார்கள். அஞ்சலியைப் (கிருபை) பெறக் கூடியவர்களை பதீத-பாவனமாக ஆக்கக் கூடியவர் என்று கூற முடியாது. கங்கை நீரை பதீத-பாவனி என்று கூறுகின்றார்கள். மனிதர்கள் இறந்து விட்டால் அவர்கள் வாயில் கங்கை நீரை ஊற்ற வேண்டும் என்று கூறுகின்றார்கள். அர்ச்சுனன் அம்பை எய்தார் அதிலிருந்து வெளிப்பட்ட அமிர்த ஜலத்தை அனைவருக்கும் கொடுத்தார் என்று கூறப் படுகின்றது. குழந்தைகள் உங்களுக்கு யாரும் இங்கு அம்பு எதுவும் எய்யவில்லை. ஒரு கிராமத்தில் அம்புகளால் தான் சண்டை போடுவார்கள். அங்குள்ள இராஜாவை அவர்கள் ஈஸ்வரரின் அவதாரம் என்று கூறுவார்கள். இவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தின் குருக்கள் என்று பாபா கூறுகின்றார். உண்மையிலும்-உண்மையான சத்குரு ஒருவர்தான். அனைவருக்கும் சத்கதியைத் தரும் வள்ளல் ஒருவர் தான். அவர் தான் அனைவரையும் அழைத்துச் செல்லக் கூடியவர். பாபாவைத் தவிர வேறு யாரும் அழைத்துச் செல்ல முடியாது. பிரம்மத்தில் யாரும் ஐக்கியம் ஆக முடியாது. இந்த நாடகம் உருவாக்கப்பட்டது. இந்த சக்கரம் அழியாதது சுற்றிக் கொண்டிருக்கின்றது. உலகத்தின் சரித்திர- பூகோளம் எப்படி திரும்பிச் சுற்றுகின்றது என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். மனிதர்கள் என்றால் ஆத்மாக்கள் தன்னுடைய தந்தையின் படைப்பைக் கூட அறியவில்லை, அவரைத் தான் ஹே கடவுளே! தந்தையே! என்று நினைக்கின்றார்கள். எல்லைக்குட்பட்ட தந்தையை ஒருபோதும் இறை தந்தை என்று கூற முடியாது. இறை தந்தை என்ற வார்த்தையை மிகவும் மரியாதையோடு கூறுகின்றார்கள். அவரைத்தான் பதீத-பாவனர் என்று கூறுகின்றார்கள், துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுக்கக் கூடியவர் என்று கூறுகின்றார்கள். ஒரு புறம் துக்கத்தை நீக்கி, சுகத்தைக் கொடுப்பவர் என்று கூறுகின்றார்கள், இன்னொரு புறம் குழந்தை இறந்து விட்டால் ஈஸ்வரர் தான் சுகம்-துக்கம் கொடுக்கின்றார் என்று கூறுகின்றார்கள். ஈஸ்வரன் நம்முடைய குழந்தையை எடுத்துக் கொண்டார் என்று சொல்கின்றார்கள், இது என்ன செயல்! ஈஸ்வரனை நிந்தனை செய்கின்றோம் அல்லவா! ஈஸ்வரன் தான் குழந்தையைக் கொடுத்தார் என்று சொல்கின்றார்கள் பின்பு திருப்பி அவரே எடுத்துக் கொண்டார் என்றால், ஏன் அழுகின்றார்கள்? ஈஸ்வரனிடம் போய்விட்டது அல்லவா! சத்திய யுகத்தில் யாரும் ஒரு போதும் அழுவதில்லை. அழுவதற்கு எந்த அவசியமும் இல்லை என்று பாபா புரிய வைக்கின்றார். ஆத்மாவுக்கு தனது கணக்கு-வழக்குப்படி போய் நடிக்க வேண்டியுள்ளது. ஞானம் இல்லாத காரணத்தால் மனிதர்கள் எவ்வளவு அழுகின்றார்கள். பைத்தியம் போல் ஆகின்றார்கள், அம்மா இறந்தாலும் அல்வா சாப்பிடுங்கள் ! அப்பா இறந்தாலும் அல்வா சாப்பிடுங்கள்! என்று பாபா புரிய வைக் கின்றார், நஷ்டமோகா ஆக வேண்டும். நமக்கு ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை, இப்படிப்பட்ட ஸ்திதி (நிலை) குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். மோகத்தை வென்ற இராஜா கதையைக் கேட்டிருப்பீர்கள். சத்திய யுகத்தில் ஒரு போதும் துக்கம் என்ற விஷயமே இருக்காது. ஒரு போதும் அகால மரணம் ஏற்படாது. இப்பொழுது நாம் காலன் மீது வெற்றி அடை கின்றோம் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். பாபாவை மகாகாலன் என்றும் கூட கூறுவார்கள், அவர் தான் காலனுக்கு எல்லாம் காலனாக இருக்கின்றார். நீங்கள் காலன் மீது வெற்றி அடைய வேண்டும் அதாவது காலன் ஒரு போதும் பிடிக்காது. காலன் ஆத்மாவையோ, உடலையோ பிடிக்க முடியாது, ஆத்மா ஒரு உடலை விட்டு இன்னொரு உடலை எடுக்கின்றது. அதைத் தான் காலன் பிடித்து விட்டது என்று சொல்கின்றார்கள், மற்றபடி காலன் என்ற விஷயம் வேறு இல்லை. மனிதர்கள் கூறுகின்றார் கள், அச்சுதம், கேசவம் (அச்சுதம், கேசவம் என்று மகிமைபாடுகிறார்கள்) ஆனால் அர்த்தம் ஒன்றுமே புரிந்து கொள்வதில்லை. இந்த ஐந்து விகாரங்கள் உங்களை எவ்வளவு கெடுத்து விட்டது என்று பாபா புரிய வைக்கின்றார். இந்த நேரம் யாரும் பாபாவை அறியவில்லை, அதனால் தான் இந்த உலகை அனாதை உலகம் என்று கூறப்படுகின்றது. தங்களுக்குள் எவ்வளவு சண்டை போட்டுக் கொள்கின்றார் கள். முழு உலகம் பாபாவின் வீடு அல்லவா! பாபா முழு உலக குழந்தைகளையும் பதீததர்களிலிருந்து பாவனம் ஆக்குவதற்காக வந்துள்ளார். அரைக் கல்பம் முற்றிலும் பாவன உலகமாக இருந்தது. இராம இராஜா, இராம பிரஜா என்று பாடுகின்றார்கள் என்றால், அங்கே அதர்மம் என்ற விஷயம் எப்படி இருக்க முடியும்? அங்கே ஆடும், புலியும் ஒரே ஓடையில் ஓடும் நீரைக் குடித்தது என்று பாடப்படுகின்றது. பிறகு அங்கே இராவணன் எங்கிருந்து வருவார்? வெளியில் உள்ளவர்கள் இதையெல்லாம் கேட்டு சிரிக்கின்றார்கள், புரிந்து கொள்வதில்லை. பாபா வந்து ஞானம் கொடுக்கின்றார், இது பதீத உலகம் இல்லையா? இப்பொழுது ப்ரேரணையில் பதீதர்களை பாவனம் ஆக்க முடியுமா என்ன! பதீத பாவனரே வாருங்கள் என்று அழைக்கின்றார்கள் என்றால், அவசியம் பாரதத்தில் தான் வந்திருப்பார். இப்பொழுது கூட நான் ஞானக்கடல் வந்துள்ளேன் என்று கூறுகின்றார்- உங்களை தனக்குச் சமமாக மாஸ்டர் ஞானக் கடல் ஆக்குகின்றார். பாபாவைத் தான் உண்மை யிலும் உண்மையான வியாசர் என்று கூறப்படுகின்றது. அதனால் அவர் வியாச தேவர் மற்றும் நீங்கள் அவரது குழந்தைகள் சுகதேவன், நீங்கள் இப்பொழுது சுகதேவதை ஆகின்றீர்கள். சிவனின் குழந்தைகள் ஆகின்றீர்கள். அவரின் உண்மையான பெயர் சிவன். ஆத்மாவையும் தெரிந்து கொள்ள வேண்டும், வியாசர், சிவாச்சாரியிட மிருந்து சுகம் என்ற ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள். வியாசரின் குழந்தைகள் நீங்கள்! ஆனால் நீங்கள் குழப்பம் அடையக் கூடாது ஆகையால் தான் சிவனின் குழந்தைகள் என்று கூறுகின்றோம். அவருடைய உண்மையான பெயர் சிவன். ஆத்மாவை அறிந்துக் கொள்ள வேண்டும், பரமாத்மாவையும் அறிந்துக்கொள்ள வேண்டும். அவர் தான் பதீதமானவர்களை வந்து பாவனம் ஆவதற்கான வழியைக் கூறுகின்றார். நான் ஆத்மாக்களாகிய உங்களுக்கு தந்தையாக உள்ளேன் என்று கூறுகின்றார். நான் கட்டை விரல் போல் உள்ளேன் என்று கூறுகின்றனர். இவ்வளவு பெரிய வராக இருந்தால் இங்கே உட்கார முடியாது. அவர் மிகவும் சூட்சமமாக இருக்கின்றார். ஆத்மாவைப் பார்ப்பதற்காக- டாக்டர்களும் தலை உடைத்துக் கொள்கின்றார்கள். ஆனால் பார்க்க முடிவதில்லை. ஆத்மாவை உணர வேண்டும். இப்பொழுது நீங்கள் ஆத்மாவை உணர்ந்தீர்களா? என்று பாபா கேட்கின்றார். இவ்வளவு சிறிய ஆத்மாவில் அழியாத நடிப்பு பதிவாக்கப்பட்டுள்ளது. ரிக்கார்டு போல் பதிவாக்கப்பட்டுள்ளது. முதலில் நீங்கள் தேக அபிமானத்தில் இருந்தீர்கள், இப்பொழுது நீங்கள் ஆத்மா அபிமானி ஆகி விட்டீர்கள். நம்முடைய ஆத்மா 84 ஜென்மம் எப்படி எடுக்கின்றது என்று நீங்கள் அறிவீர்கள். அதற்கு முடிவே கிடையாது. இந்த நாடகம் எப்பொழுது இருந்து ஆரம்பம் ஆனது என்று சிலர் கேட்கின்றார்கள். ஆனால் இது அனாதி, இது ஒருபோதும் அழிவதே இல்லை. இதைத் தான் ஏற்கனவே உருவாக்கப்பட்ட அழியாத உலக நாடகம் என்று கூறப்படுகின்றது. உலகத்தைக் கூட நீங்கள் அறிவீர்கள். படிக்காத குழந்தைகளுக்கு எப்படி கல்வி புகட்டப் படுகின்றது. அது போல பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு கற்பிக்கின்றார். ஆத்மாதான் இந்த உடல் மூலமாக படிக்கின்றது. இது கல் புத்திக்கான உணவு. புத்திக்கு அறிவு கிடைக்கின்றது. குழந்தைகளுக்காகத் தான் பாபா இந்த படங்களை உருவாக்கியுள்ளார். மிகவும் எளிதாக உள்ளது. திரிமூர்த்தி பிரம்மா, விஷ்ணு, சங்கரர், இப்பொழுது பிரம்மாவை திரிமூர்த்தி என்று ஏன் சொல்லப்படுகின்றது! தேவ்-தேவ் மகாதேவ்! என்று புகழ் பாடுகின்றார்கள். ஒருவருக்கு மேல் ஒருவரை புகழ்பாடுகின்றனர். ஆனால் அர்த்தம் ஒன்றும் புரிந்து கொள்வ தில்லை. இப்பொழுது பிரம்மா எப்படி இருக்க முடியும், பிரம்மாவை பிரஜாபிதா என்று கூறுகின்றார்கள். அப்படியென்றால், சூட்சும லோகத்தில் தேவதை எப்படி இருக்க முடியும்? பிரஜாபிதா இங்கே தானே வேண்டும். இந்த விஷயங்கள் எந்த சாஸ்த்திரத்திலும் கிடையாது. நான் இந்த உடலில் பிரவேசம் செய்து இவர் மூலமாக புரிய வைக்கின்றேன், இவரை என்னுடைய ரதமாக ஆக்குகின்றேன். இவரின் அநேக ஜென்மத்தின் கடைசியில் நான் வருகின்றேன் என்று பாபா கூறுகின்றார். இவர் கூட ஐந்து விகாரத்தை தியாகம் செய்கின்றார். சன்யாசம் செய்பவர்களை யோகி, ரிஷி என்று கூறப்படு கின்றது. இப்பொழுது நீங்கள் இராஜ ரிஷியாக உள்ளீர்கள். நீங்கள் உறுதிமொழி கொடுக்கின்றீர்கள். உலகில் உள்ள சன்யாசிகள் வீட்டை விட்டுச் செல்கின்றார்கள். இங்கே ஆண்-பெண் இருவரும் ஒன்றாக இருக்கின்றார்கள். நாங்கள் ஒரு போதும் விகாரத்தில் போக மாட்டோம் என்று கூறுகின்றார் கள். விகாரம் தான் முக்கியமான விஷயமாகும். சிவபாபா புதிய உலகத்தைப் படைக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் புதியதைப் படைக்கின்றார். அவர் விதை ரூபமாக இருக்கின்றார் சத்-சித்-ஆனந்தக்கடல், ஞானக்கடலாக இருக்கின்றார். ஸ்தாபனை, பாலனை, வினாச காரியங்களை எப்படி செய்கின்றார் – பாபா தான் அறிவார். இந்த விஷயங்களை மனிதர்கள் அறிய மாட்டார்கள். குழந்தைகள் நீங்கள் இப்பொழுது இந்த அனைத்து வியங்களையும் அறிந்து கொண்டீர்கள். ஆகையால் அனைவருக் கும் புரிய வைக்க முடியும். நல்லது.

இனிமையிலும் இனிமையான செல்லமான குழந்தைகளுக்கு தாய்-தந்தை பாப்தாதாவின் அன்பு-நினைவுகள் மேலும் காலை வணக்கங்கள். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) ஒவ்வொருவரின் கணக்கு-வழக்கும் தனித்தனியானது, ஆகையால் யார் சரீரம் விட்டாலும் அழக் கூடாது. முழுமையாக மோகத்தை வென்றவராக வேண்டும். நமக்கு ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் இல்லை என்பது புத்தியில் இருக்க வேண்டும்.

2) ஐந்து விகாரம் புத்தியை கெடுத்து விடுகின்றது , ஆதலால் அதனை தியாகம் செய்ய (நீக்கி விட) வேண்டும். சுகதேவதையாகி அனைவருக்கும் சுகம் கொடுக்க வேண்டும். யாருக்கும் துக்கம் கொடுக்கக்கூடாது

வரதானம்:-

எந்த குழந்தைகள் ஒருவர் மற்றவர்களின் சம்ஸ்காரங்களை தெரிந்துக் கொண்டு சம்ஸ்காரங்களை மாற்றுவதில் விடாமுயற்சியில் இருக்கிறார்களோ, ஒருபொழுதும் இவர்கள் இப்படி தான் என்று நினைக்க மாட்டார்களோ, அவர்களை தான் ஞானம் நிறைந்தவர் என்று சொல்லாம். அவர்கள் தன்னை பார்த்தாலும் தடைகளற்றவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய சம்ஸ்காரம் பாபாவை போல இரக்கமனமுடையதாக இருக்கும். இரக்மான பார்வை, வெறுப்பான பார்வையை முடித்துவிடும். அப்படிப்பட்ட இரக்கமான குழந்தைகள் ஒருபொழுதும் தங்களுக்குள் முரண்பாடின்றி ஒத்துப்போவார் கள். அவர்கள் நல்ல குழந்தையாக மாறி நிருபணம் செய்வார்கள்.

சுலோகன்:-

மாதேஷ்வரி அவர்களின் விலைமதிப்பிட முடியாத மகாவாக்கியம்:

அகண்ட ஜோதி தத்துவம் அமைதியான இருப்பிடம், சாகார உலகம் விளையாட்டு மைதானம்.

ஆத்மாக்களின் வசிப்பிடம் அகண்ட ஜோதி மகத்தத்துவம். அங்கு இந்த உடலின் நடிப்பிலிருந்து விடுபட்டு இருக்கிறோம், அதாவது துக்கம் மற்றும் சுகத்திலிருந்து விடுபட்ட நிலையில் இருக்கிறோம். இதைத் தான் அமைதியான உலகம் என்று சொல்லப்படுகிறது, மேலும் ஆத்மாக்களின் உடலோடு நடிக்கக் கூடிய இடம் விளையாட்டு மைதானமாகிய இந்த சாகார உலகமாகும். எனவே ஒன்று நிராகார உலகம், மற்றொன்று சாகார உலகம் என்ற முக்கிய இரண்டு உலகம் இருக்கிறது. உலகத்தினர் சொல்ல மட்டும் தான் செய்கிறார்கள் – பரமாத்மா தான் படைப்பவராகவும், பாலனை செய்பவராகவும், அழிப்பவராகவும், உணவளிப் பவராகவும், காலனாகவும், எரிக்கவும் அவரே செய்கிறார். எனவே துக்கம், சுகம் கொடுக்கக் கூடியவரும் அவர் தான். யாருக்காவது துக்கம் ஏற்படுகிறது என்றால் சொல்கிறார்கள் – உங்களை அடைந்த நாங்கள் இனிமையாகிவிட்டோம் … இப்பொழுது இவை அனைத்து உண்மையற்றதாகிவிட்டது, ஏனெனில் பரமாத்மா இந்த காரியங்களை செய்வதில்லை. பரமாத்மா துக்கத்தை நீக்குபவர், கொடுப்பவர் அல்ல. பிறவி எடுப்பது, மரணிப்பது, துக்கம் – சுகம் அடைவது ஒவ்வொரு மனித ஆத்மாவின் சம்ஸ்காரமாகும். உடலை கொடுக்கக் கூடிய தாய்-தந்தை. கர்மபந்தனத்திற்கு கேற்றார் போல் தந்தை – மகன் என்ற உறவில் வருகிறார்கள் இதன் அடிப்படையில் ஆத்மாக்களின் தந்தை பரமாத்மாவாக இருக்கிறார், அவர் எப்படி எல்லைக்கு அப்பாற்பட்ட படைப்பின் ஸ்தாபனை, பாலனை செய்கிறார். அவர் எப்படி தனது மூன்று ரூபமான பிரம்மா, விஷ்ணு, சங்கரை படைக்கிறார், அதன் பிறகு இவர்களின் சூட்சம ரூபத்தின் மூலம் தெய்வீக உலகத்தின் ஸ்தாபனை, அசுர உலகத்தின் விநாசம் மேலும் தெய்வீக உலகத்தின் பாலனை செய்ய வைக்கிறார். பரமாத்மாவின் இந்த மூன்று காரியங்களும் எல்லைக்கு அப்பாற்பட்டது. மற்றப்படி துக்கம் – சுகம், பிறப்பு – இறப்பு கர்மத்திற்கு தகுந்தாற் போல் ஏற்படுகிறது. பரமாத்மா சுகத்தின் கடல், அவர் தனது குழந்தகளுக்கு துக்கத்தை தரமாட்டார். நல்லது. ஒம் சாந்தி.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top