04 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

November 3, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே ! சங்கதோஷம் (தீய சகவாசம்) மிகவும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே, சங்கதோஷத்திலிருந்து தன்னை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். இது மிகவும் மோசமானதாகும்.

கேள்வி: -

மூன்று விதமான குழந்தைப் பருவம் எது? எந்த குழந்தைப் பருவத்தை ஒரு போதும் மறக்கக் கூடாது?

பதில்:-

லௌகீக தாய் தந்தையிடம் பிறந்ததும் கிடைப்பது ஒரு குழந்தைப் பருவம், குருவின் சீடனாக மாறும் போது கிடைப்பது இரண்டாவது குழந்தைப் பருவம், லௌகீக தாய் தந்தையை விட்டு விட்டு அலௌகீக தாய் தந்தையிடம் குழந்தையாக மாறுவது மூன்றாவது குழந்தைப் பருவம். அலௌகீக குழந்தைப் பருவம் என்றால், ஈஸ்வரனின் மடியில் குழந்தையாக மாறுவது. ஈஸ்வரனின் குழந்தை ஆகிறோம் என்றால், இறந்து வாழ்பவராகி விட்டீர்கள். இந்த அளெலகீக குழந்தைப் பருவத்தை ஒரு போதும் மறக்கக் கூடாது. ஒரு வேளை மறந்து விட்டால் மிகவும் அழ வேண்டியிருக்கும். அழுதல் என்றால் மாயாவிடம் அடி வாங்குதல் என்பது ஆகும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

குழந்தைப் பருவத்தை மறந்துவிடாதே…

ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு பாடலின் பொருள் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. மூன்று விதமான குழந்தைப் பருவம் இருக்கிறது. ஒன்று லௌகீக குழந்தைப் பருவம், இரண்டாவது துறவற மார்க்கத்தினுடையது, அவர்கள் வீடு வாசலைத் துறந்து உயிரோடு இறந்து குருவினுடைய அல்லது சன்னியாசிகளினுடையவராக மாறுகிறார் கள். அவர் அவர்களுடைய தந்தை கிடையாது. அவர்கள் குருவினுடைய வராகிறார்கள். அவர் களுடன் இருக்கிறார்கள். அவர்களும் உயிரோடு இறந்து குருவினுடையவராக மாறுகிறார்கள். காட்டிற்குச் சென்று விடுகிறார்கள். மூன்றாவது உங்களுடைய இந்த அதிசயமான மறுபிறவியின் வாழ்க்கை யாகும். ஒரு தாய் தந்தையை விட்டுவிட்டு இன்னொரு தாய் தந்தையினுடையவராக மாறுகிறீர் கள். இவர் ஆன்மீகத் தாய் தந்தையாவார். இது உங்களுடைய மறுபிறவியாகும். ஈஸ்வரனுடைய மடியில் ஆன்மீக பிறப்பு. உங்களிடம் இப்போது ஆன்மீக தந்தை பேசிக் கொண்டிருக்கிறார். அவர்கள் அனைவரும் உடலின் தந்தையராவர். இவரோ ஆன்மீகத் தந்தை ஆகையால் தான் பாபாவினுடையவராகி இறந்து பிறந்தவராகி பிறகு இதை மறந்துவிடக் கூடாது என பாடு கிறார்கள். சிவபாபா உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் ஆவார். யாராவது கீதையைப் பற்றி விவாதம் செய்கிறார்கள் என்றால் முதன் முதலில் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் யார் என்ற விஷயத்தை கேட்க வேண்டும். பிரம்மா தேவதாய நமஹ, விஷ்ணு தேவதாய நமஹ, என்கிறார் கள். பிறகு சிவபரமாத்மாய நமஹ என்றும் கூறுகிறார்கள். அவர் அனைத்து தர்மத்தைச் சார்ந்தவர் களுக்கும் தந்தையாவார். முதன் முதலில் உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை ஒருவரே என்ற விஷயத்தைப் புரிய வைக்க வேண்டும். பிரம்மா, விஷ்ணுவை யாரும் காட் ஃபாதர் என கூற முடியாது. இறை தந்தை ஒருவரே! என்ற விஷயத்தைப் புரிய வைக்க வேண்டும். பிரம்மா, விஷ்ணுவை யாரும் இறை தந்தை என கூறமாட்டார்கள். இறை தந்தை ஒருவரே, அவர் நிராகாரர் என்பதை முதலில் உறுதிப் படுத்துங்கள். அவரைப் படைக்கக் கூடியவர் என்றும் கூறுகிறார்கள். பதீத பாவனர் என்றும் கூறுகிறார்கள். தந்தை யிடமிருந்து நிச்சயம் சொத்து கிடைக்கும். எல்லையற்ற தந்தையிடமிருந்து யாருக்கு ஆஸ்தி கிடைத்தது என்பதை சிந்தியுங்கள். தந்தை புது உலகத்தைப் படைக்கக் கூடியவர் ஆவார். அவருடைய பெயர் சிவன் என்பதாகும். சிவ பாரமாத்மாய நமஹ என்கிறார்கள். அவருடைய ஜெயந்தியும் கொண்டாடுகிறார்கள். அவரே பதீத பாவனர், படைக்கக் கூடியவர், நாலெட்ஜ்ஃபுல்லாக இருக்கிறார். பிறகு சர்வ வியாபி என்ற விஷயம் போய் விடுகிறது. அவருடைய மகிமைகள் கடமையைப் பொருத்தாக இருக்கிறது. கடந்த காலத்தில் என்ன கடமைகளைச் செய்து விட்டு போகிறார்களோ அதன் அடிப்படையில் அவர் களின் மகிமை பாடப்படுகிறது. உயர்ந்த திலும் உயர்ந்தவர் தந்தையாவார். அவரை விடுவிக்கக் கூடியவர் (லிபரேட்டர்) என்று கூறுகிறார் கள், இரக்க மனம், துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர் என்றும் கூறுகிறார்கள், வழிகாட்டி என்றும் கூறுகிறார்கள். புது இடத்திற்கு யாராவது சென்றால், வழிகாட்டியை யும் உடன் அழைத்து செல்கிறார்கள். வெளிநாடுகளிலிருந்து வருகிறார்கள் என்றால், அவர்களுக்கு இங்கிருந்து வழிகாட்டியை அனைத்தும் காண்பிப்பதற்காக அனுப்புகிறார் கள். தீர்த்த யாத்திரை களுக்கு அழைத்துச் செல்லக் கூடிய வழிகாட்டிகள் இருக்கிறார்கள். இப்போது பாபாவை வழிகாட்டி என்கிறார்கள் என்றால், நிச்சயமாக வழிகாட்டி இருப்பார். சர்வ வியாபி என்று கூறுவதால் அனைத்து விஷயங்களும் அழிந்து போகிறது. முதன் முதலில் அனைவருக்கும் தந்தை ஒருவரே! என புரிய வையுங்கள். அனைத்து சாஸ்திரங் களுக்கும் தாயாக விளங்கக் கூடியது கீதையாகும். அது பகவானால் கூறப்பட்டதாகும். அதை நிரூபித்து விட்டால் அதன் குழந்தை குட்டிகள் அனைத்தும் பொய் என்பது நிரூபணமாகும். முதன் முதலில் உண்மை யான கீதையின் சாரத்தைப் கூற வேண்டும். சிவபகவான் வாக்கு. இப்போது சிவபாபாவின் வரலாறு என்னவாக இருக்கும்? நான் இந்த உடலை ஆதாரமாக எடுத்து உங்களுக்கு தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக மாற்றக் கூடிய வழியைக் காண்பிக்கிறேன் என்று மட்டும் அவர் கூறுகிறார். குழந்தைகளுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்க வருகிறேன். இதில் வரலாறு என்ன செய்யும்! இவரோ வயதானவர் ஆவார். வந்து குழந்தைகளை படிக்க வைக்கின்றார். தூய்மை யற்றவர்களைத் தூய்மையாக மாற்ற இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். நீங்கள் சத்யுகத்திற்குச் சென்று இராஜ்யம் செய்வீர்கள். உங்களுக்கு ஆஸ்தி கிடைக்கின்றது மற்ற ஆத்மாக்கள் அனைவரும் முக்தி தாமம், நிராகார உலகத்தில் இருப்பார்கள். இது முற்றிலும் எளிய விஷய மாகும். பாரதத்தில் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. ஒரேயொரு தர்மம் இருந்தது. இப்போது கலியுகத்தில் எவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்கள். அங்கே மிகவும் குறைவாக இருக்கிறார்கள். பரம்பிதா பரமாத்மா ஒரு தர்மத்தை ஸ்தாபனை செய்து, மற்ற தர்மங்களை அழிப்பதற்காக வருகின்றார். மற்ற அனைவரும் சாந்தி தாமத்திற்குச் சென்று விடுவார்கள். அங்கே அசுத்தமான ஆத்மா யாரும் இருக்க முடியாது. அவருடைய பெயரே பதீத பாவனர், அனைவருக் கும் சத்கதி அளிக்கக் கூடிய வள்ளல். இது பழைய உலகம் கலியுகமாகும். சத்யுகத்திற்கு கோல்டன் ஏஜ் என்று கூறப்படுகிறது. யார் தேவதைகளின் பூஜாரிகளாக இருக்கிறார்களோ அவர்கள் எளிதாக அனைத்தையும் புரிந்துக் கொள்வார்கள். யார் பூஜைக்குரியவர்களாக இருக்கிறார்களோ அவர்களே பூஜாரி ஆகிறார்கள். எனவே முதலில் பாபாவின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். நாம் அவருடைய குழந்தைகள் இதை மறக்காதீர்கள். மறந்தால் அழ நேரிடும். கொஞ்சம் கொஞ்சம் மாயாவின் அடி பட நேரிடும். ஆத்ம உணர்வு டையவராக மாற வேண்டும். ஆத்மாக்களாகிய நாம் மீண்டும் திரும்பி பாபாவிடம் செல்ல வேண்டும். இவ்வளவு மனிதர்களும் இறந்தார்கள் என்றால் யாருக்காக யார் அழுவார்கள். பாரதத்தில் தான் எல்லோரையும் விட அதிகமாக அழுகிறார்கள். முதலில் 12 மாதம் அல்லது உசேன், (உசேன் என்றால் முகரம் பண்டிகை யில் முகமதியர்கள் போல் மார்பில் அடித்துக் கொள்வது) நெஞ்சிலே அடித்துக் கொண்டே இருக்கிறார்கள். இது மரண உலகத்தின் பழக்க வழக்கமாகும். இப்போது உங்களுக்கு அமர உலகத்தின் பழக்க வழக்கங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இப்போது உங்களுக்கு முழு உலகத்தின் மீதும் வைராக்கியம் இருக்கிறது. என்னை மட்டும் நினையுங்கள் என பாபா கூறுகின்றார். இது அனைத்தும் அழியப் போகிறது. நாடகம் முடியப் போகிறது. இப்போது நாம் திரும்பிப் போய்க் கொண்டிருக் கிறோம். நாடகத்தில் அனைவரும் நடிகர்கள். யார் மீது மோகம் வைப்பார்கள். இவர் சென்று வேறு பாகத்தை நடிக்க வேண்டும் என புரிந்துக் கொள்கின்றனர். இதில் அழுவதற்கு என்ன அவசியம் இருக்கிறது. ஒவ்வொரு வருடைய நடிப்பும் நிச்சயக்கப் பட்டிருக்கிறது. பாபா ஞானக் கடல், ஆனந்தக் கடல், அன்புக் கடலாக இருக்கிறார் என்றால், அவரைப் பின்பற்றி இவ்வாறு மாற வேண்டும். கடலில் இருந்து நதிகள் தோன்றுகின்றன. அனைவரும் வரிசைக் கிரமத்தில் இருக்கிறார்கள். சிலர் நன்கு மழை பொழிகிறார்கள். பலரை தனக்குச் சமமாக மாற்றுகிறார்கள். குருடர்களுக்கு ஊன்று கோலாக மாறுகிறார்கள். பாபாவிற்கு நிறைய உதவியாளர்கள் வேண்டும். நீங்கள் குருடர்களுக்கு ஊன்று கோலாகுங்கள் என பாபா கூறுகின்றார். அனைவருக்கும் வழி காட்டுங்கள். ஒரு பிராமணி மட்டும் குருடர்களுக்கு ஊன்று கோல் ஆக முடியாது. நீங்கள் அனைவரும் மாற வேண்டும். உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்திருக்கிறது. இதற்குத் தான் மூன்றாவது கண் கிடைத்த கதை என கூறப்படுகிறது. தெய்வீகக் கண் ஆத்மாவிற்குத் தான். மனிதர்கள் எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. முற்றிலும் கீழான புத்தி உடையவர்களாகி விட்டனர். நம்முடைய தர்மத்தை யார் ஸ்தாபனை செய்தனர் என பாரவாசிகளுக்குத் தெரியவில்லை. பாபாவின் பிறவியும் இங்கே தான் ஏற்படுகிறது. சிவ ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள். பிறகு எப்படி சர்வவியாபி ஆக முடியும். தந்தை மற்றும் படைப்பை உலகத்தில் யாரும் அறியவில்லை. ரிஷி, முனி போன்றவர்கள் தெரியாது, தெரியாது என்று கூறிவிட்டு சென்று விட்டனர். பரமாத்மாவை சர்வவியாபி என்று கூறி மிகப் பெரிய தவறு ஒன்று செய்து விட்டனர். அவர் அனைவருக்கும் தந்தை, பதீத பாவனர், விடுவிக்கக் கூடியவர் என்பதை நீங்கள் அனைவருக்கும் தெளிவு படுத்திக் கூறுங்கள். பழைய உலகத்தில் இருந்து புது உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றார். அங்கே துக்கத்தின் விஷயம் எதுவும் இல்லை. சாஸ்திரங்களில் என்னென்ன எழுதி விட்டனர். லஷ்மி நாராயணரைப் பற்றிக் கூறும் போது கூட விகாரம் இல்லாமல் அவருக்கு குழந்தை பிறக்குமா என கேட்கின்றனர். சர்வ குணங்களும் நிறைந்தவர், 16 கலைகளில் நிரம்பியவர், சம்பூரண நிர்விகாரி, விகாரமற்ற உலகம் என்று தானே கூறப்படுகிறது. இதற்கு விகார உலகம் என்று கூறப்படுகிறது. பிறகு எப்படி அங்கே விகாரம் இருக்கும் என்று கூறுகிறீர்கள். எது வரை பாபாவைப் பற்றி புரிந்துக் கொள்ளவில்லையோ, அது வரை வேறு எதுவும் புரிந்துக் கொள்ள முடியாது. சர்வ வியாபி என்பது மிகப் பெரிய தவறாகும். அந்த தவறிலிருந்து வெளியில் வரும் போது தான் பாபாவைத் தெரிந்துக் கொள்ள முடியும். பாபா நாங்கள் மீண்டும் தங்களிடமிருந்து இராஜ்ய பாக்கியத்தை அடைவதற்காக உங்களுடையவராக மாறியிருக்கிறோம் என்ற நிச்சயம் வையுங்கள். சாஸ்திரங்களில் என்னென்ன எழுதி விட்டனர். லஷ்மி நாராயணரை சத்யுகத்தில் காண்பிக் கிறார்கள். குழந்தைப் பருவமான இராதா கிருஷ்ணரை துவாபர யுகத்தில் கொண்டு சென்று விட்டனர். கிருஷ்ணர் சொர்க்கத்தின் இளவரசனாக இருந்தார். ஒவ்வொரு பிறவியிலும் கிருஷ்ணரின் தோற்றம் மாறிக் கொண்டே போகிறது. ஒரே மாதிரியான தோற்றம் ஒரு போதும் இருக்காது. கிருஷ்ணர் அதே தோற்றத்துடன் துவாபர யுகத்தில் வர முடியாது. முடியவே முடியாது.

நாம் உண்மையில் அவ்விடத்தின் (மூலவதனம்) வாசிகள் என அறிகிறீர்கள். அது நம்முடைய இனிமையான அமைதியான வீடாகும். அங்கே செல்வதற்காக பக்தி செய்கிறார்கள். நமக்கு அமைதி வேண்டும் என கூறுகிறார்கள். ஆத்மாவிற்கு தனது பாகத்தை நடிப்பதற் காக இந்த உடல் கிடைத்திருக்கிறது. பிறகு அமைதியில் எப்படி இருக்க முடியும்? அமைதிக்காக ஹடயோகத்தைக் கற்பிக்கிறார்கள். குகைகளுக்குச் செல்கிறார்கள். ஒரு மாதம் ஏதாவது ஒரு குகையில் அமர்ந்தால் அவர்களுக்கு அது சாந்திதாமமா? இப்போது சாந்திதாமத்திற்குச் சென்று பிறகு நடிப்பதற்காக சுகதாமத்திற்கு வருவீர்கள் என அறிகிறீர்கள். யார் சுகத்தில் இருக்கிறார் களோ அவர்களுக்கு இது சொர்க்கம் என்றும் யார் துக்கத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கு இது நரகம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். சொர்க்கம் என்று புது உலகிற்கும், நரகம் என்று பழைய உலகத்திற்கும் கூறப்படுகிறது என அறிகிறீர்கள். இந்த பக்தி, யாகம், தவம், தானம், புண்ணியம் போன்றவைகளைச் செய்தல் அனைத்தும் பக்தி மார்க்கமாகும். இதில் எந்த சாரமும் இல்லை என்பது பகவான் வாக்கு. சத்யுகம் திரேதாவிற்கு பிரம்மாவின் பகல் என கூறப்படுகிறது. பிரம்மாவின் பகலுக்கு பிராமணர் களின் பகல் என்று பெயர். பிறகு உங்களின் இரவு ஆரம்பம் ஆகிறது. நீங்கள் முதன் முதலில் சத்யுகத்திற்குச் செல்கின்றீர்கள். பிறகு நீங்கள் தான் சக்கரத்தில் வருகிறீர்கள். பிராமணன், தேவதை, சத்திரியன், வைசியன், சூத்திரனாக நீங்கள் தான் மாறுகிறீர்கள். நீங்கள் சிவபகவான் வாக்கு என்கிறீர்கள். அவர்கள் கிருஷ்ண பகவான் வாக்கு என்கிறார்கள். நிறைய வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் முழுமையாக 84 பிறவிகளை எடுக்கிறார்கள். அவர்களுடன் முழு சூரிய வம்ச சம்பிரதாயமும் மறுபிறவி எடுத்து எடுத்து கடைசியில் இராஜ்ய பாக்கியத்தை அடைந்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளாகிய உங்களில் யார் புரிந்துக் கொள்கிறீர்களோ அவர்களுக்கே ஆனந்தம் ஏற்படுகிறது. புதியவர் களுக்கு ஆனந்தம் வருவதில்லை. நீங்கள் யாரையும் நிந்திப்பது இல்லை. பாபா உங்களுக்கு எவ்வளவு எளிதாகப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். இங்கே நீங்கள் பாபாவின் சங்கத்தில் (தொடர்பில்) அமர்கிறீர்கள் என்றால் நன்றாக புரிந்துக் கொள்கிறீர் கள். வெளியே சென்றதும் அந்த சங்கத்தில் என்ன நிலை ஏற்படும் என்று தெரிவதில்லை. சங்கதோஷம் மிகவும் மோசமாக இருக்கிறது. சொர்க்கத்தில் இது போன்ற விஷயங்கள் நடப்பதில்லை. அதனுடைய பெயரே சொர்க்கம், வைகுண்டம், சுகதாமம் எனப்படுகிறது. சாஸ்திரங்களிலோ அங்கும் அசுரர்கள் இருந்தனர் என கூறப்படுகிறது. நாம் உலகத்திற்கு அதிபதியாக இருந்தோம், அங்கே ஆகாயம் பூமி எதிலும் பிரிவினை கிடையாது என இப்போது உங்களுக்குத் தெரிந்து விட்டது. இப்போது இங்கே எத்தனை பிரிவுகள் இருக்கிறது பாருங்கள். அவரவர் எல்லைகளைப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள், உலகத்தில் எவ்வளவு சண்டைகள் நடக்கிறது. யார் வந்தாலும் முதலில் அவர்களுக்கு தந்தை யார்? பகவான் என்று யார் அழைக்கப் படு கிறார் என புரிய வையுங்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கர் தேவதைகள் ஆவர். பகவான் ஒருவர் தான் 10 பேர் கிடையாது. கிருஷ்ணர் பகவான் கிடையாது. பகவான் எப்படி இம்சையைக் கற்றுக் கொடுப்பார். பகவான் வாக்கு-காமம் மிகப் பெரிய எதிரி, அதை வெற்றி அடைய உறுதி எடுங்கள். ராக்கி அணிவியுங்கள். இது இப்போதைய விஷயம் ஆகும். எது நடந்து முடிந்துவிட்டதோ அது மீண்டும் பக்தி மார்க்கத்தில் வரும். தீபாவளி அன்று மகாலஷ்மியை பூஜை செய்கிறார்கள். லஷ்மி நாராயணன் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. லஷ்மிக்கு பணம் எங்கிருந்து கிடைக்கும். சம்பாதிக்கக் கூடியவர் ஆண் அல்லவா? பெயர் லஷ்மிக்கு பாடப் பட்டிருக்கிறது, முதலில் லஷ்மி, பிறகு நாராயணன். ஆனால் அவர்கள் மகா லஷ்மியை தனி என நினைக்கிறார்கள். அவர்களுக்கு 4 கைகளைக் காண்பிக்கிறார்கள். அதில் இரண்டு பெண்ணின் உடையது, 2 ஆணின் உடையது. ஆனால் இந்த விஷயங்களை அறியவில்லை. இப்போது நீங்கள் விளக்கமாக அறிகிறீர்கள்.

குழந்தைப் பருவத்தை மறந்து விடாதே என்ற பாடலைக் கேட்டீர்கள். பாபா எங்களுக்கு இப்போது நினைவு வருகிறது என ஆத்மா கூறுகிறது. அதிகாலையில் எழுந்து பாபாவிடம் பேச வேண்டும். அமிர்த வேளையில் பாபாவை நினைப்பது நல்லது அல்லவா? மாலையில் தனிமையில் சென்று அமருங்கள். தங்களுக்குள் கணவன் மனைவி ஒன்றாக இருந்தாலும் இந்த விஷயங்களைப் பேசிக் கொள்ளுங்கள். சிவபாபா பிரம்மாவின் உடலில் இருந்து என்ன கூறுகிறார். நாம் பூஜைக்குரிய வராக மாறும் போது பாபாவை நினைப்பதில்லை. பூஜாரியாகும் போது தான் பாபாவை நினைக்கிறோம் இவ்வாறெல்லாம் பேச வேண்டும். யாராவது இதைக் கேட்டார்கள் என்றால் அதிசயப்படுவார்கள். அரை கல்பமாக நாங்கள் காமச் சிதையில் அமர்ந்து எரிந்து சாம்பலாகி விட்டிருந்தோம். சுடுகாடாக ஆக்கிவிட்டிருந்தோம். இப்போது நாம் ஞான சிதையில் அமர வேண்டும சொர்க்கத்திற்கு போக வேண்டும். இது பழைய உலகம் ஆகும். பாரத வாசிகள் இது சொர்க்கம் என்று நினைக்கிறார்கள். அட, சொர்க்கம் சத்யுகத்தில் தான் வருகிறது. சொர்க்கத்தில் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. இங்கேயோ மாயாவின் பகட்டு இருக்கிறது. சங்க தோஷத்தில் வந்து இறந்து போகாதீர்கள் என பாபா கூறுகின்றார். இல்லை எனில் மிகவும் வருத்தப்படுவீர்கள். தேர்வின் முடிவு வரும் போது அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. இவர்கள் ராணி ஆவார்கள், இவர் தாசி என்று முன்பெல்லாம் குழந்தைகள் தியானத்தில் சென்று அனைத்தையும் கூறினர். பிறகு பாபா நிறுத்தி விட்டார். கடைசியில் அனைத்தும் தெரிந்து விடும். நாம் எவ்வளவு பாபாவிற்கு சேவை செய்கிறோம், எவ்வளவு பேரை தனக்குச் சமமாக மாற்றினோம். அது அனைத்தும் நினைவிற்கு வரும், சாட்சாத்காரம் கிடைக்கும். சாட்சாத்காரம் இல்லாமல் தர்மராஜ் கூட தண்டனை கொடுக்க முடியாது. என்னை மட்டும் நினையுங்கள் என்று குழந்தைகளுக்கு அடிக்கடி புரிய வைக்கப்படுகிறது. தந்தை வந்து இனிமையிலும் இனிமையான மரத்தின் நாற்று நடுகின்றார். அந்த அரசாங்கம் மரங்களின் நாற்று நட வைக்கின்றது. விழாக் களைக் கொண்டாடுகின்றார்கள். இங்கே புது உலகின் நாற்று நடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட தந்தையை மறக்காதீர்கள். பாபாவின் சேவையில் ஈடுபடுங்கள். இல்லை என்றால் கடைசியில் நிறைய வருத்தப்பட வேண்டியிருக்கும். இப்போது ஆஸ்தி அடைய வில்லை என்றால் ஒவ்வொரு கல்பத்திலும் கணக்கு ஆகிவிடும். ஆகையால் முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. எவ்வாறு பாபா ஞானத்தின், ஆனந்தத்தின், அன்பின் கடலாக இருக்கிறாரோ அது போல பாபாவிற்கு சமமாக ஆக வேண்டும். மேலும் தனக்குச் சமமாக மாற்றக் கூடிய சேவை செய்ய வேண்டும். அனைவருக்கும் ஞானத்தின் மூன்றாவது கண்ணை கொடுக்க வேண்டும்.

2. பச்சாதாபப்பட்டு வருந்தும் வகையில் எந்த ஒரு சங்கத்திலும் (தீய சகவாசம்) இணையக் கூடாது. சங்கதோஷம் மிகவும் மோசமானது. தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தந்தையிடமிருந்து முழுமையாக ஆஸ்தியை அடைய முயற்சி செய்ய வேண்டும்.

வரதானம்:-

தீபாவளி பண்டிகை நேரத்தில் ஸ்ரீலட்சுமியை அழைக்கின்றார்கள். அதுபோல குழந்தை களாகிய நீங்களும் தனக்குள் தெய்வீக குணங்களை அழைத்தீர்கள் என்றால் அவகுணங்கள் விடைபெறும் ரூபத்தில் முடிந்து போய்விடும். அதன் பிறகு புது சம்ஸ்காரங்கள் என்ற புதிய ஆடையை அணிந்துக் கொள்ளலாம். இப்பொழுது பழைய ஆடைகளின் மீது சிறிதளவு கூட அன்பு இருக்கக் கூடாது. என்னவெல்லாம் பலவீனங்கள், குறைகள், பலமின்மை, மென்மை தன்மை இருக்கிறதோ – அந்த அனைத்து பழைய கணக்குகளையும் இன்றிலிருந்து சதா காலத்திற்கு முடித்து விடுங்கள் அப்பொழுது தெய்வீககுணமுடையவர் ஆகிவிடுவீர்கள், மேலும் எதிர்காலத்தில் கிரீடதாரியாகவும் ஆவீர்கள். அதனுடைய நினைவு சின்னம் தான் இந்த தீபாவளி பண்டிகையாகும்

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top