04 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

January 3, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே ! பலவீனங்களை தானம் கொடுத்த பிறகு ஒரு வேளை ஏதாவது தவறு நடந்து விட்டால் தெரிவிக்க வேண்டும். எல்லாம் தெரிந்தவர் போன்று (மியா மிட்டூ) இருக்கக் கூடாது. ஒரு போதும் கோபித்துக் கொள்ளக் கூடாது.

கேள்வி: -

எந்த விஷயத்தை நினைவு செய்து அளவற்ற குஷியில் இருக்க வேண்டும்? எந்த விஷயத்திற்கு ஒரு துளியும் கோபப்படக் கூடாது?

பதில்:-

இப்போது நாம் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கின்றோம். பிறகு சென்று சூரிய வம்சம், சந்திர வம்சத்தின் இராஜா ஆவோம். அழகழகான மாளிகைகளைக் கட்டு வோம். நாம் நம்முடைய சுகதாமத்திற்கு சாந்திதாமம் வழியாக செல்கிறோம். அங்கே அனைத்தும் முதல் தரமான பொருளாக இருக்கும், உடல் கூட மிகவும் அழகாக நோயற்றதாக கிடைக்கும். இங்கே ஒரு வேளை இந்த கடைசி கால பழைய உடலில் நோய் ஏதாவது வந்தாலும் கோபப்படக் கூடாது. மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

அவையில் விளக்கு எரிந்தது…..

ஓம் சாந்தி. இந்த பாடலை குழந்தைகள் பல முறை கேட்டுள்ளீர்கள். விதவிதமாக குழந்தை களுக்கு பொருள் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. யார் பாடலை எழுதினார்களோ அவர்கள் இந்த விஷயங்களை அறியவில்லை. நீங்கள் இப்போது எல்லையற்ற தந்தையின் குழந்தைகள் ஆகியிருக்கிறீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையின் குழந்தைகளும் கூட,. மேலும் பேரன் பேத்திகளும் கூட இவ்வாறு வேறு எந்த தந்தையும் நீங்கள் என்னுடைய குழந்தைகளுமாக பேரன் பேத்திகளுமாக இருக்கிறீர்கள் என்று கூற முடியாது. இங்கே இந்த அதிசயம் இருக்கிறது. ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் சிவபாபாவின் குழந்தைகள். மேலும் சிவபாபாவின் பிள்ளை ஒரு பிரம்மா சாகாரத்தில் இருக்கிறார். ஆகையால் நாம் பேரன் பேத்திகளாக ஆகிறோம். எண்ணற்ற குழந்தைகள் இருக்கிறார்கள். அனைத்து குழந்தைகளும் ஒரு தந்தையினுடையவர் ஆவார்கள். நீங்கள் இப்போது சொத்து அடைவதற்காக பேரன் பேத்தி ஆகியிருக்கிறீர்கள். வேறு யாரும் ஆஸ்தி அடைய முடியாது. ஒரு வேளை அனைவரும் பேரன் பேத்திகள் ஆகிவிட்டால், அனைவரும் சொர்க்கத்தின் ஆஸ்தி அடைந்து விடுவார்கள். இவ்வாறு நடக்காது ஆகவே, கோடியில் ஒரு சிலர் தான் பேரன் பேத்திகளாக மாறுகிறார்கள். பிரஜாபிதா பிரம்மாவிற்காகத் தான் புரிய வைக்கப்படுகிறது. அதாவது நிச்சயமாக பிரம்மாவை தத்தெடுக்க வேண்டியிருக் கிறது. ஒன்று தத்தெடுப்ப தாகும். பிறகு பிரவேஷம் ஆக வேண்டிய விஷயம் இருக்கிறது. நாங்கள் பேரன் பேத்திகள் என குழந்தைகள் கூறுகிறார்கள். குழந்தைகளே, தங்களுடைய இனிய இல்லத்தை நினையுங்கள் என்று வேறு யாரும் கூற முடியாது. இது யாருக்குக் கூறுகின்றார். ஆத்மாக் களுக்கு ஆத்மா இந்த உடல் மூலமாக கூறுகிறது. நான் ஆத்மாக்களுடன் பேசுகிறேன் என்று வேறு யாரும் கூற முடியாது. நான் பரம்பிதா பரமாத்மா இந்த பிரம்மாவின் உடலில் பிரவேஷமாகி உங்களுக்கு கற்பிக்கிறேன் என பாபா கூறுகின்றார்லி ஆத்மா கேட்கிறது. இல்லை என்றால் எப்படி புரிய வைப்பேன். நான் பிரம்மாவின் உடலில் தான் வர வேண்டும். பிரம்மா என்று தான் பெயரும் வைக்க வேண்டும். அப்போது தான் பிரம்மா குமார் குமாரிகள் என அழைக்கப்படுவீர்கள். அந்த உலகீய பிராமணர்களிடம் நீங்கள் பிரம்மாவின் சந்ததி எப்படி என கேளுங்கள். உங்களால் கூற முடியாது. நாங்கள் பிரம்மா வின் (பக்தியின்) வாய் வழி வம்சம் என கூறுவார்கள். ஆனால் வயிற்று வழி வம்சத்தினர். வாய் வழி வம்சமாக இருந்தோம், இப்போது வயிற்று வழி வம்சம் ஆகிவிட்டோம் என்கிறார்கள். இப்போது பிரம்மாவின் வயிற்று வழி வம்சம் என்று கூற அவர்களால் முடியாது.! இது மிகவும் அதிசயமான விˆயமாக இருக்கிறது. தந்தை ஒரு போதும் தவறான விஷயங்களைக் கூற மாட்டார். அவர் சத்திய மானவர். நாமும் சத்தியமாக மாறிக் கொண்டிருக்கிறோம். தனக்கு எல்லாம் தெரியும் என நினைக்கக் கூடாது. எது வரை பரிபூரணமாக மாற வில்லையோ அது வரை ஏதாவது ஒன்று நடந்துக் கொண்டு தான் இருக்கும் என்று இந்த பாபாவும் கூறுகின்றார். ஆனால் உங்களுடைய வேலை சிவபாபாவுடன் மனிதர்கள் ஏதாவது தவறுகளை செய்யலாம். மற்றவர்களிடம் உங்களுக்கு சிறு பூசல்கள் ஏற்படலாம். ஆனால் பாபா விடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும் அல்லவா? நிறைய குழந்தைகள் பாபாவிடம் கூட கோபித்துக் கொள் கிறார்கள். யாராவது சகோதரன் சகோதரிகள் ஏதாவது கூறிவிட்டாலும் கூட சிவபாபாவின் முரளியை கேளுங்கள். வீட்டில் இருங்கள். ஆனால் பாபாவின் பொக்கிஷத்தை அடையுங்கள். நீங்கள் பொக்கிஷம் (ஆஸ்தி) இல்லாமல் என்ன செய்வீர்கள். பிராமணர்களின் சங்கத்தில் கூட நிச்சயம் வர வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் சூத்திரர்களின் சங்கத்தின் தாக்கம் ஏற்படும். நீங்கள் துர்கதி அடைவீர்கள். நல்ல சங்கத்தில் சேர்ந்தால் பிரகாசிக் கலாம். கெட்ட சங்கத்தில் அழிந்து போவீர்கள். அன்னபறவை சென்று நாரைகளின் கூட்டத்தில் வசித்தால் சத்திய நாசம் ஏற்படும். ஒரு தந்தைக்குத் தான் படகோட்டி என்று கூறப்படுகிறது. மற்றபடி மூழ்க வைக்கக் கூடியவர் கள் பலர் இருக்கிறார்கள். வேறு எந்த ஒரு மனிதனும் தன்னை படகோட்டி மற்றும் குரு என்று கூற முடியாது. இந்த சாரமற்ற உலகத்தில் விஷக் கடலில் இருந்து இனிய இல்லத்திற்கு அழைத்துச் செல்பவர் ஒரு தந்தையே! சுகதாமம், சாந்தி தாமம் மற்றும் துக்கதாமம் என மூன்று உலகங்கள் உள்ளன என பாபா கூறுகின்றார். நீங்கள் இந்த துக்க உலகத்தில் இருந்து வெளியேறி சாந்திதாமத்திற்குச் செல்லவேண்டும். இந்த துக்க உலகம் தீப்பற்றி எரியப் போகிறது. இது துக்கத்தின் மூங்கில் காடாகும். இதில் கும்பகர்ணன் போன்ற கீழான மனிதர்கள் வசிக்கிறார்கள். பதீத பாவனர் பாபாவை அழைக் கிறார்கள். பதீத பாவனி கங்கையை அழைக்க வேண்டியதில்லை. அது தொன்று தொட்டே இருக்கிறது. சொர்க்கத்திலும் கூட இருக்கும் அல்லவா? ஒரு வேளை இந்த கங்கை பதீத பாவனி என்றால் அனைவரும் பாவனமாகவே (தூய்மையாக) இருக்க வேண்டும். எதையும் புரிந்துக் கொள்ள வில்லை.

இப்போது குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. முயற்சிக்கு ஏற்ப வரிசைக் கிரமத்தில் புரிந்துக் கொள்கிறீர்கள். ஏனென்றால், குழந்தைகளுக்குள் குறைபாடுகள் இருக்கிறது, அசுத்த அகங்காரம், காமம், கோபம் ஒவ்வொரு வருக்குள்ளும் இருக்கின்றது. நமக்குள் என்ன குறைபாடு இருக்கிறது என ஒவ்வொருவரும் தன்னுடைய மனதைக் கேட்க வேண்டும். பாபா எனக்குள் இந்த குறைபாடு இருக்கிறது என பாபாவிற்குத் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த குறை வளர்ந்து கொண்டே போகும். சாபம் எதுவும் கொடுக்கவில்லை. ஆனால் ஒரு சட்டம் இருக்கிறது. குறைகளை தானம் கொடுத்து விட்டு ஏதாவது தவறு செய்தால் தெரிவிக்க வேண்டும். பாபா நாங்கள் இந்த தவறு செய்து விட்டோம், இந்த பொருளை திருடி விட்டோம், சிவபாபாவின் பண்டாராவில் அனைத்தும் கிடைக்கிறது. அழியாத ஞான இரத்தினங்கள் கூட கிடைக்கிறது என்றால், சரீர நிர்வாகத்திற்காகவும் அனைத்தும் கிடைக்கிறது. புத்திக்கான உணவு சரீரத்திற் கான உணவு அனைத்தும் கிடைக் கிறது. இருப்பினும் ஏதாவது வேண்டும் என்றால் கேட்கலாம். ஒரு வேளை கேட்காமல் ஏதாவது எடுத்துக் கொண்டால் உங்களைப் பார்த்து மற்றவர்களும் அவ்வாறு செய்வார்கள். கேட்டு எடுப்பது சரியாகும். குழந்தைகள் பாபாவிடம் எதைக் கேட்டாலும் பாபா கொடுத்து விடுகிறார். பணக்காரராக இருந்தால் அனைத்தையும் வர வழைத்துத் தருவார்.. ஏழைகள் என்ன செய்வார்கள். இது சிவபாபாவின் பண்டாரா ஆகும். ஏதாவது பொருள் வேண்டும் என்றால், கேட்கலாம். தகுதிக்கு ஏற்ப அனைவருக்கும் கிடைக்கும். பாபா மம்மா மற்றும் நெருங்கிய குழந்தைகளிடம் போட்டி போடக் கூடாது. இந்த குழந்தை மிகவும் நன்றாக சேவை செய்கிறது என பாபா கூட மகிமை செய்கிறார். எனவே, குழந்தைகளாகிய நீங்களும் அவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். அனைத்திற்கும் ஆதாரம் ஞானம் மற்றும் யோகம் தான். புத்திசாலி குழந்தைகள் மிகவும் யுக்தியோடு நடக்கிறார்கள். நம்மை விட உயர்ந்தவர்கள் என உண்மையை அறிகிறார்கள். எனவே அவர்களை மரியாதையுடன் பார்ப்பார்கள். பெண்கள் கூட படிக்க எழுதத் தெரிந்தவர்கள் என்றால், மிகவும் புத்திசாலி என்றால் நீங்க, நீங்க என மரியாதை யுடன் பேசுவர். சிலரோ படிக்காதவர்கள் அவர்கள் நீ, நீ என கூறி பேசுகிறார்கள். இந்த நல்ல பழக்க வழக்கங்கள் வேண்டும். பாபாவிற்கு முன்பு அவரைப் பார்க்க விதவிதமாக வருகிறார்கள். பாபா வருவார் யாராயினும் திருப்தியாக மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என கேட்பார். சில ஆபீஸருக்கு கூட மரியாதை கொடுக்க வேண்டியிருக்கிறது. போப் வந்திருந்தார். அவருக்கு கூட இது முட்களின் காடு, நீங்கள் இதை சொர்க்கம் என்கிறீர்கள். அது (சத்யுகம்) மலர் களின் தோட்டம் என்று தெரிவிக்க வேண்டும். அங்கே மிகவும் நல்ல பரிஸ்தாக்கள் இருப்பார்கள். இது முட்களின் காடாகும். காடுகளில் முட்கள் மற்றும் விலங்குகள் வாழ்கின்றன. இந்த பாபா யாருக்கு வேண்டுமானாலும் எதை வேண்டு மானாலும் கூறலாம். குழந்தைகள் கூற முடியாது. இப்போது சொர்க்கம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இது கலியுகம் ஆகும். அல்லாவின் தோட்டம் உருவாகிக் கொண்டிருக்கிறது. சத்யுகம் அல்லாவின் தோட்டம். இது முட்களின் காடாகும். இது மிகவும் புரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். அதிர்ஷ்டசாலிகள் தான் நன்கு புரிந்துக் கொள்வார்கள். மேலும் புரியவைப்பர். பாபா குழந்தைகளுக்கு நன்கு ஆலோசனை வழங்குகிறார் என்றால் 5 விகாரங்களை வெற்றி அடைய வேண்டும். கடைசியில் விடை கொடுத்துவிட வேண்டும். அதுவரை ஏதாவது குறைகள் இருக்கின்றது. அவைகளை நீக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஆத்ம உணர்வு உடையவராக வேண்டும். சாந்தி தாமம் மற்றும் சுகதாமத்தை நினைத்தால் குஷி இருக்கும். நாம் சாந்திதாமத்தின் வழியாக சுக தாமத்திற்குச் செல்கிறோம். அதற்குள் முழுவதும் தூய்மையாகி விடும். பிறகு சொர்க்கத்தில் ஒவ்வொரு பொருளும் முதல்தரமாக கிடைக்கும். வைர வைடூரியங்களின் மாளிகை வந்து கட்டுவார்கள். இதையெல்லாம் செய்வார்கள். நான் ஆத்மா என்பது உங்களுக்கு புத்தியில் இருக்கிறது. நமது இராஜ்யத்தை உருவாக்கு வதற்காக வந்துள்ளீர்கள். பிறகு சிவபாபாவுடன் சென்று விடுவீர்கள். நாம் இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டிருக் கின்றோம். பிறகு சென்று சூரிய வம்ச, சந்திர வம்ச இராஜா இராணி ஆவோம். மாளிகைகளை உருவாக்க வேண்டும் அல்லவா? இந்த விஷயங்களை உள்ளுக்குள் நினைவு செய்து மகிழ்ச்சி அடைய வேண்டும். குறை பாடுகள் நிறைய இருக்கின்றது. தேக உணர்வில் பலர் வருகிறார்கள். இது கடைசி காலத்தின் பழைய உடல் ஆகும். புதிய உடல் சத்யுகத்தில் கிடைக்கும். பகவானை சந்திப் பதற்காக நீங்கள் அரைக்கல்பம் பக்தி செய்தீர்கள் என பாபா அமர்ந்து இனிமையிலும் இனிமை யான குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். ஒரு பகவானை சந்திப்பதற்காகவா அல்லது பலரை சந்திப்பதற்காக (அடைவதற்காகவா பக்தி செய்யப்படுகிறதா? பக்தி ஒருவருக்குத் தான் செய்ய வேண்டும். பிறகு தூய்மையற்ற பக்தி ஆகி விடுகிறது. பிறகு அது நீங்கள் பல பிறவிகளுக்கு குருவிடம் செல்கிறீர்கள். மறுபிறவி எடுத்தீர்கள் பிறகு வேறு குரு வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நான் உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறேன், அங்கு இருக்கும் வரை குறுவிற்கான அவசியம் இல்லை. தூய்மையான பக்திக்குப் பிறகு தூய்மையற்ற பக்தி செய்ய வேண்டியிருக்கிறது. ஏனென்றால், என்னைத்தான் இறங்கும் கலையாகும். இப்போது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என பாபா கூறுகின்றார். எனக்குத்தான் விடுவிக்க கூடியவர், படகோட்டி, தோட்டக்காரன் என பாடுகிறீர்கள். சொர்க்கம் என்பதே மலர்களின் தோட்டமாகும். பிறகு படகோட்டி சென்று விடுவார். அனைவரும் சொர்க்கத்திற்கு செல்ல மாட்டார்கள். முதன்முதலில் யார் வருகிறார்களோ அவர்களுக்கு அல்லாவின் தோட்டம் போன்றாகும். நிறைய சுகத்தை அனுபவிக்கிறார்கள். அல்லாதான் அனைவருக்கும் சுகம் அளிக்கிறார். சத்யுகம் அல்லாவின் தோட்டம் என யார் வேண்டுமானாலும் கூறுவார்கள். பாரதம் தான் பழமையான கண்டமாகும். சூரிய வம்சத்தினர், சந்திர வம்சத்தினர் இராஜ்யம் செய்த போது அனைத்து ஆத்மாக்களும் இனிய இல்லத்தில் இருந்தனர். முக்திக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் பக்தி செய்கின்றனர். ஜீவன் முக்தி அளிக்கக்கூடிய குரு யாரும் இல்லை. சிவபாபாதான் முக்தி மற்றும் ஜீவன் முக்தியின் வழியை காண்பிக்கிறார். இப்போது இது துக்க உலகம் ஆகும். மூங்கில் காடு தீப்பற்றி எறிய வேண்டியுள்ளது. இலட்சக் கணக்கான வருடங் களின் கல்பம் எதுவும் இல்லை. இலட்சக்கணக்கான வருடங்கள் என நினைத்து கும்ப கர்ணனின் தூக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். இப்போது ஈஸ்வரன் வந்து எழுப்பி இருக்கிறார். நீங்கள் மீண்டும் மற்றவர்களை எழுப்புங்கள். சேவை இல்லாமல் உயர்ந்த பதவி அடைய முடியாது. பாபாவிற்கு குழந்தைகள் முழு சொத்து அடையவில்லையே என்று இரக்கம் வருகிறது. பாபா அனைவரையும் முழு முயற்சி செய்ய வைப்பார். நீங்கள் ஏன் பாபாவின் வெற்றி மாலையில் கோர்க்க படக்கூடாது. யாருக்கு வேண்டு மானாலும் புரியவைப்பது எளிதாகும். பிரம்மா மூலமாக ஸ்தாபனை, சங்கர் மூலமாக துக்க தாமத்தின் அழிவாகும். இப்போது சுகம் நிறைந்த உலகத்திற்காக முயற்சி செய்ய வேண்டும். ஆனால் சுகமான உலகத்தைப் பற்றி யாரும் அறியவில்லை. ஒருவேளை அறிந்திருந்தால் அங்கே போய் சேர்ந்திருப்பர். யாரும் அறியவும் இல்லை. போய் சேரவும் இல்லை. சிறகுகள் துண்டிக்கப் பட்டிருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் காலனை வெற்றி அடைகிறீர்கள். காலனுக்கெல்லாம் காலன் பாபா தான். காலன் மீது வெற்றி அடைய வைப்பார். எனவே, இது அனைத்தையும் தாரணை செய்து தூய்மையற்றவர்களை தூய்மையானவர்களாக மாற்ற வேண்டும். வெறுமனே பலனை மட்டும் அடைந்து செல்வதால் என்ன பயன்? 7 நாள் பயிற்சி எடுக்கும் போது தான் முழுமையாக தாக்கம் ஏற்படும்,. சில குழந்தைகள் போகப்போக பிராமணியிடம் கோபித்துக் கொள்வதால் சிவபாபாவிடமும் கோபித்துக் கொள்கிறார்கள். பகவானிடம் கோபித்துக் கொள்வது புத்திசாலித்தனமா? மற்றவர்களிடம் கோபித்துக் கொண்டால் கோபித்துக் கொள்ளட்டும். என்னிடம் கோபித்துக் கொண்டால் பிணமாகி விடுவார்கள். சிவபாபாவிடம் கோபித்துக் கொள்ளாதீர்கள். பொக்கிஷங்களை எடுத்துக் கொண்டே இருங்கள். செல்வத்தை கொடுத்தால் செல்வம் குறையாது….. சங்கமும் (தோழமை) வேண்டும். பிராமண குலத்திலோ மிகவும் பாலும் சக்கரை போல இருக்க வேண்டும். கோள் மூட்டுபவர் வஞ்சகர்கள் (பரசிந்தனை செய்பவர்கள்) கூட இருக்கிறார்கள். அவர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு சேவையில் மிகவும் ஆர்வம் வேண்டும். மூழ்கி இருப்பவர்களை வெளியே மீட்டெடுக்க வேண்டும் என பாபா புரிய வைக்கிறார். இதிலும் கூட தானம் முதலில் நம்மிடமிருந்து தான் தொடங்க வேண்டும். பாபா கூட முதன் முதலில் பிரம்மா குழந்தையை விழித்தெழ செய்கிறார்.. பிறகு நீங்கள் உங்கள் குழந்தைகளைத் விழித்தெழ செய்யுங்கள்.. உயிர் தானம் அளியுங்கள். படிப்பை கடைசி வரை படிக்க வேண்டும். எவ்வளவு நல்ல நல்ல கருத்துக்களை பாபா அளிக்கிறார். உயிரோடு வாழ்ந்து கொண்டே இறந்து ஆஸ்தி அடைய வேண்டும். பாபா நான் உங்களுடையவன் உங்களுடையவனாகவே இருந்தேன். மீண்டும் உங்களுடைய வனாக மாறியிருக்கிறேன். உங்களுடன் முழு ஆஸ்தியும் அடைந்து தான் விடுவோம். இந்த துக்க தாமத்தின் மூங்கில் காடு தீப்பற்றி எரியப் போகிறது, வேண்டும். நாம் சுகதாமத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றோம் என்றால், எவ்வளவு மகிழ்ச்சி இருக்க வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. யார் ஞானம், யோகத்தில் கூர்மையாக இருக்கிறார்களோ, நன்கு சேவை செய்கிறார்களோ, அவர்களுக்கு மிக மிக மரியாதை கொடுக்க வேண்டும். நீங்க, நீங்க என்று (மரியாதையுடன்) பேச வேண்டும். தங்களுக்குள் கூட ஒருபோதும் கோபித்துக் கொள்ளக் கூடாது.

2. பிராமண குலத்தில் மிக மிக பாலும் சர்க்கரையாக (ஒற்றுமையுடன்) இருக்க வேண்டும். கோள் மூட்டுதல் பரசிந்தனையிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நிச்சயம் நல்ல தொடர்பில் இருக்க வேண்டும்.

வரதானம்:-

இப்பொழுது ஏறும் கலையின் நேரம் முடிந்து விட்டது. இப்பொழுது பறக்கும் கலையின் நேரம் ஆகும். பறக்கும் கலையின் அடையாளம் டபிள் லைட். சிறிதளவு கூட சுமை இருந்தது என்றால் கீழே எடுத்து வந்து விடும். தனது சம்ஸ்காரங்களின் சுமையாக இருந்தாலும் சரி, வாயு மண்டலத்தினுடையதாக இருந்தாலும் சரி, எந்தவொரு ஆத்மாவின் சம்மந்தம் தொடர்பி னுடையதாக இருந்தாலும் சரி, எந்தவொரு சுமையும் குழப்பத்தில் எடுத்து வரும். எனவே, எங்குமே பற்றுதல் இல்லாமலிருக்க வேண்டும். சிறிதளவு கூட எந்தவொரு கவர்ச்சி யும் கவராமல் இருக்க வேண்டும். இது போல கவர்ச்சிகளிலிருந்து விடுபட்டவராகி டபிள்லைட் ஆகுங்கள். அப்பொழுது சம்பூர்ணமானவர் ஆகி விட முடியும்.

சுலோகன்:-

பரமாத்ம அன்பில் முழ்கிய நிலையின் (லவ்லீன் ஸ்திதி) அனுபவம் செய்யுங்கள்.
நான் என்ற உணர்வு, எனது என்ற தன்மை முடிந்து போய் விடும் வகையில் தந்தையின் அன்பில் அந்த அளவு மூழ்கி விடுங்கள். ஞானத்தின் ஆதாரத்தில், தந்தையின் நினைவில் மூழ்கி இருந்தீர்கள் என்றால், இவ்வாறு ஒன்றியிருப்பது தான் (லவ்லீன்) லயித்த நிலை ஆகும். எப்பொழுது (லவ்) அன்பில் (லீன்) லயித்து விடுகிறீர்களோ, அதாவது (லகன் மே மகன்) ஈடுபாட்டில் மூழ்கி விடுகிறீர்களோ, அப்பொழுது தந்தைக்கு சமமானவர் ஆகி விடுகிறீர்கள்.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top