03 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
November 2, 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! உள்ளும் புறமும் சுத்தமானவராக ஆகுங்கள், எந்த விதமான அழுக்கான பழக்கமும் இப்போது உங்களிடம் இருக்கக் கூடாது.
கேள்வி: -
பிராமண குழந்தைகள் தந்தையிடமிருந்து முழுமையிலும் முழுமையான ஆஸ்தியை எடுப்பதற்காக எந்தெந்த (விதிமுறைகளை) தாரணைகளின் கடைபிடித்தல் மீது கவனம் வைக்க வேண்டும்?
பதில்:-
1. இந்தப் பிறவியில் தந்தையுடையவராகிய பின் ஒன்றுக்கு நூறு மடங்கு தண்டனை அடையக்கூடிய எந்த பாவ கர்மமும் ஆகக் கூடாது. 2. மிகவும் இனிமையான தந்தை உங்களை தனக்குச் சமமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார், ஆகையால் வாயிலிருந்து பிறருக்கு துக்கம் ஏற்படக் கூடிய கசப்பான வார்த்தைகள் வெளிப்படக் கூடாது. 3. துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுக்கக் கூடியவரின் குழந்தைகளாக ஆகி அனைவரின் துக்கத்தையும் நீக்க வேண்டும். மனம்-சொல்-செயலால் சுகத்தைக் கொடுக்க வேண்டும். 4. இகழ்ச்சி, புகழ்ச்சியில் சமமான நிலையில் இருக்க வேண்டும்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
ஓம் சாந்தி. சத்குரு வாரத்திற்கு விருட்சபதி நாள் என்றும் சொல்லப்படுகிறது. விருட்சபதி நாள் என்றால் தந்தையின் நாளாகும். அமாவாசை தினத்தன்று காரிருளின் இரவு முடிவடை கிறது, பிறகு பகல் தொடங்குகிறது. சந்திரன் உதிக்கத் தொடங்குகிறது. மேலும் இன்றைய நாட்களில் யாருக்கு பித்ருவுக்கான திவசம் (திதி நாள்) வருகிறதோ அவரை சாப்பிட வைத்து குடிக்க வைத்து முடிக்கின்றனர், பிறகு கேட்க வேண்டியிருக்காது. அனைவரையும் திருப்திப் படுத்தப்படுகிறது. பகலுக்குச் சென்று விட்டார், பிறகு இரவில் திரும்பி வர வேண்டிய அவசியம் தான் என்ன? உண்மையில் இதுதான் முறை – 12 மாத காலம் முடியும்போது அவர்களை சாப்பிட வைத்து முடித்து விடப்படுகிறது. பிறகு காரிருளின் இரவில் ஏன் அழைக்கப்படுகிறது? ஆனால் பிராமணர் கள் இப்படிப்பட்ட பழக்க வழக்கங்களை உருவாக்கி விட்டனர், அந்த பழக்கம் தொடர்ந்து வருகிறது. தட்சணை முதலானவை கிடைத்தபடி இருக்கின்றன. அது எல்லைக்குட்பட்ட அமாவாசை. இப்போது தந்தை வந்திருக்கிறார்- எல்லைக்கப்பாற்பட்ட அமாவாசையில். தந்தை வரும்போது அரைக் கல்பத்தின் காரிருள் முடிவடைகிறது. பிறகு சத்யுகத்தில் வெளிச்சமே வெளிச்சமாக ஆகி விடுகிறது. அங்கே ஒரு போதும் பித்ருக்களுக்கு உணவு படையல் வைத்து உண்ண வைப்ப தில்லை. இது எல்லைக்கப் பாற்பட்ட அமாவாசை ஆகும். பிரம்மாவின் இரவு அதுவே பிராமணர் களின் இரவு – இது முடிவடைந்து பகல் வந்து விடுகிறது. பிறகு எந்த பித்ருக்களுக்கு உண்ண வைக்கப் போவதில்லை, அங்கே பிராமணர்களே இருப்பதில்லை. யாரும் இறந்து போவதே இல்லை என்பதல்ல, ஆனால் இந்த சடங்குகள் அங்கே இருக்காது. இங்கே பலவிதமான பிராமணர் களும் உள்ளனர். இப்போது ஒரு உலகம் வேண்டும், ஒரு தேசம் இருக்க வேண்டும் என விரும்பு கின்றனர். இப்போது இவ்வளவு பேருக்கு ஒரு தேசம் இருக்க முடியாது. ஆம், சத்யுகம் இருந்த போது ஒரு இராஜ்யம், ஒரு பழக்க வழக்கம் என இருந்தது. அதனை தந்தைதான் வந்து ஸ்தாபனை செய்கிறார். அங்கே அனைவரும் முற்றிலும் இனிமையானவர் களாக இருப்பார்கள், துக்கத்தின் விஷயம் இருக்காது. ஒருபோதும் கசப்பாக பேச மாட்டார்கள், பாவம் செய்வதில்லை. இப்போது யார் எவ்வளவு முயற்சி செய்வார்களோ, அந்த அளவு வரிசைக் கிரமமாக உயர்ந்த பதவியை அடைவார்கள். அங்கே யாரும் திருட்டு முதலானவை செய்யும்படியாக இருக்காது. உள்ளும் புறமும் தூய்மை இருக்கும். இங்கே உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கின்றனர். ஒருவர் மற்றவருக்கு எவ்வளவு நஷ்டத்தை ஏற்படுத்து கின்றனர். இவையனைத்தும் இராவண இராஜ்யத்தின் அழுக்கான நடத்தைகள். பாபா இப்போது இதனை ஒரேயடியாக முடிவுக்குக் கொண்டு வரச் செய்து விடுகிறார். அனைவரின் அழுக்கான பழக்கங்களும் ஒரேயடியாக நீங்கி விடுவதில்லை. சிறிது காலம் பிடிக்கும். எவ்வளவுக்கெவ்வளவு நினைவின் தொடர்பில் இருப்பார் களோ, அந்த அளவு ஒவ்வொரு காலடியும் நாம் யோகத்தில் இருக்கிறோமா, பாவ கர்மம் எதுவும் செய்வதில்லைதானே என பார்த்தபடி இருப்பார்கள். தான் இனிமையாய் ஆகி பிறரை இனிமையாக ஆக்குகிறோமா? தானே கசப்பானவராக இருந்தால் பிறகு மற்றவர்களை எப்படி இனிமையாக ஆக்குவார்கள்? இங்கே அப்படிப்பட்டவர்கள் சட்டென வெளிப்பட்டு விடுவார்கள், மறைக்க முடியாது. என்னுடைய குழந்தையாகி ஏதாவது தலை கீழ் காரியம் செய்தால் மிகவும் கடுமை யான தண்டனையை அனுபவிப்பீர்கள் என தந்தை சொல்கிறார். பதவியும் கீழாக ஆகிவிடும். பகவான் தாமே அமர்ந்து தேவதையாக ஆக்குவதற்காக கற்பிக்கிறார், தேவதைகளின் மகிமை பாடுகின்றனர் – அனைத்து குணங்களும் நிறைந்தவர்… .அஹிம்சா பரமோதர்மம். இம்சை இரண்டு விதமானதாக இருக்கும் – ஒன்று காமக் கோடரியின் இம்சையின் மூலம் மனிதர்கள் முதல் இடை கடைசி துக்கத்தை அடைகின்றனர். பிறகு இரண்டாவதாக கோபத்தில் வந்து ஒருவர் மற்றவரை அடித்து துக்கம் கொடுத்து, துக்கம் மிக்கவராக ஆகின்றனர். இங்கே மனம்-சொல்-செயலால் அப்படிப்பட்ட எந்த காரியமும் செய்யக்கூடாது என குழந்தைகளுக்கு சொல்லப்படு கிறது. யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. நாம் துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவரின் குழந்தைகள். எனவே அனைவருக்கும் எப்படி துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பது என்ற இந்த யுக்தியையே சொல்லிக் கொடுக்க வேண்டும். செய்திருக்கக் கூடிய கர்மங்களின் கணக்கு வழக்கு முடிந்து போகிறது. இந்த பிறவியில் செய்திருக்கக் கூடிய பாவ கர்மங்கள் பற்றி தெரியப்படுத்து வதன் மூலம் பாதி நீங்கி விடும் என இங்கே தந்தை புரிய வைக்கிறார். ஆனால் பல பிறவிகளில் செய்திருக்கும் பாவ கர்மங்கள் தலை மீது நிறைய உள்ளன. இந்தப் பிறவியிலும் பாவச் செயல் ஆகி விடக்கூடிய கர்மம் செய்யக் கூடாது, மேலும் யோகபலத்தின் மூலம் பல பிறவிகளின் பாவ கர்மங்களை பஸ்மம் செய்ய வேண்டும் என தந்தை புரிய வைக்கிறார். இந்தப் பிறவியில் தந்தையுடையவராக ஆகி எந்த பாவ கர்மமும் செய்யக் கூடாது. பிராமணர் ஆகாமல் ஆஸ்தி கிடைக்காது. இவர்கள் பாப்தாதா அல்லவா. ஆஸ்தி உங்களுக்கு அவரிடமிருந்து கிடைக்கிறது, இவரிடமிருந்து (பிரம்மாவிடமிருந்து) அல்ல. இவர் தன்னைப் பற்றி எதுவும் சொல்லிக் கொள்வ தில்லை. இவர் வெறும் இரதமாக மட்டுமே இருப்பவர், இவரிடமிருந்து எதுவும் கிடைக்காது. இரதமும் கூட பாடப்படுகிறது. ஹுசைனுடைய இரதத்தை வெளியில் எடுக்கின்றனர் அல்லவா என்று. குதிரையை எவ்வளவு அலங்கரிக்கின்றனர். இது பதீதமான சரீரம் அல்லவா. இவரும் கூட இப்போது அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். தனது முயற்சியின் மூலம்தான் அலங்கரித்துக் கொள்கிறார். பாபா இவருக்கு சலுகை காட்டுவதில்லை. இந்த (பிரம்மா) பாபா என்னவோ நகைச் சுவையாக சொல்கிறார் – எனக்கு வாடகை கிடைக்கும் அல்லவா. ஆனால் நீங்கள் எப்படி முயற்சி செய்கிறீர்களோ அப்படியேதான் இவரும் முயற்சி செய்ய வேண்டும். நமக்கு வாடகை கொடுப்பார் என்ற நப்பாசை எதுவும் இருப்பதில்லை. பிரம்மா பாபா நகைச் சுவையாகக் சொல்கிறார். ஆத்மா யோக பலத்தின் மூலமே சதோபிரதானம் ஆக வேண்டும். எந்த அளவு யோகம் (நினைவின் தொடர்பு) இருக்குமோ அந்த அளவு தூய்மையடைவீர்கள், பிறகு தமக்குச் சமமாகவும் பிறரை ஆக்க வேண்டும். யார் நல்ல நல்ல சேவை செய்கின்றனரோ அவர்கள் பெயர் புகழ் வாய்ந்தவர் களாக இருக்கின்றனர் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாபா சேவைக்காக அனுப்பி வைக்கிறார். மிகவும் இனிமையாக பேச வேண்டும். யாருடனும் சண்டை போடக் கூடாது. பிராமணர்கள் கசப்பாக பேசினார்கள் என்றால் இவர்களுக்குள் கோபத்தின் பூதம் இருக்கிறது என சொல்வார்கள். இகழ்ச்சி புகழ்ச்சியில் சமநிலையில் இருக்க வேண்டும். பலருக்குள் கோபத்தின் பூதம் உள்ளது, அதனால் மிகவும் கோபம் அடைகின்றனர். அனைவரின் கோபமும் நீங்கி விட்டது என சொல்ல முடியாது. சம்பூரண மடையும் நேரம் நெருங்கும் வரை மெல்ல மெல்ல துரு நீங்கியபடி இருக்கும். எனக்குள் கோபமே இல்லை என யாருமே சொல்லிக் கொள்ள முடியாது. சிலருக்குள் அதிகமாகவும், சிலருக்குள் குறைவாகவும் இருக்கும். சிலருடைய சப்தமே சண்டை போடுவது போல இருக்கும். குழந்தைகள் மிக மிக இனிமையானவர்களாக ஆக வேண்டும். இங்கேயே தான் அனைத்து குணங்களிலும் நிறைந்தவராக ஆக வேண்டும். விகாரங்கள் அனைத்து விதமாகவும் உள்ளன அல்லவா. கோபப்படுதல், பொய் சொல்வது இவையனைத்தும் விகாரங்கள் ஆகும்.
குழந்தைகளே, இப்போது ஏதாவது பாவ கர்மம் செய்தீர்கள் என்றால் பிறகு மிகவும் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். அங்கே என்னுடன் தண்டனை கொடுக்கக் கூடிய தர்மராஜாவும் இருப்பார். இங்கே தண்டனை வெளிப்படையாக கிடைக்கும், தர்மராஜாவின் தண்டனை குப்தமாக (மறைமுகமாக) கிடைக்கும், கர்ப்பச் சிறையில் கூட தண்டனை களை அனுபவிக்கின்றனர். சிலருக்கு நோய் முதலானவை ஏற்படுகின்றன, அதுவும் கூட கர்ம போகமேயாகும். தர்மராஜாவின் மூலம் தண்டனை கிடைக்கும். முன்னர் செய்த பாவத்திற்கும் கூட இப்போது கிடைக்கிறது. இப்போது செய்வதற்கு இப்போதே கிடைக்கலாம். பிறகு கர்ப்பச் சிறையிலும் கிடைக்கும். அது குப்தமானது, அங்கே தர்மராஜா தண்டனை கொடுக்க மாட்டார் அல்லவா. இங்கே சரீரத்தின் மூலம் கர்மங்களின் விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். இப்போது தந்தை இவற்றிலிருந்து விடுவித்துக் கொண்டிருக்கிறார். பரமபிதா பரமாத்மா மற்றும் தர்மராஜா பாபா இருவரும் ஆஜராகி யுள்ளனர். இப்போது அனைவருக்குமே இறுதிச் சமயமாகும். அனைவருக்குமே தீர்ப்பு கிடைக்கப் போகிறது. இதுவும் கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது. சம்பூரண மடைய வேண்டும் என குழந்தை களாகிய நீங்கள் புரிந்து கொண்டீர்கள் எனும்போது, எந்த பாவ கர்மமும் செய்யக் கூடாது. தனது நன்மைக்காக முடிந்த அளவு முழுமையான முயற்சி செய்ய வேண்டும். கல்ப கல்பத்திற்கான விஷயமாகும். அந்த (உலகீய) படிப்பு ஒரு பிறவிக்கானது. அடுத்த பிறவியில் வேறு படிப்பு. இதுவோ 21 பிறவி களுக்கானது. அழிவற்ற தந்தை அழிவற்ற படிப்பை படிப்பிக்கிறார், அதன் மூலம் 21 பிறவிகளுக்கு அழிவற்ற பதவியும் கிடைக்கிறது. தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்கான ஆஸ்தி கிடைக்கிறது. இது பழைய உலகம், புதிய உலகத்தில் பாரதம் மட்டுமே இருந்தது என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இப்போது மீண்டும் இந்தச் சக்கரம் சுற்றத் தொடங்கு கிறது. புதிய சிருஷ்டியின் ஸ்தாபனை ஆகி, பழையது வினாசமாகப் போகிறது. பரமபிதா பரமாத்மா பிரம்மாவின் மூலம் வந்து புதிய உலகை ஸ்தாபனை செய்கிறார் என பாடப்பட்டுள்ளது. பிராமணர் கண்டிப்பாக தேவை. ஆக கண்டிப்பாக தூய்மையும் அடைவார்கள், இராஜயோகத் தையும் கற்றுக் கொள்வார்கள். பிரம்மாகுமார், பிரம்மாகுமாரிகளாகிய நாம் தூய்மை அடைந்து கொண்டிருக்கிறோம். வீடு வாசலை விடுங்கள் என தந்தை சொல்வதில்லை. அல்ல, இல்லற விஷயங்களில் இருந்தபடி தாமரை மலர் போல இருங்கள். இந்த பாப்தாதா எனும் பெயர் மிகவும் நன்றாக உள்ளது. தாத்தாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. அவர் உயர்ந்தவரிலும் உயந்தவர் ஆவார். பிரம்மா தூய்மையற்றவராக இருந்தார் அல்லவா. இவர் முதன் முதலில் சிரேஷ்டாச் சாரியாக பூஜைக்குரிய மகாராஜாவாக இருந்தார். இப்போது கடைசியில் வந்து தூய்மையற்றவராக ஆகி விட்டார். இது இவருடைய கடைசி பிறவியாகும். இந்த உலகில் யாருமே தூய்மை யானவர்கள் இல்லை? தூய்மையான உலகை யாரும் நினைவு செய்வதில்லை. ஆத்மாவும் பரமாத்மாவும் வெகுகாலமாகப் பிரிந்திருந்தனர் என பாடவும் பட்டுள்ளது. இதனுடைய கணக்கை யும் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். சூரிய வம்சத்தவர் கள் முதன் முதலில் தம் ஆஸ்தியை எடுப்பதற்காக வருவார்கள். இப்போது ஆத்மா சரீரத்தை விட்டுச் சென்றது என வைத்துக் கொள்ளுங்கள். சொர்க்கத் திற்குச் சென்றார் என சொல்வார்கள். பிறகு அவரை நரகத்திற்கு வரவைப்பதன் அவசியம்தான் என்ன? கொஞ்சமும் புரிந்து கொள்வதில்லை. சாது சன்னியாசி முதலானவர்கள் இறந்தார்கள் என்றாலும் அவர்களுடைய திதியை அனுசரிக்கின்றனர். பிரசாதம் படைக்கின்றனர் (போக் வைக்கின்றனர்). ஜோதியில் ஜோதியாக ஐக்கியமாகி விட்டார் என சொல்லும் போது போக் ஏன் வைக்க வேண்டும்? திதியை ஏன் அனுசரிக்கின்றனர்? சரீரமும் அழிந்து விட்டது, ஆத்மாவும் சென்றுவிட்டது, பிறகு ஆத்மாவை அழைக்க வேண்டிய அவசியம் என்ன? ஜோதியில் ஐக்கியமாகி விட்டது, பிறகு எப்படி வர முடியும்? பலப் பல வழிகள் இருக்கின்றன. மனிதர்கள் மோட்சத்தை அடைகின்றனர், பிறகு வருவதே இல்லை என சொல்பவர்களும் உள்ளனர். மோட்சத்தை அடைந்து விட்டார் என்றால் இன்னும் குஷியாக கொண்டாட வேண்டும், நடிப்பதிலிருந்தே விடுபட்டு விட்டார். பிறகு அவரை நினைவே செய்ய வேண்டிய அவசியமில்லை. இதையும் நீங்கள் அறிவீர்கள். அனைத்து மனிதர்களும் ஒரு தந்தையை கண்டிப்பாக நினைவு செய்கின்றனர். அனைவரும் சகோதரன் – சகோதரன் என ஒப்புக் கொள்ளவும் செய்கின்றனர். ஆக, சகோதரர்களுக்கு தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைத்தே ஆக வேண்டும். அனைத்து ஆத்மாக் களின் சத்கதி வழங்கும் வள்ளல் ஒருவரே ஆவார். அனைத்து ஆத்மாக்களும் திரும்பிச் செல்ல வேண்டும். மனிதர்கள் மனிதர்களுக்கு எப்படி சத்கதி கொடுக்க முடியும்? ஆகையால் அனைவருக் கும் சத்கதி வழங்கும் வள்ளல் என ஒருவருடைய பெயரே புகழ் வாய்ந்ததாகும். அவர்தான் ஞானக்கடல், பதித பாவனர் ஆவார். அந்த தந்தை வந்து இராஜயோகம் கற்றுத்தருகிறார். அனைவரையும் இராவண இராஜ்யத்திலிருந்து விடுவிக்கிறார், இதனை எல்லைக்கப் பாற்பட்ட அமாவாசை என சொல்வோம். அரைக் கல்பம் எல்லைக்கப்பாற்பட்ட இரவு, பிறகு அரைக் கல்பம் எல்லைக்கப்பாற்பட்ட பகல் ஆகும். இது விளையாட்டாகும். தார்மீக மாநாடு நடத்துபவர்கள் அழைக்கும்போது – அமைதி எப்படி ஏற்படும் என கேட்கும்போது அங்கே புரிய வைக்க வேண்டும் – ஒரு தர்மம், ஒரு வழி சத்யுகத்தில்தான் இருக்கும். அதற்கு 5 ஆயிரம் வருடங்கள் ஆகின்றன. அங்கே சுகம் அமைதி எல்லாம் இருந்தது. மற்ற அனைத்து ஆத்மாக்களும் சாந்தி தாமத்தில் இருந்தனர். புதிய உலகத்தில் ஒரே தர்மம் இருந்தது. இப்பொழுது பழைய உலகத்தில் மரம் எவ்வளவு பெரிதாகி விடுகிறது. பல தர்மங்கள் இருக்கின்றன. இப்போது பல தர்மங்களின் வினாசம் மற்றும் ஒரு தர்மத்தின் ஸ்தாபனையை செய்வது என்பது தந்தையின் காரியமே ஆகும். இது என்னுடைய காரியமாகும் என சிவபாபா கூறுகிறார். நான் ஒவ்வொரு கல்பத்திலும் வந்து இந்த காரியத்தை செய்கிறேன். சத்யுகத்தின் இராஜ்யத்திற் காக இராஜயோகத்தை கண்டிப்பாக சங்கமயுகத்தில்தான் கற்பிப்பார். அனைத்து தூய்மை யற்றவர்களையும் தூய்மையாக்குகிறார். நான் பல பிறவிகளின் கடைசி பிறவியின் கடைசி காலத்தில் வருகிறேன் என சொல்கிறார். யார் 84 பிறவிகளை முழுமையாக எடுத்திருக்கிறாரோ அவருடைய ரதத்தில்தான் (சரீரத்தில்தான்) வந்து புரிய வைக்கிறேன். புதிய உலகம் இருப்பதே இல்லை. பழைய உலகத்தில்தான் வந்து புதிய உலகை உருவாக்குகிறேன். தூய்மையற்ற உலகை தூய்மையாக்குகிறேன். என்னுடைய பெயரே துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவர். சுகத்தில் யாரும் என்னை நினைப்பதில்லை, துக்கத்தில் என்னை நினைக்கின்றனர். கண்டிப்பாக சுகம் கிடைத்திருந்தது. நான் கற்பிப்பதற்காக வந்துள்ளேன் என தந்தை சொல்கிறார். இப்போது படிப்பது உங்களுடைய வேலையாகும். மனிதர்கள் அடர்ந்த காரிருளில் இருக்கின்றனர், நீங்களும் எதுவும் தெரியாதவர்களாக இருந்தீர்கள். இந்த சமயத்தில் முழு உலகின் படகு மூழ்கி விட்டுள்ளது, எவ்வளவு துக்கம் நிறைந்தவர்களாக உள்ளனர். நீங்கள் அனைவரின் படகை கரை சேர்க்கிறீர்கள், அனைவரும் சாந்தி தாமத்திற்குச் சென்று விடு வார்கள். இந்த விஷயங்கள் உங்கள் புத்தியில் உள்ளது, அதுவும் வரிசைக்கிரமமாக உள்ளது. யார் கலங்கரை விளக்கமாக ஆகியிருப்பார்களோ அவர்கள் மற்றவர்களுக்கும் வழி காட்டியபடி இருப்பார்கள். அவர்களுடைய வேலையே வழி காட்டுவதாகும். குழந்தைகளுக்கு தந்தை எப்படி படிப்பை சொல்லிக் கொடுக்கிறார் என்ற நிலையான குஷியில் இருக்க வேண்டும். இங்கே வந்து நிறைய பேர் புத்துணர்ச்சி அடைந்து செல்கின்றனர், வெளியில் போகும்போது போதையே காணாமல் போய்விடுகிறது. தந்தையிடமிருந்து முழுமையிலும் முழுமையான ஆஸ்தி எடுக்கக் கூடிய ஆசை இருக்க வேண்டும். ஒவ்வொரு காலடியிலும் தந்தையிடம் வழி கேட்டபடி இருக்க வேண்டும். முன்னர் தீர்த்தங்களுக்கு கால் நடையாக சென்று கொண்டிருந்தனர், மிகவும் எச்சரிக்கையுடன் சென்று கொண்டிருந்தனர். இந்த சமயத்திலோ இரயிலில் தான் செல்கின்றனர். இந்த சமயம் மாயையின் பகட்டு நிறைய உள்ளது. சத்யுகத்தில் பகட்டு இருந்தது பிறகு துவாபரத் திலிருந்து குறைந்து கொண்டே வந்து விட்டது. பிறகு இப்போது கடைசியில் ஆரம்பித்துள்ளது, இது மாயையின் பகட்டு எனப்படுகிறது. வாருங்கள் சொர்க்கத்திற்குச் செல்வோம் என்றால் எங்களுக்கு இங்கேயே அனைத்து சுகமும் உள்ளது என சொல்கின்றனர். மோட்டார் வாகனங்கள், விமானம் முதலான அனைத்தும் உள்ளன. எங்களுக்கு சொர்க்கம் இங்கேயே உள்ளது. செல்வங்கள், பொருட்கள், ஆபரணங்கள் முதலான அனைத்தும் உள்ளன. லட்சுமி நாராயணருக் கும் ஆபரணங்கள் உள்ளன அல்லவா. நாமும் அணியலாம். எவ்வளவுதான் புரிய வையுங்கள், பிறகும் கூட விஷம் (விகாரம்) தான் நினைவில் இருக்கிறது. விஷம் இல்லாமல் இருக்க முடிவ தில்லை. தந்தை சொல்கிறார் – நீங்கள் என் பேச்சை கேட்பதே இல்லை. தூய்மையடைய வில்லை என்றால் என்னை ஏன் பதிதபாவனா வாருங்கள் என அழைக்க வேண்டும்? இப்போது நான் சொல்வதை கேட்கா விட்டால் தர்மராஜாவின் மூலம் தண்டனை கொடுக்க வைப்பேன் என்பதை நினைவில் வையுங்கள். பயமுறுத்தவும் செய்கிறார். பல குழந்தைகள் விகாரத்தில் சென்று கொண்டேதான் இருக்கின்றனர், பயமே கிடையாது. அவர்கள் எவ்வளவு தண்டனை அடைவார்கள், கேட்கவே வேண்டாம். பதவியும் கீழானதாய் ஆகிவிடும். முயற்சி செய்து உயர் பதவியை அடைய வேண்டும் அல்லவா. கெட்ட தொடர்பில் ஒரேயடியாக தமது பதவியை இழந்து விடும்படியாக விழுந்து விடுகின்றனர். இப்போது வைரச்சுரங்கங்கள் முதலானவை காலியாகிக் கொண்டிருக் கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள், மீண்டும் நிரம்பி விடும். தங்க வைரங்களின் மலைகள் இருக்கும். வைரங்களை தோண்டி எடுக்கும்போது முதலில் கல்லாக இருக்கும், பின்னர் சுத்தம் செய்து வைரமாக ஆக்குவார்கள். உங்களையும் ஞானம் எனும் மெருகூட்டும் (பாலிஷ் செய்யும்) இயந்திரத்தில் ஏற்றும்போது நீங்கள் எவ்வளவு நன்றாக ஆகி விடுகிறீர்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. இப்போது இது இறுதிக்காலம் என்பதால் எந்த பாவ கர்மமும் செய்யக் கூடாது. தனது நன்மைக்கான முயற்சி செய்ய வேண்டும். மிகவும் இனிமையானவர்களாக ஆக வேண்டும். கோபத்தை விட்டு விட வேண்டும்.
2. தந்தையிடமிருந்து முழுமையிலும் முழுமையான ஆஸ்தி எடுப்பதற்கான ஆசை வைக்க வேண்டும். ஒவ்வொரு காலடியிலும் தந்தையிடம் வழி கேட்டு நடக்க வேண்டும். தந்தைக்குச் சமமாக துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுக்க வேண்டும்.
வரதானம்:-
பாஸ் வித் ஆனர் என்றால் மனதிலும் கூட சங்கல்பங்களால் தண்டனை பெறக்கூடாது. தர்மரா ஜரின் தண்டனை களின் விசயமோ பின்னால் வரப்போகிறது. ஆனால் தன்னுடைய எண்ணங் களில் குழப்பமடைதல் அல்லது தண்டனைகளில் இருந்தும் கூட விடுபட்டு இருப்பது என்பது பாஸ் வித் ஆனர் ஆகக்கூடியவர்களின் அடையாளமாகும். சொல், செயல், சம்மந்தம்-தொடர்பின் விசயமோ மேலெழுந்தவாரியானது. ஆனால் சங்கல்பங்களிலும் கூட குழப்பம் அடையக் கூடாது. அந்த மாதிரி உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது பாஸ் வித் ஆனர் ஆவீர்கள்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!