03 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

January 2, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே, பிரம்மாவிலிருந்து விஷ்ணுவாக, விஷ்ணுவிலிருந்து பிரம்மாவாக எப்படி ஆகின்றார், இருவரும், ஒருவர் மற்றவருடைய நாபியிலிருந்து எப்பொழுது வெளிப்படுகிறார்கள், இந்த இரகசியத்தை நிரூபித்து புரிய வையுங்கள்.

கேள்வி: -

எந்த ஒரு இரகசியமான (குப்தமான) விசயத்தை கூர்மையான புத்தி உள்ள குழந்தை களே புரிந்து கொள்ள முடியும்?

பதில்:-

நம் அனைவருடைய பெரிய தாய், இந்த பிரம்மா ஆவார். நாம் அவருடைய வாய்வழி வம்சத்தினர் (முகவம்சாவளி) ஆவோம். இது மிகவும் இரகசியமான விசயம் ஆகும். சரஸ்வதி பிரம்மாவின் மகள் ஆவார். அவர் அனைவரையும் விட புத்திசாலியானவர். ஞானத்தின் (கல்வி) தேவி ஆவார். தந்தை ஞானக் கலசத்தை தாய்மார்கள் மீது வைத்திருக்கின்றார். தாயின் தாலாட்டு புகழ் வாய்ந்தது ஆகும். இவற்றை உலகில் சாந்தி எவ்வாறு ஏற்பட முடியும் என்பதை அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

கள்ளம் கபடமற்றவர் தனிப்பட்டவர்….

ஓம்சாந்தி. கெட்டுப் போனதை சீர்திருத்துபவர் என்று அவசியம் பகவானைத் தான் சொல்ல முடியுமே தவிர சங்கரரை அல்ல. கள்ளம் கபடமற்றவர் என்றும் கூட சிவனைத் தான் சொல்ல முடியும், சங்கரரை அல்ல. படகோட்டி என்றும் கூட சிவனைத்தான் சொல்ல முடியும், சங்கரரையோ, விஷ்ணுவையோ அல்ல. படகோட்டி அல்லது இறை தந்தை என்று கூறும் பொழுது புத்தியானது நிராகாரமானவர் பக்கம் சென்றுவிடுகிறது. மும்மூர்த்தி சித்திரம் புகழ் வாய்ந்தது ஆகும். அரசாங்கத்தின் தேசியச் சின்னம் மிருகங்களுடைய சித்திரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் சத்தியமே வெல்லும் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளின் அர்த்தம் மிருகங்களுக்குப் பொருந்தாது. அரசாங்கத்தினுடைய தேசிய சின்னத் தின் முத்திரை உள்ளது. பெரிய பெரிய இராஜ்யங்கள் என்னவெல்லாம் உள்ளனவோ அவை அனைத்திற்கும் தனிபட்ட தேசியச் சின்னம் உள்ளன. பாரதத்தில் மும்மூர்த்தி புகழ்வாய்ந்தது ஆகும். பிரம்மா, விஷ்ணு, சங்கரர், இதில் சிவனது சித்திரம் மறைக்கப்பட்டுவிட்டது. ஏனெனில், அவரைப் பற்றிய ஞானமே இல்லை. இறை தந்தை என்று கூறுவதன் மூலம் புத்தி நிராகாரமானவர் பக்கம் சென்றுவிடும். பிரம்மா, விஷ்ணு, சங்கரரை இறை தந்தை என்று கூற முடியாது. ஆத்மாக்களுடையவரே இறை தந்தை ஆவார். அவர் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார். இறைவனை உயர்ந்ததிலும் உயர்ந்தவராக காண்பிக்கிறார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் என்று பிரம்மாவையோ, விஷ்ணுவையோ, சங்கரரையோ சொல்வதில்லை .உயர்ந்த திலும் உயர்ந்தவர் ஒரு பகவான் ஆவார். இதை அனைவரும் அறிந்துள்ளனர். சீக்கியர்கள் கூட அவரது மகிமையைப் பாடுகின்றனர். மனிதரை தேவதை ஆக்கவல்லவர் பரமபிதா பரமாத்மாவைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்ற இந்த ஞானம் குருநானக்கிடம் கூட இருந்தது. சத்யுகத்திலோ அவசியம் தேவதைகள் தான் உள்ளனர். எனினும், தேவதைகளை படைக்கக்கூடியவர் பரமாத்மா தான் ஆவார். அவர் தேவதைகளை எவ்வாறு படைக்கின்றார் என்பதை அறிந்திருக்கவில்லை, அழுக்குத் துணியை துவைக்கின்றார் என்று மகிமை பாடு கிறார்கள். எந்த மனிதர்கள் அழுக்குத் துணி போல் இருந்தார்களோ அவர்களை தேவதை ஆக்கினார். ஆனால் எப்பொழுது ஆக்கினார் என்பது எழுதப்படவில்லை. இந்த சமயத்தில் பரமாத்மா மனிதரை தேவதை ஆக்கிக் கொண்டிருக்கின்றார் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவசியம் துர்கதியிலிருந்து சத்கதி அடையச் செய்திருப்பார், கீழான நிலை யிலிருப்பவரை (பிரஷ்டாச்சாரியை) உயர்ந்தவராக (சிரேஷ்டாச்சாரி) ஆக்கியிருப்பார். இந்த பாரதத்தில் தான் உயர்ந்த தேவதைகள் இருந்தனர் என்று நீங்கள் புரிய வைக்க முடியும். குருநானக் வந்திருந்த பொழுது, உலகம் கீழான நிலையில் இருந்தது அல்லவா, ஆகையினாலேயே அவ்வாறு பாடினார். இலட்சுமி, நாராயணர் போன்றவர்களுடைய சித்திரங்கள் உள்ளன அல்லவா, அவர்களுடன் தான் இவர்களுடைய போட்டி உள்ளது. குரு கோவிந்த சிங்கின் பிறப்பை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். அவர் சீக்கிய தர்மத்தின் படைப்பாளர் ஆவார். பகவான் நிராகாரமானவர், அகங்காரமற்றவர் (நிர்அகங்காரி) என்று அவரே கூறுகின்றார். அவர் வந்து மனிதரை, தூய்மை அற்றவர்களை தூய்மையான தேவதை ஆக்குகின்றார். ஸ்ரீகிருஷ்ணர் மனிதரை தேவதை ஆக்க இயலாது. நான் உங்களுக்கு எளிய இராஜயோகத்தைக் கற்பித்து உயர்ந்த மகாராஜா மகாராணி ஆக்குகின்றேன் என்று கீதையிலும் உள்ளது. பதீத பாவனர் (தூய்மைபடுத்துபவர்) என்று இறை தந்தையைத்தான் சொல்ல முடியும். அவர் அவசியம் கீழான நிலையில் உள்ள உலகில் தான் வருவார். வந்து தூய்மை ஆக்குங்கள் என்று அவரை அழைக்கின்றனர். உயர்ந்தவர்களாக (சிரேஷ்டாச்சாரிகளாக) ஆக்கக் கூடியவர் ஒரே ஒரு நிராகாரமான தந்தை, உயர்ந்ததிலும் உயர்ந்த இறைவன் மட்டுமே,. பிறகு, பிரம்மா, விஷ்ணு, சங்கரர் பரமபிதா பரமாத்மாவின் படைப்பு ஆவார்கள். அவரது (பரமாத்மாவின்) சித்திரமோ இல்லை. விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா வெளிப்பட்டார், பிறகு, பிரம்மாவின் நாபியிலிருந்து விஷ்ணு எவ்வாறு வெளிப்படுவார் என்பதை இப்பொழுது தந்தை புரிய வைக்கின்றார். ஏனெனில், பிரம்மாதான் விஷ்ணு. விஷ்ணுதான் பிரம்மா ஆகின்றார். பிரம்மா மூலம் ஸ்தாபனை நடைபெறுகிறது. பிறகு, அதே பிரம்மா, சரஸ்வதி அடுத்த பிறவியில் விஷ்ணுவின் இரண்டு ரூபமான இலட்சுமி, நாராயணர் ஆகி பாலனை செய்கின்றார்கள். எனவே, பிரம்மா, சரஸ்வதியே இலட்சுமி, நாராயணர் ஆவார்கள். நாங்கள் விஷ்ணுவின் இரண்டு ரூபமான இலட்சுமி, நாராயணர் ஆகின்றோம் என்று பிரம்மா கூறுவார். பின்னர், இலட்சுமி, நாராயணர் நாங்கள் தான் பிரம்மா, சரஸ்வதி என்று கூறுவார்கள். ஒருவர் மற்றவருடைய நாபியிலிருந்து வெளிப்படுட்டிருக்கின்றனர் அல்லவா! நாமே தேவதை, பின்னர் சத்திரியர், வைஷ்ணவர், சூத்திரர் ஆகிறோம். இது மிகவும் புரிந்து கொள்வதற்கான விசயங்கள் ஆகும். எந்த பிரம்மாவின் உடலில் நான் பிரவேசம் செய்திருக்கிறேனோ அவருடைய முழுமையான 84 பிறவிகள் முடிந்து விட்டன என்று பாபா புரிய வைத்திருக்கிறார். மற்றபடி, எந்தவிதமான ரதம் போன்ற விசயம் கிடையாது. அது அனைத்தும் பொய் ஆகும். இந்த சங்கமயுக நேரத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. மனிதர் களை காரிருளில் (அஞ்ஞானத்தில்) மூழ்கடித்து விட்டார்கள். கலியுகம் இத்தனை இலட்சக்கணக்கான வருடங்களின் ஆயுளைக் கொண்டது. சத்யுகத்தின் ஆயுள் இவ்வளவு. இத்தகைய விசயங்களைச் சொல்லி காரிருளில் மூழ்கடித்து விட்டார்கள். தந்தை கூறுகின்றார் லி யார் என்னை அறிந்திருக்கிறார்களோ, நான் அந்தக் குழந்தைகளுக்கு முன்னால் வருகிறேன். பிறரோ என்னை அறியவே இல்லை. இவர் யார் என்று கூட அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஏதாவதொரு பெரிய சபைக்குச் சென்றால் அவர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள். உங்களில் கூட புரிந்து கொள்வதற்கு கஷ்டப்படு கிறார்கள். அடிக்கடி மறந்துவிடுகிறார்கள். இவரோ உயர்ந்ததிலும் உயர்ந்த அதிகாரி ஆவார். போப்பிற்கு பாருங்கள் எவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள்! போப் என்பவர் யார்? அவர் கிறிஸ்துவ தர்மத்தைச் சேர்ந்தவர் ஆவார். இது கடைசி பிறவி ஆகும். கிறிஸ்துவின் சமயத் திலிருந்து மறுபிறவி எடுத்து இப்பொழுது தமோபிரதான நிலையில் உள்ளார். அனைவரும் தூய்மை யற்றவர்களே. ஒருவருக்கு ஒருவர் துக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது கூட உருவான உருவாக்கப்பட்ட விளையாட்டு என்று தந்தை கூறுகின்றார். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் நிராகாரமான இறைவன், பின்னர் பிரம்மா, விஷ்ணு, சங்கரர். பிரம்மா மூலம் ஸ்தாபனை நடைபெறுகிறது. யார் மூலம் ஸ்தாபனை ஆகிறதோ அவர் மூலமே பாலனையும் (வளர்ப்பு, பராமரிப்பு) நடைபெறும். எனவே, இந்த பிரம்மா, சரஸ்வதியே பின்னர் இலட்சுமி, நாராயணர் ஆகின்றனர். இலட்சுமி, நாராயணரே இப்பொழுது பிரம்மா, சரஸ்வதி ஆகியிருக் கிறார்கள். இவர்கள் பிரஜாபிதாவின் வாய்வழி வம்சத்தினர் (முகவம்சாவளி) ஆவார்கள். கிருஷ்ணரை பிரஜாபிதா என்று சொல்வதில்லை. இவருடைய பிரம்மாவின் பெயரே பிரஜாபிதா ஆகும். பிரம்மா மூலம் அவசியம் பிராமணர்கள் வேண்டும். தந்தை கூறுகின்றார். பிரம்மாவை தத்தெடுக்கின்றேன். யார் முழுமையான 84 பிறவிகளை அனுபவித்து இப்பொழுது கடைசி பிறவியில் உள்ளாரோ, அவரையே நான் பிரம்மா ஆக்க வேண்டும். பிரம்மா ஒருவர் தான் இருப்பார் அல்லவா! இவர் தனது பிறவிகளைப் பற்றி அறியவில்லை. எனவே, பிரம்மாவிற்கு நான் (சிவபாபா) வந்து அமர்ந்து புரிய வைக்கும் பொழுது அவசியம் பிராமணர்களும் இருப்பார்கள். பிராமணர்கள் பிரம்மாவின் வாய்வழி வம்சத்தினர் ஆவார்கள்.

இவர்கள் அனைவரும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், குமாரர்கள் குமாரிகள் ஆவார்கள். பிரஜாபிதாவிற்கு அவசியம் வாய்வழி வம்சத்தினர் இருப்பார்கள். இவை மிகவும் புரிந்து கொள்வதற்கான விசயங்கள் ஆகும். நான் அனேகப் பிறவிகளின் இறுதியில் வரவேண்டியதாக உள்ளது என்று அவரே புரிய வைக்கின்றார். சத்யுகத்தில் முதன்முதலில் இந்த இலட்சமி, நாராயணர் இருந்தார்கள். அவசியம் அவர்கள் தான் 84 பிறவிகள் எடுத்திருப்பார்கள். மற்றவர் கள் அவசியம் குறைவாகவே எடுத்திருப்பார்கள். இந்த பிரம்மா தான் பின்னர் விஷ்ணு ஜோடி (யுகல்) ஆவார்கள், இவை எவ்வளவு புரிந்து கொள்வதற்கான விசயங்கள்! கிருஷ்ணர் இந்த ஞானத்தை அளிக்க முடியாது என்ற நம்பிக்கை முதன் முதலில் வேண்டும். நல்லது. பின்னர் தாமே பூஜைக் குரியவர், தாமே பூஜாரி என்று பாடுகின்றனர். பக்தி மார்க்கத்தில் பூஜாரியாக இருக்கின்றனர். ஞான மார்க்கத்தில் பூஜைக்குரியவராக இருக்கின்றனர். விஷ்ணுவின் இரண்டு ரூபமும் பூஜைக்குரியவர்களாக இருந்தார்கள். பின்னர் பிரம்மா தான் பூஜாரி ஆகி விஷ்ணுவின் பூஜை செய்தார். நான் விஷ்ணுவின் பூஜாரியாக இருந்தேன், இப்பொழுது நானே பூஜைக்குரிய விஷ்ணு ஆகிக் கொண்டிருக்கின்றேன், தத்தத்வம் என்று கூறுகின்றார். இதை ஆழத்திலும் ஆழமான விசயம் என்று சொல்லப்படுகின்றது. பிரம்மா எங்கிருந்து வந்தார்? விஷ்ணு எங்கு சென்றார்? இதை நீங்கள் தான் அறிவீர்கள். விஷ்ணுவின் இரண்டு ரூபங்கள் இலட்சுமி, நாராயணர் 84 பிறவிகளை முடித்து இறுதியில் தூய்மை இழந்தவர்களாக ஆக வேண்டும். இராஜ வம்சமே (டைனாஸ்டி) தூய்மையற்றதாகும் பொழுதே நான் வந்து ஸ்தாபனை செய்வேன் மற்றும் பிற தர்மங்கள் அனைத்தையும் முடித்துவிடுவேன். மீண்டும் எளிய இராஜ யோகத்தைக் கற்பித்து உயர்ந்த (சிரேஷ்டாச்சாரி) தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்து, பிற கீழான (பிரஷ்டாச்சாரி) தர்மங்கள் அனைத்தையும் வினாசம் செய்விக்கின்றேன். இராம இராஜ்யத்தில் வேறு எந்த தர்மமும் இருக்காது. இப்பொழுது அனைத்து தர்மங்களும் உள்ளன. பாரதத்தின் உண்மையான தர்மம் இல்லை, அது மீண்டும் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. சித்திரங்களும் உள்ளன. மும்மூர்த்திகளுக்கு மேலே சிவனும் இருக்கின்றார். பிரம்மாலிசரஸ்வதியே இலட்சுமி நாராயணர், அவர்களே இராதை கிருஷ்ணராக இருந்தார்கள். இராதை யின் இராஜ்யம் வேறு, கிருஷ்ணரின் இராஜ்யம் வேறு. ஞான வீணை இராதையிடம் கிடையாது. சரஸ்வதி ஞானத்தின் மூலம் எதிர்காலத்தில் இராதை ஆகின்றார்கள். சரஸ்வதியை கல்வியின் (ஞான) தேவி என்று கூறுகின்றார்கள். அவர்களுக்கு அவசியம் தந்தை மூலம் ஞானம் கிடைத்திருக்கும். சரஸ்வதி பிரம்மாவின் மகள் ஆவார். பிரஜைகளின் பிதா பிரம்மா என்றால் ஜெகதம்பாவும் வேண்டும். உண்மையில் இது இரகசியமான (குப்தமான) விசயம் ஆகும். பெரிய தாய், இந்த பிரம்மா ஆவார். இவர் மூலம் தாய்மார்களுக்கு ஞானம் அளிக்கின்றார். பெரிய மகள் ஜெகதம்பா என்று பாடப்படுகிறது. இல்லை யெனில், பிரம்மா வாய் மூலம் தத்தெடுக்கப் படுகிறீர்கள் என்றால் இவர் தாய் ஆகிவிட்டார். புத்திசாலியிலும் புத்திசாலி பிரம்மாவின் மகள் சரஸ்வதி ஆவார். அவர் எங்கிருந்து வந்தார்? பிரம்மாவிற்கு மனைவி கிடையாது. அவரே பிரஜைகளின் பிதா ஆவார். எனவே, அவர்கள் வாய் வழி வம்சத்தவர் ஆவார்கள். இந்த நாடகம் கூட (முதலும் முடிவுமில்லாதது) அனாதியானது, உருவாக்கப்பட்டது. எனவே, ஞானத்தின் தேவி சரஸ்வதி ஆவார். இப்பொழுது தார்மீக மாநாடு (தங்ப்ண்ஞ்ண்ர்ன்ள் ஈர்ய்ச்ங்ழ்ங்ய்ஸ்ரீங்) நடைபெறுகிறது என்றால் அதற்கு நிராகாரமான சிவபாபா செல்ல முடியாது. பிரம்மாவையும் கூட அமரவைக்க முடியாது. தாய்க்கே மகிமை உள்ளது. அனைத்து தர்மத்தைச் சேர்ந்தவர் களுடைய தலைவர் மாதாவாக (பெண்) இருக்க வேண்டும். அனைவருடைய தாய் ஜெகதம்பா அமர்ந்து தாலாட்டு (ஞானம்) பாடவேண்டும். தாய் மூலம் குழந்தைகள் பிறக்கின்றனர். ஜெகதம்பா அனைவருடைய தாய் ஆவார். எனவே, அனைவரும் அவருக்கு முன் தலை வணங்க வேண்டும். இந்த கீழான உலகம் உயர்ந்ததாக எவ்வாறு ஆகும்? மற்றும் இந்த பாரதத்தில் சாந்தி எவ்வாறு ஸ்தபானை ஆகும் என்பதை தாய் தான் புரிய வைக்க முடியும். இராவண இராஜ்யத்தில் சாந்தி இருக்க முடியாது. சாந்தி எங்கு இருந்து கிடைக்கிறது என்பதை இந்த தாய் தான் புரிய வைக்கமுடியும். சாந்திதாமம் நிர்வாண (அசரீரி) தாமம் ஆகும். இது துக்கதாமம் ஆகும். சத்யுகம் சுக தாமம் ஆகும். சத்யுகத்தில் ஒரு இராஜ்யம் இருந்தது. சுகம், சாந்தி, தூய்மை அனைத்தும் இருந்தது. இப்பொழுது இல்லை. எனவே அவசியம் நாடகம் முடிவடையும். மரத்தினுடைய ஆயுளும் முடிந்துவிட்டது. தேவதைகளுடைய 84 பிறவிகளும் முடிவடைந்துவிட்டன. 84 லட்ச பிறவிகள் இருக்க முடியாது. இஸ்லாமியர், பௌத்த தர்மத் தினர் வந்து இத்தனை வருடங்கள் ஆகிவிட்டன என்றால் பின்னர் 84 லட்ச பிறவிகள் எவ்வாறு இருக்கும்? குழந்தைப்பருவம், இளமைப்பருவம், வயோதிகப்பருவம் அடைவதற்கு சமயம் ஆகின்றது. 84 லட்ச பிறவிகள் எடுத்தால் பின்னர் கல்பம் மிக நீண்டதாக ஆகிவிடும். உங்களுக்கு பரமபிதா பரமாத்மாவுடன் என்ன சம்மந்தம் உள்ளது என்பதனை இந்த தாய் புரியவைப்பார்கள். அவரோ தந்தை, படைப்பாளர் ஆவார் அல்லவா! முதலில் பிரம்மா, விஷ்ணு, சங்கரரைப் படைத்திருப்பார். பின்னர், பிரம்மா மூலம் மனித சிருஷ்டியைப் படைக்கின்றார். ஒரு புது உலகத்தைப் படைக்கின்றார் என்பது அல்ல. ஒருவேளை அவ்வாறு புதிய படைப்பானால் பின்னர், பதீத பாவனரே வாருங்கள் என்று மனிதர்கள் அழைக்கமாட்டார்கள். இந்த சமயம் முழு உலகமும் தூய்மை இல்லாமல் உள்ளது. அனைவரும் துர்கதியை அடைந்துவிட்டனர். ஓ! இறை தந்தையே! கருணை காட்டுங்கள், எங்களை இந்த மாயாவி உலகிருந்து விடுவியுங்கள் என்று நினைவு செய்து கொண்டே இருக்கிறார்கள். பின்னர், அவர் எவ்வாறு துக்கம் கொடுப்பார்? துக்கம் கொடுக்கக் கூடியவர் அவசியம் வேறு ஒருவராகத்தான் இருப்பார். சத்யுகத்தில் எப்பொழுது ஒரு தர்மம் இருந்ததோ அப்பொழுது மற்ற அனைத்து தர்மங்களின் ஆத்மாக்கள் நிர்வாண தாமத்தில் இருந்தனர். இப்பொழுதோ அனைத்து ஆத்மாக்களும் இங்கே இருக்கிறார் கள். எனவே, அவசியம் தந்தை வந்து ஒரு தர்மத்தை ஸ்தாபனை செய்ய வேண்டும். பிரம்மா மூலம் ஸ்தாபனை நடைபெறுகிறது. பின்னர், அதே பிரம்மா வி,ஷ்ணு ஆகின்றார். பிறகு, விஷ்ணுவினுடைய நாபியிலிருந்து பிரம்மா வெளிப்படுகிறார். அவர் மூலம் ஞானம் அளிக்கின்றேன், பின்னர், அவர் தேவதை ஆகின்றார். இராஜயோகம் கற்கின்றார், மற்றபடி உலகத்தினர் உருவாக்கியுள்ள அநேக சித்திரங்கள் அனைத்தும் கட்டுக்கதைகள் ஆகும். கீதைத் தாயின் பகவான் யார்? என்பதே முக்கியமான விசயம் ஆகும். விஷ்ணுவிற்கு பரமபிதா பரமாத்மா ஜென்மம் அளித்கின்றார் என்பதைப் புரியவைக்க வேண்டும். பிரம்மாவிற்கும் ஜென்மம் கொடுப்பார் அல்லவா! அந்த தேவதைகளோ சத்யுகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். பிரம்மா எங்குள்ளவர்? அவசியம் கலியுகத்தைச் சேர்ந்தவராக இருப்பார். அனேகப் பிறவிகளின் கடைசி பிறவி அவசியம் தேவதைகளுடையதாகத் தான் இருக்கும். உயர்ந்தவர்களாக இருந்தவர்கள் இப்பொழுது கீழான நிலையில் இருக்கின்றார்கள். இரண்டு யுகங்களில் சூரிய வம்சத்தினர், சந்திரவம்சத்தினரின் இராஜ்யம் நடந்தது. 4 பாகங்கள் உள்ளன. இலட்சக்கணக்கான வருடங்களுக்கான விசயம் கிடையாது. கிறிஸ்து பிறப்பதற்கு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாரதம் சொர்க்கமாக இருந்தது என்று கூறுகின்றனர். இவை அனைத்தையும் நல்ல முறையில் புரிய வைக்கவேண்டும். இவர்கள் அனைவரும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் ஆவார்கள் என்று தந்தை கூறுகின்றார். இப்பொழுது வினாசம் எதிரில் நிற்கின்றது. பிரஷ்டாச்சாரி பாரதத்தை எந்த மனிதரும் சிரேஷ்டாச்சாரி ஆக்க இயலாது. எப்பொழுது தேவதைகள் இல்லற மார்க்கத்தில் (வாம மார்க்கத்தில்) செல்கின்றார்களோ, அப்பொழுது இந்த சந்நியாசிகள் தூய்மை யின் பலத்தின் மூலம் பாரத்தை அழிவிலிருந்து காக்கின்றார்கள் என்று பாபா புரிய வைத்திருக்கின்றார். இந்த சமயம் அனைவருமே தூய்மை இழந்தவராகி விட்டனர். நதி கடலிலிருந்து உருவாகிறது. நதிகளை பதீத பாவனி என்று கூறி அதில் குளிக்கின்றார்கள். இப்பொழுது நதிகளோ அனைத்து இடங்களிலும் உள்ளன. நதி எவ்வாறு பதீத பாவனி ஆகமுடியும்? பதீத பாவனர் ஒரு பரமபிதா பரமாத்மா தான் ஆவார். இங்கோ எளிய இராஜயோகத்தின் மூலம் மனிதர்களை பிரஷ்டாச்சாரியிலிருந்து சிரேஷ்டாச்சாரியாக ஆக்குவதற்கு ஞான கங்கைகள் வேண்டும். நான் சர்வசக்திவான் என்று தந்தை கூறுகிறார், என்னிடம் யோகத்தை (நினைவை) ஈடுபடுத்துவதன் மூலம் தான் அனைத்து விகர்மங்களும் வினாசம் ஆகும், நல்லது!

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. தந்தை, அனைவரையும் விட பெரியதிலும் பெரிய உயர்ந்த அதிகாரி தந்தையே ஆவார். அவரை யதார்த்தமான (உண்மையான) ரூபத்தில் அறிந்து மரியாதை கொடுக்க வேண்டும். அவரது ஸ்ரீமத்படி முழுமையிலும் முழுமையாக நடக்கவேண்டும்.

2. தந்தை ஞானக் கலசத்தை தாய்மார்களுக்குக் கொடுத்துள்ளார். அவர்களை முன்னால் வைக்க வேண்டும்.

வரதானம்:-

டபுல் லைட் என்றாலே அனைத்தையும் பாபாவிடம் ஒப்படைத்து விடுதல். உடல் கூட தன்னுடையது அல்ல. இந்த உடல் சேவைக்காக அதாவது பாபா கொடுத்திருக்கிறார். உடல், மனம், பொருள் அனைத்தும் உன்னுடையது (பாபாவுடையது) என்பது உங்களுடைய வாக்குறுதி யாக இருக்கிறது. உடலே உங்களுடையது இல்லாத பொழுது மற்றவை என்ன இருக்க போகிறது. எனவே நான் தாமரை மலருக்குச் சமமாக விடுபட்ட வராகவும் அன்பானவராகவும் இருக்கிறேன் என்பதை சதா தாமரை மலரை உதாரணமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதுபோல விடுபட்டவராக இருக்கக்கூடியவர்களுக்கு பரமாத்மாவின் அன்பு அதிகார பூர்வமான உரிமை கிடைக்கிறது.

சுலோகன்:-

அன்பில் மூழ்குவதற்கான அனுபவம் செய்யுங்கள்.

உங்களுடைய கண்களிலும் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகள் மீது பாபா இருக்கிறார். எனவே உங்களின் சக்திசாலியான சொரூபத்தின் மூலம் சர்வசக்திவான் தான் தென்படுவார். தொடக்கத்தில் ஸ்தாபனையில் பிரம்மாவின் உருவத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் தான் ஒவ்வொருவருக்கும் தென்பட்டதை போன்று இப்பொழுது குழந்தைகளாகிய உங்களின் மூலம் சர்வசக்திவான் தென்பட வேண்டும்.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top