03 April 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

April 2, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

சங்கமயுகத்தில் ஆத்மாக்களோடு பரமாத்மாவின் விசித்திர சந்திப்பு

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று அநேக தடவை சந்திக்கக்கூடிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள் மீண்டும் வந்து சந்தித்துள்ளனர். பாபாவும் அதே அறிமுகத்துடன் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் மற்றும் குழந்தைகளும் அதே அநேக தடவை சந்திக்கும் ஸ்மிருதியுடன் சந்தித்துக் கொண்டிருக் கின்றனர். இது ஆத்மா மற்றும் பரமாத்மா தந்தையின் விசித்திர சந்திப்பு. முழுக்கல்பத்திலும் எந்த ஓர் ஆத்மாவும் இதே ஸ்மிருதியுடன் சந்திப் பதில்லை – அநேக தடவை சந்தித்த பிறகு மீண்டும் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு சமயமும் தர்ம பிதாக்கள் வந்துள்ளனர் மற்றும் தங்களைப் பின்பற்றுவோரை மேலிருந்து கீழே கொண்டு வந்துள்ளனர் என்றாலும் தர்ம பிதாக் களும் கூட இந்த ஸ்மிருதியோடு சந்திப்பதில்லை – அதாவது அநேகக் கல்பங்களாக சந்தித்த வர்கள் இப்போது மீண்டும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இந்தத் தெளிவான ஸ்மிருதியுடன் பரமாத்மாவைத் தவிர யாராலும் ஆத்மாக்களோடு சந்திக்க முடியாது. இந்தக் கல்பத்தில் முதல் தடவைதான் சந்திக்கிறார்கள் என்றாலும் சந்தித்த உடனே பழைய ஸ்மிருதி, பழைய அறிமுகம் – ஆத்மாக்களுக்குள் சம்ஸ்கார ரூபத்தில் ரிக்கார்டு நிரம்பியுள்ளது – அது இமர்ஜ் ஆகி விடு கிறது மற்றும் மனதிலிருந்து இந்த ஸ்மிருதியின் சப்தம் தான் வருகிறது – இவர் அதே என்னுடைய பாபா. குழந்தைகள் சொல்கின்றனர் நீங்கள் என்னுடையவர் என்று மற்றும் தந்தை சொல்கிறார், நீங்கள் என்னுடையவர்கள். எனது சங்கல்பம் எழுந்தது, அதே விநாடி அந்த சக்திசாலி ஸ்மிருதியுடன் சங்கல்பத்தின் மூலம் புதிய வாழ்க்கை மற்றும் புதிய இருப்பிடம் கிடைத்து விட்டது. மேலும் சதா காலத்திற்கும் என்னுடைய பாபா என்ற ஸ்மிருதி சொரூபத் தில் நிலைத்து விட்டீர்கள். ஸ்மிருதி சொரூபம் ஆகி விட்டீர்கள் என்றால் ஸ்மிருதிக்குப் பிரதிபலனாக சக்திசாலி சொரூபம் ஆகி விட்டீர்கள். சக்திசாலி சொரூபம் ஆகி விட்டீர்கள் இல்லையா? பலவீனமான சொரூபமோ இல்லை தானே? மற்றும் யார் எவ்வளவு ஸ்மிருதியில் இருக்கிறார்களோ, அவ்வளவு சக்திகளுக்கான அதிகாரத்தைத் தானாகவே அடைகின்றனர். எங்கே ஸ்மிருதி உள்ளதோ, அங்கே சமர்த்தி (சக்தி) இருக்கவே செய்கிறது. கொஞ்சம் மறதி இருந்தாலும் வீணாகி விடும். வீணான சங்கல்பங்கள் இருந்தாலும் சரி, பேச்சு இருந்தாலும் சரி, கர்மம் இருந்தாலும் சரி. ஆகவே பாப்தாதா குழந்தைகள் அனைவரையும் இதே திருஷ்டியில் பார்க்கிறார்: ஒவ்வொரு குழந்தையும் ஸ்மிருதி சொரூபத்தில் இருந்து சக்திசாலியாக உள்ளனர். இன்று வரையிலும் கூட தங்களின் ஜெபத்தை பக்தர்கள் மூலம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். தங்களின் ஸ்மிருதியில் மேரா பாபா என்பதைக் கொண்டு வந்தால் பக்த ஆத்மாக் களும் இதையே மந்திரமாகச் சொல்கின்றனர் – என்னுடைய இஷ்ட தேவ் அல்லது தேவி. எப்படி நீங்கள் மிக அன்பாக மனதார பாபாவை நினைவு செய்தீர்கள், அந்த அளவு பக்த ஆத்மாக்களும் இஷ்ட ஆத்மாக்களாகிய உங்களை மனதார அதிக அன்போடு நினைவு செய்கின்றனர். பிராமண ஆத்மாக்களாகிய உங்களிலும் கூட மனதின் அன்பு சம்பந்தத்தில் நினைவு செய்கின்றனர். மேலும் மற்றவர்கள் புத்தி மூலம் ஞானத்தின் ஆதாரத்தில் சம்பந்தத்தை அனுபவம் செய்வதற் காக அடிக்கடி முயற்சி செய்கின்றனர். எங்கே மனதின் அன்பு மற்றும் சம்பந்தம் மிகப் பிரிய மானதாக உள்ளதோ, அதாவது மிகவும் சமீபமாக உள்ளதோ, அங்கே நினைவை மறப்பது கடினம். எங்கே வெறுமனே ஞானத்தின் ஆதாரத்தில் சம்பந்தம் உள்ளதோ, ஆனால் மனதின் உடையாத அன்பு என்பது இல்லையோ, அங்கே நினைவு சில நேரம் சுலபமாகவும் சில நேரம் கடினமாகவும் இருக்கும். எப்படி சரீரத்தின் உள்ளே ஒவ்வொரு நரம்பிலும் இரத்தம் நிறைந்துள்ளதோ, அது போல் ஆத்மாவுக்குள் ஒவ்வொரு நொடியிலும் நினைவு நிரம்பியுள்ளது. இது தான் மனப்பூர்வமான அன்பு நிறைந்த நிரந்தர நினைவு எனச் சொல்வது. எப்படி பக்த ஆத்மாக்கள் பாபாவைப் பற்றிச் சொல்கின்றனர் – எங்கே பார்த்தாலும் நீயே நீ தான் அது போல் பாபாவின் சிநேகி சமான் ஆத்மாக்களை யார் பார்த்தாலும் அவர்கள் அனுபவம் செய்வார்கள் – இவர்களின் திருஷ்டியில், பேச்சில், கர்மத்தில் பரமாத்மா தந்தை தான் அனுபவமாகிறது. இதைத் தான் சிநேகி மற்றும் பாபாவுக்கு சமமான நிலை என்பது. ஆக, ஸ்மிருதி சொரூபமோ அனைவருமே தான். சம்பந்தமும் அனைவர்க்கும் உள்ளது. ஏனென்றால் அனைவருக்கும் முழு அதிகாரத்தின் சம்பந்தம் பாபா மற்றும் குழந்தை யினுடையது. அனைவருமே மேரா பாபா (என்னுடைய அப்பா) எனச் சொல்கின்றனர். என்னுடைய சித்தப்பா, என்னுடைய பெரியப்பா என்று யாரும் சொல்வதில்லை. அதிகாரத்தின் சம்பந்தம் இருப்பதால் சர்வ பிராப்திகளின் ஆஸ்திக்கு அதிகாரி நீங்கள். 50 வருடத்தினராக இருந்தாலும் சரி, ஆறு மாதத்தினராக இருந் தாலும் சரி. மேரா எனச் சொல்வதால் அதிகாரி யாகவோ ஆகியே விட்டீர்கள். ஆனால் வித்தியாசம் என்ன உள்ளது? பாபா அதிகாரத்தையோ அனைவருக்கும் ஒரே மாதிரி கொடுக் கிறார் – ஏனென்றால் அளவற்ற கஜானாவைத் தரும் வள்ளல். இரண்டரை லட்சம் மட்டு மென்ன, ஆனால் சர்வ ஆத்மாக்களும் கூட அதிகாரி ஆனாலும் அதை விடவும் அதிகமான அளவற்ற கஜானா பாபாவிடம் உள்ளது. ஆக, குறைவாக ஏன் கொடுக்க வேண்டும்? ஆக, அனைவருக்கும் ஒரே மாதிரி தான் கொடுக்கிறார். ஆனால் பெற்றுக் கொள்பவர்கள் வேறுபடு கின்றனர். சிலர் பிராப்திகளின் ஆஸ்தி அல்லது கஜானாவைத் தன்னுடைய கஜானாவாக ஆக்கிக் கொள்கின்றனர். அதாவது தனக்குள் நிறைத்துக் கொள் கின்றனர். அதனால் ஒவ்வொரு கஜானாவையும் பயன்படுத்தும் அனுபவத்தால் குஷி மற்றும் நஷாவில் உள்ளனர். சுத்த நஷா, தலை கீழானதில்லை. மேலும் இரண்டாவதாக, கஜானா கிடைத்துள்ளது என்ற குஷியில் உள்ளனர், இது என்னுடையது. ஆனால் வெறுமனே என்னுடையது என்று சொல்லிக் கொண்டு அதைக் காரியத்தில் ஈடுபடுத்துவதில்லை. எந்த ஒரு விலைமதிக்க முடியாத பொருளையும் வெறுமனே தன்னிடம் இருப்பில் சேமித்தாயிற்று. ஆனால் வெறுமனே சேமிப்பதிலும் மற்றும் அதைப் பயன்படுத்தும் அனுபவத்திலும் வேறுபாடு உள்ளது. எவ்வளவு காரியத்தில் ஈடுபடுத்து கிறீர்களோ, அவ்வளவு சக்தி அதிகரிக்கிறது. அவர்கள் சதா செய்வதில்லை, எப்போதாவது செய்கின்றனர். அதனால் சதா செய்பவர் களுக்கும் எப்போதாவது செய்பவர்களுக்கும் வேறுபாடு உள்ளது. காரியத்தில் ஈடுபடுத்துவதற்கான விதியைப் பயன்படுத்துவதில்லை. ஆக, கொடுக்கும் வள்ளல் வேறுபாட்டை ஏற்படுத்து வதில்லை. ஆனால் பெற்றுக் கொள்பவர் களுக்குள் வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது. நீங்கள் அனைவரும் யார்? காரியத்தில் ஈடுபடுத்துபவரா அல்லது வெறுமனே சேமிப்பைப் பார்த்துக் குஷி அடைபவரா? முதல் நம்பரில் வருபவரா அல்லது இரண்டாவது நம்பரில் வருபவரா?

பாப்தாதாவுக்கோ குஷி உள்ளது – அனைவரும் நம்பர் ஒன்னா அல்லது இச்சமயம் நம்பர் ஒன்னாக இருக்கிறீர்களா? பாப்தாதா எப்போதுமே சொல்கிறார், சதா குழந்தைகளின் வாயில் குலாப் ஜாமுன் இருக்கட்டும். சொன்னதைச் செய்கிறார்கள், அதாவது எப்போதுமே குலாப் ஜாமுன் வாயில் உள்ளது. உலகத்தவர் சொல்கின்றனர். வாயில் குலாப். ஆனால் குலாபினால் (ரோஜா) வாய் இனிப்பாவதில்லை. அதனால் குலாப் ஜாமுன் வாயில் இருக்குமானால் சதா இப்படியே புன்சிரித்துக் கொண்டே இருப்பீர்கள். நல்லது.

புதிது-புதிதாக வந்த அநேகர் மீண்டும் சந்திப்பதற்காக வந்து சேர்ந்திருக்கிறார்கள். யாரெல்லாம் இந்தக் கல்பத்தில் மீண்டும் சந்தித்துக்கொண்டிருக்கிறார்களோ, அந்தக் குழந்தைகளுக்காக பாப்தாதா விசேஷமாக அன்பின் வரதானங்களை அளிக்கிறார் – சதா தனது நெற்றியின் மீது பாபாவின் கையை அனுபவம் செய்து கொண்டே செல்லுங்கள். யாருடைய தலை மீது பாபா வின் கை உள்ளதோ, அவர்கள் சதா இந்த வரதானத்தின் அனுபவத்தால் அனைத்து விஷயங் களிலும் பாதுகாப்பாக உள்ளனர். இந்த வரதானத்தின் கை ஒவ்வொரு விஷயத்திலும் உங்களுக்குப் பாதுகாப்பிற்கான சாதனமாகும். அனைத்திலும் பெரியதிலும் பெரிய பாதுகாப்பு (செக்யுரிட்டி) இது தான்.

பாப்தாதா, டீச்சர்கள் அனைவரின் நிமித்தமாவதற்கான தைரியத்தைப் பார்த்துக் குஷியடை கிறார். தைரியம் வைத்து நிமித்தமாகவோ ஆகியே விடுகிறீர்கள் இல்லையா? டீச்சர் நிமித்தமாவது என்றால் எல்லையற்ற ஸ்டேஜ் மீது ஹீரோ பார்ட் நடிப்பதாகும். எப்படி எல்லைக்குட்பட்ட ஸ்டேஜ் மீது ஹீரோ பார்ட்தாரி ஆத்மாவின் பக்கம் அனைவரின் விசேஷ கவனம் உள்ளது. அது போல் எந்த ஆத்மாக்களுக்கு நிமித்தமாகிறீர்களோ, விசேஷமாக அவர்கள் மற்றும் பொதுவாக அனைத்து ஆத்மாக்களும் நிமித்தமாகியுள்ள டீச்சர்களாகிய உங்களை அதே பார்வையில் பார்க்கிறார்கள். அனைவர்க்கும் விசேஷ கவனம் உள்ளது இல்லையா? ஆக, டீச்சர்கள் தங்கள் மீதும் விசேஷ கவனம் வைக்க வேண்டும், ஏனென்றால் சேவையில் ஹீரோ பார்ட்தாரி ஆவது என்றால் ஹீரோ ஆவதாகும். ஆசிர்வாதங்கள் கூட டீச்சர்களுக்கு அதிகம் கிடைக்கின்றன. எவ்வளவு ஆசிர்வாதங்கள் கிடைக்கின்றனவோ, அவ்வளவு தங்களின் மீது கவனம் கொடுப்பது அவசியமாகும். இதுவும் டிராமாவின் அனுசாரம் விசேஷ பாக்கியமாகும். ஆக, கிடைத்துள்ள இந்த பாக்கியத்தை சதா அதிகரித்துக் கொண்டே செல்லுங்கள். நூறிலிருந்து ஆயிரம், ஆயிரத்திலிருந்து லட்சம், லட்சத்திலிருந்து பல லட்சம், பல லட்சத்திலிருந்து பல கோடி, சதா இந்த பாக்கியத்தை அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். அத்தகையவர் தாம் தகுதியுள்ள, முன்மாதிரியான டீச்சர். பாப்தாதா நிமித்தமாகி யுள்ள குழந்தைகளை அவசியம் நினைவு செய் கிறார் மற்றும் சதா அமிர்தவேளையில் ஆகா குழந்தை ஆகா – இந்த ஆசிர்வாதங்களைத் தருகிறார். சேவாதாரிகள் கேட்டீர்களா? டீச்சர்கள் என்றால் நம்பர் ஒன் சேவாதாரி. நல்லது.

நாலாபுறமுள்ள அநேக கல்பங்கள் விலகிய மற்றும் அன்பான சந்திப்பைக் கொண்டாடக் கூடிய, சதா கிடைத்துள்ள ஆஸ்திகளின் கஜானாக்களை ஒவ்வொரு சமயத்திற்கேற்றவாறு காரியத் தில் கொண்டுவரக் கூடிய, சதா மனதால் அதி சிநேகி மற்றும் பாப்-சமான் ஆகி தன் மூலமாக பாபாவை அனுபவம் செய்விக்கக் கூடிய, சதா ஸ்மிருதி சொரூபத்திலிருந்து பக்தர்கள் மூலமாக சக்தி சொரூபமாக ஆகக்கூடிய, சதா தனக்குக் கிடைத்துள்ள பாக்கியத்தைப் பகிர்ந்தளிக்கக் கூடிய, அதாவது அதிகரிக்கக் கூடிய – அத்தகைய மாஸ்டர் வள்ளல் சக்திசாலிக் குழந்தை களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.

இரட்டை வெளிநாட்டு சகோதர-சகோதரிகளுடன் குரூப்வாரியாக சந்திப்பு

1. அனைவரும் தங்களை மிக-மிக பாக்கியவான் எனப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? ஏனென்றால் ஒரு போதும் கனவில் கூட சங்கல்பம் இருந்திருக்காது – இது போல் சிரேஷ்ட ஆத்மா ஆவோம் என்று, ஆனால் சாகாரத்தில் ஆகி விட்டோம். பாருங்கள், எங்கெங்கோ இருந்து பாப்தாதா ரத்தினங்களைத் தேர்ந்தெடுத்து, ரத்தின மாலையை உருவாக்கியிருக்கிறார். பிராமணப் பரிவாரத்தின் மாலையில் கோக்கப் பட்டிருக்கிறீர்கள். ஒரு போதும் மாலை யிலிருந்து வெளியில் சென்று விடுவதில்லையே? எந்த ஒரு மாலைக்கும் விசேஷதா மற்றும் அழகு என்னவாக இருக்கும்? மணி மணியோடு சேர்ந்திருக்கும். இடையில் நூல் காணப் படுகிறது, மணி மணியோடு சேர்ந்திருக்கவில்லை என்றால் அழகாக இருக்காது. ஆக, நீங்கள் பிராமணப் பரிவாரத்தின் மாலையில் இருக்கிறீர்கள், அதாவது சர்வ பிராமண ஆத்மாக்களின் சமீபமாகி விட்டீர்கள். எப்படி பாபாவின் சமீபமாக இருக்கிறீர்களோ, அது போல் பாபாவோடு கூடவே பரிவாரத்திலும் கூட சமீபமாக இருக்கிறீர்கள். ஏனென்றால் இந்தப் பரிவாரமும் கூட இந்த அறிமுகத்தால் இப்போது கிடைக்கிறது. பரிவாரத்தில் மஜா வருகிறது இல்லையா? தந்தையின் நினைவினால் மட்டுமே மஜா வருகிறது என்பதில்லை. யோகம் பரிவாரத்துடன் வைக்கக் கூடாது. ஆனால் ஒருவர் மற்றவரின் சமீபத்தில் இருக்க வேண்டும். இவ்வளவு பெரிய இரண்டரை லட்சம் பரிவாரம் வேறெங்காவது இருக்குமா? (இப்போதோ 9-10 லட்சத்தையும் விடப் பெரிய பரிவாரம்) ஆக, பரிவாரம் நன்றாக உள்ளதா அல்லது பாபா மட்டும் நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறதா? யாருக்கு பாபா மட்டும் நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறதோ, அவர்கள் பரிவாரத்தில் வர முடியாது. பாப்தாதா பரிவாரத்தைப் பார்த்து சதா மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு பிராமண ஆத்மாவுக்காகவும் இதே சங்கல்பம் உள்ளது – அதாவது ஆகா பிராமண ஆத்மா ஆகா! பாருங்கள், பாபாவுக்கு குழந்தைகள் மீது அவ்வளவு அன்பு, அதனால் தான் வருகிறார் இல்லையா? இல்லையென்றால் மேலே அமர்ந்து கொண்டே சந்திக்கலாம். வெறுமனே மேலே அமர்ந்து கொண்டு சந்திப்பதில்லை. நீங்கள் வெளி நாட்டிலிருந்து வருகிறீர்கள் என்றால் பாப்தாதாவும் கூட வெளிநாட்டிலிருந்து வருகிறார். அனைத்திலும் தூரத்திலும் வெகுதூரத்திலிருந்து வருகிறார். ஆனால் ஒரு விநாடியில் வந்து விடுகிறார். நீங்கள் அனைவரும் கூட ஒரு விநாடியில் பறக்கும் கலையின் அனுபவம் செய்கிறீர்களா? ஒரு விநாடியில் பறக்க முடியுமா? அந்த அளவு டபுள் லைட்டாக இருக் கிறீர்களா? சங்கல்பம் செய்ததுமே வந்து சேர்ந்து விட வேண்டும். பரந்தாமம் என்றதுமே அங்கே சென்று சேர்ந்து விட வேண்டும். அந்த மாதிரி பயிற்சி உள்ளதா? எங்காவது நின்று விடுவ தில்லை தானே? எப்போதாவது மேகங்கள் எதுவும் தொந்தரவு செய்வதில்லையே? கவனமாகவும் தெளிவாகவும் இருக்கிறீர்கள். அப்படித் தானே?

இரட்டை வெளிநாட்டினருக்கு வந்ததுமே சென்டர் கிடைத்து விடுகிறது. மிக விரைவில் டீச்சர் ஆகி விடுகின்றனர். அதனால் சேவைக்கான ஆசிர்வாதங்களும் கிடைக்கின்றன. ஆசிர்வாதங் கள் கிடைப்பதற்கான விசேஷ லிஃப்ட் கிடைக்கிறது. அதோடு கூடவே வந்ததுமே அவ்வளவு பிஸியாகி விடுகிறீர்கள் – மற்ற விஷயங்களுக்காக நேரம் கிடைப்பதில்லை. அதனால் பிஸியாக இருப்பதற்காக பயப்பட வேண்டாம். இது நல்ல அறிகுறி. அநேகர் சொல்கின்றனர் இல்லையா – லௌகிக காரியமும் செய்ய வேண்டும், அலௌகிக காரியமும் செய்ய வேண்டும், பிறகு தனது சேவையும் செய்ய வேண்டும் – மிகவும் பிஸியாக இருக்க வேண்டி உள்ளது. ஆனால் இந்த பிஸியாக இருப்பது என்றால் மாயாஜீத் ஆகி விடுவதாகும். இது சரியாகத் தோன்றுகிறதா? அல்லது லௌகிக காரியம் செய்வது கடினமாகத் தோன்றுகிறதா? லௌகிக வேலை செய்வதால் சம்பாதிக்கும் வருமானத்தை எதில் ஈடுபடுத்துகிறீர்கள்? எப்படி நேரத்தைச் செலவிடுகிறீர்களோ, அது போல் பணத்தையும் செலவிடுகிறீர்கள். ஆக, உடல்-மனம்-செல்வம் மூன்றுமே ஈடுபடுகின்றன. பயனுள்ளதாகின்றது இல்லையா? அதனால் களைப்படைய வேண்டாம். சென்டர் திறக்கிறீர்கள் என்றால் எத்தனை ஆத்மாக்களுக்கு செய்தி கேட்டதுமே நன்மை ஏற்படுகிறது! ஆக, மனம் மற்றும் பணத்திற்கிடையில் தொடர்பு உள்ளது. எங்கே பணம் உள்ளதோ, அங்கே மனம் இருக்கும். எங்கே மனம் உள்ளதோ, அங்கே பணம் இருக்கும். பாப்தாதா இரட்டை வெளிநாட்டினர் அனைத்து விதத்திலும் பயனுள்ளதாக ஆக்கு வதில் பிஸியாக இருப்பதைப் பார்த்துக் குஷியடைகிறார். அனைவரும் கோல்டன் சான்ஸலராக இருக்கிறீர்கள் (பொன்னான வாய்ப்பை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்). சதா நினைவு வைக்க வேண்டும் – வெற்றி மூர்த்தியாக இருக்கிறேன் மற்றும் வெற்றி எனது கழுத்து மாலையாக உள்ளது. எப்படி நிச்சயம் இருக்குமோ, அது போல் பிரத்தியட்ச (உடனடி) பலன் கிடைக்கும். நல்லது.

2. இந்த இனிமையான அமைதி பிடித்திருக்கிறது இல்லையா? ஏனென்றால் ஆத்மாவின் ஒரிஜினல் சொரூபமே இனிய அமைதி தான். ஆக, எந்தச் சமயம் விரும்புகிறீர்களோ, அந்தச் சமயம் இந்த இனிமையான அமைதியின் ஸ்திதியை அனுபவம் செய்ய முடியுமா? ஏனெனில் ஆத்மா இப்போது இந்த பந்தனங்களில் இருந்து விடுபட்டு விட்டது. அதனால் எப்போது விரும்புகிறீர்களோ, அப்போது ஆத்மா தனது ஒரிஜினல் ஸ்திதியில் நிலைத்து விட வேண்டும். ஆக, பந்தன் முக்த் ஆகி விட்டீர்களா அல்லது இனிமேல் ஆக வேண்டுமா? இந்தத் தடவை மதுபனில் இரண்டு சொற்களை விட்டுவிட்டுச் செல்ல வேண்டும் – சம் திங் (சில விசயம்) மற்றும் சம் டைம் (சில நேரம்). இது பிடித்திருக்கிறதா? அனைவரும் விட்டு விடுவீர்களா? தைரியம் வைத்தால் உதவி கிடைத்து விடும். ஏனென்றால் இதையோ அறிவீர்கள் – 63 பிறவிகளாக அநேக பந்தனங்களில் இருந்தீர்கள் மற்றும் ஒரு பிறவி சுதந்திரமாவதற்காக உள்ளது. இதனுடைய பலனாகத் தான் அநேகப் பிறவிகள் ஜீவன் முக்தி அடைவீர்கள். ஆக, அஸ்திவாரத்தை இங்கே இட வேண்டும். அஸ்திவாரம் அந்த அளவு பக்கா வாக ஆகி விடுமானால் 21 பிறவிகளுக்கு இருக்கும். எவ்வளவு தன் மீது நிச்சயம் வைக்கிறீர்களோ, அவ்வளவு நஷா இருக்கும். பாபா மீதும் நிச்சயம், தன் மீதும் நிச்சயம் மற்றும் பிறகு டிராமா மீதும் நிச்சயம். மூன்று நிச்சயங்களிலும் பாஸ் ஆக வேண்டும். நல்லது – ஒவ்வொரு ரத்தினத் திற்கும் அதனதன் சிறப்பு உள்ளது. பாப்தாதா அனைவரின் சிறப்புகளையும் அறிவார். இன்னும் போனால் தனது விசேஷ குணத்தை இன்னும் காரியத்தில் ஈடுபடுத்துவீர்களானால் விசேஷதா அதிகரித்துக் கொண்டே போகும். உலகத்தில் செலவழிப்பதால் பணம் குறைகிறது. ஆனால் இங்கே எவ்வளவு பயன்படுத்துகிறீர்களோ, எவ்வளவு செலவழிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகரிக்கும். ஆக, இவ்வருடத்தின் இந்த வரதானத்தை நினைவு வைக்க வேண்டும் – நாம் விசேஷ ஆத்மா மற்றும் விசேஷதாவைக் காரியத்தில் ஈடுபடுத்தி அதை இன்னும் அதிகப் படுத்துவீர்கள். எப்படி இங்கே அருகில் அமர்வது நன்றாக உள்ளதோ, அது போல் அங்கேயும் சதா அருகில் இருக்க வேண்டும். பாப்தாதா சதா ஒவ்வொருவரையும் இதே உயர்ந்த பார்வையில் பார்க்கிறார் – அதாவது ஒவ்வொரு குழந்தையும் யோகியாகவும் உள்ளார் மற்றும் யோக்கியமாகவும் (தகுதியுள்ளவராக) உள்ளார். நல்லது.

வரதானம்:-

சுய மாற்றம் செய்வது தான் சுப சிந்தனையாளர் ஆவதாகும். தன்னை மறந்து மற்றவர்களின் மாற்றம் பற்றிக் கவலைப் பட்டீர்கள் என்றால் இது சுப சிந்தனை ஆகாது. முதலில் சுயம், பிறகு சுயத்தோடு கூட அனைவரும். சுயத்தை மாற்றம் செய்வதில்லை ஆனால் மற்றவர்களின் சுபசிந்தனையாளர் ஆகிறீர்கள் என்றால் வெற்றி கிடைக்காது. அதனால் தன்னை விதிமுறைப் படி நடத்திக் கொண்டு தன்னை மாற்றுங்கள். இதில் தான் நன்மை உள்ளது. வெளியிலிருந்து ஏதேனும் நன்மை காணப்படாமல் இருக்கலாம். ஆனால் உள்ளுக்குள் லேசான தன்மை மற்றும் குஷியின் அனுபவம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top