02 November 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

November 1, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! நீங்கள் மனம், சொல், செயலில் மிகச் சரியானவர்களாக ஆக வேண்டும், ஏனெனில் நீங்கள் தேவதைகளையும் விட உயர்ந்த பிராமணர்கள், குடுமி போன்றவர்கள்.

கேள்வி: -

குழந்தைகளும் கூட புரிந்து கொள்வதற்கு கஷ்டப்படக் கூடிய மிக குப்தமான மற்றும் ஆழமான விசயம் எது?

பதில்:-

சிவபாபாவிற்கும் பிரம்மா பாபாவிற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்வது என்பது மிக குப்தமான மற்றும் ஆழமான விசயமாகும். இதில் சில குழந்தைகள் குழப்பமடைந்து விடு கின்றனர். நான் அதிகாலையில் இந்த உடலின் மூலம் குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானம் கற்பிக்கிறேன், மற்றபடி நான் முழு நாளும் இவரது உடலில் இருக்கிறேன் என்பது கிடையாது என்ற ரகசியத்தை சுயம் தந்தை கூறுகின்றார்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

ஓம்சாந்தி. ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். குழந்தை கள் யார்? பிராமணர்கள். நாம் பிராமணர்கள், தேவதைகளாக ஆகக் கூடியவர்கள் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். வர்ணங்களையும் நினைவு செய்ய வேண்டியிருக்கிறது. இங்கு நீங்கள் உங்களுக்குள் பிராமணர்களாகவே இருக்கிறீர்கள். பிராமணர்களுக்கு எல்லையற்ற தந்தை கற்பிக் கின்றார். இந்த பிரம்மா கற்பிப்பது கிடையாது. சிவபாபா கற்பிக்கின்றார். பிரம்மாவின் மூலம் பிராமணர்களுக்குத் தான் கற்பிக்கின்றார். சூத்ரனிலிருந்து பிராமணன் ஆகாமல் தேவதையாக ஆக முடியாது. ஆஸ்தி சிவபாபாவிடமிருந்து தான் கிடைக்கிறது. சிவபாபா அனைவருக்கும் தந்தை யாக இருக்கின்றார். இந்த பிரம்மா பாட்டனார் என்று கூறப்படுகின்றார். லௌகீகத் தந்தை அனைவருக்கும் இருக்கவே செய்கின்றார். பரலௌகீகத் தந்தையை பக்தி மார்க்கத்தில் நினைவு செய்கின்றனர். இப்போது இவர் அலௌகீகத் தந்தை, இவரை யாரும் அறியவில்லை என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பிரம்மாவிற்கு கோவில் இருக்கலாம். இங்கும் பிரஜாபிதா ஆதிதேவனின் கோவில் இருக்கிறது. அவரை மகாவீர் என்றும் கூறுகின்றனர். சிலர் தில்வாலா என்றும் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் உள்ளத்தை கொள்ளை கொள்ளக் கூடியவர் சிவபாபா அன்றி பிரம்மா அல்ல. அனைத்து ஆத்மாக்களையும் சதா சுகமானவர்களாக ஆக்கக் கூடியவர், குஷி கொடுக்கக் கூடியவர் ஒரே ஒரு தந்தை ஆவார். இதையும் குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே அறிவீர்கள். உலகில் மனிதர்கள் எதையும் அறியவில்லை. பிராமணர்களாகிய நாம் தான் சிவபாபாவிடமிருந்து ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம். நீங்களும் அடிக்கடி மறந்து விடுகிறீர்கள். நினைவு என்பது மிகவும் எளிது. யோகா என்ற வார்த்தை சந்நியாசிகள் வைத்திருக்கின்றனர். நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்கள். யோகா என்பது பொதுவான வார்த்தை, இதை யோகா ஆசிரமம் என்றும் கூறுவது கிடையாது. குழந்தைகள் மற்றும் தந்தை அமர்ந்திருக்கின்றனர். குழந்தைகளின் கடமை எல்லையற்ற தந்தையை நினைவு செய்வதாகும். நாம் பிராமணர்கள், பிரம்மாவின் மூலம் தாத்தாவின் ஆஸ்தி அடைகிறோம். ஆகையால் எவ்வளவு முடியுமோ நினைவு செய்து கொண்டே இருங்கள் என்று சிவபாபா கூறுகின்றார். சித்திரத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் நான் பிராமணன், தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைகிறேன் என்ற நினைவு இருக்கும். பிராமணர்கள் எப்போதாவது தனது குலத்தை மறப்பார் களா என்ன? நீங்கள் சூத்ரர்களின் சகவாசத்தில் வருவதன் மூலம் பிராமண நிலையை மறந்து விடுகிறீர்கள். பிராமணர்கள் தேவதைகளை விட உயர்ந்தவர்கள், ஏனெனில் பிராமணர்களாகிய நீங்கள் ஞானம் நிறைந்தவர்களாக இருக்கிறீர்கள். பகவானை அனைத்தையும் அறிந்தவர் என்று கூறுகின்றனர் அல்லவா! அனைவரின் உள்ளத்திலும் என்ன இருக்கிறது? என்பதை அமர்ந்து பார்க் கிறார் என்பது இதன் பொருள் அல்ல! கிடையாது, அவரிடத்தில் சிருஷ்டியின் முதல், இடை, கடை யின் ஞானம் இருக்கிறது. அவர் விதை ரூபமாக இருக்கின்றார். விதையாக இருப்பவர் மரத்தின் முதல், இடை, கடையை அறிவார். ஆக இப்படிப்பட்ட தந்தையை மிக அதிகமாக நினைவு செய்ய வேண்டும். இவரது ஆத்மாவும் அந்த தந்தையை நினைவு செய்கிறது. இந்த பிரம்மாவும் கூட என்னை நினைவு செய்தால் தான் இந்த பதவி அடைவார் என்று தந்தை கூறுகின்றார். நீங்களும் நினைவு செய்தால் பதவி அடைவீர்கள். முதன் முதலில் நீங்கள் சரீரமின்றி (அசரீரியாக) வந்தீர்கள். மீண்டும் அசரீரியாகி திரும்பிச் செல்ல வேண்டும். தேகத்தின் மற்ற சம்மந்தங்கள் அனைத்தும் உங்களுக்கு துக்கம் கொடுக்கக் கூடியவைகள், நான் உங்களுக்கு கிடைத்த பின்பு அவர்களை ஏன் நினைவு செய்கிறீர்கள்? நான் உங்களை புது உலகிற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன். அங்கு எந்த துக்கமும் இருக்காது. அது தெய்வீக சம்மந்தமாகும். இங்கு முதலில் கணவன் மற்றும் மனைவி என்ற சம்மந்தத்தில் தான் முதலில் துக்கம் ஏற்படுகிறது. ஏனெனில் விகாரியாக ஆகின்றனர். எந்த உலகில் விகாரத்திற்கான விசயமே கிடையாதோ அந்த உலகிற்கு நான் உங்களை இப்போது தகுதியானவர்களாக ஆக்குகிறேன். இந்த காமம் மிகப் பெரிய எதிரி என்று கூறப்பட்டிருக்கிறது, அது முதல், இடை, கடை வரையிலும் துக்கம் கொடுக்கக் கூடியது. கோபத்தை இது முதல், இடை, கடை வரை துக்கம் கொடுக்கக் கூடியது என்று கூறுவது கிடை யாது. காமத்தை வெல்ல வேண்டும், அது தான் முதல், இடை, கடை துக்கம் கொடுக்கக் கூடிய தாகும். தூய்மை இல்லாதவர்களாக ஆக்குகிறது. விகாரத்தினால் தான் தூய்மையின்மை என்ற வார்த்தை ஏற்படுகிறது. இந்த எதிரியின் மீது வெற்றி அடைய வேண்டும். நாம் சத்யுக தேவி தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். எதுவரை இந்த நம்பிக்கையில்லையோ அதுவரை எதுவும் அடைய முடியாது.

குழந்தைகள் மனம், சொல், செயலில் மிகச் சரியானவர்களாக ஆக வேண்டும் என்று தந்தை புரிய வைக்கின்றார். உழைப்பு இருக்கிறது. நீங்கள் பாரதத்தை சொர்க்கமாக ஆக்கு கிறீர்கள் என்பது உலகில் யாருக்கும் தெரியாது. நாளடைவில் புரிந்து கொள்வார்கள், ஒரே உலகம், ஒரே இராஜ்யம், ஒரே மதம், ஒரே மொழியை விரும்பவும் செய்கின்றனர். இன்றிலிருந்து 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு ஒரே இராஜ்யம், ஒரே தர்மம் இருந்தது, அதுவே சொர்க்கம் என்று கூறப்படுகிறது. இராம இராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யத்தைப் பற்றியும் யாரும் அறியவில்லை. நீங்களும் அறியாமல் இருந்தீர்கள். இப்போது நீங்கள் வரிசைக் கிரமமான முயற்சியின் படி தூய புத்தி உடையவர்களாக ஆகியிருக்கிறீர்கள். தந்தை அமர்ந்து உங்களுக்குப் புரிய வைக்கின்றார் எனில் அவசியம் அவரது வழிப்படி நடக்க வேண்டும். பழைய உலகில் இருந்தாலும் தாமரை மலர் போன்று தூய்மையாக இருங்கள் என்று தந்தை கூறுகின்றார். என்னையும் நினைவு செய்து கொண்டே இருங்கள். தந்தை ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கின்றார். இவருடைய கர்மேந்திரியத் தின் மூலம் ஆத்மாக்களுக்குத் தான் ஞானம் கற்பிக்க வந்திருக்கின்றார். இது பழைய சீ சீ உலகம், சீ சீ சரீரம் ஆகும். பிராமணர்களாகிய நீங்கள் பூஜைக்கு தகுதியானவர்கள் அல்ல, மகிமைக் குரியவர்கள். பூஜைக்கு தகுதியானவர்கள் தேவதைகள் ஆவர். நீங்கள் ஸ்ரீமத் மூலம் உலகை சொர்க்கமாக ஆக்குகிறீர்கள். அதனால் தான் உங்களுக்கு மகிமை உள்ளது. பூஜை நடக்க முடியாது. பிராமணர்களாகிய உங்களுக்கு அவசியம் மகிமை ஏற்படு கிறது, தேவதைகளுக்கு அல்ல. தந்தை உங்களைத் தான் சூத்ரனிலிருந்து பிராமணர்களாக ஆக்குகின்றார். தேவதை களின் ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் தூய்மையாக இருக்கிறது. இப்போது உங்களது ஆத்மா தூய்மையாகிக் கொண்டே செல்கிறது. சரீரம் தூய்மையாக இல்லை. இப்போது நீங்கள் ஈஸ்வரனின் வழியில் பாரதத்தை சொர்க்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் சொர்க்கத்திற்கு தகுதியானவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். சதோ பிரதானமாக அவசியம் ஆக வேண்டும். பிராமணர்களாகிய உங்களுக்கு மட்டுமே தந்தை அமர்ந்து கற்பிக்கின்றார். பிராமணர்களின் மரம் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கும். எந்த பிராமணர்கள் பக்காவாக ஆகிவிடுவார்களோ அவர்களே சென்று தேவதைகளாக ஆவார்கள். இது புது மரமாகும், மாயையின் புயல்களும் ஏற்படுகிறது. சத்யுகத்தில் எந்த புயலும் வராது. இங்கு மாயை பாபாவின் நினைவில் இருக்க விடுவது கிடையாது. பாபாவின் நினைவின் மூலம் தான் நாம் தமோ பிரதானத்திலிருந்து சதோ பிரதான மாக ஆகியிருக்கிறோம் என்பதை நாம் அறிவோம். அனைத்திற்கும் ஆதாரம் நினைவில் தான் இருக்கிறது. பாரதத்தின் பழமையான யோகாவும் பிரபலமாக இருக்கிறது அல்லவா! பழமையான யோகாவை யாராவது வந்து கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அயல்நாட்டினரும் விரும்புகின்றனர்.

இரண்டு வகையான யோகா இருக்கிறது, ஒன்று ஹடயோகா, மற்றொன்று இராஜயோகா. நீங்கள் இராஜயோகிகள். அது பல நாட்களாக நடைபெற்று வருகிறது. இராஜயோகம் பற்றி இப்போது தான் நீங்கள் அறிகிறீர்கள். சந்நியாசிகளுக்கு இராஜயோகம் பற்றி என்ன தெரியும்? இராஜயோகத்தை நான் வந்து தான் கற்றுக் கொடுக்கிறேன், கிருஷ்ணர் கற்றுக் கொடுக்க முடியாது என்று தந்தை வந்து கூறுகின்றார். இது பாரதத்தினுடைய பழமையான யோகா ஆகும். கீதையில் எனது பெயருக்குப் பதிலாக கிருஷ்ணரின் பெயர் போட்டு விட்டனர். எவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டு விட்டது! சிவஜெயந்தி ஏற்படும் போது உங்களது வைகுண்டத் தின் ஜெயந்தியும் ஏற்படுகிறது, அதில் கிருஷ்ணரின் இராஜ்யம் நடைபெறுகிறது. சிவபாபாவின் ஜெயந்தி என்றால் கீதையின் ஜெயந்தியும் ஆகும் என்பதை நீங்கள் அறிவீர்கள், வைகுண்டத்தின் ஜெயந்தியும் கொண்டாடப் படுகிறது. நீங்கள் தூய்மையாக ஆகிவிடுவீர்கள், முந்தைய கல்பத்தைப் போன்று ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது எனில் சிவபாபாவின் ஜெயந்தி என்றால் அதுவே சொர்க்க ஜெயந்தி ஆகும். பாபா வந்து தான் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்கின்றார். என்னை நினைவு செய்யுங்கள் என்று இப்போது தந்தை கூறுகின்றார். நினைவு செய்யாத காரணத்தினால் மாயை ஏதாவது விகர்மங்களை செய்வித்து விடுகிறது. நினைவு செய்யவில்லையெனில் அடி விழுந்து விடுகிறது. நினைவில் இருக்கும் போது அடி வாங்கமாட்டீர்கள். இங்கு குத்துச் சண்டை நடைபெறுகிறது. நமது எதிரி எந்த மனிதனும் கிடையாது, இராவணன் தான் எதிரி என்பதை நீங்கள் அறிவீர்கள். திருமணம் நடைபெற்றதும் குமார், குமாரி தூய்மை இழக்கின்ற போது ஒருவருக்கொருவர் எதிரியாக ஆகிவிடுகின்றனர். திருமணத்திற்கு இலட்ச கணக்கில் ரூபாய் செலவு செய்கின்றனர். திருமணம் தான் நாசப்படுத்தக் கூடியது என்று தந்தை கூறுகின்றார். குழந்தைகளே! காமம் மிகப் பெரிய எதிரி, இதன் மீது வெற்றியடையுங்கள் மற்றும் தூய்மைக்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள் என்று பரலௌகீகத் தந்தை கட்டளையிட்டிருக்கிறார். யாரும் தூய்மை இழந்து விடக் கூடாது. இந்த விகாரத்தின் மூலம் தான் நீங்கள் பல பிறவிகளாக தூய்மை அற்றவர் களாக ஆகிவிட்டீர்கள், அதனால் தான் காமம் மிகப் பெரிய எதிரி என்று கூறப்படுகிறது. தந்தை மிகவும் நல்ல முறையில் புரிய வைக்கின்றார். நீங்கள் 84 பிறவிகள் எப்படி எடுத்தீர்கள்? இப்போது திரும்பிச் செல்ல வேண்டும். உங்களுக்குள் மிகவும் சுத்தமான அகங்காரம் இருக்க வேண்டும். ஆத்மாக்களாகிய நாம் தந்தையின் வழிப்படி நடந்து பாரதத்தை சொர்க்கமாக ஆக்கிக் கொண்டிருக் கிறோம். நாமே பிறகு சொர்க்கத்தில் இராஜ்யம் செய்வோம். எந்தளவு முயற்சி செய்வீர்களோ அந்தளவு பதவி அடைவீர்கள். இராஜா, இராணியாக ஆனாலும் சரி, பிரஜையாக ஆனாலும் சரி. இராஜா, இராணியாக எப்படி ஆக முடியும் என்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். தந்தையைப் பின்பற்றுங்கள் என்று பாடப்பட்டிருக்கிறது. அது இப்போதைக்கான விசயமாகும். லௌகீக சம்மந்தங்களுக்காக கூறப்படவில்லை. என் ஒருவனை நினைவு செய்தால் விகர்மங்கள் விநாசம் ஆகும் என்று தந்தை கட்டளை யிடுகின்றார். நாம் நல்ல வழியில் நடந்து கொண்டிருக் கிறோம், பலருக்கு சேவை செய்கிறோம் என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். குழந்தைகள் தந்தையிடம் வருகின்றனர் எனில் சிவபாபாவும் புத்துணர்வு ஏற்படுத்துகின்றார் எனில் இவரும் (பிரம்மா) புத்துணர்வு ஏற்படுத்து கின்றார். இவரும் கற்றுக் கொள்கிறார் அல்லவா! நான் அதி காலையில் வருகிறேன் என்று சிவபாபா கூறுகின்றார். ஒருவேளை யாராவது சந்திக்க வருகின்றனர் எனில் இந்த பிரம்மா புரிய வைக்கமாட்டாரா என்ன? பாபா, நீங்கள் வந்து புரிய வையுங்கள் நான் புரிய வைக்கமாட்டேன். என்று கூறுவாரா என்ன? இது மிகவும் குப்தமான, ஆழமான விசயம் அல்லவா! நான் அனைவரையும் விட மிக நல்ல முறையில் புரிய வைக்க முடியும். சிவபாபா தான் புரிய வைக்கின்றார், இவர் புரிய வைக்கமாட்டார் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? கல்பத்திற்கு முன்பு இவர் புரிய வைத்திருந்ததால் தான் இந்த பதவி அடைந்திருந்தார் என்பதை யும் அறிவீர்கள். மம்மாவும் புரிய வைத்தார் அல்லவா! அவரும் உயர்ந்த பதவி அடைகின்றார். அங்கு பாபாவை சூட்சுமவதனத்தில் பார்க்கிறார் எனில் குழந்தைகள் தந்தையைப் பின்பற்ற வேண்டும். ஏழைகள் தான் சரண்டர் ஆகின்றனர். செல்வந்தர்கள் சரண்டர் ஆக முடியாது. பாபா, இவை அனைத்தும் உங்களுடையது என்று ஏழைகள் தான் கூறுகின்றனர். சிவபாபா வள்ளல் ஆவார், அவர் ஒருபோதும் கேட்பது கிடையாது. இவை அனைத்தும் உங்களுடையது என்று குழந்தைகளிடம் கூறுகின்றார். தனக் கென்று மாளிகையை இங்கு அல்லது அங்கு உருவாக்கிக் கொள்வது கிடையாது. உங்களைத் தான் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்குகிறேன். இப்போது இந்த ஞான ரத்தினங்களினால் பையை நிறைத்துக் கொள்ள வேண்டும். பையை நிறைத்து விடுங்கள் என்று கோவிலுக்குச் சென்று கூறுகின்றனர். ஆனால் எந்த பொருளினால், எந்த பையை நிறைக்க வேண்டும்? பையை நிறைக்கக் கூடியவர் செல்வம் கொடுக்கும் லெட்சுமியா! சிவனிடம் செல்வது கிடையாது. கிருஷ்ணர் கீதை கூறியதாக சொல் கின்றனர். ஆனால் பையை நிரப்புங்கள் என்று கிருஷ்ணரிடம் கூறுவது கிடையாது. சங்கரிடம் சென்று கூறுகின்றனர். சிவனும் சங்கரும் ஒன்று என்று நினைக்கின்றனர். சங்கர் பையை காலியாக்கக் கூடியவர். நமது பையை யாரும் காலி செய்ய முடியாது. விநாசம் ஆகியே தீர வேண்டும். ருத்ர ஞான யக்ஞத்தின் மூலம் விநாச நெருப்பு வெளிப்பட்டது என்றும் பாடப் பட்டிருக்கிறது. ஆனால் இவ்வாறு புரிந்து கொள்வது யாரும் கிடையாது.

குழந்தைகளாகிய நீங்கள் இல்லற காரியங்களிலும் இருக்க வேண்டும். தொழிலும் செய்ய வேண்டும். தந்தை ஒவ்வொரு குழந்தையின் நாடி பார்த்து அறிவுரைகளைக் கொடுக்கின்றார், ஏனெனில் நான் கூறி செய்ய வில்லையெனில் பிறகு ஏன் அறிவுரை தர வேண்டும் என்று நினைக் கிறார். நாடி பார்த்து தான் அறிவுரை கொடுப்பார். இவரிடத்தில் வந்தே ஆக வேண்டும். அவர் முழுமையான அறிவுரை கொடுப்பார். பாபா, இந்த சூழலில் நான் என்ன செய்ய வேண்டும்? என்று அனைவரும் கேட்க வேண்டும். இப்போது என்ன செய்யட்டும்? தந்தை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார். நாம் சொர்க்கவாசி ஆகக் கூடியவர்கள், இப்போது நரகவாசிகளாக இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது நீங்கள் நரகத்திலும் கிடையாது, சொர்க்கத்திலும் கிடையாது. யாரெல்லாம் பிராமணர்களாக ஆகியிருக்கிறார்களோ அவர்களது நங்கூரம் இந்த சீ சீ உலகிலிருந்து நீக்கப்பட்டு விட்டது. இப்போது நீங்கள் கலியுகம் என்ற கரையிலிருந்து வெளியேறி விட்டீர்கள். சில பிராமணர்கள் தீவிர வேகத்தில் செல்கின்றனர், சிலர் நினைவு யாத்திரையில் குறைவாக இருக்கின்றனர். சிலர் கையை விட்டு விடுகின்றனர் எனில் மூழ்கி இறந்து விடுகின்றனர் அதாவது மீண்டும் கலியுகத்திற்கு சென்று விடுகின்றனர். இப்போது படகோட்டி நம்மை அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த யாத்திரைகளில் பல வகைகள் உள்ளன. உங்களது யாத்திரை ஒன்றே ஒன்று தான், இது முற்றிலும் தனிப்பட்ட யாத்திரை ஆகும். ஆம், புயல்கள் வரும் போது நினைவை துண்டித்து விடுகிறது. இந்த நினைவு யாத்திரையை நல்ல முறையில் உறுதியாக்குங்கள். முயற்சி செய்யுங்கள். நீங்கள் கர்மயோகி களாக இருக்கிறீர்கள். எவ்வளவு முடியுமோ, கைகள் வேலை செய்தாலும், உள்ளம் தந்தை நினைவில் இருக்க வேண்டும். அரைக் கல்பமாக நீங்கள் நாயகிகளாக இருந்து நாயகனை நினைவு செய்து வந்தீர்கள். பாபா, எமக்கு இங்கு அதிக துக்கம் இருக்கிறது, இப்போது எம்மை சுகதாமத்திற்கு எஜமானர்களாக ஆக்குங்கள். நினைவு யாத்திரையில் இருந்தால் உங்களது பாவங்கள் அழிந்து விடும். நீங்கள் தான் சொர்க்கத்தின் ஆஸ்தி அடைந்திருந்தீர்கள். இப்போது இழந்து விட்டீர்கள். பாரதம் சொர்க்கமாக இருந்தது, அதனால் தான் பழமையான பாரதம் என்று கூறுகின்றனர். பாரதத் திற்கு அதிக மரியாதை செலுத்துகின்றனர். அனைத்தையும் விட உயர்ந்ததாகவும் இருக்கிறது, அனைத்தையும் விட பழையதாகவும் இருக்கிறது. விநாசம் எதிரில் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். யார் நல்ல முறையில் புரிந்திருக்கிறார்களோ அவர்களுக்குள் மிகுந்த குஷியிருக்கும். கண்காட்சிகளில் எத்தனை பேர் வருகின்றனர்! அகமதாபாத்தில் எத்தனை சாது, சந்நியாசிகள் வந்தனர் என்பதை பார்த்தீர்கள்! நீங்கள் உண்மையைக் கூறுகிறீர்கள் என்று சொல்கின்றனர். ஆனால் நாம் தந்தையிடமிருந்து அஸ்தி அடைய வேண்டும் என்பது புத்தியில் பதிவது கிடையாது. இங்கிருந்து வெளியில் சென்றதும் நீங்கி விடுகிறது. தந்தை நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். அங்கு கர்ப சிறையும் இருக்காது, மற்ற சிறையும் இருக்காது. சிறை வாசலை பார்க்கவே முடியாது. இரண்டு சிறைகளும் இருக்காது. இங்கு இவை அனைத்தும் மாயையின் பகட்டாகும். இன்றைய நாட்களில் ஒவ்வொரு விசயமும் விரைவில் நடைபெறுகிறது. மரணமும் விரைவாக ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சத்யுகத்தில் இந்த மாதிரியான உபத்திரவங்கள் ஏற்படவே ஏற்படாது. இங்கு மரணமும் விரைவாக ஏற்படுகிறது, அதிக துக்கமும் ஏற்படுகிறது. அனைத்தும் அழிந்து விடும். முழு பூமியும் புதியதாக ஆகிவிடும். சத்யுகத்தில் தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. அது மீண்டும் அவசியம் ஏற்படும். நாளடைவில் என்ன நடக்கும் என்பதை பார்ப்பீர்கள். மிக பயங்கரமான காட்சிகள் நிகழும். குழந்தை களாகிய நீங்கள் சாட்சாத்காரம் செய்திருக்கிறீர்கள். குழந்தைகளுக்கு முக்கியமானது நினைவு யாத்திரையாகும். இது முன்னேறும் கலையில் செல்வதற்கான யாத்திரையாகும். நல்லது.

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) நாம் பிராமணர்கள், பிராமணர்களாகிய நமக்குத் தான் பகவான் கற்பிக்கின்றார், நாம் இப்போது பிராமணலிருந்து தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்ற நினைவிலேயே சதா இருக்க வேண்டும்.

2) ஞான இரத்தினங்களினால் தனது பையை நிறைத்துக் கொண்டு தானம் செய்ய வேண்டும். இந்த கலியுகம் என்ற தூய்மை இல்லாத உலகின் கரையை விட்டு விட வேண்டும். மாயையின் புயல்களைப் பார்த்து பயப்படக் கூடாது.

வரதானம்:-

மாஸ்டர் படைப்பு கர்த்தா, மாஸ்டர் நாலேஜ்ஃபுல் (ஞானம் நிறைந்த) சக்திசாலி நிலை (பவர்ஃபுல் ஸ்திதி) அல்லது போதையில் நிலைத்திருக்கும் பொழுது உங்களால் படைப்பின் அனைத்து கவர்ச்சி களிலிருந்தும் அப்பாற்பட்டு இருக்க முடியும். ஏனெனில் இப்பொழுது படைப்பு இன்னுமே பலவிதமான வழிமுறைகளின் ரூபங்களை உருவாக்கும். எனவே இப்பொழுது இன்னும் மீதி இருக்கும் குழந்தைப் பருவங்களின் தவறுகள், கவனக் குறைவின் தவறுகள், சோம்பேறித்தனத்தின் தவறுகள், அலட்சியத் தன்மையின் தவறுகள் ஆகியவற்றை மறந்து தங்களது பவர்ஃபுல், சக்தி சொரூப, ஆயுதம் தரித்துள்ள சொரூபம், சதா ஏற்றப்பட்ட ஜோதி சொரூபத்தை வெளிப்படுத் தினீர்கள் என்றால், அப்பொழுது தான் மாஸ்டர் படைப்புக்கர்த்தா என்று கூறுவார்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top