02 May 2021 TAMIL Murli Today – Brahma Kumaris

May 1, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Malayalam. This is the Official Murli blog to read and listen daily murlis.

சிந்தனை சக்தி மற்றும் மூழ்கிய நிலை

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று இரட்டைக் கிரீடதாரியாக, இரட்டை ராஜ்ய அதிகாரியாக ஆக்குபவராகிய தந்தை விசேஷ மாகத் தம்முடைய இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளுடன் சந்திப்பதற்காக வந்துள்ளார். பாப்தாதா பார்த்துக் கொண்டிருக் கிறார் – நாலாபுறமும் உள்ள இரட்டை வெளிநாட்டு குழந்தைகள் அன்பான, சகயோகி, சதா சேவையின் ஊக்கம்-உற்சாகத்துடன் அன்பு மற்றும் சேவை, இரண்டிலும் முன்னேறிச் சென்று கொண்டே இருக்கின்றனர். ஒவ்வொருவர் மனதிலும் இந்த உற்சாகம் உள்ளது – நாம் பாப்தாதாவைப் பிரத்தியட்சம் செய்வதற்கான கொடியைப் பறக்கவிட வேண்டும். ஒவ்வொரு நாளும் உற்சாகத்தின் காரணத்தால் சங்கமயுகத்தை உற்சவத்தைப் போல் அனுபவம் செய்து கொண்டு, பறந்து சென்று கொண்டே இருக்கின்றனர். ஏனென்றால் எங்கே ஒவ்வொரு சமயமும் உற்சாகம் உள்ளதோ, பாப்தாதாவுடன் நினவின் மூலம் சந்திப்பைக் கொண்டாடுவதற்கானதாக இருந்தாலும் சரி, சேவை மூலம் பிரத்தியட்ச பலனை அடைவதற்கான அனுபவத்தின் உற்சாகத்தில் என்றாலும் சரி – இரண்டு உற்சாகங்களும் ஒவ்வொரு கணம், ஒவ்வொரு நாளும் உற்சாகத்தின் அனுபவம் செய்விக்கிறார். உலகத்தின் மனிதர்கள் விசேஷ உற்சவ நாட்களில் உற்சாகத்தை அனுபவம் செய்கின்றனர். ஆனால் பிராமண ஆத்மாக்களுக்கு சங்கமயுகம் தான் உற்சாகத்தின் யுகமாகும். ஒவ்வொரு நாளும் புதிய உற்சாகம், ஊக்கம்-உல்லாசம் தானாகவே அனுபவம் ஆகிக் கொண்டே இருக்கிறது. ஆகவே சங்கம யுகத்தின் ஒவ்வொரு நாளும் குஷியின் சத்துணவை அருந்தி, பாபா மூலம் கிடைக்கும் அநேக பிராப்திகளின் குணங்களைப் பாடிக் கொண்டு டபுள் லைட் ஆகி, சதா உற்சாகத்தில் நடனமாடிக் கொண்டே இருக்கின்றனர். உற்சவத்தில் என்ன செய்கின்றனர்? சாப்பிடுகின்றனர், பாடுகின்றனர் மற்றும் நடனமாடுகின்றனர். இப்போது வெளிநாடுகளில் விசேஷமாகக் கிறிஸ்துமஸ் கொண்டாடு வதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டுள்ளனர். சாப்பிடுவது, பாடுவது, வாத்தியம் இசைப்பது மற்றும் நடனமாடுவது – இதைத் தான் செய்வார்கள் இல்லையா? மற்றும் சந்திப்பைக் கொண்டாடுவார்கள். நீங்கள் ஒவ்வொரு நாளும் என்ன செய்கிறீர்கள்? அமிர்தவேளை தொடங்கி இரவு வரை இதே வேலையைத் தான் செய்கிறீர்கள் இல்லையா? சேவையும் செய்கிறீர்கள், சேவை என்றால் ஞான நடனம் ஆடுகிறீர்கள். பாப்தாதாவின் குணங்களின் பாடலை ஆத்மாக்களுக்குச் சொல்கிறீர்கள். ஆக, தினந்தோறும் உற்சவம் கொண்டாடு கிறீர்கள் இல்லையா? உண்மையான பிராமணர்கள் இந்தக் காரியத்தைச் செய்யாத நாள் என்று எதுவும் இருக்காது. சங்கமயுகத்தின் ஒவ்வொரு நாளும் உற்சாகம் நிறைந்த உற்சவத்தின் நாள். அவர்களோ, ஓரிரு நாள் மட்டுமே கொண்டாடுகின்றனர். ஆனால் பாப்தாதா பிராமணக் குழந்தைகள் அனைவரையும் அந்த மாதிரி சிரேஷ்டமாக ஆக்குகிறார், அத்தகைய பொன்னான பரிசைத் தருகிறார், அதனால் சதா காலத்திற்கும் சம்பன்னம், சதா நிறைவான வராக ஆகி விடுகிறீர்கள். அந்த மக்கள் கிறிஸ்துமஸ் நாளுக்காகக் காத்திருக்கின்றனர் – கிறிஸ்துமஸ் ஃபாதர் வந்து இன்று பரிசு தருவார். அவர்கள் கிறிஸ்துமஸ் ஃபாதரை நினைவு செய்கின்றனர். நீங்கள் கிஸ்மிஸ் போன்று இனிமையானவராக ஆக்குபவராகிய தந்தையை நினைவு செய்கிறீர்கள். அவ்வளவு பரிசுகள் கிடைக் கின்றன – 21 பிறவிகளுக்கு அந்தப் பரிசுகள் தொடர்ந்து கொண்டிருக்கும். அந்த அழியக்கூடிய பரிசு கொஞ்ச நேரத்துக்கு இருந்து முடிந்து போகும். இந்த அழியாத பரிசு அநேகப் பிறவிகளுக்கு உங்களோடு இருக்கும். எப்படி அவர்கள் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கின்றனர். பாப்தாதா இந்த எல்லையற்ற உலக மரத்தில், ஜொலிக்கின்ற நட்சத்திரங்களாகிய உங்களுக்கு, சத்யுக சிரேஷ்ட பூமியின் நட்சத்திரங்களுக்கு அவிநாசி லைட் மைட் சொரூபத்தில் நிலைத்திருப்பதற்கான அனுபவம் செய்விக்கிறார். அவர்களும் நட்சத்திரத்தை ஏற்றுக் கொள்கின்றனர். நட்சத்திரங்களால் அலங்கரிக்கின்றனர். நட்சத்திரங்களாகிய உங்களது நினைவுச் சின்னத்தை ஸ்தூலமாக ஜொலிக் கின்ற தீபங்களின் ரூபத்தில் காட்டுகின்றனர். அல்லது தீபங்களால் அலங்கரிக்கின்றனர் அல்லது மலர்களால் அலங்கரிக்கின்றனர். இது யாருடைய நினைவுச் சின்னம்? ஆன்மிக நறுமணமுள்ள மலர்கள் – பிராமண ஆத்மாக்களின் நினைவுச் சின்னமாகும். இந்த உற்சவங்கள் அனைத்தும் சங்கமயுக பிராமணர்களாகிய உங்களின் உற்சாகம் நிறைந்த உற்சவங்களின் நினைவுச் சின்னங் களாகும். சங்கமயுகத்தில் கல்ப விருட்சத்தின் ஜொலிக்கின்ற நட்சத்திரங்கள், ஆன்மிக ரோஜாக்கள் பிராமணக் குழந்தைகளாகிய நீங்கள் தாம். உங்களுடைய நினைவுச் சின்னத்தை நீங்களே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இரட்டை ரூபத்தின் நினைவுச் சின்னங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். சங்கமயுக ரூபத்தின் நினைவுச் சின்னம் பல வித ரூபங்களில், ரீதியில் காண்பிக்கின்றனர் மற்றும் இரண்டாவது வருங்கால தேவ பதவியின் நினைவுச் சின்னங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். தனது ரூபத்தின் நினைவுச் சின்னத்தை மட்டும் பார்க்கிறீர்கள் என்பதில்லை, ஆனால் சிரேஷ்ட ஆத்மாக்களாகிய உங்களது சிரேஷ்ட கர்மத்திற்கும் நினைவுச் சின்னம் உள்ளது. தந்தை மற்றும் குழந்தைகளின் சரித்திரத்திற்கும் கூட நினைவுச் சின்னம் உள்ளது. ஆக, தனது நினைவுச் சின்னத்தைப் பார்த்து சகஜமாக நினைவு வருகிறது இல்லையா — அதாவது ஒவ்வொரு கல்பமும் நாம் இத்தகைய விசேஷ ஆத்மா ஆகிறோம். ஆகியிருந்தோம், ஆகியிருக்கிறோம், இனி மேலும் ஆகிக் கொண்டே இருப்போம்.

பாப்தாதா அந்த மாதிரி சதா நினைவில் இருக்கக் கூடிய, யாருடைய நினைவுச் சின்னம் இப்போது உள்ளதோ, அப்படிப்பட்ட குழந்தைகளைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறார். நினைவில் இருப்பவர் களின் நினைவுச் சின்னம் இது. நினைவின் மகத்துவமாகிய நினைவுச் சின்னத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆக, இரட்டை வெளிநாட்டினராகிய குழந்தைகளுக்குத் தங்களின் நினைவுச் சின்னத்தைப் பார்த்துக் குஷி ஏற்படுகிறது இல்லையா? பாப்தாதாவுக்கு இரட்டை வெளி நாட்டினரைப் பார்த்து இரட்டைக் குஷி ஏற்படுகிறது. ஏன்? ஒன்று, உலகின் ஒவ்வொரு மூலையிலும் கல்பத்திற்கு முன் பிரிந்து சென்று விட்ட, காணாமல் போன குழந்தைகள் மீண்டும் கிடைத்து விட்டனர். காணாமல் போன பொருள் மீண்டும் கிடைத்து விட்டால் மகிழ்ச்சி ஏற்படுகிறது இல்லையா? பாபாவோ குழந்தைகள் அனைவரையும் பார்த்து மகிழ்ச்சியடைகிறார், பாரதவாசிகளாக இருந்தாலும் சரி, வெளிநாட்டினராக இருந்தாலும் சரி. இரண்டாவது விஷயம், வெளிநாட்டுக் குழந்தை களினுடையது – பலவித தர்மங்கள், பலவித வழக்கங்களின் திரைக்குள் இருந்த போதிலும், இந்தத் திரையை சகஜமாக விலக்கி விட்டு, பாபாவுடையவர்களாக ஆகி விட்டனர். இது திரையை விலக்குவதற்கான விசேஷதா. திரைக்குள் இருந்தும் கூட பாபாவை அறிந்து கொள்வதற்கான விசேஷதா இரட்டை வெளிநாட்டினருடையது. ஆக, இரட்டைக் குஷி ஆகி விட்டது இல்லையா? இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளின் நிச்சயம் மற்றும் நஷா அலௌகிகமானதாகும். பாப்தாதா இன்று நாலாபுறம் உள்ள இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு, விசேஷமாக சதா உற்சாகத்தில் இருக்கக் கூடிய, ஒவ்வொரு நாளும் உற்சவம் கொண்டாடக் கூடிய, ஒவ்வொரு நாளும் வரதாதா பாபா மூலம் விசேஷ வரதானம் அல்லது விசேஷ ஆசிர்வாதம் பெறுவதற்கான வைரப் பரிசைப் பெரிய மனதோடு, பெரிய நாளுக்காக (கிறிஸ்துமஸ்) அளித்துக் கொண்டிருக்கிறார் – சதா உற்சவம் நிறைந்த வாழ்க்கை ஆகுக, சதா சகஜமாகப் பறக்கும் கலையின் அனுபவி சிரேஷ்ட வாழ்க்கை ஆகுக. நல்லது.

இன்று பாப்தாதா வதனத்தில் மூன்று விதமான குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். மூன்று விதமாக என்ன பார்த்தார்? 1. வர்ணனை செய்பவர் 2. சிந்தனை செய்பவர் 3. அனுபவத்தில் மூழ்கியிருப்பவர். இந்த மூன்று விதமான குழந்தைகளை, இந்த தேசம் மற்றும் வெளிநாடுகளின் அனைத்துக் குழந்தைகளுக்குள்ளும் பார்த்தார். வர்ணனை செய்யக்கூடிய அநேக பிராமணர்களைப் பார்த்தார். சிந்தனை செய்யக்கூடியவர்களை இடைப்பட்ட எண்ணிக்கையில் பார்த்தார். அனுபவத்தில் மூழ்கி இருப்பவர்களை, அதிலும் குறைவான எண்ணிக் கையில் பார்த்தார். வர்ணனை செய்வது மிகவும் சுலபம். ஏனென்றால் 63 பிறவிகளின் சம்ஸ்காரமாக உள்ளது. ஒன்று கேட்பது, மற்றொன்று கேட்டதை வர்ணனை செய்வது. இதைச் செய்தே வந்திருக்கிறீர்கள். பக்தி மார்க்கம் என்பது, கீர்த்தனை மூலம் அல்லது பிரார்த்தனை மூலம் கேட்டதை வர்ணனை செய்வது. அதோடு கூடவே தேக அபிமானத்தில் வருகிற காரணத்தால் வீணாகப் பேசுவது என்பது பக்கா சம்ஸ்காரமாக ஆகி விட்டுள்ளது. எங்கே வீண் பேச்சு உள்ளதோ, அங்கே விஸ்தாரம் என்பது தானாகவே ஆகி விடுகிறது. சுய சிந்தனை, உள்முக நோக்கு உள்ளவராக ஆக்குகிறது. பரசிந்தனை, வர்ணனை செய்வதற்கான விஸ்தாரத்தில் கொண்டு செல்கிறது. ஆக, வர்ணனை செய்வதற்கான சம்ஸ்காரம் அநேகப் பிறவி களாக இருக்கிற காரணத்தால் பிராமண வாழ்க்கையிலும் கூட அஞ்ஞானத்திலிருந்து மாறி ஞானத் திலோ வந்து விடுகின்றனர். ஞானத்தை வர்ணனை செய்வதில் சீக்கிரத்தில் திறமைசாலி ஆகி விடுகின்றனர். வர்ணனை செய்பவர்கள் வர்ணனை செய்யும் போது வரை குஷி அல்லது சக்தியை அனுபவம் செய்கின்றனர். ஆனால் சதா காலத்துக்கும் இல்லை. வாயின் மூலம் ஞான வள்ளல் பற்றி வர்ணனை செய்கிற காரணத்தால் சக்தி மற்றும் குஷி – இந்த ஞானத்தின் பிரத்தியட்ச பலன் கிடைக்கிறது. ஆனால் சக்திசாலி சொரூபம், சதா குஷி சொரூபமாக ஆக முடிவதில்லை. பிறகும் கூட ஞான ரத்தினங்கள், நேரடி பகவான் வாக்கு என்பதால் அவர்களின் சக்திக்கேற்றவாறு பிராப்தி சொரூபம் ஆகி விடுகின்றனர்.

சிந்தனை செய்பவர்கள் சதா என்ன கேட்கிறார்களோ, அதைச் சிந்தனை செய்து, தானும் ஒவ்வொரு ஞான பாயின்ட் சொரூபம் ஆகின்றனர். மனன் (சிந்தனை) சக்தி உள்ளவர்கள் குண சொரூபம், சக்தி சொரூபம், ஞான சொரூபம் மற்றும் நினைவு சொரூபமாகத் தானாகவே ஆகி விடுகின்றனர். ஏனென்றால் சிந்தனை செய்வது என்றால் புத்தி மூலம் ஞானத்தின் உணவைச் செரிக்கச் செய்வ தாகும். இது போல் வர்ணனை செய்வோருக்கும் கூட ஞானம் வாய் வரை மட்டுமே இருந்து விடுகிறது. ஆனால் அவர்கள் புத்தி மூலம் மனன் சக்தி மூலம் தாரணை செய்து சக்திசாலி ஆகி விடுகின்றனர். மனன் சக்தி உள்ளவர்கள் அனைத்து விஷயங்களின் சக்திசாலி ஆத்மாக்களாக ஆகின்றனர். மனன் சக்தி உள்ளவர்கள் சதா சுய சிந்தனையில் பிஸியாக இருப்பதால் மாயாவின் அநேக விக்னங்களில் இருந்து சகஜமாக விடுபட்டு விடுகின்றனர். ஏனென்றால் புத்தி பிஸியாக உள்ளது. ஆக, மாயாவும் பிஸியாக இருப்பதைப் பார்த்து விலகிச் சென்று விடுகிறது. இரண்டாவது விஷயம் – மனன் செய்வதால் சக்திசாலி ஆவதன் காரணத்தால் சுய ஸ்திதி எந்த ஒரு பரிஸ்திதியிலும் தோல்வியடையச் செய்யாது. ஆக, மனன் சக்தி உள்ளவர் உள்முகநோக்கு உள்ளவராக சதா சுகமாக இருப்பார். சமய பிரமாணம் சக்திகளைக் காரியத்தில் கொண்டு வருவதற்கான சக்தி இருக்கும் காரணத்தால், எங்கே சக்தி உள்ளதோ, அங்கே மாயாவிடமிருந்து விடுபட்ட நிலை. ஆகவே அத்தகைய குழந்தைகள் வெற்றியாளர் ஆத்மாக்களின் பட்டியலில் வருகின்றனர்.

மூன்றாவது குழந்தைகள் – சதா சர்வ அனுபவங்களில் மூழ்கி இருப்பவர்கள். சிந்தனை செய்வது இரண்டாவது நிலையாகும். ஆனால் சிந்தனை செய்து கொண்டே மூழ்கிய நிலையில் இருப்பது முதல் நிலையாகும். மூழ்கி இருப்பவர்கள் தாமாகவே நிர்விக்னமாக இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அதைக் காட்டிலும் உயர்ந்த விக்ன-விநாசக் ஸ்திதி அமைகின்றது. அதாவது சுயம் நிர்விக்னமாகி மற்றவர்களுக்கும் விக்ன-விநாசக் ஆகி சகயோகி ஆகின்றனர். அனுபவம் என்பது அனைத்திலும் பெரியதிலும் பெரிய அத்தாரிட்டி ஆகும். அனுபவத்தின் அத்தாரிட்டி மூலம் பாப்-சமான் மாஸ்டர் அல்மைட்டி அத்தாரிட்டி ஸ்திதியை அனுபவம் செய்கின்றனர். மூழ்கிய அவஸ்தா உள்ளவர்கள் தங்கள் அனுபவத்தின் ஆதாரத்தினால் மற்றவர்களை நிர்விக்னமாக்குவதற்கான உதாரணம் ஆகின்றனர். ஏனென்றால் பலவீனமான ஆத்மாக்கள் அவர்களின் அனுபவத்தைப் பார்த்துத் தாங்களும் தைரியம் வைக்கின்றனர். உற்சாகத்தில் வருகின்றனர் – நாமும் இது போல் ஆக முடியும் என்று. மூழ்கிய நிலையில் இருக்கும் ஆத்மாக்கள் பாப்-சமான் இருக்கும் காரணத்தால் தாமாகவே எல்லை யற்ற வைராக்கிய விருத்தி உள்ளவராக, எல்லையற்ற சேவாதாரியாக மற்றும் எல்லையற்ற பிராப்தி யின் நஷாவில் இருப்பவராக சகஜமாகவே ஆகி விடுகின்றனர். மூழ்கிய நிலையில் இருக்கும் ஆத்மாக்கள் சதா கர்மாதீத், அதாவது கர்ம பந்தனங்களில் இருந்து விடுபட்டவராக மற்றும் சதா பாபாவுக்குப் பிரியமானவராக இருப்பார்கள்.

மூழ்கிய ஆத்மா சதா திருப்தியான ஆத்மா, சந்துஷ்ட ஆத்மா, சம்பன்ன ஆத்மா, சம்பூர்ண நிலையின் மிக சமீபமான ஆத்மா ஆவார். சதா அனுபவத்தின் அத்தாரிட்டியின் காரணத்தால் சகஜ யோகி, இயல் பான யோகி, அத்தகைய சிரேஷ்ட வாழ்க்கை, விலகிய மற்றும் அன்பான வாழ்க்கையை அனுபவம் செய்கின்றனர். அவர்களின் வாயிலிருந்து அனுபவத்தின் வார்த்தைகள் வருவதால் மனதில் நிறைத்துக் கொள்கின்றனர் மற்றும் வர்ணனை செய்பவர்களின் வார்த்தை புத்தி வரை அமர்கின்றது. ஆக, புரிந்ததா, முதல் ஸ்டேஜ் என்ன என்று? சிந்தனை செய்பவர்களும் வெற்றியாளர், ஆனால் சகஜமான மற்றும் சதா என்பதில் வித்தியாசம் உள்ளது. மூழ்கிய நிலையில் இருப்பவர் சதா பாபாவின் நினைவில் மூழ்கி இருப்பார்கள். ஆகவே அனுபவத்தை அதிகப் படுத்துங்கள். ஆனால் முதலில் வர்ணனையிலிருந்து சிந்தனைக்கு வாருங்கள். சிந்தனை சக்தியானது மூழ்கிய ஸ்திதியை சகஜமாகவே அடையச் செய்கிறது. சிந்தனை செய்து-செய்தே அனுபவம் தானாகவே அதிகரித்துக் கொண்டே செல்லும். சிந்தனை செய்வதற்கான அப்பியாசம் செய்ய வேண்டியது மிகவும் அவசிய மாகும். ஆகவே சிந்தனை சக்தியை அதிகப் படுத்துங்கள். கேட்பது மற்றும் சொல்வதோ மிகவும் சுலபம். சிந்தனை சக்தி உள்ளவர்கள், மூழ்கி இருப்பவர்கள் சதா பூஜைக்குரியவராகவும், வர்ணனை செய்பவர்கள் வெறுமனே மகிமைக்குரியவராகவும் உள்ளனர். எனவே சதா தன்னை மகிமை-பூஜைக்குரியவராக ஆக்கிக் கொள்ளுங்கள். புரிந்ததா? சேவாதாரிகளோ மூவரும் தாம். ஆனால் சேவையின் பிரபாவம் நம்பர்வார் உள்ளது. நம்பர்வாரில் வரக் கூடாது. நம்பர் ஒன் ஆக வேண்டும். நல்லது.

சதா தன்னை இரட்டை ராஜ்ய அதிகாரி, இரட்டைக் கிரீடதாரி சிரேஷ்ட ஆத்மா என அனுபவம் செய்யக் கூடிய, சதா சிந்தனை சக்தி மூலம் மூழ்கிய ஸ்திதியை அனுபவம் செய்யக் கூடிய, சதா பாப்-சமான் அனுபவி, மாஸ்டர் அல்மைட்டி அத்தாரிட்டி ஸ்திதியின் அனுபவி மூர்த்தி ஆகக் கூடியவர், சதா தனது சக்திசாலி பூஜைக்குரிய ஸ்திதியை அடையக் கூடிய — அத்தகைய நம்பர் ஒன், சதா வெற்றியாளர் குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.

வெளிநாட்டு சகோதர-சகோதரிகளின் குரூப்புடன்: வெளிநாட்டில் இருந்தாலும் சுயதேசம், சுயசொரூ பத்தின் ஸ்மிருதியில் சதா இருப்பவர் தாம் இல்லையா? எப்படி பாபா பரந்தாமத்திலிருந்து இந்தப் பழைய, வேறு தேசத்தில் பிரவேசமாகி வருகிறார். அது போல் நீங்கள் அனைவரும் கூட பரந்தாம நிவாசி சிரேஷ்ட ஆத்மாக்கள், சகஜயோகி ஆத்மாக்கள் அந்த மாதிரி அனுபவம் செய்கிறீர்கள் – நாமும் கூட பரந்தாம நிவாசி ஆத்மாக்கள் இந்த சாகார சரீரத்தில் பிரவேசமாகி உலகத்தின் காரியத்தில் நிமித்தமாக இருக்கிறோமா? நீங்களும் கூட அவதரித்திருக்கும் பிராமண ஆத்மாக்கள் தாம். சூத்திர வாழ்க்கை முடிந்தது. இப்போது சுத்த பிராமண ஆத்மாக்கள் நீங்கள். பிராமணர்கள் ஒரு போதும் அபவித்திரமாக இருக்க மாட்டார்கள். பிராமணர் என்றாலே பவித்திரமானவர்கள். ஆக, நீங்கள் பிராமணர்களா, கலப்படமா? இரண்டு படகுகளில் கால் வைப்பவர்கள் இல்லையே? ஒரே படகில் இரண்டு கால்களையும் வைப்பவர்கள். ஆக, பிராமண ஆத்மாக்கள் அவதரித்த ஆத்மாக்கள். அப்படியும் எந்த ஆத்மாக்கள் அவதாரமாகி வந்திருக்கிறார்களோ, அவதார ரூபத்தால் புகழ் பெற்றிருக்கிறார் களோ, அவர்கள் எதற்காக வருகிறார்கள்? சிரேஷ்ட மாற்றத்தைச் செய்வதற்காக. ஆக, அவதாரங் களாகிய உங்கள் வேலை என்ன? உலக மாற்றம் செய்வது, இரவைப் பகலாக்குவது, நரகத்தை சொர்க்கமாக்குவது. இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்வதற்காக அவதரித்திருக்கிறீர்கள், அதாவது பிராமணர் ஆகியிருக்கிறீர்கள். இந்தக் காரியம் நினைவிருக்கிறது இல்லையா? லௌகிக சேவை கூட எதற்காகச் செய்கிறீர்கள்? வருமானம் கூட எங்கே ஈடுபடுத்துவதற்காக? சென்டர் திறப்பதற்காகச் செய்கிறீர்களா அல்லது லௌகிகப் பரிவாரத்திற்காகச் செய்கிறீர்களா? வருமானம் ஈட்டுவதும் கூட ஈஸ்வரிய காரியத்தில் ஈடுபடுத்துவதற்காகத் தான் என்ற லட்சியம் உள்ளதென்றால் லௌகிகக் காரியம் செய்தாலும் சேவை தான் நினைவிருக்கிறது இல்லையா? மற்றும் யாருடைய வழிகாட்டுதல் படி செய்கிறீர்கள்? இப்போது பாபாவின் ஸ்ரீமத் படி செய்கிறீர்கள் என்றால் யாருடைய ஸ்ரீமத்தோ அவர் தாம் நினைவுக்கு வருவார் இல்லையா? அதனால் பாப்தாதா சொல்கிறார், லௌகிகக் காரியம் செய்தாலும் கூட சதா தன்னை டிரஸ்டி என உணருங்கள். டிரஸ்டியாகவும் இருக்கிறீர்கள், வாரிசாகவும் இருக்கிறீர்கள். எங்கே இருந்தாலும் சரி, மனதால் சமர்ப்பணமாகி இருக்கிறீர்கள் என்றால் வாரிசாக இருக்கிறீர்கள். வாரிசு என்பதன் அர்த்தம் மதுபனில் வந்து இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் சேவையின் சேத்திரத்தில் இருந்தாலும் மனதால் நான் என்பது இல்லை, அதாவது சமர்ப்பணமாகி இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் வாரிசு. ஆக, சமர்ப்பணமானவரா அல்லது இப்போது கர்ம பந்தனத்தின் கீழே இருக்கிறீர்களா? மனதால் எப்போது சமர்ப்பணமாகி விட்டீர்களோ, அப்போது சமர்ப்பணமாகி விட்ட ஆத்மாவுக்கு பந்தனம் இருக்காது. ஏனென்றால் சமர்ப்பணமாகி விட்டீர்கள் என்றால் அனைத்து பந்தனங்களையும் கூட சமர்ப்பித்து விட்டீர்கள். மனதை ஏதேனும் பந்தனம் ஈர்க்கிறது என்றால் பந்தனம் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றப்படி வருகிறது, பிறகு சென்று விடுகிறது என்றால் பந்தனம் இல்லை. ஆக, நாம் அவதாரம், மேலே இருந்து வந்திருக்கிறோம் — இதை சதா நினைவில் வையுங்கள். அவதாரமெடுத்துள்ள ஆத்மாக்கள் ஒரு போதும் சரீரத்தின் கணக்கு-வழக்கின் பந்தனத்தில் வர மாட்டார்கள். விதேகி ஆகிக் காரியம் செய்வார் கள். சரீரத்தின் ஆதாரம் எடுக்கிறார்கள், ஆனால் சரீரத்தின் பந்தனத்தில் கட்டுண்டு விடுவதில்லை. ஆக, அந்த மாதிரி ஆகியிருக்கிறீர்களா? ஆக, சதா தன்னை சரீரத்தின் பந்தனத்தில் இருந்து விலகியவராக ஆக்குவதற்கு அவதாரம் எனப் புரிந்து கொள்ளுங்கள். இந்த விதியின் படி நடந்து கொண்டே இருப்பீர்களானால் சதா பந்தனத்திலிருந்து விடுபட்டு விலகியவராகவும் பாபாவுக்குப் பிரியமானவராகவும் ஆகி விடுவீர்கள்.

வரதானம்:-

எந்தக் குழந்தைகள் சதா பாபா மீது, தனது பார்ட் மீது மற்றும் டிராமாவின் ஒவ்வொரு விநாடியின் நடிப்பின் மீது 100 சதவிகிதம் நிச்சயபுத்தி உள்ளவராக இருக்கிறார்களோ, அவர்களது விஜய் அல்லது வெற்றி நிச்சயிக்கப் பட்டதாகும். நிச்சயிக்கப்பட்ட வெற்றியாக இருக்கும் காரணத்தால் அவர்கள் சதா கவலையற்று இருக்கிறார்கள். அவர்களின் முகத்திலிருந்து கவலையின் ரேகையும் தென்படாது. அவர்களுக்கு சதா நிச்சயம் இருக்கும் — இந்தக் காரியம் அல்லது இந்த சங்கல்பம் வெற்றியடைந்தே விட்டது. அவர்களுக்கு ஒரு போதும் எந்த ஒரு விஷயத்திலும் கேள்வி எழ முடியாது

சுலோகன்:-

Daily Murlis in Tamil: Brahma Kumaris Murli Today in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top