02 December 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

02 December 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

1 December 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! ஆத்ம அபிமானி ஆவதற்கான பயற்சி செய்யுங்கள். எந்தளவு ஆத்ம அபிமானி ஆகிறீர்களோ, அந்தளவு பாபாவிடம் அன்பு இருக்கும்.

கேள்வி: -

ஆத்ம அபிமானி குழந்தைகளிடம் எந்த ஒரு புத்தி எளிதாகவே வந்து விடுகின்றது?

பதில்:-

தன்னைவிடப் பெரியவர்களிடம் எப்படி மரியாதை வைப்பது என்ற புத்தி தேகி (ஆத்ம) அபிமானி குழந்தைகளுக்கு வந்து விடுகின்றது. தேக அபிமானமோ ஒரேயடியாகப் பிணமாக ஆக்கி விடுகின்றது. தந்தையை நினைவு செய்யவே முடியாது. ஆத்ம அபிமானியாக இருந்தால் மிகுந்த குஷி இருக்கும். தாரணையும் நன்றாக இருக்கும். விகர்மங்களும் விநாசமாகும். மேலும் பெரியவர்களுக்கும் மதிப்பு வைப்பார்கள். யார் உண்மை யான மனம் உள்ளவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள், நாம் எவ்வளவு நேரம் ஆத்ம அபிமானியாக இருந்து பாபாவை நினைவு செய்கிறோம் என்று.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

அவர் நம்மை விட்டுப் பிரிய மாட்டார்…..

ஓம் சாந்தி. இதை யார் சொன்னார்கள்? ஆத்மா சொன்னது. ஏனென்றால் குழந்தைகள் நீங்கள் இப்போது டிராமாவின் திட்டப்படி ஆத்ம அபிமானி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். அரைக்கல்பமாக தேக அபிமானி ஆனீர்கள். பிறகு அரைக்கல்பம் நீங்கள் ஆத்ம அபிமானி ஆகிறீர்கள். இப்போது நீங்கள் ஆத்ம அபிமானி ஆவதற்கான பயிற்சி செய்ய வேண்டும். பாபா அடிக்கடி சொல்கிறார், குழந்தைகளே, அசரீரி ஆகுங்கள், ஆத்ம அபிமானி ஆகுங்கள். குழந்தைகள் நீங்கள் எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள், அவர்கள் தூரத்தில் அமர்ந்திருக்கிறார்கள். நாம் ஆத்ம அபிமானி ஆகி பாபாவை நினைவு செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக் கிறீர்கள். பாபாவின் ஸ்ரீமத் படி தான் நடக்க வேண்டும். இது சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமான வழிமுறை என்று சொல்லப் படுகின்றது. பாபாவிடம் மிகுந்த அன்பு இருக்க வேண்டும். இப்போது பாபா சொல்கிறார், தேகத்துடன் கூட தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் விட்டு விடுங்கள். ஆத்ம அபிமானி ஆவதற்காக மிக அதிகமான பயற்சி செய்ய வேண்டும். சரீரம் விநாசமாகப் போகிறது. ஆத்மா அழியாதது. அழியக் கூடிய சரீரத்தை நினைவு செய்யும் காரணத்தால் ஆத்மாவை மறந்து விட்டனர். இதுவும் குழந்தைகளுக்குப் புரிய வைக்கப் பட்டுள்ளது – ஆத்மா என்பது என்ன பொருள்? சொல்லவும் செய்கின்றனர், ஆத்மா மிகச்சிறிய நட்சத்திரம் போன்றது. இந்தக் கண்களால் அதைப் பார்க்க முடியாது. அதை திவ்ய திருஷ்டி இல்லாமல் பார்க்க முடியாது. ஆத்மாவைப் பார்ப்பதற்கான முயற்சியை அதிகமாகச் செய்கின்றனர். ஆனால் பார்க்க முடியாது. யாராவது திவ்ய திருஷ்டியினால் பார்க்கவும் செய்கின்றனர் என்றாலும் கூட இது என்ன பொருள் என்று அவர்களால் புரிந்து கொள்ள இயலாது. எவ்வளவு சிறிய புள்ளி! இவ்விˆயங்கள் யாருடைய புத்தியிலும் பதிவது மிகவும் கடினம். ஏனென்றால் அரைக்கல்பமாக தேக அபிமானத்தில் இருந்திருக் கிறோம்.

பாபா புரிய வைக்கிறார், நீங்கள் தங்களை ஆத்மா என நிச்சயம் செய்யுங்கள். நாம் ஆத்மா அங்கே (பரந்தாமத்தில்) வசிப்பவர்கள். இந்த சரீரத்தை இங்கு தான் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த சரீரம் 5 தத்துவங்களால் ஆனது. பிண்டம் (சரீரம்) எப்போது தயாராகிறதோ, அதன் பிறகு சிறிய ஆத்மா இதனுள் பிரவேசமாகிறது. சைதன்யத் தன்மை (உணர்வு) வருகிறது. ஆத்மா சத்தியமானது, சைதன்யமானது என்றால் பரமபிதா பரமாத்மாவும் சத்தியமானவர், சைதன்யமானவர். அவர் பரம (மிக மேலான) ஆத்மா. அவர் அளவில் ஒன்றும் பெரிய பொருள் அல்ல. ஆத்மாவும் சிறியது. எப்படி இவருக்குள் ஞானம் உள்ளதோ, அது போல் ஆத்மாக்கள் உங்களுக்குள்ளும் ஞானம் உள்ளது. இவ்வளவு சிறிய ஆத்மாவுக் குள் முழு ஞானம் உள்ளது. இது பெரிய அதிசயம். ஆனால் குழந்தைகள் இந்த விˆயங்களை மறந்து போகின்றனர். தேக அபிமானத்தில் வந்து விடுகின்றனர். இப்போது ஆத்மாக்கள் நீங்கள் இந்த சரீரத்தின் மூலம் உலகத்தின் அதிபதி ஆகிறீர்கள், அதாவது பகவான்-பகவதி (காட்-காடெஸ்) ஆகிறீர்கள். பாபா இறைத் தந்தை(காட் ஃபாதர்) ஆவார். ஆனால் பாரதத்தில் இந்த லட்சுமி-நாராயணரை பகவான்-பகவதி எனச் சொல்கின்றனர். ஏனென்றால் இவர்களை இவ்வளவு உயர்ந்தவர்களாக தந்தை ஆக்குகிறார். இந்த ஞானத்தின் மூலம் என்னவாக ஆகி விடுகிறார்கள் பாருங்கள்! யார் நல்லபடியாகப் பாடத்தைப் படித்துப் பரீட்சையில் பாஸ் ஆகின்றனரோ, அவர்கள் வருமானமும் நன்றாகச் சம்பாதிப்பார்கள். எப்படி உலகத்தில் யாராவது மிக அழகாக இருக்கின்றனர் என்றால் அவர்களுக்கு அதிக வெகுமதி கிடைக்கிறது. பிறகு சொல்கின்றனர், மிஸ் இண்டியா, மிஸ் அமெரிக்கா……. சரீரத்தோடு கூட அந்த மனிதர்கள் எவ்வளவு முயற்சி செய்கின்றனர். சத்யுகத்திலோ இயற்கை அழகு இருக்கும். கவரக் கூடியதாக இருக்கும். சதோபிரதான இயற்கையினால் சரீரம் உருவாகிறது இல்லையா? அது எவ்வளவு கவர்கிறது! லட்சுமி- நாராயணர், இராதை-கிருஷ்ணரின் சித்திரங்கள் எந்த அளவுக்கு அனைவரையும் கவர்கின்றன! அதுவும் ஒன்றும் மிகச் சரியாக உருவான சித்திரங் கள் அல்ல. அங்கு சதோபிரதானமாக இருக்கிறது என்பதால் இயற்கையான அழகு உள்ளது. இவையனைத்தையும் பாபா புரிய வைக்கிறார். அந்த மனிதர்கள் பாடுகின்றனர், பதீத- பாவனா…… ஆனால் எதையும் புரிந்து கொள்ளவில்லை. அழைப்பது கூட புத்தியற்றவர் போலத் தான் அழைக்கின்றனர். ஹே பகவான், தயை புரியுங்கள், இரக்கம் காட்டுங்கள். ஆனால் பகவான் என்பவர் என்ன பொருள் என்பது பற்றி எதுவுமே தெரியாது. தந்தை யைப் பற்றி அறிந்திருந்தால் படைப்பினைப் பற்றியும் அறிந்திருப்பார்கள். அதனால் ரிஷி, முனி முதலான அனைவரும் தெரியாது-தெரியாது எனச் சொல்லி விட்டனர். இது முற்றிலும் சரியாகும். படைப்பவர் மற்றும் படைப்பு பற்றி யாருக்குமே தெரியாது. தெரிந்திருந்தால் உலகத்தின் அதிபதி ஆகி இருப்பார்கள்.

இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள்- இந்த லட்சுமி-நாராயணரையும் இது போல் ஆக்குபவர் தந்தை தான். இப்போது நீங்கள் தந்தைக்கு முன்னால் அமர்ந்திருக்கிறீர்கள். ஆனால் அரைக்கல்பமாக தேக அபிமானத்தில் இருந்த காரணத்தால் இவ்வளவு மதிப்பு வைக்க முடிவதில்லை. ஆத்ம அபிமானி ஆவதே இல்லை. ஆத்ம அபிமானி ஆவதால் நாளுக்கு நாள் உங்கள் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்லும். எப்போது முழு ஆத்ம அபிமானி ஆகிறீர்களோ, அப்போது மதிப்பும் வைப்பார்கள். மன நிலையும் திருந்திக் கொண்டே செல்லும், குஷியும் இருக்கும். எப்படி பாபா உங்களுக்குப் புரிய வைக்கிறாரோ, நீங்களும் மற்றவர்களுக்கு யுக்தி சொல்லிக் கொண்டே இருங்கள்-தன்னை ஆத்மா என உணருங்கள். இப்போது உங்களுடைய 84 பிறவிகளின் சக்கரம் முடிவடைந்தது. இப்போது திரும்பிச் செல்ல வேண்டும். நாம் ஆத்மா வீட்டிலிருந்து இங்கே வந்து சரீரத்தை தாரணை செய்து பாகத்தை நடித்துக் கொண்டிருக்கிறோம். இங்கே எத்தனைப் பிறவிகள் எடுத்தோம் என்பது பற்றிய ஞானமும் புத்தியில் உள்ளது. ஆத்ம அபிமானி ஆவதில் தான் முயற்சி உள்ளது. அடிக்கடி மாயா தேக அபிமானியாக ஆக்கி விடுகின்றது. இப்போது நீங்கள் மாயா மீது வெற்றி பெற்று ஆத்ம அபிமானி ஆக வேண்டும். தனிமையில் அமர்ந்து சிந்தனை செய்யுங்கள்-நான் ஆத்மா. பாபா சொல்லியிருக்கிறார், என்னை மட்டும் நினைவு செய்வீர்களானால் விகர்மங்கள் விநாசமாகி விடும். இந்த தேகத்தின் மீது மோகம் வைக்கா தீர்கள். நாம் ஆத்மா அழிவற்றது, நாம் சகோதரர்கள் மீதும் கூட புத்தியோகத்தை ஈடுபடுத்தக் கூடாது. சகோதரனுக்கு சகோதரனிடம் ஆஸ்தி கிடைக்காது. யாருடைய ஆத்மாவையோ, எந்த ஒரு சகோதரனின் சரீரத்தையோ நினைவு செய்யக் கூடாது. ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். ஆஸ்தியும் தந்தையிடம் இருந்து தான் கிடைக்கும். நாம் ஆத்மா இப்போது நமது வீட்டுக்குச் செல்கிறோம். பிறகு சத்யுகத்தில் வந்து தங்களின் இராஜ்ய பாக்கியத்தை அடைவோம். அங்கே ஆத்ம அபிமானியாக இருப்போம். இங்கே மாயா என்ற இராவணன் தேக அபிமானியாக ஆக்கி விடுகிறது. இப்போது நீங்கள் மீண்டும் ஆத்ம அபிமானி ஆவதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். தனக்குத் தான் நன்மை செய்து கொண்டே இருங்கள். இங்கே சித்திரங்களின் முன்னால் போய் அமர்ந்து கொள்ளுங்கள். எப்படி இராணுவத்தினருக்கு பயிற்சிக்கான மைதானத்தில் பயிற்சி அளிக்கப் படுகிறது இல்லையா? இப்போது நீங்கள் ஆத்ம அபிமானி ஆகி பாபாவை நினைவு செய் வதற்கான பயிற்சி செய்ய வேண்டும். பாபா சொல்கிறார், நீங்கள் என்னுடைய குழந்தைகள் இல்லையா? தேக அபிமானி ஆவதன் மூலம் நீங்கள் மாயாவினுடையவர்களாக ஆகியிருக் கிறீர்கள். அழைக்கவும் செய்கிறீர்கள், ஹே பதீத-பாவனா, ஹே ஞானக்கடலே…….. மற்ற அனைவரும் பக்தியின் கடல். பக்தி மார்க்கத்தின் விஸ்தாரம் எவ்வளவு உள்ளது! பாபா வருவது பொய்யான உலகத்தில், அதுவும் சாதாரண ரூபத்தில். டிராமாவில் விதிக்கப்பட்டதே அது போலத் தான். தூய்மை இல்லாத சரீரத்தில் தான் பாபா வருகிறார். லட்சுமி-நாராயணரின் சரீரத்தில் வர மாட்டார். அவர்களுக்கோ இராஜ்ய பாக்கியம் கிடைத்துள்ளது. ஆக, அதில் நான் எப்படி வருவேன்? என்னை சாதாரண ரூபத்தில் அறிந்து கொள்வதில்லை. அழைக் கின்றனர், ஆனால் இதைப் புரிந்து கொள்வதில்லை, அதாவது அவரும் கூட ஏதேனும் ஒரு சரீரத்தில் வருவார் இல்லையா? எனது ரூபம் நிராகார், புள்ளி. ஆக, நிச்சயமாக பிரஜாபிதா பிரம்மாவின் சரீரத்தில் தான் வருவேன். பிரஜாபிதாவோ நிச்சயமாக இங்கே தான் இருக்க வேண்டும். அவசியம் அவர் பழைய சரீரத்தில் தான் இருப்பார். இந்தப் பழைய பிரம்மா மற்றும் பக்கத்தில் விஷ்ணு நின்று கொண்டுள்ளார். திரிமூர்த்தியின் சித்திரத்தில் எவ்வளவு ஞானம் உள்ளது!

குழந்தைகளாகிய நீங்கள் இதற்கு முன்பு இந்த தேவதைகளை பக்தியில் அழைத்து வந்தீர்கள். ஸ்ரீநாராயணருக்கு எவ்வளவு மரியாதை (உபசாரம்) செய்து வந்தனர்! அதிசயம் இல்லையா? நாமே நாராயணர் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தோம்! ஸ்ரீநாராயணர் வந்துள்ளார், அவருக்கு உணவு-பானம் படையுங்கள்…… உள்ளுக்குள் புரிந்து கொண்டுள் ளனர், இப்போது நாம் அவர் போல் ஆகிக் கொண்டிருக்கிறோம். யார் தேவ – தேவதையாக உருவாக்கப்பட்டுள்ளார்களோ, அவர்களுக்கு அவசியம் மரியாதை செய்வார்கள். அதாவது நமக்கு நாம் மரியாதை செய்து கொள்கிறோம். பாபாவும் சொல்லியிருந்தார், தனக்கு உபசாரம் செய்து கொள்கிறீர்கள். குழந்தைகள் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் இல்லையா? இது மிகவும் அற்புதமான விˆயம். இதை வேறு யாரும் புரிய வைக்க முடியாது. நீங்கள் தான் புரிய வைக்க முடியும். இதுவோ முற்றிலும் புதிய ஞானமாகும்.

பாபா சொல்கிறார். நான் மீண்டும் தேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறேன். ஆரம்பத்தில் இருப்பது தேவி-தேவதாக்களின் இராஜ்யம். மத்தியில் இருப்பது இராவண இராஜ்யம். இப்போது கடைசி சமயம். கடைசியில் பாபா தாமே வருகிறார். இப்போது குழந்தைகள் நீங்கள் முதல்-இடை-கடை பற்றி அறிந்து கொண்டு விட்டீர்கள். இப்போது கொஞ்சம் மீதி உள்ள சமயத்தில் என்னென்ன நடைபெறப் போகிறது! விநாசமும் நிச்சயமாக நடைபெறும். சொல்கின்றனர், மகாபாரத யுத்தம் நடைபெற்றது. இப்போது மீண்டும் நடை பெறும். இச்சமயம் இது யாருக்கும் தெரியாது. பதீத-பாவனர் ஒரு தந்தை மட்டுமே! அவர் வந்து விட்டார் எனும் போது இன்னும் எவ்வளவு சமயம் மீதி இருக்கும்? ஸ்ரீகிருஷ்ணர் இருக்க முடியாது. அவர் சத்யுகத்தில் ஒரு பிறவி எடுத்தார். கிருஷ்ணர் என்ற பெயரில் இருந்து பிறகு பெயர்-வடிவம் மாறி விட்டது. சரீர அமைப்பே மாறி விடுகின்றது. பாபா புரிய வைத்துள்ளார், பூஜைக்குரியவர்களாக இருந்த நீங்கள் தான் பிறகு பூஜாரி ஆகியிருக் கிறீர்கள். 84 பிறவிகளை எப்படி எடுத்திருக்கிறீர்கள் என்பதையும் பாபா புரிய வைத்துள்ளார். மேலும் சொல்கிறார், நீங்கள் அரைக்கல்பமாக தேக அபிமானத்தில் இருந்திருக்கிறீர்கள். இப்போது ஆத்ம அபிமானி ஆகுங்கள். நீங்கள் ஆத்மாக்கள். நான் உங்கள் தந்தை பரமபிதா பரமாத்மா. நான் அசரீரியாக உள்ளேன். குழந்தைகளுக்கு அமர்ந்து எனது அறிமுகத்தைத் தருகிறேன். அதீந்திரிய சுகம் என்றால் என்ன வென்று கோப-கோபியரிடம் கேளுங்கள் எனப் பாடப்பட்டிருப்பது கடைசி சமயத்தின் விˆயம். அப்போது பரீட்சையின் முடிவு அருகில் வந்து விடும். எந்தக் குழந்தைகள் அதிக சேவை செய் கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக அனைவருக்கும் பிரியமானவர்களாக இருப்பார்கள். கண்காட்சி முதலியவற்றில் முதலில் அவர்களை நினைவு செய்கின்றனர். இன்னாரை அனுப்பி வையுங்கள் என்று எழுதுகின்றனர். இதன் அர்த்தத்தை அவர்கள் தாங்களே புரிந்து கொண்டுள்ளனர், இவர்கள் நம்மைக் காட்டிலும் திறமைசாலிகளாவர். ஆனால் தேக அபிமானம் அதிகம் உள்ளது. நம்முடைய பெரிய சகோதரர் அல்லது சகோதரி உள்ளனர் என்றால் அவர்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இது போல் ஒரு போதும் சொல்ல மாட்டார்கள்.-இன்னார் என்னை விட நூறு மடங்கு நல்லவர். பாபா என்ன புரிய வைக்கிறாரோ, அதன் படி நடப்பதில்லை என்றால் அவர்களின் நிலை என்னவாகும்! தேக அபிமானம் பிணமாக ஆக்கி விடுகின்றது. பாபா சொல்கிறார், ஆத்ம அபிமானி ஆகுங்கள். அதிகாலையில் எழுந்து சிவபாபாவை நினைவு செய்யுங்கள். அதையும் செய்ய மாட்டார்கள். நல்ல-நல்ல மகாரதிகள் யோகத்தில் மிகவும் குறைவாக உள்ளனர். ஞானமோ சிறு குழந்தைகள் கூட புரிய வைக்க முடியும். ஆனால் கிளிப்பிள்ளை போல் ஆகி விடுகின்றனர். இதிலோ யோகத்தில் இருக்க வேண்டும், தாரணையும் நன்றாக இருக்க வேண்டும். அப்போது குஷி அதிகமாகும். யோகம் இல்லாமல் விகர்மங்கள் விநாசமாகாது. தூய்மையான பொருள் நினைவு செய்யப் படுகிறது. அதனால் அதனிடம் அன்பும் அதிகம் இருக்க வேண்டும். அடிக்கடி புரிய வைக்கப் படுகிறது – மன்மனாபவ. அரைக்கல்பமாக தேக அபிமானியாக இருந்ததால் ஆத்ம உணர்வில் இருப்பது கடினமாக உள்ளது. அதிக உழைப்பு தேவைப் படுகிறது. ஆத்ம அபிமானி என்ற நிலையை உருவாக்குவதில் எத்தனை வருடங்கள் பிடிக்கிறது! தன்னை மிகச்சிறிய ஆத்மா என உணர்ந்து, தந்தையையும் ஒரு புள்ளி என உணர்ந்து நினைவு செய்வதில் முயற்சி தேவைப் படுகிறது. யார் உண்மையானவராக உள்ளனரோ, அவர்கள் உள்ளுக்குள் உணர்ந்திருப் பார்கள்-நாம் எவ்வளவு நினைவு செய்கிறோம்? இந்தப் பயிற்சி மிகவும் கடினமாகும். 21 பிறவிகளுக்கு சொர்க்கத்தின் இராஜ்யத்தை அடைவது என்பது சாதாரண விˆயமா என்ன? நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், நாம் சிறிய ஆத்மா, அதில் 84 பிறவிகளின் பாகம் விதிக்கப்பட்டுள்ளது. ஆத்மா தான் முக்கிய நடிகராக ஆகிறது. ஆத்மா தான் எல்லாமாக ஆகிறது. ஆனால் தேக அபிமானத்தின் காரணத்தால் ஆத்ம அபிமானம் மறைந்து விட்டுள்ளது. அனைத்திலும் முக்கிய பயிற்சியாக இதையே செய்ய வேண்டும். இந்த பாரதத்தின் புராதன யோகம் தான் புகழ் பெற்றதாகும். இது தான் கீதை. அதில் பெயர் மட்டும் நிராகார் பகவானுக்குப் பதில் தேகதாரி தேவதையின் பெயரை எழுதி விட்டுள்ளனர்.

பாபா சொல்கிறார், யார் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அதிக பக்தி செய்துள்ளனரோ, அவர்கள் தான் நம்பர் ஒன்னில் மேலே செல்வார்கள். நீங்களும் அதிக பக்தி செய்திருக்கிறீர்கள் என்றால் நமக்கு பாபா கிடைத்துள்ளார் என்பதில் குழந்தைகள் உங்களுக்கும் எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! பாபா நமக்குப் படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார். நாம் இந்தப் படிப்பினால் உலகத்தின் எஜமானர் ஆகிறோம். இப்போது பாபாவின் வழிப்படியே அவசியம் நடக்க வேண்டும். பாபா என்ன கட்டளை இடுகிறாரோ, தலைகீழாக ஏதேனும் ஆகி விட்டாலும் கூட தாமாகவே அதை நேராக ஆக்கி விடுவார். அறிவுரை தருகிறார் என்றால் பிறகு அதற்குப் பொறுப்பானவரும் அவரே ஆவார். அடிக்கடி சிவபாபா நினைவு இருந்து கொண்டே இருக்கும். அதனால் இந்த (பிரம்மா) பாபாவும் கூட சதா சொல்கிறார், உங்களுக்கு சிவபாபா சொல்கிறார். நானும் கேட்கிறேன் என்றால் இந்தக் கட்டளை தருபவர் சிவபாபா. நான் அவரது கட்டளைப்படி நடக்கிறேன். நீங்களும் அவரை நினைவு செய்கிறீர்கள். இவரும் அவரை நினைவு செய்கிறார். தேகத்தின் அபிமானத்தை விட்டு விடுங்கள். நீங்கள் ஒன்றும் நகைவியாபாரி யான தாதாவிடம் வரவில்லை. நீஙகளோ சிவபாபாவிடம் வந்திருக்கிறீர்கள். ஞானக்கடலோ அவர் தான் இல்லையா? நீங்கள் ஞான அமிர்தத்தை அருந்துவதற்காக சிவபாபாவிடம் வந்திருக் கிறீர்கள். இப்போதும் ஞான அமிர்தத்தை அருந்திக் கொண்டே இருக்கிறீர்கள். தினந்தோறும் ஞானக்கடல் பாபா ஞானம் சொல்லிக் கொண்டே இருக்கிறார். அவரைத் தான் நினைவு செய்ய வேண்டும். பக்தியை விட்டு விடுங்கள் என்றெல்லாம் பாபா சொல்வதில்லை. முழுமையான ஞானம் வரும் போது இது பக்தி, இது ஞானம் என்று தாமாகவே புரிந்து கொள்வார்கள். அரைக்கல்பமாக நீங்கள் பக்தி செய்திருக்கிறீர்கள். யாருமே திரும்பிச் சென்றதில்லை. அழைத்துச் செல்பவரோ ஒரே ஒரு தந்தை தான். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) பாபா தருகின்ற அறிவுரையை, இது சிவபாபா சொல்லும் ஸ்ரீமத் எனப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். ஞான அமிர்தத்தை அருந்தவும் பிறரை அருந்தச் செய்யவும் வேண்டும்.

2) அனைவருக்கும் மதிப்பளித்து, சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும். தேக அபிமானத்தை விட்டு விட்டு தேஹி அபிமானியாக இருப்பதற்கான பயிற்சி செய்ய வேண்டும்.

வரதானம்:-

எந்தளவு முடியுமோ சேவை என்ற தொடர்பில் குழந்தையாகவும், தனது முயற்சியின் மனநிலையில் எஜமானர் தன்மையுடையதாகவும், தொடர்பு மற்றும் சேவையில் குழந்தை யாகவும், நினைவு யாத்திரை மற்றும் சிந்தனை செய்வதில் எஜமானராகவும், உடன் இருப்பவர் மற்றும் குழுவில் குழந்தையாகவும், தன்னிடத்தில் எஜமானராகவும் – இந்த சமநிலை சம நிலையோடு இருப்பது தான் சாமர்த்தியமாக நடந்துக் கொள்வதாகும். இதனால் எளிதாகவே ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி அடையலாம். மனநிலையில் ஒரே இரசனை இருக்க வேண்டும், மேலும் எளிதாகவே அனைவருக்கும் அன்பானவர் ஆகிவிடலாம்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top