01 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

December 31, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! நீங்கள் எப்போதும் சேவைக்கான (எண்ணங்களில்) சிந்தனையிலேயே இருக்க வேண்டும், ஞானம் நிறைந்த ஆத்மா ஆக வேண்டும், நேரத்தை வீணாக்கக் கூடாது.

கேள்வி: -

யார் ஞானம் நிறைந்த குழந்தைகளோ அவர்களது அடையாளம் என்ன?

பதில்:-

அவர்கள் எப்போதும் சேவையில் ஈடுபட்டிருப்பர். அழிவற்ற ஞான இரத்தினங்களை தானம் செய்வதில் அவர்களுக்கு குஷி ஏற்படும். தந்தையும் அவர்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார். அவர்கள் ஒரு போதும் உலகாய உணவு பற்றிய சிந்தனையினால் நேரத்தை வீணாக்க மாட்டார்கள். அவர்கள் ஒருபோதும் அழுது கண்ணீர் விடமாட்டார்கள். இன்னாருக்கு நான் ஞானம் கொடுத்தேன் என்ற அகங்காரம் ஒருபோதும் அவர்களுக்கு வராது. பாபா கொடுத்தார் என்று எப்போதும் கூறுவர்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

துக்கமானவர்கள் மீது கருணை காட்டுங்கள் …

ஓம்சாந்தி. பாபா கருணை காட்டியிருந்தார், இப்போது மீண்டும் காட்டிக் கொண்டிருக்கிறார் என்பதை இப்போது குழந்தைகள் அறிவீர்கள். கருணை காட்டக் கூடியவர் யார்? பிறகு கருணை யற்றவர் யார்? இதை இப்போது நீங்கள் மட்டுமே அறிவீர்கள். தந்தை பாரதத்தின் மீது கருணை காட்டியிருக்கின்றார், அதாவது பாரதத்தை வைரம் போன்று ஆக்கியிருந்தார், சிரேஷ்டமான, தெய்வீக சுயராஜ்யத்தை கொடுத்திருந்தார். லட்சுமி நாராயணனுக்கு இராஜ்ய பாக்கியத்தைக் கொடுத்தது யார்? என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பரம்பிதா பரமாத்மா தான் அவசியம் படைப்புகளைப் படைத்திருக்க வேண்டும். தேவதைகள் பரம்பிதா பரமாத்மா விடமிருந்து ஆஸ்தி அடைந்தனர் என்பது உலகத்தினருக்குத் தெரியாது. பாரதவாசிகள் சுயராஜ்யத் துடன் இருந்தனர். தந்தை கருணை காட்டியிருந்தார், பிறகு கருணை கேட்கின்றனர். பிறகு துக்கமானவர்களாக, ஏழை யாக, கீழானவர்களாக ஆக்கிய கருணையற்றவர் யார்? அவரது உருவ பொம்மையை ஒவ்வொரு ஆண்டும் எரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இராவணன் தான் துக்கம் கொடுத்தது. யார் துக்கம் கொடுக்கிறார்களோ அல்லது தொந்தரவு செய்கிறார் களோ, அவர்கள் மீதிருக்கும் வெறுப்பை காண்பிப்பதற்காக, அவரை அவமதிப் பதற்காக உருவ பொம்மை உருவாக்குகின்றனர். இவர்கள் அனைவரும் தூய்மையற்றவர்கள் என்று தந்தை கூறுகின்றார். தன்னை தூய்மை இல்லாதவர்கள் என்றும் ஏற்றுக் கொள்கின்றனர், பிறகு ஈஸ்வரனையும் ஏற்றுக் கொள்கின்றனர். கிறிஸ்து வருவதற்கு 3 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு பாரதம் பரிஸ்தானாக (தேவதைகள் இராஜ்யமாக) இருந்தது என்று செய்தித்தாள்களிலும் அச்சடிக்கின்றனர். முதலில் தேவதைகள் இருந்தனர், பிறகு இஸ்லாமியர்கள், பௌத்தர்கள் வந்தனர். குழந்தைகளுக்கு கணக்கு வழக்குகளைக் கூறிவிட்டார். இடையில் வேறு இரண்டு தர்மங்களும் வந்து விடுகின்றன. இப்போது பாரதவாசிகள் சித்திரங்களையும் ஏற்றுக் கொள் கின்றனர். ஆகையால் இந்த கேள்விகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புரிய வைப்பது மிகவும் எளிதாகும். ஆனால் யாரிடத்தில் ஞானம் இல்லையோ அவர்கள் புத்தியற்றவர்கள் என்று கூறப்படுகின்றனர். ஞானம் கேட்டு பிறகு மற்றவர்களுக்கும் கூற வேண்டும். மற்ற சேவைகளும் அதிகம் இருக்கின்றன, ஆனால் அது ஸ்தூல சேவையாகும். சிலர் கமாண்டர்களாக, சிலர் ஜெனரலாக, சிலர் காலாட்படையினராக இருக்கின்றனர். உணவு சமைப்பதும் சேவையாகும், இதற்கான பலனும் அவசியம் கிடைக்கும். ஞானி ஆத்மாக்களுக்கு நாம் சேவை செய்கிறோம் என்று நினைக்கின்றனர். சேவை செய்பவர்கள் தந்தையின் உள்ளத்தில் அமர்கின்றனர். அனைவரும் மகிமை செய்கின்றனர். ஞானி ஆத்மாக்கள் தந்தைக்கு மிகவும் பிரியமானவர்களாக இருக்கின்றனர். அதற்காக மற்றவர்கள் மீது அன்பு இல்லை என்றில்லை. அனைவரின் சேவையும் பாபாவிற்குத் தெரிகிறது. நான் உள்ளத்தில் அமர்ந்திருக் கிறேனா? என்று பாபாவிடம் யாராவது கேட்டால் பாபா கூறிவிட முடியும். மற்றபடி யார் சேவை வாங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு என்ன கிடைக்கும்? இராஜ்யத்தில் வருவார்கள், ஆனால் அந்த அளவிற்கு பதவி அடைய முடியாது. நீங்கள் உற்றார் உறவினர் களுக்கும் அதிகம் சேவை செய்ய முடியும். அதாவது சேவைக்கான எண்ணம் இருக்க வேண்டும். நேரத்தை வீணாக கழிக்கக் கூடாது. அவர்களை பாபா புத்தியற்றவர்கள் என்று கூறுகின்றார். பாபா எவ்வளவு நல்ல கருத்துகளை புரிய வைக்கின்றார். கேள்வித்தாளும் மிக நன்றாக இருக்கிறது. ஜெகதம்பா ஞான, ஞானேஸ்வரி ஆவார், லெட்சுமி இராஜ இராஜேஸ்வரி ஆவார். அவர் சத்யுகத்தில் இருப்பவர். ஜெகதம்பாவின் இந்த மகிமை இந்த நேரத்திற்கானது. குழந்தைகள் சிரத்தையுடன் தாரணை செய்ய வேண்டும். பரிபக்குவ நிலை வேண்டும், அப்பொழுது தான் உள்ளத்தில் அமர முடியும். பள்ளியிலும் மாணவர்கள் வரிசைக்கிரமமாக உள்ளத்தில் அமர்கின்றனர், வரிசைக் கிரமம் இருக்கின்றது. புரிய வைப்பதற்கு இந்த கருத்து மிகவும் நன்றாக இருக்கிறது. ஜெகதம்பாவை தன லெட்சுமி என்று கூறமாட்டார்கள். இவர் ஜெகதம்பா, இவருக்கு கடவுள் ஞானம் கொடுத்திருக்கின்றார், அதனால் தான் கல்விக் கடவுள் சரஸ்வதி என்று பாடப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் இந்த பெயர், உருவத்தில் கல்விக் கடவுளாக இருக்கிறார். இந்த ஞானத்தின் மூலம் தான் பிறகு பதவி அடைகிறார். கடந்த பிறவியில் ஞானம் அடைந்திருந்தார், அதன் மூலம் லெட்சுமி ஆகின்றார். லெட்சுமி முந்தைய பிறவியில் ஜெகதம்பாவாக இருந்தார், இது முற்றிலும் தெளிவான ரகசியமாகும். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்தில் என்னவாக ஆவீர்கள்? ஒவ்வொரு விசயமும் மிகவும் நன்றாக இருக்கிறது. லெட்சுமி எவ்வாறு 84 பிறவிகள் எடுக்கிறார்? எங்கெங்கு எடுக்கிறார்? என்பது புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். புரிய வைக்கும் போது குஷி ஏற்படுகிறது. தானம் கொடுக்கும் போது குஷி ஏற்படும் அல்லவா!

தந்தை அழிவற்ற ஞான இரத்தினங்களை தானம் செய்கிறார், பிறகு மற்றவர்களுக்கு தானம் கொடுக்கும் சேவை செய்ய வேண்டும். மம்மா, பாபாவின் பின்னாலேயே சென்று விடக் கூடாது. சேவையில் ஈடுபட வேண்டும், அப்போது தான் பாபா மகிழ்ச்சியடைவார். ஞானமுள்ளவர்கள் சேவையில் ஈடுபட்டிருப்பர். சேவையில் ஈடுபடவில்லையெனில் அவர்களை புத்தியற்றவர்கள் என்று கூறுவார். நான் பாபாவின் உள்ளத்தில் அமரவில்லை என்று அவர்கள் நினைப்பர். உணவு பற்றிய அசுத்த எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது. வெளியில் இலட்சியம் பற்றி மிகவும் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. இது பதீத பாவன் இறை தந்தையின் பல்கலைக்கழகம் என்று பெயர் எழுதப்பட்டிருக்கிறது. தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்கு ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சியின் ஆஸ்தி கிடைக்கிறது. பலகையில் (போர்ட்டில்) தொழில் பற்றி முழுமை யாக எழுதப்பட்டிருக்கிறது. சிவபாபாவின் சித்திரமும் இருக்கிறது. லெட்சுமி நாராயணனின் சித்திரமும் இருக்கிறது. இலட்சியமும் எழுதப்பட்டிருக்கிறது, ஆனால் யாரும் புரிந்து கொள்வதும் கிடையாது. பிறகு கேட்பதும் கிடையாது. கடை இருக்கிறது எனில் விளம்பர பலகை (போர்ட்) மாட்டியிருப்பர். பால் விற்பனை நிலையம், இங்கு இது கிடைக்கும் என்று எழுதப் பட்டிருக்கும். சத்சங்கத்தில் ஒருபோதும் பலகை மாட்டியிருக்கமாட்டார்கள். காரணம் அவர்கள் பிரபலமானவர்களாக இருக்கின்றனர். 21 பிறவிகளுக்கு தெய்வீக பதவி அடைவதற் கான கல்வி கிடைக்கிறது என்று இங்கு பலகை வைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் புத்தியில் அமருவது கிடையாது. பிறகு உள்ளே வந்து இதன் நோக்கம் என்ன? என்று கேட்கின்றனர். பலகை படிக்காததால் நோக்கம் பற்றி கேட்கின்றனர். யாருடைய கடை? என்று பார்க்க வேண்டும் அல்லவா! ஆனால் எதுவும் அறியாமல் இருக்கின்றனர். ஆதிதேவனின் பெயரைக் கூட மகாவீர், ஹனுமான் என்று வைத்து விட்டனர். ஆனால் அவர் யார்? எப்போது வாழ்ந்து சென்றார்? என்பதை அறியவில்லை.

புரிய வைப்பதற்கு குழந்தைகளாகிய உங்களுக்குள் தைரியம் தேவை. புரிய வைப்பவர் களிடமும் ஒருவேளை விகாரம் இருந்தால் யாருக்கும் அம்பு பாயாது. யாருக்காவது அம்பு பாய்கிறது என்றால் அதை சிவபாபா தான் புரிய வைக்கின்றார் என தெரிந்து கொள்வர். யாரிடத்திலாவது ஏதாவது அவகுணம் இருந்தால் அவர்கள் புரிய வைப்பது யாருக்கும் பதியாது. பாபா வந்து மற்றவர்களுக்கு திருஷ்டி கொடுப்பர், ஞானம் கொடுப்பார். நான் இன்னாருக்கு மிக நன்றாக ஞானம் கொடுத்தேன், நான் ஞானம் கொடுத்ததால் தான் இவரிடத் தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று அவர்கள் நினைக்கக் கூடாது. இதுவும் தவறான அகங்கார மாகும். யாரிடத்தில் அழுகையின் கண்ணீர் விடும் பழக்கம் இருக்கிறதோ அவர்கள் யாருக்கும் ஞானம் கொடுக்க முடியாது. அவர்கள் விதவைகளாக ஆகிவிடுகின்றனர். நான் மற்றவர்களுக்கு ஞானம் கொடுக்கிறேன் என்று அவர்கள் ஒருபோதும் நினைக்கவே கூடாது. பாபா அவர்களுக்கு நன்மை செய்து விடுகின்றார். கண்ணீர் விட்டால் அவர்களுக்கு துர்கதி தான் கிடைக்கும். நாம் முகமலர்ச்சி உடைய தேவி தேவதைகளாக ஆகக் கூடியவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒருவேளை அழுது கண்ணீர் விட்டால் தவறான காரியம் செய்திருக்கிறீர்கள், அது ஏமாற்றி விடுகிறது. நல்லவர் களும் கண்ணீர் விடுகின்றனர். பிறகு பாபா யாரையாவது விழிப்படையச் செய்ய வேண்டும் எனில் சுயம் வந்து திருஷ்டி கொடுத்து விடுகின்றார். கண்ணீர் விட்டால் விதவைகள். நாம் இராமருடையவராக ஆகிவிட்டோம் என்று கூறுகிறீர்கள், பிறகு கண்ணீர் விட்டால் உங்களது இராமர் இறந்து விட்டார் என்றாகி விடும். இராமரிடமிருந்து புத்தியின் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. முகத்தை திருப்பிக் கொண்டீர்கள். மனநிலை மிகவும் நன்றாக இருக்க வேண்டும். யாராவது பலனடைகின்றனர் எனில் அவர்கள் பாபாவின் சக்தியினால் பலன் அடைகின்றனர். பாபா என்ன கூறுகிறாரோ அதில் எந்த தவறும் இருக்காது. ஏனெனில் தந்தையோ சத்தியமானவர். ஒருவேளை ஏதாவது வார்த்தைகள் வெளிப்பட்டு விட்டால் சீராக்கக் கூடியவர் அமர்ந்திருக்கிறார். இதை புரிந்து கொள்வதற்கு மிகவும் நல்ல புத்தி தேவை. சேவை செய்வதற்கு தந்தை தயாராக இருக்கின்றார். அவ்வாறு குழந்தைகளும் இருக்க வேண்டும். பி.கு என்று கூறுகிறீர்கள் எனில் உதவியும் செய்ய வேண்டும். சில பி.கு க்கள் மேலும் அதிகம் தனக்குத்தானே நஷ்டப்படுத்துகின்றனர். பாபாவும் அறிவார், மனிதர்களும் அறிவர். இவரது நடத்தை இவ்வாறு இருக்கிறது, சரியாக இல்லை, அதனால் தான் இவரை தங்களிடம் அழைத்துக் கொள்ளுங்கள் என்று எழுதுகின்றனர்.

குழந்தைகளாகிய நீங்கள் ததீட்சி ரிஷி போன்று எலும்புகளை கொடுக்க (கடின உழைப்பு) வேண்டும். சிலர் நவாப் போன்று நடந்து கொள்கின்றனர். இந்த வருமானத்திலும் கூட கிரஹச் சாரம் அமர்கிறது, தசா புத்தி மாறுகிறது என்று தந்தை புரிய வைக்கின்றார். சில நேரம் குருதிசை, சில நேரம் சுக்ரதிசை, சில நேரம் செவ்வாய், சில நேரம் ராகுதிசை. பிறகு ஒரேயடி யாக நஷ்டப்படுத்திக் கொள்கின்றனர். பாபா மிகவும் நல்ல நல்ல கருத்துகளை புரிய வைக்கின்றார். நீங்கள் மிகவும் நன்றாக படித்த, புத்திசாலிகள் அல்லவா! பலகையில் இலட்சியம் பற்றி முழுமையாக எழுதப்பட்டிருக்கிறது. இலட்சியத்தை புரிந்து கொள்ளும் போது தான் அந்த ஆத்மா (ஆன்மீக உணர்வோடு) உள்ளுக்குள் வரும். 21 பிறவிகள் மற்றும் 2500 ஆண்டுகளுக் கான ஆஸ்தி இறை தந்தையிடமிருந்து கிடைக்கிறது என்று எழுதப்பட்டிருக்கிறது. சூரியவம்சம் மற்றும் சந்திரவம்ச இராஜ்யம். சிலர் நன்றாகப் புரிந்து கொள்கின்றனர், ஏனெனில் வாடிக்கை யாளர்கள் வரிசைக்கிரமமாக இருக்கின்றனர் அல்லவா! இவை அனைத்தும் சிவபாபாவின் கடைகளாகும். சேட் (முதலாளி) ஒரே ஒருவர் ஆவார். இந்த கடை ஆயிரம், இலட்சக் கணக்கில் உருவாகும். சந்நியாசிகளின் கடைகள் எவ்வளவு இருக்கின்றன! அயல்நாடுகளிலும் இருக்கின்றன. பாரதத்தின் பழமையான யோகா மற்றும் ஞானத்தை சந்நியாசிகள் தான் கொடுத்திருக்க வேண்டும் என்று அயல்நாட்டினர் நினைக்கின்றனர். ஆனால் கிடையாது, இதை தந்தை தான் கொடுக்கின்றார். மனிதர்கள் யாரும் இந்த ஞானம் கொடுக்க முடியாது. ஆனால் கொடுக்கக் கூடிய தந்தைக்குப் பதிலாக குழந்தையின் பெயர் வைத்து விட்டனர். இந்த ஹடயோகி சந்நியாசிகளுக்கு எதுவும் தெரியாது என்பதை நீங்கள் நிரூபணம் செய்து கூற வேண்டும். சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடிய இறை தந்தை தான் அமர்ந்து புரிய வைக் கின்றார். பாரதத்திற்கு யாத்திரையாக வந்திருக்கிறீர்கள், ஆனால் இந்த யாத்திரை பற்றி முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்று போப் ஆண்டவருக்கும் எழுதுங்கள். அவ்வாறு கூறும் போது உங்களிடத்தில் யாரையாவது அனுப்பி வைத்து விடுவார்கள். இங்கு அவர்கள் வர முடியாது. உயர்ந்த பதவியில் இருக்கின்றனர். இங்கு ஏழைகள் வருவார்கள். கிறிஸ்து யாசிப்பவர் என்று கூறுகின்றனர். இந்த நேரத்தில் நாமும் யாசிப்பவர்களாக இருக்கிறோம். யாசிக்கும் நிலையிலிருந்து இளவரசர்களாக ஆகக் கூடியவர்கள். யாரிடத்திலாவது அதிக செல்வம் இருக்கலாம், ஆனாலும் யாசிப்பவர்களாக இருக்கின்றனர். கிறிஸ்துவும் ஏழை என்று கூறுகின்றனர். ஏழையாக இருப்பவர்கள் தான் ஞானம் அடைவதற்கு வருவார்கள். வணக்கம் சொல்லியே ஆக வேண்டும். கடைசி நேர மாகும். கணக்கு வழக்குகள் முடிக்கும் நேரமாகும். நம்பர் ஒன் வணக்கம் சொல்பவர்களும் இங்கு அமர்ந்திருக் கின்றனர். ஆக அவர்களும் வருவார்கள். உங்களது சூரிய வம்சம், சந்திர வம்ச இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. ஆக முக்கிய சித்திரம் லெட்சுமி, நாராயணன் ஆகும். அவர்களது சித்திரம் தான் முதலாம், இரண்டாம், மூன்றாம் என்று இருந்து வருகிறது. நமது சித்திரங்கள் (சரீரம்) விநாசமாகி விடும். யாருடைய சித்திரமும் மிகச் சரியானது கிடையாது. தில்வாடா கோயிலிலும் ஜெகதம்பா மற்றும் லெட்சுமி, நாராயணனின் சித்திரம் இருக்கிறது. ஆனால் ஞான ஞானேஸ்வரி தான் இராஜ இராஜேஸ்வரி ஆகின்றனர் என்பது யாருக்கும் தெரியாது. அவசியம் அவர்களது குழந்தைகளும் இருப்பர். படிப்பு என்பது வருமானத்திற்கு ஆதாரமாகும். பிராமணர் கள் தான் படித்து தேவி தேவதைகளாக ஆகின்றனர். எவ்வளவு தெளிவாக இருக்கிறது!

நான் குழந்தைகளை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது என்று தந்தை கூறுகின்றார். அதற்கான பலன் அவருக்கு கிடைக்கும் என்பது கிடையாது. குழந்தைகளுக்கு தங்களது முயற்சியின் பலன் கிடைக்கும். நான் சேவை செய்கிறேன், அவர் யாருக்கு திருஷ்டி கொடுக்கிறாரோ, அவர்களது அதிர்ஷ்டமாகும். இந்த ஜெகதம்பா யார்? என்ன பலனை அடைந்திருக்கிறார்? போன்ற விசயங் களை மனிதர்கள் அறியவில்லை. இனிய குழந்தைகளே! கண்ணீர் விடுவதும் அபசகுணமாகும் என்று தந்தை புரிய வைக்கின்றார். இது எல்லையற்ற தந்தையின் வீடு அல்லவா! யார் சுயம் கண்ணீர் விடுகிறார்களோ அவர்கள் மற்றவர்களுக்கு எப்படி சேவை செய்து மகிழ்ச்சி யானவர்களாக ஆக்குவார்கள்? மகிழ்ச்சியாக இருப்பதற்கு இங்கு கற்றுக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியாக இருப்பது என்றால் புன்னகை செய்வதாகும். அதிக சப்தத்துடனும் சிரிக்கக் கூடாது. எவ்வளவு போதனைகள் கொடுக்கப்படுகிறது! கருத்துகள் புரிய வைக்கப்படுகிறது! நாளுக்கு நாள் ஞானம் எளிதாகிக் கொண்டே செல்கிறது. உங்களிடமும் சக்தி வந்து கொண்டே செல்கிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) ஒருபோதும் தனது அகங்காரத்தை காண்பிக்கக் கூடாது. ததீட்சி ரிஷியைப் போன்று சேவையில் எலும்பு கொடுக்க (கடனமாக உழைக்க) வேண்டும்.

2) சதா சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். ஒருபோதும் கண்ணீர் விடக் கூடாது. கண்ணீர் விடுவது என்றால் விதவை ஆவதாகும். ஆகையால் புன்முறுவலுடன் இருக்க வேண்டும், சப்தத்துடன் சிரிக்கவும் கூடாது.

வரதானம்:-

சகஜயோகி என்பதன் அர்த்தமே ஒருவரை நினைவு செய்வது என்பதாகும். ஒரு தந்தையைத் தவிர வேறு யாரும் இல்லை. உடல், மனம், பணம் ஆகிய அனைத்தும் உங்களுடையது, என்னுடையது அல்ல. இவ்வாறு டிரஸ்டி (தர்மகர்த்தா) ஆகி டபுள் லைட்டாக இருப்பவர்களே சகஜயோகி ஆவார்கள். ஒருவரை நினைவு செய்வது, ஒருவருக்குள் அனைத்தையும் அனுபவம் செய்வது, இதுவே சகஜயோகி ஆகுவதற்கான சகஜ விதி ஆகும். தந்தை தான் உலகம் என்றால் நினைவு சகஜமாகிவிட்டது என்று அர்த்தம். அரைக் கல்பம் அதிக முயற்சி செய்துள்ளீர்கள், இப்பொழுது தந்தை உழைப்பிலிருந்து விடுவிக்கின்றார். ஆனால், ஒருவேளை இதன் பிறகும் உழைக்க வேண்டியது உள்ளது என்றால் அதற்கான காரணம் தன்னுடைய பலவீனமே ஆகும்.

சுலோகன்:-

லவ்லீன் (அன்பில் மூழ்கிய) ஸ்திதியின் அனுபவம் செய்யுங்கள்

அன்புக் கடல் தந்தையுடன் சந்திப்பைக் கொண்டாடிக் கொண்டே அன்போடு பாபா என்று சொல்லுங்கள் மற்றும் அந்த அன்பில் மூழ்கிவிடுங்கள், ஈடுபாட்டில் மூழ்கிவிடுங்கள். இந்த லவ்லீன் ஸ்திதியானது மற்ற அனைத்து விசயங்களையும் சகஜமாக முடிவடையச் செய்துவிடும்.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top